அன்பே பேரன்பே – உமா தீபக்

அத்தியாயம் –   1

காலை நேர பரபரப்பு அந்த வீட்டில் எப்பொழுதும் போல், அடிதடியில் தான் ஆரம்பித்தது.

“அடேய்! பிசாசு இன்னைக்கு எனக்கு ஆபிஸ் ல மீட்டிங் டா எருமைமாடே. ஒழுங்கா பாத்ரூம் ல இருந்து வெளியே அஞ்சு நிமிஷத்துல வர, இல்லை உன் ஆளு கிட்ட உன் வண்டவாளம் எல்லாம் சொல்லி தண்டவாளத்தில் ஏத்தி விட்ருவேன்” என்று தம்பியை மிரட்டிக் கொண்டும், அவனை திட்டிக் கொண்டும் இருந்தாள் நம் கதையின் நாயகி பிரியங்கா தேவி.

“உனக்கு மீட்டிங் அப்படினா, நீ தான் சீக்கிரம் எழுந்து இருக்கணும். எனக்கு ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் வெளியே வர, இன்னைக்கு எனக்கு இன்டர் காலேஜ் பெஸ்டிவல் அதனால பளிச்சினு இருக்க வேண்டாமா, கொஞ்சம் டைம் எடுக்கும் அதனால நீ சமையல் வேலை பாரு” என்று பதிலுக்கு அமைதியாக குரல் கொடுத்தான், அவளின் தம்பி ராகவ்.

“அறிவு கொழுந்து! இதை எல்லாம் ராத்திரியே சொல்லி இருக்கணும். நானே லேட்டா போனா, அப்புறம் என் ஜூனியர்ஸ் எப்படி டா என்னை மதிப்பாங்க?” என்று சொன்னாலும் தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுவிட்டு, கிட்சன் உள்ளே சென்று சமைக்க இப்பொழுது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.

காரட், பட்டாணி இருக்கவும் உடனே ரவா கிச்சடி தயார் செய்ய களத்தில் இறங்கினாள். ராகவ் வெளியே வருவதற்குள் இங்கே அவள் கிச்சடி தயார் செய்ததோடு, அதை டிபன் டப்பாவில் இருவருக்கும் அடைத்து வைத்து விட்டாள்.

“வாசனையே நல்லா இருக்கே, என்ன சமைச்ச அக்கா?” என்று குளித்து முடித்து வந்தவன் நேராக கிட்சன் உள்ளே வந்தான்.

“கிச்சடி சமைச்சு இருக்கேன், ரெண்டு பேருக்கும் டிபன் பாக்ஸ்ல வச்சுட்டேன். இன்னைக்கு நான் சமைச்சிட்டேன், அதனால கிளீனிங் உன் வேலை தம்பி” என்று கூறிவிட்டு குளிக்க ஓடி விட்டாள்.

“எக்கா ராட்சசி! எனக்கு பிடிக்காது அப்படின்னு தெரிஞ்சே இதை எனக்கு கொடுக்கிற, உன்னை என்ன செய்யலாம்?” என்று கத்தினான்.

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு டா தம்பி, அவங்க வந்து விசாரிக்கட்டும் யார் மேல தப்பு இருக்குன்னு” என்று உள்ளே இருந்தே பதில் கூறியவளை ஒன்றும் செய்ய முடியாமல், ஆத்திரத்துடன் கிட்சனை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில், இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தனர் அவரவர் பணியிடத்திற்கு.

ராகவ், சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் ப்ரோபெசராக வேலை பார்க்கிறான். இன்று பல்வேறு கல்லூரியில் இருந்து வருகை புரிவர், இந்த விழாவிற்கு. அதில் அவனின் காதலி ஜனனியும் அடக்கம், அதற்காக தான் வீட்டில் அம்புட்டு ரகளை தன் அக்காவிடம்.

பார்கிங் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாக ஆபிஸ் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, ஸ்டாப் ரூம் சென்றான். எதிர் வருபவர்களுக்கு காலை வணக்கம் கொடுத்துக் கொண்டே, ஸ்டாப் ரூம் வந்தவன் அங்கே தன் டேபிளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, ஆடிடோரியம் சென்றான்.

அங்கே தான், எல்லா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்து இருந்தனர். அவனின் காதலியை தேடி, அவன் அங்கே சென்ற நொடி அவளும் இவனை கண்டுவிட்டு அவனை பார்த்து சிரித்தாள்.

அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, சைகையில் வெளியே வருமாறு கூறினான். அவளோ, பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறினாள். அவனும் சரி என்று கூறிவிட்டு, உள்ளே ஆடிடோரியத்தில் மேடை அலங்காரம், மைக் செட் வகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆடிடோரியம் பின்னே இருந்த மரத்தடி நிழலில் நின்றான். சரியாக அடுத்த ஐந்து நிமிடத்தில், அங்கே ஜனனியும் வந்து சேர்ந்தாள்.

“ஹே! இந்த பச்சை கலர் சாரி உனக்கு நல்லா எடுப்பா இருக்கு, மாமன் சட்டைக்கு மேட்ச்சா போட்டு வந்து இருக்க செல்லம், சூப்பர். சரி ஸ்வீட் கொடு மாமனுக்கு, ஒரே கலர் போட்டதுக்கு” என்று கன்னத்தை காட்டினான் ராகவ்.

“வேணும்னா ரெண்டு அடி தரேன், சொல்லி வச்சு ரெண்டு பேரும் போட்டுட்டு இப்போ ஸ்வீட் கேட்குதா உங்களுக்கு?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவன் அசடு வலிந்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவளுக்கு கால் வந்தது. எடுத்து யாரென்று பார்த்தவள், சிரிப்போடு அதை எடுத்து பேச தொடங்கினாள்.

“சொல்லுங்க அண்ணி! எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஜனனி.

அண்ணியா! இவளுக்கு அண்ணி யாரு? என்று அவன் யோசிக்க தொடங்கினான்.

அதற்குள் போனை ஸ்பீக்கர் மோடில் மாற்றி வைத்த ஜனனி, அவனை பேச சொல்ல, அவனோ யார் என்று கேட்டான்.

“டேய் அறிவு ஜீவி! அவளுக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணி தான், அது நான் மட்டும் தான். அதுக்குள்ள நீ அவளை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்ட பார்த்தியா? ஜனனி நான் சொல்லல இவன் சரியில்லை அப்படின்னு, நீ வேற ஆளை பாரு ஜனனி” என்று அந்த பக்கம் இவன் அக்கா பிரியங்கா தேவி பேசியதை கேட்கவும், இவனுக்கு கோபம் வந்தது.

“ராட்சசி! நீ எல்லாம் ஒரு அக்காவா? அவளை எப்போ நான் சந்தேகப்பட்டு இருக்கேன்? இதுக்கு தான் ஜனனி சொன்னேன், எங்க அக்காவோட கொஞ்சம் தள்ளி நின்னே பேசுன்னு”.

“பாரு, அவ எப்படி பேசுறா? இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உனக்கு வர போற மாப்பிள்ளை, உன்னை கோபப்படுத்திகிட்டே தான் இருக்க போறார்” என்று அவனின் தமக்கைக்கு இன்ஸ்டன்ட் சாபம் விட்டவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.

“ஹா ஹா !!! அடேய் தம்பி தினம் இங்கே வந்துட்டா நான் கோபப்பட்டுகிட்டே தான் இருக்கேன். அட்லீஸ்ட் இனியாவது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிற மாதிரி வேலை பார்க்கலாம் பார்த்தா, முடிய மாட்டேங்குது என்னால இந்த வேலையை விட”.

“அதனால உன் சாபம் எல்லாம் பலிக்காது, என்னை எப்போவும் கண்ணுக்குள் வச்சு தாங்குறவர் தான் மாப்பிள்ளையா வர போறார், உன் மூக்கை இப்போவே பத்திரமாக வச்சுக்கோ. அப்புறம் மூக்கு அறுபட்டு போய்டுவ டா ராகவா” என்று இழுத்து பேசியவளை பார்த்து அவன் புன்னகைத்தான்.

“ம்கும்! நானும் நீ எப்போ டா கல்யாணம் பண்ணுவ அப்படின்னு வெயிட் பண்ணுறேன், நீ இப்படி பிடி கொடுக்காம இருந்தா என்ன அக்கா அர்த்தம்? இப்போவே முப்பது வயசு உனக்கு, நான் சொல்லுறது புரியுதா இல்லையா உனக்கு!” என்று ஆதங்கப்பட்டான்.

“டேய்! நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அப்படினா சொல்லுறேன், என் பியாரி, லவர், காதலன் இன்னும் என் கண்ணுல சிக்கல டா, நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள்.

“ஹே அண்ணி! சூப்பர் அண்ணாவை எப்போ மீட் பண்ணீங்க? எல்லாம் சொல்லுங்க கேட்போம்” என்ற ஜனனியை பார்த்து முறைத்தான்.

“ம்கும்! அவளுக்கு பிடிச்ச மாதிரி யாரையும் இன்னும் மீட் பண்ணல, அப்படின்னு சிம்பாலிக்கா சொல்லுறா. நீ போய் வேலையை பாரு அக்கா , நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்” என்று கூறியவனை பார்த்து அதிர்ந்தாள்.

“என்னது நம்ம வேலை?” என்று திக்கி திக்கி கேட்ட ஜனனியை பார்த்து சிரித்தான்.

“ஹே! இப்போ விழா ஆரம்பிச்சிடும் ப்ரோபெசர், போக வேண்டாமா?” என்று அவளை பார்த்து குறும்பாக கேட்கவும் தான், அவள் சற்று தெளிந்து அவனை இடித்துவிட்டு ஓடினாள்.

“இந்த எங்க அக்கா ராட்சசிக்கு ஏத்த ராட்சசன் எப்போ வருவான் கடவுளே? சீக்கிரம் அவ கண்ணுல காட்டுங்க, அப்போ தான் எனக்கு வழி பிறக்கும்” என்று மனதிற்குள் தன் அக்காவை நினைத்து புலம்பிக் கொண்டே சென்றான்.

அங்கே பிரியங்கா அந்த ஆபீசிற்குள் கம்பீரமாக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அவளை எதிர்கொண்டவர்களும், அவளுக்கு வழி விட்டு பயத்துடன் ஒதுங்கி கொண்டனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, அந்த கான்பெரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அவளின் மேலதிகாரிக்கு, விஷ் செய்துவிட்டு அவளின் இருக்கையில் அமர்ந்தாள்.

“கைஸ்! நாம இந்த மீட்டிங் எதுக்கு போட்டு இருக்கோம் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். சக்தி முரளி பிசினஸ் மேன் அப்படின்ற பேர்ல இருக்கிற ரவுடிக்கு, மேலிடத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்க சொல்லி பிரஷர் கொடுத்தால, அதற்க்கான ஏற்பாடை பற்றி பேச தான் வந்து இருக்கோம்” என்று கூறிய மேலதிகாரரை பார்த்து மனதிற்குள் பொரும மட்டுமே முடிந்தது அவளால்.

ஏனெனில் இது அவருக்கும் பிடிக்காத விஷயமும் கூட, மேலிடத்து பிரஷர் தாங்காமல் இப்பொழுது பொறுப்பை தங்களிடம் அவர் ஒப்படைப்பதை நினைத்து தான் இந்த எரிச்சல்.

பிரியங்கா தேவி ஐபிஎஸ், என்று வெளியே கேட்டு பார்த்தால் அந்த போலீசா அப்படின்னு எல்லோரும் பயத்தில் அலறும் அளவிற்கு அந்த வட்டத்தில் பேர் எடுத்தவள். இப்படி ஒரு அண்டர்கிரௌண்ட் டான்க்கு, பாதுகாப்பு பணியை கொடுத்தால் எரிச்சல் வராமல் எப்படி இருக்கும் அவளுக்கு. எதிரியை வேட்டையாடி, துரத்தி பிடித்து என்கௌன்ட்டர் பண்ணும் அவளுக்கு இந்த அசைன்மென்ட் பிடிக்கவே இல்லை.

“மிஸ் பிரியங்கா, உங்க மேல இருக்கிற நம்பிக்கையிலும், திறமையிலும் தான் இந்த அசைன்மென்ட் உங்களுக்கு கொடுத்து இருக்கேன். உங்களுக்கு கீழே நீங்க யாரை எல்லாம் செலக்ட் பண்ணுறீங்க அப்படின்னு எனக்கு ஒரு ரிப்போர்ட் வந்து கொடுத்துடுங்க”.

“அண்ட் ஹி இஸ் பிரபாகர், கிரைம் பிரான்ச் டிபார்ட்மென்ட். அவனை பத்தின புல் டிடைல்ஸ் இவர் கிட்ட இருக்கு, நீங்க ஹெல்ப் கேட்டுக்கலாம். இதுல எந்த ஒரு ப்ளாக் மார்க் வர கூடாது, காட் இட் கைஸ்” என்று கூறிவிட்டு கமிஷ்னர் தினகரன் வெளியேறினார்.

அங்கு இருந்த மற்ற அதிகாரிகள், இப்பொழுது இவளை பார்த்தனர். அவளோ ஒரு முறை ஆழ மூச்சை இழுத்துக் கொண்டு, பிரபாகரை பார்த்தாள். அவர் உடனே அங்கு இருந்த ஸ்மார்ட் போர்டு ஸ்க்ரீனில், அவனை பற்றிய தகவலை எடுத்து காட்டினார்.

முதலில் வந்த அவன் போட்டோவை பார்த்தவள், மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.

“ஒன்பதாம் கிளாஸ்ல நான் படிக்கும் பொழுது, இந்த ஒல்லி பாச்சான் வந்து ஐ லவ் யூ ரியா அப்படின்னு பல்லை இள்ளிசிட்டு வந்து சொல்லுச்சு. இப்போ என்னடானா, பெரிய பிசினஸ்மேன் பிளஸ் டான்னு பெத்த பேரு இவனுக்கு” என்று பல்லை கடித்தாள்.

“அப்போ இருந்த மூஞ்சிக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை பாரேன். செம மான்லியா(manly) இருக்கான், அப்படியே நடிகர் சூர்யா சிக்ஸ் பாக் வச்சு இருந்தா எப்படி இருக்கும், அது மாதிரியே இருக்கான்” என்று ஜொல்லிய  அவளின் மனசாட்சியை அடக்கி உள்ளே வைத்தாள்.

“இப்போ இவனை டார்கெட் பண்ணி இருக்கிறது, எதிர்கட்சி தலைவரோட பையன் மிஸ்டர் கங்காதரன். ரீசன், அவர் பண்ணிய கொலைக்கு பக்கா சாட்சி இவன் தான்”.

“இவனுக்கு பெரிய இடத்தில் எல்லாம் செல்வாக்கு அதிகம், அதுவும் இந்த அஞ்சு வருஷத்தில் அவனோட வளர்ச்சி அதிகம். எஞ்சினீரிங் காலேஜ், டெக்ஸ்டைல் பிசினஸ், ஜுவெல்லரி பிசினஸ், ரியல் எஸ்டேட் அப்படின்னு இந்த அஞ்சு வருஷத்தில் அவன் வளர்ச்சி அதிகம்”.

“ஏற்கனவே, அஞ்சு தலைமுறைக்கு அவங்க வசதியானவங்க. இவன் படிச்சு முடிச்ச உடனே, அவங்க அப்பா பிசினஸ் தான் பார்க்க வந்தான். திடிர்னு என்னனு தெரியல, பெரிய பெரிய ஆளுங்களோட எல்லாம் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு”.

“அதுக்கு அப்புறம் அசுர வளர்ச்சி தான், ஆனா இவன் அண்டர்கிரவுண்ட் லெவல்ல என்ன வேலை எல்லாம் பார்த்தான் அப்படின்னு இப்போ வரைக்கும் எங்களால ட்ரேஸ் பண்ண முடியல” என்று அவர் சொல்லவும், இவள் மனதில் பலவித கணக்கு ஓடிக் கொண்டு இருந்தது.

“சரி சார், நீங்க கிளம்புங்க நான் வேற தகவல் வேணும்னா உங்களை கூப்பிடுறேன். மிஸ்டர் இளங்கோ, உங்களுக்கு கீழே ராஜு அண்ட் ரேவதியை அப்பாய்ன்ட் பண்ணிடுங்க. சரியா ஒரு பதினொரு மணிக்கு நீங்க எல்லாம் ஸ்டேஷன்க்கு வந்திடுங்க, நான் போய் கமிஷ்னரை பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு நேராக அவரின் அறைக்கு சென்றாள்.

“வா மா பிரியங்கா, முகமே செம கடுப்பில் இருக்கு. இந்த கேஸ் நினைச்சு நீ கடுப்பா இருந்தாலும், நீ தான் ஹான்டில் பண்ணி ஆகணும் இந்த கேஸ். காரணம், உன் பேரை குறிப்பிட்டு தான் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து இருக்காங்க” என்று கூறியவரை பார்த்து சிரித்தாள்.

“எனக்கு தெரியும் அங்கிள், அதுவும் என் பேரை குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க அப்படின்னு நீங்க சொன்ன உடனே இதை யாரு கொடுத்து இருப்பா அப்படினும் எனக்கு தெரியும். அந்த ஒல்லி பச்சான் தான் கொடுத்து இருப்பான், ராஸ்கல் இந்த முறை அவனா, இல்லை நானான்னு பார்த்திடுறேன்” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது அவர் சிரித்தார்.

“ஏம்மா! இன்னும் அவன் ஒல்லி பச்சான் தானா உனக்கு?” என்று கேட்டவரை பார்த்து முறைத்தாள்.

“சரி! சரி! உன்னை வர சொன்னதே ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசத்தான். அவன் சொன்ன காரணத்துக்காக மட்டும் இல்லை, வேற ஒரு விஷயம் அவனுக்கு கிடைச்சு இருக்கு அது உன் சம்மந்தப்பட்டது நினைக்கிறேன்”.

“இது நான் ரகசியமா சேகரிச்ச விஷயம், இனி நீ தான் பார்த்துக்கணும். அவன் மோதி இருக்கிறது சாதாரண ஆளும் கிடையாது, கிட்டத்தட்ட முப்பது வருஷமா எனக்கு அந்த ஆளை தெரியும், சோ இனி தான் நமக்கு வேலையே” என்று கூறி மேலும் சில தகவல்களை கூறினார்.

அவரின் அலுவல் அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு, நினைவு முழுவதும் அவர் கூறிய விஷயங்களை சுற்றியே இருந்தது. வண்டி அருகே வந்தவள், டிரைவரிடம் நேராக இசிஆர் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“ஹல்லோ! நான் சொல்லுற டிடைல்ஸ் நோட் பண்ணிக்கோ, இதனோட கம்ப்ளீட் ரிபோர்ட் எனக்கு வேணும் ஒரு டூ ஹவர்ஸ்ல, காட் இட்” என்று பிரியங்கா, எதிர்முனை ஆளிடம் சுருக்கமாக கூறிவிட்டு போனை வைத்தாள்.

அங்கு செல்லும்வரை, அவளின் எண்ணங்கள் முழுவதும் அந்த ஒல்லி பாச்சான் பற்றியே இருந்தது. அவனை இப்பொழுது சில வருடமாக பேப்பரில் தான் பார்க்கிறாள், அவனின் செயலை குறித்து ஒன்று புகழ்ந்தோ, தாளித்தோ சொல்லி இருப்பார்கள் மீடியாகாரர்கள்.

இதில் எது அவனின் உண்மை முகம் என்று தெரியவில்லை, ஒரு முகம் தொழிலதிபராக, மற்றொன்று தாதாவாக. இதில் தொழிலதிபராக கூட அவனை ஏற்றுக் கொள்ள முடிந்தது அவளால், ஆனால் தாதாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளால்.

“நிஜமாவே, அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இருப்பானா என்ன, என் மண்டையே காயுது ஆண்டவா” என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.

அங்கே ஸ்டேஷன் உள்ளே வண்டி நுழையவும், கம்பீரம் குறையாமல் இறங்கி உள்ளே சென்றாள். அங்கே இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், ராஜுவும், ரேவதியும் இருந்ததை பார்த்து மெச்சிக் கொண்டாள்.

அவர்களை அழைத்து, தன் காபின் உள்ளே நுழைந்தவள் அவர்களிடம் அவளின் திட்டத்தை விவரிக்க தொடங்கினாள். அதை கவனமாக கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு பணித்த வேலையை கவனிக்க சென்றார்கள்.

இதற்கிடையில், இவள் கேட்ட தகவல் அனைத்தும் வாட்ஸ் அப்பில் அவள் பேசிய நபரிடம் இருந்து வந்து சேர்ந்தது. அதை திறந்து பார்த்தவள், சில விஷயங்கள் அவளின் மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அதை தெளிவு படுத்திக் கொள்ள அவள் நேரடியாக, அவனை சந்திக்க சென்றாள் அவனின் இடத்திற்கு.

“ஐயா! அடிக்காதீங்க, நான் பிள்ளை குட்டிக்காரன். நான் பண்ணினது தப்பு தான், பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன் ஐயா” என்று ஒருவன் கதறிக் கொண்டு இருந்தான் அந்த பீச் ரிசார்ட் ஒன்றில்.

“ஏன் டா இன்னும் அடிக்க ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள பையன் இப்படி கதறுறான். டேய் டாம்மியை கொஞ்ச நேரம் அவன் கூட விளையாட விடுங்க, கத்துறதை நிப்பாட்டிடுவான் பையன்” என்று அவன் சாதுவாக கூறவும், எதிராளி அதிர்ந்து விட்டான்.

அவனை பற்றி நன்றாக தெரிந்தும், இந்த தப்பை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உண்மையை ஒத்துக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து, அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

அதில் அவன் முகம் வேட்டையாடும் புலி போல் மாற தொடங்கியது. பக்கத்தில் நின்று இருந்த அவனின் வலது கையிடம் கண்ணை காட்டவும், அவனுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து உடனே அதை செயல்படுத்த விரைந்தான்.

இதை எல்லாம் அப்பொழுது அங்கே வந்து இறங்கிய பிரியங்கா பார்த்தவள், அவனின் இந்த முகத்தை பார்த்து சற்று அதிர தான் செய்தாள். அதற்குள் அவன் இவளை பார்த்துவிட்டான், உடனே அவனின் முகமே மாறிவிட்டது.

சிரிப்புடன் அவளை நெருங்கியவன், அவளின் காக்கி உடையை பார்த்து சற்று நிதானித்தான். அவளின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டே, வந்தவனை இப்பொழுது அவள் மனசாட்சி ஆஜாராகி, அவனை ரசிக்க தொடங்கியது.

“வாவ்! என்ன நடை! என்ன நடை! அந்த சட்டை காலரை தூக்கி விட்டுகிட்டு வரும் அழகே தனி. கண்ணு சும்மா பவர்புல்லா நேர் கொண்ட பார்வையா நம்மை பார்க்கும் பொழுது, சும்மா ஜிவ்வுன்னு இருக்குல” என்று வர்ணித்த மனசாட்சியை ஓங்கி ஒரு கொட்டு வைத்து உள்ளே தள்ளினாள்.

“ஹல்லோ இன்ஸ்பெக்டர்! ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டவனை பார்த்து இப்பொழுது முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

“மிஸ்டர் சக்தி முரளி, உங்க பாதுகாப்புக்கு போலீஸ் தேவைபடுது அப்படின்னு சொல்லி மேலிடத்தில் சொல்லி இருந்தீங்களே, அது விஷயமா பேசணும்” என்று பளிச்சென்று விஷயத்திற்கு வந்தவளை பார்த்து மனதிற்குள் சிரித்தான்.

“ஒ ரியா பேபி! உன்னை என் வலைக்குள்ள கொண்டு வந்துட்டேன், இனி தான் நம்ம ஆட்டத்தை பார்க்க போற” என்று எண்ணிக் கொண்டே அவளை அழைத்து கொண்டு முன்னே சென்றான்.

“உன் வலைக்குள்ள அவ்வளவு ஈசியா இந்த ரியா மாட்ட மாட்டா, நான் இங்க வந்த விஷயமே வேற டா” என்று அவளும் எண்ணிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்.

இவர்களை இருவர் கண்கானின்றனர் என்பதை அறியாமல், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.

தொடரும்..

  

 

 

அத்தியாயம் –   1

காலை நேர பரபரப்பு அந்த வீட்டில் எப்பொழுதும் போல், அடிதடியில் தான் ஆரம்பித்தது.

“அடேய்! பிசாசு இன்னைக்கு எனக்கு ஆபிஸ் ல மீட்டிங் டா எருமைமாடே. ஒழுங்கா பாத்ரூம் ல இருந்து வெளியே அஞ்சு நிமிஷத்துல வர, இல்லை உன் ஆளு கிட்ட உன் வண்டவாளம் எல்லாம் சொல்லி தண்டவாளத்தில் ஏத்தி விட்ருவேன்” என்று தம்பியை மிரட்டிக் கொண்டும், அவனை திட்டிக் கொண்டும் இருந்தாள் நம் கதையின் நாயகி பிரியங்கா தேவி.

“உனக்கு மீட்டிங் அப்படினா, நீ தான் சீக்கிரம் எழுந்து இருக்கணும். எனக்கு ஒரு பத்து நிமிஷமாவது ஆகும் வெளியே வர, இன்னைக்கு எனக்கு இன்டர் காலேஜ் பெஸ்டிவல் அதனால பளிச்சினு இருக்க வேண்டாமா, கொஞ்சம் டைம் எடுக்கும் அதனால நீ சமையல் வேலை பாரு” என்று பதிலுக்கு அமைதியாக குரல் கொடுத்தான், அவளின் தம்பி ராகவ்.

“அறிவு கொழுந்து! இதை எல்லாம் ராத்திரியே சொல்லி இருக்கணும். நானே லேட்டா போனா, அப்புறம் என் ஜூனியர்ஸ் எப்படி டா என்னை மதிப்பாங்க?” என்று சொன்னாலும் தலைமுடியை சுருட்டி கொண்டை போட்டுவிட்டு, கிட்சன் உள்ளே சென்று சமைக்க இப்பொழுது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.

காரட், பட்டாணி இருக்கவும் உடனே ரவா கிச்சடி தயார் செய்ய களத்தில் இறங்கினாள். ராகவ் வெளியே வருவதற்குள் இங்கே அவள் கிச்சடி தயார் செய்ததோடு, அதை டிபன் டப்பாவில் இருவருக்கும் அடைத்து வைத்து விட்டாள்.

“வாசனையே நல்லா இருக்கே, என்ன சமைச்ச அக்கா?” என்று குளித்து முடித்து வந்தவன் நேராக கிட்சன் உள்ளே வந்தான்.

“கிச்சடி சமைச்சு இருக்கேன், ரெண்டு பேருக்கும் டிபன் பாக்ஸ்ல வச்சுட்டேன். இன்னைக்கு நான் சமைச்சிட்டேன், அதனால கிளீனிங் உன் வேலை தம்பி” என்று கூறிவிட்டு குளிக்க ஓடி விட்டாள்.

“எக்கா ராட்சசி! எனக்கு பிடிக்காது அப்படின்னு தெரிஞ்சே இதை எனக்கு கொடுக்கிற, உன்னை என்ன செய்யலாம்?” என்று கத்தினான்.

“போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடு டா தம்பி, அவங்க வந்து விசாரிக்கட்டும் யார் மேல தப்பு இருக்குன்னு” என்று உள்ளே இருந்தே பதில் கூறியவளை ஒன்றும் செய்ய முடியாமல், ஆத்திரத்துடன் கிட்சனை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில், இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு அவரவர் வண்டியை எடுத்துக் கொண்டு பறந்தனர் அவரவர் பணியிடத்திற்கு.

ராகவ், சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் ப்ரோபெசராக வேலை பார்க்கிறான். இன்று பல்வேறு கல்லூரியில் இருந்து வருகை புரிவர், இந்த விழாவிற்கு. அதில் அவனின் காதலி ஜனனியும் அடக்கம், அதற்காக தான் வீட்டில் அம்புட்டு ரகளை தன் அக்காவிடம்.

பார்கிங் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வேகமாக ஆபிஸ் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, ஸ்டாப் ரூம் சென்றான். எதிர் வருபவர்களுக்கு காலை வணக்கம் கொடுத்துக் கொண்டே, ஸ்டாப் ரூம் வந்தவன் அங்கே தன் டேபிளில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, ஆடிடோரியம் சென்றான்.

அங்கே தான், எல்லா கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்து இருந்தனர். அவனின் காதலியை தேடி, அவன் அங்கே சென்ற நொடி அவளும் இவனை கண்டுவிட்டு அவனை பார்த்து சிரித்தாள்.

அவனும் பதிலுக்கு சிரித்துவிட்டு, சைகையில் வெளியே வருமாறு கூறினான். அவளோ, பத்து நிமிடம் கழித்து வருகிறேன் என்று கூறினாள். அவனும் சரி என்று கூறிவிட்டு, உள்ளே ஆடிடோரியத்தில் மேடை அலங்காரம், மைக் செட் வகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஆடிடோரியம் பின்னே இருந்த மரத்தடி நிழலில் நின்றான். சரியாக அடுத்த ஐந்து நிமிடத்தில், அங்கே ஜனனியும் வந்து சேர்ந்தாள்.

“ஹே! இந்த பச்சை கலர் சாரி உனக்கு நல்லா எடுப்பா இருக்கு, மாமன் சட்டைக்கு மேட்ச்சா போட்டு வந்து இருக்க செல்லம், சூப்பர். சரி ஸ்வீட் கொடு மாமனுக்கு, ஒரே கலர் போட்டதுக்கு” என்று கன்னத்தை காட்டினான் ராகவ்.

“வேணும்னா ரெண்டு அடி தரேன், சொல்லி வச்சு ரெண்டு பேரும் போட்டுட்டு இப்போ ஸ்வீட் கேட்குதா உங்களுக்கு?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

அவன் அசடு வலிந்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், அவளுக்கு கால் வந்தது. எடுத்து யாரென்று பார்த்தவள், சிரிப்போடு அதை எடுத்து பேச தொடங்கினாள்.

“சொல்லுங்க அண்ணி! எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் ஜனனி.

அண்ணியா! இவளுக்கு அண்ணி யாரு? என்று அவன் யோசிக்க தொடங்கினான்.

அதற்குள் போனை ஸ்பீக்கர் மோடில் மாற்றி வைத்த ஜனனி, அவனை பேச சொல்ல, அவனோ யார் என்று கேட்டான்.

“டேய் அறிவு ஜீவி! அவளுக்கு இருக்கிறது ஒரே ஒரு அண்ணி தான், அது நான் மட்டும் தான். அதுக்குள்ள நீ அவளை சந்தேகப்பட ஆரம்பிச்சிட்ட பார்த்தியா? ஜனனி நான் சொல்லல இவன் சரியில்லை அப்படின்னு, நீ வேற ஆளை பாரு ஜனனி” என்று அந்த பக்கம் இவன் அக்கா பிரியங்கா தேவி பேசியதை கேட்கவும், இவனுக்கு கோபம் வந்தது.

“ராட்சசி! நீ எல்லாம் ஒரு அக்காவா? அவளை எப்போ நான் சந்தேகப்பட்டு இருக்கேன்? இதுக்கு தான் ஜனனி சொன்னேன், எங்க அக்காவோட கொஞ்சம் தள்ளி நின்னே பேசுன்னு”.

“பாரு, அவ எப்படி பேசுறா? இப்போ சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ, உனக்கு வர போற மாப்பிள்ளை, உன்னை கோபப்படுத்திகிட்டே தான் இருக்க போறார்” என்று அவனின் தமக்கைக்கு இன்ஸ்டன்ட் சாபம் விட்டவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.

“ஹா ஹா !!! அடேய் தம்பி தினம் இங்கே வந்துட்டா நான் கோபப்பட்டுகிட்டே தான் இருக்கேன். அட்லீஸ்ட் இனியாவது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிற மாதிரி வேலை பார்க்கலாம் பார்த்தா, முடிய மாட்டேங்குது என்னால இந்த வேலையை விட”.

“அதனால உன் சாபம் எல்லாம் பலிக்காது, என்னை எப்போவும் கண்ணுக்குள் வச்சு தாங்குறவர் தான் மாப்பிள்ளையா வர போறார், உன் மூக்கை இப்போவே பத்திரமாக வச்சுக்கோ. அப்புறம் மூக்கு அறுபட்டு போய்டுவ டா ராகவா” என்று இழுத்து பேசியவளை பார்த்து அவன் புன்னகைத்தான்.

“ம்கும்! நானும் நீ எப்போ டா கல்யாணம் பண்ணுவ அப்படின்னு வெயிட் பண்ணுறேன், நீ இப்படி பிடி கொடுக்காம இருந்தா என்ன அக்கா அர்த்தம்? இப்போவே முப்பது வயசு உனக்கு, நான் சொல்லுறது புரியுதா இல்லையா உனக்கு!” என்று ஆதங்கப்பட்டான்.

“டேய்! நான் என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அப்படினா சொல்லுறேன், என் பியாரி, லவர், காதலன் இன்னும் என் கண்ணுல சிக்கல டா, நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள்.

“ஹே அண்ணி! சூப்பர் அண்ணாவை எப்போ மீட் பண்ணீங்க? எல்லாம் சொல்லுங்க கேட்போம்” என்ற ஜனனியை பார்த்து முறைத்தான்.

“ம்கும்! அவளுக்கு பிடிச்ச மாதிரி யாரையும் இன்னும் மீட் பண்ணல, அப்படின்னு சிம்பாலிக்கா சொல்லுறா. நீ போய் வேலையை பாரு அக்கா , நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்” என்று கூறியவனை பார்த்து அதிர்ந்தாள்.

“என்னது நம்ம வேலை?” என்று திக்கி திக்கி கேட்ட ஜனனியை பார்த்து சிரித்தான்.

“ஹே! இப்போ விழா ஆரம்பிச்சிடும் ப்ரோபெசர், போக வேண்டாமா?” என்று அவளை பார்த்து குறும்பாக கேட்கவும் தான், அவள் சற்று தெளிந்து அவனை இடித்துவிட்டு ஓடினாள்.

“இந்த எங்க அக்கா ராட்சசிக்கு ஏத்த ராட்சசன் எப்போ வருவான் கடவுளே? சீக்கிரம் அவ கண்ணுல காட்டுங்க, அப்போ தான் எனக்கு வழி பிறக்கும்” என்று மனதிற்குள் தன் அக்காவை நினைத்து புலம்பிக் கொண்டே சென்றான்.

அங்கே பிரியங்கா அந்த ஆபீசிற்குள் கம்பீரமாக நடந்து சென்று கொண்டு இருந்தாள். அவளை எதிர்கொண்டவர்களும், அவளுக்கு வழி விட்டு பயத்துடன் ஒதுங்கி கொண்டனர்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, அந்த கான்பெரன்ஸ் ஹாலிற்குள் நுழைந்தாள். அங்கே இருந்த அவளின் மேலதிகாரிக்கு, விஷ் செய்துவிட்டு அவளின் இருக்கையில் அமர்ந்தாள்.

“கைஸ்! நாம இந்த மீட்டிங் எதுக்கு போட்டு இருக்கோம் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரியும். சக்தி முரளி பிசினஸ் மேன் அப்படின்ற பேர்ல இருக்கிற ரவுடிக்கு, மேலிடத்தில் இருந்து பாதுகாப்பு கொடுக்க சொல்லி பிரஷர் கொடுத்தால, அதற்க்கான ஏற்பாடை பற்றி பேச தான் வந்து இருக்கோம்” என்று கூறிய மேலதிகாரரை பார்த்து மனதிற்குள் பொரும மட்டுமே முடிந்தது அவளால்.

ஏனெனில் இது அவருக்கும் பிடிக்காத விஷயமும் கூட, மேலிடத்து பிரஷர் தாங்காமல் இப்பொழுது பொறுப்பை தங்களிடம் அவர் ஒப்படைப்பதை நினைத்து தான் இந்த எரிச்சல்.

பிரியங்கா தேவி ஐபிஎஸ், என்று வெளியே கேட்டு பார்த்தால் அந்த போலீசா அப்படின்னு எல்லோரும் பயத்தில் அலறும் அளவிற்கு அந்த வட்டத்தில் பேர் எடுத்தவள். இப்படி ஒரு அண்டர்கிரௌண்ட் டான்க்கு, பாதுகாப்பு பணியை கொடுத்தால் எரிச்சல் வராமல் எப்படி இருக்கும் அவளுக்கு. எதிரியை வேட்டையாடி, துரத்தி பிடித்து என்கௌன்ட்டர் பண்ணும் அவளுக்கு இந்த அசைன்மென்ட் பிடிக்கவே இல்லை.

“மிஸ் பிரியங்கா, உங்க மேல இருக்கிற நம்பிக்கையிலும், திறமையிலும் தான் இந்த அசைன்மென்ட் உங்களுக்கு கொடுத்து இருக்கேன். உங்களுக்கு கீழே நீங்க யாரை எல்லாம் செலக்ட் பண்ணுறீங்க அப்படின்னு எனக்கு ஒரு ரிப்போர்ட் வந்து கொடுத்துடுங்க”.

“அண்ட் ஹி இஸ் பிரபாகர், கிரைம் பிரான்ச் டிபார்ட்மென்ட். அவனை பத்தின புல் டிடைல்ஸ் இவர் கிட்ட இருக்கு, நீங்க ஹெல்ப் கேட்டுக்கலாம். இதுல எந்த ஒரு ப்ளாக் மார்க் வர கூடாது, காட் இட் கைஸ்” என்று கூறிவிட்டு கமிஷ்னர் தினகரன் வெளியேறினார்.

அங்கு இருந்த மற்ற அதிகாரிகள், இப்பொழுது இவளை பார்த்தனர். அவளோ ஒரு முறை ஆழ மூச்சை இழுத்துக் கொண்டு, பிரபாகரை பார்த்தாள். அவர் உடனே அங்கு இருந்த ஸ்மார்ட் போர்டு ஸ்க்ரீனில், அவனை பற்றிய தகவலை எடுத்து காட்டினார்.

முதலில் வந்த அவன் போட்டோவை பார்த்தவள், மனதிற்குள் அவனை வறுத்து எடுத்தாள்.

“ஒன்பதாம் கிளாஸ்ல நான் படிக்கும் பொழுது, இந்த ஒல்லி பாச்சான் வந்து ஐ லவ் யூ ரியா அப்படின்னு பல்லை இள்ளிசிட்டு வந்து சொல்லுச்சு. இப்போ என்னடானா, பெரிய பிசினஸ்மேன் பிளஸ் டான்னு பெத்த பேரு இவனுக்கு” என்று பல்லை கடித்தாள்.

“அப்போ இருந்த மூஞ்சிக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை பாரேன். செம மான்லியா(manly) இருக்கான், அப்படியே நடிகர் சூர்யா சிக்ஸ் பாக் வச்சு இருந்தா எப்படி இருக்கும், அது மாதிரியே இருக்கான்” என்று ஜொல்லிய  அவளின் மனசாட்சியை அடக்கி உள்ளே வைத்தாள்.

“இப்போ இவனை டார்கெட் பண்ணி இருக்கிறது, எதிர்கட்சி தலைவரோட பையன் மிஸ்டர் கங்காதரன். ரீசன், அவர் பண்ணிய கொலைக்கு பக்கா சாட்சி இவன் தான்”.

“இவனுக்கு பெரிய இடத்தில் எல்லாம் செல்வாக்கு அதிகம், அதுவும் இந்த அஞ்சு வருஷத்தில் அவனோட வளர்ச்சி அதிகம். எஞ்சினீரிங் காலேஜ், டெக்ஸ்டைல் பிசினஸ், ஜுவெல்லரி பிசினஸ், ரியல் எஸ்டேட் அப்படின்னு இந்த அஞ்சு வருஷத்தில் அவன் வளர்ச்சி அதிகம்”.

“ஏற்கனவே, அஞ்சு தலைமுறைக்கு அவங்க வசதியானவங்க. இவன் படிச்சு முடிச்ச உடனே, அவங்க அப்பா பிசினஸ் தான் பார்க்க வந்தான். திடிர்னு என்னனு தெரியல, பெரிய பெரிய ஆளுங்களோட எல்லாம் இவனுக்கு பழக்கம் ஏற்பட்டுச்சு”.

“அதுக்கு அப்புறம் அசுர வளர்ச்சி தான், ஆனா இவன் அண்டர்கிரவுண்ட் லெவல்ல என்ன வேலை எல்லாம் பார்த்தான் அப்படின்னு இப்போ வரைக்கும் எங்களால ட்ரேஸ் பண்ண முடியல” என்று அவர் சொல்லவும், இவள் மனதில் பலவித கணக்கு ஓடிக் கொண்டு இருந்தது.

“சரி சார், நீங்க கிளம்புங்க நான் வேற தகவல் வேணும்னா உங்களை கூப்பிடுறேன். மிஸ்டர் இளங்கோ, உங்களுக்கு கீழே ராஜு அண்ட் ரேவதியை அப்பாய்ன்ட் பண்ணிடுங்க. சரியா ஒரு பதினொரு மணிக்கு நீங்க எல்லாம் ஸ்டேஷன்க்கு வந்திடுங்க, நான் போய் கமிஷ்னரை பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு நேராக அவரின் அறைக்கு சென்றாள்.

“வா மா பிரியங்கா, முகமே செம கடுப்பில் இருக்கு. இந்த கேஸ் நினைச்சு நீ கடுப்பா இருந்தாலும், நீ தான் ஹான்டில் பண்ணி ஆகணும் இந்த கேஸ். காரணம், உன் பேரை குறிப்பிட்டு தான் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து இருக்காங்க” என்று கூறியவரை பார்த்து சிரித்தாள்.

“எனக்கு தெரியும் அங்கிள், அதுவும் என் பேரை குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க அப்படின்னு நீங்க சொன்ன உடனே இதை யாரு கொடுத்து இருப்பா அப்படினும் எனக்கு தெரியும். அந்த ஒல்லி பச்சான் தான் கொடுத்து இருப்பான், ராஸ்கல் இந்த முறை அவனா, இல்லை நானான்னு பார்த்திடுறேன்” என்று கூறியவளை பார்த்து இப்பொழுது அவர் சிரித்தார்.

“ஏம்மா! இன்னும் அவன் ஒல்லி பச்சான் தானா உனக்கு?” என்று கேட்டவரை பார்த்து முறைத்தாள்.

“சரி! சரி! உன்னை வர சொன்னதே ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசத்தான். அவன் சொன்ன காரணத்துக்காக மட்டும் இல்லை, வேற ஒரு விஷயம் அவனுக்கு கிடைச்சு இருக்கு அது உன் சம்மந்தப்பட்டது நினைக்கிறேன்”.

“இது நான் ரகசியமா சேகரிச்ச விஷயம், இனி நீ தான் பார்த்துக்கணும். அவன் மோதி இருக்கிறது சாதாரண ஆளும் கிடையாது, கிட்டத்தட்ட முப்பது வருஷமா எனக்கு அந்த ஆளை தெரியும், சோ இனி தான் நமக்கு வேலையே” என்று கூறி மேலும் சில தகவல்களை கூறினார்.

அவரின் அலுவல் அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு, நினைவு முழுவதும் அவர் கூறிய விஷயங்களை சுற்றியே இருந்தது. வண்டி அருகே வந்தவள், டிரைவரிடம் நேராக இசிஆர் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று சொல்லி வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

“ஹல்லோ! நான் சொல்லுற டிடைல்ஸ் நோட் பண்ணிக்கோ, இதனோட கம்ப்ளீட் ரிபோர்ட் எனக்கு வேணும் ஒரு டூ ஹவர்ஸ்ல, காட் இட்” என்று பிரியங்கா, எதிர்முனை ஆளிடம் சுருக்கமாக கூறிவிட்டு போனை வைத்தாள்.

அங்கு செல்லும்வரை, அவளின் எண்ணங்கள் முழுவதும் அந்த ஒல்லி பாச்சான் பற்றியே இருந்தது. அவனை இப்பொழுது சில வருடமாக பேப்பரில் தான் பார்க்கிறாள், அவனின் செயலை குறித்து ஒன்று புகழ்ந்தோ, தாளித்தோ சொல்லி இருப்பார்கள் மீடியாகாரர்கள்.

இதில் எது அவனின் உண்மை முகம் என்று தெரியவில்லை, ஒரு முகம் தொழிலதிபராக, மற்றொன்று தாதாவாக. இதில் தொழிலதிபராக கூட அவனை ஏற்றுக் கொள்ள முடிந்தது அவளால், ஆனால் தாதாவாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை அவளால்.

“நிஜமாவே, அவன் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா இருப்பானா என்ன, என் மண்டையே காயுது ஆண்டவா” என்று புலம்ப மட்டுமே முடிந்தது அவளால்.

அங்கே ஸ்டேஷன் உள்ளே வண்டி நுழையவும், கம்பீரம் குறையாமல் இறங்கி உள்ளே சென்றாள். அங்கே இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், ராஜுவும், ரேவதியும் இருந்ததை பார்த்து மெச்சிக் கொண்டாள்.

அவர்களை அழைத்து, தன் காபின் உள்ளே நுழைந்தவள் அவர்களிடம் அவளின் திட்டத்தை விவரிக்க தொடங்கினாள். அதை கவனமாக கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர்கள், அவர்களுக்கு பணித்த வேலையை கவனிக்க சென்றார்கள்.

இதற்கிடையில், இவள் கேட்ட தகவல் அனைத்தும் வாட்ஸ் அப்பில் அவள் பேசிய நபரிடம் இருந்து வந்து சேர்ந்தது. அதை திறந்து பார்த்தவள், சில விஷயங்கள் அவளின் மனதிற்கு உறுத்தலாக இருந்தது. அதை தெளிவு படுத்திக் கொள்ள அவள் நேரடியாக, அவனை சந்திக்க சென்றாள் அவனின் இடத்திற்கு.

“ஐயா! அடிக்காதீங்க, நான் பிள்ளை குட்டிக்காரன். நான் பண்ணினது தப்பு தான், பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன் ஐயா” என்று ஒருவன் கதறிக் கொண்டு இருந்தான் அந்த பீச் ரிசார்ட் ஒன்றில்.

“ஏன் டா இன்னும் அடிக்க ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள பையன் இப்படி கதறுறான். டேய் டாம்மியை கொஞ்ச நேரம் அவன் கூட விளையாட விடுங்க, கத்துறதை நிப்பாட்டிடுவான் பையன்” என்று அவன் சாதுவாக கூறவும், எதிராளி அதிர்ந்து விட்டான்.

அவனை பற்றி நன்றாக தெரிந்தும், இந்த தப்பை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவனுக்கு நன்றாக புரிந்தது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உண்மையை ஒத்துக் கொள்ளுவதை தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து, அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

அதில் அவன் முகம் வேட்டையாடும் புலி போல் மாற தொடங்கியது. பக்கத்தில் நின்று இருந்த அவனின் வலது கையிடம் கண்ணை காட்டவும், அவனுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்து உடனே அதை செயல்படுத்த விரைந்தான்.

இதை எல்லாம் அப்பொழுது அங்கே வந்து இறங்கிய பிரியங்கா பார்த்தவள், அவனின் இந்த முகத்தை பார்த்து சற்று அதிர தான் செய்தாள். அதற்குள் அவன் இவளை பார்த்துவிட்டான், உடனே அவனின் முகமே மாறிவிட்டது.

சிரிப்புடன் அவளை நெருங்கியவன், அவளின் காக்கி உடையை பார்த்து சற்று நிதானித்தான். அவளின் கம்பீரத்தை ரசித்துக் கொண்டே, வந்தவனை இப்பொழுது அவள் மனசாட்சி ஆஜாராகி, அவனை ரசிக்க தொடங்கியது.

“வாவ்! என்ன நடை! என்ன நடை! அந்த சட்டை காலரை தூக்கி விட்டுகிட்டு வரும் அழகே தனி. கண்ணு சும்மா பவர்புல்லா நேர் கொண்ட பார்வையா நம்மை பார்க்கும் பொழுது, சும்மா ஜிவ்வுன்னு இருக்குல” என்று வர்ணித்த மனசாட்சியை ஓங்கி ஒரு கொட்டு வைத்து உள்ளே தள்ளினாள்.

“ஹல்லோ இன்ஸ்பெக்டர்! ஹொவ் மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டவனை பார்த்து இப்பொழுது முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.

“மிஸ்டர் சக்தி முரளி, உங்க பாதுகாப்புக்கு போலீஸ் தேவைபடுது அப்படின்னு சொல்லி மேலிடத்தில் சொல்லி இருந்தீங்களே, அது விஷயமா பேசணும்” என்று பளிச்சென்று விஷயத்திற்கு வந்தவளை பார்த்து மனதிற்குள் சிரித்தான்.

“ஒ ரியா பேபி! உன்னை என் வலைக்குள்ள கொண்டு வந்துட்டேன், இனி தான் நம்ம ஆட்டத்தை பார்க்க போற” என்று எண்ணிக் கொண்டே அவளை அழைத்து கொண்டு முன்னே சென்றான்.

“உன் வலைக்குள்ள அவ்வளவு ஈசியா இந்த ரியா மாட்ட மாட்டா, நான் இங்க வந்த விஷயமே வேற டா” என்று அவளும் எண்ணிக் கொண்டே அவன் பின்னே சென்றாள்.

இவர்களை இருவர் கண்கானின்றனர் என்பதை அறியாமல், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.

தொடரும்..

  

 

error: Content is protected !!