“மிஸ். ஜென்னிதா வந்துட்டாங்க பாஸ்” என்று மனோ ஹோட்டலின் மேல்தளத்தில் இருந்த அலுவலக அறையில் நின்றிருந்த ராகவிடம் அறிவிக்க, அவனோ அதற்கு முன்னதாகவே அவள் வந்துவிட்டதை பார்த்துவிட்டான்.
அங்கிருந்த 75 இஞ்ச் LED டிவியின் மூலம் ஜென்னிதா லாபியில் காத்திருப்பாய் நின்று கொண்டிருப்பதை ராகவ் இங்கிருந்தபடியே கவனித்திருந்தான்.
அவன் முகமெல்லாம் பலநூறு வால்ட் பல்புகளின் பிரகாசத்தில் மின்னிக் கொண்டிருந்தது.
ஜென்னி உள்ளே நுழைந்த மாத்திரத்தில் இருந்து, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளின் உயரமும் கச்சிதமான உடல் அமைப்பும் தலை வணங்காத பார்வையும், நிமிர்ந்த நடையும் அவனை கட்டியிழுக்க சட்டென்று ‘அரேபிய குதிரை டி நீ’ என்று சொல்லிவிட, அருகில் இவனையே நோட்டம் விட்டிருந்த மனோவின் காதில் அவன் சொன்னது தெள்ளத்தெளிவாய் விழுந்தது.
“கரெக்ட்தான் பாஸ்” என்று சொல்லி மனோவின் முகம் ஒளிர்ந்தது.
அந்த கணம்தான் தன்னிலைக்கு மீண்டு வந்தான்.
அதோடு மனோ இருப்பதை கவனிக்காமல் அப்படி ஒரு வார்த்தையை விட்டுவிட்டோமா என்று எண்ணிக் கொண்டவன்
மனோ மீண்டும் “நான் ரொம்ப நேரமா இங்கதான் இருக்கேன்… நீங்கதான் இங்க இல்லை போல” என்க,
ராகவின் முகம் கோபத்தால் சிவந்தது.
“மனோ யூ ஆர் க்ராஸ்ஸிங் யுவர் லிமிட்ஸ்” என்று சொல்லி அவன் கடுப்பாக
மனோ மிரட்சியோடு
“பாஸ் டென்ஷனாகதீங்க… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்… ” என்று அவன் சரணடைந்துவிட
“உன் விளையாட்டெல்லாம் இரூக்கட்டும்… வந்தவங்களை வெல்கம் பண்ண சொல்லி… விஐபி ரூம்ல உட்கார வைக்க சொன்னியா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் சொல்லிட்டேன் பாஸ்… இப்ப நீங்கதான் வரனும்… அவங்க அங்கே வையிட்டிங்” என்றதும்
ராகவ் குரூரமான பார்வையோடு
“கொஞ்ச நேரம் வையிட் பண்ணட்டுமே… என்ன இப்போ? !” என்றான்.
மனோவிற்கு தன் பாஸின் செய்கை ஒரளவு புரிந்தது. இங்கே அவளை வரவழைக்க சொன்னதே அவன் ஸ்டேட்டஸை அவளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத்தான்.
இன்னொரு பக்கம் அவளை பார்க்க விருப்பமிருந்தாலும் தன் ஈகோவை விட்டு இறங்கி போய்விட கூடாது என்ற கர்வமும் இருந்தது.
ஆனால் இதே ராகவ் ஒருநாள் அவனின் கர்வம் ஈகோ கௌரவம் என எல்லாவற்றையும் விடுத்து அவள் ஒருத்திக்காக தவம் கிடக்கப் போகிறான் என கனவிலும் எண்ணியிருக்கமாட்டான். என்ன செய்ய ? அதுதான் அவனுடைய விதி.
அதனை எடுத்த பேசியவன் ராகவிடம் “பாஸ்… சையத் சார் வந்துட்டாராம்… அவரும் விஐபி ரூமுக்கு போயிட்டிருக்காரு” என்றான்
ராகவின் முகம் இருளடர்ந்து போனது. தனக்கு முன்னதாக சையத் அவளிடம் அறிமுகமாவதா. கூடவே கூடாது ?
அவன் மனம் ஏதோ எச்சரிக்கை ஓலியை எழுப்ப அவசர அவசரமாய் தன் அறையைவிட்டு வெளியேற மனோ அவன் எண்ணம் புரியாமல் “பாஸ் என்ன ?” என்று கேட்டபடி பின்னோடு ஓடி வந்தான்.
அந்த குளுகுளு அறையில் நடுநாயகமாய் போட்டிருந்த ராட்சத சோபோவில் கால் மீது கால் போட்டபடி நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் ஜென்னித்தா.
அந்த அறையில் ஒருவித மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருக், அதனை கேட்டபடி அவள் கண்கள்மூடி லயித்திருந்தாள்.
அவள் பின்னோடு நின்றிருந்த ரூபா
நெருங்கி “என்ன ஜென்னி ?… ராகவ் சார் உங்ககிட்ட பேசனும்னு அவ்வளவு ஆர்வமா இருந்தாரு… இப்ப என்னடான்னா இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறாரு… அதுவும் அவர் சொன்ன டைமுக்குதானே வந்திருக்கோம்” என்று காதோடு முணுமுணுத்தாள்.
அவள் கண்களை திறவாமலே “விடு ரூப்ஸ்… இதெல்லாம் சகஜம்… நான் அவருகிட்ட சீன் போட்டு என் கெத்தை காண்பிச்சேன்… இப்போ மிஸ்டர். ராகவ் அந்த ப்லீமை திருப்பி எனக்கு ஓட்டிறாரு” என்றாள்.
ரூபா அதிர்ந்து அவளை பார்த்தாள். அப்போது அவள் அன்று வேண்டுமென்றேதான் அப்படி பேசினாளா?
ஜென்னியின் செயல்களை கூடவே இருக்கும் ரூபாவாலும் கணிக்க முடிவதில்லை.
அருகாமையில் இருப்பவளுக்கே அவளை கணிப்பது சாத்தியம் இல்லை எனும் போது எதிரே இருப்பவர்களுக்கு எவ்விதம் சாத்தியம் ?
இவ்விதம் ரூபா சிந்தித்து கொண்டிருக்கும் போதே சையத் எந்தவித தங்குதடையுமின்றி விஐபி அறைக்குள் நுழைந்தான்.
அவன் ராகவின் நெருங்கிய தோழன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே. அதற்கு பின் அவனை யார் தடுப்பது.
அவன் உள்ளே வருவதை பார்த்த ரூப்ஸ் “என்ன ஜென்னி ? ராகவ் சார் வருவாருன்னு பார்த்தா இவர் யாரு ?” என்று ஹிந்தியில் கேட்க
ஜென்னி விழிகளை திறந்தவள் அவனை பார்த்து “இவரூ டைரக்டர். சைய்த்… ராகவ் சாரோட க்ளோஸ்… ப்ரண்ட்… இவரோட அடுத்த படத்துக்காகதான் என்னை புக் பண்ண வர சொல்லி இருக்காங்க ரூப்ஸ்” என்று உரைத்திருக்கும் போதே அவன் இவர்கள் அருகில் வந்தான்.
தன் கரத்தை நீட்டியபடி”ஹாய் ஜென்னி… ஐம் டைரக்டர். சையத்… ராகவோட க்ளோஸ் ப்ரண்ட்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள,
அவளும் மரியாதையோடு எழுந்து நின்று அவன் கரத்தோடு கோர்க்க ராகவ் அந்த காட்சியை பார்த்தபடி அறைக்குள் நுழைந்தான்.
உள்ளூர அவனுக்குள் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ஜென்னி சையத்தை தெரியாதது போல “நைஸ் டூ மீட் யூ சையத்… பட் உங்களை பத்தி மிஸ்டர். ராகவ் எதுவும் சொல்லவே இல்லையே…” என்றவள் ரூபாவின் புறம் திரும்பி “அப்படி எதாவது சொன்னாரா ரூப்ஸ்” என்று வினவ வியப்புகுறி அடங்காமல் அவள் தலையை மட்டும் அசைத்து வைத்தாள்.
எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தெரியாதது போல் நடிப்பானேன். ரூபா தானே குழம்பிக் கொண்டாள்.
ராகவ் தன் தவிப்பை எல்லாம் சிரமப்பட்டு மறைத்தவன் சையத் ஜென்னி அருகாமையில் வந்து நின்றபடி “சாரி மிஸ். ஜென்னி… ஒரு முக்கியமான கால் பேசிட்டிருந்தேன்… அதான் லேட்டாயிடுச்சு… ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைச்சிட்டேனா ?!” என்று பொய்யுரைத்து சமாளிக்க ஜென்னித்தா புன்னகை ததும்ப”இட்ஸ் ஒகே” என்றாள்.
மனோ உள்ளூர ‘பாஸோட நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கனும்’ என்று எண்ணிக் கொண்டான்.
இயல்பான புன்னகையோடு எல்லோரும் அந்த சோபாவில் முக்கோண வடிவத்தில் அமர்ந்து கொள்ள,
சையத் இயல்பான பாவனையோடு இருந்தாலும் ஓவியமாய் பார்த்தவளை உயிரும் உணர்வுமாய் பார்த்து உள்ளுக்குள் பிரம்மித்துதான் போயிருந்தான்.
அதே நேரம் ராகவின் பார்வையும் கூர்மையாய் அவளின் அழகை குறி வைத்து ரசித்திருக்க,
ஜென்னியோ எதையும் காட்டிக் கொள்ளாமல் அளவான புன்னகையோடும் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடும் அமர்ந்திருந்தாள்.
அங்கிருந்த பணியாளர்கள் அவர்களுக்கு வகை வகையான உணவும் டிரிங்ஸ் போன்றவற்றையும் பரிமாறினர்.
ஜென்னி சங்கடமாய் “இஃப் யூ டோன்ட் மைன்ட்… அல்கஹாலிக் ட்ரிங்ஸை எல்லாம் எடுத்திர சொல்லுங்க.. எனக்கு அந்த ஸெம்ல் அலர்ஜி” என்றாள்.
“எஸ் எஸ் மேடமுக்கு அலர்ஜி” என்று ரூபாவும் எடுத்துரைக்க
“ஏன் அப்படி?” ராகவ் வியப்புக்குறியோடு அவளை கேட்டான்.
“அதப்படிதான்?! சில ஸெம்ல்ஸ் எல்லாம் என்னால டாலரேட் பண்ணிக்க முடியாது…” என்று சொல்லவும் ராகவ் உடனடியாய் அங்கிருந்த பணியாட்களை வரவழைத்து அவ்விதமே ஹாட் ட்ரிங்ஸ் எல்லாவற்றையும் எடுத்து செல்ல சொன்னான்.
ஜென்னி உணவருந்தி கொண்டே ராகவிடம் “உங்களோட எல்லா படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகுது… அது என்னதான் ஸீக்ரேட்” என்று கேள்விஎழுப்ப அவன் உள்ளுக்குள் குளிர்ந்து போனான்.
ஆனால் அவையடக்கத்தோடு “அதுக்கு நான் மட்டும் காரணமில்ல… இட்ஸ் அ டீம் வொர்க்.. டைரக்டர்ஸ்… ஸ்க்ரிப்ட்னு நிறைய இருக்கு… அதிலயும் என்னோட பல வெற்றிகளுக்கு சையத் என் கூட இருந்ததும் முக்கிய காரணம்” என்று நண்பனை சுட்டிகாட்டினான்.
சையத் உடனே “எனக்கு டைரக்டர்ங்கிற அங்கிகாரத்தை கொடுத்ததே ராகவ்தான்… ராகவ் மட்டும் இல்லன்னா?” என்று உரைக்க
அவள் புருவங்கள் சுருங்க “அப்போ உங்க வளர்ச்சிக்கு மிஸ்டர். ராகவ்தான் காரணம்… வேறு யாருக்கும் பங்கில்லையா!” என்று சையத்தை பார்த்து கேட்க ஏனோ அந்த வார்த்தை அவனை சுருக்கென்று குத்தியது.
அப்படி குத்தி காட்டவே கேட்டாளோ என்று தோன்ற ராகவ் அவளிடம் “என்ன சொல்ல வர்றீங்க ஜென்னி ?” என்றான்.
“நத்திங்… உங்களோட ப்ரண்ட்ஷிப்பை . பார்க்கும் போது ஜெலஸியா இருக்கு”
இப்படி பேசிக் கொண்டே மூவரும் உணவருந்தி முடித்தனர்.
சையத் அப்போது “கேட்கனும் நினைச்சேன்… நீங்க ஒரு மும்பை மாடல் …ஆனா எப்படி நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசிறீங்க” என்று ஜென்னியிடம் கேட்க ராகவும் நிமிர்ந்தபடி “அதானே” என்றான்.
ஜென்னி புன்னகை ததும்ப “நான் படிச்சது வளர்ந்ததெல்லாம் ஊட்டிலதானே… அன் என் பாஃதர் விக்டரும் சென்னையிலதான் படிச்சாரு… அப்புறம் தமிழ் பேசாமஇருக்க முடியுமா ?!” என்று அவர்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்த
“ஓ” என்று சையத் ஆச்சர்யப்பட்டுவிட்டு இதற்காகவாவது அவளை தன் படத்தில் நடிக்க எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்று சிந்தித்தவன் ராகவை
அது குறித்து பேச சொல்லி கண்ணசைக்க அவனும் தலையசைத்தான்.
“ஜென்னி… ஒரு விஷயம் கேட்கலாமா ?! ” என்று ராகவ் மெல்ல ஆரம்பிக்க அவளும் புன்முறுவலோடு “கேளுங்க மிஸ்டர். ராகவ்” என்றாள்.
“உங்களுக்கு மூவி பன்ற ஐடியா” என்று சொல்லும் போதே “நாட் அட் ஆல்” என்று மறுதலித்தாள்.
முதல் பதிலே அவர்களுக்கு சாதகமாக இல்லையே என்று இருவரும் முகம் சுருங்க
ராகவ் அவளிடம் “மாடலிங் பண்ணும் போது மூவிஸ் பன்றதுல என்ன?” என்றான்.
“இல்ல மிஸ்டர்.ராகவ் மூவிஸ்… அது லாங் டைம் கமிட்மன்ட்… தேவையில்லாத ஸ்ட்ரஸ்… எனக்கு அது சரிப்பட்டு வராது”
“கமிட்மென்ட்னு யோசிக்காதீங்க… இது ரொம்ப இன்டிரஸ்ட்டிங்கான ஸ்க்ர்ப்ட்… ரொம்ப சேலஞ்சிங்கும் கூட… ஹீரோயின் சப்ஜெக்ட்… எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு அமையாது” என்றான் சையத்.
“நீங்க இந்தளவுக்கு கேட்கும் போது முடியாதுன்னு சொல்ல கஷ்டமாதான் இருக்கு… பட் ஸாரி… ஐ கான்ட்” என்றாள்.
ஆனால் ராகவும் சையத்தும் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி அவளை சம்மதிக்க வைக்க போராடி கொண்டிருந்தனர்.
அவளும் அசராமல் வேறுவேறு பாணியில் தன் சம்மதமின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் சம்மதிப்பால் என்ற நம்பிக்கை ஒரு நிலையில் சையத்திற்கு விட்டுப் போக ராகவிற்கு அவளை சம்மதிக்க வைத்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம்.
இறுதியாய் “இத பாருங்க ஜென்னி… தமிழ் சினிமா இன்டிஸ்டிரீல… ஏன் இந்திய சினிமாலயே எந்த நடிகைங்களும் வாங்காத ஸேலரியை நான் உங்களுக்கு தர்றேன்… என்ன சொல்றீங்க?” என்று கேட்டுவிட சையத் வியப்பின் விளம்பில் பார்வைகள் விரிய பார்த்திருந்தான்.
அவர்களின் பேச்சுவார்த்தைகள் அடங்கி சிறிதுநேரம் மௌனம் சூழ்ந்து கொள்ள ஜென்னி தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டாள்.
“இத பாருங்க மிஸ்டர். ராகவ்… மனி இஸ் நாட் அ மேட்டர்… என்னோட விருப்பம்… தட்ஸ் அ மேட்டர்… எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை கடவுளே இறங்கி வந்து சொன்னாலும் நான் செய்ய மாட்டேன்… சாரி…” என்றவள்
“தேங்க்ஸ் பாஃர் யுவர் லஞ்ச்” என்று சொல்லிவிட்டு பின்னாடி நின்றிருந்த தன் செகரட்ரியை பார்த்து “ரூப்ஸ் லெட்ஸ் மூவ்” என்றாள்.
சையத் உடனடியாக எழுந்து “வெயிட் ஜென்னி… இப்படி எதையும் தெளிவா புரிஞ்சிக்காம பேசிக்கிட்டு இருக்கும் போதே எழுந்து போறது மேனர்ஸ் இல்ல. அதுவும் இல்லாம ராகவ் இப்போ என்ன தப்பா சொல்லிட்டாரு… இன்னும் கேட்டா அவர் சொன்னது உங்களை பெருமைபடுத்திர மாதிரிதான்” என்று விளக்கமளித்தான்.
“இஸ் இட்” என்று ஆச்சர்யப்பட்டவள் போல் பாவனை செய்தவள்,
பின் ராகவின் புறம் திரும்பி “நீங்க என்னை பெருமை படுத்த எல்லாம் வேண்டாம்… உங்க மனி ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் வேறு யாரிட்டியாவது காண்பிங்க… நான் அதுக்கான ஆளில்ல” என்றாள்.
ராகவ் தன் இருக்கையில் இருந்து எழுந்திருக்காமல் அமர்ந்தபடியே நடந்தவற்றை பார்வையாளனாகவே பார்த்திருந்தான்.
அவளின் அந்த கோபம் நேரடியாய் அவனை பாதித்திருந்தாலும் அதை காட்டிக் கொள்ள கூடாதென்கிற இறுக்கம் அவன் முகத்தில் வெளிப்பட்டது.
புறப்படுவதற்கு முன் அவள் சையத்தை ஆழமாய் பார்த்து “உங்க சுயவிருப்பத்துக்காக நீங்க உங்க பேஃம்லியையே தூக்கி போட்டது
சரி… ஆனா அதே மத்தவங்களுக்குன்னு வந்தா மேனர்ஸ் இல்லாம நடந்திருக்காங்கன்னு சொல்வீங்களா ?!” என்று கேட்டவள் மேலும் அவர்களிடம் எதுவும் கேட்கவோ பேசவோ விரும்பாமல் விரைவாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
புயலடித்து ஓய்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர்கள் இருவரின் மனமும்.
“என்ன அப்படி ஒரு சிட்டுவேஷன்… ?” டேவிட் அழுத்தமாக கேட்டான்.
“அதெல்லாம் நான் நேர்ல சொல்றேனே டேவிட்” என்றாள்.
“அப்படின்னா… நைட் டின்னருக்கு நான் வீட்டுக்கு வரவா ஜென்னி?”
“சியூர்” என்றாள்.
அதோடு அவர்கள் உரையாடல்கள் முடிவுற அழைப்பை இருவரும் துண்டித்தனர்.
*********
நேற்றிரவு மகிழ் சாக்ஷியை பற்றி பேசியவை எல்லாம் மாயாவை ரொம்பவும் காயப்படுத்தியிருந்தது. அதோடு அவனின் நிராகரிப்பு அவளை சொல்ல முடியாத வேதனைக்கு ஆட்படுத்தியிருந்தது.
ஆனால் அவள் அதிகம் வருத்தம் கொண்டது மகிழுக்காகதான்.
அவன் இன்னும் சாக்ஷியின் நினைப்பில் இப்படி ஓயாமல் மருகி கொண்டிருக்கிறானே என்ற கவலை. சாக்ஷி என்று போனாலோ அன்றே அவன் சந்தோஷம் எல்லாம் தொலைதூரம் போனது.
அப்படியே அவன் சிரித்து பழகினாலும் அதுவெளிஉலகத்திற்காக அவன் அணிந்து கொண்ட முகமூடி.
நாளடைவில் அந்த முகமூடி அவன் முகமாகவே மாறிப் போக, போலியான சிரிப்பிற்குள்ளேயே அவன் வாழ்க்கை தொலைந்துவிடுமோ என்ற வேதனை அவளுக்கு.
அவன் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு ஒரு மனைவியாய் தானே அவனுக்கு துணையிருக்க வேண்டும்.
இத்தகைய ஞானோதயம் அவளுக்கு தானாக பிறந்துவிடவில்லை. நேற்று நடந்தவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அவள் தாய் யாழ்முகை அவளை அமர வைத்து பக்கம் பக்கமாய் நிறைய அறிவுரைகளை சொன்னார்.
அதோடு அவர்கள் தனிமையில் இருக்க யாழ்முகையும் மாதவனும் அன்றே அவசர அவசரமாய் பெட்டியெல்லாம் எடுத்து வைத்து கொண்டு அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்படுவதாக சென்றுவிட்டனர்.
யாழ்முகை சொன்ன அறிவுரைக்கெல்லாம் ஏற்ப மாயா என்றும் இல்லாத திருநாளாய் புடவையெல்லாம் உடுத்தி அலங்கரித்து கொண்டு அவ்வப்போது கண்ணாடியை வேறு பார்த்து கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.
தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே அவன் மனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய முடியும் என்று அவள் எண்ணி கொண்டிருக்க, அது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகிறது என்பது மகிழின் மனநிலையை கொண்டே முடிவு செய்ய முடியும்.
ஆதலால் துணிந்து இன்று அவனிடம் தன காதலை சொல்லிவிடுவது என அவன் வருகைக்காக காத்துகிடந்தாள்.