Oh Kadhal Kanmani 21
Oh Kadhal Kanmani 21
ஓ காதல் கண்மணி 21
– நெமிரா
வணக்கம் நட்பூஸ் ,
விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .
ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …
இதுவரை …..
” மோனிஷா நான் உன்னை நம்புறேன் ! நீயும் என்னை நம்பனும் எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லலாம் …பட் என்கிட்ட இருந்து எதையும் மறைக்காத ” – என்றான் அர்ஜுன் .
” நம்பணும்ன்னு தான் நினைக்கிறன் அர்ஜுன் ஆனா … ” – என்று எண்ணியவள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்க …
ரோஹித் காயத்ரி உள்ளே அழைப்பதாக கூறி அர்ஜுன் மோனிஷா இருவரையும் அழைத்தான் ..
அர்ஜுனா ! ரக்ஷிதாவா ! என்கின்ற குழப்பத்துடன் உள்ளே சென்றாள் மோனிஷா …
இனி …..
அர்ஜுனும் மோனிஷாவும் அறைக்குள் நுழைந்த பொழுது மஹிமாவின் வஞ்சக புன்னகை வஞ்சகத்துடன் அவர்களை வரவேற்றது …
‘ உனக்கு நான் முக்கியமா ? இல்லை அந்த அர்ஜுனா ?
அர்ஜுன் இப்படி தான் ! அவன் ஒன்னும் நல்லவன் இல்லை …’ – ரக்ஷிதா மற்றும் கிருஷின் குரல் அவளுடைய செவிப்பறையில் வந்து மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது …
பூகம்பம் வந்தது போல அவளது உடல் அதிர்ந்து நடுங்கியது ! உள்ளம் வலித்தது … மனதிற்குள்ளே நடந்த அணைத்து கலவரங்களும் மோனிஷாவின் முகத்தில் பிரதிபலிக்க … அவளது பதற்றத்தை கண்ட அர்ஜுன் மோனிஷாவின் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டு ,
” டோன்ட் வொரி … நான் இருக்கேன் உண்மை எதுவோ அதை மட்டும் சொல்லு … உன் மனசு சொல்றத கேளு ” .- தன் பார்வையை மோனிஷாவின் கலவரம் கொண்ட வதனத்தில் இருந்து அகற்றாமல் கூறினான் .
ஆனால் அவன் பேசியது எதுவும் அவளது காதில் விழவே வில்லை !
அவளது மனதில் ஆழிப்பேரலை விடாமல் அடித்துக்கொண்டிருந்தது!
குழப்பத்துடன் அர்ஜுனை நோக்கினாள் … புதிதாய் தெரிந்தான் அர்ஜுனை இதற்கு முன்பு அவள் அப்படி பார்த்ததில்லை … என்றும் விட இன்று அதுவும் இப்பொழுது மோனிஷாவின் விழிகளுக்கு அவன் மிகவும் அழகாக தெரிந்தான் ….அந்த இக்கட்டான நேரத்திலும் அவனது விழிகள் அவளை வசீகரித்தது …
இதுவரை போதையில் மிதந்த , கோபத்தில் கொதித்த , வேதனையில் வாடிய விழிகள் இன்று வேறொன்றை காட்டியது ! அவனுக்குள் இருக்கும் மென்மையான காதலை காட்டியது ! இந்த கம்பீரமான ஆண்மைக்குள் இத்தனை மென்மையா !
எண்ணும்பொழுதே மோனிஷாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது ! ஒரு மனிதனுக்குள் சில மணி நேரத்திற்குள் இத்தனை பெரிய மாற்றமா ? கண் இமைக்காமல் அவனை ரசித்தாள் .. அவன் விழிகளில் தெரிந்த அப்பட்டமான நம்பிக்கை அவளை கலங்கடித்து …
செய்யப்போகும் தவறை எண்ணி தலை கவிழ்ந்து நின்றாள் மோனிஷா… தன் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளது கரங்களை இறுக்கமாக பற்றியபடியே நின்றான் அர்ஜுன் !.
அர்ஜுன் மோனிஷாவின் இணக்கத்தை காயத்ரியின் விழிகள் கவனிக்க தவறவில்லை … அர்ஜுனின் நிதானமா வதனம் காயத்ரியை மேலும் கலவரப்படுத்தியது … ‘ அர்ஜுன் முன்பு போல இல்லை … மாறிவிட்டான் ‘ ஆனால், காயத்திரியோ மகிழவில்லை ! அதற்கு பதிலாக அதீத ஐயம் கொண்டார் …
காரணம் அர்ஜுனது தந்தையின் மரணத்தை ஒட்டி நடந்த பல கசப்பான சம்பவங்களுக்கு பிறகு அர்ஜுனை ஓரளவு தேற்றி கொண்டுவந்துள்ளார் காயத்ரி … மேலும் அர்ஜுன் மனம் வேதனை படுவது போன்ற சம்பவங்கள் ஏதும் நடந்து விடுமோ ? என்று எண்ணி கவலை அடைந்தார் !.
மஹிமாவோ அவர்களை தன் பார்வையாலே எரித்துக்கொண்டிருந்தாள் அர்ஜுன் மோனிஷா மீது காட்டும் அக்கறை நெருக்கம் ! அவளை நன்றாக எரிச்சல்படுத்தியது … ‘ அர்ஜுன் லவ் பண்றானா என்ன ? நோ நோ நோ ‘ எண்ணும் பொழுதே ஆத்திரம் வந்தது …
ஆனால் அர்ஜுன் மட்டும் வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான் … ‘தனக்கென்று யாரும் இல்லை ! எந்த துணையும் தனக்கு தேவை இல்லை ! ‘ என்று அவன் பலமுறை கூறி இருந்தாலும் … தனிமை தீயில் துவண்ட போதெல்லாம் அவன் மனம் அந்த துணைக்காக ஏங்காத நாட்கள் இல்லை …
அந்த ஏக்கம் எல்லாம் இன்று மோனிஷாவின் ரூபத்தில், இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதை எண்ணி ஆனந்த களிப்பில் மிதந்தான் !
இதுநாள் வரை அனுபவித்திராத இன்ப உணர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றியது ! அந்த உள்ளக் களிப்பு பொங்கித் ததும்பி அவன் மனம் முழுவதும் பரவியது ! வாழ்க்கை இவ்வளவு ஆனந்த மயமாக இருக்கக்கூடும் என்று அர்ஜுன் அன்று வரை கனவிலும் கருதியதில்லை .
அவளை தன் பக்கம் இழுத்து முத்தமிட்ட தருணத்தை எண்ணினான் … தன் சுயம் தொலைந்த அந்த நிமிடங்களை , மறக்க முடியமா ? எண்ணும் பொழுதே அவனது உள்ளம் நெகிழ்ந்தது ! இதழ் தானாய் மலர்ந்தது !
மோனிஷா மீது காரணம் இன்றி அதீத நம்பிக்கை வைத்திருந்தவன்.
இப்பொழுது நடக்க இருக்கும் எதை பற்றியும் சிந்திக்காமல். இன்று சாயங்காலம் மோனிஷாவிடம் எப்படி தன் காதலை சொல்ல போகிறோம் என்பதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்.
” ஆதாரம் இருக்கான்னு கேட்டிங்க இப்போ பேசாம இருக்கீங்க “- நிலவிய மௌனத்தை உடைத்தபடி வந்த ரோஹித்தின் வார்த்தைகளில் அனைவரும் தங்களின் சுயத்தை அடைய … அர்ஜுனின் விழிகள் மட்டும் மோனிஷாவின் வதனத்தை காதலோடு வருடிக்கொண்டிருந்தது …
மகனை இறுக்கமாக முறைத்தவள் காயத்திரியிடம் ,
” நீங்களே கேளுங்க அத்தை ” – காயத்ரியை கைகாட்டிவிட்டு அமர்ந்திருந்தாள் .
” டெல் மீ மோனிஷா …சொல்ல வந்ததை தயக்கம் இல்லாம சொல்லுங்க “
” ———————-” – மௌனித்தாள்.
” அர்ஜுன் மேல கொடுக்கப்பட்ட கம்ப்ளயிண்ட் உண்மையா ? பொய்யா ” – ‘ உண்மையா ‘ அழுத்தம் கொடுத்தபடி கேட்டாள் மஹிமா !
“——————-” – கைகளை பிசைந்தபடி மெளனமாக நின்றாள் .
” லவ் யு பேபி டால் ” – அவளுக்கு மட்டும் கேட்டும்படி கூறினான் அர்ஜுன் , நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கசிய …
” பதில் சொல்லுங்க மோனிஷா ” – மஹிமாவின் கணீர் குரலில் திடுக்கிட்ட மோனிஷா …
ஆம் என்பதாய் தலையசைத்தாள் ! … விழிகளில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய் இறங்கியது … அனைவரின் பார்வையும் மாற … அர்ஜுன் மட்டும் சலனம் இன்றி நின்றுகொண்டிருந்தான் ..
” உண்மையா “- பதிலை அறியும் அவளில் மஹிமா வினவினாள் .
” உண்மைதான் ” – என்றாள் மோனிஷா , மஹிமாவின் இதழ் வெற்றியில் இசைத்தது …
காயத்ரி கவலையுடன் அமர்ந்திருந்தாள் … தர்ஷித்தின் பார்வை மோனிஷாவை எரிக்க … ரோஹித் குழப்பத்துடன் அவளை எதிர்நோக்க … அர்ஜுன் நிலைகுலைந்து நின்றிருந்தான் .. அவளது கரத்தை பற்றிருந்த அவனது பிடி தானாய் தளர்ந்தது .. சற்றென்று அவனை எதிர்நோக்கியவள் !
” இல்லை நோ … அர்ஜுன் அப்படி பண்ணல …. இல்லவே இல்லை ” – குற்ற உணர்வில் மோனிஷா கதறினாள் …
” என்ன மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க எங்களை பார்த்தா எப்படி தெரியுது … ப்ளீஸ் கெட் அவுட் ” – மஹிமா கத்தினாள் …
” மேம் ப்ளீஸ் “- மோனிஷா கெஞ்சினாள் .
” அவுட் ” என்றாள் .
‘ உண்மைதான் ‘ – ஒற்றை வார்தை தான் அர்ஜுனை மீண்டும் இருளில் தள்ளியது …
தடுமாற்றத்துடன் வெளியே சென்றான் … நண்பர்களும் அவனுடன் செல்ல … மோனிஷா அழுது கொண்டே அவன் பின்னால் சென்றாள் !
” அர்ஜுன் அர்ஜுன் ப்ளீஸ் ஐயம் சாரி ” என்றபடி அர்ஜுனின் எதிரே நின்று மன்றாடினாள் …
அசைவின்றி நின்றான் … கோபம் ஆக்ரோஷம் என்று எந்தவித உணர்வுமின்றி நின்றான் .
” ப்ளீஸ் அர்ஜுன் ” – கெஞ்சினாள் …
” யு ஜஸ்ட் ஷட் அப் ” – கோபத்தில் வெகுண்ட தர்ஷித் தன் நிலை தவறி மோனிஷா மீது கை ஒங்க … இருவருக்கும் இடையில் வந்த அர்ஜுன்
‘ நெவெர் எவர் ‘ – என்னைக்கும் இப்படி பண்ணனும்ன்னு நினைச்சி கூட பார்க்காத … என்பதை இரெண்டே வார்த்தையில் கூறி … பதில் பேசாமல் அங்கிருந்து சென்றான் .
” இப்போ கூட அர்ஜுன் அவளுக்காக என்கிட்ட கோபப்படுறான் ” – ஆதங்கத்துடன் தர்ஷித் கேட்க
” மோனிஷாவை அவ்வளவு லவ் பண்ணிட்டு இருக்கான் டா ” – தர்ஷித்தை சமாதானம் செய்தான் ரோஹித் .
விடுதியில் மோனிஷா தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தினாள். ரக்ஷிதா எவ்வளவோ முயன்றும் மோனிஷாவை சமாதானம் செய்யவே முடியவில்லை .
” தப்பு பண்ணிட்டேன் , அந்த நிலைமையில கூட எனக்காக அவன் ப்ரண்ட் கிட்ட கோபப்பட்டான் தப்பு பண்ணிட்டேன் ரக்ஷு ” – கதறி அழுதாள் .
” மோனிஷா ப்ளீஸ் “
” அவனையும் புரிஞ்சிக்கல அவன் காதலையும் புரிஞ்சிக்கல “
” வாட் காதலா ” – ரக்ஷு புரியாமல் பார்த்தாள் ” அவன் உன்னை லவ் பண்றானா “
” ஆமா “
“நீ “
” ம்ம்ம் ” – மோனிஷாவின் பதில் ரக்ஷிதாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது
” ஏன் சொல்லல “
” அப்போ புரியல … இப்போ தான் முழுசா உணர்றேன் “
“ச்ச ” – நெற்றியை நீவினாள் ரக்ஷிதா …
” நான் அர்ஜுன பார்க்கணும் “
” இந்த நிலைமையில நோ நான் விடமாட்டேன் “
” நான் பார்க்கணும் அவன் என்னை வர சொல்லிருக்கான் “
” அப்போ சொன்னான் , ஆனா இப்போ அவன் கண்டிப்பா வர மாட்டான் “
” வருவான் நான் போகணும் ” – பிடிவாதம் பிடித்தாள்.
விடுதியில் இருந்து ஐந்து மணிக்கெல்லாம் ஆட்டோவில் கிளம்பியவள் சென்னை ட்ராபிக்கில் சிக்குண்டு ஏழு மணிக்கு தான் ஹோட்டல் பாரடைஸை அடைந்தாள் .. ‘ அவன் வந்திருப்பானோ ! லேட் ஆகிடுச்சே கோபப்படுவானோ !’ என்று எண்ணியபடி ஆட்டோவில் இருந்து இறங்கினாள்.
ஹோட்டல் பாரடைஸ் சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முதன்மையானது , இதுவரை இப்படி ஒரு பெரிய ஹோட்டலை மோனிஷா இதற்கு முன்பு கண்டதில்லை வெளிப்புறமே அவ்வளவு பிரம்மாண்டமாய் இருந்தது . சிறு தயக்கத்துடன் முன்னேறினாள் … மோனிஷா உள்ளே நுழைந்ததும் அவளது அருகில் வந்த சீருடை அணிந்த பணிப்பெண் அவளிடம் விசாரிக்க … மோனிஷா தன் பெயரை சொன்னதும் அந்த பெண் மோனிஷாவை அழைத்து சென்று மொட்டை மாடியில் காத்திருக்கும் படி கூறி அங்கிருந்து கிளம்ப … அவளை தடுத்த மோனிஷா
” யாருமே இல்லையே “
” யஸ் மேம் மொத்த ஹாலையும் மிஸ்டர் அர்ஜுன் புக் பண்ணிருக்காங்க ” – ஆச்சரியத்தில் மோனிஷாவின் விழிகள் விரிந்தது
“எனி திங்க் எல்ஸ் மேம் “
“நோ …நத்திங்.. தேங்க யு ” என்றவள் … பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தாள் .
அழகிய நிலவொளியில் ஓபன் டாப் ஹால் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது … அழகிய மேசையுடன் கூடியே இரெண்டே நாற்காலி .. மேசையின் மத்தியில் சிவப்பு நிற மெழுகுவர்த்தி … ஆங்காங்கே விட்டுவிட்டு மிளிரும் விளக்குகள் … நடக்கும் பாதையில் சிவப்பு ரோஜாவின் அலங்காரம்…. காற்றில் வீசிய ரோஜா மலரின் நறுமணம் … மேசையில் மூடிவைக்கப்பட்டிருந்த உணவு , அதன் அருகில் பனிக்கட்டிகளுக்குள் சேம்பையின் பாட்டில் … என்று எல்லாம் மோனிஷாவுக்கென்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… கண்டவளின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் அர்ஜுனின் மனநிலையை குறித்த கவலை அவளை அச்சுறுத்தியது … அணைத்து ஏற்பாடுகளும் நன்றாகத்தான் இருக்கிறது , ஆனால் அர்ஜுன் எங்கே ? உள்ளத்தில் ஒரு வித பதட்டம் இருந்தாலும் அதற்கு மிஞ்சிய எதிர்பார்ப்பும் இருக்க .. அவனை காணவில்லை என்றதும் பாவையின் பார்வை சுணங்கியது .
ஆனால் தக்க சமயத்தில் வந்த குழைவான இசை அவளது செவியை வருட … வீசிய தென்றல் காற்றில் தேகம் தளிர்த்தவள் . விழிகளை மூடியபடி இசை மழையில் நனைந்து கொண்டிருந்தாள் .
– தொடரும்