💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -4
“செருக்கு, அகம்பாவம், ஆணவம் என்னும் இருள்களற்ற நேர்மையான செல்வந்தன் நன்மதிப்பு, தொடர் வெற்றி, மனநிம்மதி என்னும் ஒளிகள் பெறுவான்”.
அன்று மாலை அனைவரும் அண்ணா நகரில் உள்ள, ஷ்யாம் மற்றும் வர்ஷாவின் வீட்டிற்கு சென்றார்கள்.
அதை வீடு என்று சொல்வதை விட, மாளிகை என்று சொல்லலாம். வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம். அங்கு தான் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தியா வீடும் பெரியது தான், தியா வீடு இரண்டு அடுக்குகள் கொண்டது.
கீழே வரவேற்பறை, சமையலறை அதன் அருகிலேயே அளவான உணவு அருந்துமறை, ஒரு படுக்கையறை அது ராமச்சந்திரன் லட்சுமியின்னுடையது.
அதன் அருகில் லைப்ரரி செட்டப்பில் ஒரு அறை. தியா வீட்டில் மூவருமே படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எனவே வீட்டினுள் ஒரு சிறு லைப்ரரி உருவாக்கிருந்தார்கள்.
தியா அந்த அறையில் தான் கல்லூரி பாடங்கள் படிப்பாள். அதன் அருகே பூஜையறை.
மாடி செல்வதற்கு உள்ளே ஹாலின் நடுவில் படிக்கட்டுகள் அமைத்து இருந்தார்கள்.
மேலே இரண்டு அறைகள் ஒன்று தியாவினுடையாது, அவள் அறைக்கும் முன் இன்னொரு படுக்கை அறை உண்டு. அது விருந்தினர் யாராவது வந்தால் பயன்படுத்துவதற்காக.
வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறாள் தியா. பெரும்பாலும் அவை காய் மற்றும் கனி வகைகள். அவை வீட்டின் சமையலுக்கு பயன்படும் அளவு நல்ல விளைச்சலை கொடுத்தது.
சில மலர் வகைகளும் உண்டு அவை பூஜைக்கும் அவர்கள் தேவைக்கும் பயன்படும்.
இங்கு எந்த தோட்டத்தில் மலர் மற்றும் அழகாக வைக்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள் தான் பெரும்பாலும் இருந்தது.
ஆனால் அனைத்தும் நேர்த்தியாய் வெட்டப்பட்டு அழகாய் காட்சியளித்தது ஆங்காங்கே சிற்சிறு சீரியல் லைட்டுகள் போட்டு, வீட்டின் பின் பகுதி தோட்டத்தில் நடுவே கேக் வெட்ட மேடை அமைத்திருந்தனர்.
தியாவுக்கு தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இந்த தோட்டத்தை பார்த்தவுடன் தன்னை மறந்து அதில் ரசித்தபடி நின்று விட்டாள்.
“என்னங்க அப்படியே நின்னுட்டீங்க”, என திடீரென அருகே கேட்ட குரலில் பதறித் திரும்பியவள் தடுமாறி விழப் போனாள்.
எதிரிலிருந்த ஷ்யாம் அவள் கைப்பற்றி நிறுத்தி, “தியா ரிலாக்ஸ் ஏன் இவ்ளோ பதட்டம்?” என வினவ,
“இல்ல…திடீர்னு கூப்பிடவும்… பயந்துட்டேன்”
“நம்ப வீட்டுக்குள்ள என்ன பயம்”.
“ம்…”
“சரி வாங்க எல்லாரும் போய்ட்டாங்க பாருங்க”.
“ம்…”, என்று அனைவருடன் சேர்ந்துகொண்டாள் தியா.
தியா மற்றும் மித்துவின் குடும்பத்தினரின் வரவை பார்த்து வர்ஷா வர, அவளை முண்டு கொண்டு வந்த கிருஷ்ணமூர்த்தி, “வாங்க ராம் எப்படி இருக்கீங்க”, என்ன ராமச்சந்திரனை பார்த்து விசாரித்தார்.
“நான் நல்லா இருக்கேன், நீங்க… எப்படி…இங்க?” என வினவினார் ராமச்சந்திரன்.
“நல்லா கேட்டிங்கப்போங்க இது நம்ப வீடு தான்”.
“அப்போ வர்ஷு, ஷ்யாம்”, என்று அவர் முடிப்பதற்குள்…
“என் பிள்ளைகள் தான்”, என்றார்.
இவர்கள் இப்படி இழைந்துக் கொள்ள, ஒன்றும் புரியாமல் விழித்தனர் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுதுதான் அதை கவனித்த கிருஷ்ணன்.
“இவர் நம்ம கம்பெனி அக்கவுண்ட் வச்சிருக்க பேங்கோட மேனேஜர்”, என அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
முக்கிய காசோலைகள் மற்றும் கையெழுத்திற்கு இவரே நேரில் செல்வதால் பழக்கம். இப்பொழுது சில நாட்களாக அது நட்பாய் மாறி இருந்தது.
இருவரும் அவரவர் குடும்பத்தை அறிமுகப்படுத்தினர்.
“காலையில் உங்க வீட்டுக்கு வந்தது பத்தி வர்ஷா ரொம்ப சந்தோஷமா பேசினா. அவளுக்கு உங்க வீட்டு ரொம்ப புடிச்சு போச்சு”, எனக் கூறிய ராதா, தியாவின் புறம் திரும்பி,
“உன்ன பத்தி தான் இப்பபெல்லாம் வீட்ல பேச்சு”, எனவும் அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்தாள் தியா.
“அப்ப என்ன பத்தி ஒன்னும் சொல்றது இல்லையா ஆன்ட்டி”, என சண்டைக்கு வந்தாள் மித்து.
“நீ மித்து நினைக்கிறன்மா சரியா?”
“என்ன பத்தி சொல்லி இருக்கா ஒத்துக்குறேன்.”
அருண் மற்றும் மித்துவின் பெற்றோர்கள் சிறிது நேரம் அவர்களுக்குள் அளவளாவி மகிழ்ந்தார்கள்.
விழாவிற்கு அவர்களின் சென்னை கம்பெனி ஊழியர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
கேக் வெட்டி விழா சிறப்பாய் முடிய, அனைவருக்கும் உண்ண கொடுத்தனர்.
விழா முடிந்து அனைவரும் சென்றுவிட, குடும்ப நண்பர்கள்(தியா, மித்து மற்றும் அருண் வீட்டினர்) மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்
“இது முக்கியமா நம்ம தொழிலாளர்களுக்கான விழா இந்த நாளில் தான் நான் முதல்ல தொழில் ஆரம்பித்தேன். இப்ப நான் இந்த அளவு முன்னேறி இருக்கேனா, அதுக்கு அவங்க தான் முக்கிய காரணம். அதான் இந்த நாளை இன்னும் ஸ்பெஷலா கொண்டாடுவதற்கான காரணம்.” என கிருஷ்ணன் அந்த நாளுக்கான விளக்கத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, தோழிகளுக்கு வீட்டை சுற்றி காட்டினாள் வர்ஷா.
பெரிய ஹால், கீழே மூன்று படுக்கை அறைகள், அதில் ஒன்று கிருஷ்ணன் ராதாவினுடையது, மற்றொன்று கிருஷ்ணனின் தாய், தந்தைக்குரியது.
அவர்கள் கும்பகோணத்தில் இருக்கின்றனர். தங்களுடன் வரச் சொல்லி பலமுறை அழைத்தும் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு சொந்த ஊரை விட்டு வர மனமில்லை.
அங்கு இருக்கும் மல்பெரி தோட்டம், மா, தென்னை தோப்புகள் மற்றும் பண்ணை என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார் அவரின் அப்பா வீரராகவன்.
விடுமுறை நாட்களில் அங்கே சென்று வருவர். எப்போதாவது இங்கே வருவார்கள் அப்படி வரும் நேரம் அந்த அறையை பயன்படுத்துவர். மற்றொன்று விருந்தினர் அறை.
மேலே ஹால், ஷ்யாமின் அறை, வர்ஷாவின் அறை, சகல வசதிகள் கொண்ட ஜிம், மினி தியேட்டர், அறையின் உட்புறம் அமைந்த நீச்சல் குளம், என அனைத்து வசதிகளும் இருந்தன.
சிறிது நேரம் கழித்து அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.
மித்து மற்றும் தியா இரு குடும்பங்களும் ராமசந்திரன் காரில் ஒன்றாக சென்றனர், வழி முழுவதும் ஷ்யாம் வீட்டைப் பற்றிய பேசு தான்.
தியா, மித்து இருவரும் கடைசி சீட்டில் அமர்ந்து வளவளத்துக் கொண்டு வர, பெரியவர்கள் முன்புறம் அவர்களுக்குள் பேசிக்கொண்டு வந்தனர்.
“எவ்வளோ பெரிய இடம்! பணம் இருந்தாலும் இப்படிப் பட்ட குணம் அமையுமா?, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் பணத்தைப் பெருசா நினைக்காதவங்க, ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க”, என மித்துவின் அம்மா கூற,
“ஆமா ஏகன்யா, அவங்க மட்டும் இல்லாம அவங்க பிள்ளைகளையும் அதே மாதிரி வளர்த்திருக்காங்கப் பாரு”, என்றார் லட்சுமி.
“உண்மைதான் அக்கா” என ஏகன்யாவும் ஆமோதித்தார்.
***
மறுநாள் காலை கல்லூரியில், அடுத்த செமஸ்டர்க்கான அட்டவணை வந்திருந்தது.
ஸ்டடி ஹாலிடேஸில் தோழிகள் மூவரும் ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்று படுத்தனர். தியா தோழிகளுக்கு படிப்பில் உதவினாள்.
தேர்வுகளும் ஆரம்பமானது முன்பே படித்த நோட்ஸ் எடுத்ததனால், அதை மட்டும் ஒரு முறை பார்ப்பது போதுமானதாக இருந்தது தோழிகளுக்கு.
செமிஸ்டர் விடுமுறையில் ஷ்யாம் தந்தையுடன் கம்பெனிக்கு சென்றான்.
இது அவன் பள்ளி படிப்பு முடித்த காலத்திலிருந்து வழமையானது. கல்லூரி முடித்த பின், அவன் சிறிது சிறிதாய் கம்பெனியின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக கிருஷ்ணன் செய்த ஏற்பாடு.
வர்ஷா தன் அன்னையுடன் கும்பகோணத்திலிருக்கும் தன் தாத்தா பாட்டி ஊருக்கு சென்று வந்தாள்.
இத்தனை நாட்களில் ஷ்யாம், அருண், மித்து, தியா, மற்றும் வர்ஷு அனைவரும் மிகவும் நெருங்கி இருந்தனர்.
ஐந்து பேர் கொண்ட இவர்கள் குழுவுக்கு லைட்டிங் ஸ்டார்ஸ் (லைட்ட்டிங் ஸ்டார்ஸ்) என்ற பெயர் வைத்திருந்தனர்.
தேர்வு முடிவுகளும் வந்தது லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் அதிக பர்சன்ட் எடுத்து தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர்.
***
நாட்கள் மாதங்களாய் விரைந்து ஓட, ஆறு மாதங்கள் கடந்து, அடுத்த செமஸ்டரையும் முடித்திருந்தார்கள்.
ஷ்யாம் அருணுக்கு இது இறுதி செமஸ்டர். எனவே தங்கள் படிப்பில் கவனமாக இருந்தனர்.
மற்ற மூவரும் இரண்டாம் ஆண்டின் இறுதியில் இருந்தனர். அவர்களுக்கு எப்போதும் போல் அரட்டை, படிப்பு என நாட்கள் சென்றது.
இவ்வாறு இருக்க ஒரு நாள் தியா ஷ்யாமிற்கு கால் செய்தாள்.
“ஹலோ ஷாம் உங்ககிட்ட பேசணும் ஃப்ரீயா?”
“ம்ம்… ஃப்ரீ தான் சொல்லு”.(இவ்வளவு நாட்களில் அவளை ஒறுமையில் அழைக்க பழகி இருந்தான்)
“நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே” என்றாள் பீடிக்கையுடன்.
“ம்…சொல்லு என்ன ஹெல்ப்”
“அருண் அண்ணா யாரையாச்சி லவ் பண்றங்களா?” என்று இவள் வினவ,
“என்ன திடிர்னு…” என்றான் யோசனையோடு.
“ப்ளீஸ் சொல்லுங்களேன்…”
“ஆமா, ஆனா இன்னும் அந்த பொண்ணுகிட்ட சொல்லலை”.
“அப்படியா..” என்றவளின் குரல் கீழ்யிரங்கியது.
…
“அது…அந்த பொண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா?”
“நீ முதல் விஷயத்தை சொல்லு எதுக்கு இப்ப இந்த விசாரணை”
அவள் அமைதியாக இருக்க.அந்த பெண் மித்து தான் என்ற உன்மையைச் சொன்னான் ஷ்யாம்.
அதைக் கேட்டவள் துள்ளிக் குதிக்காத குறை தான் அவ்வளவு மகிழ்ச்சி.
“உன்மையாவா……”, சந்தோஷத்தை குரலிலும் தேக்கி.
“ஆமா…. சரி இப்போவாச்சு என்னனு சொல்றியா”.
மித்து கொஞ்ச நாளா சரியில்ல வழமையான கலகலப்பு போய் ஒரு மாதிரி இருந்தாள்.
தியா மற்றும் வர்ஷு அவளிடம் கேட்டுப் பார்த்தும் பதில் இல்லை. பின் ஒரு மரத்தடியில் அருண் மற்றும் ஷ்யாமுடன் நின்று பேசுவதை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்த, மித்துவைக் கண்டாள் தியா.
“என்னடி பண்ற இங்க”, என்று அவளிடம் கேட்க,
“அது…”, என மாட்டிக்கொண்டோமே என விழித்தாள்.
“எது…நீ அருண் அண்ணாவைத் தானே பார்த்த”, என அவள் சரியாய் கேட்க,
சிறுவயதிலிருந்தே தோழியிடம் எதையும் மறைக்காதவள் தன் மனதைத் திறந்தாள்.
“ஆமாடி, அவர் எப்பவும் போன்ல பேசுவாருடி, இப்ப லாஸ்ட் செம இல்ல, அதான் அதிகமா பேசறது இல்லை.”, என்றாள் வருத்தமாக.
மேலும் தொடர்ந்து, “இவ்வளோ நாள் இல்லாம இப்போ ஒரு மாதிரி இருக்குடி. அவர பாக்கணும் பேசணும்னு தோணுது”, என்றாள் அருணை பார்த்துக் கொண்டே,
தோழி காதல் நோயில் விழுந்தது புரிந்தது தியாவிற்கு. ஆனால் எதுவும் தெரியாமல் அவளை ஊக்கவிக்கவும் விரும்பவில்லை அவள்.
இவ்வாறு நடந்த அனைத்தையும் ஷ்யாமிடம் கூறினாள்.
பின் மீண்டும், “உண்மையா அருண் அண்ணா மித்துவை விரும்புறாங்களா?”, என்ன தெளிவு படுத்திக் கொள்ள கேட்டாள்.
“ஆமா தியா உண்மையா அவனுக்கு மித்துனா ரொம்ப பிடிக்கும்”, என்றான் ஷ்யாம்.
“அப்புறம் ஏன் இன்னும் அவகிட்ட சொல்லல”, அவளுக்குள் அதுவரை ஓடிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.
“இப்போதைக்கு எதுவும் சொல்லிக்க வேணாம். ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு பேசிக்கலாம்னு இருந்தான்.” என்றான் அவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன்.
“அவங்க வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லையே”.
“இல்ல தியா, அவங்க அப்பா ஒரு நாள் என்கிட்ட சொன்னாங்க, அவர் தங்கச்சி பெண்ணை அருணுக்கு கேட்கலாம்னு இருக்கேன்னு. சோ அங்க எதுவும் பிரச்சனை கிடையாது. மித்து வீட்ல எப்படி?” பதிலுக்கு அவன் வினவினான்.
“ஆன்ட்டி எனக்கு கிளோஸ் தான் அவங்ககிட்ட இது பத்தி இண்டிரெக்டா பேசி பாக்குறேன்”
“சரி பேசிட்டு சொல்லு, அப்புறம் பார்த்து பிரச்சனை இல்லாத மாதிரி பேசு”, என்றான் எச்சரிக்கையாய்.
“கண்டிப்பா”, என்ன பேசியை வைத்துவிட்டு,
மித்துவின் அம்மா ஏகன்யாவிடம் என்ன பேசலாம்? எப்படி பேசலாம்? என சிந்திக்கலானாள் தியா.