Oh kadhal kanmani 28
Oh kadhal kanmani 28
ஓ காதல் கண்மணி 28
– நெமிரா
இதுவரை …..
பாதுகாப்பை தேடி தாயிடம் வரும் மகவை போல் அர்ஜுனின் நெஞ்சில் சாய்ந்து புதைந்தபடி கதறிக் கொண்டிருந்தாள் மோனிஷா …
இனி …
சூரியன் தன் செங்கதிர்களால் இருட்டை விரட்டி உலகிற்கு வெளிச்சத்தை தருவது போல …. அர்ஜுன் மோனிஷாவின் மனதில் இருந்த இருட்டை தன் அரவணைப்பால் விரட்டி ஒரளவு அவளை தேற்றினான் !
அந்த கசப்பான இரவு ஒருவழியாக கடந்து காலை பொழுது புதிதாய் புலர்ந்தது … மோனிஷாவிடம் என்ன பேசுவது அவள் என்ன மனநிலையில் இருப்பாள் என்கின்ற தயக்கத்தில் அனைவரும் அமைதியாய் இருக்க … அவர்களது மனநிலையை உணர்ந்து கொண்டவள் … அவர்களை சங்கட படுத்த விரும்பாது ,
” எல்லாரையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல ” – நிலவும் அமைதியை உடைப்பதற்காக …. வலியை நெஞ்சுக்குழிக்குள் புதைத்துக்கொண்டு அவளே ஆரம்பித்தாள் …. நீங்காத துயரம் இருந்தாலும் நேற்று இரவு குரலில் தெரிந்த நடுக்கம் இன்று நன்றாகவே குறைந்திருந்தது …
” ஏய் அப்படி எல்லாம் இல்லை ” – என்றான் ரோஹித் … அவனை தொடர்ந்து அனைவரும் மோனிஷாவுக்கு ஆறுதல் கூற .
மெலிதாய் புன்னகைத்தவள் ,
” நான் கண்டிப்பா இதை விட்டு வெளியே வந்துருவேன் … நீங்களும் வந்திருங்க … எல்லாம் சரியாகிரும் ” – என்றாள்…
” எப்படி முடியும் மோனிஷா … இன்னைக்கு நாம அவர் மேல கம்ப்ளயின்ட் குடுக்குறோம் ” – உறுதியுடன் கூறினான் ரோஹித் … ரக்ஷிதா , தர்ஷித், லக்ஷ் அனைவரும் அவனது கருத்துக்கு ஆதரிக்க … மோனிஷா அர்ஜுனை பார்க்க அவனோ தன் விழிகளால் ‘ வேண்டாம் ‘ என்பதை போல தீர்க்கமாய் மறுத்தான் …
மோனிஷா எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் …
” நீ எதுக்கும் பயப்படாத மோனிஷா நாங்க பார்த்துக்குறோம் இனிமே அந்த ஆளு எங்க காலேஜ்ல இருக்க கூடாது ” – ரோஹித்தின் விழிகள் கோபத்தில் கொதித்தது …
” அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் ” – உடனே மறுத்தான் அர்ஜுன் ..
” நாள் கடத்த வேண்டாம் இன்னைக்கே பேசிருவோம் அர்ஜுன் ” – ரோஹித்தின் உறுதியான குரல் அர்ஜுனுக்கு வியப்பை அளித்தது இதற்கு முன்பு ரோஹித் எந்த ஒரு பிரச்சனைக்கும் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதே கிடையாது என்பதே காரணம் …
” அதெல்லாம் வேண்டாம் ரோஹித் ” – அழுத்தமாய் கூறினான்
” நீயா வேண்டாம்ன்னு சொல்ற அர்ஜுன் ?” – ஆச்சரியத்துடன் வினவினான் ரோஹித்
” ஆமா நான் தான் சொல்றேன் வேண்டாம்…. டிஸ்சார்ஜ் ப்ராசெஸ் எல்லாம் முடிச்சாச்சு கிளம்பலாம் “
” ஏன் வேண்டாம் “
” வேண்டாம் அவ்ளோ தான் “
” சாரி டா நான் கம்ப்ளயிண்ட் பண்ண தான் போறேன் ” – என்று ரோஹித் பிடிவாதமாய் கூற … அவனை இறுக்கமாய் முறைத்த அர்ஜுன்
” நான் கூடாதுன்னு சொல்றேன் ரோஹித் “
” அதான் ஏன் ??” ..” ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்திருக்கு எப்படி சும்மா இருக்குறது “
” சரி அதுக்கு என்ன பண்ண போற “
” கம்ப்ளயிண்ட் குடுப்பேன் … அவனை வேலைய விட்டு தூக்குவேன் “
” ஓகே வேலைய விட்டு அனுப்புனா…. பதிலுக்கு அவன் எதுவமே பண்ண மாட்டானா ?? பதில் சொல்லு டா “
” அப்போ அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா ?? “
” என்னை தண்டனை குடுப்ப … போலீஸ் கேஸ்ன்னு போவியா ? ஓகே கோர்ட்ல ஆதாரம் கேட்ப்பாங்க என்ன ஆதாரம் இருக்கு??? எதுவும் கிடையாது கோர்ட்ல நம்ம யார் சாட்சியும் நிக்காது … அவன் ஈசியா வெளியில வந்திருவான் …. கஷ்டப்பட போறது நம்ம மோனிஷா தான் “
” அவனை விட்டு வச்சா இன்னும் பல பொண்ணுங்கள கஷ்டப்படுத்துவான் டா “
” ஆமா “
” ஏன் அர்ஜுன் இப்படி அலட்சியமா பேசுற “
” வேற எப்படி பேசணும் … இவ்ளோ பேசுறீங்களே இந்த பிரச்சனைக்கு கிருஷ் மட்டும் தான் காரணமா ?? வேற யாருமே காரணம் இல்லையா ?? ஏன் டா நான் மோனிஷாவை வர சொன்னேன்னு பொய் சொன்ன ?? ” என்றவன் ரக்ஷிதாவிடம் ,
” அவன் சொன்னா உடனே உங்க ஃப்ரண்ட தனியா அனுப்பி வச்சுருவீங்களா?? கூட நீங்களும் வந்திருக்கலாம்ல !!
அப்புறம் மோனிஷா உனக்கு என்னை எவ்வளவு நாள் தெரியும் எந்த நம்பிக்கையில என்னை பார்க்க வந்த …
எந்த தயிரியத்துல அந்த கிருஷ் கூட கார்ல போன …..
தினமும் எவ்வளவு நியூஸ் பாக்குறீங்க சொந்த சித்தப்பா மாமா அப்பா அண்ணன் ‘ ச்ச ‘ சொல்லவே அசிங்க மா இருக்கு இப்படி தெரிஞ்சவங்களே என்னலாம் பண்றாங்க …
அப்படி இருக்கும் பொழுது முழுசா ஒருத்தன பத்தி தெரியாம எப்படி நீ அவனை நம்புன ” – ரோஹித்திடம் தொடங்கி மோனிஷாவிடம் முடித்தான் …
மோனிஷாவின் கண்களில் இருந்து பொல போல வென்று கண்ணீர் அணையை உடைத்துக்கொண்டு வெளியேற … பதில் பேசாமல் அமைதியாய் இருந்தாள் … அதை கண்ட அர்ஜுனின் முகம் வாடியது … அவள் அழுவதை தாங்க முடியாதவன் ..
” உன்னை கஷ்டப்படுத்த இதை நான் சொல்லல … பட் இந்த உலகம் நாம நினைக்கிறத விட மோசமானது … மனுஷங்க உருவத்துல இருக்குற நரி கூட்டம் வாழ்ற இடுகாட்டுல தான் நாமளும் வாழ்ந்துட்டு இருக்கோம் நாம தான் கவனமா இருக்கணும் …. என் வார்த்தை உன்னை காயப்படுத்திருந்தா ஐயம் சாரி மோனிஷா ”
” ரொம்ப சரியா சொன்ன அர்ஜுன் தப்பு என்னுடையது … அவர் பேச்சை கேட்டு உன்னை கஷ்டப்படுத்திட்டேன் அது தான் என்னை உறுத்திட்டே இருக்கு ” – என்கிற அவளுடைய உடைந்த குரல் அவனை சங்கடப்படுத்தியது ..
” இப்ச் அத விடு அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது நான் எப்பவோ மறந்துட்டேன் ” – உடனே ஆறுதல் கூறினான் அர்ஜுன் …
” சரி டா எல்லாம் ஓகே தான் … அவனை கண்டுக்காம விட்டா அவன் பண்ற தப்புக்கு நாமளே கிறீன் சிக்னல் காட்டுற மாதிரி ஆகிரும் ஸோ நாம் அவனை பத்தி சொல்றது தான் சரி ” – தனது முடிவில் உறுதியாய் இருந்தான் ரோஹித் …
“நான் சொல்ற விஷயத்தை ஏன் டா புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற …
நீயே இவ்வளவு யோசிக்கிறியே அவ்வளவு பெரிய குற்றத்தை தயிரியமா பண்ணின அந்த பொறுக்கி, மாட்டிக்கிட்டா என்ன பண்ணனும்ன்னு யோசிக்காமலா இருப்பான் …
நீ கம்ப்ளயின்ட் பண்ணின அடுத்த நொடி அவன் ஏதாவது பண்ணுவான் டா.
ஸோ இப்போதைக்கு எதுவும் வேண்டாம் … ” – பறந்து செல்ல துடிக்கும் தன் பொறுமையை இழுத்து பிடித்தபடி கூறினான் அர்ஜுன் ..
” நாம அமைதியா இருந்தா நாம பயப்படுறோம்ன்னு அவன் நினைக்க மாட்டான் ” – ரோஹித்தால் அர்ஜுனின் கருத்தை ஏற்க முடியவில்லை …
” யார் டா சொன்னா அமைதியா இருக்கிறது கோழை தனம்ன்னு …
அவன் ஒரு வெறிபுடிச்ச நாய் மாதிரி அவனை பார்த்து முறைச்சா பதிலுக்கு கடிக்க வருவான் … நீ பயந்தா உன்னை பயமுறுத்துவான் …
ஆனா ‘ நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லடா உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ எனக்கு உன்னை பார்த்தா பயம் இல்லைன்னு ‘ அந்த நாய கண்டுக்காம போ உன் வழிக்கே வர மாட்டான் …
நான் சொல்றத புரிஞ்சிக்கோங்க …
உங்க எல்லாரையும் விட எனக்கு தான் அவன் மேல அதிக கோபம் இருக்கு …
ஆனாலும் பொறுமையா இருக்கேன்னா பின் விளைவுகளை யோசிச்சு தான் நான் பொறுமையா இருக்கேன் …
நான் என் ஸ்டையில்ல அவனை டீல் பண்ணிக்கிறேன் …
சரியான ஆதாரம் இல்லாம நாம இவன் மேல கம்ப்ளயிண்ட் குடுத்தா … நம்மள பழிவாங்குறேன்னு சில்ர தனமா ஏதாவது பண்ணுவான் …
அவனுக்கு ஒன்னும் இல்லை தொடச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பான் ஆனா அவமானம் எல்லாம் நமக்கு தான் ….
நான் பார்த்துக்கறேன் ப்ளீஸ் .. என்னை கேட்டகாம ஏதும் பண்ணி மறுபடியும் பிரச்சனையில மாட்டிக்காதீங்க … ” – என்று அர்ஜுன் கூற … அனைவரும் அவனது கருத்துக்கு சம்மதம் தெரிவிக்க … ரோஹித்தும் இருமனதாய் ஒப்புக்கொண்டான் … பின்பு அனைவரும் அங்கிருந்து சென்று விட மோனிஷாவின் உள்ளம் வேறொன்றை பற்றி சிந்திக்க தொடங்கியது … எதுவும் பேசாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள் …
மோனிஷாவின் கவலை தொனித்த வதனத்தை கண்ட அர்ஜுனின் மனம் வேதனை பட , அவளது மென் கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்தவன் ,
” எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம் மோனிஷா … உன்னை பத்தி நான் என்னை பத்தி நீ நிறையா பேசுவோம் தெரிஞ்சிக்குவோம் … வாழ்க்கை ரொம்ப அழகானது மோனி … இதை பத்தி யோசிச்சு நேரத்தை சாகடிக்க வேண்டாம் … உன்னை விட்டுற மாட்டேன் பா … நான் எல்லாத்தையும் சரி பண்ணிறேன்…நீ டென்ஷன் எடுத்துக்காத ” – அர்ஜுனிடம் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தைகளும் மோனிஷாவின் இதயத்தில் ஆழமாய் பதிந்தது …
” எப்படி அர்ஜுன் உன்னால முடியுது உனக்கு போய் துரோகம் பண்ணிட்டனே அதை எப்படி சரி செய்ய போறேன் ” – என்று மோனிஷாவின் இதயம் மவுனமாய் கதறியது …
அப்பொழுது உள்ளே வந்த ரக்ஷிதா மோனிஷாவை அழைக்க … அர்ஜுனை எண்ணி மனதிற்குள் வருந்திய மோனிஷா … அவனிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பவும் அவளை தடுத்த அர்ஜுன் ரக்ஷிதாவை சிறிது நேரம் வெளியே நிற்கும் படி கூறினான் …
மவுனமாக மோனிஷாவின் முகம் பார்த்தபடி நின்றிருந்தான் அர்ஜுன் …
” என்ன அர்ஜுன் ?”என்று கேட்டாள் மோனிஷா ..
அவன் பேசவில்லை … ஒருவித மயக்கும் புன்னகை அவன் முகத்தில் … புரியாமல் விழித்தாள் மோனிஷா… இதற்கு முன்பு அவன் இவ்வளவு அழகாய் புன்னகைத்ததில்லை என்பதால் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள் …
மோனிஷா பேச ஆரம்பிப்பதற்குள் அர்ஜுனின் கைகள் அவளது கன்னங்களைத் தாங்கி தன் முகத்தருகே இழுத்தது …
முத்தமிட போகிறானா ?? ‘ அர்ஜுன் உன்னுடைய காதலுக்கு நான் தகுதி உடையவளே இல்லை … நான் ஒரு நம்பிக்கை துரோகி வேண்டாம் நான் உனக்கு வேண்டாம் ‘ என்று எண்ணியவள் மன வேதனையுடன் அவனிடம் இருந்து தன் முகத்தை விலக்கும் முன் அர்ஜுனின் உதடுகள் மோனிஷாவின் நெற்றியில் பதிந்துவிட்டிருந்தது … அழுத்தமாக … மிக மிக அழுத்தமாக தன்னவளின் பிறை நுதலில் முத்தமிட்டிருந்தான் …
உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற சிலிர்ப்புடன் அப்படியே விழித்துப் பார்த்தவளை சிறு புன்னகையுடன் விலக்கியவன் ,” நான் இருக்கேன் பேபி டால் … சரி நீ கிளம்பு … கொஞ்ச நாள் தான் நான் காலேஜ் வந்துருவேன் ” என்றான் …
ஹாஸ்டலில் வார்டனின் கேள்விகளை ஒருவழியாக சமாளித்தபடி தங்களின் அறைக்குள் வந்த ரக்ஷிதா மோனிஷாவை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொள்ள …
மோனிஷாவால் சுயத்திற்கு வர முடியவில்லை … முத்தம் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல இதற்கு முன்பும் அவன் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான் … ஆனால் அப்பொழுதெல்லாம் ஏற்படாத ஒருவகை உணர்வு இன்று அவளுக்குள் ஏற்பட்டது …
ஒரு முத்தத்துக்கு இத்தனை சக்தியா ??? அதுவும் நெற்றியில் கொடுத்தற்கு ?? உள்ளத்தில் பரவி கிடந்த வெறுமை நீங்கி புதுவித தயிரியம் அவளுக்குள் பிறந்தது …ஒற்றை முத்தத்தோடு அவன் மொழிந்த வார்த்தைகள் … அவளை சித்தம் கலங்க வைத்தது ..
அவனது மீசை முடி உரசிய தனது நுதலை தொட்டுப்பார்த்தாள் … முத்தமிட்ட ஈரம் எதுவுமில்லை … ஆனாலும் மழை நீரில் நனைந்தது போல அவளின் உடலில் ஒரு வித சிலிர்ப்பு … அர்ஜுனின் உண்மையான காதலை எண்ணியவளின் விழிகள் தானாய் குற்ற உணர்வில் கலங்கியது ,”அர்ஜுன் ” என்று அவளது இதழ்கள் முனங்கியது …
மீண்டும் சிந்தனை அவளது மனதை கைது செய்ய … விழிநீரை துடைத்தவள் …
” சாரி அர்ஜுன் நான் கிருஷ சும்மா விட மாட்டேன் … என்னை வச்சே உன்னை கஷ்டப்படுத்திட்டான் … அவனுக்கான தண்டனையை நான் கண்டிப்பா குடுப்பேன் … மறுபடியும் உன் பேச்சை மீறி உன்னை கஷ்டப்படுத்த போறேன் அர்ஜுன் என்னை மன்னிச்சிரு ப்ளீஸ் ” – விழிகளில் தொடுக்கி நின்ற கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைக்க … நா வறண்டு போக … பளபளக்கும் விழிகளுடன் தீர்க்கமாக அவள் கூறினாள் …
– தொடரும்