id-8

id-8

18

காதலும் யுத்தமும்

வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த காரில் விந்தியாவும் சந்திரகாந்தும் மும்முரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கும்மா” என்றார் சந்திரகாந்த்.

இல்ல மாமா… நீங்க சொல்றது சரியா வராது. அதோட நம்பிக்கை வேற… பிராக்டிக்கல் வேற” என்றாள்.

நோ ஆர்க்யுமென்ட்ஸ்… நீதான் இனிமே ஹோட்டல் எம். டி” என்றார்.

இல்ல மாமா… ஆதித்தியா நிர்வகிப்பதுதான் சரியா இருக்கும்” என்றதும் சந்திரகாந்த் லேசாகப் புன்னகை புரிந்தார்.

ஆதித்தியாவிற்கு ஹோட்டல் பிஸ்னஸில் துளி கூட இன்ட்ரஸ்ட் இல்லை… ஹி ஹேஸ் சம் அதர் ஐடியா. அது மட்டும் கரெக்டா வொர்க் அவுட் ஆச்சினா அவன் வெற்றி வேற லெவலில் இருக்கும்” என்று சந்திரகாந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போது கார் ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னிலையில் நின்றது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த பெயர் பலகையில் திருமூர்த்திப் பி. ஏ. பி. எல்என்றும், சமுத்திரன் எம். ஏ. பி. எல் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.

விந்தியாவும் சந்திரகாந்தும் உள்ளே நுழைய திருமூர்த்தி சந்திரகாந்த்தை கட்டியணைத்துக் கொண்டார். திருமூர்த்தி விந்தியாவையும் நலம் விசாரித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் சுபா அவள் செய்யும் வேலையைப் பாதியில் நிறுத்தியபடி வந்து சந்திரகாந்த்தையும்விந்தியாவையும் பற்றோடு விசாரித்தாள்.

எங்க என் பேரப்பிள்ளைங்ககூப்பிடு சுபா” என்றார் சந்திரகாந்த்.

இதோ அங்கிள்… கூப்பிடறேன் “ என்று சொல்லி, “சுபாஷ்… சமுத்திரா…” என்று உரக்கக் கத்தினாள்.

அவர்கள் இருவரும் மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தனர். அவர்களின் முகச்சாயலே அவர்களை இரட்டை குழந்தைகளென தெளிவாய் காண்பித்தது. விந்தியா அவர்கள் இருவரையும் ஆர்வமாய் கன்னங்களைக் கிள்ளி கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அண்ணிக்கு குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம் போல… அப்போ நீங்களூம் சீக்கிரம் ஒண்ணைப் பெத்துக்கோங்க” என்றாள்.

மழலைகளை விரும்பாதவங்க யாராவது இருக்க முடியுமா?” என்றாள் விந்தியா.

அந்த நேரத்தில் அந்த இரு வாலுகளுக்கும் சந்திரகாந்த் வாங்கி வந்த சாக்லேட்பிஸ்கேட் அனைத்தையும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு ஓடி விட விந்தியா ஸோ க்யூட்என்றாள்.

கல்யாணத்தின் போதே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்… ஆனா டைமே கிடைக்கல” என்று சுபா விந்தியாவிடம் சொல்ல,

இப்பதான் டைம் இருக்கே… கூட்டிட்டு போய் ஆத்தீர பேசு” என்றார் சந்திரகாந்த்.

சுபா அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கே இருந்த பெரிய பலகை ஊஞ்சலில் அமர்ந்தபடி நிறைய கதைகள் பேசிக்கொண்டிருந்தனர்.

பேசி கொண்டிருந்தனர் என்று சொல்ல முடியாது… சுபா ஓயாமல் பேச விந்தியா அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். சந்திரகாந்த்திருமூர்த்தியின் நட்பு பற்றியும் சமுத்திரன்ஆதியின் இன்று வரையிலான நட்பு பற்றியும் விளக்கமாய் சுபா சொல்லிக் கொண்டிருந்தாள்.

என்ன அண்ணி… நான் பேசி பேசி உங்கள போரடிக்கிறேனோ?”

இல்லவே இல்ல… நீ பேசிற விதத்தைப் பார்க்க அப்படியே என் தங்கை வனிதா மாதிரியே இருக்கு” என்றாள் விந்தியா.

எனக்கு அந்தக் கொடுப்பனை இல்ல. நான் ஒரே பொண்ணு… என்னோட வீட்டுகாருக்கும் கூடப் பிறந்தவங்கன்னு யாரும் இல்லை.” என்றாள் சுபா லேசான வருத்தத்துடன்.

நீயும் இனிமே என்னோட சிஸ்டர்தான்… சரி… உங்க அம்மா வீட்டில இல்லையா?”

அவங்க கோவிலுக்குப் போயிருக்காங்க… கடவுளே எழுந்து வெளியே போனு சொல்ற வரைக்கும் அவங்க வரமாட்டாங்கஎன்றாள்.

சரி சுபா… நீ என்ன பண்ணிட்டிருக்க?”

இந்த வாலுங்களை மேய்க்கிறேனே… அதுதான் என்னோட பெரிய வேலை. எங்க அப்பா என்னைப் பி. ஏ. பி. எல் படிக்க வைச்சிருக்காரு. பட் நோ யூஸ்… படிச்சதும் கல்யாணம்… அப்புறம் குழந்தைங்க… பிராக்டீஸ் பண்ண நேரம் கிடைக்கவே இல்லைஎன்றாள்.

விந்தியா மெலிதான சிரிப்போடு சொன்னாள்.

எல்லா வேலைகளுக்கும் பெண்களுக்கு நேரமிருக்கும்… ஆனால் அவங்களுக்காக என்று கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியாது. உனக்கான நேரத்தை ஒதுக்கினாத்தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் சுபா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மாடியின் அறை கதவை திறந்து கொண்டு வெள்ளை உடையில் சமுத்திரன் வந்தான்.

அவரு கோர்ட்டுக்கு கிளம்பிட்டாரு” என்று சுபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சமுத்திரன் அவர்களை நோக்கி நடந்து வந்தான்.

சுபாவிடம் கண் ஜாடையிலேயே யாரென விந்தியாவைப் பார்த்து கேட்டான்.

ஆதி அண்ணனோட வைஃப்” என்றாள் சுபா.

என் ஹஸ்பெண்ட். சில காரணங்களால் கல்யாணத்துக்கு வர முடியாமல் போயிடுச்சு… அதனால்தான் உங்களை அடையாளம் தெரியல அண்ணி” என்று விந்தியாவைப் பார்த்து உரைத்தாள்.

விந்தியா இயல்பான புன்னகையோடு சமுத்திரனை பார்த்தாள்.

ஹெலோ விந்தியா! பார்த்ததில்லை ஆனா உங்கள பத்தி அப்பா நிறையச் சொல்லியிருக்காரு. ஐம் சமுத்திரன்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

மாமா உங்கள பத்தியும் நிறையச் சொல்லியிருக்காரு சமுத்திரன்” என்றாள் விந்தியா.

சமுத்திரன் சுபாவை பார்த்து காபி கொடுத்தியா?” என்று கேட்டதும், சுபா முகபாவத்திலேயே இல்லை என்பது போல் தெரிவித்தாள்.

வாய் ஒயாம பேசு… ஆனா மத்த எல்லாத்தையும் மறந்துடு… போங்க மேடம்… பேசுறதை நிறுத்திட்டு காபி எடுத்துட்டு வாங்க”என்றான்.

விந்தியா முந்திக் கொண்டு, இல்ல வேண்டாம்மா” என்றாள்.

நீ போய் எனக்கு எடுத்துட்டு வா” என்று சுபாவிடம் அதிகாரமாய்ச் சொன்னான்.

சுபா படியிறங்கி சென்று விட சமுத்திரன் விந்தியாவைப் பார்த்தபடி நிற்க, அவள் கொஞ்சம் இறுக்கமாக நின்று கொண்டிருந்தாள். அங்கே நிலவிய மெளனத்தைச் சமுத்திரன் கலைத்தான்.

ஆதியோட கேரக்டர் பத்தி தெரிந்தும் நீங்க அவனைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களே… பெரிய விஷயம்” என்றான். அவன் சொல்வதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் விந்தியா அமைதியாக நின்றாள்.

ஆனா பணமும் சொத்தும் ஏராளமாக இருந்தா குணத்தைப் பத்தி கவலை இல்லை… என்ன சொல்றீங்க விந்தியா?” என்று சமுத்திரன் விந்தியாவை தன் வார்த்தைகளால் தாக்கினான்.

சமுத்திரன் விந்தியாவைக் காயப்படுத்தும் விதமாகவே பேசினான்.

இருப்பினும் விந்தியா சலனமற்று நின்று கொண்டிருந்தாள். அவளின் மன ஒட்டத்தை அறிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல. சமுத்திரன் அவளின் அமைதியை அவனுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விந்தியாவின் மீது வார்த்தைகளால் தாக்கிக்கொண்டிருந்தான்.

அப்பா சொல்றது போல எம். டி என்ற பொறுப்பு அவ்வளவு சுலபமானதல்ல… சொகுசா வாழற மாதிரியில்லை பொறுப்புகளையும் பதவியையும் சுமப்பது.

ஸ்டேட்டஸ்னு ஒண்ணு இருக்கில்லை… அத பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும். புலி மாதிரி பூனை கோடு போட்டு கொண்டால்அது புலியாகிடுமா என்ன?” என்று சமுத்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுபா காபியுடன் மாடியேறி வந்தாள்.

சுபாவின் முன்னிலையில் அவனின் பேச்சும் பார்வையும் மாறியிருப்பதை விந்தியாவால் உணர முடிந்தது. சிறிது நேரத்தில் சமுத்திரன் பேசுவதை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றதும் விந்தியாவும் சுபாவும் பின்னோடு இறங்கி வந்தனர்.

சந்திரகாந்த் விந்தியாவின் பெயரில் பொறுப்புகளை மாற்றுவதற்கான சில பத்திரங்களைத் தயாரிப்பது பற்றித் திருமூர்த்தியிடம் பேசிக் கொண்டிருக்கசமுத்திரனின் முகம் கடுகடுவென மாறியிருந்தது.

திருமூர்த்தி விந்தியாவைப் பார்த்து, “விந்தியா… உன் மாமனார் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்க நினைக்கிறாருனா… அது உன் மேல இருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்” என்றார்.

ஆனா என் மருமகளுக்கு என் முடிவில விருப்பமில்லையே” என்றார் சந்திரகாந்த்.

விந்தியா சிரித்துக் கொண்டே, இல்ல மாமா… நீங்க சொல்வதைப் போல நான் ஹோட்டல் பொறுப்புகளைக் கவனிச்சுக்கிறேன்… ஆனா எம். டி போஸ்ட்டில் இல்ல. கொஞ்ச நாள் எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டு நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக்கிட்ட பிறகு” என்று விந்தியா சமுத்திரனை ஏளனமாய்ப் பார்த்தபடி சொன்னாள்.

ஆமாம் மாமா. ஆனா என்னைச் சம்மதிக்க வைத்த கிரெடிட் முழுக்க மிஸ்டர். சமுத்திரனைதான் சேரும்… என்னோட கிளாஸ்… ஸ்டேட்டஸ்… எல்லாவற்றையும் தெளிவா சொல்லி புரிய வைத்தார்” என்று சொல்ல சமுத்திரன் அவளின் செயலால் கொஞ்சம் திகைத்து நின்றான்.

சந்திரகாந்த் சமுத்திரனை வெகுவாகப் பாராட்டிவிட்டு விந்தியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அங்கே சமுத்திரன் பேசியதை பற்றி விந்தியா யோசிக்கும் போது அவன் மீது கோபத்தைவிடக் குழப்பமே அதிகமானது.

ஆனால் விந்தியாவைச் சந்தித்த பின் சமுத்திரன் தெளிவாகவே இருந்தான். அவன் விந்தியாவிற்கும் ஆதித்தியாவிற்கும் இடையிலான உறவை காதலாக மாற்றுவதா அல்லது யுத்தமாக மாற்றுவதா என்று.

19

பனிப்போர்

விந்தியா அறையில் அமர்ந்து கொண்டு சில பைஃல்களைப் புரட்டியபடி இருந்தாள். ஆதித்தியா அறைக்குள் கோபமாக நுழைந்து அவன் விருப்பம் போல் ஏதேதோ புலம்ப, அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் வேலையைப் பார்த்தபடியே,

என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று கேட்டாள்.

நாளைக்கு நான் உன்னை அழைச்சுகிட்டு உங்க அத்தை வீட்டுக்கு விருந்துக்கு போகணும்னு மிஸ்டர். சந்திரகாந்த் ஆர்டர் பண்றாரு. அது என்ன? என்னைக் கேட்காமலே இவர் விருப்பம் போல எனக்குக் கமிட்மண்ட் பிஃக்ஸ் பண்றாரு… என்னால வரமுடியாது” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னான் ஆதி.

விந்தியா அவனின் கோபத்தைப் பொருட்படுத்தாமல், இட்ஸ் ஓகே… நீங்க வரலைன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை… நான் மட்டும் போயிட்டு வர்றேன்” என்று பைஃல்களை புரட்டியபடியே பதில் சொன்னாள்.

அவள் இப்படிச் சொன்னதும் ஆதி அப்படியே திகைத்து போய் நின்றான். அவள் அத்தனை சுலபமாகச் சொன்னது ஆதித்தியாவிற்கு உறுத்தலாக இருந்தது.

சோ… நான் வராததுனால உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை… அப்படித்தானே

எஸ்” என்று இம்முறையும் ரொம்பவும் இயல்பாக பதில் சொன்னாள்.

ஆதித்தியா கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்துவிட்டு, அப்போ நான் உனக்குப் பிரச்சனை தரவாச்சும் வருவேன்… ஐம் கம்மிங் பார் யூ டார்லிங்” என்றதும் அத்தனை நேரம் வேலையில் பிஸியாக இருந்தவள், அவனின் வார்த்தைகளைக் கேட்டு நிமிர்ந்தாள்.

உடனே ஆதித்தியா அவளை நோக்கி கண்ணடித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான். அவனின் குறும்புத்தனமான பார்வையையும் முரண்பாடான எண்ணங்களையும் நினைத்து,

வர முடியாதுன்னு சொன்னான்… பரவாயில்லைனு சொன்னாஐம் கம்மிங் பார் யூனு சொல்லிட்டுப் போறான். வாட் கைன்ட் ஆஃப் எ கேரக்டர் ஹி இஸ்!!” என்று தனக்குத் தானே குழம்பினாள். மொத்தத்தில் அவனின் செயலால் அவள் வேலைகள் ஸ்தம்பித்தன.

அடுத்த நாள் காலை விருந்துக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள் விந்தியா. ஒரு அழகானமென்மையான தங்க நிற பார்டர் கொண்ட சிவப்பு நிற புடவையை அணிந்து கொண்டு அவள் கண்ணாடியை பார்த்தபடி நிற்க ஆதி அவளை ரசித்தபடி பின்னோடு வந்து நின்றான்.

ரெடியா பேபி… போவோமா?”என்று ஆதி சொல்ல விந்தியா அவனைத் திரும்பி பார்த்து முறைத்தாள்.

“சாரி அழகா இருக்கு… ஆனா செளகரியமா இருக்குமா?”

ஸ்டாப் காலிங் மீ பேபி… எனக்கு எரிச்சலா இருக்கு” என்றாள்.

ஆதித்தியா தோள்களைக் குலுக்கிவிட்டு சிரித்துக்கொண்டே பதில் எதுவும் பேசாமல் வெளியே புறப்பட்டான். விந்தியா சந்திரகாந்த்திடம் சொல்லி விட்டு வெளியே வந்தவள் அதிர்ச்சியடைந்தாள்.

ஆதித்தியா பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.

கார்தான் இத்தனை இருக்கே… பைக் எதுக்கு?” என்றாள் விந்தியா.

என்கிட்டே பைக் இருக்கும் போது… கார் எதுக்கு?”என்றான் விதண்டாவாதமாக.

நான் பைக்கில வரமாட்டேன்

அப்போ சரி… விந்தியாவுக்கு வர விருப்பமில்லைனு சொல்லிடட்டுமா உங்க அத்தைகிட்ட

திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்!” என்றாள் விந்தியா எரிச்சலோடு.

நோ… இட் வில் பி எக்ஸைட்டிங் “ என்றான் பைக்கில் அமர்ந்து சிரித்தபடி.

விந்தியாவின் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதித்தியா நேர்மாறான பதில் வைத்திருந்தான். அவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாமல் இறுதியில் சம்மதித்தாள்.

அந்தப் பைக்கின் பின்புற இருக்கை கொஞ்சம் உயரமாய் இருக்க விந்தியா புரியாமல்,

இந்தப் பைக்கில எப்படி உட்காருவது?” என்று கேட்டாள்.

பைக்கில உட்காருவதற்கு கூடவா உனக்குக் கிளாஸ் எடுக்கணும்?”

விந்தியா சிரமப்பட்டே அந்த பைக்கில் ஏறி அமர்ந்தாள். அவன் செளகரியமா இருக்குமா என்று கேட்டதற்கான அர்த்தம் அப்பொழுதுதான் புரிந்தது.

இருவரும் சிவாவின் வீட்டு வாசலில் நின்றனர்.

எப்படி இருந்தது டார்லிங்… பைக் ரைட்?”

ப்ளீஸ் ஆதி… உள்ளே வந்து டார்லிங்… பேபினு கூப்பிடாதீங்க” என்று விந்தியா கெஞ்சினாள்.

ஆதித்தியா சிரித்தபடி ஓகே டார்லிங்” என்றான்.

விந்தியா தலையில் அடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள்.

ஆதித்தியா உள்ளே நுழைந்ததும் சரோஜாவும்தனசேகரனும் அவனை மரியாதையோடு வரவேற்றனர். வருண்நந்தினியோடு விருந்துக்கு மாதவியும் வந்திருந்தாள்.

 மகளைப் பார்த்தவுடன் பூரிப்புடன் கட்டியணைத்துக் கொள்ளவருண் ஆதித்தியாவை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்து வந்தான். எல்லோருமே ஆதித்தியாவை பெரும் மதிப்போடு வரவேற்கசிவா மட்டும் அறையிலிருந்து வெளியே வராமல் உள்ளேயே இருந்தான்.

ஆதித்தியா பெயருக்காக எல்லோரிடமும் சிரித்தாலும்சிந்துவைப் பார்த்ததும் ஆனந்தமாய்த் தூக்கி வாரிக் கொஞ்ச ஆரம்பித்தான். சிந்துவிடம் சாக்லேட்டை ஒளித்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன் பின்னர் அவளைத் தவிக்க வைத்து நீட்டினான்.

திஸ் இஸ் பாஃர் மை குட்டி டார்லிங்” என்று ஆதி சிந்துவிடம் சொல்ல விந்தியா அவளை அறியாமல் திரும்பி பார்த்தாள்.

ஆதித்தியாவும் அதை எதிர்பார்த்தவன் போல அவளை நோக்கி குறும்போடு கண்ணடிக்க விந்தியா உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஆதியின் மீது அவளுக்கு ஏற்பட்ட ஈர்ப்பை மறைக்க முயற்சி செய்துசில நேரங்களில் அவளை அறியாமல் அவனிடம் மாட்டிக் கொள்கிறாள்.

ஆதித்தியா சிந்துவோடு விளையாடிக் கொண்டிருக்க விந்தியாதனசேகரனுடன் அமர்ந்து டி. வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது” என்றார் தனசேகரன் டி. வி பார்த்தபடி!

யாரை சொல்றீங்க மாமா?”

அவன்தான் சென்டிரல் மினிஸ்டர் வித்தியாதரன். பல கோடிக்கணக்கான சொத்துக்களை மடக்கிப் போட்டுக் கொண்டு சாமியார் மாதிரி வேஷம் போடுறான்

விந்தியா சிரித்துக் கொண்டே, கோடிக்கணக்கான பேர் செய்யும் தப்பிற்கு நாம ஆயிரம் பேரை குறைச் சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கு?” என்றாள்.

நீ சொல்வது சரிதான் விந்தியா… ஓட்டு போடுகிறவர்கள் சரியா இல்லாததுதான் இவன மாதிரி ஆட்கள் உருவாவதற்கான காரணம்” என்று தனசேகரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரோஜா அருகில் வந்து நின்றாள்.

வீட்டில விருந்துக்கு தயார் பண்ண வேண்டாமா? நீங்க பாட்டுக்கு ஊர் கதை பேசிட்டிருக்கீங்க… கடைக்குக் கிளம்புங்கஎன்றாள் சரோஜா.

இப்ப எதுக்கு மாமாவை தொந்தரவு பண்றீங்க? பனைமரம் மாதிரி ஒரு பிள்ளையை வளர்த்து வைச்சிருக்கீங்களே அவனை அனுப்புங்க அத்தை” என்று விந்தியா வேண்டுமென்றே சிவாவின் காதுகளில் விழும்படி உரக்கச் சொன்னாள். சிவா காதுகளில் விழுந்தாலும் அவன் அமைதியாகவே இருந்தான்.

அவனுக்கு ஏதோ வேலை இருக்காம்மா” என்றாள் சரோஜா.

அவருக்குத்தான் வேலை இருக்கு… நாங்க வெட்டியா இருக்கோம்மா என்ன… ஏன் மாமா?” என்று விந்தியா தன் மாமா தனசேகரனை தூண்டிவிட்டாள்.

அதானே…” என்று அவளிற்கு ஒத்து ஊதினார் தனசேகரன்.

சரோஜா என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க சிவா கோபமடைந்தவனாக வெளியே வந்தான்.

என்னடி பிரச்சனை உனக்கு… என்னை வம்பு இழுக்கத்தான் வந்தியாக்கும்” என்று அவளிடம் கோபமாக பேச அத்தனை நேரம் அங்கே நடந்தவற்றைக் கவனிக்காமல் சிந்துவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆதித்தியா கணநேரத்தில் சிவாவை திரும்பி பார்த்தான். விந்தியாவிடம் அவன் கோபமாகப் பேசிய விதம் அவனுக்குச் சுருக்கென்று வலித்தது.

ஆதித்தியாவிடம் ஏற்கனவே விந்தியா டி’ போட்டு அழைக்கக் கூடாது எனக் கண்டித்திருக்கஅதைப் போல் சிவா பேசும் போது இயல்பாக எடுத்துக் கொண்டு சிரித்தது, அவனை மேலும் சிவாவின் மீதான வெறுப்பைத் தூண்டியது.

விந்தியாவும் சிவாவும் இதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கசரோஜா மட்டும் ஆதித்தியாவின் பார்வையைக் கவனித்து புரிந்தும் கொண்டாள்.

சிவாவை தனியாக அழைத்துக் கண்டித்தாள். இருப்பினும் இருபது வருட நட்பினை நேற்று வந்தவனுக்காக மாற்ற வேண்டும் என நினைப்பது அவனுக்கு எரிச்சலை மூட்டியது.

விருந்து முடியும் வரை ஆதித்தியா கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தான். அதன் காரணத்தை விந்தியா புரிந்து கொள்ளாத போதும் சிவா அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்டான். விந்தியாவின் மீதிருக்கும் உரிமையை நிலைநாட்ட சிவாவுக்கும் ஆதிக்கும் இடையில் ஒரு பனிப்போர் தொடங்கியது.

விருந்து முடிந்து ஆதியும் விந்தியாவும் வீட்டு வாசலை அடைந்தபோது, ஆதி தன் மனதை துளைத்த அந்தக் கேள்வியை விந்தியாவிடம் கேட்டான். 

error: Content is protected !!