ENE–EPI 40

அத்தியாயம் 40

என்னவளே என்னை மறந்ததும் ஏனோ

எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

என்னை சிதைத்தவள் பின்பு அணைத்தவள்

இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ

 

சிராங்கூன் சாலை, சிங்கப்பூர்

கடை திறப்புவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. விபா நிற்க நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான். ஆரம்ப கட்ட உதவிக்கு பிரபுவும் சிங்கப்பூர் வந்திருந்தான்.

“மச்சி, ரிப்பன் கட் பண்ண ஏதாவது நடிகைய அரெஞ் பண்ணியிருக்கலாம்லே. கூட்டம் அள்ளிரும். அதை விட்டு போட்டு, யாரோ பேர் தெரியாத ஆளா கூப்பிட்டுருக்க” என பொருமினான் பிரபு.

“ஏன்டா, இந்த ஊருல கடை திறக்கறோம். இங்க உள்ள மினிஸ்டர கூப்பிட்டா தான் நல்லா இருக்கும். ஏதாவது பிரச்சனைன்னு வரும் போது , சுலபமா அவங்க கிட்ட இருந்து ஹெல்ப் கிடைக்கும்.”

“எல்லாத்தையும் பிஸ்னஸ் மைன்ட்லயே பார்க்காதடா. கொஞ்சம் என்டேர்டேய்ன்ட்மெனும் வேணும்டா. ஹ்ம்ம்ம் உன் புண்ணியத்துல ஒரு சினிமா ஸ்டாரை பார்க்கலாம்னு நினைச்சேன். எதுக்கும் ஒரு அதிர்ஸ்டம் வேணும்டா.”

“அலையாதடா. ஊருக்கு வரும் போது, அவார்ட் பங்சன் எதாவது வரும் , கண்டிப்பா கூட்டிட்டு போறேன்”

“நெஜமாவா மச்சான்? அதுக்கெல்லாம் உன்னை கூப்பிடுவாங்களா?”

“உன் தங்கச்சி தான் என்னை அரை காசுக்கு மதிக்க மாட்டிக்கிறா. நீயுமாடா? நாமளும் அந்த மாதிரி பங்ஷனுக்கு ஸ்போன்ஷர் பண்ணுறதால என்னையும் அவார்ட் குடுக்க கூப்பிடுவாங்கடா. நம்பு பிளிஸ். நானும் ரவுடிதான்ற மாதிரி நானும் செலெபிரிட்டி தான்னு சொல்லிகிட்டே திரியனும் போல.”

“கோவிச்சுக்காதே மச்சான். சிம்பிளா பழகறியா, அதான் மறந்து மறந்து போயிருது. அவ்வளவு அழகு அழகா பிகர பார்த்தும், என் தங்கச்சி பின்னால சுத்துற பாத்தியா, அவ குடுத்து வச்சவ”

“அப்போ என் தானு அழகு இல்லைன்னு சொல்லுறியா? பிச்சுருவேன். அவ கிடைக்க நான் தான் குடுத்து வச்சிருக்கணும்” கண்களில் கனவு மின்ன சொன்னான்.

“விபா டேய், தானு கூட ட்ரீம் போய்ட்டு வந்துட்டீயா? என்ன சாங்? வெள்ளை டிரஸ் போட்ட நம்ம ஊரு பொண்ணுங்க ஆடுனாங்களா? இல்லை லேட்டஸ்ட் ட்ரேன்ட்ல வெள்ளைக்காரிங்களே ஆடுனாங்களா?” என கேட்டு விபாவை உலுக்கினான் பிரபு.

“உன்னை பக்கத்துல வச்சிகிட்டு கக்கூஸ் கூட போக முடியாது. இந்த லட்சணத்துல கனவுக்கு போறாங்களா? போய் வேலைய பாருடா. பேப்பர் வோர்க் எல்லாம் பக்காவா இருக்கணும். அப்புறம் வோர்க்கர்ஸ் பெர்மிட் எல்லாம் வந்துருச்சான்னு செக் பண்ணனும். இதெல்லாம் முடிச்சுட்டு ராத்திரி  ஒன்பது மணிக்கு எல்லாம் ஹோட்டலுக்கு போயிரனும். தானு கோல் பண்ணுவா.”

“அப்படி என்னதான்டா தினத்துக்கும் பேசுவா? “

“வேற என்ன, இன்னிக்கு எந்த போடி பார்ட்ஸ அறுத்தாங்க, அது உள்ளுக்கு என்ன என்ன இருந்தது அப்படின்னு டீடெய்லா சொல்லுவா. சில சமயம் படம் புடிச்சு வேற அனுப்பி வைப்பா. ஏன் மச்சி, மனுசன் வாயை பாத்திருக்கியே, வாய்க்கு உள்ள வர டான்சிலை(tonsil) பாத்திருக்கியா? நேத்து தான்டா க்ளோஸ் அப் போட்டோ பிடிச்சு அனுப்புனா. என்னால முடியலை மச்சி”

“ஆயிரம் பேர கொன்னா தான் அரை வைத்தியனாமே. அதுல உன்னைதான் முதல்ல கொல்ல போறா பாத்துக்க” என சொல்லி விட்டு சிரித்தான் பிரபு.

இருவரும் சிரித்த படியே வேலையை கவனிக்க சென்றனர். சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை அடைந்த போது, தானு மேசெஜ் செய்திருந்தாள் விபாவுக்கு.
“வேணு , இன்னும் கொஞ்ச நேரத்துல வீடியோ ஒன்னு அனுப்புறேன். குளிச்சிட்டு வந்து பாரு. அதுக்கு அப்புறம் போன் பண்ணுறேன்”
“ ஓகே “ என தட்டி விட்டவன்,
‘இப்ப என்னத்த வீடியோ எடுத்து வச்சிருக்கான்னு தெரியலையே. கண்ணா, வாயா, மூக்கா இல்ல காதா? எதா இருந்தாலும், இந்த இதயம் தாங்கும்’ என நினைத்துக் கொண்டே குளித்து விட்டு வந்தான்.

மேசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டு போனை கையில் எடுத்து வீடியோவை திறந்து பார்த்தான். பார்த்தவன் அப்படியே வாய் பிளந்து நின்றான். பின்பு கட்டிலில் அமர்ந்து கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை ஓட விட்டுப் பார்த்தான்.

தொலைபேசியை ட்ரெசிங் டேபிலில் வைத்து எடுத்திருந்தாள் அந்த வீடியோவை. முதலில் படம் கொஞ்சம் ஆடி பிறகு கட்டிலை போக்கஸ் செய்தது. கட்டிலின் மேல் இடது காலை வைத்து அதன் மேல் கிட்டாரை வைத்து கொண்டு நின்றிருந்தாள் தானு. அவனுக்கு முதலில் கையை ஆட்டியவள் பின் கிட்டாரில் சுருதியைக் கூட்டினாள்.

தொலைபேசியைப் பார்த்து,

“வேணு!!! ரெடியா? இந்த பாட்டை உனக்காக டெடிகேட் பண்ணுறேன். எஞ்சாய்” என சொல்லி கிட்டாரை வாசித்துக் கொண்டே பாடினாள்.

“ தூக்கங்களை தூக்கிச் சென்றான்
தூக்கி சென்றான்..
ஏக்கங்களை தூவிச் சென்றான்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே

“நீ பூ வைக்க மாட்டல்ல, அப்புறம் எப்படி மாத்தி படிக்கிறது? கொஞ்சம் இரு யோசிக்கிறேன்” என தலையை தட்டி கொஞ்சம் நேரம் யோசித்தவள்,

“வந்துருச்சு,

நீ போடும் ஷேர்ட்டெல்லாம் ஒரு போதும் கசங்காதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலைா

ஆணே உன் மேல் பிழை”

“நல்லாயிருக்கா வேணு?” என கேட்டவாறே சிரித்தாள். வீடியோ அதோடு நின்றிருந்தது.

அசந்து போய் விட்டான் விபா. பாடியது சுமாராக இருந்தாலும் அவளது கிட்டார் வாசிப்பு பிரமாதமாக இருந்தது. ஸ்டைலாக தலையை ஆட்டி ஆட்டி அவள் வாசிக்கும்போது, அவன் நெஞ்சம் சென்னைக்கு பறந்து சென்று அவள் காலடியில் சரணடைந்திருந்தது.

‘இன்னும் என்னென்ன வித்தைகள் கையில வச்சிருக்கான்னு தெரியலையே. இப்பவே இருக்கி கட்டி பிடிச்சுக்கனும் மாதிரி இருக்கே. ஏன்டி, கடல் கடந்து வந்த இடத்தில என்னை இந்த பாடு படுத்துற? தானும்மா!!!! ஐ லவ் யூ !!!” என அவன் மனம் கதறியது.

வீடியோவை நிறுத்திவிட்டு அவளுக்கு வீடியோ கோல் செய்தவன், அவள் எடுப்பதற்காக காத்திருந்தான். அவள் முகம் ஸ்கிரினில் தெரிந்தவுடன், இச் இச் இச்சென முத்தமிட்டான்.

“போதும் வேணு. நிப்பாட்டு” என அந்த பக்கம் சிரித்தாள் தானு.

“ஏன்டி என் கிட்ட சொல்லல?”

“எதை? கிட்டார் வாசிக்க தெரியும்னா? இதெல்லாம் போய் எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிக்க சொல்லுறியா? சுய விளம்பரம் எனக்கு பிடிக்காது வேணு”

“இப்ப ஒழுங்கு மரியாதையா இன்னும் என்னேன்ன தெரியும்னு வரிசையா சொல்லுற. இப்படி திடீர் திடீர்னு எனக்கு அதிர்ச்சி குடுக்காத குட்டி. அதுக்கு முன்னுக்கு, நான் குடுத்த மாதிரியே நச்சு நச்சுன்னு முத்ததைத் திருப்பி குடுக்குற. கமான் தானு”

“அதேல்லாம் முடியாது. நான் கேட்காமலேயே நீதானே குடுத்த. அதே மாதிரி நீ கேட்காதப்ப நான்  குடுக்குறேன்.” என போக்கு காட்டினாள் அவள்.

“அங்க வந்து வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன். இப்ப சொல்லு”

“உனக்கு தான் என் சின்ன வயசு கதை தெரியுமே. கவுன்சலிங் போகும்போது மியூசிக் கத்துக்கிட்டா மனசு ரிலாக்ஸ் ஆகும்னு சொன்னாங்கன்னு கற்பு பியானோ கிளாஸ்ல சேர்த்தாங்க. எனக்கு பிடிக்கல. பசங்க எல்லாம் பக்கத்து கிளாசுல கிட்டார் கத்துக்கறத பார்த்து அது தான் வேணும்னு அடம் பிடிச்சு சேர்ந்தேன். அப்புறம் தற்காப்பு முக்கியம்னு பாட்டி கராத்தே கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. டேனி வீட்டுக்கு போகும் போது, நீச்சல் குளமே கதிய கெடக்கிறேன்னு அவன் அம்மா நீச்சல் சொல்லி குடுத்தாங்க. அப்புறம் ட்ரைவிங், பைக் ஓட்டுறது எல்லாம் டேனி சொல்லி குடுத்தான். இப்போதைக்கு இவ்வளவு தான் ஞாபகம் இருக்கு. ஆம் மறந்துட்டேன் பாரு, தமிழ், மலாய், ஆங்கிலத்தோடு மேன்டரின்னும் பேசுவேன்”

வாயைப் பிளந்த விபா,

“அப்புறம் ஏன் டேனிகிட்ட ஆங்கிலத்திலேயே பேசுற?”

“அது அவன் கொழுப்பு. மேன்டரின் எனக்கு வந்த மாதிரி ஐயாவுக்கு தமிழ் வாயில நுழையல. அதனால அவன் கத்துகிட்டு பேசுற வரைக்கும் ஆங்கிலத்துல தான் பேசனும்னு சொல்லிட்டான். அவன் கத்து முடிக்கிறதுக்குள்ள நான் பேரன் பேத்தி எடுத்துருவேன் போல”

“முதல்ல நிறைய பிள்ளை குட்டி பெத்துக்குவோம்டா. அப்புறம் பேரன் பேத்திக்கு போவோம்”

“இந்த ஜோக்குக்கு நான் சிரிக்கனுமா?”

“இது ஜோக்கு இல்ல செல்லம். சீரியசா தான் சொல்லுறேன்” அவள் முறைக்கவும் சிரித்தவன்,

“சரி சொல்லு, ஏன் திடீர்ன்னு போய் கிட்டார் வாங்குன?”

உதட்டைக் கடித்தவள்,

“நீ இல்லாம எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு வேணு. எக்ஸம் எழுதுன டென்ஷன் வேற. டிப்ரஸா இருக்கு, எனக்கு யாருமே இல்லாத மாதிரி. அந்த மாதிரி நினைக்க கூடாதுன்னு தான், மனச திசை திருப்ப கிட்டார் வாங்குனேன். என்னோடது அங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்” முகத்தில் தெரிந்த சோகத்தை மறைக்க வேறு புறம் திரும்பி கொண்டு பேசினாள்.

“தானும்மா, என்னைப் பாரு.”

திரும்பி பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்த சோகம் விபாவின் மனதை பலமாக தாக்கியது. ‘என்னை விட்டுட்டு இருக்க முடியலை, இருந்தும் போக சொல்லியிருக்கா. இவ இருக்காளே, மனசுல என்னதான் இருக்குன்னு என்னால இன்னும் சரியா கணிக்கமுடியலை’

“நாளைக்கே நான் கிளம்பி வரேன்.”

“வேண்டா வேணு. இதுக்கு தான் உன் கிட்ட ஒன்னும் சொல்ல கூடாது. இன்னும் சில நாள் தான் இருக்கு ஒப்பேனிங்க்கு. இருந்து முடிச்சுட்டே வா. நான் சமாளிச்சுக்குவேன்” சொல்லிக் கொண்டு இருக்கும் போதே வீடியோ கோல் நின்று விட்டது.

விபா பல முறை முயன்றும் லைன் போகவில்லை. பதினைந்து நிமிடம் கழித்து அவளே அழைத்தாள்.

“என்னாச்சு தானு?” பதற்றம் விபாவின் குரலில்.

“போன் வர வர மக்கர் பண்ணுது வேணு. அடிக்கடி இப்படி நின்னு போயிருது”

“சரி, நாளைக்கு புதுசு வாங்கி செக்ரட்டரிகிட்ட குடுத்துவிட சொல்லுறேன்.”

“ஏன் எனக்கு வாங்க தெரியாதா? நாளைக்கு தேக்கி கூட வெளிய போறேன். அப்ப வாங்கிக்கிறேன்.”

“சரி, பத்திரமா போ. ஒன்னும் நினைக்காம நிம்மதியா தூங்கு. ஒபேனிங் முடிஞ்ச கையோட உன் முன்னுக்கு இருப்பேன். இப்ப அழகா சிரிச்ச படியா ஒரு ஐ லவ் யூ சொல்லு பார்ப்போம்”

“ஐ மிஸ் யூ வேணு, குட் நைட்” என பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு போனை அடைத்துவிட்டாள் தானு.

‘பிடிவாதம் பிடிச்ச கழுதை’ என செல்லமாக திட்டிக் கொண்டே மீண்டும் அந்த வீடியோவை பார்த்தவாறே தூங்கி போனான் விபா.

நாட்கள் இறக்கையைக் கட்டிக் கொண்டு பறந்தன. நாளை விடிந்தால் திறப்பு விழா. இரவுக்கே சென்னை திரும்பி செல்ல டிக்கேட் புக் செய்திருந்தான் விபா.

“என்ன மச்சி இவ்வளவு அவசரமா கிளம்பனுமா?”

“எனக்கு மனசே சரியில்லைடா பிரபு”

“ஏன்டா என்ன ஆச்சு?”

“நேத்து தானுக்கு போன் பண்ணப்ப அவ முகமே சரியில்லைடா. சிவந்து வீங்கி போய் இருந்தது. என்னை நினைச்சு அழுதுகிட்டு இருக்காளோ என்னமோ தெரியலை. கேட்டா லேசா காய்ச்சலுன்னு மழுப்புறா. இன்னிக்கு முழுக்க மேசேஜையும் காணோம். என்னமோ நடக்க போற மாதிரி படபடப்பா இருக்குடா”

“இதுக்கெல்லாம் ஏன்டா பயப்படுறே? உண்மையா காய்ச்சலா இருக்கும். ஒரு டாக்டருக்கு தன் உடம்பை பாத்துக்க தெரியாதா?” நண்பன் முகம் இன்னும் தெளியாததைக் கண்டு,

“சரி நாளைக்கு முடிச்சுட்டு கிளம்பு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

“தேங்க்ஸ்டா மச்சி”

“நமக்குள்ள என்னடா தேங்க்ஸ்.” விபாவின் முதுகை தட்டிக் கொடுத்தான் பிரபு.

மறுநாள் எந்த ஒரு தங்கு தடையுமின்றி ‘எலெகண்ட்’ திறப்புவிழா சிறப்பாக நடைப்பெற்றது. நிறைய விளம்பரப்படுத்தி இருந்ததால் கூட்டம் அலை மோதியது. இருந்த பிசியிலும் மறக்காமல் தானு எப்படி இருக்கிறாள் என மேசேஜ் செய்து கேட்டுக்கொண்டான்.

இரவு டேக்சி எடுத்து சாங்கி விமான நிலையத்துக்கு வந்தான் விபா. பிளைட் எடுப்பதற்கு முன் தானுவுக்கு கோல் செய்தான்.

“ஹலோ தானு”

“ஹ்ம்ம்”

“எப்படிடா இருக்க”

“ஓகே. அங்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?’

“ஆமாடா. நினைச்சதோட கூட்டம் அதிகமாவே கூடியிருச்சு. திணறிட்டோம்”

“சரி”

“இப்ப எங்க இருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்?”

“ஹோட்டல்?”

“ஏர்போர்ட். இன்னும் 4 மணி நேரத்துல உன் பக்கத்துல இருப்பேன்”

கொஞ்ச நேரம் அங்கே சத்தம் இல்லை.

“தானு? தானு லைன்ல இருக்கியா?”

“ஹ்ம்ம்”

“நேரா உன் அபார்ட்மெண்ட் வந்துருறேன். உன்னை இப்பவே பார்க்கணும் மாதிரி இருக்கு”

“நான் உன் வீட்டுல தான் இருக்கேன்”

“ஆமாவா. ரொம்ப சந்தோஷம். என்ன இது உன் வீடுன்னு சொல்லிகிட்டு. நம்ப வீடுன்னு சொல்லு”

“ஹ்ம்ம்”

“என்னடா, ஒத்தை வார்த்தையாவே பேசுற?”

“ஒன்னும் இல்ல. மருந்து போட்டது மயக்கமா இருக்கு. படுக்கவா?”

“சரி படு. என் கிட்ட கீ இருக்கு. நான் வந்துருவேன். குட் நைட் தானும்மா, ஐ லவ் யூ”

“குட் நைட்” லைனை கட் செய்திருந்தாள்.

போனை பாக்கேட்டில் போட்டவன் பிறகு தான் உணர்ந்தான் பேசும்போது ஒரு தடவை கூட அவள் வேணு என அழைக்கவில்லை என்று.

‘என்ன ஆச்சு இவளுக்கு? அங்க வீட்டுக்கு போனதையும் சொல்லல. பேசறதும் சரியில்லை. சரி நேருல போய் பாத்துக்குவோம்.’ என எண்ணியவாறே பிளைட் புறப்படுவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

சென்னையில் இறங்கி வீட்டை அடைந்த போது விடிகாலை நான்கு மணி ஆகி இருந்தது. வீட்டைத் திறந்து நேராக தானு வந்தால் தங்கும் அறைக்கு சென்றான். கட்டில் காலியாக இருந்தது.

‘எங்க இவ? திரும்ப அபார்ட்மேன்ட் போயிட்டாளா? சரி குளிச்சுட்டு போய் பார்க்கலாம்’ என தனது ரூமுக்குள் நுழைந்தான். அங்கே லைட்டை எரியவிட்டுக் கொண்டு, தானு அவனது கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தாள். சத்தம் செய்யாமல், மெதுவாக கதவை சாத்தியவன், அருகில் வந்து நின்று அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘தூங்குறப்ப அப்படியே குழந்தை மாதிரியே இருக்கா.’ உதடுகள் லேசாக பிரிந்திருக்க, அந்த சின்ன இடைவெளியில் நாக்கை லேசாக துருத்திக் கொண்டு க்யூட்டாக தூங்கி கொண்டிருந்தாள் தானு. அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் என பரபரத்த கையை அடக்கி கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான் விபா. சத்தமில்லாமல் குளித்து விட்டு, ரூமில் இருந்த சோபாவிலேயே படுத்துக் கொண்டான். அவள் கையேட்டும் தூரத்தில் இருக்கிறாள் எனும் நினைவே நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது அவனுக்கு.

காலையில் பத்து மணிவாக்கில் தானுதான் அவனை எழுப்பினாள் கையில் காப்பியுடன்.

“குடிச்சுட்டு வா, சாப்பிடலாம்” என வெளியேறிவிட்டாள்.

சாப்பிட்டுக் கொண்டே இருவரும் நார்மலாக பேசிக் கொண்டார்கள்.

“உங்கம்மா இப்ப மட்டும் எப்படி இங்க வர விட்டாங்க? என கேட்டான் விபா.

“அவங்க கிட்ட சொல்லலை”

புருவத்தைத் தூக்கி வியந்தவன் வேறு ஒன்றும் கேட்கவில்லை அவளிடம். வெளியே எங்காவது செல்லலாமா என கேட்டதுக்கு வேண்டாம் என்றவள், அன்று முழுக்க அவனை ஒட்டிக் கொண்டே அலைந்தாள். அவனுக்கும் அவள் அருகாமை தேவையாக இருந்ததால் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான்.

விபாவுக்கு அவள் தன்னிடம் எதையோ எதிர்ப்பார்ப்பது போலவே இருந்தது. என்ன என்று அவனால் வரையறுக்க முடியவில்லை. வாயைத் திறந்து கேட்டுவிட முடிவு செய்தவன்,

“தானும்மா, ஏன் ஒரு மாதிரியா பிஹேவ் பண்ணுற? ஏதாச்சும் வேணுமாடா?”’

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் ஒன்றும் இல்லை என தலையாட்டினாள். அவள் கண்கள் மட்டும் அவன் கண்களையே ஆழ்ந்து நோக்கியது.

“என்னடி இருக்கு மனசுக்குள்ள? சொன்னாதானே எனக்கு தெரியும்” மனம் தாளாமல் கேட்டு விட்டான் விபா.

“நீ ஏதாவது என் கிட்ட சொல்லனுமா வேணு?” அவனையே திருப்பி கேள்வி கேட்டாள் அவள்.

“உன் கிட்ட சொல்லறதுக்கு எனக்கு ஒன்னே ஒன்னு தான் இருக்கு.” அவளது மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டியவன்,

“நான் உன்னை உயிரா காதலிக்கிறேன் தானு. அன்ட் ஐ மிஸ்ட் யூ சோ சோ சோ மச்” என நெற்றியில் முத்தமிட்டான்.

மெல்ல விலகி கொண்டவள்,

“நாம ஏதாச்சும் படம் பார்க்கலாமா ?”

“சரி சொல்லு, என்ன படம் பார்க்கலாம்”

“இதயத்தை திருடாதே வச்சிருக்கியா வேணு”

மெல்ல சிரித்தவன்,

“அவரு மகனுங்க நடிச்ச படங்களே வந்துருச்சு. இப்ப அந்த படம் கேட்கறீயே தானு”

“எனக்கு அந்தப் படம் ரொம்ப பிடிக்கும்.”

“சரி இரு, பழைய கலேக்ஷன்ல இருக்கும் தேடி எடுத்துட்டு வரேன். பார்க்கலாம்”

அவன் டிவிடியுடன் திரும்பி வரும் போது, பாப்கார்னுடன் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் தானு. படத்தை ஓட விட்டவன் அவளை தன் கைவளைவுக்குள் வைத்துக் கொண்டே படத்தைப் பார்த்தான். படம் முடியும் வரை இருவரும் அமைதியாகவே இருந்தார்கள். பின் தானு உள்ளே செல்ல எழுந்தாள். கலங்கிய அவள் கண்களைப் பார்த்த விபா, அவளது கையைப் பிடித்து இழுத்தான். தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள் தானு. அவள் முகத்தை தன் நெஞ்சில் அழுத்தியவன், தலையை கோதிவிட்டான்.

“இப்ப என்ன விஷயம்னு என் கிட்ட சொல்ல போறியா இல்லையா?” குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

அவன் அணைப்பில் இருந்து திமிறியவள்,

“ஒன்னும் இல்லைன்னு சொன்னா உனக்கு புரியாது? நான் ரூமுக்கு போறேன். பின்னாடியே வந்து டிஸ்டர்ப் பண்ணாதே” என வெடித்தவள் விடு விடுவென ரூமிற்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

என்ன செய்வது என புரியாமல் அமர்ந்திருந்தான் விபா. பழகிய இத்தனை நாட்களில் அவள் இப்படி நடந்து கொண்டதே இல்லை. மாதந்திர பிரச்சனையோ என் நினைக்கவும் வாய்ப்பில்லையே. அதற்கு இன்னும் நாள் இருந்தது. அந்த மாதிரி நேரங்களில், அவனிடம் எரிந்து விழுவாள் தான். சாக்லேட் வாங்கி கொடுத்து தான் தாஜா செய்வான் விபா. இந்த அழுகை , ஆத்திரம் எல்லாம் புதுமையாக இருந்தது. சரி விட்டு பிடிப்போம் என படுக்க சென்றான். அவள் சாப்பிடாமல் அவனுக்கும் சாப்பிட பிடிக்கவில்லை.

தூக்கம் வராமல் ஒரு புத்தகத்தை எடுத்து அமர்ந்தவன் கதவு தட்டி திறக்கப் படும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தான். தானுதான் கையில் பால் கிளாசுடன் வந்து கொண்டிருந்தாள்.

“ஒன்னும் சாப்பிடலையாமே? இந்தா பாலை குடி” என நீட்டினாள்.

“நீ சாப்பிட்டியா?”

“ஹ்ம்ம்”

கையில் கிளாசை வாங்கியவன்,

“நீ கொஞ்சம் குடிக்கிறீயா தானும்மா?”

“வேணா. எனக்கு பால் பிடிக்காது”

ஒரே மடக்கில் குடித்து முடித்தவன் கிளாசை மேசையில் வைத்தான். கலைந்த ஓவியம் போல் களைப்பாக தெரிந்த தானுவை நெருங்கி நின்றான்.

“ஆர் யூ ஆல்ரைட் டியர்?”

தலையை மட்டும் ஆட்டினாள். பின் அவனை நெருங்கி அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டாள். அவளை கட்டிக் கொண்டு நின்றவன், அவள் தலை மேல் கன்னத்தை வைத்துக் கொண்டான்.

திடீரேன தள்ளாடியவன் அவள் கையை இருக்கி பிடித்துக் கொண்டான்.

“தானு!!!!! சொல்லுடி, பாலுல என்ன கலந்த?”

மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்து புன்னகைத்தவள், மூன்று விரல்களைக் காட்டி,

“தூக்க மாத்திரை”

“ஏன்டி, ஏன் இப்படி செஞ்ச?” பாத்ரூமுக்கு செல்ல முயன்றவனை இருக்கிக் கட்டிக் கொண்டாள் தானு.

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறு வேணு. தூக்கம் சொக்கிரும்”

“தானு, தானு, ஏன்மா?” இருக்கி கொண்டான் அவளை.

“என்னை விட்டுட்டுப் போகாதே தானு”

“கரேக்டா கண்டு பிடிச்சிட்டியே. நீ தூங்கி காலை பத்து மணிக்கு எழுந்திருக்கிறதுகுள்ள நான் உன்னை விட்டு தூரமா போயிருப்பேன் வேணு. என்னை நீ எப்படியும் தடுப்பேன்னு தெரியும். அதுக்கு தான் இந்த மூனு மாத்திரை.”

“வேண்டாம் தானும்மா. என்னை விட்டு போகாதே. என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஏதா இருந்தாலும் பேசிக்கலாம். தானு!!!!” குரல் குழறியது.

தடுமாறியவனை மெல்ல நகர்த்தி கட்டிலில் தள்ளினாள் தானு.

தானு தானு என அரற்றி கொண்டே இருந்தான் விபா. அவனுக்குப் போர்த்திவிட்டவள், அவன் காதருகில்,

“எப்படி வேணு உன்னால இப்படி நடந்துக்க முடிஞ்சது? உன்னை நான் எவ்வளவு நம்பினேன். என் உயிரே நீ தான்னு நினைச்சேனே. இப்ப கூட என் கிட்ட உண்மைய சொல்லனும்னு தோணல இல்லை?” தேம்பிக் கொண்டே பேசினாள்.

“நான் போறேன் வேணு. அப்புறம் ரொம்ப நாளா சொல்லு சொல்லுன்னு கேட்டியே, இப்ப சொல்லுறேன். ஐ லவ் யூ வேணு!!!! ஐ லவ் யூ சோ மச். பாய் வேணு”

தூக்கத்திலும் அவன் கை உயர்ந்து அவளது கையைப் பற்றியது. அழுகையோடு புன்னகைத்தவள், அவன் கையை விடுவித்துக் கொண்டு அழுதபடியே வெளியே ஓடினாள். விடிகாலை ஐந்து மணிக்கு சிரமப்பட்டு கண்களைத் திறந்தவன், பட்டேன எழுந்து உட்கார்ந்தான். மூன்று மாத்திரை கொடுத்தும், அவள் மேல் உள்ள காதலாலும் தன் மன உறுதியாலும் எழுந்து அமர்ந்திருந்தான் விபா. தடுமாறியபடி வீடு முழுக்க தேடியவன், அவள் எங்கும் இல்லாததால் பாரமாய் அழுத்திய தலையை தாங்கியவாறு,

“தானும்மா!!!!!!!!!!!!!!!!!!” என கதறினான்.

அவன் கத்திய சத்தம் அந்த அமைதியான நேரத்தில் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பட்டு எதிரொலித்தது.

 

“என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவு தானையா சாமி
ஒன்றை உந்தன் மனம் கெட்டது
அந்த ஒன்றும் வேறு இடம் போனது
கையில் வரும் எனப்பார்த்தது
இன்று கை நழுவி ஏன் போனது”