ENE–EPI 37

ENE–EPI 37

அத்தியாயம் 37

தாமரையே தாமரையே

நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே

தினம் தினம் ஒரு சூரியன் போல

வருவேன் வருவேன்

அனுதினம் உன்னை ஆயிரம் கையால்

தொடுவேன் தொடுவேன்

போனை கட் செய்து விட்டு தலையைப் பிடித்து கொண்டு அமர்ந்தவன் மேல் பூவென வந்து விழுந்தாள் தானு. தன் மடியில் கிடந்தவளை பார்த்து ஆனந்த அதிர்ச்சியானது விபாவுக்கு. சிரிப்புடன் அவள் தலை முடியை கோதியவன், கண்களால் என்ன என்று கேட்டான்.

அவளது பார்வை அவன் முகத்தைத் தாண்டி பின்னால் சென்றது. சட்டேன எழுந்தவள், வேணு என கத்துவதற்கும் டேனி வந்து விபா மேல் விழுவதற்கும் சரியாக இருந்தது. வலியில் ஆவென கத்திய விபா,

“டேய் எருமை மாடே! ஓடி பிடிச்சு விளையாட என் மடி தான் கிடைச்சுதா உனக்கு?” என பொங்கிவிட்டான். மெதுவாக எழுந்த டேனி,

“டான்யா விழுந்தப்ப மட்டும் வலிக்கல. நான் விழுந்தா மட்டும் வலிக்குதா? இது நியாயமே இல்ல வேணு. நீ வா டான்யா, கிச்சனுக்குப் போவோம். பசிக்குது.” என நடந்தான்.

“நீ போ டேனி. நான் இப்ப வரேன்.” என அவனை அனுப்பி வைத்தவள், திரும்பி விபாவிடம்,

“நான் தான் வேணுன்னு கத்துனேன்ல, எழுந்திரிக்க வேண்டியது தானே? அவன் துரத்துறான்னு ஓடி வந்தப்ப, கார்பேட் தடுக்கி உன் மேல விழுந்துட்டேன். எங்கம்மா மடிக்கு இப்படி தான் நாங்க போட்டி போடுவோம். அவன் எங்க சின்ன வயசு விளையாட்டுன்னு நினைச்சுகிட்டு உன் மேல பாஞ்சிட்டான். ரொம்ப வலிக்குதா வேணு? “என கேட்டுக்கொண்டே அவன் காலை அமுக்கிக் கொடுத்தாள் தானு.

‘உங்க அம்மா மடிக்கு போட்டி போட்டீங்க சரி. என் மடிக்கும் போட்டின்னா நான் என்னடி பண்ணுறது. உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியலை?’

பிடித்து விட்டு கொண்டிருந்தவள், மெல்ல நிமிர்ந்து,

“வேணு! உனக்கு கோபம்னா டேனிய எருமைமாடுன்னு திட்டுவியா? என் முன்னுக்கு இப்படி திட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத. என்னால தாங்க முடியாது” என எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

‘திட்டனதுக்கே முகத்தைத் திருப்பிட்டு போறாளே. மத்ததெல்லாம் தெரிஞ்சா? சேச்சே அதெல்லாம் கண்டிப்பா தெரியாது. இவன் இங்க இருக்கற வரைக்கும் முடிஞ்ச அளவு பொறுமையா இருந்து பழகனும். ‘ என மனதை தேற்றி கொண்டே சாப்பிட எழுந்து சென்றான்.

சாப்பாட்டு மேசையில் இருவரும் அவனுக்காக காத்திருந்தனர். விபா அமர்ந்ததும் தானு எழுந்து அவர்கள் இருவருக்கும் பரிமாறினாள். பிறகு அவளும் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள். அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த தானுவை வேண்டுமென்றே வம்பிழுக்க டேனி வாயை திறந்தான்.

“வேணு, டான்யா வாழ்க்கையில நீதான் முத லவ்வுன்னு நினைச்சுகிட்டு மீசைய முறுக்காதே. ஏற்கனவே பல பேருக்கு அவ லெட்டர் குடுத்துருக்கா” என குண்டை தூக்கிப் போட்டு விபாவின் வயிற்றில் புளியை கரைத்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு புரையே ஏறிவிட்டது. தண்ணீரை குடித்து சமாளித்தவள்,

“வேணு! அவனை நம்பாதே. கதையையே மாத்தி சொல்லுறான். நான் யாருக்கும் லெட்டர் குடுக்கல”

“நீ குடுத்தா என்ன, அவனுங்க குடுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான்” என்றான் டேனி.

“அதெப்படிடா ஒன்னா ஆகும்? இந்த மாதிரி கதைய மாத்தி என் மானத்த வாங்காதே டேனி.”

“ஸ்டன்டர்ட் ஓன்ல நடந்த வேணுகிட்ட சொல்லட்டா டான்யா?”

“டேனி!!! வாயை மூடுடா. அதெல்லாம் ஒன்னும் இல்ல வேணு. அவன் கிடக்கான்” என சொன்னாலும் முகமெல்லாம் சிவந்து போய் விட்டது தானுவுக்கு.

‘என்னமோ இருக்கு போல இருக்கே. இப்படி வெக்கப்படுறா. அவங்க ஊரு ஸ்டன்டர்ட் ஓன்னா, ஏழு வயசுலேயா?’ விபாவுக்குமே ஆர்வம் வந்துவிட்டது என்ன என அறிந்து கொள்ள.

“வேணுக்கு தெரிஞ்சா என்ன? உனக்கு இருந்த டிமான்ட் தெரிஞ்சாதான் உன்னைய இன்னும் நல்ல பாத்துக்குவான்.”

என்னமோ பண்ணு என்பது போல், சாப்பிடுவது போல தலையை கீழே குனிந்து கொண்டாள் தானு.

“சொல்லு டேனி. சஸ்பென்ச குடுத்துட்டு பேசாம இருக்க.” என டேனியை ஊக்கினான் விபா.

“எங்க கிளாஸ்ல ஒரு சேட்டு பையன் இருந்தான். கொழு கொழுன்னு அழகா இருப்பான். அவனுக்கு நம்ப டான்யா மேல ஒரு இது. பள்ளி முடிஞ்சு போறப்ப, இவ கையில ஒரு லெட்டர குடுத்தான்.”

‘டேய் சேட்டு, அல்பபேட்டே தெரியாதா வயசுல எப்படிடா லவ் லெட்டர் எழுதுன?’ விபாவுக்கு புன்னகை அரும்பியது.

“நாங்க ரெண்டு பேரும் தான் பிரிச்சுப் பார்த்தோம். கலர் பேப்பருல படம் வரைஞ்சி வச்சிருந்தான். ரெண்டு குச்சி மனுசங்க கைய புடிச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க கீழ ஒரு குட்டி குச்சு மனுசன். டான்யான்னு தெரியனுங்கறதுக்காக அவ படத்துக்கு முடிய நீளமா வரைஞ்சி வச்சிருந்தான்.. அவன் பேரு என்ன டான்யா?”

அவனை முறைத்தவள்,

“ஜஸ்வன்” என்றாள்.

“பாரு வேணு! பேரை இன்னும் மறக்காம இருக்கா. என்ன இருந்தாலும் பர்ஸ்ட் லவ்ல. எப்படி மறக்க முடியும் சொல்லு”

“டேய், முழு கதையையும் சொல்லி முடிடா. அதுக்குள்ள லவ்வு ஜவ்வுன்னு இழுத்துகிட்டு” என கடுப்பானாள் தானு.

“எங்களுக்கு புரியலை அவன் வரைஞ்சி வச்சது. மறு நாள் ஸ்கூலுக்கு போய் அவன்கிட்ட விளக்கம் கேட்டோம். அவன் சொன்னான், ரெண்டு குச்சு மனுசங்க வந்து டான்யாவும் அவனுமாம். குட்டியா உள்ளது இவங்க பேபியாம்.”

இப்பொழுது விபா வாய்விட்டே சிரிக்கத் தொடங்கி விட்டான்.

“அதெல்லாம் விடு வேணு, மேடம் அவன் கிட்ட என்ன கேட்டா தெரியுமா? பேபிக்கு என்ன பேரு வச்சிருக்கன்னு கேட்டா” சொல்லிவிட்டு டேனியும் சிரிக்க தொடங்கி விட்டான்.

“என்ன பேருன்னு சொன்னானா?” என விபா எடுத்து கொடுத்தான்.

“ஓ சொன்னானே, நாம ரெண்டு பெயரையும் சேர்த்து ஜன்யான்னு வச்சிருக்கேன்னு .விட்டா ஒரு அறை. பையனுக்கு ஒரு பக்க கன்னமே வீங்கி போச்சு. அடுத்து அவ சொன்ன பஞ்ச் டையலோக்க அவ கிட்டயே கேளு வேணு”

“என்ன தானும்மா சொன்ன?”

“நாம பெத்த பிள்ளைக்கு நல்லதா ஒரு பேரு வைக்க தெரியலை, உனக்கெல்லாம் லவ் ஒரு கேடான்னு கேட்டேன்”

“அப்போ நல்ல பேரு வச்சிருந்தான்னா, சரின்னு சொல்லி இருப்பியா?” என கேட்டான் விபா.

“யாருக்கு தெரியும். சொன்னாலும் சொல்லி இருப்பேன்” என சிரித்தாள்.

“இந்த விஷயம் பெரிய பிரச்சனையாகி, பேரண்ட்ஸ கூப்பிட்டாங்க ஸ்கூலுக்கு. பாட்டி தான் வந்தாங்க. வந்தவங்க அந்த சேட்டு பையனை கட்டிபுடிச்சுகிட்டு என் மருமக பேரன் நல்லா சோக்கா தான் இருக்கான்னு ஒரே கொஞ்சல். அவனோட பேரண்ட்ஸ் இந்த மாதிரி ரவுடி இருக்கிற ஸ்கூல்ல என் பையனை படிக்க வைக்க மாட்டோம்னு, வேற ஸ்கூல் மாத்திட்டாங்க. நீ சொல்லு வேணு, நான் ரவுடியா?” என கேட்டாள் தான்யா.

“சேச்சே, அப்படி சொல்லுறவங்களுக்கு அறிவே இல்லை தானும்மா. உன்னை மாதிரி ஒரு மென்மையான, பாசமான, பரிவான பொண்ணை எங்க தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாதுடா. என் செல்ல கண்ணுக்குட்டி நீ” என கொஞ்சினான்.

“ஹலோ மிஸ்டர் வேணு! நான் இன்னும் இந்த மேசையில தான் உட்கார்ந்து இருக்கேன். கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கிங்க”

‘கொஞ்சறோம்னு தெரியுது இல்ல. அப்படியே எஸ்கேப் ஆக வேண்டியது தானேடா. நந்தி, நந்தி’ என மனதிற்குள்ளாகவே டேனியை திட்டினான் விபா.

“வேணு, டேனி வெளியூருக்கு எங்கயாச்சும் போகலாமான்னு கேக்குறான்”

“எங்கயாச்சும் இல்ல, கோவாவுக்கு போகனும்னு கேக்குறேன்”

“கோவா வேண்டா. நீங்க ரெண்டு பேரும் நல்லா கண்ணு கழுவவா? நோ வே. நாம ஊட்டிக்கு தான் போறோம்”

“நீ இருக்கறப்ப நான் மத்த பொண்ணுங்கள பாப்பேன்னா தானு. பொசுக்குனு இப்படி சொல்லிட்டியே” என சோகமாகி விட்டான் விபா.

“நான் இருக்கறப்ப பார்க்க மாட்டேன்னா, நான் இல்லாதப்ப பார்ப்பியா?” என குறுக்கு விசாரணையை தொடங்கினாள் தான்யா.

“நல்லா கேளு டான்யா. நீ இருக்கிறப்ப மட்டும் தான் மத்த பொண்ணுங்கள பார்க்க மாட்டாராம்” என எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் டேனி.

“அந்த உலக அழகியே வந்து நின்னாலும், என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தானும்மா தெரிவ. இது சத்தியம்”

“எனக்கு என்னமோ இத கேட்டா நம்பற மாதிரி இல்ல டான்யா”

‘அடே வைட்டு. இன்னிக்கு இது போதும்டா. இதுக்கு மேல நான் தாங்க மாட்டேன். ஏற்கனவே திட்டிட்டா, இப்ப கண்ணகி மாதிரி முறைக்கிறாளே’

“தாமுக்கு  நீ எப்படி வேணும்னாலும் இருந்துருக்கலாம் வேணு. அதைப் பத்தி நான் கேர் பண்ணிக்க மாட்டேன். ஆனா தாபிக்கு அப்புறம் மத்த பொண்ணுங்கள சைட்டடிச்சன்னு தெரிஞ்சது, கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்”

“அது என்ன தாமு தாபி? மலாய் வோர்டா?” மண்டை காய்ந்தது விபாவுக்கு.

“தாமுன்னா தானுவுக்கு முன், தாபின்னா தானுவுக்கு பின். இந்த விஷயத்துல நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன் வேணு. பொண்ணுங்க உன்னை சைட் அடிச்சாலும் என் கிட்ட அடி உதை வாங்க போறது என்னமோ நீதான். யாரும் உன்னை சைட் அடிக்காத மாதிரி நீ நடந்துக்கனும். புரியுதா?”

சிரித்துக் கொண்டே சரி என்றான் விபா.

“இப்படி மிரட்டுறா, சிரிச்சுகிட்டே இருக்க. சுத்த வேஸ்டு வேணு நீ.” என துப்பினான் டேனி.

‘அடப்போடா! இந்த மாதிரி என்னை மிரட்டி உருட்ட ஒருத்தி வர மாட்டாளான்னு ஏங்கி போய் கிடக்கறவன்டா நானு. கோபத்துல என் செல்லம்  அடிச்சா கூட ஹேப்பியா வாங்கிக்குவேன்டா.’

“சரி நீ கதைய மாத்தாதே டேனி. ஊட்டிக்கு போலாம் ப்ளீஸ். நீயும் வேணுவும் ஒரு ரூம் எடுத்துக்குங்க. நான் ஒரு ரூம் எடுத்துக்கிறேன். ஜாலியா இருக்கும்” என்றாள் தானு.

‘கல்யாணமாகி உன் கூட ஹனிமூன் போக வேண்டிய இடத்துக்கு, இவன் கூட சேர்ந்து சனி மூன் போக சொல்லுறியே பேபி. ஹ்ம்ம் எல்லாம் என் நேரம்’ என மனதில் புலம்பிய விபா,

“சரி நான் அரேஞ் பண்ணுறேன். ஒரு டிரிப் போய்ட்டு வரலாம்.”

“ஐ! ஜாலி ஜாலி. தேங்கஸ் வேணு. டேனி நீ வரவும் தான் என்னை சென்னைய விட்டே வெளிய கூட்டிட்டு போறான். உனக்கும் தேங்க்ஸ்”

‘எப்படி கதைய திருப்புறா பாத்தியா. எங்கயாச்சும் வெள்ளி கிளம்பி போய்ட்டு சன்டே வந்துரலாம்னு எத்தனை தடவை கெஞ்சி இருக்கேன். ஒவ்வொரு தடவையும் அம்மாவ கேட்கனும் ஆட்டுகுட்டிய கேட்கனும்னு சாக்கு சொல்லிட்டு, நான் கூட்டி போகலைன்னு கோம்ப்ளேன் பண்ணுற. இதுக்கு இந்த வைட்டு ஏதாச்சும் சொல்லுவானே’ என நினைத்து முடிப்பதற்குள் டேனி வாயை திறந்திருந்தான்.

“இப்படி வெளியூர்லாம் கூட்டி போய் செலவு செய்யற அளவுக்கு நீ வொர்த் இல்லைன்னு நினைச்சுருப்பாரு”

‘அடேய்! ஆப்படிச்சுட்டானே’ டேனியை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவனால்.

“அப்படியெல்லாம் வேணு நினைக்கமாட்டான். நீ உன் நாரதர் வேலைய கொஞ்சம் நிப்பாட்டு” என டேனிக்கு ஒரு திட்டை கொடுத்தாள்.

“வேணு எங்களுக்கு எந்த ரூம்? நான் குளிக்கணும். கொஞ்சம் படிக்கிறது வேற இருக்கு. “

“நீ எந்த ரூம் வேணும்னாலும் எடுத்துக்க தானு. இவன் கீழ இருக்குற கெஸ்ட் ரூம் பயன் படுத்திக்கட்டும்.”

“எந்த ரூம்னாலும்னா, உன் ரூமை கேட்டா என்ன பண்ணுவ?”

“உனக்கு இல்லாததா? எடுத்துக்க தானு. நோ ப்ராப்ளம்”

“ஓவரா சீன் போடாம ஆபிஸ் வேலை ஏதாச்சும் இருந்தா போய் பாரு. நீ வாடா டேனி. உன் ரூம்ல எல்லாம் இருக்கான்னு பார்த்துட்டு நான் என் ரூமுக்கு போறேன்”

அவனுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தவள்,

“முதல்ல குளி. அப்புறம் போர் அடிச்சா மேல கேம் ரூம் இருக்கு. பிளே ஸ்டேஷன் லேட்டஸ்ட் மோடேல் வாங்கி வச்சிருக்கான் வேணு. போய் விளையாடு. வேற ஏதாச்சும் வேணும்னா என் கிட்ட கேளு. நான் செஞ்சு குடுக்குறேன். குட் நைட் டா”

“இந்த வீட்டை பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க டான்யா.”

“நான் வாழ போற வீடு இல்லையா.” என சொல்லி புன்னகைத்தவள்.

“ஒரு செட் கீ கூட என் கிட்ட குடுத்து வச்சிருக்கான். எப்ப வேணும்னாலும் வரலாம்னு”

“நீ சந்தோஷமா இருக்கியா டான்யா?”

“யெஸ் டேனி. வேணு இஸ் மை வோர்ல்ட். அவன் கூட இருக்கறப்ப நான் தான் இந்த உலகத்துலேயே சந்தோஷமான ஆளுன்னு தோணுது.” மின்னிய அவள் முகத்தைப் பார்க்க டேனிக்கும் திருப்தியாக இருந்தது. அதற்குள் வேணு தான்யாவை அழைக்கும் சத்தம் கேட்டது.

“உன் கூட கொஞ்ச நேரம் பேச விடமாட்டான். அவனுக்கு உன் மேல லேசா பொறாமை டேனி. அவன் நம்மை சந்தேகமா பார்க்கல. ஆனா அவனை விட்டுட்டு மத்தவங்க கிட்ட நான் டைம் ஸ்பென்ட் பண்ணுறது ஐயாவுக்கு பிடிக்காது. எந்நேரமும் நான் அவன் கூடவே இருக்கணும்னு எதிர்ப்பாக்குறான். கொஞ்ச நாளுல நம்ம நட்ப புரிஞ்சுக்குவான். நான் புரிய வைப்பேன். கிவ் ஹிம் சம் டைம் டேனி. அவன் கடுப்புல ஏதாச்சும் சொல்லிட்டான்னா, கோவிச்சுக்காத. எனக்காக மன்னிச்சுரு ப்ளிஸ்”

“இதெல்லாம் நீ எனக்கு சொல்லனும்மா டான்யா. உன் சந்தோசம் தான் என்னோடதும். உனக்காக நான் வேணுவை அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன்.”

அதற்குள் இன்னொரு முறை விபா அழைத்திருந்தான்.

“இவனை!!! அப்புறம் பேசலாம்டா” என வெளியே சென்றவள், பேசிக்கிட்டு இருக்கறப்ப கூப்பிடுவியா? கூப்பிடுவியா என அவனை மொத்துவதை கேட்டு சிரித்துக் கொண்டே கதவை சாத்தினான் டேனி.

எப்பொழுதும் போல் இரவில் பிரபு போன் செய்தான் விபாவுக்கு. இருவரும் அந்த நேரத்தில் தான் கடையின் வரவு செலவு மற்றும் சொந்த விஷயங்களை பேசிக்கொள்வார்கள்.

“மச்சி. எப்படி இருக்க?”

“இருக்கன்டா” என சலித்துக் கொண்டான் விபா.

“என்ன சுருதி குறையுது? டேனி ரொம்ப படுத்துறானா? இல்ல என் தங்கச்சி மொத்தி எடுக்கறாளா?”

“உன் தங்கச்சி மொத்துறது எல்லாம், எனக்கு பஞ்சால வருடி விட்ட மாதிரி தான்டா இருக்கும். இவன் தொல்லை தான் தாங்க முடியலைடா”

“நீ என்ன பண்ணு, நாளைக்கு சாப்பாட்டுல அவனுக்கு உறைப்பை அள்ளி போட்டிரு. நாக்கு போய் மேல ஒட்டிகிட்டு நாலு நாளைக்கு பேச மாட்டான்”

“அப்படி மட்டும் செஞ்சேன், உன் தங்கச்சி மிளகாய எடுத்து என் கண்ணுல தூவிருவா”

“தெரியுதுல. அப்ப பொறுத்து போடா. கொஞ்ச நாள் தானே”

“என் கதைய விடு. உன் ஜிமிக்கி கம்மல் எப்படி இருக்கா?”

“யாரு பானுஜாவை தானே கேக்குற? நானும் என்னன்னமோ பண்ணி பார்த்துட்டேன்டா. குரங்கு மாதிரி இன்னும் பல்டி தான் அடிக்கலை. யூ டியூப்ல போய் மலையாளம் கூட நாலு வார்த்தை கத்துகிட்டேன். வேலைக்கு வெள்ளையும் சொள்ளையுமா போறேன். ஹ்ம்ம் மசிய மாட்டிக்கிறாடா”

“ஏன் மச்சி, வெள்ளையும் சொள்ளையுமா போனியே, பல்லை விளக்கிட்டு போனியா?”

“டேய், இதானே வேணாங்கிறது. காதல் வந்த உடனே நாங்கள்லாம் நாலு தடவ குளிக்கிறோம், ஐந்து தடவ பல்லு விளக்குறோம், ஆறு தடவை தலை சீவுறோம். ஏழு தடவ சட்டை மாத்துறோம்”

“முடியலைடா. என்னை விட்டுரு.”

“அந்த பயம் இருக்கட்டும். நீ எப்படிடா என் தங்கச்சிய கவுத்த? கொஞ்சம் டிப்ஸ் குடேன்”

“ஒரு அண்ணன்காரன் பேசுற மாதிரியா பேசுற? இருந்தாலும் சொல்லுறேன். மனசுல உண்மையான அன்பு இருந்தா போதும்டா. மத்ததெல்லாம் தானா வரும்”

“அன்பு! அன்பு! அதை எந்த கடையில வாங்குவேன்? நம்ப கடையில கண்டிப்பா விக்கல. வேற கடைய தான் தேடனும்”

விபா அவனை திட்ட ஆரம்பிக்கும் முன் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சுவரை பார்த்தான், மணி பத்து என காட்டியது.

“கம் இன்” என குரல் கொடுத்தான்.

“போன் உள்ள எப்படிடா வரது?”

“உன்னை இல்லடா. கதவ யாரோ தட்டுறாங்க. யாரோ இல்ல உன் தங்கச்சி தான்”

“டேய், இந்த அர்த்த ராத்திரியில ஏன்டா உன் ரூமுக்கு வரா? விபா என்னை சீக்கிரமா மாமா ஆக்கிறாதடா”

“அடச்சீ, போனை வையுடா” என லைனை கட் பண்ணினான். கட்டிலில் இருந்து எழுந்தவன்,

“என்னடா? ஏதாச்சும் வேணுமா?” என கேட்டான்.

“உன் கிட்ட கொஞ்சம் பேசனும் வேணு” என உள்ளே நுழைந்தாள் தானு.

“வா தானும்மா. என்ன விஷயம்?”

“வேணு கட்டில் என்ன இவ்வளவு பெருசா இருக்கு. நாலு பேர் தூங்கலாம் போல. புதுசா?”

“புதுசு தான்.”

கட்டிலில் ஏறி நின்றாள் தானு.

“என்ன தானு? குதிச்சு விளையாட போறியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்படி ஏறி நின்னா தான் உன் கண்ண பார்த்து பேச முடியுது. உன்னை நிமிர்ந்து பாத்து பேச கழுத்து வலிக்குது வேணு”

சிரிப்பு வந்து விட்டது விபாவுக்கு. அவளை நெருங்கி நின்றவன்,

“இப்ப கண்ணைப் பார்த்து பேச முடியுதா?” என கேட்டான்.

“ஆமா, பார்க்க முடியுது. சரி, இப்ப எதுக்கு என் இடுப்ப புடிச்சுகிட்டு இருக்க?”

“கட்டில் மேல நிக்கறீயே, விழுந்துற கூடாதுன்னு தான் முட்டு குடுத்து இடுப்பை பிடிச்சிருக்கேன்.”

நம்பாத மாதிரி அவனைப் பார்த்தவள்,

“ இப்ப பேசலாமா? நீ ஏன் டேனிய முறைச்சு முறைச்சு பார்க்கிற?”

“நான் எப்ப அப்படி பார்த்தேன்? இல்லை தானும்மா”

“பொய் சொல்லாத. நான் உன்னை கவனிச்சுகிட்டு தான் இருந்தேன். இங்க பாரு வேணு” என அவன் தாடையை தொட்டு நிமிர்த்தியவள்,

“அவன் எனக்கு பெஸ்ட் பிரண்ட். ஆனா நீ எனக்கு பிரண்ட், லவ்வர், டாவு, பிரேமா, பிரேமம், ச்சிந்தா(மலாய்), ஓஹாய்னி(மேன்டரின்), சராங்(கொரியன்) எல்லாமே” என கூறி மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.

“அவனை பார்த்து நீ பொறாமை பட ஒன்னுமே இல்லை. புரியுதா? அவன் எனக்கு ஒரு மூக்கோட ஓட்டைன்னா நீ வந்து இன்னொன்னு”

“ஏன்டி, உனக்கு உவமை சொல்ல வேற ஒன்னுமே கிடைக்கலியா?” என முகத்தை சுளித்தான் விபா.

“ஏன், இந்த உவமைக்கு என்ன குறைச்சல்?மூக்குல ஓட்டை இல்லாட்டி மூச்சு விட முடியாது தெரியுமா? அப்புறம் ஏன் இந்த கவிஞர்கள் எல்லாம் அதை பத்தி ஒன்னும் பாடலைன்னு எனக்கு ஒரு பெரிய ஆதங்கமே இருக்கு.”

தானுவை இருக அணைத்துக் கொண்டு வாய் விட்டு சிரித்தான் விபா. இவ்வளவு நேரம் டேனியால் வந்த டென்ஷன் எல்லாம் காற்றோடு கரைந்தது போல் இருந்தது அவனுக்கு.

“சாபம் நிறைந்த என் வாழ்க்கைக்கு கிடைச்ச அழகிய வரம் நீ தானும்மா. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியலம்மா. ஐ லவ் யூ சோ மச் தானு.” அவன் அணைப்பு இன்னும் இருகியது.

அவனது தோளில் முகம் சாய்த்து கொண்டவள்,

“வேணு” என மென்மையாக அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“விடுடா”

“முடியாது”

“வேணு, சொன்னா கேளு.”

“ஒன்னும் பண்ண மாட்டேன்டி. கொஞ்ச நேரம் இப்படியே இரு ப்ளீஸ்”

“எனக்கு தூக்கம் வருது வேணு.”

“அப்படியே என் மேல சாஞ்சிகிட்டே தூங்கு. நான் தூக்கிட்டு போய் படுக்க வைக்கிறேன்”

“நான் என்ன சின்ன குழந்தையா?”

“எனக்கு நீ சின்ன குழந்தைதான். என்னோட பேபி”

முகம் பூவாய் மலர்ந்தது அவளுக்கு.

“இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டு பாடு வேணு”

“நான் பாடுனா உனக்கு பிடிக்குதா தானும்மா?”

“ரொம்ப பிடிக்கும். உனக்கு செக்சியான வொய்ஸ் தெரியுமா?”

“ஆமாவா? சரி செய்யுற வேலைய விட்டுட்டு பாட்டு பாட போயிறவா?”

“விளக்கமாறு பிஞ்சிரும். இந்த செக்சி வோய்ஸ நான் மட்டும் தான் கேட்டு ரசிக்கனும்.”

மெல்ல நகைத்தவன், அவளை அணைத்த நிலையிலே பாடினான்.

“தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்”

விபாவின் குரலில் தெரிந்த உருக்கத்தில் தானுவுக்கு கண்களில் மடை திறந்தது. தோள் நனையும் உணர்ச்சியில் தானுவின் முகத்தை நிமிர்த்தினான் விபா.

“அழாதே தானு” என சொன்னவன் குரலிலும் கரகரப்பு. அவளை தூக்கி கொண்டவன், மெல்ல நடந்து பக்கத்து ரூமுக்கு சென்றான். கட்டிலில் படுக்க வைத்து,

“ஒன்னும் நினைக்காம நிம்மதியா தூங்கனும். குட் நைட் தானும்மா” என சொல்லி கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றான்.

“ஐ லவ் யூ டூ வேணு” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள் தானு.

 

error: Content is protected !!