NSOV 14 prefinal

ஏழு மணிக்கு வந்துசேர வேண்டிய ரயில்… மாழையினால்… தாமதமாக… ஏழு நாற்பதுக்குத்தான் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தை அடைந்தது!

மழை… லேசாகத் தூறிக் கொண்டிருக்க… ரயிலிலிருந்து இறங்கி… நடைமேடையில் போடப்பட்டிருந்த… இருக்கையில் அமர்ந்தவள்… “safely reached the station” என்று அண்ணனுக்கு மெசேஜ் செய்துவிட்டு …

“மழை அதிகரிப்பதற்குள்… வீட்டிற்குச் செல்ல முடியுமா?” என யோசிக்க… கையில் வைத்திருந்த அவளது கைப்பேசி நழுவி கீழே விழுந்து… சிதறியது…

சிதறிய பாகங்களனைத்தையும் எடுத்து… பொருத்தியவள்…மின்வெட்டினால் வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால்… தனியே போய் விழுந்திருந்த… சிம்கார்டை, கவனிக்கத் தவறினாள்…

ரயில் நிலையமே வெறிச்சோடி… ஆளரவம் இன்றி இருந்ததை… அப்பொழுதுதான் உணர்ந்தாள் ஸ்வேதா…

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததால்… அதன்பிறகு வரவேண்டிய அனைத்து ரயில்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

அந்தச் சூழ்நிலையே கொஞ்சம் கிலியைக் கிளப்ப! அங்கிருந்து அவள் செல்ல எத்தனிக்க… யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்…

அங்கே… அந்த மனோஜும்… அவனுடன் மேலும் இருவரும், அவளை நோக்கி வந்துகொண்டிருந்தனர்… முழு போதையில்!! தள்ளாடியபடி!!

அவர்களைப் பார்த்து… கொஞ்சம் அதிர்ந்தவள்… எதிர் புறமாக நடக்கத்தொடங்கினாள்…

நந்தா அலுவலகம் சென்றுவிட்டதால்… பாலுவிற்கு அழைக்கலாம் என கைப்பேசியைப் பார்க்க… அது… சிம்கார்ட் இல்லை என்பதைத் தெரிவித்தது… பயந்துதான் போனாள் ஸ்வேதா…

அதற்குள்… மூவரும்… அவளை நெருங்கியிருந்தனர்…

“இவதான்! மச்சி… அன்னைக்கு… என்னை மிரட்டியது…” என அருகில் இருந்தவனிடம் அவளைச் சுட்டிக்காட்டிய மனோஜ்…

“அவ… ஓகே… ஆகியிருப்பா!! இவதான்… குறுக்க பூந்து… கட் பண்ணி விட்டுட்டாடா” என்றவன்…
“அந்த பெண்ணே… வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கும்போது… நீ என்ன ரொம்ப ஓவரா ஆடற?” என… நிதானமில்லாமல்… ஒருமையில்… தாறுமாறாக அவன் பேசத்தொடங்க…

சற்று நிதானித்தவள்… “ஏய்! மரியாதையா பேசு… இங்கேயே ரயில்வே போலிஸ் இருப்பாங்க…” என எச்சரிக்க…

அவள் சொன்ன விதத்தில்… அவனுக்கு… மேலும் ஆத்திரம் கூட…

மற்ற இருவரும்…”கொஞ்சம் கூட பயமே இல்லாமல்… எவ்ளோ திமிரா பேசறா பாருடா!!… இவளையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா மச்சான்!!!” என அந்த மனோஜை உசுப்பேற்றி விட…

கையில் வைத்திருந்த… மது பாட்டிலை ஓங்கி.. அவளது தலையில் அடிக்க… அவன் எத்தனிக்க… அதிலிருந்து தப்புவதற்காக… கொஞ்சம் பின்வாங்கினாள் ஸ்வேதா…

மழைநீரினால் ஈரமாக இருந்த, நடைமேடையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவள்… அதைக் கவனிக்காமல்… ஒரு எட்டு பின்னே வைக்க… கால் வழுக்கி… பிடிமானமும் இல்லாமல்… நிலை தடுமாறி… தண்டவாளத்தில் போய் விழுந்தாள்…

அதற்குள் அங்கே எதோ அரவம் கேட்க… அவர்கள் மூவரும்… அங்கிருந்து நழுவி வேகமாக ஓடத்தொடங்கினர்…

கீழே விழுந்த வேகத்தில்… நெற்றியில் அடிபட்டு ரத்தம் கசிந்துகொண்டிருக்க… ஸ்வேதா மெதுவாக எழ முயற்சி செய்ய… பசியும்… சோர்வும் சேர்ந்துகொண்டதால் … அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை… உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்றாலும்… அவள் எழுப்பிய குரல்… அவளுக்கே கேட்கவில்லை…

இருளில் அவள் அங்கே விழுந்து கிடந்தது… அந்த இடத்தைக் கடந்து சென்ற… ஒரு சிலருக்கும் தெரிந்திருக்கவில்லை…

நேரம் செல்லச் செல்ல… கண்கள் இருட்டிக் கொண்டு வரவும்… இனி உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது ஸ்வேதாவிற்கு…

 

அந்த நேரத்தில் அவளுக்கிருந்த எண்ணமெல்லாம்… அவளுடைய தாய்… தந்தை… சகோதரன் என அனைவரையும் கடந்து… கடைசியாக… ஹரியை ஒரு முறையேனும் கண்களால்… காண வேண்டும் என்பதில் வந்து நின்றது…

அவனுடன்… பலகாலம் மகிழ்ச்சியுடன்… வாழவேண்டும் என்ற ஆசை மட்டும்… முன்பிருந்ததைக் காட்டிலும் பல்கிப் பெருகிக் கொண்டிருந்தது அவளுக்கு…

சிறிது நேரத்திற்கெல்லாம்… ஹரியின் நினைவுகளுடனேயே… மயங்கியிருந்தாள் ஸ்வேதா…

அதன்பிறகு அங்கே இரவுநேரப் பணிக்காக வந்த… போலீஸ் அதிகாரிதான் அவளை கவனித்து… 108 இல் அவளை… அரசு பொது மருத்துவமனைக்கு… அவளை அனுப்பிவைத்தார்…

******************

அன்றைய நினைவுகளின் தாக்கத்தில்… உடல் நடுங்கிக்கொண்டிருந்தது … ஸ்வேதாவிற்கு….

அன்று ஆம்புலன்ஸில் செல்லும்பொழுது… அந்த மயக்க நிலையிலும் அவள் தன்னைத் தேடியது ஹரியின்… நினைவில் வர…

அருகில் உட்கார்ந்திருந்தவளின்… கையின் மேல்… தன் கையை வைத்து… ஆதரவாக… அழுந்தப் பற்றிக்கொண்டான்…

அவனது ஆதரவான… அந்தச் செய்கையில்… கரைந்துபோய்… அவன் தோளில் தலை சாய்த்தாள் ஸ்வேதா…

அவளது உரிமையான செயலில்… ஹரியின் இதழ்களில்… மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது…

“சரி… எல்லாம் நல்லபடியாக முடிந்து… உடல்நலம் தேறித்தானே காலேஜுக்கு வந்த… பிறகு… ஏன் ஸ்வேதா… என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்ச?” எத்தனையோ நாள் யோசித்து பதில் கிடைக்காத கேள்வியை அவளிடம் கேட்டான் ஹரி!

அவளை அறியாமல்… தனது நெற்றியின் வலதுபுறத்தை… விரல்களால் தடவிக் கொண்டவள்… “ப்சு… அந்த சமயத்தில்… என்னுடைய முகம் எப்படி இருந்ததுன்னு ஞாபகம் இருக்கா… ஹரி?’ என்று கேட்டாள் ஸ்வேதா…

அவனது கனிவான பார்வை மாறியிருந்தது… அவளது கேள்வியில்… நெற்றி எலும்பு உடைந்து… அதை சரிசெய்யவென … அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால்… அவளது முக அமைப்பு கொஞ்சம் மாறியிருந்தது… அவனுக்கு நினைவில் வந்தது…

“அதனால?”

கோபம் கலந்து ஒலித்த அவனது குரல்… அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்க…

“இல்ல ஹரி… ஹாஸ்பிடலில் இருந்து… டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகு… ஒருநாள்… அம்மா நந்து அண்ணாவிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன்… ஹரி!!”

‘உன்னை நம்பித்தானே… அவளை இங்கே விட்டுட்டு போனோம்! அந்த மழையில்… அவளை ஏன் தனியாக போக விட்ட? கல்யாணம் ஆக வேண்டிய பெண்! இப்ப… அவளோட முகத்தை பாரு… எப்படி மாறியிருக்கு! என்னாலேயே பார்க்க முடியல அவளை!!” எனச்சொல்லி அழ ஆரம்பிச்சுட்டாங்க…

உடனே சென்று கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன் ஹரி!”…

சொல்லிக்கொண்டிருக்கும் போதே… முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கினாள் ஸ்வேதா…

அவளது கைகளை நீக்கி… தனது கைக்குட்டையால்…அவள் முகத்தைத் துடைத்தவன்… “இப்படி அழுவதானால்… நீ எதுவுமே சொல்லவேண்டாம் ஸ்வேதா!” என அவன் கொஞ்சம் கடுமையாகவே சொல்ல..

“சாரி” என்றவள் தொடர்ந்து அவளது அன்றைய மனநிலையை சொல்லத் தொடங்கினாள்.

கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தவளுக்கு… அது அவளது முகம்தானா என்று அவளுக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது…

அவளது முகமே, சற்று பெரியதாகிப்போனதுபோல் ஒரு எண்ணம் அவளுக்கு… அதுவும் நெற்றியில்… சர்ஜரியால் ஏற்பட்டிருந்த வடு! அதைப் பார்க்கும்போது…அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது…

அதுவும் காலேஜுக்கு வந்த பிறகு… மற்ற பெண்கள்… பார்த்த பார்வை… அவளை அவ்வளவு தாழ்வு மனப்பான்மையில் தள்ளியது…

படித்தது எதுவுமே… கொஞ்சம் கூட மனதில் பதிவதில்லை… எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை ஸ்வேதாவால்…

எதோ ஒரு வகை… பாதுகாப்பின்மை… அச்சம்… கோபம் என.. அவளது மன நிலைமையை… கொஞ்சமும் கையாள முடியாமல், தவித்துத்தான் போனாள்…

ஏனோ, அந்த நேரம்… அவளது எண்ணங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் மனமில்லை அவளுக்கு…

இத்தனைப் பிரச்சனைகளுக்கும் தான்தான், கரணம் என்ற குற்ற உணர்ச்சி வேறு அவளை கொன்றுகொண்டிருந்தது…

அப்பொழுதுதான் ஒரு நாள்… காதலைப் பற்றிய பேச்சு வரவும், ஹரியினுடைய நினைவெல்லாம் அப்பொழுது அவளுக்கு இல்லை…

மனோஜ் போன்றோரை நினைத்து மட்டும்தான்… அவள் அப்படிப் பேசியது… அவனைப் போன்ற ஒருவன்… காதலிப்பதாகத் தொந்தரவு செய்தால்… போலீசில் புகார் செய்வதாக அவள் சொன்னாளே தவிர… ஹரியைப் பற்றிய உயர்வான எண்ணதால்… அவனைப் பற்றித்தான் பாலு பேசுகிறான் என அவளால் என்ன முடியவில்லை….

ஹரி! அவள் பேசியதை கேட்டதையோ… அவன் வருத்தத்துடன் அங்கிருந்து போனதையோ அவள் அறிந்திருக்க… நியாயமில்லை!!

அவள் பேசிய அனைத்தும்… அவள் அனுபவித்த துன்பங்களின் வெளிப்பாடு என்பதை ஒருவரும் அறியாமல் போனதுதான் பரிதாபத்திற்குரியது…

ஹரி அவளது நடவடிக்கைகளால் வருந்திக் கொண்டிருக்க…

அவளோ… தனது முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல்தான் அவன் அப்படி இருக்கிறான்… என்று முற்றிலும் தவறாக அவனை நினைக்கத் தொடங்கினாள்…

தன்னுடைய இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு… வாழும் நிலைமையை… தண்டனையை… எக்காரணம் கொண்டும்… ஹரிக்குக் கொடுக்க விரும்பாமல்…

தன் மேல் அவனுக்கு இருக்கும் அன்பை… தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல்…

அவனை விட்டு விலகிவிட முடிவு செய்தாள் ஸ்வேதா.

ஆனால் அதைச் செயல் படுத்துவதுதான்… அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

ஒவ்வொரு முறை அவனைக் காணும்பொழுதும்… அவனை… அன்னியனாகத் தள்ளி நிறுத்தி… அவனை வேதனைப் படுத்தி தானும் வேதனைக் கொண்டாள்.

அதுவும்… அன்றைய தினம்…வசுதாவும்… அவளது முகத்தைப் பற்றிப் பேசி அவளை எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க… அதே நேரம் அனைத்தையும் கேட்டுக்கொண்டே ஹரி அங்கே வரவும்… பயந்துதான் போனாள் அவள்…

ஜெயசுதா செய்து வைத்திருந்த குளறுபடியால்… வசுதாவின்மேல் சிறு சந்தேகம் எழுந்தாலும்… அவளது படிப்பு தடைப்படும் என்பதை ஸ்வேதா நன்றாகவே அறிந்திருந்ததால்…

அவளைப் பற்றிய எந்த விஷயமும்… வெளியில் தெரிய வேண்டாம் என ஸ்வேதா நினைக்கவே… அந்த மனோஜ்… வசுதாவை தொந்தரவு செய்தது பற்றி அவள் யாரிடமும், எதுவும் சொல்லவில்லை…

அந்த நிகழ்வு ஒரு விபத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்…

அதனால், அன்றைய விபத்திற்குக் காரணம், மனோஜ்தான் என்பது வசுதாவிற்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை…

அன்று… தன்னுடன்… வந்ததால்தான் அந்த விபத்து நடந்தது என்ற ரீதியில்தான் வஸுதா பேசிக் கொண்டிருந்தாள்…

மேலும் ஹரி… வசுதாவிடமே… கோபமாய் பேசவும்… அவள் எதையாவது உளறிவைக்கப் போகிறாளே என்ற… பயத்தில்தான்… தான் என்ன பேசுகிறோம் என்பதையே உணராமல்… அவனை வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டாள் ஸ்வேதா…

அவன்… கோபமாக பேசிவிட்டுப் போகவும்… முதலில் சென்று… அவனை சமாதானப் படுத்தவேண்டும் என்று நினைத்தவள்… பிறகு அவனை விட்டு விலகியிருக்க… இதையே ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்டாள்… மேற்கொண்டு அவனைச் சந்திக்க கொஞ்சமும் முயற்சிசெய்யவில்லை ஸ்வேதா…

அவன்… படிப்பு முடிந்து அங்கிருந்து சென்றுவிட… முதலில்… பைத்தியம் போன்று அவன் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தாள் ஸ்வேதா…

அதன் பிரதிபலிப்பு… அடுத்து வந்த செமெஸ்டரில்… நன்றாகத் தெரிந்தது… அவளது மதிப்பெண்கள் மிகவும் குறைந்துபோயிருந்தது…

பிறகு, நிலைமை உணர்ந்து… ஒருவாறாகத் தன்னை சமன் படுத்திக்கொள்ள முயன்று… அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றாள்!!!

ஆனாலும் முன்பு இருந்ததை விட…  படிப்பில்… அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது… எவ்வளவுதான் முயன்று படித்தாலும்… நினைவில் வைத்துக்கொள்வது… அவளுக்கு மிகவும் கடினமாகவே… இருந்தது.

தன்னை மீட்டுக்கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்…

நாட்கள் செல்லச் செல்ல… அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்… நந்துவிற்கு சந்தேகத்தைக் கொடுக்க… அவளுடைய மருத்துவ அறிக்கைகளை… தனக்குத் தெரிந்த மற்றொரு மருத்துவரிடம் காண்பித்து… அவன் ஆலோசனை கேட்க…

அதை ஆராய்ந்தவர்… ‘டெக்ரீடால்’ என்ற மாத்திரை பரிந்துரைக்கப் பட்டிருப்பதை கவனித்தவர்… அதனால் ஏற்பட்டிருக்கும் பக்க விளைவுதான்… என்பதைத் தெரிவித்தார்… அது சாதாரணமாக… இதுபோன்ற சூழ்நிலையில் கொடுக்கப்படும் மாத்திரைதான்… என்பதைச் சொன்னவர், எக்காரணம் கொண்டும் அந்த மாத்திரையை… நிறுத்த வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்…

அவளுக்கு விபத்து நடந்த சமயம்… நெற்றிப் பகுதியில் எலும்பு உடைத்து… அது உள்ளுக்குள்ளே குத்தியிருந்ததால்… hydrocephalus… எனப்படும் மூளையின் திரவம் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது…

அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரிசெய்திருந்தாலும்… எதிர்காலத்தில்… வலிப்பு… நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்காக… கொடுக்கப்பட்ட மாத்திரைதான் ‘டெக்ரீடால்’… தொடர்ந்து இரண்டு வருடங்கள், தினமும் ஒரு மாத்திரை, அவசியம் உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டிருந்த விஷயம், நந்துவிற்கு அப்பொழுதுதான் தெரிந்தது…

அவன் வீட்டிற்கு வந்து கூகுள் செய்து பார்க்க… சில நேரங்களில் மங்கலான பார்வை, வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பொதுவான சில பக்க விளைவுகளும்…

ஒரு சிலருக்கு மட்டும்… எரிச்சல், கோபம், நம்பிக்கையின்மை… தள்ளாட்டம்… சோகமான மனநிலை… மறதி… என அவர்களுடைய இயல்பான நடத்தையில் மாறுதல்கள் ஏற்படும்…

வெகு குறைவான சிலருக்கு… தற்கொலை எண்ணம்கூட ஏற்பட… எனத் தெரிந்துகொண்டான்.

துரதிஷ்டவசமாக ஸ்வேதாவிற்கு… அதில் பெரும்பாலான அறிகுறிகள் இருக்க… மிகவும் உடைந்துதான் போனான் நந்தா…

அம்மா, அப்பாவிற்குத் தெரிந்தால்… மிகவும் வருந்துவார்கள்… மேலும் இது வெளியில் தெரிந்தால்… அது அவளது எதிர்காலத்தையே பாதிக்கலாம்… என நினைத்தவன்… அவளது இந்த நிலையை வேறு ஒருவரிடமும் சொல்லாமல்… தங்கையை… கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கத் தொடங்கினான்… அந்தப் பொறுப்புள்ள, பாசமான அண்ணன்.

அந்த மாத்திரையை உட்கொள்ளத் தொடங்கியதிலிருந்து… அந்த இரண்டு வருடமும், தினசரி நடவடிக்கைகள் வழக்கம்போல் இருப்பது போல் தோன்றினாலும்… பல விஷயங்கள்… ஸ்வேதாவின் நினைவிலேயே இல்லை…

குறிப்பாக வர்ஷினியின் திருமணம் நடந்ததோ… அதில், அவள் கலந்துகொண்டதோ… எதுவுமே நினைவில் பதியவில்லை ஸ்வேதாவிற்கு…

இரண்டு வருடம் முடிந்தபிறகுதான்… நந்தா மூலம் செய்தியாகவே… அனைத்தையும் அறிந்துகொண்டாள்…

அதன் பிறகுதான்… முகத்தைச் சீரமைக்கவென சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு… கிட்டத்தட்டப் பழைய நிலைமைக்குத் திரும்பிய பின்புதான்… அவள் எம். எஸ். படிக்கவென அமெரிக்கா சென்றது…

அங்கேயும், அவள் சேர்ந்திருந்த பல்கலைக்கழகத்தின் அருகிலேயே, வர்ஷினி, அவளது கணவருடன் குடியிருக்கவும்… மிகவும் மகிழ்ச்சியாகிப் போனது ஸ்வேதாவிற்கு…

வர்ஷினியின் கணவர் முகிலனும்… பாலுவைப் போன்றே… நல்ல தோழமையுடன் பழகவே…

சனி, ஞாயிறு, மற்ற விடுமுறை நாட்கள் என அவர்களுடன் சேர்ந்து கொள்ள… உற்சாகமாகவே, அவளது நாட்கள், இறக்கைக் கட்டிப் பறந்தன…

நந்தாவும்… ஆன்சைட் என… அவளை சுலபமாக அணுகும் தொலைவில், அங்கேயே வந்துவிட…

ஹரியின் நினைவுகளுடன்… அவளது வாழ்க்கை ஒரு தெளிவிற்கு வந்திருந்தது..

அறிந்தே சிலவும்… தன்னை அறியாமலேயே சிலவும்… என அவள் செய்த தவறுகளால்… அதன் பின் அவள் ஹரியைத் தொடர்பு கொள்ள முயன்று… தோற்றுக்கொண்டிருந்தாள்…

இதற்கிடையில், வஸுதாவின் படிப்பு முடியவும்… அவள் மேற்கொண்டு வேலைக்குச் செல்வதை தடுத்துவிட்டார் ராஜன்… தன் மூத்த மகள் தந்த கசப்பான அனுபவத்தால்… ஒரு சூடு கண்ட பூனையாக…

அத்துடன் நிற்காமல்… அவரது ஒன்றுவிட்ட சகோதரியின் மகனுக்கு… வசுதாவை திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்திருந்தார்…

சில வருடங்களுக்கு முன்… ஜெயசுதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே… அவனது மோசமான நடவடிக்கைகள் பிடிக்காமல்… அவனை மறுத்துத்தான் அவர் வேறு மாப்பிளை பார்த்தது…

ஜெயாவால்… உறவினர் மத்தியில் அவர்கள் நிலை கீழே இறங்கிவிட… வசுதாவை அவனுக்குக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு வந்திருந்தது…

மிகவும் பயந்துபோன வஸுதா… அவளது நலனில் அக்கறை உள்ள ஒரே தோழியான ஸ்வேதாவை தொடர்புகொண்டு… அனைத்தையும் கொட்டித் தீர்க்க…

ஜெயாவைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் அவர்களுடன் சம்பந்தம் செய்ய முன்வராததால்தான் ராஜன் இந்த முடிவுக்கு வந்ததாகவும், வேறு நல்ல இடம் அமைந்தால்… வசுதாவை திருமணம் செய்து கொடுக்க அவர் தயாராக இருப்பதும்… லதா மூலமாகத் தெரியவந்தது ஸ்வேதாவிற்கு…

பாலுவிற்கும், திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருக்க… அவளுக்கு “வசுதாவை பாலுவிற்கு கேட்டால் என்ன?” என்ற எண்ணம் தோன்றவே…

அவனை வீடியோ சாட்டிங்கில் தொடர்புகொண்டு… மனோஜினால் அவளுக்கு நடந்த விபத்தைத் தவிர… மற்ற அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள்… “வஸுதா ரொம்ப நல்ல பொண்ணு ணா… சின்ன வயசிலிருந்தே மிகவும் துன்பப்பட்டுட்டா, உங்களை மாதிரி ஒருத்தராலதான் அவளை நன்றாக பார்த்துக்க முடியும்… யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க?” என விளக்கமாகச் சொல்லி முடித்தாள்…

அவனுக்குமே வசுதாவை பிடிக்காது என்றெல்லாம் இல்லை… அவள் இயல்பாகப் பழகவில்லை என்பதால்தான் அவளிடம் அவன் கோபப்படுவது… அப்பொழுது அவளது நிலையை ஸ்வேதா மூலமாகவே அறியவும்… அதுவும் ஸ்வேதா எப்பொழுதுமே… அவனது நன்மையை மட்டுமே நினைப்பவள் என்பதும் சேர்ந்துகொள்ள… வசுதாவை மணந்துகொள்ள முழுமனதுடன் சம்மதித்தான்…

அதன் பிறகு… வெங்கட் மூலமாக, இரண்டு குடும்பங்களுடன் பேசி… முறைப்படி நிச்சயிக்கப்பட்டு… தடபுடலாக நடந்து முடிந்தது பாலு… வசுதா திருமணம்.

ஸ்வேதா கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே… அவளது விடுமுறை சமயமாக திருமண நாளை குறிக்கச் சொன்னான் பாலு…

பாலு வசுதாவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்ட அவனுக்கு தங்கையாக… நாத்தனார் முடிச்சைப் போட்டாள் ஸ்வேதா…

பிறகு… அவள் எம் எஸ் முடிக்கவும்… அங்கேயே அவளுக்கு… உபகாரச் சம்பளத்துடன்… பி.ஹெச்.டி செய்யும் வாய்ப்பு வரவும்…

ஹரியின் நினைவு என்னும் பாரம் தாங்காமல்… படிப்பின் பின் ஒளிந்து கொள்வது… அவளுக்கு நிம்மதியை அளிக்க… வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல்… அதில் சேர்ந்துவிட்டாள் ஸ்வேதா…

அந்த நேரம் சரியாக… வர்ஷினி இரண்டாவது பிரசவத்திற்காக… இந்தியா வந்துவிட… அவளிடம் கூட இதுபற்றி ஏதும் ஆலோசிக்கவில்லை அவள்…

அவளது அவசர புத்தியைக் கண்டு வர்ஷிணிதான்… திட்டித் தீர்த்தாள்… அன்று இருந்த நிலையில், அவளுடைய கோபத்திற்கான காரணம்தான் புரியவில்லை ஸ்வேதாவிற்கு.

கிட்டத்தட்ட… அவளுடைய படிப்பு முடியும் தருவாயில்… பாலு… வாசுதாவின் குழந்தையைப் பார்க்கவென… இப்பொழுது விடுப்பில் இங்கே வந்திருக்கிறாள்…

அவள் பக்க நியாயங்களைச் சொல்லி முடித்திருந்தாள் ஸ்வேதா…

அனைத்தையும்… கேட்டு… அவளுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டிய நேரத்தில் அவளை விட்டு விலகியிருந்த… தனது தவற்றை உணர்ந்து… மனதின் கனம் தாங்காமல்… குற்ற உணர்ச்சியில்… கல்லென இறுகிப்போய் உட்கார்ந்திருந்தான் ஹரி…

error: Content is protected !!