MIRUTHNAIN KAVITHAI IVAL 8
MIRUTHNAIN KAVITHAI IVAL 8
மிருதனின் கவிதை இவள் 8
கண்ணை கவரும் வண்ண விளக்குகள் ,நாசியை தீண்டிய மென்மையான நறுமணம் என பல அலங்கரிப்பிற்கு நடுவே அமைந்து இருந்தது அந்த நைட் க்ளப் , பாலர் பேதமையின்றி அனைவரும் மதுகுவளையுடன் தங்கள் தங்கள் ஜோடிகளுடன் ஆடிக்கொண்டிருக்க , அந்த இடமே டிஜேவின் இசையால் அதிர்ந்து கொண்டிருந்தது .
இதை அனைத்தையும் அங்கு இருந்த வட்ட மேஜை அருகே போட பட்டிருந்த நாற்காலியில் ,இசைக்கேற்ப தலையை ஆட்டி கொண்டே தன் எதிரே இருக்கும் மேகாவை பார்த்து கொண்டிருந்தான் அக்னி தீரன் .
கருப்பு நிற ஜீன்சும், கருப்பு நிற ஷர்ட்டும் , ஷர்ட்டிற்கு மேலாக கருப்பு நிற கோர்ட்டும் அணிந்திருந்தவனோ தலையை ஜெல் வைத்து இழுத்து இருக்க , ஒரு கரம் அருகில் இருந்த நாற்காலியின் மீது இருக்க , வலது கையோ , மேகா கரம் தொட்டு போடப்பட்ட கட்டோடு டேபிள் மீது தாளம் போட்டுக்கொண்டிருக்க ,அடிபட்ட எந்த வித சோர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தவனது தோரணையில் ஆளை அசத்தும் கம்பீரம் அப்பட்டமாய் தெரிந்தது .
தீரன் என்றால் சொல்லவா வேண்டும் ! கம்பீரத்துக்கு அங்கே குறைவேது?
அங்கிருந்த பெண்கள் தொடங்கி அனைவரின் பார்வையும் அவன் மேலே படிந்திருக்க , அவனது பார்வையோ மேகாவின் விழியை தாண்டி அங்கும் இங்கும் பேருக்கு கூட அசையவில்லை . ஆனால் அவளோ முகத்தில் போட்ட பவுண்டேஷனை தாண்டி வழிந்த வியர்வையை ஒற்றியபடி அமர்ந்திருக்க , இஷிதா தான் கோபத்தில் பற்களை கடித்து கொண்டு இருந்தாள் .
அவளுக்கு அக்னியை பார்த்தும் பயம் ,மேகா மீதும் கோபம், அந்த இடத்தில் ஏதும் பேசவும் முடியவில்லை . ஆக தனக்குள் கனன்று வந்த கோபத்தை தண்ணீரை குடித்து அணைத்து கொண்டவள் ,
” ஏன் டி இவனையும், அவனையும் இங்க கூட்டிட்டு வந்த ?” மெல்லிய குரலில் மேகாவிடம் பற்களை கடித்தவள், அக்னியை பார்த்து அசடு வழிந்தாள். ஆனால் அவன் பேருக்கு கூட அவளை கவனிக்க வில்லை .
” நான் என்ன ஆசை பட்டா கூட்டிட்டு வந்தேன் ? வெளியே போய்ட்டு வரேன்னு சொன்னேன் , உடனே யாருக்கோ கால் பண்ணினான், கருப்பு கார் வாசலுக்கு வந்துச்சு , அஷோக் வந்தாரு , ரெண்டு நிமிஷம் ரூம் குள்ள போனான் டிப் டப்பா வந்து நிக்கிறான் , அட்ரஸ் கேட்டான் சொன்னேன் கூட்டிட்டு வந்துட்டான் ” மெதுவாக இஷிதாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள் .
” என்னாச்சு என்ன பேசிட்டு இருக்க வர்ஷினி ? “அவளது மிரட்சியான முகபாவத்தை பார்த்தபடி கேட்டான் .
” ரெஸ்ட் ரூம் போகணுமாம் சார் ” இஷிதாவிடம் இருந்து பதில் வந்தது .
மேகா , ‘நான் எப்போ டி அப்படி சொன்னேன் ‘என்பது போல் தோழியை பார்த்தாள்.
” அதை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே வர்ஷினி , போ மா போய்ட்டு வா ” முரட்டு குரலில் காதல் வழிந்தது .
“ம்ம் ” மேகா சட்டென்று எழுந்து கொள்ள ,
” ஒரு நிமிஷம் , ஏய் நீயும் கூட துணைக்கு போ ” என்றான் இஷிதாவை அதட்டியபடி , ‘ அது என்ன ஏய் ?’ இஷிதாவிற்கு கோபம் தான் வந்தது, ஆனாலும் அவன் சரித்திரம் அறிந்தவளால் அவனிடம் எகிறி பேச முடியாமல் போக, தலையசைப்போடு மேகாவுடன் சென்றாள் .
விடாது துரத்தும் அவனது பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று வாஷ்ரூமிற்குள் புகுந்து கொண்ட மேகாவுக்கு உடல் நடுக்கம் மட்டும் கொஞ்சமும் குறையவில்லை ,
“என்னடி இவன் ? பீமன் மாதிரி வந்து மொத்த இடத்தையும் அடச்சிட்டு உக்கார்ந்திருக்கான் ” பின்னாலே வந்த இஷிதா புலம்பி தீர்த்தாள் .
” நான் என்ன பண்றது டி ?” மேகா இயலாமையுடன் கூறினாள் .
” எந்திச்சு போகவும் முடியல , முறைக்கிறானா என்னன்னு ஒன்னும் புரியல ,ஆமா உன்னை ஏன் அப்படி பாக்குறான்? “
” அதான் டி எனக்கும் தெரியல ?”
” என்ன தான் டி தெரியும் உனக்கு? ” என்று சலித்து கொண்டவள் ,
“இன்னும் கொஞ்சம் நேரத்துல ரித்து வருவான் டி , அவன் வரும் பொழுது இவன் இருந்தா நல்லா இருக்காது ?”என்றாள் இஷிதா .
” பயப்படாத இஷு, ரித்து அண்ணா கேட்டா கனகராஜ் அங்கிள் சொல்லி தான் அவர் இருக்காருன்னு சொல்லிக்கலாம் , உன் அண்ணாக்கிட்டா நான் பேசிக்கிறேன் , நீ பயப்பட வேண்டாம் ,உன்னை திட்டமாட்டாரு ” என்ற மேகாவை ஏற இறங்க பார்த்த இஷிதா ,
‘எத என் அண்ணனை பார்த்து நான் பயப்படுறேனா ?ஓ அவன் திட்டிருவானோ ?இவ வேற , அவன் ஏன் வரான்னு தெரியாம அவனையே அண்ணன்னு சொல்றா , டேய் அண்ணா இந்த ட்யூப்லைட் தான் உனக்கு வேணுமா டா, சரியான தத்தி டி நீ ‘ மானசீகமாக மேகாவை எண்ணி தலையில் அடிகொண்டாள் இஷிதா .
பேசிவிட்டு கதவை திறந்து கொண்டு இஷிதாவும் மேகாவும் வெளியே வர , அப்பொழுது அவர்கள் அருகில் வந்த பெண் ஒருவள் இஷிதாவிடம் வந்து ,
” ஏய் இஷு உன் கூட வந்திருக்கிறது மிஸ்டர் அக்னி தீரன் தானே ?” தொலைவில் இருந்து தீரனை பார்த்தபடியே முகத்தில் ஆர்வம் மின்ன கேட்டாள் .
” ஆமா ” மேகாவை பார்த்தபடி இஷிதா பதில் கூறினாள் .
” ஐயோ அவரை பத்தி ஏகப்பட்ட மேகசின்ல படிச்சிருக்கேன் டி ” முகத்தில் அவ்வளவு பூரிப்பு .” நேர்ல பார்க்க ஹீரோ மாதிரி தாடியெல்லாம் வச்சிட்டு செம கண்ட்சம்மா இருக்காரு ” அவன் குணம் அறியாது அவனை ரசித்தாள் .
” பாம்பு கூட தான் அழகா இருக்கும் , கிட்ட போனா தானே அது வேலைய காட்டும், இவ வேற அவன் குணம் தெரியாம ” என இஷிதா முணுமுணுக்க மேகா சிரித்தே விட்டாள். ஆனால் அதெல்லாம் அந்த பெண்ணின் காதில் எங்கே விழுந்தது அவள் தான் அவனை பார்வையால் அளவெடுத்துக்கொண்டிருந்தாளே .
“ஆமா அவரு ரொம்ப பெரிய இடமே, உனக்கு எப்படி அவர் பழக்கம் ?” என்று கேட்க ,
‘என்னடி சொல்லவா என்பது போல இஷிதா மேகாவை பார்க்க ,மேகவோ தன் கண்களாலே வேண்டாம் என்று சொல்ல’ சிரித்தவள் ,
“அப்பாக்கு ஃப்ரண்ட் டி ” என்றாள் .
“ஓ சரி எனக்கு கொஞ்சம் இன்ட்ரோ பண்ணி விடறது ” என்றவளை ஏற இறங்க பார்த்தவள் ,” அவரு ஒரு மாதிரி டைப் டி உனக்கு செட் ஆகாது ” இஷிதா சமாளித்தாள் .
” உனக்கு பொறாமை , எங்க நான் அவரை கரெக்ட் பண்ணிருவேன்னு , நீ ஒன்னும் இன்ட்ரோ பண்ணி விட வேண்டாம் ,நானே பார்த்துக்கறேன் ” என்றவள் தன் பர்ஸை திறந்து கொஞ்சம் டச்சப் செய்து ,
” நான் அழகா இருக்கேன்ல ?” என இஷிதாவிடம் கேட்க , அவளது வதனத்தை பிடித்து இரு கன்னங்களையும் மாறி மாறி பார்த்த இஷிதா ,அக்னியின் கரங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அந்த பெண்ணின் ஒரு பக்க கன்னத்தை தனது கையை வைத்து அளந்தவள் ,” ஓகே ” என்று கூற ,
அவளோ ,” ஏய் என்ன பண்ற? இப்போ தான் டி டச் அப் பண்ணினேன் , அதுக்குள்ள கலைச்சிடாத” என முகத்தை சுளிக்க ,
” அது ஒன்னும் இல்லை , அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு , கோபம் வந்தா செவில்லையே சாத்துவாரு , உன் கன்னம் வேற நல்லா மெத்த மாதிரி அளவா அவர்கிட்ட அடிவாங்க செஞ்ச மாதிரியே இருக்கா, அதான் பார்த்தேன் ” என்று இஷிதா கூற ,
” அவரை பத்தி தப்பா பேசி அவர் இமேஜை டேமேஜ் பண்ணாத இஷிதா , இவ்வளவு பொறாமை உனக்கு வேண்டாம் ” என்றவள் முகத்தை திருப்ப ,
அந்த பெண் மீது இரக்கம் கொண்ட மேகா ,
” நீங்க அவர் கிட்ட போகாதீங்க அவர் கொஞ்சம் வித்யாசமானவரு ” என்று கூற
” ஓ உனக்கு ரொம்ப தெரியுமா ?வந்துட்டா ஆளும் ட்ரஸும் , பார்ட்டிக்கு எந்த டிரஸ் போடணும்ன்னு கூட தெரியாம, புடவை கட்டிட்டு வந்துட்டு பார்க்கிறத பாரு , நாட்டுப்புறம் ” என்றவள் தன் கூந்தலை மேகாவின் முகத்தில் அடிக்க பின்னால் போட்ட படி செல்ல ,
” ஏய் ” என இஷிதா கோபத்தில் சீற ,அவளை தடுத்த மேகா ” விடு டி ” என்று தோழியை சமாதானம் படுத்த ,மேகாவுக்கு தான் அக்னி அந்த பெண்ணிடம் ஏதும் கடினமாக நடந்துவிடுவானோ என்று பயமாக இருந்தது.
“பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு டி ” மேகா கையை பிசைந்தாள் .
” விடு நாலு சாத்து சாத்தட்டும், அப்போ தான் அவளுக்கு புத்தி வரும் ” என இஷிதா ஆர்வத்துடன் அவர்களையே பார்க்க .
அக்னியின் அருகே சென்ற அந்த பெண் ,” ஹாய் சார் ஐயம் மதனா ” இழைந்தபடி தன் கரங்களை நீட்டினாள் .
அவளை ஒரு பார்வை பார்த்தவன் ,
” …. “இருந்துட்டு போ என்கின்ற தோரணையில் தன் தோளை குலுக்கிவிட்டு மீண்டும் மேகாவின் வரவையே எதிர் பார்த்து கொண்டிருக்க , மதனாவின் தன்மானம் மிகவும் அடிவாங்கியது .
‘ பெரிய ஆளு அப்படி தான் இருப்பாரு ‘ என்று தன் மனதை தேற்றியவள் ஒட்டவைத்த புன்னகையோடு ,
” உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ” என்றபடி அவன் அருகில் இன்னும் நெருங்கி வர ,
அவளை பார்த்தபடி,
“ம்ம்ம் ” என்றவன் தன் உள்ளங்கையை பார்த்தபடி தன் தாடியை நீவ அவன் கண்கள் தீவிரமாக மாறியது .
“என் கூட டான்ஸ் பண்ண வாரீங்களா சார் ” அவனது பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டாள் .
” எடு டி கைய ” ஒருமையில் விழித்தவனின் பார்வை தன் கோர்ட்டின் மேல் , அவள் எதார்த்தமாக வைத்த அவளது கரத்தை பார்த்து விட்டு ,அவளிடம் மீண்டது.
முதலில் திகைத்தவள், பிறகு அவனிடம் இருந்து விலகி நின்றாள் .
அவனது துஷ்ட பார்வையை கண்டவளுக்கு பயத்தில் நெஞ்சம் அடைத்தது ‘ அவன் குரலும் அவனது பார்வையும் ‘ என மனதில் எண்ணியவளுக்கு அவனை பார்க்கவே அச்சமாக இருக்க, அவமானத்தில் கண்ணீர் கண்களில் இருந்து இறங்க , அவனை பாவமாக பார்த்தாள் .
” போ ” இருக்கையில் இருந்து எழுந்தபடி எச்சரித்தான், அரண்டவள் அழுதுகொண்டே சென்றுவிட , அந்த காட்சியை கண்ட இஷிதாவுக்கு முகத்தில் திருப்தியான புன்னகை மலர் ,
மேகாவுக்கு,’ ஒரு பெண்ணிடம் இப்படியா நடப்பது ?’ என்கின்ற ஆதங்கத்தில் முகம் வாடியது .
அவர்கள் இருவரும் அழுது கொண்டே செல்லும் மதனாவை பார்த்தபடி அக்னியின் முன்னால் வந்து அமர , அதுவரை இறுக்கமாக இருந்த அக்னி மேகாவை கண்டதும் விடுமுறை கண்ட சிறுவன் போல இறுக்கம் தளர்ந்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான் .
ஆனால் மேகவோ வழக்கம் போல ‘ இவன் தொல்லை எப்பொழுது முடியும் ?’ என்று மனதிற்குள் நினைத்தபடி அமர்ந்திருந்தாள், அவளிடம் மறந்தும் கூட புன்னகை இல்லை .
மீண்டும் மூவருக்கும் இடையே கனத்த மௌனம் நிலவ , அதை முதலில் உடைத்தது என்னவோ அக்னி தான் ,
” யாரையோ பார்க்கணும்ன்னு சொன்ன , ஆளையே காணும் ” இரண்டு கரங்களையும் தன் அருகில் இருந்த இரு நாற்காலியில் அகல விரித்து வைத்த படி கேட்டான் .
” இப்போ வந்துருவாங்க சார் ” நலிந்து ஒடுங்கி அவள் குரல் வெளிப்பட்டது .
“ம்ம் ” என்று அவன் சொன்ன மறுகணம் அக்னியின் சட்டையை ஒருவன் இறுக்கமாக பற்றியிருக்க , தீரனின் கண்கள் கோபத்தில் சிவந்தது .
” ஏன் டா என் ஃப்ரண்ட திட்டின ” கோபத்தில் அக்னியின் முகத்தை நேருக்கு நேராக பார்த்தபடி கத்தினான் அந்த புதியவன் .
அந்த ஆடவனின் இந்த செயலில் மேகாவுக்கும் இஷித்தவுக்கும் பக்கென்று ஆனது .
அக்னியை பற்றி நன்கு அறிந்திருந்த மேகாவுக்கோ உள்ளுக்குள் திகிலாக இருந்தது . இன்று காலை நடந்த சம்பவம் கண் முன்னால் வந்து போக அதிர்ந்தே விட்டாள் .
அவ்வளவு தான் அந்த ஆடவன் முகத்தில் இடியென ஒரு அடி விழ , அந்த ஆடவனுக்கு உலகமே தலைகீழாக சுற்றுவது போல பார்ட்டி ஹால் சுத்த, தீரன் கொடுத்த ஒரே அறையிலே ஒரு ஓரமாக அவன் விழுந்து கிடந்தான் .
தீரனோ கீழே விழுந்த அந்த ஆடவனை பார்த்தபடியே சிகரெட்டை எடுத்து பற்றவைக்க , அந்த புதியவனோ விண் விண் என்று எறிந்த தன் கன்னத்தை பொத்தியபடி எழுந்து ,
” பேசிட்டு இருக்கும் பொழுது ஏன் சார் அடிசீங்க ?” என்று கேட்டான் . தீரனோ தான் இருந்த நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு எழுந்தவன் எதுவும் பேசாமல் தன் கோர்ட்டை கழற்றி நாற்காலியில் போட்டு , தன் முழு கை சட்டையின் பொத்தானை கழற்றி அதை தன் முழங்கை வரை ஏற்றி விட்டு , தான் அணிந்திருந்த கருப்பு நிற கை கடிகாரத்தை சற்று இறக்கி தன் கைக்குள் வைத்து மூடி கொண்டு, அவனை எரித்து விடுவது போல பார்க்க , அக்னியின் செய்கையில் அதிர்ச்சியுடன் அவன் எச்சில் விழுங்கினான் .
இத்தனைக்கும் தீரன் எதுவுமே பேச வில்லை , ஆனால் பார்தானே ஒரு பார்வை !அந்த கொடூர பார்வையிலே கீழே விழுந்தவனுக்கு சர்வமும் ஒடுங்கியது . பார்த்தே அவனது உயிரை பாதியாக்கினான் .
தீரனின் முகத்தில் அப்படியொரு வெறி . சிவந்த விழிகள் அவன் உக்கிரத்தின் அளவை கூறியது .
இஷிதாவோ தலையில் கைவைத்தபடி நிற்க ,மேகாவுக்கு நடக்க போகும் அனைத்தும் விளங்கியது .
ஆனால் என்ன செய்வது? என்று சிந்திப்பதற்குள் அந்த ஆடவனின் தாடையை உடைத்திருந்தான் அக்னி . இவ்வாறு நொடி தாமதிக்காது அந்த ஆடவனை அவன் அடிக்க, முகவாயில் ரத்தம் கசிய நின்றவனை பார்த்து கலங்கியவள்,
“தீரன் ப்ளீஸ் விடுங்க ” என அலறியபடி அவனை நெருங்கியவள் தீரனின் கரம் பிடித்து இழுக்க , அதீத கோபத்தில் இருந்தவன் அவள் ஸ்பரிசம் பட்டதும் மூச்சு வாங்க தன் ஓங்கிய கையை இறக்கிவிட , அந்த ஆடவனோ தீரனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு அங்கிருந்து ஓட ,ஓடும் பொழுதே அருகில் இருந்த மேகாவையும் கீழே தள்ளிவிட்டு ஓட, அவளோ நிதானம் இன்றி அப்படியே முன்னால் இருந்த நாற்காலியில் மோதி கீழே விழுந்தாள்.
” டேய் ” அக்னியின் கர்ஜனையில் ஓடியவன் பயத்துடன் திரும்பி பார்க்க , தீரன் வேகமாக அவனை நெருங்கவும், மேகா இஷிதாவின் உதவியுடன் தன் தலையை பிடித்தபடி எழுந்து நின்று அக்னியை தடுக்கவும் , அவன் கவனம் மொத்தமும் மேகா பக்கம் விழ, அவனது கண்களில் அப்படி ஒரு தவிப்பு .
” வர்ஷினி வலிக்குதா? ” அவளது காயத்தை பார்த்தபடி கேட்டான் .
” அக்னி ப்ளீஸ் என்னால முடியல ” அவள் அக்னி மேல் உள்ள கோபத்தில் எரிச்சலோடு கூற , அவனோ அவளுக்கு தான் முடியவில்லை என்று எண்ணி கண் இமைக்கும் நொடியில் மேகாவை கையில் ஏந்தி கொண்டு ஓடினான் .
மேகாவை தூக்கி காரில் அமரவைத்தவன் , தன் பின்னால் தயங்கியபடி நின்ற இஷிதாவை பார்த்து ,
” என்ன யோசிச்சிட்டு இருக்க ? ஏறு வண்டில யூஸ்லெஸ் ” தாறுமாறாய் திட்டினான் .
” ஹாங் இதோ ” அவனது பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் தோழியின் அருகே ஏறி அமர்ந்தாள், பெண்கள் இருவருக்கும் முழி பிதுங்கியது .
” டேய் என்ன பார்வை ?வண்டிய எடு டா ” ட்ரைவரை அதட்டியபடி மேகாவின் மறுபக்கம் வந்து அமர்ந்தான் .
” என்னாச்சு மா? ரொம்ப வலிக்குதா ? சீக்கிரம் போயிரலாம் ” அவனது அதிரடியான செயலில் பயத்தில் முகம் வெளிற இருந்தவளின் முக மாற்றத்தை தவறாக எண்ணி பதறியவன் , அவளை படுத்தி எடுத்தான் .
ட்ரைவர் அக்னியின் சீற்றத்தால் பயந்து காரை தாறுமாறாய் ஓட்ட, ஏதோ கொஞ்சமாக குலுங்கியது அவ்வளவு தான் ,அதற்காக
” டேய் என்ன ஓட்டிட்டு இருக்க ? மெதுவா வேகமா போ ” ட்ரைவரை ஒருவழி பண்ணினான் .
மேகா நடுங்கி போய் இருக்க , இஷிதாவின் பார்வை அக்னி மீது சுவாரசியமாக படிந்தது . அவள் கேள்விப்பட்ட அக்னி, அவள் பார்த்த அக்னி வேறு அல்லவா ,அவனது இந்த பரிமாற்றம் அவளது சிந்தனையை கிளறியது .
கார் மருத்துவமனை வாசலில் வந்து நிற்க , மேகா காரை விட்டு இறங்காமல் இருக்க ,அவள் பக்கம் வந்தவன் ,
” என்னாச்சு வரு ” என்று கேட்டான் .
“அக்னி எனக்கு வலி “
“ரொம்ப வலிக்குதா , டாக்டரை இங்க வர சொல்லவா ” அவளை பேச விடாமல் படுத்தி எடுத்தான் .
” இல்லை வரேன் ” அவள் காலை தரையில் வைக்க வில்லை அவன் கையில் குழந்தையாய் தவிழ்ந்தாள் .
” அக்னி இறக்கிவிடுங்க ப்ளீஸ் ” குரல் அவன் செவியை அடையும் முன்பே காற்றில் கரைந்தது .
” டாக்டர் எங்க ?” அனைவரையும் பார்த்து கத்தியபடி வந்தான் .
” அச்சோ அக்னி ப்ளீஸ் மெதுவா ” அனைவரும் அவர்களை பார்க்க அவளுக்கு தான் அவமானமாக இருந்தது .
” சொல்லுங்க என்னாச்சு ?” மருத்துவ ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டமில்லாமல் , பொறுமையாக கேட்க ,
” அடி பட்டு வலியில துடிக்கிறாங்க சீக்கிரம் வாங்க ” சீறினான் .
” உள்ள கொண்டுவாங்க ” என்றார் பொறுமையாக , மேகா அவன் கரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டாள் , ” இல்லை இப்படியே இரு” உறுதியாக கூறினான் .
அறைக்குள் நுழைந்தவன் அவளை படுக்கையில் படுக்க வைத்து ” டாக்டர் எங்க ” என்றான் கர்ஜிக்கும் குரலில்,
“டாக்டர் முக்கியமான ஆபரேஷன்ல இருகாங்க சார் வருவாங்க ” என்று அவர் கூறவும் எரிச்சலில் நெற்றியை நீவியவன் , மேகாவை பார்க்க அவளோ ,”ப்ளீஸ் ” என கண்களால் கெஞ்ச ” டாக்டர் இங்க வரணும் ” என்றான் .
” சார் முதல்ல ஃபார்ம் ஃபில் பண்ணுங்க , டோக்கன் போடுங்க இது தான் இங்க ரூல்ஸ் ” என்று அந்த நபர் சொல்ல ,
அவனோ,
” எனக்கு ரூல்ஸை உடைச்சு தான் பழக்கம் , இப்போ இங்க உங்க டாக்டர் வரணும் ரைட் நவ் , இல்லை உன் பல்லு உடையும் ” பற்களை கடித்தபடி அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியது தான் தாமதம் , மறு நிமிடமே மருத்துவர் அந்த அறையில் இருந்தார் .
அவனுடைய செயலை கண்டு மேகாவுக்கு சங்கடமாக இருக்க எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் .
“வர இவ்வளவு நேரமா? வந்து பாருங்க ” கடித்து துப்பாத குறையாக மருத்துவரிடம் பாய்ந்தான் .
” இதோ சார் ” பணிவாக பேசினார் , அக்னி தீரன் என்னும் பெயர், சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் செல்வாக்கு , அவ்வாறு பேச வைத்தது .
” சார் இது சின்ன அடி தான் இதுக்கெல்லாம் ட்ரீட்மென்ட் தேவை இல்லை ” என்றார் டாக்டர் .
” ஆர் யு மேட் ? உனக்கென்ன பைத்தியமா ? அவ முகத்தை பாரு வலியில எப்படி உக்கார்ந்திருக்கான்னு , நீ ஒன்னும் இல்லைனு சொல்ற “
” சார் ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க இல்லைனா அவர் விட மாட்டார் ” மேகா டாக்டரிடம் கெஞ்ச , அவரும் நிலைமை உணர்ந்து சின்னதாக ஒரு கட்டு போட்டுவிட , அங்கிருந்து கிளம்புவதற்குள் ,
‘ காயம் எப்பொழுது சரியாகும் ?
எவ்வளவு நாள் மருந்து சாப்பிட வேண்டும் ?
வலி இருக்குமா ?’ என கேள்விகள் கேட்டு ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு மருத்துவரை ஒருவழி பண்ணிவிட்டு தான் அவன் மேகாவை அழைத்து கொண்டு வீட்டிற்கே வந்தான் .
தொடரும்