KVK-Final

KVK-Final

அவன் சென்றதும் உள்ளே வந்தாள் சுஜா.
“ என்னடி ஆச்சு, சித்து வெளில தான் இருக்காரு. எப்படி யாரும் எதுவும் கேட்காம இருக்காங்க ? சரி அத விடு . இவரு என்ன சொன்னாரு? ? நீ இவரு போட்டோ காட்டவே இல்ல.. ஆனா ஆளு செம்ம ஸ்மார்ட் டீ.. எப்படி தான் வேண்டான்னு சொன்னியோ…ஹ்ம்ம்ம்” அவள் பெருமூச்சு விட,
“ அடியேய் ! அவன் இந்தக் கல்யாணம் நடக்கும்ன்னு என்கிட்ட சவால் விட்டுப் போறான். சித்துவ ஒரு கை பாக்கறேன்னு சொல்லிட்டுப் போறான். நான் சித்து கிட்ட பேசணும். வீட்டு பின்னாடி வழியா சித்துவ வர சொல்லு. “ அவளைத் துரத்தினாள்.
யுவா தன் நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினான். சித்துவிடம் சென்று, “ ஒன்னும் பிரச்சனை இல்லை.. நான் எல்லாம் பேசிட்டேன். உனக்கும் அவளுக்கும் தான் இன்னிக்கு நிச்சயம். இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்கும் அப்டின்னு சொல்லியிருக்கேன். அவ கேட்டா நீயும் அதையே சொல்லு. பாவம். நான் அம்மா கிட்ட பேசிக்கறேன்.” யுவா சொல்ல, பெரிய நிம்மதி அடைந்தான் சித்து.
பின் சுஜா சுந்தருக்கு போன் செய்தாள். சித்து வை பின் பக்கமாக அழைத்து வரச் சொன்னாள். அவனும் சித்துவை அழைத்துக் கொண்டு சென்றான். அதற்குள் யுவா இங்கு மலரிடமும், பார்வதியிடமும் விஷயத்தைச் சொன்னன்.
“ சித்து வும் சக்தியும் விரும்பறாங்க. சோ , இப்போ அவங்களுக்கு நிச்சயம் பண்ணிடுங்க.” இருவரையும் பார்த்துச் சொல்ல,
“ ஓ! இந்தப் பெண் தானா அது, அப்போ நீ லவ் பண்ற பொண்ணு?!” பார்வதி கேட்க,
“ அவ பேர் ஆராதனா! “ மலரைப் பார்த்துக் கொண்டே சொல்ல,
“ உன்னோட பி ஏ வா டா?? ஏன்டா முன்னாடியே சொல்லல, நல்ல வேளை இப்போவாவது சொன்னியே!” மலர் அவனை முறைத்துக் கொண்டே கேட்டார்.
“ ஆமாம்மா அவ தான். நான் நீங்க அவள தான் நிச்சயம் பண்ணப் போறீங்கன்னு நினச்சேன். எங்கயோ சின்ன கன்ஃப்யூஷன், இனிமே ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நான் அவங்க நம்பர் தரேன். அவ அப்பா கிட்ட பேசிடுங்க. இங்க நடந்தது தெரியாம அவங்க நான் சொன்னதை வெச்சு ரெடியா இருப்பாங்க.” சொல்லிவிட்டு, கதிருக்குப் போன் செய்யச் சென்றான்.
ஜானகி எதுவும் புரியாமல் விழிக்க, மலர் எழுந்து சென்று விவரம் சொன்னார்.
“அப்பாடா! இப்போ தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. என் பொண்ணு முன்னாடியே என்கிட்ட சொன்ன, ஆனா அவ

அப்பாவ சமாளிக்க முடியல, அதுனால தான், எதுவும் இப்போ பேச முடியல. சித்துவும் உங்க பையன் தான் அதுனால இப்போ எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சுது.” ஜானகி மிகவும் மகிழ்ந்தார்.

வெளியே அனைத்தையும் ஸ்ரீநிவாசனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் மனோகர். எப்படியும் அவர் பேசிய சம்மதிக்க வைத்துவிடுவார்.
யுவா, கதிருக்குப் போன் செய்து ஆராதனா வீட்டிற்குச் சென்று அவளின் தந்தையை சற்று சமாதனப் படுத்தச் சொன்னான். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு இருப்பதாகச் சொல்லச் சொல்லி அவனை அங்கே அனுப்பினான்.
வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததால், எங்கோ சித்துவின் குரல் கேட்க, பின் வழியே சென்று பார்த்தான்.
அங்கே சித்துவும் சக்த்தியும் எதிர் எதிரே நின்றுகொண்டிருந்தனர். சற்றுத் தள்ளிச் சுஜாவும் சுந்தரும் நின்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். யுவா தொலைவில் நின்றே நடப்பதைப் பார்த்தான்.
“ அவர் சொன்ன மாதிரி இந்த நிச்சியம் கண்டிப்பா நடக்கும்.” அடித்துக் கூறினான் சித்து.
“ என்ன சொன்ன, ? அப்போ நம்ம கல்யாணம்?!” புரியாமல் சக்தி கேட்டாள்.
“ நம்ம கல்யாணம் இப்போ வேண்டாம், ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம்.” சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ ஹே! என்ன சொல்ற?! “ தலையில் கை வைத்துக் கொண்டு அங்கே இருந்த கல்லில் அமர்ந்தாள் சக்தி.
“ என்ன? வேண்டாமா! சரி ஒரு வருஷம்? அண்ணன் கல்யாணம் முடிஞ்சு அதுக்கப்றம் நாம பண்ணிக்கலாம்.” அவன் சொல்லிக்கொண்டே போக,
‘இந்தப் பையன் கூட நிச்சயம் நடக்கும்ன்னு சொல்றான், அப்புறம் இவன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். இவன் என்ன லூசாயிட்டானா?’ மனதில் குழம்பினாள். இன்னும் அவளுக்கு யுவா தான் அண்ணன் என்று விளங்கவில்லை பாவம்.
“ ஸ்டாப் இட் சித்து…” கத்தினாள்.
அதற்குள் சுஜாவிற்கு அனைத்தையும் சொல்லியிருந்தான் சுந்தர். அவளும் நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.
சித்து புரியாமல் அவளையே பார்க்க,
“ எனக்கு ஒண்ணுமே புரியலை. முதல்ல உள்ள ஒர்த்தன் உட்கார்ந்துட்டு இருக்கானே அவன வெளில அனுப்பு, அதுக்கப்றம் வந்து பேசு.” கோவமானாள்.
“ அவர் ஏன் வெளில போகணும். என்ன சக்தி பேசற?” சித்து கேட்க,
“ அவன் என்கிட்டே வந்து உன்னையும் உங்க அண்ணனையும் பாத்துக்கறேன்னு சொல்றான். நீ என்னடா னா இன்னிக்கு அவன் கூட நிச்சியம் நடக்கும்னு சொல்ற.. “ சக்தி சொல்லியவுடன் ,
சுந்தர் , சுஜா , சித்து மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். தொலைவில் நின்ற யுவாவும் அவளின் நிலையை நினைத்துச் சிரித்தான். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.
இவர்கள் சிரிப்பதில் அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
“ என்ன நடக்குதுனு கொஞ்சம் சொல்றீங்களா?” கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,
மூவரும் சிரித்து முடித்த பாடில்லை.

“ நான் சொல்றேன்.” யுவா வந்தான். சித்து அவனை ஓடிச்சென்று அணைத்துக் கொள்ள,
சக்திக்கு மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது.
“ இவர் தான் என்னோட அண்ணன் யுவராஜ்.” சித்து சொல்ல,
நிலைமையை உணர்ந்து தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அப்போது தான் தன்னை வைத்து அங்கே நடந்த விளையாட்டு புரிந்தது அவளுக்கு.
“ முதல்ல உன்கிட்ட நடந்த குழப்பத்தை எடுத்துச் சொல்லத் தான் வந்தேன். அப்புறம் நீ சித்துவை லவ் பண்றேன்னு சொன்னதும், கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம்னு தோணிச்சு. அதான் அப்படி பேசினேன். டோன்ட் டேக் இட் சீரியஸ்.” சொல்லிவிட்டு சித்துவைப் பார்த்து
“ உள்ள கூட்டிட்டு வா” என கூறிச் சென்றான். அனைவரும் உள்ளே சென்றதும்,
சித்து அவள் நின்ற கோலத்தை ரசித்தான். அழகாகப் புடவை கட்டி நகை அணிந்து தன் முகத்தை மட்டும் மூடிக் கொண்டு நின்றாள். அவள் அருகே சென்று அவள் கையை எடுக்க, அவனைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள,
அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பி அவளது இரு தோள்களிலும் தன் கையை மாலையாகக் கோர்த்து நின்றான்.
“ சகி!”
“……”
“ என்னைப் பாரு..”
“ம்ம்ம்ம் ஹும்ம்” அவள் மறுப்பாகத் தலையசைக்க
“பாருடி”
லேசாக அவள் நிமிர்ந்ததும்,
“ இப்போவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ !”
நிமிர்ந்து அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவன் அவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
உதட்டைச் சுழித்துக்கொண்டு, “ இப்போ தான் ஒரு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம்னு சொன்ன… “ என கேட்க,
“ ஒரு வருஷம் ரொம்ப கஷ்டம் போலிருக்கு. தாங்காது..”
“ ஏன்!”
“ உன்னை இப்படி பாத்துடே எவ்ளோ நாள் ‘வெஜிடேரியனா’ ஓட்ட முடியும். எனக்கு ‘நான் வெஜ்’ வேணும்டி.. “
“ ம்ம்ம்… நோ! இப்போதிக்கு வெஜ் தான். அதுவே ஜாஸ்தி”
“ உன்கிட்ட யார் இப்போ பெர்மிஷன் கேட்டா….”
அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றி அவளது இதழ்களை அவன் விருப்படி ருசித்துக்கொண்டிருந்தான். அவளும் மனம் முழுதும் நிறைவுடன் தன்னவனின் செயலை ரசித்துத் தானும் அதில் ஐக்கியமானாள்.
உள்ளே அனைவரும் சம்மந்தம் பேசி முடித்தனர். யுவாவின் திருமணம் முடிந்த பிறகு, ஒரு வருடம் கழித்து அவர்களின் திருமணம் என நிச்சயம் செய்தார்கள்.
வெகுநேரம் இருவரையும் காணாமல் சுந்தரும் சுஜாவும் அங்கே வர,
நடப்பதை முதலில் கண்ட சுந்தர், சுஜாவை வந்த வழியே திருப்பி அழைத்துப் போனான். “ என்ன அவங்கள கூப்பிட வேணாமா? எவ்வளவு நேரம் பேசுவாங்க?” சுஜா கேட்க,
“ வா வா ! அவன் வருவான். நீ அங்க போனா நான் காலி. முதல்ல படிக்கற வேலையப் பாரு!” அவளைத் தள்ளிக்கொண்டே வர, அவளும் புரியாமல் நடந்தாள்.
அவர்களின் சத்தம் கேட்டுச் சித்துவும் சக்தியும் உள்ளே வந்தனர். ஸ்ரீநிவாசன் தன் மகளின் சந்தோஷமும் தன் விருப்பமும் ஒருங்கே நடந்ததில் மகிழ்ச்சியடைந்தார். சித்துவை தன் மகளுடன் நிற்க வைத்து அழகு பார்த்தார்.

அனைவரும் விடைபெற்று ஆராதனாவின் வீட்டிற்குச் சென்றனர். கதிர் அங்கே நிலமைய எடுத்துச் சொல்லிப் புரியவைத்திருந்தான். ஆராதனா வின் தந்தை ஏற்கனவே யுவாவைத் தன் மருமகனாக ஏற்றுக்கொண்டு விட்டார். அதனால் எந்த வித தடங்கலும்இல்லாமல் அவர்களின் நிச்சயம் முடிந்தது.
அடுத்த பத்து நாட்களில் அவர்களின் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.
யுவா எப்போதும் போல மறுநாள் தன்னுடைய அலுவகத்துக்குச் செல்ல, ஆராதனா வும் அங்கே ஆஜராகி இருந்தாள்.
கம்பெனியில் அனைவருக்கும் விஷயம் பரவ, அவளை வந்து வாழ்த்தினர் அனைவரும். கதிர் தன் நண்பனிடம் சென்று அவனைக் கட்டிக்கொண்டான்.
“ யுவா! கங்ராஜூலேஷன்ஸ்! இப்போ தான் எனக்குச் சந்தோஷமா இருக்கு. ரெண்டு விஷயத்துல. ஒன்னு ஆராதனா. ரெண்டாவது உங்க அப்பா.. ஹாப்பி டா… “

“ தேங்க்ஸ் கதிர். நானும் ஹாப்பியா இருக்கேன். எங்க அம்மாவை நினைச்சு. இத்தனை நாள் நான் பாக்காத சந்தோஷம் அவங்ககிட்ட இப்போ பார்க்கறேன். இதுக்கு நீயும் ஒரு காரணம். தேங்க்ஸ் டா” மனதார சொன்னான்.
“ கல்யாண வேலைய எனக்குப் பாதி குடுத்துட்டாரு மாமா.. நான் அதப் போய்ப் பாக்கறேன். உனக்கு இப்போ என்ன வேலை?” கதிர் கேட்க
“ அப்பா கம்பெனியும் நம்ம கம்பனியும் கம்பைன் பண்ணனும். அதுக்கு லீகலா சில விஷயம் பண்ணனும். அது தான் பாத்துட்டு இருக்கேன். சித்துகிட்ட சில வொர்க் குடுத்திருக்கேன். சோ அதை எல்லாம் தான் இப்போ பார்க்கறேன். சரி நீ கிளம்பு… “ அவனிடம் சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான்.
ஆராதனா, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள். கையில் காஃபியுடன் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். அவளுக்குக் கோபம் வர,
காஃபியை வைத்துவிட்டு திரும்பி நடந்தாள். மெலிதாகச் சிரித்துவிட்டு தன் வேலையை முடித்துவிட்டு, அவளை மீண்டும் இன்டெர்காமில் அழைத்தான்.
அவள் கோபமாக உள்ளே வர, அந்த அறையில் அவனைக் காணவில்லை.
அவளுக்குப் பின்னால் நின்று கதவைத் தாழிட்டான். அப்போதும் அவள் முறுக்கிக் கொண்டே நின்றாள்.
“ என்ன கோபமா?” அவளை ஒரு இழுப்பில் இழுத்துக் கட்டிக்கொண்டான்.
நிச்சயம் ஆனதிலிருந்து அவள் புடவை தான் கட்டினாள். அதனால் இப்போது அவன் கைகளில் நெளிந்து கொண்டிருந்தாள். அவன் கைகள் அவள் புடவைமேல் எங்கெங்கோ படற அவளின் கோபம் இப்போது எங்கே சென்றதென்று அவளுக்கே தெரியவில்லை.
அவள் கழுத்து வளைவில் முகம் வைத்து அவள் காதில் மெல்லப் பேசினான். “ கோபமானு கேட்டேன்”
அவள் இந்த உலகத்தில் இருந்தால் தானே அதற்குப் பதில் சொல்ல! அவனது அருகாமையும் அவனது செயலும் அவளை மேலும் அவனோடு ஒட்டவைத்தது. அவளது கழுத்தில் தன் இதழ் பதித்தான். அவள் அவனது கைகளில் குழைந்து கொண்டிருந்தாள். அவனது முத்த மழை அவள் முகமெங்கும் பொழிய, அவளுள் இருந்த காதலும் தூண்டப்பட்டது.
இப்போது அவள் இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த காதலை அவன் மேல் பொழியத் தொடங்கினாள். அவனது நெற்றியில் தொடங்கி கண், கண்ணம் தாடை என வாரி வழங்கினாள்.
அவனது இதழை நெருங்கும் நேரம் , அங்கிருந்த கடிகாரம் ஒலி எழுப்ப , இருவரும் சட்டென விலகினார்கள்.
இருவரும் மூச்சு வாங்க நின்றனர். இதழோரம் சிரிப்போடு அவளைப் பார்க்க, அவள் அவனைப் பார்க்கவும் முடியாமல் கண்ணை இருக்க மூடினாள்.
கல்யாண நாளும் வந்தது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தனர். சித்து தன் அண்ணிக்கு டிபன் எடுத்துக்கொண்டு அவள் அறைக்குச் சென்றான். அவளுக்குத் தலை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர்.
“வாவ்! அண்ணி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. யூ ஆர் சோ பியூட்டிஃபுல். அண்ணா பாத்தான்… அவ்ளோ தான்.. “ அவளின் முன் இருந்த டேபிள் பொருந்திய கண்ணாடியில் அவளைப் பார்த்துச் சொன்னான்.

“ உங்க அண்ணனா.. அவனுக்கு ரியாக்ஷன் கம்மி சித்து.” அவள் நெற்றிச் சுட்டியைச் சரி செய்து கொண்டே சொல்ல,
“ நோ அண்ணி.. இனிமே அவன் இவன் என்ற ஏக வசனம் கூடாது. அவர்ர்ர் இவர்ர்ர்ர்னு மரியாதையா சொல்லணும்… ஓகே! இப்போ சமத்தா வாயைத் திறங்க” அவளின் முன் வந்து நின்று அவளுக்குச் சிறிது பொங்கலை ஊட்டினான்.
“ நல்ல வேலை.. லிப்ஸ்டிக் போடறத்துக்கு முன்னாடி வந்த… “ சாப்பிட்டுக் கொண்டே சொல்ல,
“நீங்க போட்டிருந்தாலும் நான் குடுத்திருப்பேன்”
இருவரும் கதை பேசிக்கொண்டே அவளுக்குப் பொங்கலைக் குடுத்து முடித்தான்.
“சரி உங்க ஆள் என்ன பண்றாருன்னு பாக்கறேன். பை” அங்கிருந்து ஓடினான் யுவாவிடம்.
அவன் அங்கே கதிருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சித்து உள்ளே வர,
“ எங்க டா போன.. உன்ன காணும்னு உன் மாமனார் வந்தாரு. “
“ மிஸ்ஸஸ் யுவராஜ் க்கு டிபன் குடுத்துட்டு வரேன். என் மாமனார் வந்துட்டாரா? அப்போ சக்தி வந்திருப்பாளே!.. எதாவது வேணும்னா கதிர் அண்ணாவ கேளுங்க.. ஒரு முக்கியமான வேலையிருக்கு வந்துடறேன்.” அங்கிருந்து ஓட நினைக்க,
அவனைத் தடுத்தான் கதிர். “எங்க போற.. சக்தி வரலையாம்” கதிர் சொல்ல,
“ அண்ணா , இந்த டூபெல்லாம் நம்ம கிட்ட வேணாம். அவ கிளம்பரப்ப எனக்கு மேசெஜ் அனுப்பிட்டா.. நான் வரேன்!” சக்தியைப் பார்க்கச் சென்றான்.
சக்தி அன்று சிம்பிளாக ஒரு பேபி பிங்க் நிற டிசைனர் புடவையில் , ஃப்ரீ ஹேர் விட்டு மாடனாக வந்திருந்தாள். பார்த்ததும் அவனைக் கட்டுப்படுத்த சிரமப் பட்டான். தூரத்தில் இருந்தே அவளுக்குப் போன் செய்தான். அவளும் உடனே எடுக்க,
“ எங்க டா இருக்க, உன்னப் பார்க்க முடியல?” கண்களால் அந்த மண்டபத்தைச் சுற்றித் தேடிக்கொண்டே கேட்டாள்.

“ ஏன் டீ என்ன படுத்தற. ? நான் அன்னிக்கே சொன்னேன், உன்னைப் புடவைல பாத்தா எனக்கு ‘நான் வெஜ்’ வேணும்னு. நீ வேணும்னு தான்டி என்ன சீண்டிப் பார்க்கற “ அவளைப் பார்த்துக்கொண்டே பேச,
“ முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு?”
“ நீ மேல இருக்கற ரெண்டாவது ரூம்க்கு வா” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
அவளும் அவனைப் பார்க்கும் ஆசையில் மேலே சென்றாள். அந்த அறையில் இவள் முதலில் செல்ல பின்னால் சித்து வந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டான்.
“ ஹே சித்.. புடவைய கலைச்சிடாத…” கிசுகிசுப்பாகச் சொல்ல
“ அப்போ கழட்டி வெச்சிடு..” யோசிக்காமல் சொன்னான்.
“ ச்சீ! டர்டி ராஸ்கல்..விடு டா..” சிணுங்கலுடன் சொல்ல,
“சும்மா இருக்கறவன சீண்ட வேண்டியது அப்பறம் என்னையே திட்ட வேண்டியது. உன்னை இன்னிக்கு விடறதா இல்லை.”
அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவளையும் மடியில் அமரவைத்தான். அவள் ஒருபக்கமாக அமர்ந்தாள்.
அவளது இடையைக் கட்டிக்கொண்டு அவள் நெஞ்சில் சாய்ந்து கண் மூடினான். எதுவும் பேசாமல். அவளும் அவனது முதுகில் கைவைத்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“ தூக்கமா வருது சகி.. “ குழந்தை போலப் பேசினான்.
“ தூங்கு டா பேபி!” அவன் தலையை வருடிக் கொடுத்தாள்.

 

அவளும் கண்மூடி அவன் தலைமேல் சாய்ந்திருக்க, சிறிது நேரம் கழித்து எழுந்தான். சட்டென அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“ வா போகலாம். இந்த ஒரு தடவ எக்ஸ்கியூஸ்.. நேக்ஸ்ட் டைம் சும்மா இருக்க மாட்டேன்.. “ சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
அவள் திரும்பி நடக்க, ஒரு நிமிஷம் இங்கேயே இரு, சொல்லிவிட்டு வெளியே சென்று இரண்டு நிமிடத்தில் மீண்டும் வந்தான். கையில் பூவுடன்.
“ திரும்பு” அவளுக்குத் தானே பூவை வைத்தான்.
அவள் அவனது செயலை ரசித்தாள். அவனைக் கட்டிக்கொண்டு பின் “ போகலாமா” என்றாள்.
இருவரும் சென்று மணமக்களை அழைத்து வந்தனர்.
யுவாவை பட்டு வேட்டியில் பார்த்து மனம் கிறங்கினாள் ஆராதனா. யுவாவும் அவளைச் சர்வ அலங்காரத்துடன் பார்த்துச் சொக்கி நின்றான். அன்றொரு நாள் அவளைப் பட்டுபுடவையில் பார்த்தது நினைவுக்கு வர, அவளைப் பார்வையாலேயே விழுங்கினான்.
இருவரும் அருகில் அமர்ந்து மந்திரம் சொல்லி , ஓமம் வளர்த்தனர். ஆராதனா மனம் முழுதும் அவனைத் தாங்கி அந்த இனிமையான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கெட்டிமேளம் கொட்ட , ஐயர் மந்திரம் சொல்ல, பெற்றோர்கள் ஆசியுடன் கையில் தாலியை எடுத்தான் யுவராஜ்.

அவள் குனிந்து அமர்ந்திருக்க அவள் கழுத்தில் தாலி கட்டினான். அப்போது அவள் காதில் கேட்குமாறு “ ஐ லவ் யூ ஆரு!” என்றான்.
கண்ணீர் வழிய அவனைப் பார்த்தாள் ஆராதனா. அவள் கண்ணீரைத் துடைத்து, அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். மனம் நிறைந்தது இருவருக்கும்.
இனிதே நடைபெற்றது திருமணம்.
அனைவரும் இப்போது மனோகரின் இல்லத்தில் புதுமணத் தம்பதிகளோடு வந்தனர்.
அனைத்து சடங்குகளும் முடிந்த பின் , யுவா அவனது வீட்டில் அன்றிரவு தங்க முடிவு செய்திருந்தான். அதற்காகச் சித்துவை ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தான்.
ஆராதனாவை அழைத்துக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தான். வீடு முழுதும் அலங்காரம் செய்திருந்தான் சித்து. அவர்கள் வந்ததும் அவர்களை வரவேற்று தான் கிளம்புவதாகச் சொல்லிக் கிளம்பினான்.
யுவா சித்துவை தனியே அழைத்து “ தேங்க்ஸ் டா” என்றான்.
“ ஹலோ அண்ணா, இதெல்லாம் நீ எனக்குத் திருப்பிச் செய்யனும். “ என்று சொல்ல, அவன் தலையில் தட்டினான்.
“ ஆல் தி பெஸ்ட். சொதப்பாதீங்க…” சித்து சொல்ல,

“ நீ மட்டும் தான் காதல் மன்னனா.. போடா” சிரித்துக் கொண்டே சொல்ல, சித்து கிளம்பினான்.
அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.
ஆராதனா வீட்டின் அலங்காரத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அங்கே மாட்டாப் பட்டிருந்த யுவா வின் புகைப்படம் அவளை மிகவும் ஈர்க்க, அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள்.

மெதுவாக வந்த யுவா, அவளைப் பூப் போலக் கையில் ஏந்தினான். அவள் அவனை ஆச்சரியமாகப் பார்க்க,
அவளைத் தூக்கிக் கொண்டு அவன் அறைக்குச் சென்றான்.
“யுவா! “
“ஷ்ஷ்ஷ்..” யுவா சொல்ல,
யுவா அவளை இறக்கிவிட்டான். இன்னும் அவள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. அதற்குள் அவள் தனது அலமாரியிலிருந்து ஒரு அழகிய பெட்டியை எடுத்து வந்தான். அதை அவளிடம் நீட்ட,
“என்ன இது?”
“பிரிச்சுப் பாரு”
மெதுவாக அதைப் பிரித்தாள். அதில் ஒரு இள நீல நிறத்தில் ஒரு டிரஸ் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவள் அசந்து போனாள்.
அது அவள் அன்று ஒரு காகிதத்தில் வரைந்து இருந்த மாடல் டிரஸ். அவன் அதை வாங்கிப் பார்த்தான் தான். ஆனால் அதை வடிவமைத்துக் கொடுப்பான் என்று நினைத்துக் கூடப் பார்க்க வில்லை.

பேச்சின்றி அவனைப் பார்க்க,
“ போய்ப் போட்டுட்டு வா..”
அவன் சொல்வதை கேட்டு இயந்திரம் போல அனைத்தும் செய்தாள். அதை அணிந்து கொண்டு வந்தாள். அவளை உச்சி முதல் பாதம்வரை பார்வையால் அளந்தான்.
அவள் அருகில் வந்து அந்த மேற்க்கத்திய உடைக்கு ஏற்ப அவளது தலைமுடிய மாற்றினான். வரும்போது பூவைத்துப் பின்னியிருந்தாள். முதலில் பூவை எடுத்துவிட்டு அவளது தலையைக் கலைத்து , கூந்தலை விரித்து விட்டான்.
அவளை அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் நிறுத்தினான். அவளுடன் சேர்ந்து அவள் அழகை ரசித்தான். அவனது அன்பால் அவள் கண்ணில் நீர் வரக் காத்திருந்தது.
அவளைத் தன் புறம் திருப்பி “ நோ க்ரைஸ். இனிமே நீ எதுக்கும் கலங்கக் கூடாது. ஐ அம் டோட்டல்லி யூவர்ஸ்”
அவனை அணைத்துக் கொண்டு மீண்டும் முத்த மழையில் அவனை ஆழ்த்தினாள்.
“ வெயிட்” என்றான்.
அவள் புரியாமல் பார்க்க…
அங்கே இருந்த கடிகாரத்தை எடுத்துச் செல்லைக் கழட்டி வைத்தான்.

ஆராதனா சிரிக்க, இப்போது அவளைச் சிரிக்கவிடாமல் அவள் இதழ்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்தே அவளை விடுவித்தான். வெட்கப் பட்டு ஜன்னலருகே சென்று நின்றாள். அவனும் அட்டை போல் அவளோடு ஒட்டி நின்றான். நிலவின் வெளிச்சம் அந்த அறையில் பட அங்கிருந்த மலரின் வாசனை அவர்களை எங்கோ இழுத்துச் சென்றது.அந்த நீல உடையில் அவள் ஜொலித்தாள்.
“ஆரு! நான் உன்னை ரொம்ப நாள் காக்க வெச்சிட்டேனா?” அவளைவிட்டு ஒரு நொடியும் விலகாமல் நின்றான்.

“ அது கூட எனக்கு சுகமா தான் யுவா இருந்துச்சு .. “ அவளது ஒவ்வொரு பேச்சுக்கும் அவளுக்கு முத்திரை பத்தித்தான். விரல் நகம் கூட விடாமல்!
“ ஐ அம் சாரி ஆரு! எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை …..” அதற்குமேல் அங்கே பேச்சில்லை.

 

        உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
   முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
   உன் இடையோடு நடமாடும் உடையாக
   நான் மாறி எந்நாளும் சூடேறவா
   என் ஜென்மம் ஈடேறவா…

அந்த இரவு அவர்களுக்கு தூங்கா இரவாக, வாழ்வின் மறக்க முடியாத இரவாக மாறிப் போனது.

 

 

ஒரு வருடம் கழித்து யுவா கையில் குழந்தையுடன் மீண்டும் மணமேடையில் ஆராதனவோடு நின்றான்.
மங்கள வாத்தியங்கள் முழங்க, பெற்றறோரின் ஆசியுடன், மிகவும் மகிழ்ச்சியோடு , சித்து சக்தியின் கழுத்தில் தாலி கட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.
சுந்தரும் சுஜாவும் அடுத்த மாதம் கல்யாணம் செய்வதாக் சொல்ல, “ சுஜா க்கு வேலை கிடைச்சிடுச்சா “ என்றாள் சக்தி.
“அவளுக்கு வேலை கிடைச்சு தான் கல்யாணம்னா வாழக்கை முழுக்க நான் பிரம்மச்சாரி தான். வீட்ல சம்மத்திச்சுட்டாங்க, அதான் போனா போகுத்துன்னு விட்டுட்டேன்.” சுந்தர் அவளைக் கிண்டல் செய்தான்.
அனைவரும் சிரிக்க, அங்கே மகிழ்ச்சி பொங்கியது. அவர்கள் வாழ்வில் இனி எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். அவர்கள் காத்திருந்த காதல் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.

 

யுவராஜ் சித்துவின் ஒப்பந்தப் படி இப்பொழுது யுவராஜ் அவனது வீட்டைச் சித்துவின் முதலிரவுக்கு அலங்காரப் படுத்திக் கொண்டிருந்தான். ஆராதனாவும் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
யுவா பூக்களை வைத்துத் தோரணமாக அந்த அறை முழுதும் கட்டிக்கொண்டிருந்தான். நெற்றியில் வியர்வை வழிய அவன் வேலை செய்வதைப் பார்த்த ஆராதனா,
“யுவா, எப்படி இருந்த நீங்க எப்படி மாறிட்டீங்க?” இழுத்து சொருகிய சேலையுடன் தட்டில் பழங்களை அடுக்கி வைத்துக் கொண்டு கேட்டாள்.
“ என்னடி நக்கலா?” அவளை முறைக்க
“ இல்ல கம்பனில உங்களப் பார்த்து ஸ்ட்ரிக்ட் ஆபீசர்னு பயப்படுவாங்க, ஆனா இப்போ இங்க வந்து பாத்தா தான் தெரியும் “ அவனைக் கிண்டல் செய்ய,
அவள் நின்றிருந்த கோலம் அவனை ஈர்க்க ,வேகமாக அவள் அருகே வந்தவன், அவளது இடையில் சொருயிருந்த சேலையை இழுத்துவிட்டு அந்த இடத்தில் தன் கையை வைத்து அழுத்தமாகப் பிடித்துக்கொண்டான்.
அவனது இந்தத் திடீர் செயலால் பேச்சிழந்து மூச்சு வாங்க நின்றாள்.
“ இப்போ பேசு டீ! “ அவளது காதில் ஹஸ்கி வாய்சில் பேச,
உள்ளுக்குள் அவளுக்கு வெப்பம் பரவியது.
“ யுவா, இன்னிக்கு சித்துகும் சக்திக்கும் தான் …….” பாதியிலேயே நிறுத்தினாள்.
“ என்ன சொல்லு … அவங்க ரெண்டுபேருக்கும்?? “ அவளது கழுத்தில் தன் உதடுகளால் கோலமிட்டுக் கொண்டே கேட்க,
அவளது கைகள் தன்னிச்சையாக அவனது பின் தலையைக் கோத ஆரம்பித்தது.
“ஆரு! … “ அவளது பாதி தெரிந்த முதுகில் கோலம் போட ஆரம்பித்தான்.
“யுவா….!! ப்ளீஸ்… “ சொல்லிக்கொண்டே அவனது மார்பில் புதைந்தாள்.
அவளைத் தன்னுள் புதைத்து விடும் அளவு வாரி அணைத்தான். அவளும் அவனது முதுகைத் தழுவிக் கட்டிக்கொண்டாள்.
அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தி அவளை ஆசையுடன் பார்க்க, அவனது மோகப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
“ஏய்! நமக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வருஷம் ஆச்சு டி… இன்னும் வெட்கப் படற… “ குறுநகையோடு நின்றான்.
“ நீ பாக்கற பார்வை அப்படி…நான் என்ன பண்றது.. “ சிறு சினுங்கலுடன் சொல்ல, சத்தமாகச் சிரித்தான் அவளது ஆசைக் கணவன்.
அவனது சிரிப்பை இமைக்காமல் ரசித்தாள்.
“ ஐ லவ் யூ யுவா…..”
“ ஐ மேட்லி லவ் யு டீ ………” அவளது நெற்றி முட்டி லேசான இதழ் ஒற்றுதலுடன் காதலால் சொன்னான்.
“இதெல்லாம் பத்தாது…” என்று சொன்னவள், அழுத்தமாக அவனது உதடுகளைக் கடிக்க, அவனும் அவளுக்கு சளைத்தவனல்ல என்று தன் வேகத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். சிறிது நேர சுகமான போராட்டத்திற்குப் பிறகு இருவரும் களைத்து ஓய்ந்தனர்.
பின்பு தனது கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு “ சரி சரி நாம கிளம்பலாம்…. அப்புறம் சித்து வந்தா நம்மள ஓட்ட ஆரம்பிச்சுடுவான்… “ என்று கிளம்பினான்.
சக்தியும் அனைவரிடமும் ஆசி பெற்று கிளம்பினர். வழக்கம் போல அவன் தனது காரை எடுத்து வர , சக்தி மறுத்தாள்.
“ எனக்கு உன்கூட பைக்ல போகணும் சித்” அவனது கையைப் பற்றிக் கொண்டு கேட்க,
“ இந்த டைம்ல பைக்ல போறது ரிஸ்க் சகி. அதுவும் நீ இப்போ நகையெல்லாம் போட்டுப் புடவை வேற கட்டியிருக்க, உனக்கு கம்ஃபர்டபிளா இருக்காது டா” அவளது கண்ணம் தொட்டு சொன்னான்.
அவன் கையைத் தட்டி விட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல. ஐ அம் ஓகே … நீ வேஷ்டி கட்டியிருக்கறதால யோசிக்கிறியா. அப்படீனா வேணாம். “ முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள்.
அவளின் அந்தச் செய்கைய ரசித்தவன், “ ஹே பொண்டாட்டி திரும்பு டீ “ கையைக் கட்டிக்கொண்டு நின்று அவளைப் பார்க்க,
“ ஹ்ம்ம் “
“ கோவமா செல்லத்துக்கு ? சரி வா… பொண்டாட்டி ஆனா பிறகு முதல் முதலா கேக்கரத எப்படி நான் முடியாதுன்னு சொல்லுவேன் . வாங்க மிசஸ் சித்து போகலாம்!” அவளின் தோள் மீது கை போட்டு அழைத்துச் சென்றான்.
புன்னகையோடு ஆசையாக அவன் பின்னே அமர்ந்தாள் அவனது சகி. வண்டியை ஸ்டார்ட் செய்து ஆசிலேட்டர் அதிகப் படுத்த எடுத்த எடுப்பிலேயே வண்டியின் வேகம் அதிகரித்தது. வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவனது தோளை இரு கைகளாலும் பற்றிக் கொள்ள,
“ஹே பொண்டாட்டி, இன்னும் என்ன புதுசா லவ் பண்ற மாதிரி தோளைப் புடிக்கற, இடுப்போட சேர்த்து கட்டிக்கோ டீ, அதுக்கு தான் வேகமா போறதே! டிச்சப்பாயின்ட் பண்ணாத! “ அவன் சொல்லி முடிப்பதற்குள் அவளது கைகள் இருபுறமும் அவனது இடையை சுற்றி வளைத்திருந்தது.

கண்ணாடி வழியாக அவன் சிரிப்பதைப் பார்த்தவள், அவனது முதுகில் முகம் வைத்துச் சாய்ந்து கொண்டாள்.
“ சகி! இவ்ளோ நாள் இந்த மாதிரி பைக் ரைட் மிஸ் பண்ணிட்டோமோ!” ஒரு கையால் பைக்கைப் பிடித்த படி இன்னொரு கையால் தன் வயிற்றில் மேல் படர்ந்திருக்கும் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டே வண்டியைச் செலுத்தினான்.
“ ஆமா சித்…. ஆனா இப்போ போறதும் ஒரு சுகமாதான் இருக்கு! என்னோட புருஷன்ங்கற உரிமையோட உன்னைக் கட்டிக்கிட்டு இப்படி வேகமா போறது மனசுக்கு நிறைவா இருக்கு !” அவனது காதோரம் நெருங்கி வந்து சொன்னாள்.
அதற்காகவே இன்னும் சிறிது நேரம் சுற்றிவிட்டு யுவாவின் வீட்டை அடைந்தனர். சாவியை வாட்ச்மேனிடம் குடுத்துவிட்டு சென்றிருந்தான் யுவா.
சாவியைப் பெற்றுக்கொண்டான் சித்து.
“வரேன் சார்” அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் அந்த வாட்ச்மேன்.
அவன் சென்றதும் வீட்டின் முன் வந்து நின்றனர்.
“கதவைத் திறங்க சித்”
அவளைக் கிறக்கமாகப் பார்த்துக் கொண்டே கதவைத் திறந்தான்.
உள்ளே சென்றதும் மீண்டும் கதவைத் தாழிட்டு அவளைத் தோளோடு அனைத்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
வந்ததிலிருந்து அவன் பார்வை போன விதம் அவளை ஏதோ செய்ய , ‘ஐயோ ! அப்படிப் பாக்காத டா… முதல் நாள் உன்ன பார்த்தப்போ இந்தப் பார்வை தான் என்ன உன்னோட சேர்த்து கடிப்போட்டுடுச்சு. எத்தனை முறை பாத்தாலும் மனசுக்குள்ள ரயில் ஓடுது.’ மனதில் மருகினாள். அவனோடு தனியாக இப்போது மனைவி என்னும் பந்தத்துடன் ஒரு அறையில் அதுவும் இரவில் நிற்பது அவளுக்கு வெட்கத்தைத் தந்தது.
அந்த அறையின் ஒரு பகுதியில் இருந்த வரண்டாவில் சென்று நின்று வானத்தை வெறித்தாள். அவளது இந்தப் பதட்டத்தை உணர்ந்தவன், மெல்ல அவளருகே சென்று நின்றான்.
“சகி!” அருகில் அவன் நெருங்கி நின்று அழைப்பதை உணர்ந்தாலும், அவளால் பதில் பேச முடியவில்லை. பேச நினைத்தும் வார்த்தை வரவில்லை.
அவள் உடல் லேசகாக நடுங்குவதை உணர்ந்தவன், பின்னிருந்து அவளை அனைத்துக் கொண்டான். அவளது தோளில் தன் தடையைப் பதித்து,
“ என்ன டா! எதுக்கு இப்போ பதட்டம் ! நான் உன்னோட சித். நீ என்னோட சகி. எனக்குள்ள எப்பயோ வந்துட்ட.. இன்னும் தயக்கமா உனக்கு?”
அவனது வார்த்தைகள் அவளை அவனிடம் மேலும் ஒட்டி நிற்க வைத்தது. அவனது மார்பில் முகம் புதைத்து அவனைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
“எனக்கு ஒன்னும் தயக்கம் இல்ல.. உன்னைப் பார்த்ததிலேந்து உன்கூடவே இருக்கணும் துடிச்சேன். நாம காதலிக்க ஆரம்பிச்சப் பிறகு உன்கூட இருக்கற மாதிரி என்னென்னவோ கனவு கண்டேன். இது நடக்காம போயிடுமோனு சில நாள் தவிச்சிருக்கேன். ஆனா எல்லாம் நல்லா முடிஞ்சு இப்போ முழு உரிமையோட உன் பக்கத்துல நிக்கறது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கனவா நினைவா னு கூட யோசிக்கத் தோணுது.” உணர்ச்சிப் பொங்க அவள் பேசும்போது தனக்கான அவளுடைய காதல் எவ்வளவு ஆழம் என்பதை உணர்ந்தான்.
தன்னோடு சேர்த்து அணைத்து அவளது தலையில் முத்தமிட்டான். “இது கனவில்லை கண்ணம்மா. நிஜம் தான். செக் பண்ணுவோமா” சொல்லிக்கொண்டே அவளது இடையைக் கிள்ள, துள்ளி குதித்தவளை நகர விடாமல் பிடித்துக் கொண்டான்.
“நிஜம்தான் சகி” சிரித்தான்.
“ டேய்! இப்படியா பண்ணுவ” செல்லமாகச் சிணுங்கி அவன் மார்பில் அடிக்கத் துவங்கினாள்.
அவளது கையைப் பிடித்துக் கண்மூடி முத்தமிடத் தொடங்கினான். அவனது மீசையின் குறுகுறுப்பு கூச்சத்தை கொடுத்தாலும் அவனை ரசித்தாள் சக்தி. அவனது முடியக் கலைத்து எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
அவளது கஷ்டம் உணர்ந்து அவளைத் தூகிக் கொண்டான் . “ இப்போ நல்லா குடு “ என்று சொல்ல,
யோசிக்காமல் அவன் முகமெங்கும் வாரி வழங்கினாள். அவனது இதழ்களை நெருங்கும்போது சிறிது இடைவெளி விட,
“ என்ன அங்க வந்துட்டு யோசிச்சுட்டு இருக்க, ம்ம்ம் ..கம்மான்” என உதடு பிரிக்காமல் சிரித்தான்.
அவள் முடியாது என்று அவனது தோள்களில் முகம் புதைத்தாள். அவளது கூந்தலில் சூடியிருக்கும் ஜாதிமல்லயின் வாசம் அவனை எங்கோ கொண்டு சென்றது. அவளைக் கீழே இறக்காமல் தூக்கியபடியே அவளின் கதகதப்பில் அவளுள் கரைந்துகொண்டிருந்தான்.
வெகுநேரமாகத் தன்னைத் தூகிக் கொண்டிருக்கிறான் என்றுணர்ந்து இறங்க முயற்ச்சிக்க, அவன் விடுவதாக இல்லை.
“விடு சித்.. கை வலிக்கப் போகுது.” அவனது இரு தோள்களையும் பற்றிக் கொண்டு அவனைப் பார்த்துக் கேட்க,
“முடியாது! நீ முத்தம் தர வரைக்கும் விடமாட்டேன். இனிக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டீ.. ‘நான் வெஜ்’ பிளான் பண்ணி வெச்சிருக்கேன் நீ இந்த வெஜ் கிஸ்கே முடியாதுங்கற..” அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கேட்க ,
அவள் யோசித்துவிட்டு ,“ எனக்காக நீ ஒரு பாட்டு பாடு.. அப்புறம் குடுக்கறேன்” அவனது கழுத்தில் மாலையாகத் தன் கைகளைக் கோர்த்து கொண்டு கேட்க,
“உனக்காக ஒரு பாட்டு என்ன , எத்தனை வேணாலும் பாடறேன், ஆனா இந்தக் கிஸ்ஸ மட்டும் கம்ப்ளீட் பண்ணு டீ, காக்க வைக்காத” குழந்தையாய் அவளிடம் கெஞ்சினான்.
“முடியாது! நீ பாடு அப்பறம் குடுக்கறேன்” கண்டிப்பாக அவனிடம் கொஞ்சினாள்.
“படுத்தற டி”.. அவளைத் தூகிக் கொண்டே பாட ஆரம்பித்தான்.
“பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை.

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ளபோது வேதம் ஓது..”
அவள் அதற்கு மேல் அவனைக் காக்க வைக்க வில்லை. தன் இதழ் தேனை அவனுக்குப் பருகக் கொடுத்து அவனை இன்பத்தில் ஆழ்த்தினாள். இதற்காகக் காத்திருந்த அவனும் அவளை முழுதாய் உணர உள்ளே தூக்கிச் சென்றான்.
காத்திருக்காமல் அவர்களது காதல் தொடர்ந்தது.

 

 

 ****************** முற்றும் ***********************************

error: Content is protected !!