Kanavu 15

கனவு – 15

ஆஷ்ரிதா கூறுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அனேகன் “அம்ரிதா கனவுல சொன்ன அர்ஜுன் யாரு யாரு –னு நீ யோசிச்சிட்டே இருந்ததால உன் கனவுலயும் அர்ஜுன் வந்துட்டான்… அப்படித்தான??” என கேட்டான். இது காரணம் இல்லை என்று அறிந்திருந்த போதிலும் ஆஷ்ரிதா அவள் மனதில் இதை பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்துக்கொள்ள அவ்வாறு கேட்டிருந்தான்.

கொஞ்சம் தயங்கியவள் “நோ… எனக்கு அப்படி தோணல… எனக்கு என்னவோ உணர்த்துறதுக்குதான் அந்த கனவு வந்திருக்குனு நான் நினைக்கிறேன்…” – ஆஷ்ரிதா.

“அத எப்படி இவ்வளவு க்ளியரா சொல்லுற??” – அனேகன்.

“அவன் ஏதோ என்கிட்ட சொன்னான்… ஸ்லோகன் மாதிரி…எனக்கு அது புரியல… ஆனா அதுல டீப்பா ஏதோ மீனிங் இருக்குனு மட்டும் எனக்கு புரியுது…” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… யூ ஆர் ரைட்… சரி சொல்லு… அவன் என்ன சொன்னான்??” – அனேகன்.

“அதுதான் நியாபகத்துல இல்லனு சொன்னனே!!” – ஆஷ்ரிதா.

“இருக்கும்… இந்த கனவ நீ இவ்வளவு தூரம் சரியா கிரகிச்சிருக்கேன்னா உன் ஆழ்மனசுல அது நிச்சயமா பதிஞ்சிருக்கும்… கொஞ்சம் ட்ரை பண்ணு…” – அனேகன்.

“அது… ஏதோ ஒத்தையில போனேன்… ஒத்துமையா இருந்தேன்… தெரியல… இதுக்கு மேல எதுவும் க்ளியரா நியாபம் வரல…” – ஆஷ்ரிதா.

“சரி… இன்னைக்கு ஒரு நாள் டைம் எடுத்துக்க… நல்லா யோசிச்சு பாரு… அப்படியும் உனக்கு நியாபகம் வரலனா, வி கேன் கோ வித் ஹிப்னாட்டிசம்… உனக்கு ஓகே தான??” – அனேகன்.

“ஹிப்னாட்டிசமா??” என்று முதலில் பயந்தவள் பிறகு தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

பின்னர், தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியில் ஆஷ்ரிதாவும், ஆஷ்ரிதா அனைத்தையும் புரிந்துக்கொண்டு தனக்கு ஒத்துழைப்பு தரத் தொடங்கிவிட்டாள் என்ற திருப்தியில் அனேகனும் அங்கிருந்து கிளம்பி மீண்டும் பூங்காவை அடைந்தனர்.

அனேகன் கூறியது போலவே அம்ரிதா அவள் இருந்த இடத்தை விட்டு நகறாமல், எந்த சங்கடங்களுக்கும் உள்ளாகாமல் அங்கேயே அமைதியாய் அமர்ந்திருந்தாள். அதை பார்த்த பின்பு பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா, அனேகனை திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையை சிந்தியவாறு “தேங்க்ஸ்” என்றாள்.

“இட்ஸ் மை டியூட்டி… நீ அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ… நாம நாளைக்கு மீட் பண்ணலாம்…” என்று அங்கிருந்து விடைப்பெற்றான் அவன்.

அவன் செல்லும் வரை அவனையே வெறித்துக்கொண்டிருந்தவள் அம்ரிதாவை நெருங்கும் வேளையில் தான் யோசித்தாள் “அய்யோ… இப்ப அவளுக்கு அஞ்சு வயசு –னு சொன்னானே… நான் போய் என்ன சொல்லி கூப்பிடுறது? இவன் வேற ஒன்னும் சொல்லாமலே கிளம்பிட்டான்??” என்று யோசித்தவள் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அம்ரிதாவின் அருகே சென்றாள்.

அதுவரை சிலையாய் ஏதோ யோசனையில் இருப்பது போல அமர்ந்திருந்த அம்ரிதா, ஆஷ்ரிதா அருகே வந்தவுடன் திடுக்கிட்டவள் “என்ன டி வேலை முடிஞ்சிதா?” என கேட்டாள்.

“ஹப்பா! என உள்ளுக்குள் குளிர்ந்துக்கொண்ட ஆஷ்ரிதா, “ஆமா டி… வா வீட்டுக்கு போகலாம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இருவரும் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்த பின்னர் “போகலாமா டி?” என ஆஷ்ரிதா கேட்க, “ம்ம்ம்” என்றாள் அம்ரிதா.

வீட்டிற்கு பயணமாகும் வேளையில் முதலில் அமைதியாய் வந்துக்கொண்டிருந்த அம்ரிதா திடீரென “ஏய் அச்சு… யார டி பார்த்துட்டு வந்த? எனக்கு வீட்டுல இருந்து ஸ்கூட்டில கிளம்பினதுதான் நியாபகத்துல இருக்கு… அடுத்து நீ கிளம்பலாம்னு கூப்பிட்டது நியாபகத்துல இருக்கு… இடையில் என்ன ஆச்சு? அங்கேயும் வந்து தூங்கிட்டேனா என்ன?” என்று கேட்டாள்.

என்ன சொல்லலாம் என யோசித்த ஆஷ்ரிதா “நீ தான டி டயர்டா இருக்கு, நான் போய் அங்கே உட்கார்ந்திருக்கேன், நீ வேலைய முடிச்சிட்டு வா –னு சொன்ன??” என்றாள்.

“அப்படியா?” – யோசித்தாள் அம்ரிதா.

“ஆமா டி… நான் கூட இதுக்குதானே வீட்டுலயே இருக்க சொன்னேன் –னு கேட்டு உன்ன திட்டுனனே…” – அம்ரிதாவை நம்பவைக்க மேலும் பொய்களை அடுக்கினாள் ஆஷ்ரிதா.

“தெரியல டி” – சோர்வான குரலோடு கூறினாள் அம்ரிதா.

“சரி பரவாயில்ல விடு…” – தேற்றலாய் பேசினாள் ஆஷ்ரிதா.

இவ்வாறே இருவரும் பயணப்பட்டுக் கொண்டிருக்க, அம்ரிதாவை சமாதானப்படுத்தும் பொருட்டு அவளுக்கு விருப்பமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் –ஐ வாங்கி தர ஒரு ஹோட்டலுக்கு வண்டியை விட்டாள் ஆஷ்ரிதா.

“என்ன டி இங்க நிறுத்துற?” – அம்ரிதா.

“வா ஏதாவது சாப்டிட்டு போகலாம்” – ஆஷ்ரிதா.

“வேணாம் டி… வீட்டுக்கே போகலாம்…” – அம்ரிதாவின் ராகத்தில் உடற்சோர்வை விட மனச்சோர்வே அதிகம் தெரிந்தது.

“ஹேய் லூசு… என்ன ஆச்சு இப்ப?? அக்கா கூப்பிடுறேன்ல?? வா…” – அவள் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஆஷ்ரிதா.

பல வண்ண மின்விளக்குகள் சரமாய் தொங்கவிடப்பட்டிருந்த அந்த கண்ணாடி கதவை யூனிஃபார்ம் அணிந்திருந்த காவலாளி ஒருவர் திறந்துவிட, இருவரும் உள்ளே சென்றனர்.

அனைத்து இடங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாற் போன்ற செயற்கை அலங்காரத்தை கொண்ட அந்த உணவு அறையின் ஒரு மேசையில் சகோதரிகள் எதிர் எதிராக அமர, அவர்கள் முன் மெனு கார்டும், பேப்பர் டிஷ்யூஸ் –ம் வைக்கப்பட்டது.

“மேம்… யுவர் ஆர்டர் ப்ளீஸ்…” கேட்டவனை நிமிர்ந்துப்பார்த்த அம்ரிதா,

“டேய்… திரு… தடி மாடே… இங்க என்ன டா பண்ணுற நீ?” – உற்சாக குரலில் கேட்டாள்.

“ம்ம்ம்… பொக்கே ஷாப் வேலைய விட்டுட்டு இங்க ஜாயிண்ட் பண்ணிட்டேன்…” – நக்கல் பாணியில் கூறினான் திரு.

“நல்ல வேளை சொன்ன… இல்லைனா நாங்க மால் –ல போய் உன்ன தேடிருப்போம்…” என கூறிவிட்டு கிளுக்கென சிரித்தாள் அம்ரிதா.

“வாய் –க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… நம்ம பேச்ச அப்பறம் வச்சிக்கலாம்… பேரர் வெயிட் பண்ணுறாரு பாரு… ஆர்டர் கொடு…” என்றவாறு அம்ரிதாவின் அருகே அமர்ந்த திரவியம் ஆஷ்ரிதாவின் கடுமைக்காட்டும் முகத்தை கவனிக்க தவறவில்லை.

“எனக்கு சிக்கன் ஃப்ரைட் ரைஸ்” – அம்ரிதா.

“ஓகே மேம்” – பேரர்.

“மஷ்ரூம் புலவ் ஒன்னு” – திரவியம்.

“ஓகே சார்?? மேம் உங்களுக்கு??” – ஆஷ்ரிதாவிடம் கேட்டார் பேரர்.

அவ்வளவு நேரம் மெனு கார்ட் –ல் கண்களால் கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் “எனக்கு எதும் வேண்டும்” என்றாள்.

“ஹேய்… ஹோட்டல் –க்கு வந்துட்டு வேணாம் –னா என்ன அர்த்தம்? நீ தான கூட்டிட்டு வந்த?” – அம்ரிதா.

“உனக்காக தான் கூட்டிட்டு வந்தேன்… சாப்பிடு நீ… எனக்கு பசி இல்ல…” – ஆஷ்ரிதா.

“விளயாடுறியா அச்சு??” என்று ஆஷ்ரிதாவை மிரட்டிவிட்டு பேரரிடம் “அண்ணா… ஒரு எம்டி பிரியாணி வித் சிக்கன் பட்டர் மசாலா” என்றாள் அம்ரிதா.

“ஏன் உங்க அக்காவுக்கு எம்டி பிரியாணி ஆர்டர் செய்யுற அம்மு? இப்பதான் தெரியுது எதுக்கு அவ மண்டக்குள்ள மூளை இல்லாம எம்டியா இருக்குனு!” – திரவியம்.

“ஹலோ… என்ன நக்கலா? அவ ஃப்ளெஷ் அவ்வளவா எடுத்துக்க மாட்டா… பட்டர் மசாலாவோட க்ரேவி அவளுக்கு இஷ்டம்…” – காட்டமாய் சொன்னாள் அம்ரிதா.

“சரி… சரி… கூல்… அக்காவ சொன்னதும் கோபம் பயங்கறமா வருதே” – திரவியம்.

“இனி பேசி பாரு… நான் பேச மாட்டேன்… என் கை தான் பேசும்…” என்று நானும் ரவுடி தான் ரேஞ்சில் அம்ரிதா பேச, திரவியத்தின் மூக்கு உடைப்பட்டது எண்ணி தன்னை மறந்து சிரித்துவிட்டாள் ஆஷ்ரிதா.

அதை கவனித்த திரவியம் “ஆகா… அக்கா தங்கச்சிக்கு இடையில வீணா தலைய விட்டுட்டேனா?” என ஆஷ்ரிதாவை சமாதானப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே பம்பினான்.

“சரி இருங்க… நான் வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்… ரெண்டும் ஆர்டர் வந்த உடனே சாப்பிட்டுறாதீங்க… எனக்கு வெயிட் பண்ணுங்க…” என்றவள் எழுந்து சென்றாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திரவியம் “என்ன அச்சு… கோபம் கொஞ்சம் கூட குறையல போல?” என்றான்.

“நீ எதுக்கு இங்க வந்த? என்ன ஃபாலோ பண்ணுறியா?” – வெடுக்கென கேட்டாள் ஆஷ்ரிதா.

“இது என்ன டா கூத்தா இருக்கு? ஒரு மனுஷன் சாப்பிட ஹோட்டல் –க்கு வரக்கூடாதா? வந்த இடத்துல உங்கள பார்த்தேன்… அதான் ஜாயிண்ட் பண்ணேன்” – திரவியம்.

“யாரு காதுல பூ சுத்துற? உனக்கு இந்த நேரத்துல மால் –ல வேலை இல்லையா? சாப்பிடறதுக்காக இடையில் பெர்மிஷன் வாங்கி இந்த ஹோட்டல் வர வந்தியா?” – ஆஷ்ரிதா.

“இது பாய்ண்ட்… நான் பெர்மிஷன் போட்டுட்டு தான் வந்தேன்… ஆனா சாப்பிட இல்ல…” – நிறுத்தினான் திரவியம்.

“இரிட்டேட் பண்ணாம டேரக்ட் –ஆ பேசு… அம்மு மூட் அவுட் –ஆ இருந்தா… ஹோட்டல் –க்கு உள்ள வரமாட்டேன்னு சொன்னா… கம்பல் பண்ணி தான் கூட்டிட்டு வந்தேன்… பட் உன்ன பார்த்ததும் அவளாவே காம் ஆகிட்டா… அதான் நான் உன்கிட்ட அமைதியா பேசிட்டு இருக்கேன்…” – ஆஷ்ரிதா.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? நான் உன் ப்ரெண்ட் அச்சு… மறந்துறாத… யாரோ விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசிட்டு இருக்க?” – திரவியம்.

“இப்ப உனக்கு என்ன வேணும்?” – எரிச்சலோடு கேட்டாள் ஆஷ்ரிதா.

“நத்திங் லீவ் இட்… நான் அனேகன் தான் அவனோட அப்பாவ கொலை செஞ்சானு சொன்னப்ப நீ நம்பல… பட் அதுக்கான ப்ரூஃவ் காட்டின நம்புவ தானே?” – திரவியம்.

“என்ன ப்ரூஃவ்?” – ஆஷ்ரிதா.

“சி.சி.டி.வி. கேமரா! அந்த அப்பார்ட்மெண்ட் –ல சி.சி.டி.வி. கேமரா இருக்கு… சரியான ஆள புடிச்சா அந்த ஃபுட்டேஜ் நாம வாங்கிடலாம்…” – திரவியம்.

“இங்க பாரு திரு… டோண்ட் க்ரியேட் அ சீன் ஹியர்… அனேகன் கொலை செஞ்சதாவே இருக்கட்டுமே… அவன பத்தி என்கிட்ட இப்படி தப்பான அபிப்ராயத்த ஏற்படுத்துறதால உனக்கு என்ன கிடைக்க போகுது?” – ஆஷ்ரிதா.

“வாட் ஆர் யூ ஸ்பீக்கின் அச்சு? நிஜமாவே உன் மண்டைக்குள்ள ஒன்னும் இல்லையா?” – திரவியம்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் திரு” – ஆஷ்ரிதா.

“பின்ன என்ன அச்சு? தப்பானவன் கிட்ட நீ மாட்டிட கூடாதுனு தான் இவ்வளவு பேசுறேன் நான்… அது புரியுதா உனக்கு?” – திரவியம்.

“அவன் தப்பானவன் இல்லை… நான் கேரண்டி… போதுமா? இன்னும் என்ன தெரியனும் உனக்கு?” – ஆஷ்ரிதா.

“அச்சு… அவன் தப்பானவன் இல்ல –னு எத வச்சி சொல்லுற?” – திரவியம்.

“அத பத்தி உனக்கு என்ன மேன்? வய் ஆர் யூ இரிட்டேடிங் மீ லைக் திஸ்… கேள்வி மேல கேள்வி கேட்டு ஏன் என்ன டார்ச்சர் பண்ணுற?” – ஆஷ்ரிதா.

“ஓகே ஃபைன் அச்சு… நான் இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… பை…” – விறுட்டென எழுந்தான் திரவியம்.

“எங்கே போற திரு… சாப்டு போ” – ஆஷ்ரிதா.

“பரவாயில்லை… அம்மு வந்து என்ன கேட்டா மட்டும் எதாவது சொல்லி சமாளிச்சிரு… நான் கிளப்புறேன்” என்றவன் ஆஷ்ரிதாவின் பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

அவன் சென்ற அடுத்த கணம் அம்ரிதா அங்கு வந்துவிட, வாசலில் மறைந்த திரவியத்தின் முதுகை கண்ட அம்ரிதா “எங்கே போறான் அவன்?” என்று கேட்டபடி நாற்காலியில் அமர்ந்தாள்.

“சாப்பாடு வேணாமாம்… நீயே போய் கேளு” – ஆஷ்ரிதா.

“என்னது சாப்பாடு வேணாமா? உங்க ரெண்டு பேரையும் இனி ஹோட்டல் –ல சாப்பிடுறதுக்கு கூட்டிட்டு வரக்கூடாது… இனி நான் மட்டும் தனியா வந்துதான் சாப்பிட போறேன் பாருங்க” என்று கூறிவிட்டு வாசலுக்கு ஓடினாள் அம்ரிதா.

அங்கு தனது ஸ்ப்லெண்டர் பைக்கில் சாய்ந்து நின்றபடி சென்றுவரும் வாகனங்களை வெறித்துக்கொண்டிருந்தான் திரவியம்.

அவன் அருகே சென்ற அம்ரிதா “டேய் திரு… என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும்? ஒழுங்கா உள்ள வந்து சாப்பிடு வா” – அம்ரிதா.

“இல்ல நான் வரல அம்மு” – அம்ரிதா.

“கொஞ்சம் நேரம் உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போக முடியுதா டா? எப்ப பாரு டாம் அண்டு ஜெர்ரி மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க…” – அம்ரிதா.

“உன் அக்கா –வ கேளு…” சத்தமாக கூறியவன் ‘சொல்லு பேச்சை கேக்குறதே இல்ல’ வாய்க்குள் முணுமுணுத்தான்.

“அவதான் நீ சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டு போறனு சொல்லி என்ன கூட்டிட்டு வர சொன்னா” – அம்ரிதா.

“அட பாவி… பேசுறதெல்லாம் பேசிட்டு என்ன கோர்த்துவிட்டுட்டாளா?” என்று மனதில் எண்ணியவன் “இன்னொரு நாள் நாம சேர்ந்து சாப்பிடலாம் அம்மு” என்றான்.

அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் மேசையை வந்தடைய, அமர்ந்த இடத்தில் இருந்து வாசல் நோக்கி எட்டிப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

திரவியத்தின் கையை பிடித்து வழுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா. அதனையும் அவன் ஆர்டர் செய்திருந்த மஷ்ரூம் புலாவையும் மாறி மாறி பார்த்தவள் “சாப்பிடுற நேரம் இப்படி பேசிட்டோமே” என தன்னை நொந்துக்கொண்டாள்.

பிறகு எழுந்து வாசலுக்கு சென்றவள் “திரு” என்று அழைக்க, அங்கு வா என்றும் வரமாட்டேன் என்றும் களேபரம் செய்துக்கொண்டிருந்த அம்ரிதாவும் திரவியமும் திரும்பிப்பார்த்தனர்.

“சாரி… வந்து சாப்பிடு” என்றாள் ஆஷ்ரிதா.

“அதான் சொல்லிட்டாள் –ல… வா திரு” என்று அம்ரிதா அழைக்க, சமாதானக் கொடி பறக்கவிடப்பட்ட படி உணவருந்தி முடித்தனர் மூவரும்.

“ஒகே திரு… பாக்கலாம்… உசுரோட தான் இருக்கியானு அப்பப்ப தெரியுறது இல்ல… கன்ஃபார்ம் பண்ண அடிக்கடிமெசேஜ் பண்ணு என்ன…” என்று வாரினாள் அம்ரிதா.

“கொஞ்சம் பிசி –யா இருந்தேன்… இனி ஃப்ரீ தான்… பேசலாம் அம்மு” என்று கூறியவாறு ஆஷ்ரிதாவையும் பார்த்தான் திரவியம்.

‘என்ன டா… இவ்வளவு நாள் அனேகன் பின்னவே ஓடிக்கிட்டு இருந்தேன், இனி ஓட மாட்டேன் –னு சிம்பாலிக்கா சொல்லுறியா? இரு இரு… உனக்கு இருக்கு’ என்று தன் கண்களால் அவனுக்கு பொய் மிரட்டல் கொடுத்தாள் ஆஷ்ரிதா.

பின், மூவரும் அவரவர் வீட்டை நோக்கி பயணிக்க, செல்லும் வழியில் பொன்னம்மாவுக்கு பிடித்த கடையில் அவருக்காக குழாய் புட்டு வாங்கி சென்றனர் இரட்டை சகோதரிகள்.

வீட்டை அடைந்ததும், “பொன்னம்மா… உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்றவாறு அம்மு உள்ளே ஓடிச் செல்ல, ஆஷ்ரிதா இரு சக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஹெல்மட்டை கழற்றியபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

குழாய் புட்டு பார்சலை உணவு மேஜையில் வைத்த அம்ரிதா “பொன்னம்மா… சீக்கிரம் வாங்க… டையனிங் டேபிள் –ல உங்களுக்கு ஒன்னு வச்சிருக்கேன் பாருங்க… நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்…” என கூறிவிட்டு தங்களது அறையினுள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

“ஆஷ்ரிதாவுக்கு மனமும் உடலும் அதீத சோர்வை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட, மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து சோபாவில் பொத்தென்று அமர்ந்து கண்களை மூடியவள் அப்படியே பாதி தூக்கத்தில் மூழ்கியும் போனாள்.

அம்ரிதா உடை மாற்றிவிட்டு வெளியே வந்துவிட, அவளுக்கு வீடே நிசப்தமாய் காட்சியளித்தது. மேஜையில் வைக்கப்பட்டிருந்த பார்சல் அப்படியே இருந்தது. பொன்னம்மா வந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஆஷ்ரிதாவும் உறங்கிப்போயிருந்தாள்.

“தூங்கிட்டாளா இவ?” என்று ஆஷ்ரிதாவின் அருகில் சென்ற அம்ரிதா அவளை தொட்டு உசுப்பினாள்.

“அச்சு… எழுந்து உள்ள போய் படு வா” என்றாள்.

அவள் உசுப்பியதில் எழுந்துக்கொண்ட ஆஷ்ரிதா, தன் உடலை நெளித்து சோம்பல் முறித்துக்கொண்டு, கண்களை கசக்கியபடி அவர்களது அறைக்கு செல்ல யத்தனித்தாள். அப்போது பொன்னம்மாவை அழைத்து வர அவரது அறைக்கு சென்றிருந்த அம்ரிதா, அங்கு ஏற்பட்ட ‘டமார்’ எனும் சத்தத்தில் “அச்சுசுசுசு…..” என்று அலறி கத்திட, தனது தூக்க கலக்கத்தை முழுதாய் துடைத்து எறிந்துவிட்டு அங்கு ஓடி சென்றாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)