anima21

anima21

வியப்பு மேலிட… “ஹேய்! ஸ்டாப்! ஸ்டாப்! நீ அப்பவே ஈஸ்வர் அண்ணாவை சைட் அடிச்சியா… நான் அதைக் கவனிக்கவே இல்லையே!” என்றான் ஜெய்.

 

ஈஸ்வருக்குமே அவள் சொன்ன செய்தி ஆச்சரியத்தைக் கொடுக்க… அதைத் தொடர்ந்து கேட்கும் ஆர்வம் கூடியது…

 

ஜெய்யின் கேள்விக்கு… “நீ என்னை எங்க கவனிச்ச! நீயும்தானே அவரைப் பார்த்து… ஜெர்க் ஆகி… ரன்னிங் கமெண்ட்ரிலாம் கொடுத்துட்டு இருந்த!” என்று சொன்ன மலர்… “இப்படி நடுவில பேசினா… எனக்குச் சொல்ல வராது… ஸோ ப்ளீஸ்!” என்றவள்… வாயை ‘ஜிப்’ போடுவதுபோல ஜாடை செய்யவும்… “சரி! சரி! இனிமேல் பேசல…  யூ… கன்டினியூ!” என்று அவன் சொல்லவும் தொடர்ந்தாள் மலர்.

 

ஜெய்… ஈஸ்வரின் தோற்றத்தைப் புகழ்ந்துகொண்டிருக்க… “என்ன அவர் ஃபிலிம் ஆக்டரா? நான் யாரோ பிசினஸ் மேன்னு இல்ல நினைச்சேன்” என்ற மலர்… “எந்த படத்துல நடிச்சிருக்கார்?” என்று கேட்க…

 

“இப்ப… வந்து… செம்ம போடு போட்டு இருக்கே… “ப்ளூ டூத்! னு ஒரு சைன்ஸ் பிக்ஷன் படம்… அதுலதான்!” என்றான் ஜெய்…

 

“வாட்! அதுல… அந்தத் தேவாங்கு அனுபவ்தானே ஹீரோ! அதனாலதான் அந்தப் படத்தை பார்க்கணும்னு கூட எனக்கு தோணல!” என்றாள் மலர்… சலிப்புடன்…

 

“ஹா! ஹா! நீதான் அவனை தேவங்குன்னு சொல்ற… அவனுக்குனு ஒரு பெரிய மாஸ் கூட்டமே இருக்கு…” என்று சொன்ன ஜெய்… தொடர்ந்து… “இவர் அந்த படத்தோட வில்லன்… பேரு ஜெகதீஸ்வரன்!” என்று முடித்தான்…

 

“ஜக… தீஈஈ… ஸ்வரன்!” ஒருமுறை சொல்லிப்பார்த்தவள்… “பார்க்க இவ்ளோ கெத்தா இருக்காரு… பிறகு ஏன் வில்லனா நடிக்கணும்… ஹீரோவாவே நடிக்கலாமே!” என்று அவள் மனதில் எழுந்த சந்தேகத்தை மலர் கேட்கவும்…

 

“வேணா… அவர்கிட்டயே கேளேன்…  நீ போகப்போற ப்ளைட்லதான் ட்ராவல் பண்ணப்போறார்னு நினைக்கிறேன்… எப்படியும் வெய்டிங் ரூம்லதான் இருப்பார்!” என்றான் ஜெய் நக்கல் கலந்த குரலில்…

 

அவன் சொன்ன செய்தியில்… அவளையும் அறியாமல்… குதூகலம் மேலிட…  “ஓஹ்! நான் போற ப்ளைட்லதான் வருவாரா” என்றவளின் மனம்… ‘எப்படியும்… பிசினஸ் கிளாஸ்லதான் ட்ராவல் பண்ணுவார் இல்ல?’ என்று ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பியது…

 

அதற்குள் லாவண்யா… அவள் திருமணம் செய்துகொள்ளவிருக்கும்… சஞ்சீவன்… அனிதா… ரஞ்சனி… என அவளுடன் பயணம் செய்யவிருக்கும் நால்வரும் அங்கே வந்துவிட… ஜெய்யிடம் விடைபெற்று… அங்கிருந்து உள்ளே சென்றாள் மலர்…

 

மலர் நினைத்ததுபோல் இன்றி… அவர்கள் பயணம் செய்யும் ‘எகானமி கிளாஸ்’ பகுதியில்தான் உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர்… ஓய்வாகக் கண்களை மூடியவாறு…

 

அவன் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிர்புறமாக… ஒரு வரிசைக்குப் பின்னால் இருந்தது… மலருக்கான இருக்கை… அவளுக்கு அருகில்… ரஞ்சனி உட்கார்ந்திருந்தாள்…

 

எதோ ஒரு புதுவிதமான உணர்வு மேலிட… அவனை நோக்கிச் சென்ற பார்வையை… விலக்கத் தோன்றாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்…

 

அவளுடைய இயல்பிற்கு மாறான இந்தச் செய்கையில்… தோழியைக் கண்டு அதிசயித்த ரஞ்சனி…

 

“என்ன மலர்! உன் சிஸ்டம்ல எதாவது எர்ரர் ஆகிப்போச்சா? அந்த வில்லனை… இந்த லுக்கு விடுற?” என்று கிண்டலாக கேட்கவும்தான்… தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்  என்பதையே உணர்ந்த மலர்… பார்வையை மாற்றினாள்…

 

பொதுவான அறிவிப்புக்களைத் தொடர்ந்து… விமானம்… பறக்கத்தொடங்கி… சில நிமிடங்கள் கடந்திருந்தது… விமான பணிப்பெண்கள் மட்டும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்க… மற்ற பயணிகள் அனைவரும்… சூழ்நிலைக்குப் பொருந்தியிருந்தனர்…

 

கண்களை உறக்கம் தழுவ… அதன் பிடிக்குள் மெள்ள… மெள்ள… சென்றுகொண்டிருந்தாள் மலர்… அப்பொழுது அங்கே குடிகொண்டிருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது… பிறந்து வெகு சில மாதங்களே ஆகியிருந்த குழந்தையின் அழுகை…

 

அவளுக்கு நேர் புறமாக இருந்த இருக்கையில்… தனியாகக் கைக்குழந்தையுடன் பயணிக்கும் வடகத்தியவர் போன்று தோற்றம் அளிக்கும்… இளம் பெண்… அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த… பலவாறு போராடிக்கொண்டிருக்க… குழந்தையின் அழுகை மேலும் அதிகரித்ததே தவிர குறையவில்லை…

 

அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த முதிய பெண்மணி ஒருவர்… முயன்று பார்த்தும்… ஏதும் மற்றம் இல்லை…

 

அந்தச் சூழ்நிலையில், அந்த இரைச்சல்…  பலரது முகத்தையும் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தது… விமான பணிப்பெண் வேறு… குழந்தையின் அழுகையை நிறுத்துமாறு… அந்தப் பெண்ணிடம் பணிவுடன் சொல்லிவிட்டுப் போனார்!

 

அந்தப் பெண்ணை பார்க்கவே பரிதாபமாக இருந்தது மலருக்கு…

 

மிகவும் சிறு குழந்தைகளைத் தூக்கி பழக்கமில்லாத காரணத்தால்… என்ன செய்வது என்று முதலில் தயங்கியவள்… பின்பு முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்… இருக்கையை விட்டு எழுந்தாள் மலர்…

 

அதே நேரம்… அவன் அணிந்துகொண்டிருந்த ஜெர்கினை கழற்றி… அருகில் உட்கார்ந்திருந்த தமிழிடம் கொடுத்துவிட்டு… அந்தப் பெண்ணை நோக்கிப் போனான் ஈஸ்வர்…

 

குழந்தைக்காகக் கையை நீட்டியவாறு… “டோன்ட் ஹெசிடேட் சிஸ்டர்! லெட் மீ ட்ரை!” என்று அவன் சொல்லவும்… மறுக்கத் தோன்றாமல் குழந்தையை அவனிடம் கொடுத்தாள் அந்தப் பெண்…

 

மலருக்குத்தான்… அவனது முரடான கைகளையும்… விரிந்த தோள்களையும் பார்த்து… ‘ஐயோ! இவர்ர்ர்… எப்படி இந்தத் தலை கூட நிற்காத குழந்தையைத் தூக்குவார்!” என்ற கேள்வி மனதில் எழுந்தது… புதிராக அவனைப் பார்த்தாள் அவள்…

 

அவளுடைய அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி… அந்தக் குழந்தையை… அது பொத்தி வைக்கப்பட்டிருந்த மெத்தையிலான பையில் இருந்து மிக லாவகமாக கையில் தூக்கியவன்…

 

அதன் முகத்தை ஆராய்ந்தவாறு… அதன் செவிகளில் பின் பகுதியில்… கட்டை விரலால் லேசாக அழுத்தம் கொடுக்கவும்… அதன் அழுகை கொஞ்சம் மட்டுப்பட… தொடர்ந்து…  கொஞ்சமும் பதட்டமோ… சலனமோ இன்றி… தனது தோளில் போட்டு… அந்தக் குழந்தையின் முதுகில் லேசாகத் தட்டிக்கொடுக்கவும்… அந்தக் குழந்தை… சில நிமிடங்களில் தூங்கிப்போனது…

 

அதற்குள் பதட்ட நிலை குறைந்து… இயல்பிற்கு வந்திருந்த அந்தப் பெண்… மெல்லிய குரலில் அவனுக்கு நன்றி தெரிவிக்க… சிறுத் தலை அசைப்பின் மூலம் அதை ஏற்ற ஈஸ்வர்… அந்தக் குழந்தையை… அவளிடம் ஒப்படைத்துவிட்டு அவனது இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டான்…

 

எப்படி மலரை முதன்முதல் பார்த்த நொடி… அவளது பெண்மையின் மென்மையைத் தாண்டிய… அசாத்திய துணிவும்… தன்னம்பிக்கையும் ஜெகதீஸ்வரனை அவள்பால் ஈர்த்ததோ… அதே போன்று… அவனுடைய வசீகரிக்கும் ஆளுமையுடன் கூடிய ஆண்மைக்குள் பொதிந்திருந்த… மென்மையும்… தாய்மையும் அவளை முற்றிலுமாக வீழ்த்தியிருந்தது…

 

மலர் மட்டுமில்லாது… அங்கே பயணம் செய்த பலரும்… அவனை மெச்சுதலுடன் பார்த்தனர்…

 

அங்கே இருந்த விமான பணிப்பெண்… அவனிடம் கை குலுக்கி… பாராட்டவும்… புன்னகையுடன் அவளுக்கு ஏதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான் ஈஸ்வர்…

 

அதைப் பார்த்ததும் மலருக்கும் கூட… அவனிடம் சென்று பேசும் ஆவல் எழ… ஏனோ அதைச் செய்ய விடாமல்… ஒரு தயக்கம் அவளைத் தொற்றிக்கொண்டது…

 

சிறிது நேரத்தில் அவன் உறங்கிவிட… அவளுக்குத்தான் உறக்கம் பறி போனது…

 

அவள்தான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர…  அவன் ஒரு முறை கூட… உணர்ந்து அவளைப் பார்க்கவில்லை… அதற்கேற்ற சூழலும் அவனுக்கு அமையவில்லை…  ஆனாலும் அவனுடன் பயணம் செய்த அந்தப் பன்னிரண்டு மணிநேரமும்… அவள் மனதில் கல்வெட்டு போல் பதிந்துதான் போனது…

 

அந்த விமானம்…  லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தவுடன்… ஈஸ்வர் அங்கிருந்து சென்றுவிட… தொடர் விமானம் மூலம்… அமெரிக்கா நோக்கிப் பயணித்தாள் மலர்…

 

டெக்சாஸ் நகரம்… ஆகஸ்ட் மாதத்தில் அதிக வெப்பம் என அனைவரும் புலம்பிக்கொண்டிருக்க… சென்னை வெப்பத்தையே பார்த்திருந்ததால்… பெரியதாகத் தோன்றவில்லை மலருக்கு…

 

அன்று ஞாயிற்றுக் கிழமை… அங்கே இருந்த பூங்காவில்… தனிமையிலே இனிமை காண முடியாமல்… ஆற்றாமையுடன் உட்கார்ந்திருந்தாள் அவள்…

 

லாவண்யா… சஞ்சீவனுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட… மற்ற இருவரும் அப்பொழுது புதிதாக வெளியாகியிருந்த திரைப்படத்திற்கு சென்றுவிட்டனர்… அவர்கள் மலரையும் உடன் அழைக்க… படம் பார்க்கும் ஆர்வம் இல்லாமல்… செல்லவில்லை அவள்…

 

அங்கே வந்து தரை இறங்கியது முதல்… ‘ஜெட் லாக்’ சரியாகவே சில தினங்கள் பிடித்தது அவளுக்கு… அதனுடன் கூட…  தங்கும் இடம்… அலுவலகம்… உணவு முறை… என அனைத்தையும் பழகிக்கொள்ள… கிட்டத்தட்ட பத்து தினங்கள் கடந்துவிட்டது… இதில் பெரிதாக ஈஸ்வர் பற்றிய எண்ணங்களெல்லாம் மேலெழவில்லை அவளுக்கு…

 

வீட்டில் எல்லோருடனும்… என்னதான் ‘வீடியோ கால்’ மூலம்… பேசிக்கொண்டிருந்தாலும்… அன்று கண் விழித்து முதலே… ஏதோ ஒரு வெற்றிடம் தோன்றி இருந்தது மனதில்…

 

காரணம் அன்றைய தினம்… ஜெய் மற்றும் மலர் இருவரது பிறந்தநாள்…

 

பிறந்தது முதல்… ஜெய்யை பிரிந்து ஒரு பிறந்தநாள் என்பது அவளுக்கு இதுவே முதல் முறை.

 

இங்கே இரவாக… சென்னையில் பகலாக இருக்கும் சமயம்… மடிக் கணினி வழியாகவே… இருவருடைய பிறந்தநாளையும் கொண்டாடி… பெரியவர்களிடம் ஆசி பெற்று… முடித்தாகிவிட்டது… இருந்தாலும் அவர்கள் பிரிவில் தவித்துத்தான் போனாள் மலர்…

 

சிறு வயது முதலே… அம்மா… பாட்டி என அவர்களுடன் வீட்டிலேயே இருப்பதில்தான் நாட்டம் அதிகம் மலருக்கு… அப்படியே வெளியே சென்றாலும்… ஜெய் அவளுடன் கட்டாயம் இருப்பான்… தனிமை என்ற எண்ணமே தோன்றியதில்லை இதுவரை…

 

இப்படி இருக்க… நிர்பந்த படுத்தி… இப்படி அவளை நாடு கடத்தியிருந்த அந்த மென்பொருள் நிறுவனத்தின்மேல் அளவுகடந்த கோபம் உண்டானது மலருக்கு…  இப்படிப்பட்ட எண்ணப் போக்கில் மலர் இருக்க… அவள் பார்வையில் விழுந்தான்… நான்கு அல்லது ஐந்து வயதில் இருக்கும் அந்தச் சிறுவன்…

 

அங்கே அவன் வயதை ஒத்த பல குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருக்க… அவன் மட்டும் கண்களில் ஜீவனே இல்லாமல்… வெறித்த பார்வையுடன்… அங்கிருந்த கல் மேடையில் தனியாக அமர்ந்திருந்தான்…

 

பார்த்த மாத்திரத்தில்அவனது முகம் ஏனோ ஈஸ்வரை அவளுக்கு நினைவுபடுத்த… ஒரு உந்துதலில் அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டாள் மலர்…

 

அருகில் வந்து அவள் உட்காரவும்… அந்தப் பொடியன்… அவளை ஒரு புரியாத பார்வை பார்த்து வைக்க…

 

“ஹை! ஒய் ஆர் யூ சிட்டிங் அலோன் ஹியர்… கோ அண்ட் பிளே வித் தெம்!” (நீ ஏன் தனியாக இருக்கிறாய்… அங்கே போய் விளையாடு) என்றாள் மலர்… அவனை உற்சாகப்படுத்துவதுபோல்…

 

“நோ! தே ஆர் பிளேயிங் பார்பி கேம்ஸ்! அடலீஸ்ட் ஐ ஷுட் ஹாவ் எ கேர்ள் ஃபிரெண்ட்… யூ நோ!” என்றான் அவன் வருத்தம் தோய்ந்த குரலில்…

 

அவன் அப்படி சொல்லவும் எழுந்த வியப்பில்… “பார்றா! கேர்ள் ஃபிரெண்டாம்ல! ம்!” என்று சொல்லி மலர் உதடு சுழிக்க…

 

‘ஐ! தமிழ் பேசற!’ என்று அவன் உற்சாகமடைய… “ஓ! நீயும் குட்டி தமிழன்தானா?” என்றாள் மலர் செவிகளில் தேன் வந்து பாய்ந்த பரவசத்தில்…

 

“ம்! எனக்கு தமிழ் பேசத்தான் பிடிக்கும்” என்றான் அவன்…

 

மகிழ்ச்சியுடன் கையை நீட்டி… “ஹாய்! என் பேரு அணிமாமலர்! உன் பேர் என்ன?’ என்று மலர் கேட்க… அவளுடைய கையை பற்றி குலுக்கியவாறே… “என் பேர் ஜீவன்!” என்றான் அவன்… அவளுடைய மகிழ்ச்சியை பிரதிபலித்தவாறே…

 

அதற்குள் அவளுடைய கைபேசியில்… மலரை அழைத்த சுசீலா மாமியும்… கோபாலன் மாமாவும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி… அழைப்பை துண்டிக்க… அதை கவனித்துக்கொண்டே இருந்தவன்… அன்று அவளுடைய பிறந்தநாள் என்பது புரியவும்…

 

“ஐ! ஹனீமா! உனக்கு பர்த் டேவா! எனக்கும் இன்னைக்குத்தான் பர்த் டே!” என்றான் குதூகலம் கூடிய குரலில்… அந்த குட்டி ஜீவன்…

 

“அட! அப்படினா ஜீவனும்… நம்ம கட்சித்தானா? நம்ம பர்த் டே அன்றைக்குத்தான் அவனை முதலில் மீட் பண்ணியா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டவாறு  இடை புகுந்தான் ஜெய்…

 

மலருடைய பேச்சு அப்படியே தடைபட்டது… அதில் எரிச்சலாகி… “ஜெய்!” என்று பல்லை கடித்தான் ஈஸ்வர்…

 

அப்பொழுது சரியாக ஜெய்யுடைய கைபேசி ஒலிக்க… பால்கனியில் சென்று பேசிவிட்டு வந்த ஜெய்… “சாரி! ஒரு எமெர்ஜென்சி… நான் உடனே கிளம்பனும்… மலர் நீ கன்டினியூ பண்ணு… நான் பிறகு கேட்டு தெரிஞ்சுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தான் ஜெய்…

 

அதே நேரம்… கதவை திறந்துகொண்டு… செங்கமலம் பாட்டி பின் தொடர… உறக்கம் கலையாமல்… தள்ளாடியபடி உள்ளே நுழைந்த ஜீவன்… மலரிடம் வந்து ஒட்டிக்கொண்டு… “தேனே பாட்டு பாடு ஹனி!” என்றான்… பிடிவாதக் குரலில்…

 

பிறகு ஜெய் கிளம்பிவிட… “ஜீவன்! நீ தூங்கு… அந்த பாட்டை நான் பிறகு பாடுறேன்!” என்று மலர் சொல்லவும்… அழுகை கலந்த குரலில்… “ஜீவன் சொல்லாத ஹனி!” என்று சொல்ல…

 

“ஓகே! பாய் ஃபிரென்ட்! சரியா! தூங்கு” என்று சொல்லி அவனை கட்டிலில் படுக்க வைக்க… வாயில் விரலை வைத்துக்கொண்டு… “பாடு ஹனி!” என்றான் ஜீவன்… பிடிவாதத்தை விடாமல்… அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி… ஈஸ்வர் அருகில் போய் உட்கார்ந்துகொள்ள… படத்தொடங்கினாள் மலர்…

 

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே

 

மானே இள மானே

 

நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

 

ஆரீராரோ

 

 

 

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

 

ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

 

நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்

 

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்

 

ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

 

 

 

அன்று மலருடைய மென் குரலில் அந்தப் பாடலை கேட்கும் பொழுது… அது அவனுக்குச் சொல்லாத செய்தியெல்லாம்… இன்று மொத்தமாக ஈஸ்வரிடம் சொன்னது அந்தப் பாடல்…

 

அது ஜீவனுக்கென்றே… மலர் பாடிய பாடல் என்பது தெளிவாக புரிந்தது…

 

குழந்தைகள் படிக்கும்… ‘ஹான்செல் அண்ட் கிரேட்டல்’ கதை புத்தகத்தில்… மலர் அவனுடைய ‘ஆட்டோக்ராப்’ வாங்கியதன் கரணம் புரிந்தது ஈஸ்வருக்கு…

 

“இன்னும் கொஞ்ச நாளில்… தாய்மாமன் முறையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்… தயாரா இருங்க!”

 

“உங்க மருமகனை நீங்க நேரில் பார்க்கும்போது எப்படி பீல் பண்ணுவீங்கன்னு பார்க்க… இப்பவே வெயிட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா பார்த்துக்கோங்க!”

 

“அது… ஜீவன்னு ஒண்ணு இருக்கு… எப்பவுமே… அது என்னைத் தொல்லை பண்ணிட்டே இருக்கும்… அவனை வெறுப்பேற்றத்தான்…”

 

மலர் கடத்தப்பட்டதற்கு முந்தைய தினம்… அந்த நட்சத்திர விடுதியில் குரலில் அத்தனை கொஞ்சலும்… குழைவுமாக… மலர் பேசிக்கொண்டிருத்தது என…  ஜீவனைக் குறிப்பிடாமல்… அவனை மனதில் வைத்து… மலர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்… ஈஸ்வர் மனதில் வந்துபோனது…

 

தனக்காக… தன்னைச் சேர்ந்தவர்களுக்காக… அவள் செய்த ஒவ்வொரு செயலிலும்… அவளது காதல் மேலோங்கித் தெரிய… அவளிடம் மேலும் மேலும்… மதி மயங்கித்தான் போனான் ஈஸ்வர்…

 

அவர்களையே… புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி… “ஈஸ்வரா… உங்க அம்மாவைப் போல… உன்னைப் பற்றி யோசிக்கிற நல்ல பெண்… உனக்கு கிடைச்சிருக்கா… அவளை… பத்திரமா பார்த்துக்கோ!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்…

 

எண்ண ஓட்டத்தில்… அப்பொழுதுதான் அவள் பாடி முடித்திருந்ததையே உணர்ந்த ஈஸ்வர்… அவளைப் பார்க்க… ஜீவனுடன் சேர்ந்து மலரும் கூட உறங்கிப்போயிருந்தாள்…

 

இருவரையும்… நிறைந்த மனதுடன் ஈஸ்வர் பார்த்துக்கொண்டிருக்க… அப்பொழுது… ஈஸ்வரை கைப்பேசியில் அழைத்த ஜெய்… “அண்ணா! இங்கே… பல்லாவரம் பக்கத்துல இருக்கும் ஒரு குப்பை கிடங்கில்… இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு… எரிக்கப்பட்டிருக்காங்க…” என்று சொல்ல…

 

“ஐயோ! அடுத்த கொலையா?” என்றான் ஈஸ்வர்… அலுப்புடன்…

 

“ப்ச்! ஆமாம் அண்ணா!” என்றவன்… “நான்… கெஸ் பண்ண வரைக்கும்…  அந்தக் குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்டவங்களாகத்தான் இருக்கும்! அதாவது மலர் சொன்ன வேதா என்பவனும்… இன்னும் ஒருத்தனும்னு நினைக்கிறேன்”

 

“நாளைக்கு நான் வீட்டுக்கு வந்து மலரை… அழைச்சிட்டு போகட்டுமா… அந்தப் பாடியை அடையாளம் காட்ட?” என்று கேட்டான் ஜெய்…

 

சில நொடிகள் யோசித்தவன்… ஒரு முடிவுக்கு வந்தவனாக… “வேண்டாம் ஜெய்… எனக்கு டூ டேஸ் டைம் கொடு… நானே மலருடன் அங்கே வரேன்!” என்றான் ஈஸ்வர்…

 

தயக்கத்துடன்… “ஓகே…ணா! எங்கே வரணும்னு… நான் நாளைக்கு சொல்றேன்!” என்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்…

 

‘ஈஸ்வர் அண்ணா வந்தால்… மீடியாவுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியதாக இருக்குமே! என்ன செய்யலாம்? ‘ என்று சிந்திக்க தொடங்கினான் ஜெய்…

 

அடுத்த நாளே… அவன் நினைத்ததை விட… ஒட்டுமொத்த ஊடகங்கள்… மற்றும் அனைத்துச் சமூக வலைத் தளங்களின் பார்வையும்…  ஈஸ்வரை அக்கிரமிக்கப் போவதையும்… அதன் பின் அவனது ஒவ்வொரு சொல்லும்… செயலும்… மக்களை முழுவதுமாக திரும்பிப்பார்க்க வைக்கப்போகிறது என்பதையும்… அவன் அறிந்திருக்க நியாயமில்லை…

 

காரணம்… அடுத்த நாள்…

 

பிரபல எழுத்தாளர்… மோனிஷா எழுதி…பரபரப்பை ஏற்படுத்திய நாவலைத் தழுவி…  மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில்… தமிழ்… தெலுங்கு… ஹிந்தி… என மூன்று மொழிகளில்… எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த…   ‘மீண்டும் உயிர்த்தெழு!’ திரைப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியிடப்பட்டது!

 

அறிமுக நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிக்க… அனைவருடைய எதிர்பார்ப்பையும் கிளப்பிய… முக்கிய கதாப்பாத்திரமான… ‘ஈஸ்வர் தேவ்!’ வேடத்தில்… ஜகதீஸ்வரன் கம்பீரமான இளவரசன் தோற்றத்தில்… அனல் பறக்கும் விழிகளுடன்… குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற அந்த போஸ்டர்… அனைத்து ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்களிலும் வைரல் ஆகி… உலகம் முழுவதும்… அதிகப்படியான மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது…

 

error: Content is protected !!