Un Kannil Inbangal Kanbein – 11

Un Kannil Inbangal Kanbein – 11

11

பேசிக் கொண்டிருக்கும் போதே போனில் விசில் அடித்து தொடர்பைத் துண்டித்த சந்த்ருவை நினைக்கும் போதே
பத்திக் கொண்டு வந்தது அவனுக்கு..

‘கருப்பு’ அவனுக்கு மிகப் பிடித்த நிறம், எதிர்ப்புகளின் நிறம் கருப்பு என்பதால் அவனுக்கு பிடிக்கும் என்பதெல்லாம் அல்ல, அவனறிந்த, அவன் செய்யும் தொழில்களுக்கு ஏற்ற நேரமும் நிறமும் இருள் என்பதால் அவனுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து கருப்பு அவனது பிடித்தம்..

உலகில் ஒரு மூலையில் இருந்து கொண்டு மற்றொரு மூலையை கிடுகிடுக்கச் செய்ய ஒருவனால் முடியுமா..? முடியும் என்பதற்கு சான்று இவனே…

“தி ப்ளாக்”, “தி ப்ளாக் கோஸ்ட்” என அழைக்கப்படுபவனது மற்றொரு பெயர், “ஸ்டுப்பிட் மேன்”..

அனைத்து நாடுகளும் வலைவீசித் தேடும் கார்பரேட் கிருமினல், ஹேக்கர் ஆப் தி வேர்ல்ட் …இவனை அறிந்தவர்கள் யாருமில்லை..!

இருபது அடி கொண்ட விசாலமான இருட்டு அறைக்கு நடுவே இளமஞ்சள் நிறத்தில் விளக்கொளி வீச, இரண்டு இருக்கைகள் போடப்பட்டதற்கு நடுவே செஸ் போர்ட் இருந்தது..

சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மேஜை முழுவதும், ஃபைல்களாய் குவிந்திருக்க, மற்றொரு சுவரில் 56” இன்ச்சில் டிவி பொருத்தப்பட்டு இன்றைய ஷேர் மார்க்கெட் நிலவரம் ஓடிக் கொண்டிருந்தது.

மற்றொரு சுவரில் புரொஜெக்டர் பொருத்தப்பட்டிருக்க, அதில் இந்தியாவின் வரைப்படம் காணப்பட்டு ஆங்காங்கே பச்சை நிற விளக்குகள் ப்ளிங்க் ஆகின..

அதன் மற்றொரு சுவரில் ஹிட்லரின் ஆளுயற புகைப்படம் மாட்டி வைக்கப் பட்டிருக்க, அனைத்திலும் கடுவன் பூனையாய் இருக்கும் ஹிட்லர் கூட அவன் மாட்டி வைத்திருந்த புகைப்படத்தில் சிரித்து கொண்டிருந்தார்..

ஹிட்லரின் அறையை ஒட்டி சின்னதாய் ஒரு வாயில் இருக்க, அது ஆறு அடி கொண்ட சின்ன சமையல் அறை, அந்த அறையில் ஓரத்தில் ஆறடிக்கும் கூடிய உயரத்தில் முறுக்கேறிய புஜங்களை தனது இடுப்பில் கை வைத்து மெருக்கேற்றி காட்டிக் கொண்டிருந்தான் அவன்..

முட்டிக்கு மேலாய் சிக்கென இருந்த ஹாவ் பேன்ட்டும், கையில்லாத பனியனும் அணிந்திருந்தவனின் நெற்றியில் அமெரிக்க கொடியை போன்ற கர்சீப்பை கட்டியிருந்தான்..

இதழின் ஓரத்தில் புகையை கக்கி எரிந்து கொண்டிருந்த கிராம்பு மனம் கொண்ட ப்ளாக் சிகிரெட்டை விரல் தொடாமல் புகைத்து கொண்டிருந்தான் அவன்…திரும்பி நின்று கெட்டிலில் வெந்நீரை சூடாக்கியவனின் கைகள் கடுங்காபியை போட்டு முடிக்க, ஒரு கையில் காபியுடனும் மறுகையில் ஐபோனுடனும் நடந்து வந்தவனது முகத்தில் இருக்கும் இறுக்கத்தை மீறி கண்களில் ஒரு திமிர் குடி கொண்டிருந்தது..

இதழின் ஒரு பக்கத்தில் புகைந்த சிகிரெட்டை நாக்கைச் சுழற்றி மறுபக்கம் கொண்டு சென்றிருக்க, அதன் ஆயுள் முடியப் போகும் தருவாயில் கையில் எடுத்து ஆஸ்ட்ரேவில் வைத்து அழுத்தியவனின் உதடுகள்,
“மை லவ்..” என்றது சந்த்ருவை நினைத்து..

இவனது விரலின் அழுத்தத்தால் சிதைந்த போன சிகிரெட் துண்டினை ரசித்து பார்த்தவனின், இடக் கை வாய்க்கு அருகே ப்ளாக் காபியை கொண்டு செல்ல, சர்க்கரை இல்லாத அந்த காபியை இரசித்து குடித்தான் அவன்..

க்ளாஸின் கடைசி சொட்டு வரையிலும் நிதானமாய் குடித்தவனின் வலக் கையில் இருந்த போன் இப்போது அலற,
“வாஹ் கோன் ஹே..?” ஹிந்தியில் அவன் யார் என்பதை மட்டும் இவன் கேட்க,

“சாப்..அவன் சென்னைல இருந்து உங்க கிட்ட பேசிருக்கான்..” என்பதை மட்டும் சொன்னவனிடம்,

“தெரியும்..அவனை நான் பார்க்கனும்..”

“சார்..அவன் லோகேஷன் எதையும் ட்ராக் பண்ண முடியாத மாதிரி ப்ராக்ஸி பண்ணிருக்கான்..”

“அவனோட லாஸ்ட் லொக்கேஷன் நுங்கம்பாக்கம்…நான் முத்துனு ஒருத்தனோட அட்ரெஸ் அனுப்புறேன் அவன் இப்போ எங்க இருக்கான் என்ன பண்ணுறான்னு எல்லாம் எனக்குத் தெரியனும்..முடிஞ்சா அவனைத் தூக்கிடு..” என்றவன் ஆணையிட,

“முத்து யாரு..”

“அது உனக்குத் தேவையில்லாதது..நான் சொன்ன வேலைய உன்னால முடிஞ்சா செய் இல்லனா நான் வேற ஆள் பார்த்துக்கிறேன்..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்தில்,

“இல்ல சார், நான் பார்த்துக்கிறேன்..” என்பதை மட்டும் சொல்லி வைத்துவிட்டான்..

இங்கே கண் மூடி இருக்கையில் சாய்ந்தவனுக்குத் தெரியும், சந்த்ருவை நெருங்குவது சுலபம் அல்ல என்பது..

அங்கே கட்டிலில் குப்புற படுத்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கும் ப்ளாக் கோஸ்ட் பற்றியே எண்ணமே,
சந்த்ருவிற்கு தெரியும் தான் தன்னைச் சுற்றிப் போட்டு வைத்திருக்கும் பாதுகாப்பு வளையத்தைவிட்டு கொஞ்சம் வெளியே வந்தால் மட்டுமே ப்ளாக் கோஸ்ட்டைக் காண முடியும் என்பது..

மூளை எவ்வளவு வேகமாக கணக்கிட்டாலும், அவனை நெருங்கும் மார்க்கம் என்னவோ பூஜ்ஜியத்திலே நிற்க,
ஆனந்தை தனது அறைக்கு வருமாறு அழைத்தான்..

கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழையும் ஆனந்திடம், “ஆனந்த், எனக்கு ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் வேணும்..” எனச் சொல்ல,

“சார்..” திடுதிப்பென கேட்கும் சந்த்ருவிடம் புரியாத பார்வையை இவன் செலுத்தினான்..

“ஆனந்த், டூ யூ ஹியர் மீ..?”

“எஸ் சார்..”

“எனக்கு இந்த உலகத்துலயே பெஸ்ட் கம்ப்யூட்டர் ஹேக்கர்ஸ் லிஸ்ட் வேணும்..” என்றவன் அவ்வளவு தான் என்பதை போல கண்களை இறுக்க மூடிக் கொண்டான்..

ஆனந்த் அவ்வறையை விட்டு வெளியேறும் சத்தம் கேட்டதும், எழுந்து கதவினை உள்தாழ்ப்பாள் போட்டவனின் கால்கள் அங்கு இடது புறத்தின் ஓரத்தில் மூன்று ஆளுயற கண்ணாடியில் கை வைக்க, முதல் கண்ணாடியிலிருந்து,

“பின் ப்ளீஸ்..” என்ற வாக்கியம் மிளிர்ந்து பூஜ்ஜியத்தில் இருந்து ஒன்பது வரையில் உள்ள எண்கள் மிளிர்ந்தன..

தனது ஐந்தடக்க குறியீட்டு எண்ணை அழுத்தவனின், கைகள் மறுபடியும் அக்கண்ணாடியில் பதிந்தெழ, கண்ணாடியில் பிம்பம் மாறி கதவினைக் காட்டியது..

தனது எதிரே தெரிந்து கதவின் நம்பர் லாக்கை நீக்கியவன் உள்ளறைக்குச் சென்றுவிட, திறந்த கதவுகள் மறுபடியும் மூடிக் கொண்டது..

***

இன்னும் தேவியின் பிரசவத்திற்கு பத்து நாட்கள் மீதமிருந்த நிலையில், அன்று அதிகாலையில் இருந்தே முதுகு தண்டில் லேசான வலி இருந்து கொண்டேயிருந்தது..

காலையில் பேப்பர் படித்து கொண்டிருந்த பரத்தின் முன்னால் டீயை வைத்தவளின் முகம் வலியில் சுருங்க, ஓரக்கண்ணால் இவளைப் பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளது வலி புரிந்தது..

அவ்விடம் விட்டு நகரப் போனவளின் கரம் பிடித்து சேரில் அமர வைத்த பரத்திடம் இருந்து அந்த வலியிலும் கூட தனது கைகளை வேகமாய் இழுத்து கொண்டவளிடம்,

“என்ன ஆச்சு தேவி..?” என்றான்..

“ஒண்ணுமில்லையே..” அவசரமாய் பதில் சொன்னவளிடம்,

“இல்ல, உன் முகம் சரியில்லையே..வலி இருக்கா..?” என கேட்டு கொண்டிருக்கும் போதே கனி வீட்டினுள் பிரவேசித்தாள்..

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கனி அறியாத போதிலும், தேவியின் முகம் வலியில் சுருங்குவதைக் கண்டவள்,

“ஏய் தேவி, என்ன ஆச்சு..?” என்றாள்.

இவ்வளவு நேரமும் பரத்திடம் ஒன்றுமில்லை என்றவள்,கனி கேட்டதும்,

“தெரில கனி..பெயின் இருந்துட்டே இருக்கு..” என்பதை மட்டும் சொன்னாள்..

தன்னிடம் சொல்லவில்லையே என பரத்தின் மனம் முரண்டிய போதும், அதை விடுத்தவன், “எப்போ இருந்து வலிக்கு..?” என விடாமல் கேட்க,

“ஒரு மூணு மணில இருந்து..” என்றவள் அவனது முகம் பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள்..

“கனி, ஆஸ்பிட்டல் போகலாமா..?” என்ற பரத்தின் பரபரப்பிற்லு,

“டேய் சூட்டு வலியா இருக்க போகுது..காமாட்சி அம்மா தேவிக்கு கஷாயம் வைங்க..” என்றவள் உடைமாற்றி
எதற்கும் இருக்கட்டுமென, மருத்துவமனைக்குத் தேவையான உடையெடுத்து வைக்க,
அதற்குள் வீட்டின் வேலையாள் காமாட்சி கொடுத்த கஷாயத்தையும் மீறி முன்பிருந்ததைவிட வலிக்க ஆரம்பித்தது..

வலியில் அவள் முனங்கவும், பதறி எழுந்த பரத்,

“என்ன டி பண்ணுது..?” எனத் தவிப்பாய் கேட்க, வலி அதிகரிக்கவும் தன்னையுமறியாமல் பரத்தின் சட்டையைக் கொத்தாய் பற்றி அவனது நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள்..

தேவியின் சத்தத்தில் காமாட்சியிடம் அரசியைப் பார்த்து கொள்ள பணித்துவிட்டு, நாராயணனை கார் எடுக்கப் பணித்தவள், பரத்திடம் தேவியைத் தூக்கி காரில் ஏற்றும் படி சொல்லிவிட்டு அவள் காரின் முன்னிருக்கையில் ஏறிக் கொண்டாள்..

பிரசவத்தில் வலி முதுகுதண்டினை யாரு ஒடிப்பது போல, எழும்புகள் மொத்தமும் நொறுங்குவதைப் போல கூடிக் கொண்டே போக, தான் இனி உயிருடன் இருக்க மாட்டோம் என்பதைப் போன்ற பிரம்மைத் தோன்றியதும்,
“என்னங்க..” என்ற அழைத்தாள் தேவி..

தேவியின் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளது மெல்லிய அழைப்பு பிடிபட, “இன்னும் கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் போயிடலாம் மா..கொஞ்சம் பொறுத்துக்கோ..” என்றான் சமாதானமாய்..

அவனிடம் அதுஅல்ல என்பதைப் போல மறுப்பாய் தலையசைத்தவள், “எனக்கு ஏதாவது ஆகிட்டா…பாப்பாவ ஆசிரமத்துல விட்டிருங்க..” என்று சொல்ல, வலியில் புலம்புகிறாள் என நினைத்தவன் அமைதியாய் இருந்தான்..

“நானும் பாவம் இந்தப் புள்ளையும் பாவப்பட்ட புள்ளை தான்..இரண்டையும் நீங்க சுமக்கனும்னு எந்த தலையெழுத்தும் இல்ல..” என்றவளின் கரம் அவனது கரத்தை அழுத்த,

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தேவி..ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இரு..” என்றவனின் கண்கள் கலங்கியது,

“ஏதாச்சும் ஆகிட்டா..?” கேள்வியின் நிறுத்தியவள் இப்போது ‘அம்மா’ என சன்னமாய் கத்த,

“ஹே வாயை மூடிட்டு வா டி..” என்றவன் அதட்ட,

“வேற கல்யாணம் பண்ணுங்க..” என்றவளின் வார்த்தை முடியும் போது மருத்துவமனையில் வண்டி நின்றது..

கனி வேகமாய் சென்று நர்ஸை அழைக்க, இருவரது உதவியுடன் ஸ்ட்ரக்சரில் ஏற்றப் பட்டவளின் அலறல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது..

லேபர் வார்டுக்கு கொண்டு சென்ற பின்பும், குழந்தைப் பிறப்பதில் தாமதம் ஏற்பட, நாம சி செக்சன் போகலாம் என்ற மருத்துவரிடம் மறுப்பாய் தலையசைத்த தேவி,

“இல்ல டாக்டர், நார்மல் தான் வேணும்..” என்றாள் உறுதியாய்

அவளின் உறுதியில் சில நிமிடங்கள் மருத்துவர் தயங்க இவள் போட்ட கூச்சலில் நர்ஸின் பேச்சைக் கேட்காமல் உள்நுழைந்த பரத்,

“ஏன் டி…ஆப்ரேட் பண்ணி பேபி எடுக்கலாம்..ப்ளீஸ் சரின்னு சொல்லு..” என்றவன் கெஞ்சிய போதும் மறுப்பாய் தலையசைத்து வலியில் கத்தினாள் தேவி,

மேலும் சில நிமிடங்களில் இதற்குமேல் காத்திருக்க முடியாது என்பதை முடிவாய் சொன்ன மருத்துவர், தேவியிடம்,

“இதுக்கு மேல வெயிட் பண்ணுனா பேபிக்கு ரொம்ப சிக்கலா போயிடும் மா…” எனவும், வேறு வலியில்லாமல் சரியென்றாள்..

பரத்தை அழைத்து விவரம் தெரிவிக்க முற்பட்ட மருத்துவரிடம், “நீங்க எதுவும் சொல்ல வேணாம்..எனக்கு என் குழந்தையும் தேவியும் சேஃப்பா வந்தாலே போதும்..” என்றவன் வேகமாய் கையெழுத்திட்டான்..

அடுத்த நிமிடம் தேவியை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றியிருக்க, சுவாசத்திற்காக முற்றிலும் தவித்த தேவிக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டது..

பரத்திடம் முடிந்தவரையில் இரு உயிரையும் காப்பாற்ற முயற்சிக்கிறோம் என மருத்துவர்கள் சொல்லி சென்றுவிட, ஊரில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் பரத் வேண்டுதல் வைக்கும் போது கூட தளராமல்,

“டேய், அவா பத்ரமா வருவா..உன் பையனும் தான்..” என பரத்தை தேற்றினாள் கனி.

ஆப்ரேஷன் தியேட்டரில் சுவாசமில்லாமல் தவித்த தேவிக்கு, ஆக்சிஜன் செலுத்தி அனஸ்தீசியா கொடுக்கப்பட்டதும் அவள் ஆழ்மயக்கத்திற்கு சென்றுவிட, முழுவதாய் ஒரு மணி நேரத்திற்கு பின் பாவத்தைக் கடந்த வரமாய் பிறந்தான் அவன்..

வெளியில் அமர்ந்திருந்த பரத்தின் நடுக்கம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக் கொண்டே போக, மனக்கண்ணில் தேவியைத் திருமணம் முடித்த சூழல் படமாய் ஓடியது…

ஆட்டம் தொடரும்..

error: Content is protected !!