Nachu Annam’s Unnaala ulagam azhagaache! – full novel

Nachu Annam’s Unnaala ulagam azhagaache! – full novel

அருளழகன். கோமதி வெற்றிவேல் பெற்றெடுத்த மகவு.28 வயசு எலிஜபில் பேச்சுலர். ஒரு தடவ சீவினாலே போதும் அந்த நாள் முழுவதும் கலையாமல் இருப்பேன் என்று சொல்லும் அளவு ஜெல் வைத்து சீவப்பட்ட கேசங்கள். கைல ரோலக்ஸ் வாட்ச், கண்களில் தெரியும் நேர்கொண்ட பார்வை, அந்த கூரான விழிகளுக்கு கூடுதல் அழகு நீல நிற கண்கள் அதை மறைக்க வேன ரேபன் கூலர்ஸ், எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்ற பிங்க் கலர் உதடுகள்.

கன்னத்து குழியில விழுந்து எந்திரிக்க முடியாம தவிச்சிட்டு இருக்க பொண்ணுங்க லிஸ்ட் அதிகம். எத்தனை பொண்ணுங்க கூட பழகி இருந்தாலும் இன்ன வரைக்கும் அருள் பீல் பண்ணாத ஒரு விஷயம் காதல்.

பக்கா பிசினஸ்மேன்…அருள் கன்ஸ்ட்ரக்ஷன் அவன் பொறுப்பெடுத்த நாலு வருஷத்துத்துல டாப் கம்பெனி லிஸ்ட்ல கொண்டுவந்ததே அதற்கு சாட்சி.

ஆனா பிஸ்னஸ் மேன் அருளா அவன பார்த்தவங்க ரொம்ப கொஞ்ச பேர் மட்டும் தான். அவனுடைய முகமா எல்லா இடத்துலயும் இருக்கிறது கமல் அவனோட பி ஏ.

பக்கா பிசினஸ்மேன்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிறது ரொம்ப சூப்பர் கூலான வாத்தி.

அப்பா ஆசைக்காக ஒன்பது மாசம் கம்பெனி பொறுப்பு 3 மாசம் அவன் ஆசைக்காக வாத்தியார் வேலை.

பாரபட்சம் பார்க்காம ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் கவனிக்கிற ஒரே வகுப்பு நம்ம அருள்ளோடது மட்டும் தான்.

போரடிக்காம கிளாஸ் எடுக்கிறதில்ல நம்ம அருள் கில்லாடி.

இன்னிக்கி அருள் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்… அவன் தேவதையே பார்க்கிற நாள்.. அப்படியே கிளாஸ் எடுக்கிற நாளும்.

எரும மாடே முதல்ல எந்திரி.. எவ்வளவு நேரம் தான் உன்னை எழுப்புரது. உனக்கு கத்தி கத்தியே பாதி டயர்ட் ஆகிட்டேன்.

 

உன்னை பெத்து வளக்கிறதுக்கு பதிலா ஒரு மாட்ட வளர்த்திருந்தாவது பால் கொடுக்கும்…. நீ எல்லாம் எனக்கு பொம்பள புள்ளைன்னு வந்து பிறந்து இருக்கியே.. உன்னை எல்லாம் என்ன சொல்லித் திருத்துரது..

இன்னும் என்ன என்ன தேவி திட்டி இருப்பாங்களோ அதுக்குள்ளேயும் போர்வைக்குள்ள இருந்து எந்திரிச்சு உட்கார்ந்துட்டா அனு.

அம்மாமா… உன்ன காலையில ஏழு மணிக்கு எழுப்பி விடுங்கன்னு சொன்னேன்.. புது ப்ரொபசர் வராரு கிளாஸ்க்கு…சீக்கிரம் போகணும்னு சொன்னேன்ல நீ என்ன ஒன்பது மணிக்கு எழுப்பிவிடுற…

எது நான் எழுப்பி விடலையா உன்ன ஏழு மணியிலிருந்து எழுப்பறேன் எந்திரிகிறியா நீ..

இவ யாருக்கோ கத்துறான்னு இழுத்துப் போர்த்தி தூங்கிட்டு இப்ப என்ன சொல்றியா. பத்து மணிக்கு காலேஜ் நீ எப்டி போரேன்னு நானும் பாக்குறேன் டி.

ஏன்மா நீ என்னைய பெக்கும்போது பாக்கலையா இரண்டு கால் இருந்திருக்குமே… அதை வச்சு தான் நடந்து போவேன் ஆனாலும் பத்து நிமிஷம் நடந்தா வர காலேஜுக்கு நீ பண்ற அலப்பறை இருக்கே தாங்க முடியல மா.

எது நான் அலப்பறை பண்றேன்னா நீ பண்றது தாண்டி தாங்க முடியல.

சரி விடும்மா இப்ப போய் எனக்கு சூடா டிபன் எடுத்து வை.. இந்தா குளிச்சிட்டு வந்தர்றேன்…

உன்னல்லாம் திருத்தவே முடியாது டி வந்து தொல எடுத்து வைக்கிறேன்.

ஆனாலும் தேவி உனக்கு இம்புட்டு ஆகாது… என்ன திருத்த முடியாதுனு தெரிஞ்சும் டெய்லி நீயும் தான் சொல்லிட்டே இருக்க…

 

என்னது தேவியா உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சு டின்னு சொல்லி டிவி ரிமோட் அனு மண்டையைப் பதம் பார்க்கிறது குள்ளயும் பாத்ரூமுக்குள்ள நுளஞ்சிட்டா…

குளிச்சிட்டு சிகப்பும் ஊதாவும் கலந்த சுடிதாரில் வெளியில வந்த பொண்ண பார்த்து தேவி கவலைப்பட்டதே உண்மை.. அவங்க கவலைக்கு காரணம்..

பால்ல ரெண்டு சொட்டு தேனை விட்டா வர கலரு.. உருண்டை முகம், துருதுருன்னு இருக்கிற கண்கள். பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கின ஒரு அழகு சிலை.இதெல்லாம் விட இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கிற விஷயம் அவளுடைய கூந்தல் மட்டும் தான்.ஆமாம் முழங்கால் தொடுற அளவுக்குள்ள முடி.

அம்மா என்ன சைட் அடிச்சது போதும்… டிபன் எடுத்து வை.. என்னம்மா இன்னைக்கும் இட்லிய செஞ்சு வச்சு இருக்க ஒரு பூரி செஞ்சிருக்கலாம்ல…

ஆமாண்டி இப்படி உனக்கயா செஞ்சு போடுறேன்ல…நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ… உன் மாமியாக்காரி கையால நாலு அடிவாங்கினா தான் என் அருமை தெரியும் உனக்கு.

ஏன்மா பாப்பாவ திட்டுறன்னு சொல்லிகிட்டே அந்த இடத்துக்கு வந்தது சுந்தரம்… அனுவோட ஆருயிர் அப்பா.

நீங்க ஒரு ஆள் போதும்க அவளைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்க.

அவ என்ன பண்ணாலும் கேட்கிறதே இல்ல… நேத்து அந்த ஹரிஷ் குட்டியோட அம்மா சொல்றாங்க.. உங்க பொண்ண கொஞ்ச நேரம் வீட்ல வச்சுக்கோங்க.. அவனுக்கு எக்ஸாம் இருக்கு படிக்க விட மாட்டேங்கிறானு…. எனக்கு ஒரே அவமானமா போச்சு… இவ கூட்டாளி எல்லாம் எல்கேஜி யுகேஜி படிக்கிற பசங்க…இவ பொண்ணு மாதிரியா இருக்கா… சின்ன பசங்க கூட சேர்ந்து விளையாண்டுகிட்டு இருக்கா…

 

 

அம்மா போதும் என்னையே திட்டாத.. நான் நேத்தே ஹரிஷ் கிட்ட கேட்டேன் போய் படிக்கணும்மானு.. அவன் தான் சொன்னான் இல்லக்கா நான் படிச்சு முடிச்சிட்டேன்னு…அப்புறம்தான் விளையாண்டோம்….

ஆமா இதுல உனக்கு பெறும வேற.

அப்பா இப்ப என்ன கொண்டுபோய் காலேஜ்ல விட்டுருங்க.. இல்லைனா இந்த தேவி திட்டியே என் காது ரெண்டையும் பஞ்சர் ஆக்கிடும்.

”சரி வா பாப்பா”

ஆமாங்க இந்தா இறுக்கிற காலேஜ்க்கு வண்டியில் கொண்டுபோய் விடுறீங்களா… இப்படியெல்லாம் செல்லம் கொடுக்கிறதாலதான் உங்க பொண்ணு குண்டாயிட்ட போறா… அவள நடந்து போக சொல்லுங்க…

பாப்பா நீ கார்ர போய் எடு…இந்தா வந்துடுரேன்…. ரொமான்ஸ் பண்ணனும்னு சொன்னா நான் போகப் போறேன்…அதுக்கு எதுக்கு காரை எடுக்க சொல்றீங்க நீங்களே வந்து எடுங்க அப்பா…

பார்த்தீங்களா உங்க பாப்பா பேசுறத…

சரி விடு தேவி அவ சின்ன பொண்ணு தானே நீ ஏன் டெய்லி அவ கிட்ட மல்லுக்கு நிற்கிற…

நான் எங்கங்க மல்லுக்கு நிக்கிறேன்.. உங்க ஆசை மக தான் டெய்லி என்ன கத்த விட்டு டென்ஷன் ஆக்கிறா….

நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் தானே இப்படியெல்லாம் இருக்க முடியும் அதனால அவளையும் கொஞ்சம் ப்ரீயா விடு மா…

ஆமா நீங்களும் கண்டிக்க மாட்டீங்க என்னையும் எதுவும் சொல்ல விடமாட்டீங்க அப்புறம் எப்படி அவளுக்கு பொறுப்பு வரும்..

கல்யாணம்னு ஒன்னு ஆகிடுச்சுன்னா பொறுப்பெல்லாம் தானா வந்துடும் டி.

இப்போதைக்கு அவளைக் கொஞ்சம் ஃப்ரீயா விடு. இப்போ டைம் ஆயிடுச்சு சோ நாங்க ரெண்டு பேரும் கெளம்புறோம் ஈவ்னிங் வந்து உன்னுடைய கச்சேரிய ஆரம்பிக்கலாம்னு சொல்லி பறக்கும் முத்தத்தை பார்சல்ல தேவிக்கு அனுப்பி திட்டுறதுக்கு முன்னாடி அப்பாவும் பொண்ணும் கிளம்பிட்டாங்க…

Epi-2

அன்பே பேரன்பே, பேரன்பே

ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரை மீறும்இவளின் ஆசை

நிறைவேறுப் பார்க்கிறேன்.

நதி சேரும் கடலின் மீது

மழை நீராய் சேருவேன்.

அந்த காருக்குள் சித் ஸ்ரீராம்,ஸ்ரேயா கோசல் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் இரண்டு குரலுக்கும் அனைவரையும் கட்டிப் போடும் காந்தசக்தி உள்ளது.

அதனால்தான் அனுவும் சிறு குழந்தை போல் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டே வந்தாள்.

அவளின் ரசனைக்கு இடையே வந்தது சுந்தரத்தின் குரலும், GV இன்ஜினியரிங் காலேஜ்ம்.

“பாப்பா காலேஜ் வந்துடுச்சு…”

“ஓ…காலேஜ் வந்துடுச்சா நான் அப்படியே அந்த பாட்டுல மூழ்கிட்டேன்பா” “ஓகே பாய் ஈவினிங் பாக்கலாம்பா”

“சரிடா…அங்க போய் ஒழுங்கா படி உங்க அம்மா சொல்ற மாதிரி விளையாடிக்கிட்டு இருக்காம்ம”

“அப்பா இருந்தாலும் அனுவுக்கு இவ்ளோ பெரிய இன்சல்ட் வேண்டாம்பா… ஒரு டாப்பர்ர பார்த்து இப்படி சொல்லிட்டீங்களே..” சிவாஜி கணேசன் வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணி சிரிக்க வச்சே டாட்டா சொன்னா சுந்தரத்துக்கு…

GV இன்ஜினியரிங் காலேஜ்… சுமார் 2000 மாணவர்களை தன்னகத்தே கொண்ட தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்று.

கல்வி ஒரு வியாபாரமா போன நிலையிலும் இன்னி வரைக்கும் பல ஸ்டூடண்ட்ஸ்க்கு பாதி பணம் வாங்கிட்டு எஜுகேட் பண்ற ஒரு கல்லூரி. அதோட முழுப் பெருமையும் GV காலேஜ் ஓட நிறுவனருக்கு மட்டும்தான் சேரும்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் மரம் செடி கொடிகள்.. இதெல்லாம் மத்தவங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாலும்… ஆனா அங்க இருக்க ஸ்டூடண்ட்ஸ்க்கு கேர்ள்ஸ்கு பாய்ஸ் குளிர்ச்சியாவும், பாய்ஸ்க்கு கேர்ள்ஸ் குளிர்ச்சியாவும் தான் கண்ணுக்கு தெரிவாங்க??..(உண்மையை யாரும் வெளியில சொல்ல மாட்டாங்க.. நீயேன் சொல்ற…(என் மைன்ட் வாய்ஸ்??))

அப்படி ஒரு மரத்துக்கு அடில மத்தவங்கள கலாய்ச்சிட்டு இருந்த 7 பேர் கொண்ட குழுவில் அனுவும் போயி ஐக்கியமாகிட்டா.

ஹேய் அமுல் பேபிஸ்… இன்னிக்கு ஏதோ புது சார் வரதா சொன்னாங்களே.. அவரப் பத்தி ஏதாவது தெரிஞ்சுசா டி..-அனு

இல்லடி அனு.. ஒரு விவரமும் தெரியல அந்த மனுஷன் பேரு கூட தெரியலடி-அபி

பேரு தெரிஞ்சா மட்டும் நீ கிளாஸ கவனிக்கவா போற.. ஆனா இவ்வளவு ஃபீலிங்ஸ் எல்லாம் ஆகாது டி அடங்கு-கலை

“நான் கிளாஸ கவனிக்கிறேன் இல்ல குப்புறப்படுத்து தூங்குறேன்.உனக்கு என்னடி கவலை”-அபி

“அதைத்தான் நானும் சொன்னேன் நீ என்ன கிளாசை கவனிக்கவா போறேன்னு..”-கலை

அடச்சீ…உங்க கேவலமான சண்டைய நிப்பாட்டுங்க டி கிளாசுக்கு டைமாயிடுச்சு போலாம் வாங்க…-அனு

“தினகரன் சார் குட் மார்னிங்!”

அடடே…“வாங்க தம்பி இன்னும் உங்களை காணமேனு தான் நினைச்சிட்டு இருந்தேன்னு சொல்லி பிரின்சிபால் சீட்டில்லிருந்து எந்திரிச்சு டோர் வரைக்கும் போய் கைகொடுத்தாரு நம்ம அருளுக்கு…”

தினா சார், “நீங்க ஒரு ஆளு போதும் நான் தான் இந்த காலேஜ் ஓட ஓனர்னு சொல்றதுக்கு”

“ஏன் தம்பி! இப்படி சொல்றீங்க நான் போய் வெளியில யார்கிட்டயாவது சொல்வேனா”

“நீங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்க சார்… ஆனா உங்க நடவடிக்கை காமிச்சு கொடுத்துடும்..”

“இப்ப கூட வாசல் வரைக்கும் வந்து என்ன ரிசீவ் பண்ணத யாராவது பார்த்தா கண்டிப்பா டவுட் வந்திருக்கும்னு சொல்லி தன்னோட மயக்கும் புன்னகையுடன் தினா சார்ர பார்த்து சிரிச்சான்”.

“உங்க உதடு மட்டும் தான் சிரிக்குது தம்பி! ஆனா அந்த கண்ணல்ல லைட்டான கோபத்தை பார்க்கிறேன்.. உங்களால மட்டும் தான் கோபத்தைக் கூட சிரிச்சிட்டே காமிக்க முடியும்.”

“இது ரொம்ப பெரிய ஜஸ்ஸா இருக்கு சார்.. உங்களுக்கு இன்கிரிமெண்ட் வேணும்னா சொல்லுங்க.. சேர்த்து குடுத்துடறேன் ஆனா இப்படி எல்லாம் ஓட்டாதிங்க.”

“தம்பி நான் ஓட்ட எல்லாம் இல்ல! உண்மையைதான் சொன்னேன்”

“போதும் சார்.. விட்டுடுங்க!” “எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு…யாராவது கேட்டா நம்ம ராஜா சாருக்கு பதிலா கெஸ்ட் லேக்சரரா வந்திருக்கேன்னு சொல்லிடுங்க”

“அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்! இனிமே காலேஜ்ல நான் இருக்கிற வரைக்கும் தம்பினு கூப்பிடாதிங்க… எல்லாரு மாதிரி சார்னே கூப்பிடுங்க..”

“சரிங்க தம்பி!”

“சார் இப்ப என்ன சொன்னேன்!”

“ஆஹா அத மறந்துட்டேன்! இனிமே சார்னே கூப்பிடுறேன். உங்களுக்கு கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு… நீங்க கிளம்புங்க சார்.அப்படியே இங்க இருக்க அட்மின்ஸ் நோட்டுல சைன் பண்ணிட்டு போயிடுங்க…”

B.E 4th year நேம் போர்ட் இருக்கிற கிளாசுக்குள்ள அருள் நுழைறதுக்கும், அனு பாக்குறதுக்கும் சரியா இருந்துச்சு…

நான்கு கண்களும் ஒரு நிமிடம் பார்த்துக்கொள்ளும் இடைவெளியில் உதடுகள் இரண்டும் ஒரு சேர வார்த்தைகளை உதிர்த்தது..

“இவனா”

“இவளா”

Epi-3

இவளா” என்று நினைத்த மறுநொடி “குட் மார்னிங் சார்” என்ற கோரஸ் குரல்கள் வந்ததில் அருள் தன் கவனத்தை கிளாஸ் எடுப்பதில் மாற்றிவிட்டான்.

ஒரு நிமிடத்தில் உலகையே சுற்றி வரும் திறமை கொண்ட மனம் அனுவையும் அன்று அருளை சந்தித்த நாட்களுக்கு அழைத்து சென்றது.

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்டால் உனையே தருவாய்…

சித்ராமா குரலில் பாடிய செல் என்னையும் கொஞ்சம் கவனி என்றது அனுவை.

டிஸ்ப்ளேயில் அபி காலிங் என்று வருவதைப் பார்த்து “இந்த லூசு எதுக்கு இப்ப கால் பண்ணுது… இவளுங்க ஏதாவது பிளான் சொல்லி நான் மறந்துடேன்னா தெரியலையே…” இப்படி விடாம கால் பண்ணுதுங்கனு நெனச்சுட்டே போன் அட்டன்ட் பண்ணா.

அட்டன் பண்ண அடுத்த நிமிஷம் “எருமமாடே, கிளம்பிட்டியா இல்லையா! நாங்க எல்லாம் கஃபேக்கு வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு… இன்னும் என்ன தாண்டி பண்ணுவ நீ!” அப்படின்னு மூச்சு விடாம அபி கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நம்ம அனுக்கு இன்னிக்கு டிங்டாங் கஃபேல மீட் பண்ணலாம்னு சொன்னதே ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஆத்தி… மறந்துட்டேன்னு சொன்னா கேவலமா கழுவி ஊத்துவாளுங்களே.. சரி சமாளிப்போம்… “இதோ ஸ்கூட்டி எடுத்துட்டுயிருக்கேன்டி ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவேன்.”

“அம்மா!இந்த பிங்க் கலர் சால் எங்க வச்ச கப்போர்டில் காணலையே…”

“முந்தாநாள் தானேடி அத துவைக்க போட்ட! தொவச்சி அந்த சேர்மேல கெடக்கு பாரு…”

“இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன… எவ்வளவு நேரமா நான் தேடிட்டு இருக்குகேன். ஏன் அவசரம் புரியாம இப்டி பண்ணிட்டு இருக்கீங்கமா..”

“நான் என்னடி பண்ணேன்… நீ தான் வீட்டில் ஒரு வேலையும் பாக்குறது இல்ல.. அந்த டிரஸ் எப்போ துவைக்க போட்டோம்னு கூட உனக்கு ஞாபகமில்லை… ஏழு கழுதை வயசாச்சு இன்னும் எல்லாத்துக்கும் அம்மாவயே கேட்டுக்கிட்டு இருக்குற…”

“அம்மா! தயவு செஞ்சு நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் உன் கச்சேரிய ஆரம்பிச்சிக்கோ” இப்ப நான் கிளம்புறேன்.

“எங்கடி போற அதையாவது சொல்லிட்டு போ..”

“அம்மா பிரண்ட்ஸ் மீட்டிங் டிங்டாங் கஃபேல..”

“அது சரிடி குளிச்சுட்டாவது போ!”

“நீ ஒரு ஆளு போதுமா என் மானத்த வாங்க! நான் குளிக்கலைங்கிறது உனக்கு மட்டும் தானே தெரியும். வந்து குளிக்கிறேன்மா டைம் இல்ல..”

“என்ன கருமத்தையோ பண்ணித் தொலை!”

“ரொம்ப பண்ணாதமா! அதுக்கு தான் பர்பியும்னு ஒன்னு இருக்கே.. அதை அடிச்சுட்டா நான் குளிச்சேன்னா இல்லயானு யாருக்கும் தெரியாது??..”

“உன்னல்லாம் திருத்தவே முடியாது! இன்னிக்கு ஈவ்னிங் கோவிலுக்கு போகனும்…அதனால கொஞ்சம் சீக்கிரமா வந்துடுடி.. உங்க அப்பாவும் வரேன்னு சொல்லிட்டாரு லேட் பண்ணிடாத..”

“அதெல்லாம் கரெக்ட் டைமுக்கு வந்து ஆஜராகிடுவேன்.”

“இப்போதைக்கு என்னைப் போகவிடு தேவி! பிரண்ட்ஸ் போன் பண்ணி டைமாச்சு.. ஒரு சால் எடுத்து கொடுனு சொன்ன குத்ததுக்கு ஒரு பிரசங்கமே வைக்கிற நீ!”என்று சொல்லி தேவிகிட்டயிருந்து ஒரு அடிய வாங்கிட்டே வீட்ட விட்டு கிளம்புனா அனு.

ஸ்கூட்டி எடுக்கும்போது ஆனந்தி கிட்டயிருந்து இன்னொரு ஒரு போன்.. ஐயோ போன் எடுத்தா இவளுங்க திட்டுவாளுங்களே??..

சரி கஃபேக்கு போனதுக்கு அப்புறம் போன் சைலன்ட்ல இருந்துச்சு பார்க்கலைன்னு சொல்லி சமாளிப்போம்….

மெயின் ரோட்டில் போன கால் மணி நேரமாவது ஆகும்.. ஒன் வேல போனா பத்து நிமிஷம் தான் ஆகும். இந்த டைம்ல யாரும் வர மாட்டாங்கனு நெனச்சு ஒன் வேலை தன்னோட ஸ்கூட்டியை அனு திருப்பிட்டா…

ஆனா அவ நேரம் இவ ஸ்கூட்டிய திருப்புறதுக்கும் அருள் கார் வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு…

இவ வரத பார்த்த ஒரு செகண்ட்ல அருள் பிரேக் போட்டுட்டான். அப்படி இருந்தும் ஸ்கூட்டில லைட்டா மோதிடுச்சு.

அருள் இறங்கி திட்டுறதக்கு முன்னாடியே அனு திட்ட ஆரம்பிச்சுட்டா.

“ஏன்யா! கண்ணு என்ன பிரடிலயா வச்சிருக்க…ஒரு அழகான பொண்ணு ரோட்ல வரக்கூடாதே… அப்படியே வந்து மோதிட வேண்டியது…அப்புறம் சாரி சொல்ல வேண்டியது..சரினு சொல்லி லைட்டா சிரிச்சா போதும்…உடனே நம்பர் தாங்கனு கேட்கிறது.கடைசியா நீ இல்லாம நான் எப்டி வாழ்வேன்‌..ஐ லவ் யூ…ஏன் உலகமே நீ தான்னு சொல்ல வேண்டியது…”

“ஏய் முட்டக்கண்ணி! மொதல உன் பிளா பிளாவ நிப்பாட்டு…நீ சொன்ன பாரு ஒரு அழகான பொண்ணுனு அது முதல்ல யாருனு சொல்லிட்டு அப்புறம் மத்தத சொல்லு”(டேய்!இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாது டா..இவ அழகா இல்லயா…ஹீரோயினி மாதிரி இருக்கா மொதல்ல நீ போய் உன் கண்ண செக் பண்ணுனு சொன்ன மனசாட்சிக்கு பெரிய கொட்டா வச்சு ஓரமா அனுப்பிட்டான்)

“யோவ்! என்ன திமிரா…யார பார்த்துனு!!” ஆரம்பிக்கும் போதே அங்க ஒரு கூட்டம் சேர ஆரம்பிச்சிடுச்சு…

என்னமா என்ன பிரச்சனைனு அங்க இருந்த ஒருத்தர் கேட்டவுடனே… “அண்ணா! என் பிரண்ட்க்கு ரொம்ப சீரியஸ்ணா.. அர்ஜென்ட்டா பி பாசிடிவ் ரத்தம் வேணுமுன்னு சொன்னாங்க.. அதனால ஒன் வேயில நுழைஞ்சிட்டேன்ணா.. அதுக்கு இந்த சார்ரு ரொம்ப திட்டுறாரு அண்ணா…”(இவ சொன்ன பொய்யில மனசாட்சி மயக்கம் போட்டே விழுந்துடுச்சு…)

அந்தப் பொண்ணுதான் ரத்தம் கொடுக்க போகணும்ங்கிற அவசரத்துல ஒன் வேல நுழைஞ்சிட்டேனு சொல்லுதே…அப்புறம் ஏன் தம்பி இப்படி சண்டைக்கு போற…

“ஐயோ சார் நான்…. “

அட நிப்பாட்டு தம்பி…அந்த பொண்ணு ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகட்டும்… நீ போமா உன் பிரண்டுக்கு ரத்தம் கொடு…

ரொம்ப தேங்க்ஸ் அண்ணானு சொல்லிட்டு அருள்ள பார்த்து ஒரு வெற்றி சிரிப்பு சிரிச்சிட்டே கஃபேக்கு போனா அனு.

ஏன்டி! இது தான் பத்து நிமிஷத்துல கஃபேக்கு வரதா-அபி

எருமமாடே எவ்ளவு நேரம் தான் உனக்காக வெயிட் பண்றது-சரண்

வாய தொறந்தா வரது ஃபுல்லா பொய்!உண்மைய சொல்லுடி…ஃபர்ஸ்ட் கால் பண்ணும் போது எங்க இருந்த-ஆனந்தி

அது ஒன்னும் இல்லடி….வர வழியில ஒரு சின்ன பஞ்சாயத்து…அத முடிச்சிட்டு வர டைம் ஆகிடுச்சு…பிரபலங்கள்னாலே பிராப்ளங்கள் தானேனு சின்சான் டையலாக் சொல்லி நாலு அடிய வாங்கிட்டு அன்றைய நாளுக்கான கச்சேரி அமோகமா ஆரம்பித்தது…

ஆனா அனுவோட நேரம்….அருளும் அதே கஃபேக்கு தான் பிரண்ட்ஸ் மீட் பண்ண வந்துருந்தான்…

ஒருத்தர ஒருத்தர் பார்த்து பெரிய ஷாக் ஆனாங்களா…இல்ல இவுங்கள எப்டியாச்சு சேர்த்து வைக்கனும்னு நினைச்ச கியூபிட் இவுங்க ரியாக்சன்ன பார்த்து ஷாக் ஆனுச்சானு தான் தெரியல…

“டேய் மச்சி!இங்க இருக்கோம்ங்கிற சவுண்ட் வந்ததுக்கு அப்புறம் தான் அங்க இருந்து நகர்ந்தான்….அப்டியும் அனுவ கிராஸ் பண்ணும் போது எப்போலயிருந்து கஃபேல ஹாஸ்பிடல் ஓபன் ஆச்சு….அப்புறம் என்ன சொன்ன பி பாசிடிவ் ரத்தம் கொடுக்கனும்மா…எங்கமா கொடுத்துடியா அப்டினு கேகும் போதே பேரர் வந்து மேம் உங்க கோல்ட் காஃபினு சொல்லி இன்னும் கொஞ்சம் அனுவ டென்ஷன் ஆக்கியும்,அருள்ளுக்கு இன்னும் கொஞ்சம் அனு மேல கோபத்த கிளப்பிவிட்டும் போயிட்டாரு.”

“இல்ல சார்!அது வந்து….”

“தப்பு தப்பு!யோவ் அப்டினு கூப்பிடனும்….”

“ஐயோ சார்! பிரண்ட்ஸ் பார்க்க வர அவசரத்துல பொய் சொல்லிட்டேன் சார்…இந்த சின்ன பிள்ளைய மன்னிச்சு விட்டுடுங்க சார். மீ பாவம் சார்…”

இப்படி வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பம்மிட்டு பேசுற அனுவ பார்த்து வந்த கோபம் கூட கம்மியாகிடுச்சு அருளுக்கு….

“நீ பொய் சொன்னது கூட தப்பு இல்ல! ஆனா அது ஒரு நல்ல விசயத்துக்கா இருக்கனும்! அப்புறம் டிராபிக் ரூல்ஸ் கொஞ்சம் மதிக்க கத்துக்கோனு கருத்து கந்தசாமியா சொல்ல…அனு ரொம்ப நல்ல புள்ளையா வெளிள தலைய தலைய ஆட்டிட்டு மனசுக்குள்ள ‘போயா டுபுக்கு’ அப்டினு சொல்லி அவன கலாய்சிகிட்டு இருந்தா.”

என்ன டா நம்ம இவன்ன கூப்பிட்டா….அந்த பொண்ணு கூட கடலைய போட்டுகிட்டு இருக்கான்.உதயா நீ போய் அவன கூப்பிட்டு வா-முத்து

இந்தா போரேன் இருடா-உதயா

டேய் மச்சான்னு உதயா சவுண்ட் கேட்டவுடனே….அனுவுக்கு ஒரு பாய் சொல்லிட்டு கிளம்பிட்டான்…

அடியே!உட்காரு….அந்த ஆள பார்த்து எந்திரிச்சு நின்னவ அப்டியே நிக்கிற-அபி

அபி சொன்னதுக்கு அப்புறம் தான் அருளை பார்த்து ஷாக்காகி நின்னுடோம்கிறதே அனு உணர்ந்தா.

அனு உட்கார்ந்துவுடனே! ஏன் அமுலு அந்த ஹேண்ட்சம் என்ன சொன்னாரு-அனிதா

ஹான் சுரைக்காய்க்கு உப்பு இல்லைனு… ஃபர்ஸ்ட் இங்கயிருந்து கிளம்பலாம்னு பாதிலே எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பிட்டா.

ஹலோ! ரெட் சுடிதார்னு அருள் வாய்ஸ் கேட்டும் அனு அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வரல.

பக்கத்துல இருந்த அபி ஒரு கிள்ளு கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கிளாஸ்ல இருக்கிறத உணர்தா.

ஏண்டி எருமை மாடு இந்தக் கிள்ளு கிள்ளுறனு சொல்லி அபிய அடிச்சதுக்கு அப்புறம் தான்…ஏன் கிளாஸ்ல இருக்க எல்லாரும் நம்மலே பாக்குறாங்கன்னு யோசிச்சா…

“Hello! red chudidar I think you are physically present and mentally absent” அப்படின்னு அருள் சொன்னவுடனே…எந்திரிச்ச அனு.. “நோ சார் ஐ அம் mentally also present.”

“அப்படியா அப்போ நா என்ன சொன்னேன்.”

நோட்ஸ் குடுத்துட்டு இருக்கீங்கன்னு சொன்ன அடுத்த நிமிஷம் கிளாஸ்சே சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.

இதுக்கு எதுக்கு லூசு மாதிரி சிரிக்குதுங்கனு யோசிச்ச அடுத்த நிமிஷம் அபி அனுகிட்ட அவரு உன்னோட நேம் கேட்கிறார்டின்னு சொன்னா.

கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு மை நேம் இஸ் அனு ஸ்ரீனு சொல்லுறதுக்கும் அந்த கிளாஸ் ஓவர்னு சொல்லுற பெல் அடிக்கிறதுக்கும் கரெக்டா இருந்துச்சு.

Epi-4

அடுத்த கிளாஸ் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உள்ள கேப்ல எல்லோரும் ஓட்டி எடுத்துட்டாங்க அனுவ…

அது எப்டி அமுலு நோட்ஸ் குடுக்குறாங்கள….. இன்னிக்கு தான் அவரு கிளாஸ்க்கே வராரு… அதுக்குள்ள உனக்கு நோட்ஸ்ஸா….-அபி

அத விடுங்கடி… இவ சொன்னாலே ஆல்சோ மென்டலி பிரசன்ட்னு… அதுல எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு…என்ன டா இவ கிளாஸ் கவனிச்சாலானு…அப்புறம் இவ சொன்ன நோட்ஸ் குடுக்குறாங்கனுதுல தான் உயிரே வந்துச்சு…-கலை

அடியே அவ கிளாஸ் கவனிக்கலைனாலும் டாப்பர்…. நீயும் நானும் ஆவரேஜ் தான்…அதுனால ஒழுங்கா கிளாஸ்ஸ கவனி-ஆனந்தி

நண்பேன்டா அமுலு நீ! என்ன விட்டுகுடுக்காம பேசுரியே- அனு

தூ…அதுலாம் ஒரு மண்ணும் இல்ல…ரொம்ப ஓட்டுனா மூஞ்சிய தூக்கி வச்சுக்குவ…அந்த கண்றாவிய யாரு பார்குறதுனு தான்…-ஆனந்தி

ஆனாலும் உனக்கு ரொம்ப கொலுப்புடி-அனு

அடுத்த கிளாஸ்க்கான சார் வந்தவுடனே அந்த அரட்டை கச்சேரி ஒரு வழியா முடிஞ்சிது…

ஒரு மாதங்கள்ளுக்கு பிறகு….

காலேஜ் லைஃப்ல எந்த மாற்றமும் இல்ல…ஆனா அனுவுக்குள்ள மட்டும் மாற்றங்கள் தாறுமாறா வந்துருந்துச்சு….. காரணம் வேறு என்ன காதல் மட்டும் தான்….

“அடியே!நா பெத்த மகளே…. இன்னிக்குகாவது கொஞ்சம் சீக்கிரமா குளிச்சிட்டு வா…பாத்ரூம் போனா ஒரு மணி நேரம் ஆகுது!குளிச்சிட்டு வர…போனா போன இடம்! வந்தா வந்த இடம்னு இருந்தா போர வீட்டுல நாலு அடிதா வாங்குவ…”

“அது சரி தேவி என்ன நா பெத்த மகளேனு சொல்லுற….எப்போயும் உன்னோட ஆஸ்தான டையலாக் அடியே எருமமாடேனு தானே சொல்லுவ…”

“அடியே என்ன கொலுப்பா!நேத்து தான் என்ன எருமமாடுனு கூப்பிடாத!எனக்கு கெட்ட கோபம் வரும்…எருமமாடு தான் உனக்கு புடிக்கும்னா என்ன எதுக்கு பெத்த…எருமமாடே வளர்க்க வேண்டியது தானேனு அந்த ஆட்டம் ஆடுன…இப்ப என்ன இப்படியும் கூப்பிடக் கூடாதா…”

“ஐயோ தேவி! நீ எருமமாடுனே கூப்பிடு.. அதுதான் நல்லா இருக்கு நான் ஏதோ நேத்து கோவத்துல சொல்லிட்டேமா..

இதெல்லாம் பெருசா எடுத்துக்கலாமானு சொல்லி ஒரு முத்தம் வச்சு தேவிய சிரிக்க வச்சிட்டா….”

“அட எரும கன்னத்த எச்சி பண்ணாத….”

“அம்மா!கிரேட் இன்சல்ட் எனக்கு…”

“பரவாலடி…கத பேசாம குளிக்க போ…அப்ப தான் சாப்பாடு தருவேன்…”

“ஆமா!அப்டியே பிரியாணியா செஞ்சு வச்சு இருக்க போற…

அதே சாம்பாரு தானே அதுக்கு ஓவர் பில்டப்பா குடுக்குறமா…”

“உனக்கு விதவிதமா ஆக்கி போடுரேன்ல…நீ இப்டியும் சொல்லுவ…இதுக்கு மேலயும் சொல்லுவ…மத்த அம்மாங்க மாதிரி வீட்டு வேல பாரு,சமச்சு வைனு சொல்லிடுந்தா…இந்த வாய் கொஞ்சம் குறஞ்சிருக்கும்.”

“ஐயோ!தேவி என்ன விட்ரு…தெரியாம கேட்டுடேன்.உன் சாம்பாரே அமிர்தமா இருக்கும்…நா போய் குளிச்சிட்டு வரேன்.அந்த அமிர்ததை எடுத்து வை…இந்தா வந்துடுரேன்.”

தேவி…

 

இந்தா வரேன் அனுப்பா…

நீ இன்னும் குளிக்க போகலையா…

இந்தா போயிட்டேமா….

“டேய் அழகா! உன்னால தான் நேத்து தேவிய நான் திட்டிடேன்…அதான் இன்னிக்கு இவ்ளோ திட்டு வாங்குரேன்.”(இல்லைனா மட்டும் நீ என்ன கம்மியாவ திட்டு வாங்குவனு சொன்ன மனசாட்சிய ஒரு கொட்டு வச்சு அனுப்பி விட்டா)

யாரேன்று அறியாமல் பேர் கூட தெரியாமல்

இவனோடு ஒரு சொந்தம் உருவானதே…

ஏனேன்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்

இவன் போகும் வழியேங்கும் மனம் போகுதே…

லேப்பின்(laptop) வழியாக வழிந்த G.Vன் குரல் அந்த அறை முழுவதும் ஒளித்து கொண்டிருந்தது.

டேய் அழகா டங்காமாரி பாட்டு கேட்டுகிட்டு இருந்த என்ன இப்டி லவ் சாங்கா கேட்க வச்சிடியே…இந்த கொடுமைய நா எங்க போய் சொல்ல…எங்கயும் வேண்டாம்…கல்யாணம்மாகட்டும் உன்னையவே கேட்க வச்சிடுரேன்…ஒரு இரண்டாயிரம் பாட்டு ஏத்தி வச்சிருக்கேன்…தினம் ஒரு சாங்க மனப்பாடம் பண்ண வைக்கிறேன்.அது தான் நீ என்ன கண்டுக்காம இருக்குறதுக்கான பனிச்மெண்ட்.

“அடியே எரும!ரூம்குள்ள போய் ஒன்ர மணிநேரம் ஆகிடுச்சு…இன்னுமாடி நீ குளிக்கிற…”

“ஐயோ! அம்மா சாப்பிட வர சொன்னத எப்டி மறந்தேன்…எல்லாதுக்கும் காரணம் இந்த அழகன் தான்…இந்தா வந்துட்டேன்மா…”

“ஏன்டி!குளிக்க போறதுக்கு முன்னாடி தானே அவ்ளோ திட்டு வாங்குன…கொஞ்சமாச்சு உறைக்குதா உனக்கு…உன்னலாம் எந்த நேரதுல பெத்தேன்னோ…சாப்பிட வந்து விடு…இப்பவே மணி மூன்னாச்சு…”

“ஏம்மா நீ ஜாதகத்த சரியா பார்கலையோ…”

ஏன்டி!

இல்ல உன்ன எந்த நேரத்துல பெத்தேன்னோனு கேட்டியே அதுக்கு தான்…அதுல தெளிவா டைம் எழுதிடுப்பாங்க?

இத சொன்ன நிமிசம் சாம்பார் கரண்டில ஒரு அடி பரிசா வாங்கினதுக்கு அப்புறம் தான் சாப்பிட ஆரம்பிச்சா…

“அடியே! மணி மூன்றை ஆகிடுச்சு…அந்த சன் டிவி வைடி…சிங்கம் படம் போட்டுறுவான்.”

“சிங்கம்மா!ஏம்மா அந்த படத்தையும் அவன் நூறு தடவ போட்டுயிருப்பான்…நீயும் எல்லா தடவையும் பாக்குற…அப்டி அதுல என்ன தான் இருக்கு…”

“சூர்யா இருக்காருல….நல்லா நடிச்சிருப்பாடி…எல்லா பாட்டும் அருமையா இருக்கும்…”

“ஆண்டவா!நீ தான் தேவிய காப்பத்தனும்…”

“அதுலாம் என்ன நல்லா தான் காப்பாத்துவாரு…நீ போய் டிவிய ஆன் பண்ணுடி…”

முன்னாடிலாம் படம் பார்க்கும் போது எப்டிடா இப்டி எல்லாருக்கும் பொசுக்கு பொசுக்குனு காதல் வரும் கேள்வி கேட்ட மனசுக்கு….வரும்னு ஸ்ட்ராங்கான பதில்லா சொல்ல வச்சது அழகன் மட்டும் தான்னு நினைச்ச மறுநொடி அருண்கிட்டயிருந்து தன்ன காப்பாதின விசயம் தான் அனுவுக்கு நியாபகம் வந்துச்சு….

அன்னிக்கும் அப்டி தான் பிரண்ட்ஸ் எல்லாரும் காலேஜ் முடிஞ்சும் பேசிட்டு இருக்கும் போது அருண் அனுவ பார்க்க வந்தான்.

ஏற்கனவே அருண் அனுவ ஃபாலோ பண்றது தெரிஞ்சாலும்…அவன் எந்த தொந்தரவும் செய்யாததுனால அனு எதுவும் கண்டுகிறது இல்ல…

ஆனா இன்னிக்கு பேச வரவும் தான் கொஞ்சம் அல்லு விட்டுடுச்சு…

அனு உன்கிட்ட கொஞ்சம் பேசனும்-அருண்

சொல்லு அருண்..

“ அதுவந்து அனு நீ பர்ஸ்ட் டே காலேஜ் வந்ததுல இருந்தே நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.. “

“ஐயோ அருண் காமெடி பண்ணாம போ…”

“நான் சொல்றதை பார்த்தா உனக்கு காமெடி பண்ற மாதிரி இருக்கா! சீரியஸா நான் உன்னை விரும்புறேன்…ஐ லவ் யூ..”

“எனக்கு அந்த ஐடியா சுத்தமா இல்ல! நீ என்னோட ஃப்ரெண்ட் மட்டும்தான்…நம்ம கிளாஸ்ல இருக்க எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி தான் உன்கிட்டயும் பேசினேன்…இந்த மாதிரி ஒரு நினைப்பு உனக்கு இருக்குன்னு தெரிஞ்சு இருந்துச்சுன்னா உன்கிட்ட பேசுரதையே அவாய்ட் பண்ணியிருப்பேன்..”

“நான் உன்னை விரும்புறேன்னு சொல்றேன்… நீ என்ன புரிஞ்சுக்காம என்ன அவாய்ட் பண்ணியிருப்பேன்னு சொல்லுர…நீ இல்லைனா நான் செத்துடுவேன் அனு…”

“லூசுத்தனமா பேசாத அருண்!

நான்தான் சொல்றேன்ல எனக்கு அந்த மாதிரி ஒரு தாட்டே உன் மேல இல்ல!உன்ன ஃப்ரண்டா மட்டும்தான் நான் பார்த்தேன்… போய் படிச்சு பொழைக்கிற வழிய பாரு! என்ன விட்டுடு ப்ளீஸ்..”

“நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்! நீ சும்மா சொல்ற உனக்கும் என் மேல லவ் இருக்கு.. அத ஒத்துக்க மாட்டேங்குற… சொல்லு உண்மைய சொல்லு நானும் விரும்புறேனு சொல்லு..”

“நான் சொல்லிட்டே இருக்கேன்! நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கற அருண்.. நிஜமாகவே அப்படி எல்லாம் இல்ல! நீ எனக்கு ஃப்ரெண்ட் மட்டும்தான்…”

“திருப்பித் திருப்பி பொய் சொல்லாத அனு!நீ இப்ப என்ன விரும்புறேன்னு ஒத்துக்கோ.. இல்லைன்னா இந்த ஆசிட்ட உன் மேல வீசிடுவேன்…”

“ஹே அருண்! என்ன இப்படி எல்லாம் பண்ற இதெல்லாம் தப்பு..”

“தப்பு ரைட்லாம் எனக்கு தெரியும்டி!நீ இப்போ என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கணும், ஒத்துக்கோ..”

அப்போதான் தன்னோட பைக் எடுக்க வந்த அருள், இத கவனிச்சுட்டு அனு பக்கத்துல வர்றதுக்கும்..அருண் ஆசிட்ட ஓபன் பண்றதுக்கும் கரெக்டா இருந்துச்சு.

அனு மேல ஆசிட் விழுகிறதுக்கு ஒரு நொடிக்கு முன்னாடி அத கீழ தள்ளி விட்டான் அருள்…

அதுல கோபமான அருண்! அருள்ள அடிக்க ஆரம்பிக்க…

அருளுக்கு கராத்தே தெரியுங்கறதால அருணோட அடி எல்லாத்துக்கும் சரமாரியா பதிலடி கொடுத்துட்டான்..

இங்கதான் அருளோடு முகத்தை ரொம்ப பக்கத்துல அனுவால பார்க்க முடிஞ்சது.. ஏற்கனவே நீல நிற விழிகளின் மேல் பைத்தியமாக இருப்பவள்(e.g: ஃபேஸ்புக்ல யாராச்சு ப்ளூஐ(Blue eyes)யோட இருந்தா பாரபட்சம் பார்க்காம எல்லாருக்கும் பிரண்ட் ரெக்வச்ட் கொடுத்து வைச்சிருப்பா…) நீல நிற விழிகளுடன் தனக்காக சண்டை போடும் அருளை கண்டு முதல் முறை காதல் என்னும் உணர்வை உணர்ந்தாள் அனு..

அதுக்கப்புறம் அருள் அருணை சஸ்பெண்ட் பண்ண வச்சதையோ…அதுக்கு அனு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்ததோ…கடைசியா அருள் டேக் கேர்னு சொல்லி போனதோ.. எதுவுமே கண்ணுக்கு தெரிஞ்சாலும் மூளையிலோ, மனசுலையோ பதியல அனுவுக்கு…ஏன்னா அருளோட அந்த நீல நிற விழிகளும் கோப முகமும் மட்டுமே மாறி மாறி கண்ணுக்கு எதிரே தோன்றிக்கொண்டே இருந்தது….

அன்னிக்கு எப்படி வீட்டுக்கு வந்தானு கூட சரியா ஞாபகம் இல்ல…

“ஏண்டி எருமமாடே! படம் முடிஞ்சும் இன்னும் என்னத்தடி டிவியில பார்த்துட்டு இருக்க…”

“நானும் மணி ஆறாச்சு,சாமி பாட்டு வைக்க அந்த டிவி ரிமோட்ட எடுத்து கொடுடினு ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கேன்! நீ பாட்டு டிவியவே கண்ணிமைக்காம பாத்துக்கிட்டு இருக்க…”

“ஐயோ அம்மா!ஆறு மணிக்கு நியூஸ் வரும்ல…அதுக்காண்டி தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…இந்தா நீயே சாமி பாட்ட கேளு.. நான் ரூமுக்குள்ள போறேன், அசைன்மென்ட் எழுத வேண்டியது இருக்கு…”

Epi-5

“ஹே!அமுலுஸ் குட்மார்னிங்…-அனு”

“வாடி நல்லவலே! என்ன அதிசயமா பத்து ஆகுறதுக்கு பத்து நிமிசம் முன்னாடியே வந்துட்ட….எப்பவும் கரைக்ட்டா டேன் ஓ கிளாக் தானே காலேஜ்குள்ள கால தூக்கி வைப்ப-அபி”

“அது ஒன்னும் இல்லடி தங்கம்…உங்களையேல்லாம் ரெண்டு நாள் பார்கலைல….யேன் கண்ணுக்குள்ளே இருந்திங்க…அதான்…-அனு”

“நெஞ்சு வலியே வந்துரும் போல இப்படி எல்லாம் பொய் சொல்லாத… உண்மைய சொல்லு உங்க அம்மா நீ வீட்லயிருந்தது போதும்னு சொல்லி துரத்தி விட்டாங்க தானே…-கலை”

“இஇஇஇ…கரெக்டா சொல்லிட்டடா அமுலு..ரெண்டு நாள் வீட்ல இருந்ததுக்கே ரொம்ப அவங்கள டார்ச்சர் பண்ணிட்டேன்னு ஒரு பொய் குற்றச்சாட்டை என் மேல வச்சு எங்க அப்பா கூட பத்த்த்துதுது நிமிஷத்துக்கு முன்னாடியே அனுப்பிவிட்டாங்க…-அனு”

“எது பொய் குற்றச்சாட்டா.. அது உண்மைனு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்! அப்புறம் என்ன இப்படி ஒரு டயலாக்கு-ஆனந்தி”

“சரி போதும் விடுங்கடி!என் மானத்த வாங்குறதுல அப்படி ஒரு ஆனந்தம் உங்களுக்கு எல்லாம்…

அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கி ஃபர்ஸ்ட் பீரியடு என்னடி-அனு”

“சாப்ட்வேர் இன்ஜினியரிங் நம்ம குப்புசாமி சார் கிளாஸ்-அபி”

“ஐயோ குப்பு கிளாஸ்ஸா! சாப்ட்வேர் இன்ஜினியரிங்கும் வேற வேற பெயர்ல மூனு செமஸ்டர்ரா வருது..

அது பேரு மாறி வந்தாலும் நம்ம குப்பு மூனே example வச்சு மூனு செமஸ்டரையும் ஓட்டுராரு…சத்தியமா பர்ஸ்ட் கிளாஸ்சே அவரோடது கவனிக்க முடியாது..அதனால எல்லாரும் கேன்டீன் போகலாம்டி…-அனு”

“லூசாடி நீ!மொத்தமா ஏழு பேரும் காணாம போனா…அந்த மனுசன் என்ன நினைப்பாரு…-சரண்”

“ஹான்…ஏழும் எங்கோ ஊர் சுத்த போயிடுச்சுனு நினைப்பாரு…ரொம்ப பேசாம வாடி..-அனு”

“வேண்டாம் அமுலு! ஃபர்ஸ்ட் கிளாஸ்சே பர்ஸ்ட் ரெண்டு பெஞ்சுல யாரும் இல்லனா தப்பாகிடும்…யாராது நாலு பேர் போலாம்…மீத மூனு பேர் இங்க இருக்கட்டும்-சரண்”

“சரண் சொல்லுறது கரைக்ட் தான்டி…நீ,அபி,கலை,ஆனந்தி போய்ட்டு வாங்க…நாங்க மூனு பேர் இங்க இருக்கோம்-நித்யா”

“சரி என்னத்தையோ பண்ணுங்க…நாங்க ஒரு ஹாவ்வனார் கழிச்சு வரோம்-அனு”

ஆனா அனுக்கு தெரியாது இன்னிக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் அருள் நடத்துரான்னு…குப்புசாமி சார் லீவ்னு….

கேன்டீன்ல அரட்டை கச்சேரிய முடிச்சிட்டு கிளாஸ்க்கு வந்தா அருள் அங்க ஸ்டூடண்ட்ச செமினார் எடுக்க சொல்லி நின்னு கவனிச்சுட்டு இருந்தான்.

“போச்சு எரும மாடு அருள் சார் க்ளாஸ் எடுத்துட்டு இருக்காரு…உன் பேச்சை கேட்டு கேன்டீன் வந்தோம் இல்ல எங்களை சொல்லணும்டி-கலை”

“உன்ன நானாடி வருந்தி வருந்தி கூப்பிட்டேன்.. நீயா தானே டீ குடிக்கிற ஆசையில கேன்டீனுக்கு வந்த… இப்ப என்னத்துக்கு என்ன மட்டும் சொல்ற…-அனு”

“அடச்சீ லூசுகளா உங்க சண்டைய நிப்பாட்டுங்க! இப்ப கிளாஸ்குள்ள போலாம் வாங்க…-அபி”

 

“மே ஐ கம் இன் சார்”னு அபி, கலை,ஆனந்தி கேட்க அனு மட்டும் கடைசியா நின்னதால கேட்கல…

எல்லாரையும் உள்ள வர சொன்ன அருள்.. அனு அவன கிராஸ் பண்ணும் போது மட்டும் அவ காதுல கேக்குற மாதிரி மே ஐ கம்மின்னு கேட்கணும்ங்கிற மேனர்ஸ் இல்லையான்னு கேட்டுட்டான்…

அதுக்கு பதில் சொல்ல அனு நினைச்சாலும்…எல்லாரும் அவுங்களே பார்கிறத பார்த்து போய் உட்கார்ந்திட்டா…

கிளாஸ் முடிஞ்சு அருள் கிளம்பினதுக்கு அப்புறம் தான்…அனுவுக்கு குப்புசாமி சார் அட்டனன்ஸ் சைன் வாங்கலைன்னு ஞாபகம் வந்துச்சு. ஏன்னா சாரோட அட்டனன்ஸ் எப்பயும் அனு கிட்ட தான் இருக்கும். கிளாஸ் டைம்ல அட்டனன்ஸ் போட்டுட்டு திருப்பி கொடுத்துடுவார்..

சைன் வாங்க ஸ்டாப் ரூம் போனா அங்க அருள் மட்டும் தான் இருந்தான்.

அட்டனன்ஸ் சைன் பண்ணாம வந்துட்டீங்க அப்படின்னு சொல்லி அட்டனன்ஸ்ஸ அருள் கிட்ட குடுத்தா…

தாங்கனு சொல்லி சைன் பண்ணி அருள் கொடுத்ததுக்கு அப்புறம்…

“அப்புறம் நீங்க மே ஐ கம் இன் கேட்கலைன்னு சொன்னிங்க… என் டிக்ஷனரியில் உங்ககிட்ட மே ஐ கம்மின்னு (may I come in) கேட்கணும்னா ஐ லவ் யூ ன்னு அர்த்தம்.. எல்லாருக்கும் நேர கேட்கலாமா…”

“ஹே லூசா நீ!படிக்கிற வயசுல என்ன லவ் உனக்கு…இப்டி தான் எல்லார்கிட்டயும் லவ் சொல்லிட்டு இருக்கியா…கொஞ்சம் கூட அறிவுங்கிறதே இல்ல… irresponsible idiot…படிச்சு முடிச்சு வேலைக்கு போய் உங்க அப்பா அம்மாக்கு பெரும சேர்க்க பாரு…”

“போதும் நிப்பாட்டுயா…அந்த பெரும பொறும எல்லாம் எங்களுக்கு தெரியும்…நீ ஒன்னும் சொல்லனும்ங்கிறது இல்ல…அப்புறம் என்ன சொன்ன??…எல்லார்கிட்டையும் லவ் சொல்லிட்டு இருக்கேன்னா…நா எத்தன பேருக்கு சொல்லி நீ பார்த்த…சும்மா தெரிஞ்ச மாதிரி சொன்ன கண்ண நொண்டிடுவேன்…நான் முதல்ல லவ் சொன்னதும் உனக்கு தான்…முடிவ்வா சொல்லுறதும் உனக்கு மட்டும் தான்…நானும் இந்த ஒரு மாசம்மா உங்க பின்னாடி தான் சுத்துரேன்னு உங்களுக்கும் தெரியும்…அப்புறம் எதுக்கு என்ன ஹர்ட் பண்ற மாதிரியே பேசுற…”

“இது லவ் கிடையாது.. infatuation…அத முதல்ல புரிஞ்சிக்கோ…படிக்கிற வயசுல வரதுலாம் லவ்வே இல்ல…இது தெரியாம…இது தான் லவ்வுனு நினைச்சு உங்க வாழ்கையவே கெடுத்துக்குறிங்க…அப்புறம் ஐயோ அம்மானு சொன்னாலும் வாழ்க்கை இன்னொரு சான்ஸ் குடுக்காது…”

“அது சான்ஸ் குடுக்குதோ இல்லயோ…நீ குடுப்பியா மாட்டியா…”

“ஹே பொண்ணா நீ! இவ்வளவு நேரம் என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ திருப்பியும் அதே கேட்குற…”

“ஆமாயா!நான் பொண்ணு இல்ல பைய்யன்னு சொன்னா என்ன பண்ண போற…ஆனா நீ சொல்லுறதும் உண்ம தான்…படிக்கிற வயசுல்ல லவ் வேண்டாம்கிறது…பட் என் படிப்பு முடிய இன்னும் நாலு மாசம் தான் இருக்கு…அதுக்கு அப்புறம் நா வந்து லவ் சொன்னா ஏதுக்குவியா…”

“சான்ஸ்சே இல்ல!உன்னலாம் திருத்தவே முடியாது…”

“என்ன பெத்த தேவியாலே என்ன இன்ன வரைக்கும் திருத்த முடியல…அதுனால நீ என்ன தேவ இல்லாம திருத்த முயர்ச்சி பண்ணி டையர்ட் ஆகிடாத…”

“பொண்ணு மாதிரி ஃபர்ஸ்ட் நடந்துக்கோ…அப்புறம் சார்க்கு கொஞ்சம் மரியாத குடுக்க கத்துக்கோ…”

“இதுவே ஒரு பையன் பொண்ணு பின்னாடி அலஞ்சு…லவ் சொல்ல வச்சிருந்தா அது கரைக்ட்…அதுவே ஒரு பொண்ணு பண்ணா தப்பு…என்ன லாஜிக் யா உங்களோடது…சூப்பர்…ஆனா நீ கொஞ்சம் வேற மாதிரினு நினைச்சேன்….ஆனா அப்டிலாம் இல்லனு சொல்லுற…அப்புறம் என்ன சொன்ன…சார்க்கு மரியாத குடுன்னா…நா எல்லா சாருக்கும் மரியாத கொடுத்து தான் பேசுவேன்…உன்கிட்ட பேசும் போது மட்டும் தான் இப்டி வந்துடுது…”

இதுக்கு மேலயும் இரண்டு பேரும் என்ன பேசிருப்பாங்களோ…அதுக்குள்ளயும் ஸ்டாப் ரூம்முக்கு இன்னோரு சார் வந்துட்டாரு…அவரா வந்தாரா இல்ல கியூபிட் நீங்க ரெண்டு பேரும் பேசின வரைக்கும் போதும்…இல்ல இல்ல சண்ட போட்ட வரைக்கும் போதும்னு அனுப்பி விட்டுச்சானு தெரியல…

Epi-6

அனு போனதுக்கு அப்புறம் அருள் தலைய புடிச்சிட்டு உட்கார்ந்துட்டான்.உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அன்னிக்கு அனு ப்ரொபோஸ் பண்ணதுதான் ஞாபகத்துக்கு வந்துச்சு.

“டேய் கிளம்பிட்டியா”-கோமதி

“அம்மா இப்போ நா கோவிலுக்கு வந்து என்ன பண்ண போறேன்…காலேஜ்க்கு போயிட்டு வந்து ஆபிஸ் வோர்க் பார்க்கவே கரைக்ட்டா இருக்கு எனக்கு…ஏன் இப்படி கோவிலுக்கு வந்தே ஆகனும்னு அடம் புடிக்குற”-அருள்

“இன்னிக்கு வரலட்சுமி நோன்பு டா.. அதனாலதா கோவிலுக்கு போலாம்னு சொல்றேன்.. அப்புறம் நீ காலேஜ் ஆபிஸ் இரண்டு வோர்க்குமே நல்லா பண்ணுவேன்னு எனக்கு தெரியும். அதனால பேசாம கிளம்பி வா…”

“ஐயோ அம்மா! வரலஷ்மி நோன்புக்கு நீங்க தானே கோவிலுக்கு எல்லாம் போவிங்க, விரதம்லாம் இருப்பிங்க…அப்புறம் எதுக்கு என்ன கூப்பிடுற…”

“ஏன்டா பொண்ணுங்க மட்டும் தான் கோவிலுக்கு போகணும்.. விரதம் இருக்கணும்னு எழுதி வச்சிருக்காங்களா…. ஏன் நீங்கல்லாம் எங்களுக்காண்டி விரதமல்லாம் இருக்க மாட்டீங்களா…”

“ஐயோ அம்மா! நான் உன்ன மட்டும் தானே சொன்னேன் நீ ஏன் பொண்ணுங்கன்னு எல்லாரையும் விஷயத்தில சேர்த்து இழுக்குற…”

“சரி அப்போ நா எல்லாரையும் இழுக்க வேண்டாம்னா நீ கோவிலுக்கு வா…”

“ஏம்மா இப்பிடி அடம் பிடிக்கிற..”

“டேய் உனக்கு நல்ல பொண்ணு கிடைக்கனும்னு தான் டா.. அப்புறம் இப்பலாம் நீ என் பேச்ச கேட்கிறதே இல்ல…அம்மாங்கிற பாசமே இல்ல உனக்கு..கோவிலுக்கு வாடானு சொன்னதுக்கு இவ்வளவு பேச வைக்கிற என்ன…”

“ஐயோ அம்மா தயவு செஞ்சு அழுக ஆரம்பிக்காத…இப்ப என்ன நா கோவிலுக்கு வரனும் அவ்வளவு தானே..”

“ஆமாடா..”

“சரி கிளம்பி வரேன்..கீழ போய் வேயிட் பண்ணுங்க..”

“நா கீழ போறேன் டா..நீ வேஷ்டி சட்டையில வா..”

“அம்மா நா வரதே பெரிசு..நீ என்ன வேஷ்டி சட்டையில வர சொல்லுர..”

என் புள்ளய வேஷ்டி சட்டையில பார்க்க ஆசையா இருக்குனு சொன்னேன்..நீ எனக்காக அது கூட செய்ய மாட்டியானு சொல்லி திருப்பி அழ ஆரம்பிச்சிட்டாங்க கோமதி.

திருப்பி டேங் ஓபன் பண்ணாத மா…நீ சொல்லுற படியே கிளம்பி வரேன்.. ஆனாலும் ஆ,ஊனா கண்ணுல தண்ணி வச்சே என்ன ஒத்துக்க வச்சிடுற..இதுக்குலாம் ஒரு நாள் உன்ன சேர்த்து வச்சு செய்ய போறேன்…

டேய் நா உன் அம்மாடா..நீ என்ன செஞ்சாலும் அதுக்கு பதில் குடுத்துருவேன் டா.. அதுனால இப்ப கிளம்பி வா நா கீழ போறேன்…

அதே நேரம் அனு வீட்ல…

“அம்மா எனக்கு இந்த சேலையேல்லாம் கட்ட வராது…என்ன டார்சர் பண்ணாம விட்டுடு அம்மா..”

“உன்ன என்ன டேய்லியும்மா கட்ட சொல்லுரேன்…இன்னிக்கு வரலெட்சுமி நோன்புடி..உனக்காக ஆசையா இந்த சேலை எடுத்திருக்கேன்…அதுனால இத கட்டிடு வா.. கோவிலுக்கு போலாம்…”

“ஐயோ அம்மா எனக்கு சேலை கட்டிடு நடக்க தெரியாது மா…போற வழில எங்கயாவது கண்டிப்பா புதையல் எடுத்துடுவேன் மா..”

“சரிடி தங்கமா பார்த்து எடு..”

“எதமா எடுக்க?”

“புதையல் எடுப்பேன்னு சொன்னியே..அதான் தங்க புதையலா எடுக்க சொன்னேன்..”

“ஓஓ..இது ஜோக்கா நா அப்புறமா சிரிக்கிறேன் மா…ஆனா இப்ப என்னால சேல கட்ட முடியாது..”

“ஏன்டி கட்ட முடியாது…”

“உனக்கே தெரியும்.. ஃபர்ஸ்ட் எனக்கு சேல கட்ட தெரியாதுனு.. நெக்ஸ்ட் அத கட்டிட்டு எனக்கு நடக்க தெரியாதுனு..இதலாம் விட முக்கியமான காரணம் சேல எப்போ அவுந்துடும்மோனு பயமாவே இருக்கும்மா..”

“எரும்மமாடே உனக்கு சேல கட்ட தெரியாதுனு எனக்கும் தெரியும்.. அதுனால நா கட்டி விடுரேன்..அவுராம இருக்க எல்லா சைடும் பின் குத்தி விடுரேன்டி.. அப்புறம் நீ நடக்க வேண்டிய தூரம் ரொம்ப இல்ல..பக்கத்து தெருவுல இருக்க கோவிலுக்கு தான் போக போறோம்…”

“என்ன மா இப்டி என் எல்லா குவஸ்டின்னுக்கும் பதில் சொல்லிட்ட..”

“நா உன் அம்மா டி…இப்போ அரட்ட அடிக்காம அந்த புடவைய எடுத்துட்டு ரூம்க்குள்ள வா..”

“அம்மா எல்லா சைடும் நல்லா பின் குத்திட்டியா…”

“எல்லாம் குத்திட்டேன்டி..எங்கையும் அவுராது…அதுனால பயப்டாம கிளம்பி வா.. அப்புறம் அந்த டேபிள் மேல மல்லிகை பூ கட்டி வச்சிருக்கேன்..அதையும் வச்சிட்டு கிளம்பி வா..நா வெளில வேயிட் பண்ணுறேன்…”

தலை நிறைய மல்லிகை பூவோடு சிகப்பு கலர் சேலையில வந்த அனுவ பார்த்து தேவி ஒரு நிமிசம் ஷாக் ஆகிட்டாங்க..இவ என்னடா இவ்ளோ அழகா இருக்கானு தான்…

“ஏம்மா என்ன பார்த்து இப்டி ஷாக் ஆகி நிக்கிற…நா பார்க்க எப்டி இருக்கேன்.. கொஞ்சம் அழகா இருககேன்னா…”

பூக்குட்டி! என்ன இப்டி கேட்ட…ரொம்ப அழகா இருக்க…என் கண்ணே பட்டுரும் போல…இப்பதான் நீ பொறந்த மாதிரி இருந்துச்சு…அதுக்குள்ளயும் இவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டனு நம்பவே முடியலடானு சொல்லும் போதே லைட்டா கண்ணு கலங்க ஆரம்பிச்சிட்டாங்க தேவி..

அம்மா என்ன கண்ணுலாம் கலங்குது…எவ்ளோ நாள் கழிச்சு என்ன பூக்குட்டினு குப்பிடுற…அத அனுபவிக்கலாம்னா! இப்டி நீயும் அழுது என்னயும் அழுக வச்சிடுவ போலயேமா…

சரிடி அழுகல! வா கோவிலுக்கு போலாம்…

ஆனா இரண்டு பேரும் போறது ஒரே கோவிலுக்கு தான்..இது எதார்த்தமா நடந்துச்சா இல்ல கியுபிட்டோட பிளான்னானு தெரியல..

“டேய் அந்த பொண்ண பாரேன்…அப்டியே மகாலெட்சுமி மாதிரி இல்ல-கோமதி”

“யாரமா சொல்லுற..-அருள்”

“உனக்கு என்ன கண்ணு தெரியலயாடா..அந்தா வரா பாரு சிகப்பு கலர் புடவ கட்டி..அந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்து தான்டா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்.”

“ஐயோ! அம்மா கொஞ்சம் மெதுவா பேசு…அந்த பொண்ணு என்னோட ஸ்டூடண்ட்..”

“உனக்கு ஸ்டூடண்ட்டா..நல்லதா போச்சு..பொண்ணு கேட்போம்மாடா…”

நீ இப்டியே தான் ஏதாவது பேசுவேன்னா..நா இப்பவே கிளம்புறேன் அம்மானு கோவமா அருள் சொன்னவுடன தான் அந்த பேச்ச கோமதி விட்டாங்க..அப்பையும் அருள்ள பார்த்து முறைக்கிறத விடல.. அந்த முறைப்புக்கு காரணம் வீட்டுல போய் அருளுக்கு கச்சேரி இருக்குங்கிறது தான்…அந்த கச்சேரி கோமதி திட்டுறதா இல்ல அழுகுறதானு அந்த கடவுளுக்கு தான் தெரியும்.

அனு தான் அருள்ள வேஷ்டி சட்டையில பார்த்து ஸ்டன் ஆகிட்டா..ஏதோ மனசுக்குள்ள ஒரு உந்துதல்..இப்பவே அருள் கிட்ட காதல சொல்லிடுன்னு…இப்போ ஏதுக்கிறானோ இல்லயோ காதல்ல சொல்லிடுன்னு மெதுவா சொல்லிட்டுயிருந்த மனசு..அஞ்சே நிமிசத்துல பேரலையா மாற ஆரம்பிச்சிடுச்சு…அதுடைய அழுத்தம் தாங்காம அனுவும் எப்டியாச்சு சொல்லிடலாம்னு முடிவு எடுத்துட்டா.

அதுக்கு தோதாவே அன்னிக்கு கோவில்ல இவுங்கள தவிர யாரும் இல்ல..

டேய் பிரகாரம் சுத்திட்டு வா! எனக்கு கால் வலிக்குது…அப்படின்னு சொல்லி கோமதி சன்னதிக்கு முன்னாடியே உட்கார்ந்துட்டாங்க.

அருள் பிரகாரம் சுத்த போறத பார்த்து அனுவும் தேவி கிட்ட கேட்டா..அம்மா நானும் போய் பிரகாரம் சுத்தவா..

சரி போயிட்டு வா!அதோட இன்னிக்கு ஆறு மணிக்கு ஏதோ விசேஷ பூஜையாம்… நாமதான் தெரியாம ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.. இப்ப கூட்டமும் இல்ல அதுனால ஒரு 108 பிரகாரம் சுத்திட்டு வா.

என்னது 108ஆனு நினச்சாலும்.. அதுக்கு சண்ட போடுறதுக்கான டயம் இப்ப கிடையாது. ஏன்னா அனு தேவி கிட்ட சண்டை போடுறதுக்குள்ளேயும் அருள் பிரகாரத்தை சுத்தி முடிச்சுட்டு வந்துடுவான்கிறதால… மனசுக்குள்ளே தேவிய திட்டிட்டு பிரகாரம் சுத்த போயிட்டா…

கருவறைக்கு பின்புறம்மா போகும் போதே அனு அருள்ள நிப்பாடிட்டா..

உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்-அனு

சொல்லுங்க!-அருள்

“நீதான்டா உலகத்துல்லே ரொம்ப அழகு!என் ராஜா,என் கண்ணுனு எல்லா அம்மாவும் அவுங்க பையன பார்த்து சொல்லிடுப்பாங்க…அது பொய்யின்னு அவுங்களுக்கே தெரியும்!ஆனா உங்க அம்மா பொய் சொல்லல…நீங்க அவ்ளோ அழகு… உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு…I love you..”

இப்டி அனு சொன்ன நிமிசம் அருள் சொன்னுது…வரும் போது ‘என்னை அறிந்தால்’ படம் பார்த்துட்டு வந்தியா…அந்த டையலாக் எல்லாம் சொல்லிட்டு இருக்க…

ஆமா..வரும் போது பார்த்தேன்…அதுக்கு இப்ப என்ன…ஏதோ நல்லா இருந்துச்சே டையலாக்குனு சொன்னேன்…ஆனா அந்த I love you உண்ம.

எப்ப இருந்து இந்த காதல்…-அருள்

“உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது அப்டி எந்த எண்ணமும் இல்ல…ஆனா உங்கள திருப்பி திருப்பி பார்க்கும் போது தான் என் மனசுல நீங்க பதிய ஆரம்பிச்சிங்க…பார்க்கும் போதுலாம் சண்ட போட்டம்மே..அப்ப எனக்கு தெரியாது இது காதல்லா மாறும்னு…உங்க பின்னாடி இப்டி பைதியமா சுத்துவேன்னு…அப்புறம் அருண் கிட்டயிருந்து என்ன காப்பாத்தும் போது தான் முழுசா உங்க மேல காதல் வந்துச்சு…அண்ட் ஐ லவ் யூ…”

“படிக்கிற வயசுல இது தப்புன்னு உனக்கு தோணலையா…அப்புறம் எனக்கு நீ சொல்ற மாதிரி எந்த ஃபீலிங்கும் உன் மேல கிடையாது.. அதனால வேற வேல இருந்தா போய் பாரு…-அருள்”

“படிக்கிற வயசுல காதல் தப்புனு எனக்கும் தெரியும்…இதே ஒரு மாசத்துக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு இருந்தாங்கன்னா நானும் அப்படிதான் சொல்லி இருப்பேன் காதல் தப்புன்னு…ஆனா இப்ப என்னால அப்படி சொல்ல முடியாது… அப்புறம் உங்களுக்கு எந்த ஃபீலிங்கும் இல்லைன்னு சொன்னீங்க…காதல்ங்கிறது ஒருவகையான அன்புதான்! நீங்க என் மேல அன்பு வைக்கலைனாலும்…உங்க மேல நான் இந்த வானம் வரைக்கும் காதல் அதாவது அன்பு வச்சிருக்கேன்! உங்களுக்காகவும் உங்களோட பதிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.

அப்புறம் இன்னொரு விஷயம் மூஞ்சிய இந்த மாதிரி வைக்காதீங்க…ஃபர்ஸ்ட் டைம் ப்ரப்போஸ் பண்ற எனக்கே வேர்த்து வடியல… உங்களுக்கு ஏன் இப்படி வேர்த்து ஊத்துதுன்னு கேட்டுட்டு அனு போயிட்டா..”

அருள் சார் என்ன முழிச்சுட்டே தூங்கறீங்களா! நீங்க கிளாஸ் எடுக்குறதுக்கான பெல் அடிச்சுட்டாங்க பாருங்க… கிளாசுக்கு போகலையான்னு ப்ரொஃபஸர் ராம் கேட்டவுடன்னதான்! அருள் அந்த நாள்ளோட ஞாபகத்திலிருந்து வெளில வந்தான்.

உனக்கு எப்படி அனு நான் புரியவைப்பேன்… உன்னுடைய காதல என்னால ஏத்துக்க முடியாதுனு! இத உன்கிட்ட எப்டி சொல்ல போறேன்னு நெனச்சுட்டே… அடுத்த கிளாஸ் எடுக்குறதுக்கு அருள் கிளம்பிட்டான்…

Epi-7

எங்க பார்த்தாலும் மாணவர்களோட மகிழ்ச்சி முகம் தான்…அரட்டை கச்சேரி, ரிகர்சல்,மைக்செட், ஸ்பீக்கர்னு G.V காலேஜ் திருவிழா மாதிரி இருந்துச்சு…ஆமா இன்னிக்கு காலேஜ் கல்சுரல்.

“ஏன்டி நம்ம கல்சுரல்னு பொதுவா சொல்லிடுறோம்..ஆனா வருசா வருசம் இதுக்கு ஒரு பெயர் வைப்பாங்களே.. இந்த வருசம் என்ன பேருடி”-ஆனந்தி

“இந்த வருச நேம் ‘ஸ்வயம்-2019’ டி”-அபி

“எதுக்கு அமுலு ஸ்வயம்னு பேரு வச்சிருக்காங்க”-ஆனந்தி

“ஹான் எல்லாரும் அவுங்க அவுங்க சுயம்மா பண்ணனும்மா அதான்….கேக்குறா பாரு கேள்வி”-கலை

“ஒரு கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல தெரியல..இதுல என்ன கிண்டல் பண்ணுறாளுங்க”-ஆனந்தி

“அதுலாம் இருக்கட்டும்.. இந்த அனு கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி இருக்கா…யாராச்சும் கவனிச்சிங்களா”-அபி

“நானும் கவனிச்சேன்டி…”-நித்யா

“நானும்”-ஆனந்தி

“அப்ப இத்தன பேர் கவனிச்சிருக்கிங்க…அப்போ ஏன் யாரும் அவகிட்ட கேட்கல”-அபி

“அட நீ வேற..கேட்கலாம்னு போனாலே டாபிக்க மாதிடுறா”-ஆனந்தி

“அப்டியா!சரி வரட்டும் இன்னிக்கு கேட்கலாம்”-அபி

“குட் மார்னிங் மச்சிஸ்… என்ன எல்லாரும் சேர்ந்து பயங்கரமா டிஸ்கஸ் பண்ற மாதிரி இருக்கு…”-அனு

“இந்திய பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம்னா பேசப் போறோம் எப்பயும் போல காசிப் தான் பேசுறோம்…”-அபி

“ஓ சூப்பர் டி! வாங்க பேசுவோம்… ஆமா யாரை பத்தி பேசுறீங்க…”-அனு

“எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான்..இப்பலாம் ஒரு மாதிரியாவே இருக்காலாம்…யாராவது என்னனு கேட்டாலும் டாபிக்க சேஞ்ச் பண்ணிடுறாலாம்…ஒருவேளை காதல் பேய் புடிச்சிடுச்சோனு பேசிட்டுயிருக்கோம்…அவளுக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு எதுவும் தெரியுமா…”-ஆனந்தி

ஆத்தி! இவளுக ஒருவேளை நம்மள பத்தி தான் சொல்லுறாலுகளோ… டாப்பிக்க சேஞ்ச் பண்ணிடு அனு…யார்டி அந்த பொண்ணு…நமக்கு தெரியாம..

“உனக்கு யாருனு தெரியாதா…கொண்டே புடுவேன்…உண்மைய சொல்லு…என்ன ஆச்சு உனக்கு..”-கலை

எனக்கெல்லாம் ஒன்னும் ஆகல…எப்பவும் போல தான் இருக்கேன்.. இப்ப வாங்க ஆடிட்டோரியத்துக்கு.. டான்ஸ் ஆரம்பிக்க போகுது..

“சும்மா டாபிக் சேஞ்ச் பண்ணாத..உண்மைய சொல்லு என்ன நடக்குது”-அபி

“2 professors நடந்து போறாங்க நாலு பசங்க அஞ்சு பொண்ணுங்க நடந்து போகுது இப்போதைக்கு இங்க இது தான் நடக்குது அபி…”

“என்ன ஜோக்கா!ரொம்ப கேவலமா இருக்கு உண்மையை சொல்லு என்ன ஆச்சு உனக்கு…”-அபி

“ஹே!நீங்க என்ன கேட்டாலும் அவ சொல்ல போறது இல்ல.. வேஸ்டா எதுக்கு இவ்வளவு டயலாக் எடுத்து விடுறீங்க.. எப்படியும் ஒருநாள் நமக்கு தெரிய தானே போகுது, அன்னைக்கு பேசிக்கலாம்.. இப்போதைக்கு டான்ஸ் ஆரம்பிக்கப் போகுது.. சீட் கிடைக்காது அதனால வாங்க ஆடிடரியத்துக்கு போகலாம்-“ஆனந்தி

ஒரு வழியாஅந்தப் பேச்சுக்கு எண்டு கார்டு போட்டு அடிச்சு புடிச்சு சீட்ல எல்லாரும் உக்காந்துட்டாங்க.

இவங்க பேசி அவங்க பேசினு அரை மணி நேரம் கழிச்சு டான்ஸ் ப்ரோக்ராம்ம வழக்கம் போல பரதநாட்டியத்தோட ஆரம்பிச்சுட்டாங்க.

அடுத்த பாட்டா வந்தது…

“ஏ தோட்டு கட ஓரத்திலே

ஏ தோடு ஒன்னாங்க

தோடு ரெண்டாங்க

தோடு மூணாங்க

வாங்க சொன்னேன்

சிங்சா சிங்சா சிங்சா சிங்

அட வாரி விட்டாக்க

வரவழச்சாக்க

மடி செரிஞ்சாக்க

வாறேன் போங்க

அட வாரி விட்டாக்க

வரவழச்சாக்க

மடி செரிஞ்சாக்க

வாறேன் போங்க”

என்னிக்கி சும்மா இருந்திருக்கா அனு.. எப்பயும் அவ ஒரு கவுண்டர் குடுத்துட்டு அமைதியாகிடுவா…கூட இருக்கவங்க தான் சிரிச்சு மாட்டிக்குவாங்க..

இப்பயும் அப்டி தான்..சாங் ஆரம்பிச்சவுடனே…எம் ஆர் ராதா வாய்ஸ்ல டயலாக் பேச ஆரம்பிச்சிட்டா..”ச்ச ச்ச ச்ச.. எத்தனை தடவ தான் டா இந்த பாட்டுக்கே ஆடுவிங்க…தோட்டுகடை,தோங்கட்டான் கடைனு…புதுசா ஆடுங்கடா”

இதுக்கு அப்புறமும்…சிங்சாங் சிங்சானு வர இடதுல எல்லாம் கண்டக்டர் விசில் வச்சு இவ மட்டும் ஊதுனது இல்லாம…இவ கேங்குக்கும் விசில் வாங்கிட்டு வந்து ஊத ஆரம்பிச்சிட்டா…

அடுத்த சாங்கா..

“நான் பாஞ்ச bullet-u தான்

ஆபத்தே chicklet தான்

கார் ஓட்டும் fight jet-u நான்

பொண்ணுங்க மாக்நெட்-உ நான்

எனக்குன்னு இல்ல கூண்டு

உன் நெஞ்சில ஏன்டா காண்டு

உனக்கென்ன வேணும் வேண்டு

என்னோட பேரு bond-u

Bond James Bond..”

பத்து எண்றதுக்குள்ள படதுல வர இந்த சாங்குக்கும்…வுரும் வுரும்னு வர இடம் புல்லா…ஸ்கூல் exercise பண்ண ஆரம்பிச்சுட்டா..

அன்னிக்கு ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லாரையும் ஒருமுறையாவது தன்ன பார்க்க வச்சிட்டா..சில பேரு யாருடா இந்த பொண்ணுன்னும்…சில பேரு யாருடா இந்த லூசு புள்ளைனும்…சில பேரு யாரு மச்சி இந்த அழகி அப்படின்னும்….

ஆனா எல்லாரும் கடைசியா நினச்சது…இந்தப் பொண்ணு கொஞ்சம் பிரண்ட்லி டைப் போல அப்படின்னுதான்… எல்லாராலயும் சீக்கிரமா எல்லார் கூடவும் பிரண்டாக முடியாது.. ஆனா அனு எல்லார்கிட்டயும் ஈஸியா பிரண்ட் ஆகிடுவா…அதுக்கு முதல் காரணம் அவளுடைய பிரண்ட்லியான சிரிப்பு தான்…எவ்வளவு சிரிச்சு பேசுனாலும், அவ்வளவு கோபமும் வரும்…ஆனா அது கூட இருக்க குளோஸ் பிரண்ட்ஸ்க்கு மட்டும் தான் தெரியும்.

ஒருவழியா டான்ஸ் புரோகிராம் முடிஞ்சு…பாட்டு போட்டி ஆரம்பிக்க போகுதுனு announcement உம்.. கூடவே ஒன் ஹவர்ல சாப்பிட்டுட்டு எல்லாரும் ஆடிட்டோரியத்துக்கு வந்திருக்கணும்னு inform பண்ணாங்க.

அன்னிக்கு தான் அருண்னும் சஸ்பென்ட் முடிஞ்சு காலேஜ் வந்துருந்தான்…வந்தவுடனே அனுவ பார்த்து சாரி கேட்கனும்னு இருந்தான்..பட் அனுவ பார்க்க முடியல…இப்ப அனு லஞ்ச்க்கு வெளிய வந்தவுடனே பேச வந்துட்டான்.

“ஹாய் அனு!எப்டி இருக்க..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…”-அருண்

“நீங்க கேண்டின்ல வெயிட் பண்ணுங்க டி வந்துடுரேன்…-“அனு

சொல்லு அருண்..நா நல்லா இருக்கேன்…நீ எப்டி இருக்க..எப்ப ஜாயின் பண்ண..

நல்லா தான் இருக்கேன்..இன்னிக்கு தான் ஜாயின் பண்ணேன்..உன்கிட்ட சாரி கேட்க தான் வெயிட் பண்ணேன்.

அன்னிக்கு நா அப்டி பண்ணிருக்க கூடாதுல…ஏதோ அவசரதுல அப்டி பண்ணிட்டேன்…அருள் சார் மட்டும் அன்னிக்கு வராம இருந்துருந்தா..இன்னிக்கு நம்ம ரெண்டு பேர் லைவும் ஸ்பாயில் ஆகிருக்கும்…தேங்காட்…அப்புறம்மும் நிறைய கவுன்சிலிங் சார் கொடுத்தாருனு அருண் சொல்லிட்டே போகத்தான்…அன்னிக்கு எதாவது நடந்து இருந்துச்சுனா,என்ன ஆகிருக்கும்னே அனுவுக்கு புரிய ஆரம்பிச்சது…ஏன்னா அப்போ தான் அவ அருள்ளோட புளூ ஐ பார்த்து எல்லாதையும் மறந்துட்டாலே…

‘பரவால அருண்..சாரிலாம் எதுக்கு!’ அப்டிலாம் சொல்ல மாட்டேன்..நீ பண்ணது தப்பு தான்..ஒரு பொண்ணு ஓகே சொல்லலைனா ஆசிட் ஊத்துவியா…நீ பாட்டு ஊத்திட்டு போகிடுவ…அதுக்கு அப்புறம் அந்த பொண்ணோட லைவ்வ யோசிச்சு பார்த்தியா…உங்களயேல்லாம் ஒன்னும் சொல்ல கூடாது…படத்துல காமிக்கிறாங்கள…ஓகே சொல்லலைனா ஆசிட் ஊத்துறது,பள்ளிகூடத்துலே லவ்ங்கிறது,சின்ன பையன் போதை பொருள் சாபிடுற மாதிரி…அவுங்கள எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சம்னா எல்லாம் சரி ஆகிடும்னு மேடையே இல்லாம அனு பேச ஆரம்பிச்சிட்டா..அதுக்கு அப்புறம் தான் அருண் ஃபேஸ்ச பார்த்திட்டு பேசுறத நிப்பாடுன்னா…மனசார தான் பன்னது தப்புனு நினைகிறவங்கள்ட அதே பேசுறது தப்பு…அதுனால இதுலாம் எதுவும் மனசுல வச்சிக்காத….போய் படி லைவ்வ பாரு…அப்டினு சொல்லிட்டு கேண்டின் போய்டா…

“என்ன மச்சி அருண் பேசுனான்”-அபி

“முயலுக்கும்,ஆமைக்கும் ரேஸ் வச்சா யாரு ஜெயிப்பாங்கனு பேசுனோம்…கேள்வி கேட்காம சாபுடுடி”-அனு

அப்பதான் ஜெனி வந்து..அனு நம்ம டிபார்ட்மெண்ட் சார்பா பாட வேண்டிய காவியாவுக்கு தீடிர்னு உடம்பு சரியில்லடி…நீ பாடேன்னு சொன்னா.

என்ன விளையாடுறியா ஜெனி நா எப்டி பாடுவேன்.

எப்டி பாடுவேன்னா வாயால தான் பாடனும்…கடுப்பு ஏதாம்ம வாடி ஃபர்ஸ்ட் சாங்கே நம்மளோடது தான்…

ஏன் வாய்ஸ் நல்லா இருக்காது டி…வேற யாரவது பாட சொல்லு ஜெனி.

உன் வாய்ஸ் நல்லா தான்டி இருக்கும்.டிபார்ட்மெண்டுலே நீங்க மூனு பேரு தான் நல்லா பாடுவிங்க…காவியாவுக்கு உடம்பு சரியில்ல..ராம் இன்னிக்கு காலேஜ் வரல…அது தான்டி உன்ன கூப்பிடுறேன்…

மேலும் கூட இருக்கவுங்களே…நம்மாள முடியலைனாலும்,உன்னால முடியாதுனு ஒன்னுமே இல்ல…நீ நல்லா பண்ணுவேன்னு சொல்லி ஊக்க படுத்துவாங்கள…அந்த வேலைய தான் ஏழு பேரும் பண்ணி அனுவ ஸ்டேஜ் ஏத்திட்டாங்க.

அனு செலக்ட் பண்ணி வச்சிருந்த பாட்டு வேற…ஆனா ஸ்டேஜ் ஏறுனவுடனே பார்த்தது சைட்ல இருந்த அருள்ள தான்…பார்த்த நிமிசம் அலைபாயுதே படத்துல வர கரோக்கி போட சொல்லிட்டு மேல ஏறிட்டா…

“எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே

அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே

உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்

என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்

என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

உறக்கம் இல்லா முன்னிரவில்

என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்

இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு

இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு

அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்”

அந்த பாட்டுடைய வரிகளின் கனமா..இல்ல அருள் பதில் சொல்லாததால அனு அவன நினச்சிட்டே பீல் பண்ணி பாடுனதாலையானு தெரியல…அந்த ஆடிட்டோரியமே சைலண்ட் ஆகிடுச்சு…யாரும் அனு கண்ணுலயிருந்து வந்த கண்ணீர பார்கலைனாலும்..அருள் பார்த்துட்டான்.

இன்னும் ஒரு மாசம் கழிச்சு ரிசைன் பண்ணுறதா இருந்த வேலைய…அப்பவே ரிசைன் பண்ணிட்டான்…ஆனா ரிசைன் பண்ணி சைன் பண்ணும் போது அனுவோட அழுத முகம் தான் நியாபகத்துக்கு வந்துச்சு.

Epi-8

“என்னடி கல்சுரல்ஸ்லாம் முடிஞ்சிருச்சா..”-தேவி

“ஹான் முடிஞ்சிருச்சுமா…ரொம்ப டையர்ட்டா இருக்கு..சோ எனக்கு டிபன் வேண்டாம்.நான் போய் தூங்குறேன்.”

“அடியே நில்லு! என்ன முகம் அழுத மாதிரி இருக்கு..குரலும் கரகரங்குது..”

“அதுலாம் ஒன்னு இல்லமா.. எல்லா புரோகிராம்கும் கத்துனதால..குரல் கரகரங்குது அம்மா..வேற ஒன்னும் இல்ல..நா போய் தூங்குறேன்.”

“என்னமோ நீ சொல்லுற..நானும் கேட்குறேன்..ஏதாவதுனா சொல்லுடி…இப்ப கொஞ்சம் பால் குடிச்சிட்டு போய் படு.. வெரும் வயித்தோட படுக்க கூடாது.”

“சரிம்மா…பால் குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தலா தான் இருந்துச்சு அனுவுக்கு.. எல்லாத்தையும் சொல்லுற அம்மாகிட்ட இத சொல்லலைனு…இருந்தாலும் எப்டியிருந்தாலும் இத சொல்லி தான் ஆகனும்..அப்ப பார்த்துக்கலாம்னு போய் படுத்துட்டா.”

“ஹாய் டி! என்ன பண்ணிடு இருக்கிங்க..”-அனு

“கபடி விளையாட்டுறோம்..வா ஒரு கை குறையுது..விளையாடுவோம்..”-கலை

“என்னடி கிண்டலா..”-அனு

“பின்ன என்ன..நேத்து தான் கல்சுரல் முடிஞ்சிருக்கு…நம்ம டிபார்ட்மெண்ட் தான் டிராபி வின் பண்ணிருக்கோம்…அப்ப அத பத்தி தானே பேசுவோம்..”-கலை

“சரிடி!தெரியாம கேட்டுட்டேன்.. என்ன பண்ணுறிங்கனு…இன்னிக்கு ஃபர்ஸ்ட் பிரியட் என்ன..”-அனு

“நம்ம அருள் சார்ரோடது..”-அபி

ஆனா அன்னிக்கு கிளாசுக்கு வந்தது..ராஜா சார்..

ஹலோ ஸ்டூடண்ட்ச்! குட்மார்னிங்.

குட்மார்னிங் சார்..

என்னடா அருள் சார் தானே கிளாசுக்கு வருவாங்க…இன்னிக்கு என்ன ரொம்ப நாள் கழிச்சு இந்த சார் வந்துருக்காங்கனு நீங்க நினைக்கலாம்.என்ன பண்ணுறது எனக்கு உடம்பு சரியாகிடுச்சேனு சொல்லி கொஞ்சம் சிரிப்போட நிப்பாடுனாறு..

அருள் சார் மாதிரி ராஜா சாரும் கலகலப்பா தான் கிளாஸ் எடுப்பார்னாலும்..அருள்ள மிஸ் பண்றதால.. அங்க இருந்த எல்லார் சார்பாவும் ஒரு பையன் எந்திருச்சு அருள் சார் எங்க போனாங்கனு கேட்டுட்டான்.

அவன் கேட்கலைனாலும் அனு எந்திருச்சு கேட்டுறுப்பா..

நீங்க எல்லாரும் மறந்துட்டிங்கனு நினைக்கிறேன்.அருள் சார் எனக்கு பதில்லா கெஸ்ட் லேக்சரரா வந்தவங்க தான்..இப்ப எனக்கு தான் சரியானதால..நான் டியூட்டில ஜாயின் பண்ணிட்டேன்..அருள் சார் ரிசைன் பண்ணிட்டாங்கனு சிரிச்ச முகமாவே சொன்னாலும்..உள்ளுக்குள்ள எல்லா ஸ்டூடண்ட்ச்சோட சோக முகத்த பார்க்கும் போது நிஜமாவே ரொம்ப கஸ்டமாச்சு..ஏன் தம்பி இப்டி என்ன பொய் சொல்ல வைக்கிறிங்கனு…இருந்தாலும் ஒரு வாரத்துல எல்லாரும் அருள்ள மறந்துட்டு தன்னோட கிளாஸ் கவனிக்க வச்சிடலாம்ங்கிற நம்பிக்கையில அன்னிக்கு உள்ள கிளாஸ்ஸ ஆரம்பிச்சாரு.

நல்ல வேளயா அவர் யாருகிட்டையும் கிவிஸ்டின் கேட்கல..முக்கியமா அனுகிட்ட.கேட்டுருந்தா அன்னிக்கு சொன்ன மாதிரி நோட்ஸ் குடுத்துட்டு இருந்திங்கனு சொல்லிருப்பா.

அப்படியே அந்த ஹவர் முடிஞ்சவுடன்.. ஃப்ரீ ஹவர்ங்கிறதால..பாதிலே நிப்பாட்டுன அரட்டை கச்சேரி ஆரம்பிச்சது.எத எதயோ பேசி கடைசியா டாபிக் வந்து நின்னது…பிளேஸ்மெண்ட் பத்தி.

“எல்லாரையும் ஒரே கம்பெனி காரனே செலக்ட் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும்ல…”-ஆனந்தி

“ஏன்!அங்கயும் போய் இதே கச்சேரிய ஆரம்பிக்கிறதுக்கா…அங்க போயாச்சு கொஞ்சம் உறுப்படியா வேல பார்போம்..”-கலை

“எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்னு சொன்னா..ரொம்ப பண்ணுற கலை நீ.. “-ஆனந்தி

“சைதான்களே!சண்டைய நிப்பாட்டுங்க ஃபர்ஸ்ட்..”-அபி

“நம்ம ஏழு பேர்ல..மூணு பேர்க்கு இப்பவே மாப்பிள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..மீதம் இருக்கிறது நாலு பேர் தான்..அதுல நானும் கலையும் பிரியா கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகியிருக்கோம்.. ஆனந்தியும் அனுவும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல செலக்ட் ஆகிடுறிக்கிங்க..அப்புறம் என்ன சமாளிச்சிடலாம்..அதோட இன்னும் டூ வீக்ஸ் தான் காலேஜ்…அப்புறம் பிராஜெக்ட் சம்மிட் பண்ண தான் வரனும்…சோ இப்பயும் சண்ட போட்டுகிட்டே இருக்காதிங்கடி…”-அபி

“அது சரிடி! இவ்வளவு நேரம் நாம எவ்ளோ பீல் பண்ணி பேசிட்டு இருக்கோம்..இவ என்னடானா இப்டி படுத்துருக்கா..”-சரண்

“அனு என்ன ஆச்சு..ஏன் இப்டி படுத்துருக்க..”-நித்யா

“தலவலிகுது அமுலு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…சார்கிட்ட லீவ் சொல்லிடு..கேட்டா ஒரு லெட்டர் எழுதி என் சைன் பண்ணி கொடுத்துடுனு சொல்லி வீட்டுக்கு கிளம்பிட்டா…இல்லைனா கண்ணுல இருந்து வர கண்ணீர்க்கு காரணம் சொல்லனும்..பொய் சொல்ல விரும்பாம தான் வீட்டுக்கு கிளம்பிட்டா…”

அனு வீட்டுக்கு வரது தெரியாததால…தேவி கல்யாண வீட்டுக்கு போய்டாங்க…

இருந்தாலும் அனுகிட்ட ஒரு ஸ்பேர் கீ இருந்ததால உள்ள போய்டா..

ஆனா உள்ள வந்த நிமிஷம் இவ்வளவு நேரம் கண்ணுல தேங்கியிருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளம்மா வெளிள வர ஆரம்பிச்சிருச்சு.. அதற்கு தோதா அம்மாவும் இல்லாததால தன்னுடைய சோகம் எல்லாம் கண்ணீர்ல கரஞ்சி போயிடாதாங்கிற ஏக்கத்தோடையே…கண்ணீரே தீரும் அளவுக்கு அழுது தீர்த்திட்டா.

நம்ம கதவ பூட்டிட்டு தானே போனோம்..இந்த நேரதுக்கு ரெண்டு பேர்ல யார் வந்துயிருக்கானு தெரியலையேனு நினச்சிட்டே தேவி கதவ திறந்தா…ஹால்ல படுத்திருந்தது அனு.

“அடியே எரும! என்ன காலேஜ் கட் அடிச்சிட்டியா…இந்த நேரத்துல வீட்டுல இருக்க”அப்டினு தேவி கேட்டதுக்கு அப்புறம் தான் அனுவோட முகத்த பார்த்தாங்க.

டேய் என்ன ஆச்சு!ஏன் இப்டி உன் முகம்லாம் வீங்கியிருக்கு..

“தலவலிம்மா…அதான்.”

“ஏன்டி!ஒரு சின்ன தலவலிக்கே இந்த அழுக அழுதின்னா…நீயெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி புள்ள பெக்க போறியோ…ஒன்னும் எனக்கு புரியல…இப்ப போய் முகம் கழுவிட்டு வா..காபி போட்டு தரேன்…அப்புறமா ஒரு மாத்திரை சாப்பிட்டு தூங்கு…சரி ஆகிடும்.”

“சரிம்மா.”

“ஏன்டி!வெளில மழை வருதானு பாரு.”

“ஏம்மா..”

“இல்ல நான் கேட்குறதுக்கு எல்லாம்..ஒரு வார்தையில பதில் சொல்லுறியே அதான்னு..சிரிச்சிட்டே சொன்னாங்க.”

“அம்மா”

“சரிடி கோவபடாத…போய் முகம் கழுவிட்டு வா.”

அருள்ளோட நியாபகத்துலையும்…பிராஜெக்ட் டேன்சனுலையுமே அனு காலேஜ்ஜ முடிச்சிட்டா…ஆனா எந்த வேலை பார்த்தாலும்…செல்லரிக்கும் கரையான் மாதிரி அருள்ளோட நியாபகம் எப்போழுதுமே இருந்துச்சு.

“ஏன்டி எருமமாடே! காலேஜ் படிக்கும் போது தான்..ஒரு வேலையும் பார்க்க மாட்ட…இப்பயாசும் வீட்டுல கொஞ்சம் வேலை பார்த்தா என்ன..”

“அம்மா என்னாலயெல்லாம் வேல பார்க்க முடியாது…நீங்களை பார்த்துகோங்க..அப்டினு சொல்லி தேவி திட்ட ஆரம்பிக்கிறதுகுள்ள லைப்ரரிக்கு கிளம்பிட்டா.”

இங்க தான் கியூபிட்…எனக்கு ரொம்ப போர் அடிக்குதே..என்ன பண்ணலாம்னு யோசுசிச்சு…அனுவ மாட்டிவிட பிளான் பண்ணிடுச்சு.

கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்ல இவளுக்கு…எல்லா பெட்சீட்டும்,பெட் கவரும் எடுத்துட்டு வந்து துவைக்க போடுனு சொன்னேன்…அதுக்குள்ள லைப்ரரி போயிட்டா…இவள பெத்ததுக்கு பதில்லா ஒரு அம்மி கல்ல பெத்துருக்கலாம்..

மாவு அரைக்கவாது யூஸ் ஆகிடுக்கும்னு…அனுவ திட்டிக்கிட்டே பெட்கவர் எடுக்க அனு ரூம்முக்கு போனாங்க.

பெட்சீட்,பெட்கவர் எடுத்ததுக்கு அப்புறம் தான்..பில்லோ கவர் எடுக்கலைனு கவர உறுவுனாங்க…உறுவுன நிமிசம் கீழ விழுந்தது…அனு வரஞ்சி வச்சிருந்த அருள்ளோட ஃபோட்டோ உள்ள பேப்பர் தான்.

இப்டி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சிருந்தா…அனு கிளம்பியிருக்க மாட்டாளோ…

கீழ விழுந்த பேப்பர்ர எடுத்து பார்த்தா..அங்க ஒரு பையனோட கோப முகம் உள்ள படமும்,அனு கைபட எழுதியிருந்த கவிதையும்.

 

அத பார்த்த நிமிசம் பெரிய ஹாக்னாலும்…அனு வந்தவுடன கேட்கலாம்னு சொல்லி துணிய மிசின்ல போடுறதுக்கு போயிட்டாங்க.

“அம்மா ஒரு காபி.”

“தரேன்..இப்டி வந்து உட்காரு…கொஞ்சம் உன்கிட்ட பேசனும்..”

“அம்மா காஃபி குடுத்துட்டு பேசும்மா…எவ்வளவு நேரம் வேண்ணா கேட்குறேன்.”

“சரி! வெயிட் பண்ணு வரேன்.”

காஃபி குடிக்கும் வரை பொறுமையாக இருந்த தேவி…”ஏன் அனு உன்ன நாங்க ஏதாவது கஸ்ட படுத்துறோம்மா..”

“இல்லமா..”

“அப்ப நீ ஆச படுற ஏதாவது வாங்கி தராம இருந்தோம்மா..”

“இல்லமா..”

“எல்லாதையும் ஃபர்ஸ்ட் நீ என்கிட்ட தானே சொல்லுவ…

அதுவும் ஒரு பையன பார்தேங்கிறதுல ஆரம்பிச்சு…யார் யார் லெட்டர் குடுத்தாங்கனு வரைக்கும்…”

 

“ஆ..ஆ..ஆமாம்மா..”

 

“நான் கொஞ்சம் ஸ்ட்ரீட் மாதிரி நடந்துகிட்டாலும்…உன்னளவுல சுதந்திரம் குடுத்துருக்கேன்னா..இல்லயா..”

 

“குடுத்துருக்கிங்க அம்மா..”

 

அப்ப இது என்னது அனு..அப்டினு அந்த பேப்பர எடுத்து காமிச்சாங்க..

அம்மா அது வந்துனு..அனு ஆரம்பிக்கிறதுக்கும்…தேவி அவுங்க கை அனுவோட கன்னத்த பதம் பார்கிறதுக்கும்…கரைக்ட்டா இருந்துச்சு..

 

“அம்மா..”

 

“எத்தன நாளா இது நடக்குது அனு…”

 

“நீ அப்ப அப்ப அழுகுறதுக்கு காரணம் இது தான் கரைக்ட்…நா எத்தன தடவ கேட்டுருப்பேன்….ஆனா அத்தன தடவையும் தலவலினு சொன்ன நீ…ஒரு தடவ கூட உண்மைய சொல்லனும்னு உனக்கு தோனலியா..”

“பிளிஸ்மா!கோப படாதம்மா…உன்கிட்ட இந்த உண்மைய சொல்லலைனாலும்…தலவலினு நான் சொன்னதும் உண்ம தான் மா..”

“கண்டிப்பா உன் மேல கோபம் தான்..ஆனா நீ லவ் பண்ணுரியேனு இல்ல…ஏன்னா நானும் உங்க அப்பாவும் லவ் மேரேஜ் தான்…அத நான் தப்புன்னும் சொல்லல…ஆனா எப்ப இருந்து என் பொண்ணு பொய் சொல்ல ஆரம்பிச்சானு தான்..”

 

தேவி சொல்லி முடிச்ச நிமிசம்…அனு போய் தேவிய இருக்கி கட்டிகிட்டு அழுக ஆரம்பிச்சிட்டா..

 

“அம்மா சாரிமா!என்ன மனிச்சிடுமா…பிளிஸ்மானு சொல்லி ஒரு அரைமணி அழுது முடிச்சதுக்கு அப்புறம் தான் தேவிய அணைப்பில் இருந்து விட்டா…ஆனா அதுவரைக்கும் தேவியும் எதுவும் பேசல…”

 

அவுங்க அவுங்களுக்குள்ளே கேட்டுகிட்டு இருந்தாங்க…எங்க நாம தவறிட்டோம்னு…அது அவுங்கள அறியாமே கேள்வியாகவும் வெளிய வந்துடுச்சு..

 

ஐயோ அம்மா!நீங்க எங்கயும் தவறல…நான் தான் உங்க பொண்ணுங்கிறதுல இருந்து தவறிட்டேன்னு சொல்லி திருப்பி அழுக ஆரம்பிச்சிட்டா…

 

ஒருவழியா அழுது அழுது ஓஞ்சதுக்கு அப்புறம் தேவி கேட்ட கொஸ்டின் “யார் அந்த பையன்?”

 

“பேரு அருளழகன் மா..எங்க காலேஜ்ல தான் லெக்சர்ரா இருந்தாங்க..”

 

“இருந்தாங்கனா..”- தேவி

 

“இப்ப இல்லமா..ரிசைன் பண்ணி போயிட்டாங்க..”

 

“சரி இப்ப என்ன பண்ணுறாரு..?”

 

“தெரியாது மா..”

 

“எங்க இருக்குறாரு..?”

 

“தெரியாது மா..”

 

“போன் நம்பர் இருக்கா..?”

 

“இல்லமா..”

 

“எங்க தங்கியிருக்காங்கனு தெரியுமா..?”

 

“தெரியாது மா..”

 

“என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்கா..?”

 

“கண்டிப்பா இல்லமா..”

 

“அப்ப நீ லூசா..?”

 

“இல்லமா..”

 

“ஆனா எனக்கு என்னமோ நீ முழு லூசு ஆகிட்டேன்னு தெரியுது.. அந்த பையன் எங்க இருக்கானு தெரியாது, என்ன பண்ணுறாங்கனு தெரியாது,நம்பர் கிடையாது.. அப்புறம் எப்படி இந்த லவ்..”

 

“அம்மா நீங்க சொல்லுற மாதிரி அவுங்கள பத்தின டீடைல் என் கிட்ட இல்லைனாலும்…என்னுடைய காதல் உண்மை மா.. கண்டிப்பா தேடி நா கண்டு பிடிச்சிடுவேன்.”

 

“நம்பிக்கை இருக்கலாம் அனு…ஆனா எதுவுமே தெரியாம எப்டி கண்டு புடிப்ப நீ..”

 

“எனக்கு நம்பிக்கை இருக்கு மா…என் காதல் உண்மையானது…நிச்சயமா நான் கண்டு பிடிச்சிடுவேன் மா…ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..”

 

“உன்கிட்ட எவ்வளவு டைம் வேணும்னு கேட்டா…காலம் முழுவதுக்கும்னு சொல்லுவ…அப்படிலாம் எங்கனால டைம் கொடுக்க முடியாது…எங்களுக்கு நீ ஒரே பொண்ணு…உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு.. எங்களுக்கும் ஆசைலாம் இருக்கு…சோ இரண்டு வருசம் டைம் தரோம்…அதுக்குள்ள கண்டுபிடி…இல்லைனா நிதர்சனத்த புரிஞ்சிகிட்டு நாங்க சொல்லுற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கனும்..சம்மதமா.”

“தேங்யூ சோமச் அம்மா…டீல்…கண்டிப்பா இரண்டு வருசத்துக்குள்ள கண்டுபிடிச்சு…அவனையும் காதலிக்க வச்சிடுவேன்…அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…உங்களுக்கு மாப்பிள்ளை தேடுறதுக்கான வாய்பே தர மாட்டேன்மானு சொல்லி சிரிச்சிட்டே கன்னதுல முத்தம் வச்சு கட்டிக்கிட்டா..”

“அடியே!கண்ணத்த எச்சி பண்ணாத…போ போய் துவச்ச டிரஸ்ஸ காய போடு.. நாளைக்கு புது ஆபிஸ்க்கு போனும்ல..”

“ஆமா மா!ஆனா என்னால டிரஸ் காய போட முடியாதுமா…ரொம்ப அழுது தலவலிக்குது இப்ப ஒரு காஃபி போட்டு தானு சொல்லி…அடுத்து தேவியோட திட்ட கேட்க ஆரம்பிச்சிட்டா”…

Epi-9

“அடியே! ஆஃபிஸ்க்கு டைம் ஆகிடுச்சு,பாரு…இன்னும் ரூம்முக்குள்ள என்ன தான்டி பண்ணுற..”

“இந்தா வந்துட்டேன் மா..”

“எவ்வளவு நேரம்டி என்ன கத்த வைப்ப…டிஃபன் ஃபாக்ஸ் எடுத்துட்டு கிளம்பு.. இன்னிக்கு உங்க அப்பா கொண்டு போய் விடுவாங்க.”

“ஏம்மா முதல் நாள் மட்டும் தான் கொண்டு போய் விடுவாங்களா..”

“பின்ன!டேய்லி உன்ன கொண்டு போய் விடனும்மா…ஏதோ முதமுதல்லா போறியேனு உங்க அப்பாவ கொண்டு போய் விட சொன்னேன்..இனி நீயே ஸ்கூட்டில போ…அப்புறம் இன்னொரு விஷயம்..உன்ன விட்டா இந்த ஊரையே வித்துட்டு வந்துடுவ…அதுனால ரொம்ப வாய் பேசாம கிளம்பு…”

“கிரேட் இன்சல்ட் மா..”

“பரவாலடி கிளம்பு…அங்க போயாச்சு வேல பார்க்க பழகிக்க..இங்க மாதிரியே நின்ன நெடுமரம் மாதிரி இருக்காம..”

“அம்மா இருந்தாலும்..நீ என்ன ரொம்ப மட்டம் தட்டுற மா..”

“அடியே….”

“ஏம்மா உங்க ரெண்டு பேர் சண்டைய கொஞ்சம் நிப்பாட்டுறிங்களா…எனக்கு ஆஃபிஸ்க்கு டைம்மாச்சு..நீ உள்ள ஏறு பாப்பா..அப்டினு சொல்லி இவுங்க ரெண்டு பேரோட சண்டையையும்( போரையும்) நிப்பாட்டிடாங்க சுந்தரம்.”

காருக்குள்ள வந்தவுடன ரேடியோவுல பாடுன சாங்

“திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

ஓ.. அன்பே..

நீ சென்றால்கூட வாசம் வீசும்

வீசும் வீசும் வீசும்

என் அன்பே…. என் நாட்கள் என்றும் போலப் போகும்

போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே

தன்னாலே காதல் வரம் கண்டேன்

திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

 

உள்ளமே உள்ளமே

உள்ளே உனைக்காண வந்தேன்

உண்டாகிறாய் துண்டாகிறாய்

உன்னால் காயம் கொண்டேனே

காயத்தை நசுக்கினேன் என்ன சுக ஆனந்தமே

நம் கனவிலும் வசித்தேன்

என்னுடைய உலகம் தனி

 

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

 

சந்தோசமும் சோகமும்

சேர்ந்து வந்து காக்க கண்டேனே

சந்தேகமாய் என்னையே

நானும் பார்த்துக் கொண்டேனே

ஜாமத்தில் விழிக்கிறேன்

ஜன்னல் வழியே தூங்கும் நிலா

ஹோ காய்ச்சலில் கொதிக்கிறேன்

கண்ணுக்குள்ளே காதல் வினா வினா

 

திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம் கண்ணில் காதல் வரம்

தம தம தம் தம் சுகம்

உன்னாலே கீதம் நெஞ்சில் கூடும் மடல்

ஓ.. அன்பே..

நீ சென்றால்கூட வாசம் வீசும்

வீசும் வீசும் வீசும்

என் அன்பே…. என் நாட்கள் என்றும் போலப் போகும்

போகும் போகும் போகும்

என் உள்ளே என் உள்ளே

தன்னாலே காதல் வரம் கண்டேன்

 

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

நெஞ்சை நஞ்சாக்கிச் செல்லும்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்

தன்னைத் துண்டாக்கிக் கொள்ளும்

கொஞ்சும் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்

கொஞ்சும் உறவுகள் கெஞ்சும் பிரிவுகள்”

(இந்த பாட்டுல வர எந்த லையனையும் கட் பண்ண முடியல..அனுவோட ஃபீலிங்ஸ் அப்டியே சொல்லுற மாதிரி இருந்துச்சு..அதான் ஃபுல் பாடல் வரியும் குடுத்துட்டேன்??)

அதற்கு அடுத்தும் நிறைய பாடல் காருக்குள்ள ஓடுனாலும்…அனுவின் மனம் என்னவோ இந்த பாடல்லே நின்னுருச்சு…எத்தனையோ மீம்ஸ்ல சோகமா இருக்கும் போது நாம பாடலில் வரிகளை தான் கவனிப்போம்னு பார்க்கும் போதுலாம்…அப்படியானு கேட்டு சிரிச்சிக்கிட்ட மனசுக்கு அப்டி தான்னு அருள் நிருபிச்சிட்டான்.

 

பாப்பா ஆபிஸ் வந்துடுச்சு.. எனும் சுந்தரத்தின் குரல் வந்தவுடன தான் அனு அந்த மோன நிலையில் இருந்து வெளில வந்தா..

 

ஓகேப்பா!பாய்…பார்த்து போங்கனு சொல்லிட்டு அந்த ஆபிஸ்ஸ நிமிர்ந்து பார்த்தா…ஐந்து மாடி கண்ணாடியால் ஆன கட்டிடம் கம்பிரமாக நின்றது.

ரிசப்ஷன்ல நின்ன பொண்ணுகிட்ட “ஹலோ மேம்!ஐம் அனு ஸ்ரீ.. அண்ட் நீயூ ஜாயினி இன் திஸ் ஆபிஸ்.”

“ஹலோ அனு!வெல்கம் டூ அவர் ஆபிஸ்”

“தேங்யூ மேம்”

“மேம் வேண்டாம்..கால் மீ கவி”

“ஓகே கவி!நா யார போய் பார்க்கனும்.. ஜாயின் பண்ணுறதுக்கு..”

“கமல் சார மீட் பண்ணுங்க..அவுங்க கேபின் லாஸ்ட் புளோர்ல..ரைட் சைட் சேகன்ட் ரூம்.அண்ட் ஹேவ நைஸ் டே.”

தேங்க்யூ கவி..நா மீட் பண்ணிக்கிறேன்.. ஈவினிங் பாக்குறேன்னு ஒரு சிநேக புன்னகையோட கிளம்பிட்டா அனு.

“மே ஐ கமின் சார்”-அனு

 

“எஸ் கமின்”-கமல்

 

“சார் ஐம் அனு ஸ்ரீ.நியூ ஜாயினி.”

 

“தெரியும்..உங்க பைல் தான் பார்த்துட்டு இருந்தேன்.உங்களுக்கு மூணு மாசம் டிரைனிங்..நெக்ஸ்ட் கேபின்ல சாரா இருப்பாங்க..அவுங்கள கான்டேக்ட் பண்ணுங்க அண்ட் வெல்கம் டூ அவர் ஆபிஸ்..”

 

“தேங்யூ சார்.”

 

“நோ ப்ராப்ளம்..”

இன்றோடு அனுவும் ஆனந்தியும் அருள் கன்ஸ்ட்ரக்ஷன்ல சேர்ந்து மூணு மாசம் ஆகிடுச்சு.சோ டிரைணிங்கிற போஸ்ட்ல இருந்து எம்ளாயிங்கிற போஸ்ட்க்கு புரோமொசன் வாங்கிட்டாங்க.

கியூபிட்டும் இவுங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வச்சிடலாம்னு மூணு மாசம்ம்மா டிரை பண்ணி இன்னிக்கு தான் மீட்டிங்க சக்ஸஸ் பண்ண போகுது.

“அமுலு எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு..பாஸ்ஸ மீட் பண்ணணும்மாம்ல..”-ஆனந்தி

“அதுக்குயேன்டி பதட்டபடுற.. சிங்கம் புலியா உள்ள இருக்க போறது மனுசன் தானே..தைரியமா இரு..”-அனு

“சரிடி எதுக்கு நம்மள மீட் பண்ணனும்னு சொல்லிருக்காரு…”-ஆனந்தி

“நானும் கவிக்கிட்ட கேட்டேன் டி..அது இங்க இருக்க ப்ரசீஜர்ராம் டி…ட்ரெயினியாயிருந்து எம்ளாயியா மாறினா எம்டி தான் விஸ் பண்ணி ஜடி கார்ட் கொடுப்பாராம்.. அதுக்கு தான் மீட் பண்ண போரோம்.”-அனு

ஏன்டி ஐடி கார்டு குடுக்கவா ஒருமணி நேரம்மா உட்கார வச்சுருக்காயிங்கனு சொல்லி தன்னுடைய முகத்த தோல் பட்டையில இடிக்கிறதுக்கும்..கமல் கதவ துறந்துட்டு வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.

“சாரி கைஸ்!சார் மீட்டிங்ல மாட்டிகிட்டாங்க..இப்ப போய் பாருங்க..”

“ஓகே சார்.”

“மே ஐ கமின் சார்”

 

யேஸ் கமின்னு சொல்லிட்டு அருள் பார்கிறதுக்கும்…அனு உள்ள வரதுக்கும் கரைக்ட்டா இருந்துச்சு.

அனுவ பார்த்த நிமிசம்….இவ எப்டி நம்ம ஆபிஸ்க்கே வந்தாங்கிற அதிர்ச்சில அருள் சீட்லயிருந்து எந்திருச்சிட்டான்.

அனுவுக்கும் அதிர்ச்சி தான்…அதிர்ச்சிக்கான காரணம் எங்க போய் இவன தேடுறதுன்னு நாம யோசிச்சா…நமக்கே எம்டியா இருக்கானே…இனி எப்டி நீ ஓடுரேன்னு நானும் பார்க்கிறேன் டானு நினைச்ச ஆனந்த அதிர்ச்சி…

ஹே நம்ம அருள் சாருடினு வந்த ஆனந்தியோட வாய்ஸ்ல தான் ரெண்டு பேரும் நிஜதுக்கு வந்தாங்க.

“சார் நீங்க இங்க எம்டினா…அப்ப காலேஜ்ல பாடம் எடுத்தது உங்க பிரதர்ரா சார்…”-ஆனந்தி

“நா ஒரே பையன் தான்மா…அது எங்களோட காலேஜ்…அது தான் வந்து கிளாஸ் எடுத்தேன்.. இந்தாங்க உங்க ஐடிகார்ட்…போய் ஜாயின் பண்ணிக்கோங்க..ஹேவ நைஸ் டே..”

தேங்யூ சோ மச் சார்னு ஆனந்தி சொல்லி ஐடிகார்ட்ட வாங்குறது தெரிஞ்சாலும்…அனு எதுவும் பேசல…. ரொம்ப நாள் நாம தேடுன பொருள்,எதிர் பார்க்காம நம்ம கைல கிடைக்கும் போது ஒரு சந்தோஷம்மும் கூடவே கண்ணீரும் வருமே…அந்த மனநிலையில இருந்தா.

அடியே சார் உன்கிட்ட தான் ஐடிகார்ட் குடுக்குறாங்க வாங்குனு ஆனந்தி கிள்ளுனதுக்கு அப்புறம்தான் கார்ட வாங்குனா..

ரெண்டு பேரும் கிளம்பினதுக்கு அப்புறம் கமலுக்கு பயங்கரமா திட்டு விழுக ஆரம்பிச்சிடுச்சு..

“யார கேட்டு கமல் நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் எல்லாம் செலக்ட் பண்ணிங்க..”

 

 

“சார் இந்த இயர்ல இருந்து ரெண்டு ஸ்டூடண்ட் செலக்ட் பண்ணுங்கனு பெரிய எம்டி தான் சொன்னாங்க சார்..”

“ஓ!அத ஏன் என்கிட்ட சொல்லல…”

“சார் எப்பவுமே நீங்க இண்டர்வியூக்கு வர மாட்டிங்க சார்…நான் தான் செலக்ட் பண்ணுவேன்…எம்ளாயியா ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான் சார் நீங்க பார்பிங்க…அதான் சார் சொல்லல…சாரி சார்..”

“இட்ஸ் ஓகே!…”எனக்கு கொஞ்சம் தலவலியா இருக்கு..நா வீட்டுக்கு கிளம்புறேன்…முக்கியமான பைல் இருந்தா…வீட்டுக்கு எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டான் அருள்.

இன்னிக்கு இந்த சாருக்கு என்ன ஆச்சு..எப்பவும் நாம தானே செலக்ட் பண்ணுவோம் இப்ப எதுக்கு இப்டி கத்துறாரு…அவரு கண்ணு கூட கலங்குன மாதிரி இருந்துச்சு…என்னவா இருந்தா என்னடா உனக்கு…போய் வேலைய பாருனு மனசாட்சி திட்டுனதுக்கு அப்புறம்வேலைய பார்க்க போயிட்டான் கமல்.

கியூபிட்டும் ஆறு மாசம்மா இவுங்க ரெண்டு பேரையும் எப்படியாச்சு சேர்த்துடனும்னு போட்ட பிளான் எல்லாதையும் அருள் கிளோஸ் பண்ணிடான்.அதுனால கடைசியா ஒரு தடவ முயற்ச்சி பண்ணி பார்போம்…இப்பவும் சேரலைனா, ரெண்டு பேரும் பிரிஞ்சிடடும்கிற முடிவுல…மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுச்சு.

“ஹலோ அனு,ஒரு சின்ன ஹெல்ப்…”-கமல்

“சொல்லுங்க சார்..”

“எம்டி சாருகிட்ட அர்ஜென்டா ஒரு சைன் வாங்கனும்..வாங்கிட்டு சாராகிட்ட குடுக்க முடியுமா..”

“அப்கோர்ஸ் சார்..பட் நா சைன் வாங்குனா எம்டி வேற எதாவது சொல்லுவாங்க..”

“எதுவும் சொல்ல மாட்டாங்க…கேட்டா நா பாரின் கிளையண்ட்ட ரிசிவ் பண்ண போயிருக்கேன் சொல்லுங்க…இது அர்ஜென்ட் கேள்வியா கேட்காம எடுத்துட்டு போறிங்களா..”

 

“ஓகே சார்..”

“மே ஜ கம் இன் சார்”-அனு

“யேஸ்..”

“சார் இந்த ஃபைல்ல சைன் வேணும்..”

“வச்சிட்டு போங்க..”

“………”

“வாட்!ஏன் இப்டி பார்த்துட்டு இருக்கிங்க..”

“பதில் சொல்லுங்க..நா கிளம்புறேன்..”

“எதுக்கான பதில்…”

“என்னோட காதலுக்கான பதில்,ஏன் காலேஜ்ல ரிசைன் பண்ணிங்கனுங்கிறதுக்கான பதில்..”

நா ஏன் இதுக்கான பதில் எல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு அருள் சொன்ன நிமிசம் அனு அவனுடைய சட்டை காலர இறுக்கி பிடிச்சிருந்தா.

Epi-10

“என்ன பண்ணுற அனு..”

“என்ன பார்த்தா லூசு மாதிரி இருக்காடா…எதுக்கு உனக்கு பதில் சொல்லனும்னு சொல்லுற..”

“லூசு மாதிரிலாம் இல்ல…முதல்ல சட்டையில இருந்து கை எடு..”

 

“பதில் சொல்லு எடுக்குறேன்..”

“சொல்லி தொலையுரேன்…ஆனா அதுக்கு அப்புறம் என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது..”

“முதல்ல நீ சொல்லு! டிஸ்டர்ப் பண்ணுறதா வேண்டாம்மானு…கடைசியா நா சொல்லுறேன்.”

அத சொல்லுறதுக்கு முன்னாடி…இனி சும்மா கூட என்கிட்ட நீ பேச மாட்ட அனு…அண்ட் உன்ன மாதிரியே நானும் தான் ஐ லவ் யூ…பட் இது என்னிக்குமே நடக்க போறது இல்லனு மனசுக்குள்ள நினைச்சிகிட்டே…சொல்ல ஆரம்பிச்சான்…

ஒரு வருசத்துக்கு முன்னாடி நா பாரின் போயிருந்தேன்….அங்க ஒரு ஆக்ஸிடென்ட்… என்னால எப்பவுமே ஒரு குழந்தைக்கு அப்பா ஆக முடியாது…அப்டினு சொல்லி அழுதுட்டே சுவர் பக்கமா திரும்பிட்டான்..

இதுக்கு தான் உன்ன அவாய்ட் பண்ணேன்…நீ ஸ்டேஜ்ல அழுதுட்டே பாடுனியே…அத பார்த்து தான் உன்ன ரொம்ப கஸ்டபடுத்துறேன்னு தோணுச்சு..அதான் ரிசைன் பண்ணிட்டேன்…ஆனா விதி வலியது போல என் ஆபிஸ்லே ஜாயின் பண்ணிருக்க நீ…என்ன மறந்துட்டு வேற எதாவது ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ…அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது…அப்டி சொன்னதுக்கு அப்புறமும் அனு கிட்ட இருந்து எந்த பதிலும் வராததால…அவ போயிட்டானு நினச்சு…ஐ லவ் ஸ்ரீ…அப்டினு அருள் சொன்னான்..

சில வினாடிகளுக்கு அப்புறமா திரும்புனா…அனு எங்க நின்னாலோ…அங்கேயே தான் இருந்தா…

“நீ இன்னும் போகலியா..”

“எங்க போயிருக்கனும்னு நினைக்கிற..”

“இல்ல இத கேட்டோன போயிருப்பேன்னு நினச்சேன்..”

“போயிருந்தா எப்டி நீ ஐ லவ் ஸ்ரீனு சொன்னத கேட்கிறது..”

“அது ஏதோ தெரியாம சொல்லிட்டேன்…உனக்கு இத விட பெட்டர் கம்பெனில வேல வாங்கி தரேன்…நீ உன் வாழ்க்கைய பார்த்துட்டு கிளம்பு..”

“என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…உடனே மனச மாதிட்டு…நீ சொல்லுற மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்குவேனு தோணுதா..”

“இல்ல என்னால…”

“நிப்பாட்டுங்க”இப்ப என்ன உங்கனால அப்பா ஆக முடியாது…அதுனால என்ன…செக்ஸ் மட்டுமே வாழ்க்கை கிடையாது…அத தாண்டியும் நிறைய இருக்கு…ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க அன்பு போதும் நாம மொத்த வாழ்க்கையும் வாழுறதுக்கு.. இப்பவும் சொல்லுறேன்..காதல்ங்கிறது அன்பு தான்…ஒரு தாய் தன்னுடைய கருவில இருக்க குழந்தை எப்டி இருக்கும்னு தெரியாம…ஒரு அன்பு வச்சிருப்பாங்கல…அது மாதிரி தூய்மையான அன்பு தான்,நா உங்க மேல வச்சிருக்கிறதும்..இப்ப கல்யாணத்துக்கு அப்புறம் உங்களுக்கு இந்த மாதிரி ஆகியிருந்தா…நா என்ன உங்கள விட்டா போயிடுப்பேன்…கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…

நமக்கு குழந்தை இல்லைனா என்ன…இங்க எத்தனையோ குழந்தைங்க,அம்மா அப்பா இல்லாம இருப்பாங்க…அவுங்களுக்கு நாம அப்பா, அம்மாவா இருப்போம்…அப்புறம் ஒரு குழந்தைய தத்து எடுத்துகிட்டா அந்த புள்ளைக்கு மட்டும் தான் அப்பா அம்மாவா இருக்க முடியும்…அதுனால ஒரு குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கலாம்…அங்க வர எல்லா குழந்தைக்கும் நாம நல்ல பெற்றோர்ரா இருப்போம்.. என்ன சொல்லுறிங்க..

“இதுலாம் நடக்கும்னு தோணுதா…நீ வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ..”

“யோவ்!என்ன கொழுப்பா..நா என்ன சொல்லிட்டு இருக்கேன்..நீ லூசு மாதிரி வேற பையன கல்யாணம் பண்ணிக்கோனு சொல்லுற..”

“இல்ல..நா”

“நிப்பாட்டு…நா கேட்கிறதுக்கு முதல்ல பதில் சொல்லு…ஆனா அந்த பதில் உண்மையா மட்டும் தான் இருக்கனும்..”

“கேளு..”

 

“டூ யூ லவ் மீ”…உங்க அம்மா மேல சத்தியமா உண்மையான பதில் தான் சொல்லணும்..

“யேஸ்..”

“ஹப்பாடி…உன்கிட்ட இருந்து இந்த பதில்ல வாங்கிறதுக்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியதா இருக்கு…இனி நாம லவ்வர்ஸ்…கைய குடு…கங்ராஸ்லேசன்…”

“ஹே!நா என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீ என்ன சொல்லிட்டு இருக்க..”

“யோவ்!திருப்பி ஆரம்பிக்காத…என்னால முடியல..அழுதுடுவேன்னு வடிவேல் ஸ்டைல சொல்லி லைட்டா சிரிக்க வச்சிட்டா..”

இப்டியே…அருள் வேண்டாம்னு சொல்லுறதும் அனு சம்மதிக்க வைக்கிறதுலையும் ஒரு மாதம் ஓடிருச்சு…”கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” அப்படி சொல்லுற மாதிரி பேசி பேசியே ஓகே சொல்ல வச்சிட்டா..

மூன்று மாதங்கள் கழித்து:

அந்த V.G மஹால்லே கூட்டத்தால நிரம்பி வழிஞ்சது…ஆமா இன்னிக்கு அனுவுக்கும் அருளுக்கும் கல்யாணம்..

பட்டு வேஷ்டி கட்டி மிக கம்பிரமா மேடையில உட்கார்ந்திருந்தான் அருள்…இந்த பக்கம் தேவ மங்கை தான் வந்துடுச்சோனு நினைக்கிற மாதிரி அவ்வளவு அழகோட அனு.

எல்லார் முகத்துலையும் அவ்வளவு சந்தோஷம்…அவ்வளவு நிறைவு…இவுங்க இரண்டு பேரோட பொருத்தத்த பார்த்து…

அன்று இரவு:

அருள் ரூம்ல இருக்க…அனு கல்யாண அலங்காரத்த கலச்சிட்டு மிதமான ஒப்பனையோட பச்சை காட்டன் சில்க் சேரி கட்டி…ஏற்கனவே சிகப்பான கன்னங்கள்…உறவு பொண்ணுங்களோட கேலியால இன்னும் சிகப்பாகி…வெட்கப்பட்டு கொண்டே அந்த அறைக்குள்ள நுழைந்தாள்.

“வா!அனு…இங்க உட்காரு..”

“ஏன் இப்டி வேர்குது உங்களுக்கு…”

“இது தான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்…எக்ஸ்பீரியன்ஸ் இல்ல…அதுனால தான்…”

“எனக்கு மட்டும் டேய்லி டேய்லி எக்ஸ்பீரியன்ஸ்ஸா…லூசு மாதிரி பேசாதயா…”

“சரி பேசல…ஆனா உன்கிட்ட ரெண்டு கேள்வி மட்டும் கேட்கனும்..”

“கேளுங்க..”

“நீ ஏன் எனக்கு இப்டி ஒரு பிரச்சினை இருக்குனு எங்க அம்மாகிட்டையும்..உங்க வீட்டுலயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்ட..”

“திருப்பி சொல்லுறேன்…இது ஒரு பிரச்சினையே கிடையாது…அப்புறம் இது உங்க அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்னு சொன்னிங்க…சோ இத எல்லாருக்கும் சொல்லி பெரிய இஸ்யூவா ஆக்க வேண்டாம்னு நினச்சேன்…அவுங்க நம்ம கிட்ட எதுவும் கேட்கலினாலும்…கண்டிப்பா அவுங்களுக்கு கஸ்டமா இருக்கும்…அதுனால இது என்னிக்குமே யாருக்கும் தெரிய கூடாது…இது என் மேல பிராமிஸ்…யாருகிட்டையும் நீங்களும் சொல்ல கூடாதுனு அனு சொல்லி முடிச்ச நிமிசம் அருள்ளோட அணைப்பில இருந்தா…”

அணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இறுகி…தன் இதழால் அவளது இதழில் கவி படைக்க ஆரம்பித்தான்…

மூச்சுக்கு கஸ்ட படுவாளேனு இவன் விட நினைக்க…எப்போழுது இதழ் முத்தத்தை…யுத்தமாக அனு மாற்றினால் என்பது தெரியவில்லை…மிக நீளமான முத்தத்திற்கு பிறகே இருவரும் பிரிந்தனர்.

“அடியே ராட்சசி…!மெதுவா டி…உதட்டுலயிருந்து இரத்தமே வந்துடுச்சு…”

“கலகலனு சிரிச்ச அனு…சரி சாரி செல்லம்…நெக்ஸ்ட் கேள்வி என்ன..

 

“நீ ஏன் அப்போ அப்போ வாங்க போங்கனு சொல்லுற…சில நேரம் வாயா போயா சொல்லுற..”

“நல்ல கேள்வி…பர்ஸ்ட் நைட் அன்னிக்கு கேட்க வேண்டிய கேள்வி தான்..”

“ரொம்ப பண்ணாத பதில் சொல்லு..”

“சரி சொல்லுறேன்”

“கேட்டுக்கோங்க…நல்ல மூட்ல இருந்தேனா மரியாதையா கூப்பிடுவேன்….கோவமா இருந்தேன்னா…என்ன அறியாமையே வாயாபோயா வந்துடும்…”

“அப்படியே வாடா போடாவும் வரும்…சொல்ல விட்டுட்ட…”

“ஆமா…”

அப்படி சொல்லும் உதடுகளுக்கு தண்டனை குடுக்குறதுக்கு முன்னாடி…அனுவோட கண்ணங்கள தன்னுடைய கைகளால தாங்கி…தேங்க்ஸ் அனு…தேங்யூ சோ மச்…நீ இல்லனா…நா என்ன ஆகிடுப்பேன்னு தெரியல…உன்னால மட்டும் தான் என்னுடைய உலகம் இவ்வளவு அழகாச்சுனு…தன்னுடன் இறுக்கி கொண்டான்..

ஒரு வழியா இவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச கியூபிட்…அடுத்த ரெண்டு பேர ஜோடி சேர்க்க கிளம்பிடுச்சு!

error: Content is protected !!