அத்தியாயம் 11
கொடைக்கானலின் குளிரில் சூரியனே நடுங்கினார் போல, தான் கெத்தை கெஞ்சம் குறைத்துக்கொண்டு மிதமாகச் சுட்டை அந்த இடமெங்கும் பரப்பிக் கொண்டிருக்க, அந்த இளம் வெயில் வெளிச்சத்தில், பெயரே தெரியாத பல வண்ண மலர்கள், காற்றின் இசைக்குத் தகுந்தபடி உடல் நோகாமல், அழகாய் அசைத்து நடனமாடும் அந்த அழகிய காட்சி சூழலைக் கூடப் பார்த்து ரசிக்க மறந்து எதையே யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழி.
ஆழி, விஷ்ணு மற்றும் இன்னும் சிலரை பற்றிய தகவல்களைச் சைத்ராவிடம் கேட்டிருந்தாள். நேற்று இரவு ஆழியை ஃபோனில் அழைத்த சைத்ரா, “நீ கேட்ட டீடெயில்ஸ் எடுத்துட்டேன்” என்றாள்.
“தட்ஸ் இட் சைத்து. ம்ம்ம் சொல்லு, நமக்கு யூஸ் ஆகுற மாதிரி எதுவும் இருக்க?” என்று கேட்க, சைத்ரா அமைதியாக இருந்தாள்.
“சைத்து… ஏய் என்னடி, லைன்ல இருக்கிய இல்லயா?” என்று ஆழி கத்த,
“ம்ம்ம்… லைன்ல தான் இருக்கேன்” என்ற சைத்ராவின் குரலில் இருந்த மாறுதலை உணர்ந்த ஆழி,
“சைத்து இட்ஸ் எவ்ரிதிங் ஆல் ரைட்?” என்று கேட்டாள்.
“நோ ஆழி. நம்ம நெனச்சதுவிடக் கொஞ்சம்… ம்ம்ம் இல்ல இல்ல ரொம்ப மோசமா இருக்கு. லைஃப் இஸ் ஏ சர்க்கிள்னு சொல்றது உண்மைதான். எங்கயே தொடங்கின ஒன்னு, எங்கயே போய்த் தொட்டு, இப்ப நம்மகிட்ட வேற விதமா திருப்பி வந்திருக்கு ஆழி.” என்று சம்பந்தமே இல்லாமல் சைத்ரா உலற ஆழிக்கு மூளை குழம்பியது.
“ஏய் என்னச்சு உனக்கு? குளிருக்கு தண்ணிகிண்ணி எதுவும் போட்டிருக்கிய என்ன…? இல்லயே நம்ம மூணு பேருக்கும் அந்தப் பழக்கம் இல்லயே” என்றவள்,
“நீ ஃபோனை மீராகிட்ட குடு” என்க, சைத்ரா வறண்ட முகத்துடன் மீராவிடம் ஃபோன் தந்துவிட்டு செல்ல, மீரா போகும் அவளைப் பார்த்துக்கொண்டே ஃபோனை காதில் வைத்தாள்.
“ஏய் மீரா என்னடி ஆச்சு? ஏன் சைத்து ஒரு மாதிரி பேசிட்டு இருக்க? என்ன நடக்குது அங்க?” என்று ஆழி பதட்டமாக,
“அவ மட்டும் இல்ல நானு ஒரு மாதிரி தான் இருக்கேன். மேட்டர் தெரிஞ்ச, நீயும் எங்கள போல்தான் ரியாக்ட் பண்ணுவ” என்று மீராவும் புதிர் போட, ஆழிக்கு உள்ளுக்குள் ஏதோ ஒருவித தவிப்பு.
“என்னாச்சு மீரா?”
“இது ஃபோன்ல சொல்ற விஷயம் இல்ல ஆழி. நாளைக்கு நீ இங்க வா பேசிக்கலாம்” என்ற மீரா ஃபோனை வைத்துவிட, ஆழிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இரவு நடந்ததை யோசித்துக்கொண்டே வீட்டின் பின்புறம் இருந்த சின்னக் கார்டனில் நின்றிருந்த ஆழியை வெண்மதியின் குரல் கலைக்க, திரும்பி பார்த்தவள், அங்கு வெண்மதி நிலாவுடன் நிற்க, அவருக்கு அருகில் நின்றிருந்தனர் மீராவும் சைத்ராவும்.
ஆழி தோழிகள் இருவரையும் அங்குப் பார்த்ததும் முதலில் அதிர்ந்து, பின் அவர்களைத் தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஆழி இந்தப் பொண்ணுங்க உன்னைப் பாக்க வந்திருக்காங்கமா, நீ இங்க செய்ய வந்த பிராஜக்ட்காக இவங்களை உனக்கு உதவிய அனுப்பிச்சு இருக்காங்களாம், தோ பக்கத்தில் இருக்கே, அந்தக் காட்டேஜ்ல தான் தங்கி இருக்காங்க” என்று மதி சொல்ல, ஆழி தோழிகள் இருவரையும் முறைத்துக் கொண்ட வெண்மதி அருகில் வந்தாள்.
“சரிம்ம நான் பேசிக்குறேன் நீங்க பாப்பாவை தூக்கிட்டு உள்ள போங்கம்மா” என்றதும் மதி தன் இடுப்பில் இருந்த நிலாவுடன் உள்ளே சொல்லப்போக, “ஆன்ட்டி ஒன் நிமிஷம்” என்ற சைத்ராவின் குரலில் அவளைத் திரும்பி பார்த்தார் மதி.
“என்னம்மா? என்ன வேணும்?” என்றார் மதியை பார்த்த சைத்ரா, தயங்கி தயங்கி, “இல்ல ஆன்ட்டி, பாப்பா… பாப்பா பாக்க அழகா இருக்கு, நான் அவளை ஒருமுறை தூங்கலாமா, எனக்குப் பாப்பாவ தருவீங்களா?” என்று ஆசையாகக் கேட்க, மதி திரும்பி ஆழியைப் பார்க்க, ஆழி கண்களை மூடித் திறந்து சரி என்க, சைத்ராவை பார்த்து மென்மையாகச் சிரித்த மதி,
“அதுக்கென்னமா, இந்தப் புடி” என்றதும், முகமெல்லாம் புன்னகையுடன் நிலாவை தன் கையில் வங்கிக் கொண்ட சைத்ரா, ஆசையாக நிலா கன்னத்தில் தன் இதழை பதித்து, ‘ரொம்பத் தேங்ஸ் பாப்பா. உங்க அம்மா ஆஷாவால தான் எங்களுக்கு எங்க ஆழி உயிரோட திருப்பிக் கெடச்ச, அதுக்கு உங்கம்மாக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் அது கம்மி தான். அதுக்காக நாங்க எங்க நன்றிக்கடன் செய்யாம இருக்கமாட்டோம் பாப்பா. அவங்களுக்குச் செய்யவேண்டியதை இப்ப இருந்து நாங்க செய்யத் தொடங்கப்றோம். உனக்கு அம்மா இல்லாம செஞ்ச ஒருத்தரை விடமாட்டோம். இது உனக்கு நாங்க செய்ற சத்தியம்’ என்று மானசீகமாகச் சைத்ரா குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்க, ஆழி சைத்ராவையும், அவள் அருகில் அமைதியாக இருந்த மீராவையும் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மதிம்மா யாரு இவங்க? என்று கேட்டபடி அந்த நேரம் அங்கு வந்த முகில்லை பார்த்து ஆழிக்கு தூக்கிவாரிப் போட்டது.
“டாம் இட்… இவங்க ரெண்டு பேரையும் யாரும் பாக்க கூடாதுனு தான் இவங்களைத் தள்ளி இருக்கச் சொன்னேன். அது தெரிஞ்சும், இப்ப இதுங்க ரெண்டும் எதுக்கு இங்க வந்துதுங்க, இப்ப என்ன பண்றது. முகில் இவங்களைப் பாத்துட்டாரே…” என்று யோசிக்கும் போதே…
வெண்மதி, “இவங்க ஆழியைப் பாக்க வந்திருக்காங்க முகில்” என்றதும் முகில் சட்டெனப் பெண்கள் இருவரையும் ஒருநிமிடம் இமைக்காமல் பார்த்தவன் பின், “சரிம்மா அங்க பேசிட்டு இருக்கட்டும். நீங்க குழந்தைய தூக்கிட்டு உள்ள வங்கம்மா. குளிர்ல வெளிய நிக்க வேணாம்” என்றவன் சைத்ரா கையில் இருந்த நிலாவை வாங்கிக்கொண்டு மதியோடு உள்ளே செல்ல, திரும்பி திரும்பி மூவரையும் பார்த்துக் கொண்டே சென்றான் முகில்.
அவர்கள் உள்ளே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆழி, வேகமாகத் தோழிகள் அருகில் வந்தவள், “ஆர் யூ நாட்ஸ்? என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க? இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?” என்று கத்த,
சைத்ரா அமைதியாக ஆழியைப் பார்த்து, “இனிமே நீ எங்களை மறச்சு வைக்க எந்த அவசியமும் இல்ல ஆழி, எங்களுக்கு எதுவும் ஆகிடும்ற பயமும் உனக்கு இனி வேணாம். தப்பு பண்ணும்போதே நம்ம பயந்தது இல்ல, அப்புறம் நல்லது செய்ய எதுக்குப் பயப்படணும். ஒரு நல்ல ஆத்மாக்கு நம்ம நியாயம் செய்யப் போறோம். இனி நம்ம மூணு பேரும் ஒளிச்சு மறைய வேணாம்.” என்ற சைத்ரா பேச்சில் ஆழிக்கு உள்ளுக்குள் பகிர் என்றது.
“ஏய் மீரா இவளுக்கு என்னதான்டி ஆச்சு? ஏன் ஒரு மாதிரி பேசிட்டிருக்க?”
“அதை இங்க சொல்லமுடியாது ஆழி. நீ அந்த ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டுவா, நம்ம காட்டேஜ் போய்ப் பேசலாம். இங்க வேணாம்” என்னவளின் முகமே சொன்னது ஏதோ பெரிய விஷயம் நடந்திருப்பதை.
வீட்டுக்குள் சென்ற ஆழி, நிலா தூங்கி இருக்க, வெண்மதியிடம் சொல்லிவிட்டு சைத்து, மீராவுடன் செல்ல, முகில் போகும் அவளையே வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இங்குக் காட்டேஜ் வந்த ஆழி, “ம்ம்ம் இப்ப சொல்லு சைத்து, என்னச்சு? ஏன் ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?”
“நீ ஆஷாவ பாத்துருக்கீய ஆழி? என்று கேட்ட சைத்ராவை பார்த்து இடவலமாகத் தலையாட்டி ஆழி,
“இல்லமா, நான் பார்த்தது இல்ல, அன்னைக்கு ஆக்சிடென்ட் நடக்கும்போது அடிபட்டு அரை மயக்கத்தில் அவங்களைத் தெளிவு இல்லாம பாத்தேன். ஆனா, அவங்க முகம் மனசுல பதியல, பிகாஸ் அவங்க ஃபேஸ் பூர ரத்தம இருந்துச்சு, சோ முகம் ஞாபகம் இல்ல, வீட்ல அவங்க ஃபோட்டோ பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்குன்னு சொல்லி ஆதவ் அவங்க ஃபோட்டோ எல்லாத்தையும் எடுத்து ஒரு ரூம்ல போட்டு பூட்டி வச்சிட்டாராம், சோ நான் ஆஷா ஃபோட்டோ கூடப் பாத்தது இல்ல” என்ற ஆழி முன் தன் லேப்டாபின் திரையைக் காட்டினாள் சைத்ரா.
“உனக்குத் தான் மெமரி பவர் அதிகமச்சே, இந்தப் பொண்ணு யாருன்னு தெரியுதா சொல்லு ஆழி” என்றதும் ஆழி அந்தத் திரையில் தெரிந்த பெண்ணின் முகத்தைப் பார்த்து, “இது நமக்கு வந்த லாஸ்ட் ப்ராஜெக்ட் பொண்ணு தானா? பேர் கூட… என்று சற்று யோசித்து, “ம்ம்ம் பிரியதர்ஷினி. இவங்களை எப்படி நய்மால மறக்கமுடியும்?” என்ற ஆழியைப் பார்த்து மீராவும் சைத்ராவும் ஆமாம் என்று தலையாட்டினர்.
“சரி… இப்ப எதுக்கு இந்தப் பொண்ணு ஃபோட்டோவை பத்தி கேக்குறீங்க, முடிஞ்ச விஷயத்தைப் பாத்தி இப்ப எதுக்கு? என்ற ஆழியின் பேச்சுப் பாதியில் நிற்க, அவள் முகம் லேசாக இறுக ஆரம்பிக்க, திரும்பி தோழிகளை இமைக்காமல் பார்த்தாள்.
இங்குத் தோட்டத்தில் ஆதவ், விஷ்ணுவை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான் முகில்.
“டேய் பாவம்டா அந்தப் பொண்ணு ஆழி. நிலாமேல இருக்க அன்புக்காகத் திருந்தி வாழ இங்க வந்த பொண்ணு இப்ப மறுபடியும் அந்த இருட்டுக்குள்ள போக ரெடிய இருக்க, அவ மட்டும் இல்ல, கூட இன்னும் ரெண்டு பேர் வேற, உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சும் அவங்களை நீ இப்படி உன் சுயநலத்திற்காக யூஸ் பண்றது சரியில்லடா. இது உங்க பழி, அதை நீங்க தான் தீத்துக்கணும். அதைவிட்டு எதுக்குச் சம்பந்தமே இல்லாம அந்த மூணு பேர் உயிரோட வெளயாடுறீங்க. உங்க கையாலாகாத தனத்துக்கு அவங்க தான் பலிய” என்ற முகிலின் வார்த்தையில் கோவம் கொண்ட ஆதவ் அவன் சட்டையைப் பிடித்து விட்டான்.
“டேய் யார்கிட்ட பேசுறேன்னனு தெரிஞ்சு பேசு… நீ பாட்டுக்கு வாய்க்கு வந்ததைப் பேசிட்டே போற… என்னடா நெனச்சிட்டு இருக்க நீ.” என்ற கத்திய ஆதவ், முகிலின் சட்டையில் இருந்து கையை எடுத்தவன், இழுத்து மூச்சு விட்டு,
“நான் நெனச்ச ஒரு செண்ட் போதும்டா அவங்க மூணு பேரையும் முடிக்க, அது உனக்கும் தெரியும்” என்றவன் சற்று பொறுத்து, “ஆனா, இப்ப அது என்னால முடியாது முகில். நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்கச் சில கரப்டட் ஆபீசர்ஸ்னால, நான் ஏற்கனவே எம் பொண்டாட்டிய இழந்துட்டேன். அந்தக் குற்றவுணர்ச்சியே தினமும் என்னைக் கொஞ்ச கொஞ்சமா கொன்னுட்டு இருக்குடா. என்னைப் பழிவாங்க, பாவம் அந்த அப்பாவிப் பொண்ணைக் கொன்னுட்டாங்க, இப்ப மறுபடியும் நான் அவங்களை எதாவது செஞ்சு அந்தக் கோவத்தை எம்பொண்ணு மேல காட்டிட்ட நான் என்னடா செய்றது. ” என்றவன் உடல் தளர்ந்து கீழே மண்டியிட்டு உட்கார்ந்து விட, அவனைப் பார்த்த முகிலுக்கும் கண்கள் கலங்கியது.
“ஆஷா சாவுக்கு நீங்க காரணம் இல்ல மிஸ்டர். ஆதவ்” என்று கேட்ட குரலில் ஆண்கள் மூவரும் திரும்பி பார்க்க, அங்கு ஆழி, சைத்ரா, மீரா நின்றிருந்தனர்.
ஆழி, ஆதவ் அருகில் வந்தவள், “உங்களுக்கு வச்ச குறியில் ஆஷா மாட்டிக்கல, அவங்க குறி வச்சதே ஆஷாவுக்குத் தான்.” என்ற ஆழியின் வார்த்தையில் ஆண்கள் மூவரும் அதிர்ந்து நிற்க,
“ஏய் நீ… நீ என்ன சொல்ற? ஆஷா என்ன செஞ்ச? அவளை ஏன்? அவ என்ன தப்பு செஞ்ச? உனக்கு எப்டி தெரியும்?” என்ற ஆதவ் ஆழி தோளைப் பிடித்து உலுக்க,
“ம்ம்ம் தப்பு தான்… தப்பு தான் செஞ்சங்க… அதுவும் பெரிய தப்பு. இந்த உலகத்தில் உண்மையா, நல்ல மனசோட, எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனக்குறது தப்பு மட்டும் இல்ல மிஸ்டர். ஆதவ், அது பெரிய பாவமும் கூட, அதைத் தான் ஆஷா செஞ்சாங்க”
“நீ என்ன சொல்ற? உனக்கு எப்படி ஆஷாவை தெரியும்?” என்று கேட்ட விஷ்ணு கண்கள் வெகுவாகக் கலங்கி இருந்தது.
“ம்ம்ம் தெரியும் மிஸ்டர். டெப்டி கமிஷனர். எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆஷா பத்தி உங்களுக்குத் தெரியாதது கூட எங்களுக்குத் தெரியும். ஆஷா சாவுக்குப் பழிவாங்க ஆதவ் தான் உங்க மூலமா ஆழிய யூஸ் பண்றருனு தெரியும், நீங்க ஆஷாவோட அண்ணன்னு தெரியும், ஆதவ் சிபிஐ னு தெரியும், மிள்டர். முகில் அண்டர் கவர் காப்னு தெரியும். இதெல்லாம் நீங்க ஆழிய முதல் முறை மீட் பண்ண அடுத்த ரெண்டு நாள்ல நாங்க தெரிஞ்சிக்கிட்ட விஷயம்” என்று இழுத்து மூச்சு விட்டு, “ஆனா, நீங்க உங்க தங்கச்சிய தெரிஞ்சிக்கல, ஆதவ் அவர் லைஃ பத்தி தெரிஞ்சிக்கல, ஆஷா அவங்க ஹஸ்பெண்ட் பத்தி தெரிஞ்சிக்கல… அதுதான் இங்க, இப்ப, நம்ம எல்லாரும் ஒன்ன இந்த ஸ்டேஜ்ல நிக்கக் காரணம்” என்ற மீரா அருகில் வந்த விஷ்ணு,
“அவளை உங்களுக்கு எப்படித் தெரியும்? சொல்லு எப்படித் தெரியும். அவ என்ன செஞ்ச?”
“ஆஷாவை எங்களுக்குத் தெரியாது. பட்… பிரியதர்ஷினிய எங்களுக்குத் தெரியும். பிகாஸ் ஷி வாஸ் அவர் லாஸ்ட் அசைன்மென்ட்” என்ற ஆழியை ஆண்கள் மூவரும் திகைத்து பார்க்க,
“எஸ் கடைசியா எங்களுக்கு வந்த அசைன்மென்ட், உங்க ஆஷாவை ஐ மீன் மிஸ். ஆஷா பிரியதர்ஷினியை கொல்றது தான்” என்ற சைத்ராவின் கழுத்தை நெறித்திருந்தான் விஷ்ணு.
Leave a Reply