ENE–EPI 35

அத்தியாயம் 35

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமாதடுமாற்றமா..
என் நெஞ்சிலேபனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

 

“போடா” அழுகையினூடே கத்தினாள். உள்ளே என்னவோ உடையும் சத்தம் கேட்டது.

“தானு, என்ன நடக்குது உள்ள? கதவ திறம்மா. ப்ளீஸ். ஐ எம் சோரி. இனிமே இப்படி நடக்காது. கதவை திற தானு”

“தானு!!! ஓப்பன் தே டோர். நாம உட்கார்ந்து பேசலாம். நான் ப்ராமிஸ் பண்ணுறேன், இனி நீ சரின்னு சொல்லாம உன்னை டச் பண்ண மாட்டேன். திற தானு” உள்ளே என்ன செய்கிறாளோ என விபாவுக்கு பதைப்பாக இருந்தது.

“இப்ப நீ திறக்கலைன்னா, கதவை உடைச்சு நான் உள்ள வருவேன் தானும்மா” கெஞ்சல் செல்லாததால் மிரட்டலில் இறங்கினான்.

கதவு படீரேனெ திறந்தது.

“எங்கே உடைச்சு பாரு பார்ப்போம்” என இடுப்பில் கை வைத்தபடி நின்றாள் தானு. கண்களும், மூக்கு நுனியும் சிவந்து போய் , அவன் கொடுத்த முத்ததில் உதடுகள் சற்று வீங்கி அழகு பதுமையாய் நின்றிருந்தாள் அவள். விபா கஸ்டப்பட்டு பார்வையை அவள் முகத்திலிருந்து விலக்கினான்.

அந்த நேரத்திலும், நைட்டியை மாற்றி சுடிதார் அணிந்திருந்தாள். அதைப் பார்த்த விபாவுக்கு கன்னத்திலேயே அவள் அறைந்தது போல் இருந்தது.

‘அவ நம்பிக்கையை நான் குலைச்சிட்டேனே. என்னைப் பார்த்து பயந்து வேறு உடை மாற்றி கொண்டு வந்திருக்காளே’ அழுத்தமாக தலையை கோதியவன் ரூம் உள்ளே பார்வையை செலுத்தினான். ட்ரெசிங் டேபிள் கண்ணாடி உடைந்து சில்லு சில்லாக கீழே சிதறி கிடந்தது. அவன் பார்வையை தொடர்ந்து அவளும் அங்கே பார்த்தாள். தோளை அலட்சியமாக குலுக்கியவள், நடந்து சென்று ஹாலில் உள்ள சோபாவில் கையைக் கட்டி கொண்டு அமர்ந்து கொண்டள்.

தானு ஆத்திரத்தில் அலாரம் வைக்கும் கடிகாரத்தை விட்டு அடித்து கண்ணாடியை நொறுக்கி இருந்தாள்.

‘நம்ப தலைய உடைக்க வேண்டியது, நல்ல வேளை கண்ணாடிய உடச்சிருக்கா. ‘ பிறகு தான் கவனித்தான், அவள் நடந்து சென்ற கால் தடம் ரத்தமாக இருந்ததை. ஓடி சென்று அவள் முன் மண்டியிட்டவன், கால்களை தூக்கிப் பார்த்தான். சில கண்ணாடி சில்லுகள் காலை பதம் பார்த்திருந்தன.

“தானு!! உனக்கு என்ன சின்னதம்பி குஷ்புன்னு நினைப்பா? பார்த்து நடக்க தெரியாது?பாரு கால்ல ரத்தம் எப்படி வருது” என கடிந்து கொண்டான்.

எந்த ரியாக்சனும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் தானு. கிச்சனுக்கு விரைந்தவன், திரும்பி வரும் போது மெடிக்கல் கிட் கையில் இருந்தது. கீழே அமர்ந்து, அவளது காலை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டான். டுவீசர் மூலமாக கண்ணாடி சில்லுகளை அகற்றியவன், டெட்டோல் கொண்டு பாதத்தைத் துடைத்தான். பின்பு மருந்திட்டு பெரிய கட்டாக கட்டி விட்டான். பொறுமையாக அவளுக்கு வலித்துவிடுமோ என்பது போல் மென்மையாக காயத்திற்கு மருந்திட்டவனை, இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் தானு.

‘காதலில மட்டும் தான் அதிரடி ஆக்சன் எல்லாம் போல. மத்த விஷயத்துல நீ ரொம்ப மென்மையானவன்டா வேணு.’ மனதில் உள்ளதை வெளியில் காட்டாது கெத்தாக அமர்ந்திருந்தாள் அவள்.

“கொஞ்ச நேரம் உட்கார்ந்து இரு தானு. இப்ப வரேன்” என மறுபடியும் கிச்சனுக்குள் சென்றான் விபா. துடைப்பம் கொண்டு கண்ணாடி துண்டுகளை கூட்டி அள்ளியவன், எங்கே சின்ன துகள்கள் அவளது காலை மீண்டும் குத்தி விடுமோ என வேகியும் கிளினர் கொண்டு அறையை சுத்தம் செய்தான். பின்பு ரத்தம் சொட்டி இருந்த இடங்களை துணி கொண்டு துடைத்தான்.

அவன் செய்வதை திரும்பி பார்க்காவிட்டாலும், கேட்ட சத்ததில் என்ன செய்கிறான் என்ன அறிந்து கொண்டாள் தானு. அன்று அவன் வீட்டில் கண்ட அத்தனை வேலைக்காரர்களும் அவள் கண் முன்னே வந்து போயினர். மனது கேட்காமல்,

“விடு, நாளைக்கு நான் செஞ்சிக்குறேன்” என குரல் கொடுத்தாள்.

“முடிஞ்சது தானு. கிவ் மீ பைவ் மினிட். கை கழுவிட்டு வரேன்.”

வரும் போது அவன் கையில் இரண்டு தட்டுக்களும், கரண்டிகளும் இருந்தது. காபி டேபிளில் வைத்திருந்த பையை திறந்தவன், உள்ளே இருந்த ப்ரைட் ரைசை இருவருக்கும் தட்டில் இட்டான். ஒரு தட்டை அவளிடம் நீட்டியவன்,

“சாப்பிடு. அங்க சரியா சாப்பிட்டுருக்க மாட்ட. அதான் குடுத்துட்டு, பேசிட்டு போலாம்னு வந்தேன். அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு. சோரி தானு”

“எனக்கு பசிக்கல.” தட்டை வாங்காமல் முகத்தைத் திருப்பி கொண்டாள் அவள்.

“வேலை முடிஞ்சு, உன் விஷயத்தை கேள்வி பட்டவுடனே அவசர அவசரமா வந்தேன். லன்ச் டைமுல சாப்பிட்டதுதான். உன் கூட சாப்பிடலாம்னு நினைச்சு தான் வாங்கிட்டு வந்தேன். சரி விடு. நான் கிளம்புறேன்.” என அவனது தட்டை மேசை மேல் வைத்துவிட்டு எழுந்தான் விபா.

சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள் தான்யா. மணி பின்னிரவு ஒன்று என காட்டியது.

‘இன்னும் சாப்பிடலையா? இப்படி பாவமா பேசி என்னை மடக்குறதே பொழப்பா போச்சு இவனுக்கு’

அவனை முறைத்தவள், தட்டை எடுத்து கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். மீண்டும் அவள் எதிரில் உள்ள சோபாவில் உட்கார்ந்தவன், வேகமாக சாப்பிட ஆரம்பித்தான். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை கடிகாரம் முள் நகரும் சத்தம் மட்டும்தான் கேட்டது. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்து சென்றவன், கிச்சனுக்குள் பண்ட பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.

‘சொந்த வீடு மாதிரி எல்லாத்தையும் நோண்டுறது. நான் ஒருத்தி இங்க உட்கார்ந்து இருக்கனே, எந்த பொருளை எங்க வச்சிருக்கன்னு கேட்க வேண்டி தானே. உடம்பு முழுக்க கொழுப்பு’ மனதிற்குள்ளே திட்டிக் கொண்டாள்.

இரண்டு கப்புகளில் டீயுடன் திரும்பி வந்தான் விபா. ஒன்றை அவளிடம் நீட்டினான். பிகு பண்ணாமல் வாங்கி கொண்டாள் தான்யா.

டீயை குடித்தபடி அவளையே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான் விபா.

‘அமைதியாகவே இருக்கா. புயலுக்கு முன் வர அமைதியோ? வாயை திறந்து கத்திட்டாலும் பரவாயில்லை. கம்முன்னு இருந்து பீதியை கிளப்புறாளே’

டீயை குடித்து கப்பை மேசை மேல் வைத்தவள், அவன் கண்களை நேராக நோக்கி,

“சொல்லு” என்றாள்.

‘இப்படி மொட்டையா கேட்டா நான் என்னன்னு சொல்லுறது? எதை பத்தி கேக்குறா?’

“வந்து தானும்மா. நான் ப்ளான் பண்ணி முத்தம் குடுக்கலை. அதுவே ப்ளோல நடந்துருச்சு” என மென்று முழுங்கியவனை, முறைத்தவாறே நிறுத்துமாறு சைகை செய்தாள்.

“நான் அதைப் பத்தி கேக்கல.”

‘அப்பாடா! அதைப் பத்தி கேக்கலியாம். தப்பிச்சன்டா சாமி.’

“வேற எதைப் பத்திடா கேக்குற செல்லம்?”

“செல்லம் கில்லம்னு கூப்பிட்ட, எனக்கு இருக்கிற ஆத்திரத்துல தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க”

‘அவங்க வீட்டுல பாத்த அன்னிக்கு ராமராஜனை கோட் பண்ணா, இன்னிக்கு விஜயகாந்த கோட் பண்ணுறா. இவ டேஸ்டையே புரிஞ்சுக்க முடியலையே’

“கார்த்திக்கை என்ன பண்ண? அதுக்கு முன்னுக்கு கரேக்டா அந்த இடத்துக்கு எப்படி வந்தன்னு சொல்லு”

“அவனை ஒன்னும் பண்ணல தானும்மா”

அவள் எழுந்து உள்ளே செல்ல எத்தனிக்கவும்,

“சரி சரி, உட்காரு தானு. சொல்லுறேன்”

அது! என்பதுபோல் பார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள்.

“அன்னிக்கு பீச்சுல நாம பேசுனப்பவே, எனக்கு ஒரு சந்தேகம் தான், எதையோ என் கிட்ட மறைக்கிறன்னு. நீயா சொல்லாம உன்னை நோண்டி கேட்க பிடிக்கலை. அதுக்கு அப்புறம் தான் தேக்கிய புடிச்சேன். ஒரு மிரட்டுலலே எல்லாத்தையும் சொல்லிட்டான். என்ன தைரியம் இருந்தா அந்த கார்த்திக் உன் கையை புடிச்சு தீயை அணைக்கனும் மாதிரி இருக்குன்னு டபுள் மீனிங்ல பேசி இருப்பான்? உன்னை பிடிச்ச கைய லேசா பிடிச்சு திருப்பி விட்டேன். படக்குன்னு சத்தம் கேட்டுச்சு. அவ்வளவுதான் தானும்மா. அதுக்கே அந்த கத்து கத்திட்டான். இவனுங்க வீரமெல்லாம் பொம்பளைங்க கிட்ட தான்.”

‘அடப்பாவி! கைய உடச்சிட்டு எவ்வளவு கூலா பேசுறான் பாரு. ஒரு பக்க கண்ணு அவுட்டுன்னு பார்த்தா, கையையும் அவுட்டா ஆக்கிட்டானே. பாவம்டா கார்த்திக் நீ’ என நினைத்தவள்,

“அதோட விட்டுருக்க மாட்டியே?” என கேட்டாள்.

ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த விபா,

“அவனோட வருங்கால மாமனார் பிஸ்னஸ் மூலமா எனக்கு பழக்கம் தான். அவருக்கு போனை போட்டு, உங்க மாப்பிள்ளை வேற பொண்ணோட திருட்டுத்தனமா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ய ஏற்பாடு செஞ்சி கிட்டு இருக்கான்னு போட்டு குடுத்தேன். உன்னோட டீடெய்ல்ஸ் எல்லாத்தயும் கிழிச்சுட்டு அவன் பேரை மட்டும் போட்டோ புடிச்சு அனுப்பினேன். கொஞ்ச நேரத்துல அவன் அப்பனும், மாமனாரும் வந்துட்டாங்க. என் கண்ணு முன்னுக்கே துவச்சு காய போட்டுட்டாங்க. அவன் பேச வந்தப்பா, நான் வாயில ஒன்னு போட்டு, அப்பா நல்லத சொல்லுறாரு நீ எதிர்த்து பேசுறீயான்னு எடுத்து கொடுத்தேன். அவங்க அப்பா எனக்கு நன்றி சொல்லிட்டு அவரும் வாயிலே ரெண்டு போட்டாரு. இன்னிக்கே டிக்கேட் போட்டு அவனை நாடு கடத்தறாங்க. அதுக்கும் ஐயா தான் காரணம். இங்கயே இருந்த திரும்பவும் இப்படி செய்யுவான், சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிருங்கன்னு சொன்னேன். அவன் மாமனார், என் கைய புடிச்சுகிட்டு, உங்க உதவியா என் வாழ்நாளில மறக்கவே மாட்டேன்னு கண்ணுல தண்ணிய வச்சிகிட்டாரு” சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் விபா.

தானுவுக்கும் சிரிப்பு வந்தது. சிரிச்சா இவனுக்கு இன்னும் வச்சி போயிரும்னு நினைத்துக் கொண்டே சிரிப்பை அடக்கி கொண்டாள்.

“அதாவது, எனக்கு நண்பனா இருந்த தேக்கிய இப்ப எனக்கு துரோகியா மாத்திட்ட?”

‘ஏன்டி! இவ்வளவு விஷயம் சொல்லி இருக்கேன். இத மட்டும் கவனிச்சு கேக்குற பார்த்தியா?’

“முதல்ல சொல்ல மாட்டேன்னு தான் அடம் புடிச்சான். அவன் பேசாம இருக்குற ஒவ்வொரு நொடியும் உனக்கு தான் ஆபத்துன்னு ஒரு பிட்ட போட்டேன். பய புள்ள அப்படியே கக்கிட்டான்”

சுற்றும் முற்றும் பார்த்தவள், காபி டேபளில் இருந்த டீவி ரிமோட் கோண்ட்ரோலை எடுத்து அவனை நோக்கி விட்டு அடித்தாள். அழகாக கேட்ச் பிடித்தவன்,

“தானும்மா! நோ வயலன்ஸ். மீ பாவம். சரி இப்ப சொல்லு, இந்த மொக்க பிளானை போட்டு குடுத்தது யாரு? அந்த வைட் கொசுதானே?”

“எது மொக்க பிளான்? நீ வராட்டி இந்நேரம் எல்லாம் சுமூகமா முடிஞ்சிருக்கும். அதோட என் டேனிய வைட் கொசுன்னு சொல்லுறத நிறுத்து”

“அப்படிதான் சொல்லுவேன். அது என்ன என் டேனி? என் வேணுன்னு மட்டும் தான் இந்த அழகான வாயில இருந்து வரணும். முத்தம் கொடுத்து என் முத்திரையை உன் மேல பதிச்சுருக்கேன். என்னைத் தவிர வேற யாரையும் நீ சொந்தம் கொண்டாட கூடாது. புரியுதா தானும்மா?” அவனது குரலில் பொசெசிவ்னஸ் வந்திருந்தது.

அவனை உற்றுப்பார்த்தவள்,

‘யாரு கிட்ட உன் திமிரை காட்டுற? இத்தனை நாளுல என்னைப் பத்தி இன்னுமா உனக்கு தெரியல. இருடா வரேன்’

நாற்காலியில் இருந்து எழுந்தவள், நொண்டிக்கொண்டே அவன் முன் போய் நின்றாள்.

“கால் வலிக்குதா தானு?” என தன் முன்னே நின்றவளை நிமிர்ந்து பார்த்து கேட்டான் விபா.

“இல்ல, ரொம்ப சுகமா இருக்கு” என்றவள் அவன் எதிர்பாக்காத தருணத்தில் பட்டேன அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ஏய்! என்னடி பண்ணுற? இப்படி ஏதாவது செய்யுறது. அதுக்கு நான் ரியாக்ட் பண்ணா, பெரிய சீனை போடுறது. இது நியாயமே இல்ல தானு”

“இனிமே இப்படி முத்தம் குடுப்பியா? குடுப்பியா?” என கேட்டுக்கொண்டே, கொத்தாக இரு கைகளாலும் அவன் முடியைப் பிடித்தவள் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டாள்.

“ஆ!!! விடுடி, வலிக்குது. முன்ன சொன்ன மாதிரி இனிமே உன் சம்மதம் இல்லாம எதையும் செய்ய மாட்டேன் தானு. காட் ப்ராமிஸ்” என அவளது இரு கரங்களையும் பிடித்துக் கொண்டான்.

“இனிமே இப்படி எசகு பிசகா நடந்து கிட்ட, ஒரு வருஷத்துக்கு உன் கூட பேச மாட்டேன். புரிஞ்சுதா?”

“நல்லாவே புரியுது”

“சரி, இப்ப என்னை தூக்கிட்டு போய் கட்டில்ல படுக்க வை. எனக்கு கால் வலிக்குது, நடக்க முடியலை. வேற எதாவது ட்ரிக்ஸ் பண்ண குடலை உறுவிருவேன்”

“சரி தூக்கிட்டு போறேன். இப்ப இறங்கி கீழ நில்லு.”

“தூக்கிட்டு போறப்ப கையில் மிதக்கும் கனவா நீன்னு பாட்டு பாடு. ஓகேவா?”

இறங்கி நின்றவளை தூக்கி கொண்டவன்,

“யப்பா! என்ன கணம். அப்புறம் எப்படிம்மா கையில் ஏந்தியும் கணக்கவில்லையேன்னு பாடுவேன். எனக்கு பொய் சொல்ல வராது.”

“பிச்சுருவேன் வேணு. பிப்டி கிலோ தான் இருக்கேன். ஒழுங்கு மரியாதையா பாடு” என மிரட்டினாள்.

பாடி கொண்டே தூக்கி சென்று அவளை கட்டிலில் கிடத்தினான். போர்வையை போர்த்தியவன், அவள் முகத்தைப் பார்த்து,

“நான் கிளம்பறேன் தானு. உள்ளுக்கு பட்டனை அமுக்கிட்டு கதவை சாத்திருறேன். யூ டேக் ரேஸ்ட்” என்றான்.

அவன் கையை பிடித்தவள்,

“மணி ரெண்டு ஆகுது. இதுக்கு மேல நீ கார் ஓட்ட வேணாம். ஹோல் சோபால படுத்துக்கோ. குளிக்கிறதுனா கிச்சன்ல இருக்குற பாத்ரூம் யூஸ்பண்ணிக்க. அங்க செல்ப்ல புதுசா பேஸ்ட், சோப், பிரஸ் எல்லாம் இருக்கு. துண்டு அதோ அந்த அலமாரில இருக்கு. நீ பாவிச்சதெல்லாத்தையும் நாளைக்கு ஒழுங்கா எடுத்துகிட்டு போயிரு.”

“நெஜமா தங்கலாமா தானு?” அவன் முகம் பல்ப் போட்டது போல் மலர்ந்தது.

“இப்ப எதுக்கு முகம் இப்படி ஒளி வீசுது? பின்னிருவேன். போய் படு. இதுதான் முதலும் கடைசியுமா நீ இங்க தங்குறது. இதுக்கு மேல இந்த சலுகையெல்லாம் எதிர்பார்க்காதே. நாளைக்கு காலையிலே நான் எழுந்திருக்கும் முன்னுக்கு ஓடி போயிரனும். புரிஞ்சுதா?” என மிரட்டினாள்.

‘தன் மேல் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் இவளை இனி எக்காரணம் கொண்டும் மனம் வருந்த வைக்க கூடாது என முடிவெடுத்தவன்,

“நல்லா புரிஞ்சது தானும்மா” என்றவாறே லைட்டை அணைக்க சென்றான்.

“லைட்டை அடைக்காதே வேணு. எனக்கு பயத்துல தூக்கம் வராது. அப்படியே விட்டுட்டு போ”

‘இது வேறயா? இனி நானும் லைட்டை போட்டு தூங்க பழகணும்.’ என எண்ணியவாறே குளிக்க சென்றான் விபா.

அங்கே ஆஸ்திரேலியாவில், விடிகாலை 4.30 மணி. போன் செய்தும் தான்யா எடுக்காமல் இருக்கவும் போனை வெறித்துப் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான் டேனி. பின்பு சில நாட்களுக்கு முன் அவள் அனுப்பிய ஈமெயிலை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தான். ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் நெஞ்சில் பாரம் ஏறிக் கொண்டே போனது.

‘என் டான்யாவுக்காக முதன் முதலா மனசுல பூத்த காதலை விட்டுக் கொடுப்பேன் வேணு. ஆனா என் ப்ரன்ஷிப்பை மட்டும் விட்டு கொடுக்க மாட்டேன். நீ என் குடும்பத்தை நடு தெருவுல நிறுத்தினாலும், டான்யாவுக்கு ஒன்னுன்னா உன் கழுத்தைப் பிடிக்க முத ஆளா நான் அங்க இருப்பேன். வாட்ச் அவுட் மேன்’ என நினைத்துக் கொண்டே ஜன்னலில் தெரிந்த இருளை வெறித்தான் அவன்.

மறுநாள் காலையில் எழுந்து வந்த தானு விபா இன்னும் இருக்கிறானா என தேடினாள்.

‘நாம சொன்ன மாதிரியே கிளம்பிட்டான்’

டைனிங் டேபிளில் ப்ளாஸ்க்கும், உணவை மூடி வைக்கும் கூடையும் கண்ணில் பட்டது. கூடையை திறந்து பார்த்தவள், சந்தோஷ சிரிப்பொன்றை உதிர்த்தாள். ரொட்டி வாட்டி வைத்திருந்தான் விபா. ஸ்கரம்பள்ட் ஏக்கும் இருந்தது. தக்காளியை சிறிது சிறிதாக வெட்டி அழகாக அடுக்கி இருந்தான். சில்லி சாஸில் ஐ லவ் யூ தானும்மா என எழுதி வைத்திருந்தான் அந்த காதலன். ப்ளாஸ்கிலிருந்து டீயை கப்பில் ஊற்றி கொண்டு , ருசித்து காலை உணவை உண்டாள் தானு. போனை எடுத்து,

“சாப்பாடு கன்றாவியா இருக்கு. எனிவே தெங்க்ஸ்” என மேசேஜை அனுப்பியவள், சிரித்தபடியே குளிக்க சென்றாள்.

அவளது மேசேஜை படித்தவன், ஸ்மைலி ஒன்றை அனுப்பிவிட்டு,

‘அடி கத்ரீனா கைப்பே

நீதான் என் வைப்பே

என்னோட நீ இருந்தா

நல்லா இருக்கும் லைப்பே

மாட்டிக்கிச்சு மாட்டிகிச்சு

மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு’

என பாடியபடியே குளியலறையே நோக்கி போனான்.