VNE 43(2)

VNE 43(2)

“நீ ரொம்ப கோபப்படுவ ஷ்யாம்…” என்று தயங்கினாள்.
“எனக்கு இப்பத்தான் ரொம்ப கோபம் வருது… இப்படியொரு முட்டாளா இருக்கியே…” என்றவன், அவளிடம் மேலும் தர்க்கம் செய்யாமல் கிளம்ப எத்தனித்தான். டைனிங் ஹாலிலிருந்து வெளி ஹாலுக்கு வந்தவனை நிறுத்தி,
“அவனை எதுவும் பண்ணிடாத ஷ்யாம்…” என்று அவனை தடுத்தாள் மஹா.
“ஏன்டி அவன் என்னை ஊரெல்லாம் அசிங்கப்படுத்தி இருக்கான்… அவனை ஒன்னும் பண்ணாதன்னு சொல்ற?” அதீத கோபத்தில் கொதித்தான் ஷ்யாம்.
பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு மொழி புரியாத படத்தை பார்த்தது போலத்தான் இருந்தது.
“நீ அவனுக்கு ஏதாவது பண்ண, பதிலுக்கு அவன் ஏதாவது பண்ண… ஒரு என்ட் கார்டே இல்லையா இதுக்கு?” என்று மஹா பதிலுக்கு கொதித்தாள்.
“என்ட் கார்ட் தானே… போட்டுடறேன்…” என்றவனின் குரலில் அத்தனை வன்மம், பார்வையில் வெப்பம்!
“ஷ்யாம் ப்ளீஸ்…” எனும் போதே, அவளுடைய செல்பேசி அழைத்தது.
விஜய் தான் அழைத்தான்.
மெளனமாக மகாவை பார்த்தான் ஷ்யாம்.
அவள் தவிப்பாக இவனை பார்க்க, செல்பேசி அழைத்துக் கொண்டே இருந்தது.
ஸ்க்ரீனிலிருந்த பச்சையத்தை இழுத்து விட்டான்.
மகாவின் முகம் திகிலடைந்தது. அந்த விஜய் எதையாவது பேசி வைத்துவிட போகிறான் என்ற பயம் உள்ளுக்குள் கவ்வியது!
“என்ன மஹா… மேரேஜை நிறுத்திட்டியா?” என்று அவன் கேட்க, ஷ்யாம் உக்கிரமாக அதை கேட்டபடி மெளனமாக இருந்தான். ஒருமையில் அவன் பேசுவதை கேட்கும் போது அத்தனை எரிச்சலாக இருந்தது.
“மஹா… இப்ப பேச போறியா? இல்லைன்னா இன்னும் ரெண்டு பிக்ஸ ட்விட்டர்ல அப்லோட் பண்ணட்டா?” என்று சாதாரணமாக கூறிக்கொண்டு போக,
“விஜி…” என்று இவன் அழுத்தமாக அழைக்க, அந்த பக்கத்தில் விஜய் மௌனமாகினான்.
“என்னடா மஹா ன்னு பேர் சொல்ற? தொலைச்சுடுவேன்… யார்ன்னு நினைச்ச? மிசஸ் ஷ்யாமள பிரசாத். அதை ஞாபகத்துல வெச்சுக்க…” என்று நறுக்கியவன், இடைவெளி விட்டு, “அப்லோட் பண்ண போறியா? முடிஞ்சா செய்டா… பார்க்கலாம்…” என்றவனை பயமாக பார்த்தாள் மஹா.
“நான் செய்றது இருக்கட்டும் பாஸ்… உங்க கூட இருந்தாளே சௌஜன்யா… ப்ச்… உங்களுக்கு தான் அவ பேர் ஞாபகத்துல இருக்காது இல்லையா… அவ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா… அது தெரியுமா உங்களுக்கு?” என்று சிரித்துக் கொண்டே கூற, ஷ்யாம் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற?” என்று அதே அதிர்வோடு கேட்க,
“எஸ்… அட்டெம்ப்ட்டட்… உங்க ஹாஸ்பிடல்ல தான் இருக்கா… இது கூட தெரியலையா பாஸ்?” என்று கேட்க,
“டேய்… எதுவா இருந்தாலும் உனக்கும் எனக்கும் தானடா… ரொம்ப கேவலமா இருக்கு விஜி, நீ செய்றது…”
“அப்படீனா நீங்க எனக்கு பண்ணினது?” என்று கேட்க,
“நம்பிக்கை துரோகி…” என்று கொதித்தவன், சற்று இடைவெளி விட்டு, “விஜி… யூ ஆர் ஃபினிஷ்ட்… கவுன்ட் யுவர் டேஸ்…” என்று வெப்பமாக கூற,
“கவுன்ட் யுவர் ஹவர்ஸ் பாஸ்… சௌஜன்யா, அவளோட தற்கொலைக்கு காரணம் நீங்க தான்னு மரண வாக்குமூலம் கொடுத்தான்னா உங்க சேப்டர் க்ளோஸ்ட்… அதை அவ செய்வா… ஏன்னா அவளை ட்விட்டர்ல எக்போஸ் பண்ணது நீங்கதான்னு நம்பறா…” என்று அலட்டிக் கொள்ளாமல் கூற, ஷ்யாமின் கோபம் சிகரம் தொட்டது.
“இப்படியொரு துரோகிய நான் பக்கத்துல வெச்சுட்டு இருந்து இருக்கேன்…” என்றவன், “முடிஞ்சா அவளை அப்படியொரு வாக்குமூலம் கொடுக்க வை விஜி… அப்படியே கொடுத்தாலும் அது எனக்கு சாதாரணம்… அது என்னை பாதிக்காது… ஆனா உனக்கு நான் கொடுக்கற பனிஷ்மென்ட் இருக்கு பாரு…” என்று நிறுத்த,
“என்ன பாஸ் பண்ணுவீங்க?” என்று ஏளனமாக கேட்டவன், “மிஞ்சி மிஞ்சி போனா போட்டுத் தள்ளுவீங்க?” என்று அசராமல் கூற,
“நோ விஜி… நாட் அட் ஆல்… உன்னை போட்டுத் தள்ளிட்டா அது ரொம்ப ஈஸி… பொட்டுன்னு போய்டுவ… ஆனா நான் உனக்கு கொடுக்கற பனிஷ்மென்ட் நீ கனவுல கூட நினைக்காத பனிஷ்மென்ட்டா இருக்கும்…”
அழுத்தம் திருத்தமாக கூறியவனின் தொனி மகாவை மட்டுமல்ல… அங்கிருந்த அத்தனை பேரையும் திகிலடைய செய்தது.
“என்ன மச்சான்? என்ன பிரச்சனை?” என்று கார்த்திக் கேட்க, மஹாவை உறுத்து பார்த்தவன்,
“சௌஜன்யா சூசைட் அட்டம்ப்ட் பண்ணிட்டாளாம்…” என்று கூற, மஹா அதிர்ந்து பார்த்தாள்.
“வாட்…” கார்த்திக் இன்னமும் அதிர்ந்தான். அவன் அறிவான். சௌஜன்யாவின் படங்கள் பகிரப்பட்டதை! ஒருவேளை இதில் சம்பந்தப்பட்டது… என்று அடுத்து யோசிக்க பயந்து ஷ்யாமை பார்த்தான். மகாவின் குழப்பத்திற்கு ஏதோ விடை கிடைப்பது போல தோன்றியது. ஆனால் வெளிப்படையாக பெரியவர்களை வைத்துக் கொண்டு பேசுவது உசிதமல்ல… இத்தனை நேரம் நடந்த வாக்குவாதமும் இதற்காகத்தான் இருக்கும் என்பதை ஊகித்தான்.
“ம்ம்ம்… எஸ்…” என்றவன், ஜோதியின் புறம் திரும்பி, “ம்மா… எனக்கு கொஞ்சம் அர்ஜன்ட் வேலை இருக்கு… நீங்க காஞ்சீவரம் போயிட்டு வாங்க… குறிச்ச தேதில மேரேஜ் நடக்கும்…” என்று தீர்மானமாக கூறிவிட,
“நானும் உன்கூட வர்றேன்…” என்று நின்றாள் மஹா.
“நான் எங்க போறேன்னு உனக்கு தெரியுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“நான் சௌஜன்யாவ பார்க்கணும்…” ஒரே வார்த்தையில் அவள் நின்று விட,
“இப்ப அங்க நான் போக மாட்டேன்… ட்ராப் பண்ண அவ வெய்ட் பண்ணுவா…” என்றவனை,
“இல்ல… நான் கூட வர்றேன்… எனக்கு அவங்களை பார்க்கணும்…”
“முடியாது மஹா…” கட் அன்ட் ரைட்டாக கூறிவிட்டு, போக முயற்சிக்க,
“அண்ணா.. அப்படீன்னா நாம போகலாம்…” என்று கார்த்திக்கை துணைக்கு அழைத்தாள்.
அவன் ஷ்யாமை பார்க்க, “இப்ப எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கற…” கோபமாக ஷ்யாம் கேட்க,
“இல்ல பாக்கணும்…” என்று திரும்ப அதை மட்டுமே கூறினாள்.
மூச்சை இழுத்து வெளியே விட்டவனுக்கு தன் கோபத்தை எங்கு கொட்டுவது என்று புரியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு, அவளை பார்த்தான்.
*****
மருத்துவமனை லாபியின் முன்பு பத்திரிக்கையாளர்கள் குவிந்து இருந்தனர். அவ்வப்போது சினிமா துறை விஐபிகள் சௌஜன்யாவை பார்க்க வருவதால், எந்நேரமும் பரபரப்பாக இருந்தது அந்த லாபி!
மின்னல் வேகத்தில் வந்த கார், போர்டிகோவில் நிற்க, காவலாளி அவசரமாக ஓடி வந்து சாவியை வாங்கினான், கார் பார்க்கிங்கில் நிறுத்த!
இறுக்கமாக இறங்கிய ஷ்யாம், மறுபுறத்திலிருந்து இறங்கிய மஹாவை பார்த்தான், பத்திரிக்கையாளர்கள் இருப்பதை பார்வையால் சுட்டிக் காட்டினான்.
மஹா வெகு இயல்பாகத்தான் இருப்பதாக காட்டிக் கொண்டாள், ஆனால் உள்ளுக்குள் அத்தனை வேதனையாக இருந்தது.
ஷ்யாமை கண்டதும் பத்திரிக்கையாளர் கூட்டம் பரபரப்பானது!
சௌஜன்யா விவகாரத்தில் கிசுகிசுக்கப்படுவது ஷ்யாமின் பெயராயிற்றே!
உடன் வந்த மஹாவை பார்த்து பெரும்பாலானவர்கள் புருவத்தை உயர்த்தினார்கள். அழகான கைத்தறி காட்டன் சேலையில் நீண்ட பின்னல் அசைந்தாட ஷ்யாமின் கைபற்றியபடி வந்தவளை என்ன கேள்வி கேட்பது என்று தவித்தது பத்திரிக்கை சமூகம்!
“சர்… சௌஜன்யா மேடமை பார்க்கத்தான் வந்தீங்களா?” என்று கேட்க,
“ப்ளீஸ் பாஸ்…” என்று கேள்விக்கு பதிலை கூறாமல் அவன் உள்ளே போக முயல, மகாவிடம் அதையே கேட்டனர் அவர்கள். அவளையும் பதில் கூற விடாமல் இழுத்துப் போக முயன்ற ஷ்யாமை சற்று நிறுத்தியவள்,
“ஆமாங்க… அவங்களை தான் பார்க்க வந்தேன்…” என்று கூற,
“டிவிட்டர் லீக்ஸ் தான் அவங்க சூசைட் அட்டம்ப்ட்க்கு காரணம்ன்னு சொல்றாங்களே…” என்ற கேள்வி அவளை நோக்கி வீசப்பட,
“அது எனக்கு தெரியல…”
“ஷ்யாம் சாருக்கும் அவங்களுக்கும் ஏதோ கனெக்ஷன்னும், அவங்க லவ் பெய்லியரால தான் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாங்கன்னும் சொல்றாங்களே…” என்ற அடுத்த கேள்வி வீசப்பட,
“அப்படியா பிரதர்…” என்று அழகாக சிரித்தாள். “நல்ல கற்பனை வளம் உங்களுக்கு…” என்று அழகாக சமாளிக்க, அதை பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமே, ஒரு கணம் அசந்து தான் போனான்.
“அவங்க எங்க ஷ்யாம் பாவாவுக்காக சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினா, இங்க எங்க ஹாஸ்பிட்டலயே அட்மிட் ஆவாங்களா பிரதர்?” என்று இன்னும் கேள்வி வேறு சிரித்தபடியே கேட்டு வைக்க, அந்த நிருபர் தலையை சொரிந்தபடியே வழிந்தான்.
“ஜூன் செக்கன்ட் எங்க மேரேஜ்… வந்துடுங்க…” என்று கூறியவள், பெரிதாக வணக்கம் தெரிவித்து விட்டு நகர, அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.
“நல்லா ஹேண்டில் பண்ண மஹா…” என்றவன், சௌஜன்யா இருந்த ஐசியூவுக்கு அழைத்து சென்றான்.
குளிர்ந்த காற்று சில்லென்று முகத்தை தாக்கியது.
மகாவை அவளருகே அனுப்பியவன், தான் போகாமல் கதவருகே நின்று கொண்டான். அவனுக்கு அங்கு வர ஒப்புதல் இல்லை என்பதோடு சௌஜன்யாவை காணவும் பிடிக்கவில்லை. மகாவுக்கும் தனக்கும் இடையில் வரும் எதையும் அவனுக்கு பிடிக்காது. தேவையும் இல்லாத ஒன்று என்பது அவனது கருத்து.
சோர்வாக படுத்து இருந்தாள் சௌஜன்யா. மகாவை கண்டதும் அவளது முகத்தில் சொல்ல முடியாத வருத்தம். அவளுக்கு பின்னால் நின்றிருந்த ஷ்யாமை கண்டத்தில் அவளது முகம் பிரகாசமடைந்தது, கண்களில் நீர் சூழ அவனைப் பார்த்தாள்.
அவளருகில் சென்ற மஹா, அவளது நாடித்துடிப்பை பார்த்து விட்டு, ஸ்டெத்தை அங்கிருந்த நர்சிடமிருந்து பெற்று, அவளது இதயத்துடிப்பையும் ஆராய்ந்தாள்.
மருத்துவர்கள் குறித்து வைத்த குறிப்புகளை பார்த்தவள், அதையெல்லாம் மனதில் குறித்து வைத்துக் கொண்டாள்.
“எப்படி இருக்கீங்க சௌஜன்யா?” ஒரு மருத்துவரின் தோரணையில் தான் அவள் கேட்டாள்.
“ம்ம்ம்…” பதில் கூற மிகவுமே சிரமப்பட்டாள். ஸ்டமக் வாஷ் கொடுக்க மூக்கில் டியுப் போட்டதில் தொண்டை புண்ணாகி இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டாள். முகம் நன்றாக வீங்கி விட்டிருந்தது.
“ஏன் இப்படி பண்ணீங்க?” ஒரு கை தூக்க மாத்திரையை விழுங்கியிருந்தாள்.
“நடிகைன்னா எப்படி வேண்ணாலும் யூஸ் பண்ணிட்டு தூக்கிப் போட்டுடலாமா மஹாவேங்கடலக்ஷ்மி?” சிரமப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாக கூறினாள் சௌஜன்யா.
“கூடாது தான்… அது தப்பு… ஏன் நீங்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?”
“எனக்கும் பிடிச்சு இருந்துது… யாருக்காகவும் நான் மயங்கினது இல்ல… ஷ்யாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்… அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது…” என்று அவனை மட்டுமே பார்த்தபடி கண்களில் கண்ணீரோடு கூற, ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் மரித்து தான் போனாள்.
மகாவின் கண்களில் தெரிந்த வலியை வெறித்துப் பார்த்தபடி கதவருகில் நின்றிருந்தான் ஷ்யாம்.
“பாவா உங்க கிட்ட ஏதாவது ப்ராமிஸ் பண்ணாரா சௌஜன்யா?” அவளது உணர்வுகளை கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல் கேட்டாள் மஹா.
அவனைப் பார்த்தபடியே, இடம் வலமாக தலையாட்டினாள் அவள்.
“அப்புறம் ஏன் இப்படி பண்ணீங்க? அவர் உங்க கிட்ட ப்ராமிஸ் பண்ணி அதை கீப் அப் பண்ணலைன்னா நீங்க என்ன வேண்ணாலும் கேக்க்கலாம்… ஆனா இப்படி அவரை டிஸ்டர்ப் பண்ண கூடாதுல்ல…” என்று நிதானமாக அவள் கேட்க,
“ஆனா அதுக்காக அவர் என்னை இந்தளவுக்கு அசிங்கப்படுத்தனுமா?” என்றவளுக்கு அழுகை தொண்டையை அடைத்துக் கொண்டது. “இவ நடிகை தானே… என்ன வேண்ணா செய்யலாம்ன்னு தைரியம் இல்லையா?” என்று அவள் கேட்க,
“தன்னைத்தானே யாராவது இப்படி அசிங்கப்படுத்திக்க முடியுமா? அதுவும் இன்னும் ஒன் மன்த்ல கல்யாணத்தை வெச்சுகிட்டு?” என்றதும் அவளது முகம் இயலாமையில் தடுமாறியது.
“ஒரு மாசத்துல கல்யாணமா?” என்று கேட்டவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.
“ம்ம்ம் ஆமா…” என்றவள், “இது வேற யாரோ வேண்டாதவங்க செஞ்ச வேலை சௌஜன்யா…” என்று முடித்துவிட்டு, எப்படியெல்லாமோ பேசி அவளது மனதை மாற்ற, அவை அனைத்தையும் பார்வையிட்டு கொண்டு மட்டும் இருந்தான் ஷ்யாம்.
அவனை ஆழ்ந்து பார்த்த சௌஜன்யா, “ஒரே ஒரு தடவை அவரை கிஸ் பண்ணிக்கறேன் மஹா…” என்று வேண்ட,
“சாரி ஹீ இஸ் மைன்….” என்று முடித்துக் கொண்டாள் மஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!