அத்தியாயம் – 9
“அந்த காலேஜ் ஏஹ் தான் கெடச்சதா….வேற காலேஜ் க்கு போகவே முடியாதோ….?”,
“சொல்ற பேச்ச கேட்கறதே இல்லை….பொறந்துச்சு பாரு எனக்கு னு….”,
“உங்க அப்பா ட்ட சொல்லி மரியாதையா வேற காலேஜ் போய் சேரு”,
என அவள் அம்மா காட்டு கத்து கத்திக் கொண்டிருக்க அவளோ அதைக் கண்டுக்காது டிவி யில் படையப்பா படம் ஓடிக் கொண்டிருந்ததை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்போதும் திட்டுவது தான். இன்று சற்றே ஜாஸ்தியாக திட்டுகிறார். காரணம்…. அங்கு அவன் வேலை செய்கிறான் என தெரிந்து விட்டது.
யாராவது திட்டினால் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவது வழக்கம் என சிலர் கூறலாம். ஆனால் ப்ரீத்தி க்கு இந்த காதுக்குள் வாங்குவதே வழக்கம் அல்ல.
நீங்க என்னவோ பேசுங்க என்பது போல அவள் பாட்டிற்கு ஸ்னாக்ஸ் சாப்பிட்டிக் கொண்டு பாடம் பார்க்க.
அப்போது,
சூர்யா பிரகாஷ் வாழ்க
( வட்ட செயலாளர் )
அண்ணன் சூர்யா பிரகாஷ் வாழ்க
( மாவட்ட செயலாளர் )
தலைவர் சூர்யா பிரகாஷ் வாழ்க
( சட்டமன்ற உறுப்பினர் )
மாண்புமிகு அமைச்சர் சூர்யா பிரகாஷ் வாழ்க
( உள்துறை அமைச்சர் )
என படையப்பா படத்தில் வந்த சீன் ஐ கண்டவளுக்கு பழைய நினைவுகளால் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.
இந்த சீன் வரும்போது ஒருவாட்டி கூட அவன் அருகில் இருந்தால் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.
ஆனால் இப்போது…. பெருமூச்சு விட்டவளின் சிரிப்பு மட்டுப்பட,
அவள் தலையில் நங்கென கொட்டினார் அவள் அம்மா கற்பகம்.
‘ஸ்….’ என முகியவள்
“ஏன் ம்மா ? ” என கடுப்பாக தலையை தேய்த்துக் கொண்டே கேட்க,
“என்னடி ஏன் ம்மா….? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ டிவி அஹ் பார்த்து சிரிச்சிட்டு இருக்க”, என கேட்க,
‘ப்ச்….’ என்றவள்,
“என்ன தான் ம்மா உன் பிரச்னை ?”, என சலிப்பாக வினவினாள்.
“நீ அந்த காலேஜ் போறது நல்லா இல்லை. வேற காலேஜ் போ.”,
“ம்மா சும்மா சும்மா காலேஜ் மாத்திட்டு இருக்க முடியாது. படிப்பு கெட்டு போகும்.”,
“ஆமா நீ படிச்சு கிழிச்ச. நீ எதுக்கு அந்த காலேஜ் போற ன்னு எனக்கு தெரியாது பாரு”,
‘தெரியுது இல்லை அப்பறோம் எதுக்கு கேட்கறீங்க’ என மனசுக்குள் நினைக்க,
” தப்பு பண்ணவங்க தனியா இருக்காங்க. அவங்களா தேடி கிட்டது. அங்க நீ போய் சேர்ந்ததால மட்டும் எதும் மாறாது.”,
‘அதுலாம் எப்படி உங்களுக்கு தெரியும்’ என்பது போல அவள் யோசித்தாலும் பதில் பேசாமல் இருக்க,
அவளை அமைதியாக இருப்பதைக் கண்டு முறைத்து பார்த்தவர்
“தேவை இல்லாத வேலை பண்ணாத இதுலாம் அவங்களுக்கு தெரிஞ்சா எதும் நெனச்சிக்க போறாங்க. மேலும் எதும் பிரச்சனை வந்துட போகுது.”, என வேறு விதமாக பேச,
சுதாரித்தவள் “நான் அங்க படிக்கப் போறேன். யார் என்ன நெனச்சா எனக்கு என்ன? “,
“என்ன ப்ரீத்தி இப்படி பேசற ?”
“வேற எப்படி பேச ?”
“……….”
“ம்மா நான் அங்க ஹாஸ்டல் புடிக்கல னு தான் இங்க சேர்ந்தேன். நீயா எதும் கற்பனை பண்ணாத”, என்றாள் சிடுசிடுப்பாக.
“..…….”,
அவள் சொல்வது உண்மையோ என நினைக்கும் அளவு அவள் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொண்டு பேசவும், என்னவோ போ என அரை மனதாக தலையாட்டியவர் அன்று நடந்ததையும், அவன் அப்படி பேசியதையும், நினைத்து பார்த்து அவள் குணம் அறிந்ததால் மேலும் எதும் கூறாமல் சென்றுவிட்டார்.
அவர் அந்த பக்கம் சென்றதும் அப்பாடா என மூச்சு விட்டவள், ‘நம்ம ஆக்ட்டிங் ல அம்மாவே குழம்பிட்டாங்க’ என சிரித்து விட்டு படம் பார்ப்பதை தொடர்ந்தாள்.
******
“ஏங்க….”, என்று அவள் கூப்பிட இல்லை கத்த,
“ஏன் மகா இப்படி….காது வலிக்குது….” என காதை பொத்தியவன் “கரண்ட் வேற இல்லை….கத்தாத எல்லாருக்கும் கேட்கும்” என அவன் கூற,
“சரி… சரி கத்தல….”என தலையை ஆட்டிக்கொண்டு ஹஸ்கி வாய்ஸ் இல் அவள் கூறவும் அதைக் கண்டு சிரித்தான்.
“எப்போ ங்க கரண்ட் வரும்”, என்றாள் கையில் உள்ள ஒரு நோட் அட்டை யை விசிறி ஆக்கி வீசியவாரு,
அந்த கேள்வியில் லைட் ஆக கண்டனான். கரண்ட் போனதிலிருந்து இதே கேள்வி தான் கேட்கிறாள்.
‘ம்ம்….’ என இழுத்தவன் “நான் என்ன கரண்ட் ஆபீஸ் ல யாடி வேலை பார்க்கறேன்…. என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்” என்று விட்டான்.
அவன் கையிலும் அதே போல ஒரு நோட் அட்டை விசிறியாக அவன் புழுக்கத்தை குறைக்க முயற்சி செய்தது.
அவன் பதிலில் அவனை லைட் ஆக முறைத்து அவனை பார்க்க,
“இதுக்கு மேல முடியாது. வா மாடிக்கு போவோம்.”, என அவன் எழ அவளும் அவனுடன் எழுந்தாள்.
ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு அவர்கள் வாடகை இருந்த வீட்டின் மாடிக்கு சென்றனர்.
போர்வையை விரித்து இருவரும் அமர்ந்தனர். அந்த நேரம் வீசிய அந்த லேசான காற்று அவர்களுக்கு இதமாக இருந்தது.
“மகா…. நல்லாருக்கு ல….இப்படி வந்து வெளிய உட்காந்துட்டு இருக்கறது. கரண்ட் போனா தான் இப்படி லாம் வெளியவே வர தோணுது”, என,
அவள் புன்னகையுடன் ஆமோதித்தாள்.
“இப்ப பாட்டு கேட்ட நல்லாருக்கும் ல.…”, என அவன் ரசனையோடு கூற,
“ஆமா ங்க”, என்றாள்.
“நீ தான் பாடேன்”, என அவன் சிரிப்பை அடக்கியவாறே கேட்க,
“எதுக்கு இப்போ சிரிப்பு?”, என்றாள் கடுப்பாக,
“இல்லை….நீ பாடனா எப்படி இருக்கும் னு நெனச்சேன் சிரிச்சேன்”, என அவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க,
அவன் காமெடியில் கடுப்பானவள் அவன் தோளில் இடித்து,
“ஆமா… நான் பாடனா நல்லாருக்காது….நீங்க பாடனா அப்டியே G.V வாய்ஸ் மாதிரி கேட்டுட்டு mesmerize ஆகிருவோம் பாருங்க”, என அவனை வார சிரிப்பதை குறைந்தவன்,
“சரி சரி விடு….நான் உன்ன கலாய்ச்சேன் நீ என்ன கலாய்ச்சிட்ட சரி ஆஹ் போகிருச்சு”, என கையை தூக்கி சரண்டர் ஆனான்.
“அது…..” என்று விரல் காட்டி கூறியவள் அமைதியாக,
“ஏன் மகா பொதுவா இந்த இடத்துல நம்ம ரெண்டு பேருல ஒருத்தருக்கு வாய்ஸ் நல்லாருந்து பாடுற மாதிரி ஒரு ரொமான்டிக் சீன் வந்துருக்கனும். நல்லாருந்துருக்கும். நம்ம ஆத்தர் ஜீ க்கு அறிவே இல்லை” என,
( அட பாவிங்களா…. என்ன இப்படி சொல்லிட்டிங்களே….😱
அது உண்மையா இருந்தாலும் சொல்ல கூடாது ப்பா….🤭😉
உங்களுக்கு ரொமான்டிக் சீன் தான வேணும். இப்போ பாரு….❤😁 )
“நம்ம ஆத்தர் ஜீ அஹ் திட்டாதீங்க. அவங்க இந்த மாதிரி சீன் யோசிச்சாங்கலாம்.
இப்போ உங்களுக்கு song கேட்கணும் அவ்ளோதான. ஒரு situation சொல்வோம் அதுக்கு எனக்கு நீங்க ஒரு song அஹ் டெடிகேட் பண்ணுங்க நான் உங்களுக்கு song டெடிகேட் பண்றேன்”, என,
அதை கேட்டு குஷி ஆனவன்,
“ஐ இது நல்லாருக் கே”, என்றுவிட்டு போன் ஐ எடுத்து அவளுக்கு ஒரு பாட்டை தேட அவளும் அவள் மொபைல் இல் அவனுக்கு song ஐ தேடினாள்.
******
பர்ஸ்ட் டைம் பார்த்த அப்போ என்ன song தோணுச்சு…..
அவன்…..
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
வெட்க சிரிப்புடன் அதை ஏற்றவள் அவனுக்கான பாட்டை போட்டாள்,
அவள்…..
மன்மதனே நீ
கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன்
தான் மன்மதனே நீ காதலன்
தான் மன்மதனே நீ காவலன்
தான்
என்னை உனக்குள்ளே
தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல உந்தன் ரசிகை
நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்கள்
கடந்து வந்தேன் எவனையும்
பிடிக்கவில்லை இருபது வருடம்
உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை
என்ற பாட்டை கேட்டவன் ‘ஆஹான்’ என்றுவிட்டு அவளை பார்த்து கண்ணடிக்க அவளோ வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள்.
இப்போ லவ் பண்ணுமோது பார்க்க முடியாம இருந்துருப்போம் ல அதுக்கு song,
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
என்ற பாட்டை கேட்டவள் அழகான புன்னகையை சிந்திவிட்டு அவனுக்கான பாடலை போட்டாள்,
உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்
என் வாழ்வில் வீணாகின்ற நாள்
தினம் நீ வந்ததால், தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்தப் பெண்பால்
உயிரே…
எதுவரை போகலாம்
என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
அதை கேட்டு அவனும் ஒரு வசீகரமான புன்னகையை வெளிப்படுத்தினான்.
“சரி இப்போ என்ன பற்றி or உனக்காகவே பாடன மாதிரி இல்லலாட்டி எனக்கு எதும் சொல்ற மாதிரி….நீ முதல்ல போடு நான் ரெண்டாவதா song போடறேன்”, என அவள் பாட்டை போட்டாள்,
உன் மனசுல
உன் மனசுல எத்தன
பேருன்னு கேட்டா
நான் ஒருத்தி தான்னு
சொல்லனுன்டா
அடி உன்
மனசுக்கும் என்
மனசுக்கும் எத்தன
தூரமுன்னு பார்த்தா
நூலளவு கூட இல்லையடி
நீ என்னத்தான்
விட்டுப்போகாதே ஏய்
போனாத்தான் உயிரு
வாழாதே
அதை கேட்டு “Possessive Queen” என அவள் கன்னம் பிடித்து கொஞ்சியவன் அவளுக்கான பாட்டை போட்டான்.
எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா..ஆ.
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
என பாட்டு வரவும் அதை ரசித்தாலும் “நான் சண்டைக்காரியா….?”, என அவனை அடிக்கவும் அவன் எழுந்து ஓட அவள் துரத்த ஆரம்பித்தாள்.
“பார்த்தியா உண்மைய தானடி சொன்னேன்”, என கூறியவன் ஓட்டத்தை நிறுத்தி லாவகமாக அவள் பின் சென்று அவளை பின் இருந்து அணைத்துக் கொண்டான்.
அதில் அவள் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து நாணம் ஒட்டிக்கொள்ள,
“ப்ச்….சூர்யா….நாம மாடியில இருக்கோம்…. “, என்றாள் தவிப்பாக அதை ரசித்தவன் அவளை மேலும் தவிக்க விடாமல் அங்கிருந்த சுவரில் அமர வைத்து அவனும் உட்கார்ந்தான்.
“சரி இப்போ கல்யாணம் பண்ண அப்புறம் நம்ம லவ் க்கு பாட்டு. ரெண்டு பேரும் ஒட்டுகா போடணும். நீ என்ன நெனைக்கிற நான் என்ன நெனைக்கிறேன் னு பார்க்கலாம்”, என்றுவிட்டு பாடலை போட்டனர்.
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
………….
………….
அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
என இருவரும் ஒரே பாடலை போட அதை கேட்டவர்களுக்கு ஆச்சர்யமும், பூரிப்பும் வந்தது. சுற்றம் மறந்தவள் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்து கொள்ள அவனும் அவளை அன்பாக அணைத்துக் கொண்டான். என்றைக்குமான அணைப்பு….!
தொடரும்……