Punniyam pesathadi 2

பெண்ணியம் பேசாதடி – 2

கவி எழுத எண்ணும் போதெல்லாம்
தடை செய்கிறது உன் மென்மை!
சரி உன் மென்மை கொண்டு நான்
கவி படிக்க எண்ணினால்
தடை செய்கிறது உன் பெண்மை!
என்னதான் நான் செய்ய சொல்லடீ.

நாளை மதுவிற்குத் தெவசம் அதனால் வீடு முழுவதும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை. அவளது தந்தையும் அதற்கு உதவி கொண்டு இருந்தார். மகளின் நினைவு எழுந்து அவரை வருந்ததான் செய்தது, இருந்தாலும் அதனை வெளி காட்டாது மறைத்துக் கொண்டார் மனிதர்.

அக்கா என்ற பாசம் இருந்தாலும் இது தான் நிதர்சனம் என்று மனதை தேற்றி கொண்டாள் காஞ்சனை. அவள் அப்படித் தான் எதற்கும் அலட்டி கொள்ள மாட்டாள். இவர்கள் சுத்தம் செய்ய வாசலில் நின்று கொண்டு தனது தாத்தாவை கத்தி அழைத்துக் கொண்டு இருந்தான் வளவன்.

தாத்தா!.. தாத்தா!.. கோபமாக இருக்கிறாராம் அதனால் வீட்டுக்குள் வர மாட்டாராம். “அப்பா அந்தச் சின்ன நாய் உள்ள வந்தா பேசுங்க இல்லாட்டி, அதைத் தொரத்தி விடுங்க” அசால்ட்டாகக் காஞ்சனை சொல்ல துள்ளி கொண்டு உள்ளே வந்தான் வளவன் சண்டைக்கு.

“இங்க பாருங்க மிஸ்டர்.மீசை உங்க பொண்ணு கிட்ட சொல்லி வைங்க என்ன வம்பு பண்ண வேணாம்னு”.

“தைரியம் இருந்தா என்ன பார்த்து சொல்லுடா”.

“ஏன்? எனக்கு என்ன பயமா?” ஏகுறிக் கொண்டு வந்தவனை நெஞ்சில் கை வைத்து தள்ளியவள். “டேய்! வளர்ந்து கெட்டவனே தள்ளி நில்லு மேல விழுந்து வைக்காத”.

“தாத்தா உங்க பொண்ணுகிட்ட மல்லுக்கு நிற்க எனக்கு நேரமில்ல, அப்பா உங்க ரெண்டு போரையும் கூட்டிட்டு வர சொன்னாரு, எப்போ வரீங்க என்றவனிடம்”.

“வருவோம்! வருவோம்! எங்க வீட்டு வேலை எல்லாம் முடுச்சுட்டு வருவோம்”. காஞ்சனை சொன்ன பாவனையில் விட்ட சண்டையை வளவன் தொடர போக அவனைத் தடுத்து நிறுத்திய மூர்த்தி. “இரண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, அம்மா, பையன் மாதிரியா பேசிக்கிறீங்க அக்கா, தம்பி சண்டை மாதிரி இருக்கு”.

“உனக்கு என்ன வயசு காஞ்சனை, எப்போ பாரு அவன் கூட மல்லுக்கு நிக்குற பாவம் புள்ள முதல அவனுக்குச் சாப்பிட எதாவது குடு”. தன்னைத் திட்டிய தனது தந்தையை முறைத்து விட்டு,வளவனுக்குப் பழிப்பு காட்டி விட்டு சென்றாள், அதைப் பார்த்த இருவரிடமும் அழகான புன்னகை.

பின்பு மூவரும் சேர்ந்தே வீட்டை சரி செய்து விட்டு வாமணனின் வீட்டை நோக்கி சென்றனர். அங்கே அவர்களை வரவேற்று அவர்களுக்கு அரை ஒதுக்கி கொடுத்தார் வாமணன்.

கஞ்சனையை பார்த்து “காஞ்சனை ஐயருக்கு வாங்க வேண்டிய சாமான் எல்லாத்தையும் எழுதிக் கொடும்மா. சாப்பாடு, யாரை கூப்படனும், எல்லாம்”.

சரியென்று தலை அசைப்பு மட்டுமே அவளிடம், சரிங்க மாமா என்றோ, சரி என்றோ பேச வாய் வரவில்லை. ஏனோ ஒரு ஒதுக்கம் அன்றில் இருந்தே. பின்பு தனது மாமனிடம் திரும்பிய வாமணன்,

“மாமா நீங்க வாங்க நம்ப அடுத்த வேலைய பார்க்கலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்.இவர்களது உறவு ஒரு எல்லை வரை தான் அத்தை மகன் என்ற பாச பின்னிணைப்பு அவளுக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.

அடுத்த நாள் சற்றுக் கனமாகத் தான் விடிந்தது ஆறு மணிக்கே எழுந்து ஆத்துக்குச் சென்று திதி கொடுத்து வந்தனர் தகப்பனும் மகனும், பின்பு வீட்டில் பூஜை ஆரம்பம் ஆனது,சொந்தங்கள் சூழ காஞ்சனை பம்பரமாக வேலை செய்து கொண்டு இருந்தாள். வழமை போல் அவளது திருமணம் பற்றி, வளவனின் தொழில் பற்றி, மிதமான குத்தல் என்று ஆராயும் பேச்சுகள். அதையெல்லாம் கண்டு கொள்ளாத கஞ்சனைக்குக் கோபத்தைக் கொடுத்தது வாமணன் ரெண்டாவது திருமணம் பேச்சு.

“ஏண்டா! அதுங்க தான் கூறுகெட்ட தனமா ரெண்டாவது கல்யாணத்தைப் பத்தி பேசுதுங்கனா, உங்க அப்பாக்கு எங்க போச்சு புத்தி. பால் குடி மாறாத புள்ளைய வச்சுருக்காரா கஷ்ட பட. பீர் குடுக்குற புள்ளைய வச்சுக்கிட்டுக் கல்யாணம் கேக்குது.”
“சித்தி நீ என்ன ரொம்ப டேமேஜ் பண்ற, அப்பா முன்னாடி அப்புடியே பம்புற என்கிட்ட மட்டும் தான் வாய், சின்னப் புள்ள கிட்ட உன் வீரத்தை காட்டாத”.

“அய்ய! நீ சின்னப் புள்ளையா எங்க அக்கா தெவசத்தைக் கொண்டாட சரக்கு வாங்கி வச்சி இருக்க, நீ பச்ச புள்ள நாங்க நம்பனும் மரியாதையா என்னையும் எங்க அப்பாவையும் வீட்டுல விட்டுட்டு அப்பனும், மகனும் கூத்தடிங்க இல்ல கொன்னுடுவேன்.”

“உனக்கென்ன தெரியும் நாங்க உண்மையா அம்மாவ மிஸ் பண்ணுறோம் கண்கள் லேசாக கலங்க சொன்னவனைப் பார்க்க பாவமாக இருந்தாலும், கொஞ்சம் இறங்கி வந்தால் இவனைச் சமாளிக்க முடியாது என்று எண்ணி, “சரி சரி நம்புறேன் போய் வேலைய பாரு”.

“நீ சித்தி இல்ல ராட்சசி”.

“சரிதான் போடா” தங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் இவர்கள் முட்டிக்கொள்வதை மட்டும் நிறுத்தவில்லை.

மதியம் உணவுண்டு சொந்தங்கள் கிளம்ப மூர்த்தியும், கஞ்சனையும், கூட விடை பெற்றனர்.போகாதீங்க மாமா என்ற வார்த்தைகள் இல்லாமல் பத்திரமா போயிட்டு வாங்க மாமா என்ற வாமணன், அவர்களைத் தங்கள் காரில் அனுப்பிவிட்டு ஓய்வு எடுக்கச் சென்றார்.
——————————————————————————————-
இரவு 9 .30 கடிகாரம் மணி அடிக்கச் சரியாக வாமணனின் போனும் அடித்தது.யாரு என்று அறிந்தவர் போனை எடுத்துக் காதில் வைக்க “என்ன எழுத்தாளரே நல்ல படியா எல்லாம் முடுஞ்சுதா” பேரிளம் பெண் கேட்க.

ஹ்ம்ம்… முடுஞ்சுது என்னமோ மாதிரி இருக்கு சொல்ல தெரியல, மது மேல காதல் இருந்ததான்னு தெரியல ,ஆனா ஆசை இருந்தது. அதை மறுக்க முடியாது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

“புரியுது எழுத்தாளரே”.

“நீயும் தூரமா இருந்து ரொம்பக் கஷ்ட படுத்துறடி” சிறுது மௌனத்திற்குப் பின்.

“நான் எப்புடி அங்க? நான் எப்போதும் உங்க ரசிகை தான். வாமணன் எழுத்துக்கும்,அவர் ஆளுமையுக்கும் நான் என்றும் ரசிகை, அடிமை அதைத் தாண்டி யோசிக்க ஒன்னுமில்லை எழுத்தாளரே” பேரிளம் பெண் படும் தெளிவு போலும்.

“சரிடி ஒரே ஒருதரம் உன்ன பார்க்கணும்”.

“அது சாத்தியமில்லை எழுத்தாளரே”.

“ஏண்டி! உன்ன தூக்கிட்டு வர எனக்கு ரொம்ப நேரம் ஆகாது”.

“என்ன தூக்குனா இலவச இணைப்பு உண்டு எழுத்தாளரே உங்களுக்குத் தான் தலை வலி”.

“ஏன் உன் தங்கச்சி இருக்காளா”.

“காலம் போன கடைசில உங்களுக்குக் கொழுப்பு தானே, நான் சொன்னது ஏன் வீட்டுக்காரு,ஏன் புள்ளைங்க” சிறுதும் தயக்கமின்றி “அவுங்களையும் கூட்டிட்டு வந்துடுவேன்”.

வாமணன் பிடிவாதம் எரிச்சலை தர “,எப்புடி இந்தப் பக்கம் நீங்க அந்தப் பக்கம் என் வீட்டுக்காருனு நான் குடும்பம் பண்ணவா. நல்ல வாயில வந்துரும் வாமணன்”. பேரிளம் பெண்ணுக்குக் கோபம் வந்தால் மரியாதை சற்று குறைந்து கொண்டே வரும் முதலில் எழுத்தாளர் வாமணனாகி, வாமணன் வாடா வாகி,வாடா போடவாகி போகும்.

ப்ளீஸ் டி.. என்றவரிடம் சிறுதும் இரக்கம் இல்லாமல் “வெறுப்பான இரவு வணக்கம்” என்றவள். அவரது பதிலை எதிர் பார்க்காமல் போனை வைத்து விட்டாள்.கோபம் கோபமாக வந்தது வாமணனுக்கு.

அதே கோபத்துடன் நீச்சல் குளம் நோக்கி சென்றார், அங்கே தனக்காகத் தனது மகன் மதுவுடன் அமர்ந்து இருந்தான். அவரது முகமே அவரது கோபத்தைப் பறைசாற்ற.

“என்ன அப்பா என்ன சொன்னாங்க உங்க கண்ணம்மா உங்க முகத்தைப் பார்த்தா அடி பலம் போலையே”

“அடப்போட ரொம்பத் திட்டுறா”.

சின்னச் சிரிப்புடன் தனது தந்தையை ரசித்தவாறே “நீங்க என்னப்பா பேசுனீங்க” சரியாக நாடி பிடித்த மகனிடம் தான் பேசியதை கூறியவர். “ரொம்பக் கஷ்டமா இருக்குடா கண்ணா” என்றவரை பார்த்தவன்.

“அப்பா இதுவரைக்கும் உங்க விஷியத்துல தலையிடம இருந்தேன்,பட் எப்போ நீங்க ரொம்ப வறுத்த பட்டீங்களோ, அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்.இன்னும் ஒரு மாதத்துல உங்க பிறந்த நாள். அன்னைக்கு என்னோட பரிசு உங்க கண்ணம்மா”. என்றவனைக் கட்டி அணைத்தார் வாமணன்.

பின்பு மௌனமாகக் குடித்தவர்கள் எழுந்து உறங்க போக.“ஒரு நிமிஷம்” என்று தடுத்த வளவன் “அவுங்களுக்குக் குடும்பம் இருந்தா நம்ப விலகிடனும் அதுக்கு உங்களுக்குச் சம்மதமா” என்றவனை பார்த்து சிரிப்புடன் தலை ஆட்டினார்.அவனும் சிரிப்புடன் விடை பெற்றான்.

சிறு வயது முதலே தனது தந்தையிடம் செல்லம் அதிகம். வளர்ந்த பின் அவரே தனக்கு ஹீரோ என்பது போல வளவன் அவரைக் கொண்டே எல்லாம் செய்வான். இது வழமையான ஒன்றுதான் எல்லாருக்கும் அவர்கள் தந்தை கதாநாயகன் தான், ஆனால் தந்தையை அணு அணுவாக ரசிப்பவன் வளவன்.அவரது ஒவ்வொரு செய்கையும் அவனது ரசனையாக.

மது பாசமாக இருந்தாலும் அம்மாவை விட அப்பாவிடம் அதிகம் அன்பு உண்டு.அதனால தான் என்னவோ அவனுக்குத் தாயின் இழப்பில் இருந்து விரைவாக வெளியில் வர முடிந்தது.இதுவரை தனக்கென்று தந்தை எதுவும் செய்து கொண்டு அவன் பார்த்ததில்லை, அவர் ஈடுபடும் இரு விடயங்கள் என்றால் ஒன்று எழுத்து, இன்னொன்று அவர் கண்ணம்மா.

ஆம்! அவர் தனது பதினெட்டு வயதில் முதல் முதலில் ஒரு நாளிதழில் கவி எழுதும் பொதுக் கிடைத்த ரசிகை தான் பேரிளம் பெண்.ரசிகை என்ற நிலையில் மட்டுமே அவள் இருக்கச் சிறுது காலமாக அவரது நிலை அதற்கும் மேல் என்று அடித்திக்கொண்டது.

பணம் உண்டு,பதவி உண்டு,சொத்து உண்டு,சுகம் உண்டு,இவையெல்லாம் ஆலா அழகான மகன் உண்டு ஆனால் உயிர்ப்பு? அது தனது ரசிகையிடம் மட்டும் அல்லவா உண்டு. பார்ப்போம் தனது மகன் தனக்கு உயிர்ப்பை கண்டு தருவானா என்று…….

கைக்குக் கிட்டுமா வண்ணத்துப் பூச்சி, இல்லை ஆட்டம் காட்டி ஆடுமா கண்ணாமூச்சி.