VVK1

VVK1

வஞ்சம் – 1

இன்று  ( சென்னை பட்டணம் )

அந்த அர்த்த ராத்திரி நேரம் சென்னை விமான நிலைய பிரதான வாயிலின் முன் பரபரப்பும், சந்தோசமுமாக காத்திருந்தார் காரிகை... காரிகை அறிவரசன்

அவரது ஒரே மகனை இரண்டு மாதத்திற்கு பிறகு காண போகிறார்இன்று தான் லண்டனில் இருந்து வருகிறான்.. இந்த ஆறு மாதத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் வரை மாதம் இரண்டு நாள் என அவன் கூடவே இருந்து அவனை பார்த்தவர்...

அலுவலக பணி காரணமாக இந்தியா கிளம்பி வந்தவர்.. இந்த இரண்டு மாதத்தில் மகனை காணாமல் மிகவும் ஏங்கி விட்டார்இன்று அவன் வர போகிறான் என்று முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க அவன் வரவுக்காய் காத்திருந்தார்.

பிளைட் கொஞ்சம் லேட் மேடம் என மெதுவாக அவர் அருகில் நின்ற அகில் தேவ் கூறினான்

அவன் புறம் பார்வையை திருப்பிய காரிகைநான் உன்கிட்ட ஏதாவது கேட்டேனா.? “ என்னும் விதமாக அவனை முறைக்க, அவரின் முறைப்பை கண்டும், காணாதது போல் நின்றுக் கொண்டான் அகில்….

அகில்தேவ், காரிகையின் வலது கை மாதிரி. விஷ்ணு இல்லாத நேரம் பல தொழில் முடிவுகளை அகிலிடம் கேட்டு முடிவெடுப்பார் காரிகை, ஆனால் இப்பொழுது நடந்த தொழில் போட்டியில் அவனிடம் மலையளவு கோபத்தில் இருக்கிறார்... அதற்குள் மகன் விஷ்ணு லண்டனில் இருந்து வருவதால், அவனை முறைத்துக் கொண்டு இருக்கிறார்... அவர் தொழில் தான் அவரின் உயிர்.. மந்திரவாதியின் உயிர் பறக்கும் கிளியில் இருப்பதுப் போல், இந்த காரிகையின் உயிர் அவரின் தொழிலில் உள்ளது.….

காரிகையின் தவிப்பும், சந்தோசமும் அவனுக்கு எட்டியதோ என்னவோ அடுத்த நொடி அங்கு தரிசனம் தந்தான் விஷ்ணு காரிகை ஆம், விஷ்ணு காரிகை தான்.. எங்கும்சன் ஆப் காரிகை என்று நெஞ்சை நிமிர்த்தி கூறுவான் அவனுக்கு எல்லாமே அவர் தான்.. அவர் மட்டும் தான்...

வெள்ளை நிறத்தில் கறுப்பு மெல்லிய கோடுகள் போட்ட சட்டை, கறுப்பு நிற பாண்ட், அதே நிறத்தில் டை கட்டியவனின் இடது கையில் கறுப்பு நிற கோர்ட் அழகாய் மடிந்து தொங்கியது, இதுவரை ஷர்ட்டில் தொங்கிய கூலரை எடுத்து கண்களில் அணிந்துக் கொண்டே, கம்பீர அழகுடன் தனது பிரத்யோக வேக நடையுடன் தனது தாயை அதாவது தாய் என்று அடையாளம் காட்டபட்டவரை நோக்கி விரைந்து வந்தான்... குழந்தை கண் முழிக்கும் பொழுது தாயை தானே அடையாளம் காட்டுவார்கள்...  அதே போல் தான் இந்த வளர்ந்த குழந்தைக்கு தாய் என அடையாளம் காட்டப்பட்டவர் தான் காரிகை

அவனை கண்டதும், அவர் முகம் பூவாய் மலர்ந்தது, கூடவே கொஞ்சமே கொஞ்சம் அவரின் கண்கள் அவனை ஆராய்ச்சியாக பார்த்தது... தூரத்தில் இருந்தே அவனை பார்த்த காரிகை கண்களில் நீர் அருவியாக கொட்ட அப்படியே பார்த்து நின்றார்...

அவனில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என பார்க்க,

அவன் வளர்த்திருந்த முடியும், அவனின் தாடியும் அவரை ஏதோ செய்ய, மனம் வெகுவாக தவித்தது

அவர் அருகில் வந்த விஷ்ணு, அவரை கண்டு அம்மாஎன அழைக்க,

அவன் முகத்தை மெதுவாக வருடியவர் எப்படி இருக்க விஷ்ணு என கண்களில் கண்ணீருடன் கேட்டார்..

அம்மா உன் மகன் மீண்டும் வந்துட்டான்.. அந்த எமனை மீறி வந்துட்டேன்.. “ என்றபடி முகம் இறுக கூறினான் விஷ்ணு காரிகை...

ஆம்..!! அந்த எமனை மீறி தான் வருகிறான்விஷ்ணுவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சென்னை டாக்டர்ஸ் கைவிட்ட நிலையில், தன் தொழிலை அம்போ என்று விட்டு விட மனதில்லாத காரிகை, லண்டன் கொண்டு சென்று அந்த எமனிடம் இருந்து தன் மகனை காப்பாற்றி கொண்டு வந்தவர் அவர்..

அவன் வாழ்வில் நடந்த பல கறுப்பு பக்கங்களை மறக்க வைக்கவே மேல் சிகிட்சைக்காய் மீண்டும் லண்டன் அனுப்பினார்... அந்த நேரம் விஷ்ணு கூறியபடியே அவன் இடத்தில் தொழில்முறையில் அகில்தேவ்வை வைத்திருந்தார்.…..  சிகிட்சை முடிந்து, அப்படியே தன் தொழில் மூளையை அங்கும் நிரூபித்து அங்கிருந்து பெரிய காண்ட்ராக்ட் ஒன்றுடன் வெற்றி வாகை சூடியவனாய் மீண்டும் சென்னை வருகிறான்அந்த எமனையே எதிர்த்து வருகிறான் தி கிரேட் விஷ்ணு காரிகை ”……

பாஸ்… “ என்ற அழுத்தமான குரலில் தான் இருவருக்கும் தாங்கள் இருக்கும் இடம் நினைவில் வர, காரிகை சுதாரித்து அமைதியாக, தாயின் அமைதியை கண்ட,

விஷ்ணுவோ, புருவ மத்தியில் யோசனையாக வலது கையால் கூலரை கழட்டி, இமையை வருடி கொண்டேஎஸ்…. “ என அவனை நோக்கி திரும்பியவனிடம் அவனுடைய கம்பீரத்துடன் கற்று தேர்ந்த தொழிலதிபனுக்குரிய மிடுக்கும் திரும்பி இருந்தது...

அவன் புருவத்தை வருடிய செயல் காரிகை புருவத்தை யோசனையாக சுருங்க செய்தது.. ஆனால் அடுத்த நிமிடமே அவனிடம் திரும்பி இருந்த கம்பீரத்தை கண்டு மனம் அமைதியாக அவர்களை பார்த்திருந்தார்...

காரிகை கார்மெண்ட்ஸ்கம்பெனியின் ஒரே ஒரு வாரிசு.இரண்டு துணி மில் அதிபர்...  மேலும் தங்களது தொழிலை விரிவு படுத்த எண்ணி சாய பட்டறை ஒன்றை ஆரம்பிக்க கட்டம் கட்டி விட்டான் விஷ்ணு காரிகை... ஆனால் நடந்தது அவனே எதிர் பாராதது.அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல்,

பாஸ்..கிளம்பலாமாஎன அகில் கேட்க,

டிரைவரை கார் எடுக்க சொல்லு என வேகமாக விஷ்ணுவுக்கு முன்  காரிகை கட்டளையிட,

விஷ்ணு யோசனையாக தாயை பார்க்க வீட்டுக்கு போய் பேசலாம்என மெதுவாக அவன் காதில் கூறினார் காரிகை,

என்றபடி கைகள் அவனையும் அறியாமல் மீண்டும் வலது புருவத்தை வருடிக் கொண்டதுஅதை பார்த்த காரிகை மனது மீண்டும் கலக்கத்தை தத்தெடுக்க, அமைதியாக அவனுடன் நடந்து வந்தார்...

விஷ்ணு லக்கேஜ்களை அகில் கையில் எடுக்க, அவனை தடுத்த காரிகை, கண்ணசைவில் டிரைவரை அழைக்க, அவன் ஓடி வந்து தூக்கிக் கொண்டான்….

ஓட்டுனர் இருக்கையில் டிரைவர் ஏற, அவர் அருகில் அகில் ஏறிக் கொண்டான்...

பின் இருக்கையில் ஏறிய விஷ்ணு சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர, அவன் அருகில் காரிகை அமைதியாக ஏற, விஷ்ணுவின் ஜாக்வார் மெதுவாக வேகமெடுத்தது

பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தார் காரிகைஆனால் அவனோ இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி இருந்தான்... முகம் ஏதோ தீவிர யோசனையில் இருந்தது

மெதுவாக அவன் கையை பிடிக்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன், கண்ணசைவில் முன் இருக்கையை காட்ட அமைதியாக அமர்ந்துக் கொண்டார்...

இருவரின் அமைதியை கண்ட அகில் மனது ஒரு நிலையில் இல்லை.. எப்பொழுது விஷ்ணு வெளிநாடு சென்று வந்தாலும், வந்த நிமிடத்தில் இருந்து தொழில் பற்றி பேசுவது தான் அதிகமாக இருக்கும்.. இப்பொழுது நடந்திருப்பதை அறிந்தவன் கண்டிப்பாக கோபத்தில் குதிப்பான் என்பது அவன் அறிந்ததே.. ஆனால் இன்று அவனின் இந்த அமைதி அவன் முகத்தில் யோசனையை வரவைப்பதாய்

அவனது ஜாக்வார் மெதுவாக ஊர்ந்து நட்சத்திரங்களும், பிரபல தொழிலதிபர்களும் வாழும் .சி.ஆர். ரோட்டில் பயணித்து, வானளவு உயர்ந்து நின்ற அந்த பங்களாவின் முன் நின்றது..

அதன் முகப்பில்காரிகை பவனம் என்னும் பெயர் தங்க நிறத்தில் பொறிக்கபட்டிருக்க, அந்த பிரமாண்ட கேட்டை காவலாளி திறந்து விட, இருபக்கமும் சீராக பராமரிக்கப்பட்ட புல்வெளி பச்சை பசேலென்று படர்ந்திருக்க, அந்த பைபர் பாதையில் கார் வழுக்கிக் கொண்டு நின்றது..

மெதுவாக கார் கண்ணாடியை இறக்கிய விஷ்ணு கூலரை கழட்டி அந்த பிரமாண்ட வெள்ளை மாளிகையை பார்த்துக் கொண்டே அமைதியாக காரை விட்டு இறங்க, அவனை வாசலில் நிற்க வைத்த காரிகை வீட்டின் உள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்...

 “ தன் மகன் நீடூழி காலம் வாழ வேண்டும்என்ற வேண்டுதலுடன் காரிகை ஆரத்தி கரைக்க,

காரை விட்டு இறங்கிய விஷ்ணுவோ, எப்பொழுதும் போல்  “ இதற்கு முன் நான் இங்கு வந்திருக்கிறேனா..? ” என்றபடி அந்த பங்களாவையே புருவ மத்தியில் சிறு யோசனை முடிச்சுடன் பார்த்துக் கொண்டு நின்றான்... கைகளோ அவனையே அறியாமல் வலது புருவத்தை மீண்டும் வருடி கொண்டது...

ஆரத்தி எடுத்து வந்த காரிகை அவனின் செயலை கண்டு மீண்டும் கலக்கம் ஏற்பட, அந்த கடவுளை வேண்டி நின்றாள்.ஆனாலும் சமாளித்து கொண்டு அவனுக்கு ஆலம் சுற்றி வீட்டில் அழைத்து வர,

வீட்டில் உள்ள வேலைகாரர்கள் எல்லாரும் ஆச்சரியமாக அவனை பார்த்தனர், பின்னே முகமே தெரியாமல் காடு போல் முடிவளர்த்து வருபவனை ஆச்சரியமாக பார்க்காமல் எப்படி பார்ப்பார்கள்... அவர்களின் ஆச்சரிய பார்வையை கண்டவன் ஒரு நிமிடம் தயங்க,

அவனின் அருகில் வேகமாக வந்த காரிகை விஷ்ணு உன் ரூம் மேலே என மெதுவாக முணுமுணுக்க, அவரை பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டு அவன் அறை நோக்கி சென்றான் விஷ்ணு காரிகைஅதற்கு மேல் அவன் எதையும் யோசிக்கவிரும்பவில்லை... அப்படி யோசித்தாலும் எதுவும் தெரியபோவதில்லை என்று அவனையே சமாதனபடுத்திக் கொண்டு பழைய விஷ்ணுவாக மீண்டும் எழுந்தான்...

தன் அறைக்கு வந்த காரிகைக்கு இருப்புகொள்ளவில்லை, இவனை பார்க்க அவருக்கு ஏதோதவறாகபட்டது... அவர் தொழிலை காக்க, அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை.அவர் செய்த பெரிய செயல் அவரையும், அவர் மகனையும் சுழட்டி அடிக்கும் என்று அந்த நேரம் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது...!!!

அடுத்த நாள் காலையில் அந்த மீட்டிங் ஹாலில் கூடி இருந்த அத்தனை பேரும் பயத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்மிக பெரிய ஆர்டர் ஒரு புது கம்பெனி கைக்கு சென்றால் கோபப்படாமல் என்ன செய்வான்…  

புது கம்பெனி அவனின் அப்பா என்று அறிந்தால்..? எதிரி அவனின் பெரிய எதிரியே அவர் தான்அவரின் இனிஷியலையே தனக்கு  வைக்க விரும்பாத அரக்கன் அவன்…    இதுவரை எல்லா இடத்திலும் கால் பதித்ததி கிரேட் விஷ்ணுவால்தாங்கிக் கொள்ள முடியுமா.? என்னமுடியாது... முடியவே முடியாது… !!

விஷ்ணு லண்டன் செல்லும் முன் அகிலிடம் ஒப்படைத்த மிக பெரிய வேலைஆறு மாத காலமாக அகில் தேவ் தான் இந்த கம்பெனியை பார்த்து வந்தான்…  அகில் கையில் தான் அவனின் மிக பெரிய ராஜ்யத்தையே ஒப்படைத்து சென்றான்…  தன் நிழலை கூட நம்பாத தி கிரேட் விஷ்ணு ஐந்து  வருடமாக தன்  பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை நம்பி ஒப்படைத்திருப்பது மிக பெரிய ஆச்சரியமே… !!!

இது மிக பெரிய ஆர்டர்…  ” யூரோப் காண்ட்ராக்ட்அகில் ரொம்பவே கஷ்டப்பட்ட ஆர்டர்..  இது கையை விட்டு போகும் என்று யாரும் எண்ணவே இல்லைஅவனின் உழைப்பு இங்கிருந்த அத்தனை பேருக்கும் நன்கு தெரியும்அது தான் பயம்….

யாரை எல்லாம் சீற போகிறானோ.? யாரை எல்லாம் மில்லுக்கு அனுப்ப போகிறானோ.? யாரை எல்லாம் சாயம் கலக்க அனுப்ப போகிறானோ.. ” என்றபடி எல்லார் முகங்களும் பயத்தை காட்டின

ஆனாலும் மனதின் ஓரத்தில் சிறு நிம்மதி எல்லார் முகத்திலும்இந்த ஆர்டர் கைவிட்டு போன நேரம் விஷ்ணு  இங்கு இல்லாததேஅகில் என்றால் கொஞ்சம் தப்பிக்கலாம்.. விஷ்ணு இருந்தால் அது முடியாத காரியம்பார்வையாலும், வார்த்தையால் கொல்லும் ராட்சஷன் …!!

அந்தநேரம் ஹால் அப்படியே அமைதியாக, எல்லார் முகங்களும் கலக்கத்துடன் வாசலைப் பார்க்க முன்னால் விழுந்த முடி கற்றைகளை மேல் நோக்கி கோதி விட்டுக் கொண்டே வேக நடையுடன் அந்த ஹால் மேடையில் ஏறி நின்றான் விஷ்ணு காரிகை…. அவனின் பின்னே கசங்கிய முகத்துடன் அகில் தேவ்.

விஷ்ணுவை கண்டவர்கள் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து நின்றனர்.. அவனை இன்று யாரும் எதிர் பார்க்கவே இல்லை, கண்கள் தெறித்து வெளியில் விழுவதை போல் கண்ணை விரித்தவர்களின், கண்களில் விழுந்தான் அகில் தேவ்..” போச்சு….போச்சு... அகில் சாரே இப்படி இருக்கும் பொழுது நாம காலிஎன எண்ணி எல்லாரும் பயத்துடன் விஷ்ணு முகத்தை பார்த்தனர்

எல்லார் பய முகத்தையும் பார்த்த விஷ்ணுஹா..ஹா.. ” என பெரும் குரலெடுத்து சிரித்தான்அவனின் சிரிப்பு ஏழைகளை அடித்து சாப்பிட ரெடியாக இருக்கும் அரக்கன் சிரித்ததுப் போல் இருந்தது… 

அடுத்த நிமிடமே அவன் முகம் விகாரமாக மாற  அப்படியொரு அடக்கப்பட்ட ஆத்திரம் தெரிந்தது

அவனின் வெள்ளை முகம் ரத்தமென சிவந்து போனது.. அதுவே கூறியது அவனின் கோபத்தின் அளவைகண்ணை கூலர் மறைத்திருக்க அவனின் கண்களில் ஏறிய சிவப்பை  அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது

எல்லாரையும் ஒரு முறை நிதானமாக பார்த்தவனின் கண்கள் யோசனையாக மாறி, அவனையும் அறியாமல் கூலரை கழட்டி வலது புருவத்தை வருடிக் கொண்டவன் அகிலை அழுத்தமாக ஒரு பார்வை  பார்த்து, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மற்றவர்களை அமரும்படி கையால் சைகை செய்தான்….

அவனின் ஒற்றை கையசைப்பிற்கு அனைவரும் நொடியில் அமர்ந்தனர்சம்பளம் கொடுக்கும் முதலாளி அல்லவா.? மரியாதை இருக்க தானே செய்யும் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பில்லைஅப்படி அவர்கள் அமரவில்லை என்றால் அடுத்த நிமிடம் அனைவரும் அவனுக்கு அருகில் அந்த மேடையில் ஏறி நின்று ஆர்டர் கைமாறி போனதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து கூற வேண்டும் அப்படி கூறவில்லை என்றால் கண்டிப்பாக சாயம் கலக்கும் வேலை தான்…. அதற்கு பயந்தே அவன் கையை அசைத்ததும் எல்லாரும் அமர்ந்துக் கொண்டனர்

எல்லாரும் அமர்ந்ததும்வெல்.. இந்த காண்ட்ராக்ட் எவ்வளவு முக்கியம் என்று எல்லாருக்கும் தெரியும், இந்த யூரோப் காண்ட்ராக்ட் நமக்கு கிடைச்சா மறுபடி வர எல்லாம் ஆர்டர் நம்ம கம்பெனி தேடி  தான் வரும்நாம் கோட் பண்ணின அமௌண்ட் ரொம்பவே குறைவு.. அதை விட குறைவா கோட் பண்ணி  அந்த ஆர்டர் எடுக்கும் அளவுக்கு அத்தனை பெரிய ஆள் யார்..? “அவர்கள் மீது அழுத்தமான பார்வையை செலுத்தியவனின் முகம் மீண்டும் மாற,

“ இந்த விஷ்ணு பத்தி சரியா தெரியலை…. இதற்கு யார் காரணமா இருந்தாலும் அவங்க இந்த விஷ்ணு பார்வையில் இருந்து தப்ப முடியாதுஎன்றான் மிகவும் கடினமான குரலில்..

அவனின் கடினமான குரலில் எல்லார் முகங்களும் வெளிறி போனதுஅவனை கண்டு அத்தனை பயமாக இருந்தது. ” இவன் கிட்ட வேலை பாக்குறதுக்கு வரட்டி தட்ட போகலாம்என எல்லார் மனதும் ஒரே போல் முடிவெடுத்துக் கொண்டது… 

 இன்னொரு மனதோஇவனை போல் தொழிலார்களை கவனிக்கவும் முடியாது, வேலை வாங்கவும் முடியாதுஎன்று பெருமையாக எண்ணிக் கொண்டது.. அது அவனின் தொழில் உக்தி என்று அறிந்தும், சம்பளம் அளிப்பதிலும், போனஸ் வழங்குவதிலும் அவன்  அவர்களுக்கு கர்ணனே…!!

எல்லார் முகங்களையும் கண்டு பார்வையை மாற்றி, கோபத்தை கொஞ்சம் குறைத்தவன்இது தான் முதல் முறை என்பதால் உங்களை நான் விடுகிறேன்.. அடுத்த லண்டன் ஆர்டர் நமக்கு கிடைத்தே ஆகணும். அதற்கான வேலையை ஆரம்பிங்க.. எல்லா ஏற்பாடும் செய்து விட்டு வந்து விட்டேன் அமௌன்ட் கோட் பண்ணுறது தான் பேலன்ஸ்…. இதற்கு உங்க எல்லார் உதவியும் ரொம்ப தேவைடிசைன்ஸ் மெயில் பண்ணிட்டேன் அதற்கான வேலையை ஆரம்பிங்கமில்லோட கண்டிஷன், மில்லை டெவலப் பண்ணனும்னா அதை பண்ணுவதற்கான ஐடியா இருந்த தாராளமா அகில் கிட்ட சொல்லுங்கஇப்போ யூ கேன்  கோஎன்றவன் வாசல் பக்கம் பார்வையை திருப்ப

அடுத்த நொடி விட்டால் போதுமென எல்லாரும் வெளியில் எழுந்து சென்றனர்…. அவர்கள் செல்லவும் அகில் பக்கம் பார்வையை திருப்பிய விஷ்ணுசியர் அப் மேன்.. அடுத்த கான்டராக்ட் விடாதேநமக்கு கிடைத்தே ஆகவேண்டும்.. இப்போ இந்த ஆர்டர் யார் கைக்கு சென்றது என்று கவனி.. நான் இல்லாத  நாளில் புதிதாக மழைக்கு முளைத்த அந்த காளான் யார் என்று கண்டுபிடிஎன முகம் இறுக கூறியவன் அவனின் தோளில் தட்டி சென்றான்

இழுத்து வைத்திருக்கும் மூச்சைஉப்என வெளியிட்ட அகில்..” யம்மா.. தாயே..!!! நீ என்ன பண்ண போறேன்னு தெரியலியே.. கடைசியில் என் மடிலையே கையை வச்சுட்டியே..? இவன் கையால் என்னை உப்பு கண்டம் போட வச்சுருவ போலையே…? அந்த மேடம் வேற முறைச்சு முறைச்சு பாக்குது… ” என நேற்று  ஏர்போர்ட்டில் காரிகை முறைத்ததை எண்ணிய அகில் முதுகு தண்டு வடம் சிலிர்த்தது அவளின் எண்ணம் அவனுமே அறியவில்லை...

ஸ்வேதாவின் ஒரே மகன் தான் அகில் தேவ்.. ஒரு அயோக்கியனை நம்பி தன் வாழ்கையை அவனுக்கு அளித்தவர் ஸ்வேதா... அகில் தன் தாயை நல்லவள் என காட்டவே விஷ்ணுவிடம் வேலைக்கு சேர்ந்தவன்... அகிலை நம்பி தன்னுடன் வைத்துக் கொண்டான் விஷ்ணு...

அறைக்கு வந்த விஷ்ணுவிற்கு இன்னும் மனம் ஆறவில்லை, எதிரி யார் என்று அறிந்தாலாவது ஏதாவது செய்யலாம்எதுவும் தெரியாமல் என்ன செய்வதுலண்டனில் இருக்கும் பொழுதே காரிகை கொஞ்சமாய் கோடிட்டு காட்டி இருந்தார்காளான் ஓன்று முளைக்கிறதுஎன்றுஆனால் அவன் அவனை பற்றிய யோசனையில் இருந்ததில் இந்த காளானை  கவனிக்காமல் இருந்ததில் இன்று பல கோடி கைவிட்டு சென்றுவிட்டதுஅந்த நேரம் அந்த காளான் வளர்ந்து மொத்த இடத்தையே தன்வசப்படுத்தும் என்று அறியாமல் போனான் அவன்

அதே நேரம் அந்த காளான் என்று கூறப்பட்ட அவளோ.. ஆம்..!! அவளே தான்…!! அப்படி ஒரு சந்தோஷத்தில் இருந்தாள்இது அவளின் முதல் வெற்றி அல்லவா…!! மகேந்திர மூர்த்தி தன் மருமகளுக்கு ஒரு அடையாளத்தை அளித்திருக்கிறார்…. ஆம்.. மகேந்திரமூர்த்தி மருமகளே  தான்..!!! அவளின் அடையாளத்தை  இன்று அவள் நிலைக்க செய்திருக்கிறாள் அன்று அவன் ஆடிய ஆட்டத்துக்கு இன்று முடிவு கட்ட வந்திருக்கும் சீறும் பாம்பு அவள்... அதிலும் படுமோசமாக அடி வாங்கிய பாம்புசீற காத்திருக்கும் பாம்பு

அதே சந்தோசத்துடன் அவனை அழைத்தாள்.. இதழோ அவளையும் அறியாமல்சோட்டுமச்சான்என்று செல்லமாக அழைத்துக் கொண்டது, அவனை பற்றி நன்கு அறிந்தும் கொஞ்சி கொண்டது

பணமாய் இருந்தால் என்ன?

நீ பிணமாய் இருந்தால் என்ன?

நான் உயிரோடு இருந்திடவே,

எவரையும் உணவாய் உன்பேன் நான்.

சூதாய் இருந்தால் என்ன?

அது தீதாய் இருந்தால் என்ன?

யாதாய் இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே.

என வரிகள் அவன் அலைபேசியில் ஒலிக்க, எரிச்சலாக செல்லை எடுத்தான் விஷ்ணுகட்டுகடங்காத கோபத்தில் இருக்க அழைப்பது யார் என்ற யோசனையுடன்,

 ” எஸ்.. விஷ்ணு காரிகை ஹியர்என கம்பீரமாக ஒலித்த அவன் குரலில், ஒரு நொடி அலைபேசியை கையில் எடுத்து பார்த்தாள் அவள், “ தான் அவனுக்கு தான் அழைத்திருக்கிறோமா.? அவனின் தோல்வி அவனை பாதிக்கவில்லையா.? ”  என்று அவளுக்கு தான் பெரும் யோசனையாக இருந்தது

ஹலோஎன அவன் மீண்டும் அழைக்க,

ஹலோ.. மிஸ்டர். காரிகைஎன அவள் நக்கலாக  அழைக்க,

அந்த குரல்அந்த குரலில்உடனே உஷாராகி விட்டான் விஷ்ணு காரிகை…. அப்படி இல்லை என்றால் அவன் தி கிரேட் விஷ்ணு காரிகையாய் இருக்க முடியாதே….

ஆக அவள் தான் என் காண்ட்ராக்டை பறித்ததா.? எப்படி எப்படி அவளால் முடிந்தது.மீண்டும் நாடகத்தை ஆரம்பிக்க போகிறாளா..?  கோபம் கட்டுகடங்காமல் வந்ததுஎன்னை எதிற்க்கும் தைரியம் ஒரு பெண்ணாய் இருந்து அவளுக்கு எப்படி வந்தது, அன்று கோழையாய் ஓடியவள், இன்று இப்படி சீறுகிறாள்... ஆனாலும் யாரை எப்படி வழிக்கு கொண்டு வரவேண்டும் என்ற உக்தி அறிந்தவன் அவன்...,

ஆஹான்வாடி.. என் அருமை பொண்டாட்டி.” என நக்கலாக கேட்டான் விஷ்ணு….

அவனின் பொண்டாட்டி என்ற விழிப்பில் ஒரு நிமிடம் அப்படியே அமைதியாகிக் போனாள்.. ஆனால் அடுத்த நிமிடமே இவன் அவன் இல்லை என்ற உண்மை முகத்தில் உரைக்க,

ஹா.. பொண்டாட்டியா…  யாரு... யாருக்கு பொண்டாட்டி.. நான் கீர்த்தி தேவேந்திரன்டா..” என கெத்தாக தன் கணவர் பெயரையும் சேர்த்து கூறினாள் அவள்

நீ தானடி எவனோ ஒருவனாகிய என்னை உன் புருஷன் என்று என் பின்னால் அலைந்தாய்என ஏளனமாக கூறினான், ஆனாலும் அந்ததேவேந்தரன்என்ற பெயரில் ஒரு நிமிடம் கண்ணை இறுக மூடி திறந்த விஷ்ணு முகம் அடுத்த நிமிடமே கடினமாக மாறியதுஎன்ன காண்ட்ராக்ட் கிடைத்த ஆணவத்தில் ஆடுறியாஎன வார்த்தைகள் ஈட்டியாக வந்து விழ..,

அவனின் வார்த்தையில் இருந்த பேதத்தை, அவனை நன்கு அறிந்தவளாய் வேதனையாக கண்ணை மூடி திறந்தவள், அடுத்த நிமிடமே அவன் பேசியதை காதில் எடுக்காமல் தொழில் என்று வந்தால் எல்லாம் இருக்கும் பாஸ்..  இதே வாசகம் நீ அடிக்கடி யூஸ் பண்ணுறது தான் மிஸ்டர் காரிகை.. அதற்குள் மறந்து விட்டதா என்ன..? “ என கேலியாக கூறியவள் சிறிது யோசனைக்கு பின்,

அப்படி விடக்கூடாதே... உன்னை  மாதிரி ஆள்களுக்கு மறக்காத வார்த்தையாச்சே… அடிக்கடி இனி இந்த வார்த்தையை நினைவு படுத்த நான் வந்துவிட்டேன்… என்றபடி நக்கலாய் அவனிடம் கூறினாள்

ஏய்.. அதிகமா பேசுற... என்னை பத்தி சரியா தெரியல, தி கிரேட் விஷ்ணுடி என பல்லைகடிக்க,

இனி தெரியும்டா நீ தி கிரேட் விஷ்ணுவா.? இல்ல காணாம போற விஷ்ணுவா.? என்று உனக்கு நான் புரியவைக்கிறேன்.. இனி உன் தொழிலில் இறக்கம் மட்டுமே வரும்... நான் வரவைப்பேன் மிஸ்டர். காரிகை.. அந்த தொழில், பணம் இருப்பதால் தானே நீ அந்த ஆட்டம் ஆடினாய்.. எல்லாம் முடித்து வைக்கிறேன்  ” என்றாள் கடுமையாக,

ஹா.. ஹாஅவள் பெரும் ஜோக் அடித்ததுப் போல்  பெரும் குரலெடுத்து சிரித்தவன், முன்னால்  விழுந்த முடி கற்றையை கோதிக் கொள்ள, அந்த பக்கம் கீர்த்தி பல்லைக்கடித்துக் கொண்டாள்..

நீ ஒரு பொண்ணுடி.. அதை நல்லா நியாபகம் வைத்துக் கொள் “ என்று அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்து கூறியவன், மீண்டும் “ உன்னை மாதிரி இப்போ தலையை நீட்டிய காளானை எல்லாம் எப்படி பிடுங்க வேண்டும் என்று எனக்கு தெரியும்என்றான்  சீண்டலாக..

அவன் கூறியதை கேட்டு அந்த நாள் நினைவில் வர, முகம் அவமானத்தில் சிவந்தது, ஆனாலும் அதை அவனுக்கு காட்டாமல்  ஹா..ஹா.. ” என சிரித்த கீர்த்திபாக்கிறேண்டாநீ என்னதை பிடிங்கி கிழிக்கிறாய்என்று ஏளனமாக கூறியவள் அழைப்பை நிறுத்தினாள்….

அவனிடம் ஆவேசமாக பேசியவளால் அதற்கு மேல் முடியாமல் கண்ணீர் அருவியாக கொட்ட, மேஜை  இழுப்பறையில்  இருந்தஅவர்களின் திருமண போட்டோவை எடுத்து பார்த்தாள் “.. கம்பீரமாக முறுக்கு மீசையுடன் மாநிறமாக இருந்த தேவேந்திரன் அவளை பார்த்து பளிச்சென சிரித்துக் கொண்டிருந்தான்… 

எப்படி உன்னால் என்னை தனியாக விட்டு செல்ல மனது வந்தது, ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்கமாட்டாயே..? உன்  தங்கை, நமது ஊர் தான் உனது உயிர் என்பாயே.? எல்லாம் விட்டு எங்கே போனாய் என் அன்பே… எனது உயிர் அழிந்தால் என் ஊர் அழியும் என்றாயே.? அதே போல் உன்னுடன் ஊரையும் ஊரையும் அழைத்து சென்றாயோ..? என் உயிரை கொண்டு உன் உயிரை எப்படி மீட்பேன் நான்..? “ என அவனிடம் கேட்டவள் மனம் ஊமையாய் அழுதது   

கொ(வெ)ல்வாள்

 

மனுஷன மனுஷன் சாப்புடுறான்டா தம்பிப்பயலே

இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவல  

மனுஷன மனுஷன் சாப்புடுறான்டா தம்பிப்பயலே

இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவல  

சாப்பிடும் பொருளில் கலப்படம் செய்யும் காலம் ஆச்சு  

இங்கே சத்தியம் நீதி ஞாயம் எல்லாம் காத்தாப்போச்சு  

எரியிற வீட்டில் புடுங்குறக்கூட்டம் தம்பிபயலே    

நெறுப்பில் எரியிறவரைக்கும்    

எத்தனை ஆட்டம் தம்பிப்பயலே 

 

error: Content is protected !!