TIK 1

TIK 1

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்துவிடு!!!!

1

மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும். அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும், ஆதி டெக்ஸ்டைல்ஸின், டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து, சம்பளத்துடன் கூடிய ஆறு மாத டிரைனிங்கில் ஒரு மாதம் முடிந்திருக்க, முதல் சம்பளம் தந்த மகிழ்ச்சியில்… மல்லி. இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், எலுமிச்சை நிறத்தில், துருதுரு விழிகளுடன், ஒருமுறை பார்த்தால், மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகி.. நமது நாயகி… மல்லி என்கிற மரகதவல்லி… காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூவரசந்தாங்கல் எனும் சிறிய கிராமம் அவர்களுடையது. அம்மா பரிமளா, அப்பா ஜகன்நாதன், செல்லத் தம்பி தீபன். ஜகன் ஒரு கைத்தறி பட்டு நெசவாளி, சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தார். பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தேவைக்கு வருமானமும், நிறைவான எளியக் கிராமத்து வாழ்க்கையுமாகச் சென்றது அவர்கள் நாட்கள். சிறந்த கல்வி வேண்டி மகளை ஹாஸ்டலில் சேர்த்திருந்தார். அவளின் தாத்தா பாட்டி இருந்தபொழுதில் மூன்றாக இருந்த தறி இறுதியில் குறைந்து ஒன்றாக ஆனது. அதுவுமே, ஒரு கட்டத்தில், கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு, தொடர்ந்து தறியை ஓட்ட முடியாமல், மன உளைச்சலால், ஜகனை நோயில் விழவைத்தது. ஸ்ட்ரோக் ஏற்பட்டு அவரது வலது கை செயலிழந்து போக, பேச்சும் சற்று குளரலாகிப்போனது. அதன் பிறகு, மருத்துவ செலவுக்காக, கடன்களை அடைக்கவென அவர்களுடைய வீட்டையும், சிறிய அளவிலான விளைநிலத்தையும் விற்றுவிட்டு, ஜகனுடைய மருத்துவ வசதிக்காகச் சென்னை புறநகர்ப் பகுதியில், ஒரே அறை கொண்ட ப்ளாட்டில், வாடகைக்குக் குடியேறினர். பரிமளாவும் பி.எட் முடித்திருந்ததால், அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் வேலைக் கிடைத்துவிட, ஜகனும் வீட்டில் வெறுமையாக இருக்கப்பிடிக்காமல் தெரிந்தவர் ஒருவர் மூலம், அருகில் உள்ள ஒரு நூலகத்தில் வேலைக்குச்செல்லத்தொடங்கியிருந்தார். இதற்கிடையில் மல்லியை ஹாஸ்டல் படிப்பை நிருத்தி, வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். அவளும் படித்து முடித்து இந்த வேலையிலும் சேர்ந்து விட்டாள். தீபன் +2 படிக்கிறான். அழகான சிறு கூடு போல அவள் குடும்பம், அதில் அல்லிராணியாக மல்லி…

இருள் பரவத்துவங்கியிருந்த மாலைநேரம் அலுவலகப் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மல்லி வெளிப்பறம் வேடிக்கைபார்த்தவாறே பயணித்துக்கொண்டிருக்க, அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழி சவிதா, ஏதோ சளசளத்துக்கொண்டே வர, பெயருக்கு ம்” “” “ஓஹோஎன்றவாறு வந்தாலும் அவள் மனம் அவள் வீட்டிலேயே சுழன்றது, இனி ஓரளவுக்குப் பெற்றோருக்கு, தோள் கொடுக்க முடியும். அதுவும் ஐந்து மாதத்தில் ட்ரைனிங் முடிந்தால் சம்பளமும் கணிசமாக வரும் என்று மகிழ்ந்தாலும், “தன் கனவு ஏன்றேனும் நிறைவேறுமா?” என்ற அச்சமும் அவள் மனதில் எழுந்தது.

கூடவே அவள் மனக்கண்ணில் வந்து மறைந்தாள் அம்மு. அம்மு எங்கடீ இருக்க? எப்பதான்டீ உன்னை நான் பார்க்ப்போறேன்?” என ஓடிய எண்ண ஓட்டம், “கிரீச்என்ற பஸ்ஸின் சடன் பிரேக்கில் கலைய, அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, சவிதாவிடம், கையை அசைத்து. பைஎனக் காட்டிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினாள் மல்லி.

கண்களால் தீபனைத் தேடியவள், “ஐயோ இவன் இன்னும் வரலியேஎனக் கலங்கியவாறு அவனுக்காக காத்திருந்தாள். அது ரயிலி நிலையம், பேருந்து நிருத்தம் என மக்கள் கூட்டம் நிறைந்த இடம்தான் எனினும் அங்கிருந்து அவள் தனியாக வீடு போய் சேருவதென்றால் கொஞ்சம் பதட்டம் சூழ்ந்துகொள்ளும் அவளுக்கு. கரணம்… வழியில் இருக்கம் அரசு மதுபானக்கடையும், தினமும் அதன் அருகே நின்று பல்லை இளிக்கும் வீரா என்பவனும், அவனுடைய அள்ளகைகளும். தீபனுக்கு அழைக்கலாம் என அவள் நினைக்கும்போதே அவன் ஸ்கூட்டியில் அங்கே வந்துசேர, பின்னால் ஏறியவள், “ஏ குரங்கே கொஞ்சம் முன்னாலையே வந்தா என்ன?” என்று ஏறிந்து விழ. ஏய் அக்கா! நான் டியூஷன் முடிஞ்சு வர வேணாமா? ஒரு ஐந்து நிமிடம் லேட் ஆனதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறஎன்று கேட்க… சாரிடா!! ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டேன் என்று மட்டும் கூரினாள். உண்மையான அவளது அச்சத்தை அவள் வீட்டில் சொல்லி, சாதாரணமாகவே இவளை நினைத்து கவலை பட்டுக்கொண்டிருக்கும் பெற்றோரை மேலும் வருந்தச்செய்ய விரும்பவில்லை. மேலும் திருமணம் என்று இவளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தாள் அம்மாவைச் சமாளிப்பது கடினம். பிறகு குறைந்தபட்சம் பத்து பட்டுத் தறியாவது சொந்தமாகப் போட வேண்டும், விதவிதமான டிசைன்களில் பட்டுப்புடவை வடிவமைக்க வேண்டும், என்ற இவளது லட்சியமெல்லாம் வெறும் கனவாகவே போய்விடும். மேலும் இவள் அம்முவிற்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். இவ்வாறாக நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

ஏண்டீ… மல்லீஈஈஈ… எப்பவும் நானேதான் உன்னைத்தேடி வரணுமா?? நீ என்னை தேடவே மாட்டாயா?”…. “ஐயோ!!! இது அம்முவோடு குறலாச்சே.என்று நினைத்தவாறு மல்லி.. அப்படியெல்லாம் இல்லடி அம்மு!!! நீ எங்க இருக்கேன்னு தெரியலையேடி… இல்லன்னா உன்னைத் தேடி வந்திருப்பேனேஎன்க… உனக்கு என்னை பற்றி தெரியணுமா… அப்ப 98✶✶✶✶✶✶✶✶ நம்பருக்கு போன் பண்ணு… சொல்லிக்கொண்டே… அம்முவைப்போன்று தோன்றிய நிழல் உருவம் மறைய… அம்மூஊஊஊ…. அலறியபடி… எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. அவள் குரலை கேட்டு எழுந்த பரிமளா “ஏய் மல்லி! என்னடி ஆச்சு, இன்றைக்கும் கனவு கண்டியா??” என்று கேட்க, தூக்க கலக்கத்தில் மிரண்டு விழித்தவள், அம்மா!!, அம்மு!!! என்று உளற… மறுபடியும் அம்மு கனவா?? கடவுளே என்று சலித்துக்கொண்டே “சரி தண்ணி குடிச்சுட்டு தூங்குமா, நாளைக்கு எல்லாருக்குமே வொர்கிங் டே வேறு” என்றவாறே தண்ணீரை கொடுக்க, அதை வாங்கி பருகியவள் சற்று தெளிந்து, “அம்மா என் அம்மு எங்க இருக்காமா” என்று என்னவோ அவள் அம்மாவுக்குத்தான் தெரியும் என்பதுபோல் கேட்க… “அடியேய், பாதி ராத்திரில… கேக்கறா பாரு… எனக்கு தெரிஞ்சுதான் உன் கிட்ட சொல்லாம… பேசாம படுடி” அப்ப எப்படி அவளை கண்டுபிடிக்கிறது. அவ FB ல கூட இல்லையே என்றவாறே படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

 

அடுத்த நாள் காலை, அவள் கண்ட கனவின் தாக்கம் எதுவுமே இல்லாமல், சுறுசுறுப்பாக, சளசளத்தவரே, அடிப்படியில் அம்மாவுக்கு உதவியாக மிக்சியில் சட்டினி அரைத்துக்கொண்டே, அந்தச் சத்தத்தினூடே “ஐந்து ப்ளோர் பில்டிங் மாஎன மல்லி ஆரம்பிக்க… பரிமளாவோ ஐயோ தினம் புலம்புர புலம்பலை இன்னிக்கும் ஆரமிச்சுட்டாளே என்றவாறே தோசை வார்த்துக்கொண்டிருக்க, மல்லியோ ஆனா நான் வேல செய்யற செக்ஷன் தவிர வேற எங்கயும் போக முடியாது. நான், குழந்தைகளுக்கான ரெடிமாட் டிரெஸ்தான டிசைன் பண்றேன்… ப்சு.. பட்டுப்புடவை டிசைன் பண்ணும் செக்சன் உள்ள நுழையக் கூட முடியாது… அவ்வளவு செக்யுரிடி தெரியுமா?… ஏகப்பட்ட ஸ்பெஷல் டிசையின்லாம் செய்யறாங்கதெரியுமா?… எனக்கு மட்டும் பட்டுப்புடவை டிசைன் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சிது வை, சும்மா பிச்சு உத்தரலாம்” என்க…

ஒரே ஒரு தடவையாவது உள்ள போய் பார்கணும் மா, என்றவளைப் பார்க்க பரிமளவுக்கே பாவமாய் இருந்தது.. பட்டு புடவை நெசவுமேல் மகளுக்கு இருக்கும் அதிகப்படியான விருப்பம் அறிந்தவளாயிற்றே.. பட்டுத்தறி போட்டு அதனால் ஏற்கனவே ஓய்ந்துபோயிருந்த பரிமளாவுக்கு மறுபடியும் அதில் தலைகொடுக்க விருப்பம் இல்லை. அதனால். அவள் தன் மகளின் மனதை திசை திருப்ப… இப்ப பண்ற வேலையை சரியாகச் செய்.. அதுவும் உனக்கு நல்லாதானே வருது… அப்புறம் ஏன் இப்படி புலம்பிட்டு இருக்க…என்று கேட்க… என்ன இருந்தாலும் பட்டு நெசவு மாதிரி வருமா?? அது நம்ம தலைமுறை தலைமுறையா செஞ்சிட்டுவர கலைதொழில் இல்லையா?? என்று அவசரப்பட்டு சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொணடு… அம்மாவின் தேறி லுக்கில்… மீ ஸ்கேப்என்று அங்கிருந்து ஓடியே போனாள் மல்லி…

 

பேருந்தில் அலுவலகம் நோக்கி பயணிக்கும்போதுதான் அவளின் அந்த கனவு பற்றி ஞாபகம் வந்தது… அந்த செல் நெம்பரை,  மீண்டும்… மீண்டும்… நினைவுபடுத்த முயல… அந்த எண்கள் பிடிபடவேயில்லை…தனது இந்த கனவுகளைபற்றித்தான் யோசித்தாள் மல்லி… +2 முடித்து தேர்வு முடிவுகள் வந்த மறுநாளிலிருந்துதான் இதுபோன்ற கனவுகள் அவளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தன எல்லாமே அம்முவை நினைக்கவைக்கும் கனவுகள்…. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் சில கனவுகள் உண்மை போலவே தோன்றும். “அது கனவுதானா அல்லது உண்மையில் நிகழ்ந்ததா??” என்ற குழப்பமே மிஞ்சும் அவளுக்கு. அதன் பாதிப்பு இரண்டு நாள்வரைக்கும் கூட இருக்கும். பல கனவுகள் ஞாபகத்திலேயே இருப்பதில்லை. மறுநாள் அவள் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வதிலிருந்து அவள் புரியாதவாறு நிறைய உளறியிருப்பது தெரியவரும்.. இதற்கு முடிவுதான் எப்போது என்று நினைத்துக்கொண்டிருந்தவளின் அருகில் சவிதா ஹாய் என்றவாறே வந்து உட்கார… பேசியவாறே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தனர். உள்ளே நுழைந்தவுடன் வேலைகள் அவளை இழுத்துக்கொள்ள, அவளுடைய அந்த நாள் இரவை நோக்கி நகர்ந்தது.

 

வீடு, அலுவலகம், சனி ஞாயிறு விடுமுறை, தமக்கை மற்றும் தம்பியின் அதகளம் என ஒருமாதம் கழிய…

 

ஒருநாள் அலுவலகத்தில், உணவு இடைவேளை… மல்லி, சவிதா, ஐஸ்வர்யா, மணிகண்டன் மற்றும் மேகலா அனைவரும் அரட்டையுடன் உணவு உண்டு கொண்டிருந்தார்கள்..

இவர்களுள் மல்லி… மேகலா… சவிதா… மூவரும் ட்ரைனிங்கில் இருப்பவர்கள்… மணிகண்டன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அங்கே நிரந்தர வேலையில் பணிபுரிகின்றனர்.. மேலும் இருப்பது நபர்களை கொண்ட, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உடை வடிவமைக்கும் பிரிவு அது, அந்த ஒரு தளம் முழுவதும் அமைந்திருந்தது… அவர்களுடைய டீம் ஹெட் காஞ்சனா…

மணிகண்டன்… “தெரியுமா? நம்ம ஆதி டெக்ஸ்டைல்ஸ் புதிதாக ஒரு வெட்டிங் சில்க்ஸ் காலேஷன்ஸ் இன்ட்ரோடியூஸ் பண்ணப்போறாங்க..” என்று கூற “வாவ்” என்றாள் மல்லி… இதுக்கே வாவ்னா… ஒரிஜினல் வெள்ளி சரிகையோட கூட கொஞ்சம் டிசைனர் வொர்க்கும் செஞ்ச பியூரான பட்டு புடவையுடைய விலை தெரியுமா??? என்று கேட்க… என்ன ஒரு நாற்பதாயிரம் இருக்கும்… என சவிதா சொல்ல… “சான்ஸே இல்ல… மினிமம் தொன்னூறு ஆயிரம் இருக்கும் என்று மல்லி சொல்ல இல்ல… ஒரு லட்சத்து பன்னிரண்டு ஆயிரம்என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்தான் மணி…

அத்துடன் ஒரு பிரபலமான தொழிலதிபர் பெயரை சொல்லி “அவர் மகளின் திருமணத்திற்காக முதல் செட் புக் ஆகியிருக்கு, அநேகமா அடுத்த வாரம் லாஞ்ச் செய்வாங்கன்னு நினைக்கிறேன்… தென் டிவில எல்லாம் விளம்பரம் வரும்” என்றான்… “எப்படியும் அதே டிசைன் நார்மல் விலையிலும் இருக்கும் இல்ல”?.. என்று மேகலா கேட்க… அதற்கு ஐஸ்வர்யா ” கிடைக்கும் ஆனால் டெக்ஸ்சரைஸ்டு சரிகையாக இருக்கும்” என்றாள்.. “டிவி ல விளம்பரம் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?… கரூரில் ஒரு பிரான்ச் ஓபன் பண்ண போறாங்க” என்று மேகலா சொல்ல… மணிகண்டன் சிரித்துக்கொண்டே “நியூஜர்சியில் ஒரு கிளை ஆரம்பிப்பதகான வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது, இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒபனிங் இருக்கும்” என்று கூற… மற்றவர்கள் அதை கேட்டு பிரமித்துக் கொண்டிருக்க மல்லிக்கு மட்டும் அந்த புடவைகளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக்கொண்டது.. அதை லாஞ்சிற்கு பிறகு, எப்படியும் ஒருமுறை எதாவது ஒரு பிராஞ்சுக்கு அம்மாவுடன் சென்று பதிவிட்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

 

அப்பொழுது மேகலா “ஐஸ்வர்யா!!! நீங்க நம்ம எம்.டிய பார்த்திருக்கிங்க இல்ல?” என்று கேட்க… அதற்கு அவள் “ம் இரண்டு தடவை இங்க வந்திருக்கார்.. பார்த்திருக்கேன்.. ஆனா மணிதான் அடிக்கடி அவரை சந்திப்பார்” என்று கூற. அதற்கு மணி “சம் டைம்ஸ்… டிசைன்ஸ்… சாம்பிள்ஸ் எல்லாம் காண்பிக்க போவேன்.. அப்பொழுது பார்த்திருக்கிறேன்.. மத்தபடி பிராஞ்ச் ஓப்பனிங், லாஞ்சிங் பார்ட்டி இதுபோல எங்கயாவது பார்த்தால் உண்டு” என்று கூற… அதற்கு மல்லி ” எப்படி பா இவ்ளோ பெரிய டிசைனிங் பிரிவு இது, தினம் இதை வந்து பார்க்காம எப்படி மேனேஜ் பண்ண முடியும்? என்று கேட்க… அதற்கு ஐஸ்வர்யா “ஹா ஹா… ஒரு நாளைக்கு ஒரு பிரான்ச் விசிட் பண்ணினார்னா கூட ஒரு மாசத்துக்கு மேல ஆகும் அவருக்கு… அது இல்லாம அமிர்தம் உணவகம் தெரியுமா?” என்று கேட்க அதற்கு மல்லி “ஆமாம்… செயின் ஆப் ரெஸ்டரன்ட்ஸ், சிட்டி முழுதும் இருக்கே அதுதானே?” என்று கேட்க “ஆமாம், அதுவும் இவங்களோடதுதான்.. அப்புறம் எப்படி தினமும் இங்க வருவார்? அவரோட அப்பா வரதராஜன் சார் மட்டும் தீ நகரில் இருக்கும் மெயின் பிராஞ்சுக்கு தினமும் வருவார், அத்துடன்  இந்த யூனிட் முழுக்க பார்த்துக்கறாரே சசிகுமார்.. அவர் ஆதி சாரோட பெஸ்ட் ப்ரண்ட். அதனால இங்க ஒரு பிரச்னையும் வராது.. அதைவிட இங்க ஒரு பின் விழுந்தாலும் அது ஆதி சாருக்கு தெரிஞ்சிடும்” .. என்று கூற … “அவங்க வீட்டுல இருக்கறவங்களாவது அவரை தினமும் பார்க்க முடியுமா இல்ல அதுவும் முடியாதா?” என்று சிரித்துக்கொண்டே மல்லி கேட்க… “அது அவங்க வீட்டுல இருக்கறவங்க கவலை”.. என்று முடித்தான் மணி … அத்துடன் அவர்கள் உணவு நேரம் முடிய அனைவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றார்கள்..

அன்று ஒரு திருமணத்திற்காக பரிமளாவும் ஜெகனும் அவர்கள் ஊரான பூவரசந்தாங்கல் சென்றிருந்தார்கள்.. தீபனுக்கு பரீட்சை இருக்கவும், மல்லியும் விடுப்பு எடுக்க முடியாமல், அங்கேயே இருந்தனர். தீபன் ஹாலில் உறங்கிக்கொண்டிருக்க மல்லி மட்டும் அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்… அப்பொழுது மறுபடியும், மறுபடியும் “மல்லி 98******* நம்பருக்கு போன் பண்ணு… கால் பண்ணு… என்று அம்முவின் குரல் அவளுக்கு கட்டளை போல் சொல்லிக்கொண்டே இருக்க.. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற்போல்…   செல் போனை எடுத்த மல்லி அந்த எண்ணுக்கு அழைத்தேவிட்டாள்…எதிர் முனையில் கம்பீரமான ஒரு ஆணின் குரல் “ஹலோ” என்றது…

 

error: Content is protected !!