ரகசியம்
அந்த இடம் முழுக்க அலையோசையின் சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது.
உள்ளத்தின் உணர்வுகள் பொங்கி கொண்டிக்க, உதடுகள் பேச வார்த்தைகளின்றி ஊமையாய் கிடந்தன.
வீரேந்திரனின் விழிகள் கடலலைகளோடு சங்கமித்திருந்தாலும் அவன் மனம் அவளிடமே சங்கமிக்க தவித்திருந்தது.
ஆனால் அவள் முகத்தை பார்க்க இயலாத குற்றவுணர்வு. அவளின் காதலை தான் காயப்படுத்திவிட்டோமே என்ற வலி.
அவளுக்கு இக்கட்டான சூழ்நிலை வந்த போது அவள் உயிரை பொருட்படுத்தாமல் அரண்மனையையும் காப்பாற்றி தன்னையும் காப்பாற்ற யத்தனித்திருக்கிறாள் என்ற எண்ணமே அவனை வீழ்த்தியிருந்தது.
அவளோ தான் நேசித்த எதையுமே விட்டுகொடுக்க தயாராகயில்லை எனும் போது, தானோ காதலா கடமையா என்ற கேள்வியில், அவளின் காதலை ஓவ்வொரு முறையும் துச்சமாய் உதறிவிட்டு கடமையின் பக்கம் நின்றதை எண்ணி கொண்டான்.
அவனின் செயலை நியாயபடுத்த முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. மாறாய் அவளிடம் மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வு என்று எண்ணியவன் தயங்காமல் அதை செய்ய துணிந்தான்.
அவள் புறம் பார்வையை திருப்பியவனுக்கு அவள் உடைந்து போய் அமர்ந்திருப்பதை பார்க்க, இதயம் கனத்து போனது.
தன்னை அவள் மன்னிக்க கூடுமா? என்று சந்தேகத்தபடியே அவளை நெருங்கி அமர்ந்தான்.
அவள் அந்த கணமே தாமதிக்காமல் எழுந்து நின்று கொள்ள, அவளை விலகிச் செல்லவிடாமல் அவள் கரத்தை பற்றி நிறுத்தியவன்
“ஏ தமிழச்சி, சாரிடி… நான் உனக்கு தெரியாம அப்படி செஞ்சிருக்க கூடாதுதான்… உன்னை ஹார்ட் பண்ணனும்னு செய்யல… அந்த நேரத்தில… ஒரு சந்தேகத்திலதான் உன் கைரேகையை செக் பண்ணலாம்னு…” என்று தான் நினைத்ததை சொல்லி முடிக்க துணிவின்றி தன் வார்த்தைகளை அவன் விழுங்க,
“சரி… உங்க சந்தேகம் தெளிவாயிடுச்சா?” என்று அவனை திரும்பி பார்க்காமலே அவள் பளிச்சென்று கேட்டாள்.
அந்த கைரேகை ஒத்துப்போனதே. அவள் கொலை செய்யவில்லை என யூகித்தாலும் அது வெறும் யூகம்தானே !!
அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது ? என்று எண்ணியவன் அவள் கரத்தை விடுவித்துவிட்டு மௌனமாய் அமர்ந்திருந்தான்.
அவன் புறம் திரும்பியவள் “பதில் சொல்லுங்க வீர்” என்று திரும்பவும் அதே கேள்வியை கேட்கவும் கோபமானவன்,
“என்னடி பதில் சொல்ல சொல்ற ?… உன் கைரேகை அந்த கத்தியில இருந்த கைரேகையோட மேட்ச்யாயிடுச்சு… ” என்றான்.
அவன் சொன்னதை கேட்டு சற்றும் பதறாமல் “அப்புறம் ஏன் என்னை நீங்க இன்னும் அரெஸ்ட் பண்ணல ?!” என்று கேட்டாள்.
அதிர்ந்தபடி எழுந்து நின்றவன் “இப்ப என்ன உன் பிரச்சனை? நான் உன் கைரேகை செக் பண்ணதா… இல்ல அரெஸ்ட் பண்ணாம இருக்கிறதா !!”
“கைரேகை மேட்ச்சான பிறகும் என்னை நீங்க அரெஸ்ட் பண்ணாம இருக்கிறது” அவள் வார்த்தை தீர்க்கமாய் வெளிவந்தது.
அவன் புருவங்கள் முடிச்சிட்டு கொள்ள, குழப்பமாய் பார்த்தவனை
“நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல வீர்” என்றாள்.
அவன் யோசனைகுறியோடு “எப்படி பண்ணிட்டேன்?!” என்று கேட்டான்.
“உங்களை பத்தி இந்த உலகம் என்ன பேசும்… கொஞ்சமாவது யோசிச்சீங்களா ?!”
அவள் பார்வையும் பேச்சு வேறு திசையில் மாறி கொண்டிருந்தது.
“என்ன பேசும் ?” அவளை தலைசாய்த்து கேள்விகுறியோடு பார்த்தான்.
“கடமை கண்ணியம் கட்டுபாடுன்னு இருந்த ஏசிபி இராஜ வீரேந்திர பூபதியா இப்படின்னு பேசாதா ? !” என்று அவள் கேட்க
எரிச்சலடைந்தவன் “எப்படின்னு பேசிக்கும் ?… ஒழுங்கா புரியற மாதிரி சொல்லு” என்றான்.
“காதலுக்காக கடமையை விட்டு தந்திட்டீங்கன்னு” என்று உரைத்தவளின் முகத்தில் எட்டிப்பார்த்த புன்னகை இறுகி இருந்த அவன் மனதை நொடியில் தளர்த்திவிட்டது.
“அப்போ நீ கோபமா இல்லையா ?!”
“ஹ்ம்ம்ம்… கோபம்தான்… முதல்ல நீங்க சொன்னதை கேட்டதும் ரொம்ப கோபம் வந்துச்சு… ஆனா யோசிச்சி பார்த்தா… நான் ஏன் உங்க மேல கோபப்படனும்… நீங்கதான் என் மேல கோபப்படனும்… அந்த தர்மாவை நான் கொலை பண்ண முயற்சி பண்ணதாலதனே உங்களுக்கு தேவையில்லாத சங்கடம்… இது எல்லாமே என்னோட தப்புதான்… நீங்கதான் அப்படி பார்த்தா என்னை மன்னிக்கனும்” என்று தன் எண்ணத்தை தயக்கமின்றி தெளிவாய் சொல்லி முடித்தாள்.
அவள் தெளிவோடு தன்னிலையில் நின்று யோசித்திருப்பதை எண்ணி மனநிம்மதியடைந்தவன் அவனின் சந்தேகத்தை முழுவதுமாய் தீர்க்க எண்ணி அவளை கூர்ந்து நோக்கி “அப்போ நீ அந்த தர்மாவை கொலை செய்யலயா ?!” என்று கேட்டான்.
அவள் இயல்பான புன்னகையோடு “பரவாயில்லை ஏசிபி சார்… கரெக்ட்டா பாயின்ட்ட பிடிச்சிட்டீங்க” என்றாள்.
அவள் பார்வையில் இழையோடிய குறும்புத்தனத்தை ரசித்தவன்
எட்டி நின்றவளை தன் கரத்தால் பிடிக்க முயற்சி செய்ய அவள் பின்னோடு நகர்ந்தபடி “வேண்டாம் வீர்… என்ன கேட்கிறதா இருந்தாலும் அங்க நின்னே கேளுங்க… நான் பதில் சொல்றேன்” என்றாள்.
“ஏன்?”
“என்னால உங்க அனோகோன்டாகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்த்தை பட முடியாது… ஸோ அந்த பார்டரை தாண்டி நானும் வர மாட்டேன்…நீங்களும் வரக்கூடாது… பேச்சு பேச்சாவே இருக்கட்டும்” என்று அச்சப்பார்வையோடு குறும்புத்தனம் இழையோட உரைத்தவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அவளை இழுத்து அணைக்க கைகள் பரபரத்தாலும் அந்த எண்ணத்தை கட்டுக்குள் கொண்டுவந்தவன் தன் கைகளை கட்டியபடி “சரி கிட்ட வரல… இப்ப சொல்லு… உனக்கும் அந்த தர்மாவுக்கும் என்ன பிரச்சனை ?” என்று கேட்டான்.
தமிழும் அவன் எதிரே நின்றபடி நடந்தவற்றை விளக்க ஆரம்பித்தாள்.
“அவன் ஒரு சரியான கிரிமனல் வீர். நம்ம ஊரோட பழமையான சிலைகள் எல்லாம் வெளிநாட்டுக்கு கடத்திட்டிருக்கான்… இந்த மாதிரி எத்தனையோ சிலைகள் கடத்தப்பட்டிருக்கு… காணாம போயிருக்குன்னு தகவல் கிடைச்சது… ஸோ அதைபத்தி நானும் ஆதியும் டீடைல்ஸை கலெக்ட் பண்ணும் போது இது ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்க்கோட வேலைன்னும் அதுக்கு கைக்கூலியா இருக்கிறது இந்த தர்மான்னு தெரிய வந்தது… இதை பத்தி காஞ்சிபுரத்தில இருக்கிற கமிஷ்னர்கிட்ட கம்பிளைன்ட் கொடுத்தோம்” என்று சொல்லவும்
“கம்பிளைன்ட் கொடுத்தீங்களா?!” என்று வியப்பாய் பார்த்தான்.
“ஆமாம்… கொடுத்தோம்… பட் நாங்க கஷ்டப்பட்டு சேகரிச்ச எல்லா தகவலையும் அந்த தர்மாகிட்டயே கொடுத்திட்டான் அந்த கமிஷ்னர்”
“வாட் ?!” அவன் அதிர்ந்து கேட்க
“உங்க டிப்பார்ட்மன்ட்ல இந்த மாதிரியான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க.. ”
வீரேந்திரனால் அவளின் வாத்தை முழுமையாய் ஏற்க முடியவில்லை.
“எல்லா துறையிலும் சில தப்பானவங்க இருக்கதான் செய்வாங்க தமிழ்” என்று விட்டு கொடுக்காமல் உரைத்தவனை கோபமாய் முறைத்தாள்.
“இருப்பாங்கதான்… ஆனா அதெல்லாம் வேற… கிரிமினல்ஸை பிடிக்க வேண்டிய போலீஸ் டிப்பார்ட்மன்ட்ல இருக்கிறவங்களே கிரிமினல்ஸா இருந்தா? !!”
இதனை கேட்டு அவன் கோபம் எல்லை கடந்துவிட”நிறுத்துடி.. ” என்று அவன் கத்திவிட அந்த இடம் நிசப்தமாய் மாறியது.
அவனே மீண்டூம் “சொல்ல வந்த மேட்டரை மட்டும் சொல்லு… எங்க டிப்பார்ட்மன்ட் பத்தி தரைகுறைவா பேசிற வேலை வைச்சுக்காதே… அதுவும் நீ கண்டிப்பா பேசவே கூடாது” என்று சொல்லி நிறுத்தியவனை முறைப்பாய் பார்த்தவள் “அதேன்ன நான் பேச கூடாது ?!” என்று வினவினாள்.
அவன் கனலேறிய பார்வையோடு “ஏன்னா நான் உன் ஹஸ்பெண்ட்… நானுமே அதே டிப்பார்ட்மன்ட்ல இருக்கேன்… அப்படி நீ தப்பா பேசிறது என்னை தாழ்த்தி பேசிறதுக்கு சமம்…காட் இட்” என்று கண்டிப்பான பார்வையோடு உரைக்க அவனின் வார்த்தை அவளை ஆழமாய் பாதித்தது.
அவள் எதுவும் பேசாமல் நின்றுவிட, சில நிமிட அமைதிக்கு பிறகு அவனே நிதானித்து “எனக்கு உன் வலி புரியாமல் இல்லை தமிழ்… ஆனா நீ கொஞ்சம் யோசிச்சி பாரு.. எங்க டிப்பார்ட்மன்ட்ல நிறைய பேர் இராத்திரி பகல் பார்க்காம நாள் கிழமைன்னு இல்லாம தன்னோட தனிப்பட்ட சந்தோஷங்களை எல்லாம் விட்டுவிட்டு வேலை செய்றாங்க… எத்தனையோ மோசமான கிரிமினல்ஸை பிடிக்க போய் உயிர் தியாகம் பண்ணி இருக்காங்க… ஒரு சிலருக்காக எல்லாரையும் பொத்தாம் பொதுவா அப்படி குற்றம் சாட்ட கூடாது” என்றான்.
அவள் சொல்லும் வார்த்தையின் நியாயம் அவளுக்கு புரிந்தது.
“இனிமே நான் அப்படி பேசமாட்டேன்” என்றாள் மெலிதான குரலில்.
“சரி அதை விடு… அப்புறம் என்னாச்சுன்னு சொல்லு”
“அப்புறம் என்ன ? அந்த தர்மா எங்களை கூப்பிட்டு நிற்க வைச்சு எங்க கண்முன்னாடியே நாங்க அலைஞ்சி திரிஞ்சி கண்டுபிடிச்சி கொடுத்த எல்லா இன்ஃபார்மேஷன்ஸையும் ஒரே நொடியில எரிச்சிட்டான்… எந்தந்த கோவிலில் என்ன மாதிரியான சிலைகள் கடத்தப்பட்டிருந்துங்கிற மொத்த விவரமும் அதுலதான் இருந்துச்சு” என்று சொல்லி சோர்ந்து போக வீரேந்திரனும் அவளின் வேதனையை உணர்ந்து கொண்டான்.
அவளே தொடர்ந்தாள்.
“அந்த தர்மா ரொம்ப தப்பு தப்பா பேசிட்டான்… அதுவும் என்னையும் ஆதியும் மரியாதை இல்லாம பேசி இரண்டு பேரையும் வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிடுவன்னு சொன்னதும் என்னால தாங்க முடியல… ரொம்ப கோபம் வந்திருச்சு… டைனிங் டேபிளில் மேல இருந்த கத்தியை பார்த்ததும் அதை எடுத்து அவனை குத்திடனும்னு தோணுச்சு… ” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே இடைபுகுந்து “உடனே மேடம் அந்த தர்மாவை குத்தப் போயிட்டீங்க” என்று கேட்டு விழிகளை சுருக்கினான்.
அவள் பேசமுடியாமல் அழுத்தமாய் நிற்க, அவனே தொடர்ந்தான்.
“எப்பவுமே நாம செய்ய போற காரியத்தோட விளைவு என்னன்னு நீ யோசிக்கவே மாட்டியா… இன்னைக்கு கூட பாமை தூக்கிட்டு அஸால்ட்டா ஓடிற… என்னடி… உனக்கு அப்படி ஒரு அசட்டு தைரியம்… சுத்தி இருக்கிற யாரை பத்தியும் யோசிக்கிறதில்லை… தன்னை பத்தியும் யோசிக்கிறதில்லை” என்று அவன் கண்டிப்பான குரலில் அவளின் சினம் தூண்டப்பட்டது.
“ஏன் வீர்… ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க டிப்பார்ட்மன்ட் பத்தி தப்பா பேசிட்டேன்னு உங்களுக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு… பொண்டாட்டின்னு கூட பார்க்காம என்கிட்ட அப்படியே முறைச்சிட்டு நின்னீங்க… அதே கோபம்தான் எனக்கும்… என் பெண்மையையும் என் நாட்டோட பாரம்பரியத்தையும் ஒருத்தன் விற்கிறன்னு சொல்லுவான்… நான் கைகட்டி அவன் சொல்றதை எல்லாம் வேடிக்கை பார்த்திட்டிருக்கனும்… அப்படிதானே? !” என்றாள்.இந்த விளக்கம் வீரேந்திரனுக்கும் குத்தலாய் இருந்தது. தானும் அவள் நிலைமையில் நின்றாள் இப்படிதான் நடந்து கொண்டிருப்போம் என்று எண்ணி அமைதியானான்.
“ஏன் வீர் ?… இப்ப மாட்டிருக்கிற அந்த உமேஷ் அந்த சிலை கடத்தல் நெட்வொர்க்கோட தலைவனா ?!” என்று கேட்டாள்.
“இல்ல… அவனும் அந்த நெட்வொர்க்ல ஒருத்தன்… அவ்வளவுதான்… வேற யாரோ போட்டுத்தர திட்டத்தை அவன் செயல்படுத்திரான்” என்றதும் தமிழ் பேச முடியாமல் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அந்த உமேஷிடம் தான் பொக்கிஷத்தின் ரகசியம் குறித்த சொன்னது அந்த கூட்டத்திற்கு தெரிய வந்தால் திரும்பவும் வேறெதேனும் ஆபத்து நிகழ கூடுமோ என அவள் யோசித்திருக்க
அவள் முகத்தில் படிந்திருந்த கவலை ரேகையை பார்த்து “என்னாச்சு? !” என்று அவன் வினவினான்.
“இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு… அதை உங்ககிட்ட சொல்லனும்” என்று தயங்கியவளை அவன் கூர்ந்து நோக்கியவன் அவளிடம் “என்ன விஷயம்? ” என்று தெரியாதவன் போல் கேள்வி எழுப்ப அவள் “இங்கே வேணாம் வீர்… உள்ளே போய் பேசுவோமே” என்றாள்.
அவள் அந்த பொக்கிஷம் குறித்து பேசப் போகிறாளோ என்று சிந்தித்தபடி வர,
இருவரும் அரண்மனைக்குள் நுழைந்தனர்.
ஆங்காங்கே சிறு இரவு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.
“யார் லைட்ஸ்லாம் போட்டிருப்பா ?!” தமிழ் சந்தேகமாய் கேட்க,
“என்னடி கேள்வி இது? இங்கே வேலை செய்றவங்கதான்” என்றான்.
“அவங்களை எல்லாம் அந்த கடத்தல் கும்பல் அடிச்சி கட்டிப் போட்டு வைச்சிருந்தாங்க”
“அவங்க எல்லோரையும் காப்பாத்தியாச்சு… யாருக்கும் ஒண்ணும் இல்ல” என்று சொல்லும் போதே தமிழ் தன் அரண்மனையை சுற்றி பார்வையை படரவிட்டவள் தன் தாத்தாவின் நினைவு வர வருத்தமுற்றாள்.
அப்போது வீரேந்திரனை நெருங்கி வந்த வேலையாள் பவ்யமாய் நின்றபடி “வாங்க ஐயா” என்று வரவேற்றவன் “இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைச்சிருக்கேன்…” என்று சொல்ல வீரேந்திரன் வேண்டாமென தலையசைத்தான்.
அவன் வீரேந்திரனிடம் கைகட்டி நின்றபடி “ஐயா நீங்களும் அம்மாவும் கல்யாணம் முடிஞ்சி அன்னைக்கே அவசரமா கிளம்பி போயிட்டீங்க… இன்னைக்கு நீங்க வந்த நேரம் என்னென்னவோ அசாம்பாவிதம் நடந்து போச்சு… நாங்க எல்லோரும் ரொம்ப பயந்துட்டோம்… நீங்களும் அம்மாவும் இல்லன்னா” என்று தன் வருத்தத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்க வீரேந்திரன் இடைமறித்து
“அதெல்லாம் பத்தி விடுங்க… அதான் எதுவும் தப்பா நடக்கலியே” என்றான்.
அவன் வீரேந்திரனிடம் “ஆனா… பெரிய ஐயா அரண்மனையை இடிச்சிர போறதா பேசிட்டிருந்தாரே… அது உண்மையா? !” என்று சந்தேகமான பார்வையோடு கேட்க, தமிழின் செவியிலும் அவனின் கேள்வி துளையிட்டு வாட்டமுற செய்ய
வீரேந்திரனும் தன் மனைவியின் மாறிய முகபாவத்தை கவனித்தான்.
உடனே அந்த பணியாளனிடம் “அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது… நீங்க போங்க” என்று அவனை அனுப்பி வைத்தான்.
அதற்குள்ளாக தமிழ் அங்கிருந்த நேராய் நடந்தவள் திரும்பி வலது புற அறைக்குள் நுழைந்ததை கவனித்தவன் அவளின் பின்னோடு சென்றான்..
அந்த அறை அவனுக்கு பழைய நினைவுகளை முன்னிறுத்தியது.
அங்கே நின்றபடிதான் அவள் திருமணம் வேண்டாமென்று பிடிவாதமாய் சொல்ல, அவன் அவளை தாத்தாவின் கௌரவம் பற்றி சொல்லி பிடிவாதமாயய் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.
ஆனால் ரொம்பவும் குறுகிய நாட்களில் அவர்களின் உறவும் அதன் புரிதலும் வியப்புதான்.
அந்த எண்ணங்களை ஓட்டியபடியே அவள் புறம் திரும்ப, அவளோ சோர்ந்து படுக்கையில் அமர்ந்தபடி தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்.
அவளிடம் இத்தனை நேரமும் குடிக்கொண்டிருந்த உறுதியும் தைரியமும் தொய்வடைந்திருந்தது.
அவளின் மனவேதனை அவனுக்கு புரியாமல் இல்லை.
தன் தந்தை பேசிய வார்த்தைகளால் அவள் ரொம்பவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து அவள் அருகில் சென்று தலையை வருடி கொடுத்தான்.
அவனை நிமிர்ந்து நோக்கியவள் “இன்னைக்கு இந்த அரண்மனையை காப்பாத்தியாச்சு… ஆனா எப்பவுமே அப்படி முடியுமான்னு தெரியல” என்று சொல்லும் போதே அவள் உதடுகள் துடித்தது.
அவளின் பயத்தின் காரணத்தை அவள் சொல்லாவிட்டாலும் அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
வீரேந்திரன் அவள் அருகில் அமர்ந்து “நீ பயப்படவே வேண்டாம்… யாரும் இந்த அரண்மனை ஒண்ணும் பண்ண முடியாது… நான் இருக்கேன் உன் கூட.. சரியா ?!” என்று அழுத்தமாய் அவன் கூறவும், அவன் தோள் மீது ஆதரவாய் சாய்ந்து கொண்டவளுக்கு அவள் தாத்தா இதே அரண்மனையில் நின்றபடி அவளுக்கு வரப் போகும் கணவனை குறித்து சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
‘என் தமிழச்சியை கட்டிக்க ராஜா மாதிரி ஒருத்தன் வருவான். அவன் இந்த தாத்தாவை போல உன்னை தங்கமாய் வைச்சி தாங்குவான் பாரு’ என்று அவர் சொன்னதை எண்ணியவள் ‘நீங்க உண்மையிலேயே தீர்க்கதரிசிதான் தாத்தா’ என்று மனதில் எண்ணி வியந்து கொண்டாள்.
அதே நேரம் வீரேந்திரனுக்கோ மனைவியின் நெருக்கம் மனதை சலனப்படுத்த அன்று முழுவதுமாய் அவளை தேடி தேடி அலைந்த அவன் தவிப்பும் ஏக்கமும் அவன் உணர்வுகளை எழுப்பிவிட, சாய்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் கடல்காற்றில் அலைபாய்ந்து கலைந்திருந்த அவள் கூந்தலை வருடி காதினோரம் ஒதுக்கிவிட்டான்.
அவளின் செவ்விதழ்களை பார்த்து கிறக்கம் கொண்டு நெருங்கி வந்தவனின் எண்ணம் புரிந்தவளாய் பெண்ணவள் அவசரமாய் விலகி நின்று கொண்டாள்.
அவளின் அந்த விலகல் அவனை வாட்டிவதைத்தது.
கொஞ்சம் கோபத்தோடும் தவிப்போடும் அவள் மீது அவன் பார்வையை பதிக்க,
அவனின் உணர்வுகளை காயப்படுத்த வேண்டுமென்பதல்ல அவள் எண்ணம்.
அவன் அந்த முத்தத்தை வழங்கிவிட்டால் பின் தன் உணர்வுகளோடு கட்டுண்டு மீண்டு வரமாட்டான். அதே சமயம் அவளையும் மீட்சி அடையவிடமாட்டானே!
பின் அவள் சொல்ல வந்ததை எங்கனம் உரைப்பது என்றெண்ணியவள்
மௌனமாய் அமர்ந்திருந்தவனிடம்
“மறந்திட்டீங்களா வீர்…. நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு சொன்னேனே…” என்று அவனுக்கு நினைவுப்படுத்தினாள்.
ஆம் மறந்துதான்விட்டான். அவளருகில் அவனின் எண்ணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாய் தள்ளப்பட்டுவிடுகிறது.
சகலமும் அவளாகவே நின்றிருக்க தன் கிறக்கத்திலிருந்து மெல்ல சுதாரித்தவன்
“ம்ம்ம்… சொல்லு” என்றான்.
தான் அவனருகில் நின்றால் அவனை சலனப்படுத்த கூடுமோ என எண்ணி இன்னும் தள்ளிவந்து நின்று கொள்ள, அவள் விலகிச் செல்ல செல்ல அவனின் காதலும் காமும் கட்டுக்கடங்காமல் போகும் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.
எங்கிருந்து தான் சொல்ல நினைத்ததை தொடங்குவது என யோசித்தவள் பின் தீர்க்கமான பார்வையோடு அவனை நோக்கி “வீர்… நீங்க தர்மா வீட்டில பார்த்த ஓவியங்கள் இருக்கு இல்ல… அது… எல்லாம் எங்க முன்னோர்களோட வரலாறு” என்றாள்.
“ஹ்ம்ம்ம்… கேள்விப்பட்டேன்… ரகு இதை பத்தி சொன்னான்…”
“ரகுதான் முதல்ல அந்த ஓவியத்தை என்கிட்ட போஃன்ல காண்பிச்சி இதை பத்தி தெரியுமான்னு கேட்டான்… அப்பதான் தர்மா ஏன் இதைபத்தி ரிசர்ச் பண்ணனும் டௌட் வந்து, நான்தான் ரகுவை கன்வின்ஸ் பண்ணி தர்மா வீட்டிற்கு அழைச்சிட்டு போகச் சொன்னேன்” என்றாள்.
இதை கேட்டு அவன் கோபமாய் முறைக்க
தமிழ் அவன் பார்வையை கவனித்து “இப்ப ஏன் முறைக்கிறீங்க… அந்த டைம்ல உங்ககிட்ட அனுமதி கேட்கிறளவுக்கு எனக்கு தைரியம் இல்ல” என்றாள்.
“உனக்கு தைரியம் இல்ல… ஆனா திருட்டுத்தனம் பண்ண மட்டும் தைரியம் இருக்கு”
அவள் சலிப்புற்று “இப்ப நான் வந்த விஷயத்தை சொல்லவா வேண்டாமா ?” என்று கேட்க அவனும் அதே உணர்வோடு “சொல்லு” என்றபடி சௌகர்யமாய் அமர்ந்து கொண்டான்.
“தர்மா வீட்டில போய் அந்த ஓவியத்தை பார்த்துட்ட பிறகு அங்கிருந்த புக் ரேக்ஸை பார்த்தேன்… அதுல ராஜசிம்மன் வரலாறுன்னு போட்டிருந்த டைரியை பார்த்ததும் அப்படி என்ன அந்த தர்மா… ராஜசிம்மன் பத்தி ரிசர்ச் பண்ணி இருப்பாருங்கிற ஆர்வத்தில ரகுவுக்கு தெரியாம அந்த டைரியை எடுத்திட்டேன்” என்றாள்.
“எடுத்திட்டேன்னு சொல்ல கூடாது… சுட்டுட்டேன்னு சொல்லனும்”
“ஆமாம் சுட்டுட்டேன்… இப்ப என்ன பண்ணணும்ங்கிறீங்க”
“ம்ம்ம்… ஒண்ணும் இல்ல… நீ மேல சொல்லு” என்றபடி பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்தான்.
அவள் மேலே சொல்ல தொடங்கினாள்.
“சுனாமியின் போது வெளியே வந்த எங்க கோவிலோட மண்டப சுவர் அந்த தர்மா கண்ணில பட்டிருக்கு… அதிலிருந்த கல்வெட்டை ரிசர்ச் பண்ணி ரொம்ப வருஷம் படாதபாடுபட்டு அந்த கோவில் எங்க இருந்தது… என்னன்னு கண்டுபிடிச்சிருக்கான்… இதுக்காகவே அந்த தர்மா காஞ்சிபுரத்தில வந்து தங்கியிருக்கான்”
“அந்தளவுக்கு தர்மா ஏன் ராஜசிம்மன் வரலாறை ஆராய்ச்சி பண்ணனும்… அப்படி என்ன ரகசியம் ?!”
“ரகசியம்தான்… அது இந்த சிம்மவாசலில் ராஜசிம்மன் கட்டின ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ரகசியம்”
“அந்த தர்மா வீட்டில இருந்த கோவிலோட ஓவியமும் அந்த சிலையோட ஓவியமா ?!”
“ஆமாம்… அதேதான்… அந்த முதல் ஓவியம்ல கடற்கரை பக்கத்தில நிறைய கப்பல் இருக்கிறது, சிம்மவாசல்… ராஜசிம்மன் காலத்தில பெரிய துறைமுகமா இருந்ததை சொல்லுது… இந்த கடற்கறையில அப்போ பொன்னும் பொருளும் குவிஞ்சி கிடக்குமாம்…
கடற்கரை முழுக்கவும் பெரிய பெரிய பாய் மரக்கப்பல்கள் நிற்குமாம்… பல தேசங்களில் இருந்து வணிகர்கள் அவங்க பொருட்களை விற்கவும் வாங்கவும் வருவாங்கன்னும் சொல்லப்பட்டது… இந்த மாதிரியான கப்பல் பயணங்களில நிறைய ஆபத்து இருக்கும்.. கடற்கொள்ளையர்… புயல்… பேரலை… இந்த ஆபத்துகளுக்கு பயந்து
அங்கே வர வணிகர்கள் சேர்ந்து ராஜசிம்மன் உதவியோட நிர்மானிச்சதுதான் அந்த கோவில்… அந்த இரண்டாவது ஓவியம்…
அப்புறம் அந்த மூணாவது ஓவியம்… அந்த கோவிலுக்குள் இருந்த ராஜ ராஜேசுவரி அம்மனோட ராஜகம்பீரமான சிலை… அதுவே ஒரு பிரமாண்டம்… அந்த சிலை உயரமா கம்பீரமா இருந்திருக்கும்னு எங்க தாத்தா சொல்வாரு….
அந்த கோவிலோட சிறப்பே அந்த பிரமாண்டமான சிலையோட ராஜசிம்மன் செஞ்சி வைச்ச கீரீடம்தான்… மே பீ அந்த தர்மா வரைஞ்ச கடைசி ஓவியம்… அந்த கீரிடமா இருக்கலாம்… அதைதான் அந்த உமேஷ்… தர்மாவை கொன்னுட்டு அவன் வீட்டில இருந்து எடுத்திருக்கனும்”
“அப்போ அந்த கடைசி ஓவியம் அந்த கீரிடம்தான்னு சொல்ல வர்றியா ?!”
“அப்படிதான் இருக்க முடியும்… எங்க அரண்மனையில அந்த அம்மன் சிலையோட ஓவியம் இருக்கு… அதுல அந்த கீரிடமும் இருக்குமே… அதை பார்த்து வரைஞ்சிருக்கலாம்”
“ஓ… ஆனா நான் அந்த கடைசி ஓவியம் உங்க அரண்மனையா இருக்கும்னு நினைச்சேன்…”
“தெரியல… அதுவும் இருக்கலாம்” என்றவளை ஆவலோடு பார்த்தவன் “அந்த கீரிடத்துக்காகதான் அந்த கும்பல் உன்னை கடத்தினாங்களா ?!”
“ஆமாம் வீர்… அந்த கீரிடத்தில பல நாட்டு விலைமதிப்பான ரத்தினங்கள் பதிச்சிருக்கு… அந்த கீரிடத்தோட அந்த ராஜகம்பீரமான சிலை பார்க்க அத்தனை தேஜஸா இருக்குமாம்… அது அந்த கோவில் கல்வெட்டிலயும் பொறிக்கப்பட்டிருந்துச்சுன்னு தர்மாவோட டைரியை வைச்சி தெரிஞ்சிக்கிட்டேன்…
அதுவும் அம்மனோட அந்த கீரிடத்தில இருந்து வர ஒளி அந்த கடலையே பிரகாசிக்க செய்யும்னு வர கப்பல்களுக்கு வழிகாட்டின்னும் போட்டிருந்துச்சு… ஆனா அதுக்கு அர்த்தம்… அது வெறும் கோவிலா மட்டும் இல்லை…
கலங்கரை விளக்கம் மாதிரி பெரிய கடல் பாறை மேல உயரமான கோபுரமா கட்டப்பட்டதுதான்… அந்த கோவில் உச்சி கோபுரத்தில விறகுகள் எல்லாம் அடுக்கி ஜோதி ஏத்தி வைச்சிருக்க, அதோட பிரகாசம்தான சிம்மவாசலுக்குள் நுழையற கப்பலுக்கு வழிகாட்டியா இருந்துச்சு…
அதுவும் இல்லாம அந்த கீரிடத்தை பார்த்தாலே அந்த அம்மன் சிலை எத்தனை பெரிசா இருக்கும்னு நமக்கு புரியும்… ஆனா அதை தரிசக்கிற பாக்கியம் எல்லாம் நமக்கில்ல தமிழச்சினு எங்க தாத்தா சொல்லி வருத்தப்படுவாரு..”
“ஏன் ? அந்த கோவிலுக்கு என்னாச்சு ?!”
“அந்த கோவில் நாளடைவில கடல்நீர் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிடுச்சு… அப்போ அந்த கோவிலை காப்பாற்ற ஏதோ ஏதோ செஞ்சி தடுப்பரணெல்லாம் அமைச்சி கோவிலை காப்பாத்த முயற்சி பண்ணாங்க… ஆனா ஒண்ணும் யூஸ் இல்ல… ஒரு பெரிய பேரலையில கோவிலோட கோபுரம் சிதிலமடைஞ்சிடுச்சு… சிலையும் கடலுக்குள்ள மூழ்கிடிச்சாம்… அந்த கோவிலோட ஞாபகமா மிச்சமிருக்கிறது அந்த கீரிடம் மட்டும்தான்… எவ்வளவு கஷ்டநஷ்டத்திலயும் ராஜசிம்மன் வாரிசுகள் அந்த கீரிடத்தை ரொம்ப பத்திரமா பாதுகாக்க வைச்சிருந்தாங்க… ” என்றாள்.
அவள் சொல்லி முடித்ததை கேட்டுவிட்டு வீரேந்திரன் மௌனமாயிருக்க தமிழே மேலும் தொடர்ந்தாள்.
“அதுக்கப்புறமும் அந்த மாதிரியான சிலை அமைக்க முயற்சி எல்லாம் நடந்துச்சு.. இராஜஇராஜேஸ்வரி அம்மனுக்கு நகரத்தில ஒரு கோவில் அமைச்சாங்க… ஆனா அந்த சிலை அந்த கீரிடத்தோட பொருந்தி போகவே இல்ல… அதனாலயே தாத்தா எப்பவும் என்கிட்ட கடலை காண்பிச்சி இங்கதான் நம்ம குலதெய்வம் இருக்குன்னு சொல்லுவாரு”
அவன் யோசனைகுறியோடு எழுந்து நின்றவன் “சரி … அந்த கீரிடத்தை எங்க வைச்சிருக்க ?!” என்று கேட்க தமிழ் யோசனையில் ஆழ்ந்தவள் பின் அவனை நிமிர்ந்து பார்த்து”என் ரூம்லதான் வைச்சிருக்கேன்” என்றாள்.
“உன் ரூம்லன்னா… நீ நிறைய கோவில் போட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிருக்க… அங்கதானே !”
அவள் புருவங்கள் சுருங்க வியப்பின் உச்சிக்கே சென்றாள்.
இதுவரை யாருமே கண்டறியாத விஷயம் இவனுக்கு மட்டும் எப்படி புலப்பட்டிருக்கும் என அவள் யோசித்திருக்க வீரேந்திரன் அப்போது அவளின் அருகாமையில் நின்றிருந்தான்.
அவன் அவளிடம் “எனக்கு எப்படி தெரியும்னுதானே யோசிக்கிறியா” என்று கேட்க அவள் வியப்பில் இரூந்து மீளாதவளாய் தலையை மட்டும் பொம்மை போல அசைத்தாள்.
அவளுக்கு மட்டுமான மெலிதான குரலில் “நான் அந்த போட்டோஸ் எல்லாம் உடைக்கும் போது நீ கோபப்படாம பயந்தியே… உன் கண்ணில எதையோ மறைக்கிற தவிப்பு… நான் அன்னைக்கு அதை கவனிச்சேன் தமிழச்சி” என்றதும் அவள் அதிர்ந்து அவனை நோக்க “அதுக்குள்ள ஷாக்காயிட்டா எப்படி ?! நான் முழுசா சொல்லி முடிச்சிரேன்” என்றான் காந்தமான புன்னகையோடு!
அவள் விழிகளோ பதட்டத்தை நிரப்ப, அப்போதுதான் அவள் தவிப்பு புரியாமல் அவன் அவளை நெருங்கி தன் விரல்களால் வருட, அவனின் இன்னொரு கரம் அவளின் இடையை வளைக்க முயல அவனை தடுக்க முடியாமல் விழிகளை மூடிக் கொண்டு, இன்னும் அவன் எதையெல்லாம் கவனித்திருப்பான் என்று யோசித்திருக்க அவன் சன்னமான குரலில் அவள் காதோரமாய் நெருங்கி “பாரதியாரோட கண்ணில சென்ஸார் டிவைஸ் வைச்சிருக்க இல்ல… என்ன மூளைடி உனக்கு ?!” என்று அவன் சொல்லிமுடிக்க அவள் அவசரமாய் விழிகளை திறந்தாள்.
அவன் மேலும் “அந்த டிவைஸை கவனிச்ச பிறகுதான் கெஸ் பண்ணேன்…ஸம்திங் இஸ் தேர்…அதுல இருந்து சிக்னல் நேரா இருக்கிற அதோட இன்னொரு டிவைஸ் கூட கான்டெக்ட் பண்ணும் போது அலார்ம் அடிக்கும்… ஆர் எல்ஸ் உன் போஃன்ல அலர்ட் டோன் வரும்…. கரெக்டா”
அவள் குழப்பமாய் “வீர்… இதெல்லாம் நீங்க எப்போ பார்த்தீங்க… ஏன் என்கிட்ட கேட்கல ?” என்றவளை கூர்ந்து நோக்கியவன் “நீ கேட்டா சொல்லிடுவியா… அதான் அன்னைக்கு அந்த போட்டோஸை உடைச்சி பார்த்தேன்… முதல்ல நீ பயந்துட்டு… அப்புறமா நீ உடையுங்கன்னு தைரியமா சொன்னதும் திரும்பியும் என் கெஸ் தப்போன்னு தோணுச்சு… அதான் அந்த விஷயத்தை பத்தி பேச முடியல !”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல… ஆனா இப்போ என் பயமும் கவலையும் அந்த உமேஷ்கிட்ட நான் இதை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்… “
“ஸென்ஸார் டிவைஸ் பத்தியுமா ?!” பதட்டத்தோடு கேட்டான்.
“இல்ல அதை பத்தி சொல்லல”
“அப்படின்னா நிச்சயம் அந்த பொக்கிஷத்துக்கு ஒரு ஆபத்தும் வராது……. ஆனா இதை பத்தி உங்க வீட்டில இருக்கிறவங்க யாருக்காவது”
“தெரியாது வீர்… இது வரைக்கும் சொல்லல”
“ஏன் ?”
” எங்க அப்பா எக்கச்சக்கமா கடன் வாங்கி வைச்சிருக்காரு… இதை பார்த்தா அவர் என்ன யோசிப்பாரோ… அதுவும் இல்லாம ரவிக்கும் சித்திக்கும் எங்க பாரம்பரியமான நகைகள் மேலே கண்ணு.. இந்த கீரிடத்தை பார்த்தா சும்மா விடுவாங்களா… தேவியோ சின்ன பொண்ணு… நான் யார்கிட்டன்னு இதேல்லாம் ஷேர் பண்ணிக்க முடியும்” என்றவளை வீரேந்திரன் வியப்புகுறியோடு பார்த்தான்.
அவளின் தைரியம் புத்திசாலித்தனம் சமயோசிதம் வீரம் மற்றும் அவள் குடும்பத்தின் மீதும், நட்பின் மீதும், காதலின் மீதும், தாய்மொழியின் மீதும், தன் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட பற்றுதல் என அவள் அவனை ஒட்டுமொத்தமாய் வியப்பில் ஆழ்த்திவிட்டாள்.
இப்படியும் ஒரு பெண் அனைத்து சிறந்த
குணங்களும் ஒரு சேர இருக்க முடியுமா
என்று திகைப்புற்றவனிடம் “என்ன வீர் ? என்ன யோசிக்கிறீங்க” என்று கேட்டவளின் கரத்தை அழுந்த பற்றி தன்னருகில் இழுத்து அணைத்து கொண்டான்.
“சொல்றதை கேளுங்க வீர்… டைமாயிடுச்சு தூங்கி ரெஸ்ட் எடுங்க… நாளைக்கும் அப்புறம் ஏதாவது வேலை வந்திரும் பரபரன்னு ஓடிடுவீங்க” என்று அக்கறையோடு உரைக்க
“நான் படுத்தா மட்டும் நீ என்னை தூங்க விட்டிருவியா… “
“என்னது ? நான் உங்களை தூங்க விடமாட்டிறனா”
“பின்ன… நீதான் தினைக்கும் ஏதாவது கனவு கண்டுட்டு என் காதில வந்து கத்தி… எழுப்பி விட்டிர… தெரியுமா ?!”
அவள் யோசித்துவிட்டு முடிவாய் “அப்படின்னா நான் பக்கத்துல ரூம்ல போய் படுத்துக்கிறேன்… நீங்க நிம்மதியா தூங்குங்க” என்றதும் அவன் சினத்தோடு
“நீ மட்டும் இந்த ரூம் வாசலை தாண்டிப் பாரேன்.. கொன்றுவேன்”
“சரி இப்ப நான் என்னதான் பண்ணட்டும்” எரிச்சல் உணர்வோடு கேட்க
“அதென்ன ? ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட வந்து கெஞ்சனுமா… எனக்கு என்ன வேணும்னு மேடமுக்கு தெரியாதோ ?!” என்றதும் அவள் யோசனையோடு நின்றாள்.
வீரேந்திரன் அவள் காதோடு நெருக்கமாய் வந்து கிசுகிசுத்தான்”அந்த மிஸ்ஸான கிஸ்ஸிங் சீனை ரீப்பிளே பண்ணுவோமா ?!” என்று சொல்லவும் அவள் பதறியபடி
“என்னது ?… உம்ஹும் முடியவே முடியாது…” என்று விலக யத்தனித்தவளை அவன் இன்னும் இறுக்கமாய் அணைத்து கொண்டான்.
“ஒரு கிஸ்… அதுக்கு ஏன்டி இவ்வளவு டென்ஷன்”
“நீங்க இப்படி டவர் மாதிரி வளர்ந்து நின்னுக்கிட்டு என்னை இப்படி டார்ச்சர் பன்றீங்களே… அக்யூஸ்டுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா… எல்லாரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவீங்களா?!”படபடவென பொறிந்து தள்ளினாள்.
அவன் கோபமாக “உனக்கு வாய் அடங்கவே அடங்காதா… நீ இப்படிதான் அந்த கடத்தல் கும்பல்கிட்டயும் எகத்தாளமா பேசியிருப்ப… அதனாலதான் உன்னை ரூம்ல வைச்சி பாம் வைச்சானுங்க போல” என்று சொல்லி சிரிக்க அவள் கோபமானாள்.
“ஹெலோ… பாம் அவனுங்க எனக்காகவோ அரண்மனைக்காகவோ வைக்கல… உங்களை டார்கெட் பண்ணதான் வைச்சாங்க… இது தெரியாம நீங்க என்னை கலாய்க்கிறிங்களாக்கும்”
“சும்மா சொல்லாதே.. என்னை டார்கெட் பண்ணியிருந்தா… அவன் என்னைத்தானே கடத்திட்டு போகனும்”
“சிங்கத்தை கூண்டில அடைக்க யாராவது நேரா அதை கடத்துவாங்களா ?! அதோட இரையை வைச்சா அது தானே கூண்டுக்குள்ள வந்திர போகுது”
அவன் வாய்விட்டு சிரித்தபடி “அப்போ நீதான் என்னோடஇரை… இல்ல”
“நான் ஒரு எக்ஸேம்பிளுக்கு சொன்னேன்” என்று அழுத்தி சொல்ல
“ஆனா நீ சொன்னது சிட்டுவேஷனுக்கு… எக்ஸேக்டா பொருந்தி போச்சு”
என்றான்.
அவனே அவள் முகத்தை நிமிர்த்தி “வளவளன்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே…” என்று உரைக்க
“ஏன் இப்படி நீங்க அடம்பிடிக்கிறீங்க வீர்”
“நீயும்தான் அடம்பிடிக்கிற”
“விழுந்தா அடியும் வலியும் எனக்குதானே”
“விழமாட்டடி.. என்னை நம்பு”
“அது சரி… இப்போ உங்க போஃன் எங்க”
“அது சார்ஜ் இல்லாம ஸ்விட்ச்ட் ஆஃப்… போதுமா ?!”
“நிஜமாவா?!”
“அடியே தமிழச்சி… இதுக்கு மேல எனக்கு பொறுமையில்லை” என்று உரைத்தவன் தன் கரத்தால் அவளின் இடையில் தன் கரத்தை அழுத்தமாய் பதித்தான்.
அதற்கு மேல் அவனை சமாதானம் செய்ய கடினம் என எண்ணியவள்
வேறுவழியின்றி மிரட்சியோடு அவனை கெட்டியாய் தாங்கி கொண்டு அவன் இதழ்களை நெருங்க, அவன் ரசனையோடு அவளையே ஏக்கத்தோடு பார்த்திருந்தான்.
அவளை ஆழமாய் ஊடுருவி பார்த்தவனுக்கு அவள் நெருங்கும் வரையிலான பொறுமையில்லை. அவன் தன்வசம் இழந்தான் என்றே சொல்ல வேண்டும்.
அவளின் இதழின் அமுதை சுவைக்க காத்திருக்க முடியாமல் அவள் எம்பி நிற்கும் போதே தன் ஒற்றை கரத்தால் அவள் இடையை வளைத்து தூக்கி கொள்ள அந்தரத்தில் நின்றது அவள் கால்கள்.
அவள் “வீர்” என்று சத்தமிட அவனோ அடுத்த நொடியே அவள் இதழ்களை சிறையெடுத்து கொண்டான்.
அவளை தேடிய ஒவ்வொரு கணமும் அவள் மீதான காதல் அவனுக்குள் தீயாய் பரவிகிடக்க, அவளின் இதழ்களின் ஈரத்தால் குளிர்வித்திட எண்ணினானோ ?!
அவள் மெல்லிய இடையை வன்மையாகவே பற்றியபடி, அவளின் தாமரை இதழ்களில் இணைந்து சில நொடிகள் அப்படியே ஆழ்ந்துகிடந்தான்.
காற்றுக்கும் வழிவிடாமல் அவனோடு இறுக்கமாய் உறவாடி கொண்டிருந்த அவள் தேகத்தை விலக்கிவிட மனமில்லாமல், அவளை தூக்கிகிடந்தவன் அந்த முத்தத்தை நீட்டித்து கொணடிருக்க, அவனின் முத்தத்தில் பாய்ந்த மின்னல்கீற்றில் அவள் மொத்தமாய் செயலிழந்தாள்.
ஒரு நிலையில் அவன் உணர்வுகள் தன் எல்லையை கோட்டை கடந்துவிட, அவளை அப்படியே தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினான்.
அவனின் ஒவ்வொரு அணுவிலும் அவளே நிலைபெற்றிருக்க, இனி கண நேரமும் தன்னைவிட்டு அவள் பிரியும் வாய்ப்பை அவன் தருவானா ? உணர்வுகளை கடந்து உயிரோட்டமாய் அவளோடு கலந்துவிட்டான்.