அலை ஓசை – 8
அந்த குழந்தையின் சீரான மூச்சுயில் இருந்து, அவள் உறங்கி விட்டதை அறிந்த நிழல் உருவம், பாடுவதை விடுத்து, குழந்தையை ரசிக்க ஆரம்பித்து விட்டது.
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே…
மனதில் தோன்றிய பாடல் வரிகளை ரசித்து, பால் மனம் மாறாத அந்த குழந்தையின் நெற்றியில் முத்தம் பதித்து எழ நினைக்கையில், பிஞ்சு விரல் தன் விரலை பிடித்து இருப்பதை பார்த்து, அந்த நிழல் உருவம் கண்ணீர் விட்டது. தான் தொலைத்த அழகான சுகமான தருணங்களை நினைத்து.
தன்னை நிதானித்து அறையின் வாசலை நோக்க, அங்கே அந்த நெடியவன் அதிர்ந்த நிலையை கண்டு தனக்குள்ளேயே சிரித்து கொண்டு, “குழந்தை பக்கத்தில படு்த்துக்கோடா, நீன்னு தான் நினைச்சு என் தோலில் படுத்து இருந்தா”
சொல்லும் போது நிழல் உருவத்தின் மனதில் தோன்றிய வலியை நெடியவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“வலியிலும் உதட்டில் சிரிப்பு அப்படியே இருக்கே மச்சான். எப்படி டா, உன்னால மட்டும் முடிது? ” என்று கேட்ட அந்த நெடியவனுக்கும் பதிலாக அதே சிரிப்பை பதிலாக கொடுத்து சென்றது.
குழந்தையின் அருகே சென்ற நெடியவன், நிழல் உருவத்தை கண்ட நிம்மதியிலும் குழந்தையின் ஸ்பரிசம் கொடுத்த நிம்மதியிலும், நீண்ட நாள் கழித்து நித்திரா தேவி அவனை விரைவாகவே தழுவி கொண்டாள்.
# # # # #
இல்லை என்று
நம்பிய ஒரு
பொருளோ நபரோ
இருக்கு என்று யாரேனும்
கூறினால் அவர்களை
தான் முட்டாள்
என்று கூறும்
உலகம்!
இல்லாததை இருக்கு
என்று உணரும்
போதோ நம்மையே
முட்டாளாக்கி சிரிக்கும்
விதி!
விதியை வெல்ல
பலபேர் முனைந்து
போதும் இறுதியில்
வென்றது என்னவோ
விதி தான்!
# # # # #
அங்கே கமிஷனர் அலுவலகத்தில் ஆதியை பலவிதமாக கமிஷனர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் கூறிய எந்த சமாதானத்திற்கும் உட்படாத ஆதியை அலுவகத்தில் இருந்து வெளிக்கொணர பெரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
பிறகு அந்த நிழல் உருவத்திற்கு ஒரு அவசர மெசேஜையும் தட்டிவிட்டார் , ‘வெரி அர்ஜென்ட் கம் டு தி சீக்ரட் லோகேஷன் இமிடியட்லி! ‘ என்று.
‘யாருக்காக கமிஷனர் சார் இவ்வளவு ஹெப் பண்ணனும். அந்த நிழல் உருவத்திற்கும் இவருக்கும் என்ன சம்பந்தமா இருக்கும்? ஏதாவது இரத்த சம்பந்தமா இருக்குமா? இல்லை, ஏதாவது சீக்ரட் மிஷனா இருக்கமா? நம்மனால கமிஷனர தப்பாவே நினைக்க முடியலையே? ‘ என்று மனதில் ஆதி புலம்ப ஆரம்பித்து விட்டான்.
அவனையே பார்த்து கொண்டு, இல்லை இல்லை, கணித்து கொண்டு இருந்த கமிஷனர், ஆதியின் முகத்தை வைத்தே அவன் மனதில் ஓடுவதை அறிந்து.
“நீ நினைக்கிறது சரி தான் ஆதி. இவ்வளவு நாளாக நம்ம எல்லாருக்கும், இல்லை இல்லை, உங்க எல்லாருக்கும் போக்கு காட்டி கொண்டு இருப்பது. என்னோட இரத்த சம்பந்தம் தான் ” என்று அவர் நிறுத்த.
“என்னது, இரத்த சம்பந்தமா? சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லையா. இவ்வளவு நாளா போலீஸ் கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான். எதுக்கு என்றே தெரியாம ஆளுங்கள கடத்துறான். அதுக்கு நீங்களும் சப்போர்ட். நல்லா வருவீங்க. ச, இந்த பொழப்புக்கு நாண்டு கிட்டு சாகலாம். கொடுத்த பதவிய தவறாக பயன்படுத்துற நீங்களாம். உங்களை யா நான் அத்தனை உயர்வா நினைச்சேன்”
என்று ஆதி கூறி கொண்டு இருக்கும் போதே, அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து,
“யார் கிட்ட வந்து யாரை பத்திடா தப்பா பேசுற. என்னோட பையன் டா அவன். எவ்வளவு பேர் வந்தாலும் ஒரே ஆளா இருந்து சமாளிக்கும் என்னோட பையன் டா அவன். எல்லோருக்கும் நல்லது மட்டுமே நினைக்கிற ஆம்பள சிங்கம் டா அவன். அன்பால எல்லாத்தையுமே சாதிக்க முடியும் என்று நம்புற நல்லவன் டா அவன்.
உலகத்தில ஒரு உசுர காப்பாத்தினாலே சாமி ன்னு கும்பிடுவாங்க, இரண்டு உசுர காப்பாத்துற என்னோட குல சாமிடா என் புள்ள. அ வெரி எலிஜிபில் கைனகாலஜிட் அண்ட் அ சைல்ட் ஸ்பெஷலிஸ்ட். தப்ப தட்டி கேட்கிற என்னோட வாரிசு டா அவன்.
என்னோட பையன். தர்ம சேனா. என்னோட பல சீக்ரெட் மிஷின்களுக்கு எனக்கு உதவி செஞ்சி இருக்கான். ஒரு நல்ல மருத்துவரா மட்டும் இல்லை. ஹி இஸ் அ ”
கர்வம் கூத்தாடியபடி, என் பையனை எப்படி தப்பா சொல்லுவ என்ற கோபமும் அவர் முகத்தில் நன்றாகவே தெரிய, ஆதியின் சட்டையே கிழித்து விடும் அளவிற்கு இறுக பிடித்து, உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கி இருந்தவர், என்ன சொல்லவந்தரோ?
“அம்மாமாமாமாமாமா” என்று ஆதி கத்தியவுடன் தான் தன் சுய நினைவிற்கு வந்தார். அதன் பின்னே, நிழல் உருவத்தை, அதான் பெயரு தெரிஞ்சுடுச்சே. தர்மா அங்கு வந்தததையே மனிதர் கவனித்தார்.
“எதுக்கு டா அவனை அடிச்ச? பாவம் டா அவன். உண்மையா வேலை செய்ற ஒரு சின்சியரான போலிஸ் டா அவன்!” யாரிடம் தன் மகனை பற்றி ஆக்ரோஷமாக கூறி கொண்டு இருந்தாரோ, அவனை அடித்ததற்காக தன் மகனையே கண்டித்து கொண்டு இருந்தார்.
“நீங்க விட்டா எல்லாத்தையும் ஒளறி இருப்பீங்க. இந்த சின்சியர் சிகாமணி நம்ம பிளான் எல்லாத்தையும் ஃபிலாப் ஆக்கி விட்டுறுக்கும். நம்ம பிளான் நல்லபடியாக முடியிற வரை நீங்க என்னோட அப்பாவும் இல்லை. நான் உங்க பையனும் இல்லை. இப்படி தான பேசிக்கிட்டோம். என்ன பா இப்போ இப்படி பண்ணிடீங்க ” என்று தர்மா கவலையாக கேட்க,
“முடியல டா. என் பையனை எப்படி தப்பா சொல்லுவான் என்கிற கோபத்தில. இனி பாத்துகிறேன் டா” அவரும் தந்தை தானே,
“இரண்டு வருட தவம் பா. சொதப்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் இழந்தது ரொம்ப ஜாஸ்தி “
ஏதோ கூற வாய் எடுத்தவன், தந்தையின் முக கவலையை கண்டு பேசாமல் விட்டான்.
“நான் இவனை பார்த்துகிறேன். நீங்க போங்க. அம்மாவ பார்த்து கோங்க பா”என்று தர்மா அவர் தோல்களில் ஆதரவாக அழுத்தம் கொடுக்க, அதில் அவரும் தன்னை நிலைபடுத்திக் கொண்டார்.
” தர்மா, ஆதி நாம எடுத்த மாதிரியே லிஸ்ட் ரெடி பண்ணி இருக்கான். என்ன பண்ணட்டும் டா. ” என்று கேட்க,
கீழே விழுந்த ஆதியை மெச்சுதலாக பார்த்த தர்மா, “தீயா வேலை செஞ்சி இருக்கான் போல? இத சந்திரா கிட்டயோ இல்லை ருத்ரா கிட்டயோ கொடுத்துடுங்க பா. நாம எதுவும் பண்ண வேண்டாம். அவங்களே பாத்துபாங்க ” என்று கூறிய அடுத்த நொடி, தர்மா ஆதியுடன் காணாமல் போய் இருந்தான்.
“இந்த வேகத்தை நான் இரண்டு வருசமா மிஸ் பண்ணுறேன் டா தர்மா. ரொம்ப சோதிக்காத. சீக்கிரம் எங்க கிட்ட வந்துடு டா கண்ணா ”
சிறந்த கமிஷனராக இருந்து, இந்த பிரிவு அவசியமானது என்பதை அறிந்தும், தந்தையாக இந்த பிரிவை அவரால் ஜீரணிக்க முடியாமல் தவித்து தான் போனார்.
“இன்னும் கொஞ்ச நாள் தான் பா. ஐ வில் செட் எவிரிதிங். என்னோட சந்தோஷத்த மட்டும் நீங்க நல்லா பார்த்துக்கோங்க ” என்று தர்மா அவர் மனதை படித்ததை போல் டெலிபதி மூலம் அவருக்கு கூறி கொண்டு இருந்தான்.
அவனுடைய சந்தோஷம், நினைத்த போதே அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றி விட , ஆதியை தான் குடி இருந்த வீட்டில் மறைத்து வைத்து, அவளை காண தன் வண்டியில் பறந்தான்.
# # # # #
மீன்கள் விளையாடும்
கடலின் ஆழத்தை
கண்டறிந்த போதும் ,
ஆழ்துளை கிணற்றின்
ஆழத்தை அறிந்து
கொண்ட போதும்,
நிலவு இருக்கும்
வானத்தின் நீளத்தை
அளந்த போதும்,
மனிதனின் கையளவு
இருக்கும் இதயத்தின்
ஆழத்தை கண்டவர் எவரோ?
# # # # #
தன்னை நினைத்து அழுது கொண்டு தான் இருப்பாள் என்ற எண்ணத்தில் பறந்து வந்த நிழல் உருவத்தை ஏமாற்றாது, தாயும் தன் அறையில் அழுது கொண்டு இருந்தபடியே உறங்கி விட்டிருந்தாள், கையில் ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு.
அவள் கைகளை பற்றி கொண்ட தர்மா, முதல் முதலாக அவள் கைகளை பற்றி கொண்ட நினைவை நினைத்து கொண்டான்.
இரண்டு வயதான அவளை முதல் முதலாக பார்த்தது ரயில் நிலையத்தில் தான். எங்கே போவது? என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள். தன் தந்தையின் கைகளை விட்டு விட்டு அவளை நோக்கி சென்றான்.
“யார் டா குட்டி நீ? குட்டி யோட அம்மாவும் அப்பாவும் எங்க போனாங்க? குட்டி அவங்களை விட்டு வழி தவறி வந்துடீங்களா? ” என்று அவன் பேச்சு கொடுக்க.
“அம்மா அப்பா னா யாரு? ” என்று அவள் மறு கேள்வி கேட்க. கேட்டு கொண்டு இருந்தவனின் இதயம் தான் சுக்கு நூறாக உடைந்தது.
“குட்டி அப்போ யாரு கூட வந்தீங்க?” என்று எட்டு வயதான தர்மா கேட்டான், யாருமற்ற அனாதை இவள் என்ற செய்தியை முழங்கியபடி.
“மதர் கூட” மழலை குரல் மாறாது அவள் கூற
“மதர் எங்கே? குட்டி மட்டும் இங்க இருக்கீங்க? ” கண்களை நாலு பக்கமும் அவள் கூறிய மதர் எங்காவது தென்படுகிறாரா என்று ஆராய்ந்து படியே கேட்க,
“எனக்கு தெரியலையே! ” என்று அழ ஆரம்பித்து விட்டாள் குழந்தை.
“அழாத குட்டிமா ” என்று சொல்லி, அந்த ஆறுதல் வார்த்தை கூட இதுவரை கேட்டிராத அந்த பிஞ்சு உள்ளம், அவனை கட்டி கொண்டு அழுதது.
“ஏங்க, தம்பி எங்கங்க. உங்க கூட தானே இருந்தான்? ” தர்மாவை காணாது, அவனது தாய் தேட,
“தெரியலை யே, எங்க போகி இருப்பான்? பாக்கலாம் வா!” என்று அவனின் பெற்றோர் பதர, இவன் இங்கே அவளுக்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தான்.
அவர்கள் இவனை கண்டு அங்கு வர, தன்னிடம் இருந்து அவனை பிரித்து விடுவார்களோ என்று அஞ்சி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டாள்.
“யார் டா தம்பி இவ? ” அன்றைய காவல்துறை அதிகாரியான விஷ்ணு தன் மகனிடம் கேள்வி எழுப்ப,
“தெரியலையே பா, ஆசிரம மதர் கூட வந்திருக்கா. ஆனா அவங்களை எங்கோ தொலைச்சுட்டா போல. எப்படி யாச்சும் அவங்க கிட்ட இவள சேர்த்துடனும் பா” என்று பெரிய மனித தோரணையில் தன் தந்தையிடம் தர்மா கூறி கொண்டு இருந்தான்.
அவன் தாயோ, அவள் மனநிலையை கணித்துக் கொண்டு இருந்தாள். “ஏங்க ரயில்வே போலிஸ் கிட்ட தகவல் கொடுங்க. என்ன என்று எனக்கு சொல்ல தெரியலை. அந்த குழந்தை நம்ம தம்பி கிட்ட ரொம்ப ஒட்டி கிட்டா. அதோட இவள மட்டும் ஸ்டேஷனுல தனியா விட்டுட்டு போக வேண்டாம்”
அப்போது தான் அவன் தந்தை, அவர்கள் இருந்த நிலையை கண்டார். தங்களை பார்த்து பயந்த அவளிடம், இவன் ஆறுதல் கூறி கொண்டு இருந்தான்.
ரயில்வே ஸ்டேஷனில் தகவலை கொடுத்து விட்டு, தாங்கள் தங்கி இருந்த வீட்டின் முகவரியும், தொடர்பு கொள்ள நம்பரையும் கொடுத்து விட்டு வந்தனர்.
“பா, அப்போ குட்டி அவ மதர் வர வரிக்கும் நம்ம கூட தான் இருக்க போறாளா? ” சந்தோஷ குரலில் இவன் கூற,
“ஆமாம் டா தம்பி” அவர்களும் உன் சந்தோசத்திற்கு என்றுமே நாங்கள் தடை சொன்னதில்லை என்று கூற,
“அப்போ. பார்க் போலாமா இப்போ… இவ அதுலாம் பார்த்து இருக்க மாட்டால” அவளுக்காக யோசிக்க ஆரம்பித்தது அவனது மூளை அன்றுமுதல். அப்பொழுது தெரியவில்லை அவனுக்கு, இனி அவளுக்காக மட்டுமே தன் மூளை தனி அக்கறையுடன் வேலை செய்யும் என்ற!
“போலாம். ஆனால், நாங்க யாரும் அவளை பார்த்துக்க மாட்டோம்” கிண்டலாக அவன் தாய் கேலி பேச,
“வேண்டாம் மா. நானே அவள பாத்துப்பேன்” விரும்பியே அவளை அவன் ஏற்றான்.
சிறிய சிரிப்பு ஒளி அங்கே எழும்பியது. ஆனால், இவர்களின் பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அவள் இவன் தோளில் உறங்கி கொண்டு இருந்தாள்.
அவள் விழித்த உடன் எல்லோரும் சாப்பிட்டு, பார்கிக்கு சென்றனர். அங்கே தன் கூடவே வரும் அவளுக்கு தனக்கு தெரிந்தவற்றை கூறி கொண்டே வர, அவளும் சிறிது நேரத்தில் அவனுடன் இணைந்து கொண்டு பறவைகளையும் விலங்குகளையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.
நேரமும் இவர்களுக்காக காத்திருக்காமல் அழகாக நகர்ந்து கொண்டே இருக்க, இவர்கள் பார்க் விட்டு வெளியே வரும் போது ரயில்வே போலீஸிடம் இருந்து கால் வர அங்கே வந்தனர். அங்கே மதரை கண்டவுடன் அவன் கையை விட்டு அவரிடம் சென்றாள். தனக்கு மிகவும் பிடித்த பொம்மையை தன்னிடம் இருந்து வலுகட்டாயமாக பிடிங்கியது போல அவன் மனம் உணர்ந்தது.
“கிளம்பலாம் மா ” சோர்ந்து போய் அவன் கூற,அவன் செல்வதை பார்த்து அவனிடம் வந்த அவள்,
“உன் பேர் என்ன? “
“தர்ம சேனா டா குட்டி”
அவன் சொல்வதை கேட்பதை விட இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் தன்னை விட்டு சென்று விடுவான் என்ற கவலை மேலோங்க, அவன் கூறியதை சரியாக கேட்காமல்,
“தனா வா,உன் பேரு” தன் பெயரை யாரும் இப்படி சுருக்கி அழைக்காதலால் அவனுக்கும் இந்த தனா மிகவும் பிடித்து விட்டது.
“நான் இப்போ தான் மதர் கிட்ட கேட்டேன் தனா. பசிக்கு சோறு போடுறவங்க அம்மா வாம். நல்லா பாத்துகறங்க அப்பாவாம். அழும்போது சமாதானம் பண்ணுவாங்கலாம், அவங்க கூட இருந்தா ரொம்ப பாதுகாப்பா இருக்குமாம். எனக்கு உன் கூட இருந்தா ரொம்ப பாதுகாப்பா இருந்துச்சு. அப்போ, நீ தான் என் அம்மா அப்பா வா. ஆனால், என்னோட அப்பா அம்மா என்னை வேணாம்னு தான் மதர் கிட்ட விட்டதா ஆயா சொல்லும். இப்போ உனக்கும் நான் வேணாம்னு தான் மதர்கிட்ட என்னை விட்டுட்டு போக போறியா?”
தான் கண்ட கேட்டவற்றை கொண்டு பால் மணம் மாறாத குழந்தை அவனிடம் திறந்த புத்தகமாக கேட்க, அதில் மனம் நெகிழ்ந்தவன்,
“உன்னை நான் வேணாம்னு சொல்லுவேனா குட்டி. நீ எப்போவும் என் கூடவே இரு. நான் உன்னை நல்லா பாத்துகறேன். சரி யா ? “
“அன்று பிடித்த கை, இன்னிக்கு வர விட்டது இல்லை குட்டி மா. நடுல கொஞ்சம் நாள் விட்டுடேன். இனி எப்போதும் விட மாட்டேன் டா குட்டி மா. உன் தனா உனக்காக மட்டுமே தான்” என்று நெற்றியில் முத்தம் பதிக்க, அவன் போன் மெசேஜ் வந்ததற்காக சத்தம் எழுப்பியது.
# # # # #
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணத்தாலும்
அழித்திட
முடியாது
அன்பே!
# # # # #
தென்றலும் சாமரம் வீச, குயில்களும் கானம் பாட, அதற்கு ஏற்ப மரங்களும் ஆட. சூரியனும் ராஜ நடை போட்டு வானில் பவனி வர தொடங்கினான்.
இதமான கனவில் திளைத்த ருத்ராவை எழுப்ப வந்த சந்திரா, அவன் உதட்டில் இருக்கும் சிரிப்பில் சற்று நேரம் கண்டு, பின் அவனை எழுப்பியே ஆக வேண்டிய நிர்ப்பந்ததில், அவனை எழுப்பினாள்.
பிறகு இருவரும் செல்லும் கடற்கரைக்கு சென்றனர். ருத்ரா ரெட்டியின் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்த பைலை பற்றி கூறினான்.
“சது, இவ்வளவு நம்பர்ஸ் இருக்கே. எப்படி கோடை கண்டு பிடிக்குறது. எனினும் ஐடியா? எனக்கு எந்த ஐடியா வும் வரல டா?”
“எனக்கு என்னவோ இந்த நம்பர்ஸ்லயே க்லூ இருக்கும் என்று தோனுது ருத்ரா. கொஞ்சம் யோசிப்போம் டா ”
“பொறுமையா கடல் அலைகள் மாதிரி அமைதியா யோசிச்சு பாருடா குட்டி மா. எவிரி பிராப்ளம் ஹாஸ் அ சொலுஷன் ஆஃப் இட்ஸ் ஓன் ”
என்ற வார்த்தைகள் சந்திராவின் காதில் விழ, அவள் மனதும் அமைதி அடைந்து சிந்திக்க ஆரம்பித்தது.
“ருத்ரா, ஒரு ஐடியா. நம்பர்ஸை இப்படி எழுது ” என்று சந்திரா கூற,
2121311491131514419_1211211122212
191816211316_1122222
2511419-11122
185412516-2112111
1215225-2221
1920513351212-22121122
16114-212
“இதுல இரண்டு பகுதி இருக்குல. முதல் பகுதி தான் கோடா இருக்கும். இரண்டாவது பகுதி கோடுக்கான க்லூ வா இருக்கலாம் ருத்ரா “
“எப்படி டா சது சொல்லுற.புரியலை ” என்று ருத்ரா தடுமாற,
“பென்னை கொடு. நான் எழுதுறேன். உனக்கு புரியும் இப்போ”
2 12 1 3 11 4 9 1 13 15 14 4 19_ (1211211122212)
1 9 18 16 21 13 16 _(1122222)
2 5 1 14 19- (11122)
18 5 4 12 5 1 6- (2112111)
12 15 22 5-(2221)
19 20 5 13 3 5 12 12 -(22121122)
16 1 14 -(212)
“இரண்டாவது பகுதி, முதல் பகுதியில் இருக்குற நம்பரோட எண்ணிக்கையா இருக்கலாம். அப்போ, முதல் பகுதி இருக்குற நம்பர் எல்லாம், ஆங்கில எழுத்துக்களோட வரிசை எண்ணாக இருக்கும். அப்படி தேடினா கண்டிப்பாக கோடுக்கான வார்த்தைகளை கண்டுபிடிக்கலாம் ” சந்திரா கூற கூற ருத்ராவிக்குமே ஒரு உத்வேகம் வந்தது.
“அப்போ… அந்த first part என்னவா இருக்கும் சது?? “
2 12 1 3 11 4 9 1 13 15 14 4 19_ (1211211122212)
B l a c k D i a m o n D s
1 9 18 16 21 13 16 _(1122222)
A I r p u m p
2 5 1 14 19- (11122)
B e a n s
18 5 4 12 5 1 6- (2112111)
R e D L e a f
12 15 22 5-(2221)
L O v e
19 20 5 13 3 5 12 12 -(22121122)
S t e m c e l l
16 1 14 -(212)
P a n
“என்னடா, இதுவும் கோட்ஸா மட்டுமே வருது ருத்ரா ” சலித்தப்படி சந்திரா கூற,
அவர்கள் அருகிலே,
“என்னடா. லவ்வ கொடுக்கறேன்னு ஹாட் டிசைன் போட்டோ செயின் பிரசன்ட் பண்ணுற. உனக்கு என்ன ஆச்சு? என்று காதலி கேட்க, லவ் னாலே ஹாட் தான பேபி” என்று ஒரு காதல் ஜோடி தங்களுக்குள் பேசிக் சிரிக்க,
“எப்போதும் லவ் தான் இவங்க பேச டாபிக்கா கிடைக்குது. நம்ம பண்ணுற வேலைய ஒரு நாள் இவங்க பண்ண வைக்கணும்” என்று சந்திரா சத்தமாகவே முணுமுணுக்க
” தே ஹேவ் அ பாயிண்ட் சது. ஒரு வேலை இந்த கோட்ஸ்க்கான பதில் நம்ம உடல் உறுப்புகளாக இருந்தா?”
“என்ன ருத்ரா சொல்ற” என்று சந்திரா ருத்ராவை சந்தேகப் பார்வை பார்த்தாள்.
“எல்லாமே ஒரு அனுமானம் தான். பிளாக் டயமண்ட் னா ஐஸ், ஏர் பம்ப் னா லங்க்ஸ், லவ் னா ஹாட், பீன்ஸ் னா கிட்னி , ஸ்டெம் செல் னா பிளட், ரெட் லீஃப் னா பான்கிரியாஸ்” என்று ருத்ரா தன் அனுமானத்தை கூற அதைக்கேட்ட சந்திரா விக்கித்து நின்றாள்.
“ருது, என்னது டா? அப்போ கோட் வேர்ட் வைத்து திருடறாங்கனா, இதையே ஒரு பெரிய பிசினஸா பண்ணுவாங்க போலயே? ” என்று சந்திரா தன் மனதில் தோன்றியதை கூற,
“எனக்கு தெரிஞ்சு அவங்க எல்லோரும் உடம்பு உறுப்புகளை திருடுற கும்பலா இருக்கணும் சது, டு பி நாட் டு பி. இது எல்லாமே சந்தேகத்தில் தான் இருக்கு . நம்மளோட சந்தேகத்தை எல்லாத்தையும் கண்டிப்பாக பார்த்தே ஆகணும். இது வெறும் கடத்தல் சம்பந்தமா இல்லை. இது இது வேற கேஸ் டா . என் மனசு அதை ஆணித்தரமாக சொல்லுது! “
# # # # #
இவர்கள் நோக்கி போகும் முடிச்சுகளான பாதை அவிழ்ந்து, உண்மைகளை இவர்கள் கண்டறிவார்களா?
வெய்ட் அண்ட் வாட்ச்…
அலைகளின் ஓசை அடங்குவதில்லை!
# # # # #