ஆழியின் ஆதவன்
ஆழியின் ஆதவன்
அத்தியாயம் 19
வெகு நாட்களுக்குப் பிறகு அமைதியாக உறங்கும் சைத்ராவை கண்களில் நிறைத்துக்கொண்டு ஆதவுடன் ஆழி கிளம்பினாள்.
நிலா தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு ஆழியைத் தேடி அழுவதாக வெண்மதி ஃபோன் செய்ய ஆழி அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
சைத்ரா அருகில் அமர்ந்திருந்த மீராவிடம், முகில் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று அழைத்தான்.
“சொல்லுங்க முகில், என்ன விஷயம்?”
“எனக்குச் சைத்துவை புடிச்சிருக்கு மீரா. எனக்கு அவளைக் கல்யாணம் கட்டித்தாங்க” என்று கேட்க, மீரா திகைத்து நின்றாள்.
“முகில்…”
“நீ… நீங்க என்ன கேக்குறீங்கன்னு நல்லா புரிஞ்சு தான் கேக்குறீங்களா?” என்றாள் அவன் சொன்னதை நம்ப முடியாமல்.
“நான் நல்லா புரிஞ்சு தான் கேக்குறேன். சைத்துச் சம்மந்தப்பட்ட எதையும் உன்கிட்ட இல்ல ஆழிகிட்ட தானா கேக்கணும். அதுதான் முறை. அதான் உன்கிட்ட பொண்ணு கேக்குறேன். நீ ஓகே சொன்னா, அடுத்து ஆழிகிட்ட பேசிட்டு, ஒரு நல்ல நாள் பாத்துக் கல்யாணத்தை வச்சிக்கலாம். இப்ப நீ சொல்லு… எனக்கு அவளைக் கட்டி தறீய?” என்றவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்தாள் மீரா.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல முகில். இது… இதுல எங்க முடிவு முக்கியம் இல்ல. அதோ தூக்கிட்டு இருக்காளே அவ ஒத்துக்கணும். அவ சம்மதிச்ச எங்களுக்கு அதைவிடச் சந்தோஷம் வேற இல்ல”
“அதெல்லாம் அவ சம்மதிப்ப, அத நான் பாத்துக்கிறேன். உனக்கு ஓகேவான்னு மட்டும் சொல்லு… அதுபோதும். அவ என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்காட்டி, ஆதவ் ஆழிக்குச் சொன்னது தான். அவ என்னைக் கட்டிக்க வேணாம். ஆனா, நான் அவளைக் கட்டிக்குறேன்” என்றவனை புரியாமல் பார்த்தாள் மீரா.
“என்ன சொல்றீங்க நீங்க? எனக்கு ஒன்னும் புரியல… ஆதவ் ஆழி பத்தி என்ன சொன்னாரு?”
“ம்ம்ம் நான் இப்ப சொன்னதைத் தான் சொன்னான். அது இப்ப முக்கியம் இல்ல. அது லவ்வர்ஸ் ப்ராப்ளம். அத அவங்க பாத்துப்பாங்க. இப்ப நீ இங்க இருந்து கிளம்பு… எனக்கு அவகிட்ட பேசணும். நீ இருந்த எங்களால ஃப்ரீய பேசமுடியாது. நீ கெளம்பு” என்று அவளை விரட்ட,
“என்ன பேசுற முகில் நீ. இந்த நிலையில் நான் எப்படி அவளைத் தனிய விட்டுப் போறது… அதெல்லாம் முடியாது.” என்றவளை முறைத்தான் முகில்.
“ஹலோ அவ எங்க தனிய இருக்கா… அதான் அவ வருங்காலப் புருஷன் நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேனே… அப்புறம் என்ன? இனி வாழ்க்கை பூராவும் அவளா நானும், என்னை அவளும் தானா பாத்துக்கணும். அதுக்கு இது ரிகர்சல்னு வச்சிக்க… நீ முதல்ல கெளம்பு… டைம் வேஸ்ட் பண்ணாத…” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விஷ்ணு அருகில் வந்து,
“டேய் நீ மீராவை கூட்டிப் போ… நான் சொல்ற வரை இந்தப் பக்கம் வரக்கூடாது” என்றவனைப் புரியாமல் பாத்த விஷ்ணு,
“டேய்… என்னடா… எங்க போகச் சொல்ற நீ… அதுவும் மீராவை கூட்டிட்டு?”
“ம்ம்ம் அன்னைக்கு நீ சொன்னீயே, அதைச் செய்யப்போறேன். அதுக்கு நீங்க இங்க இருக்கக்கூடாது. அதுக்குத் தான் சொல்றேன். எங்கயாது போய்த் தொலைங்கன்னு… ஆனா, நான் சொல்ற வரை இங்க வராதீங்க. கெட்- ஆவட்” என்று இருவரையும் வெளியே விரட்டி விட்டவன், வீட்டுக்குள் வந்து உறங்கும் சைத்ராவை பார்த்தபடி ஹாலில் அமர்ந்துகொண்டான்.
இங்கு விஷ்ணுவுக்கு முகில் சொன்னது புரியாவிட்டாலும் மீராவை தன்னோடு தனியாக வெளியே அனுப்பி வைத்ததற்காக மனதுக்குள் முகில் நீ வாழ்க என்று சொல்லிக்கொண்டான்.
விஷ்ணு மீராவை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.
அழகாய் தென்னை ஓலையில் சின்னச் சின்னக் குடில் போட்டு, அதில் மண்பாண்டங்களில் உணவு பரிமாறப்படுவதை வியந்து அவள் பார்த்துக்கொண்டிருக்க, மீராவின் கண்களில் விழுந்து இவன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இந்த இடம் உனக்குப் புடிச்சிருக்க மீரா?” என்றவனைச் சிறு புன்னகையோடு பார்த்த மீரா,
“ம்ம்ம் ஆமாங்க, இந்த இடம் ரொம்ப அழக இருக்கு, நான் இதுமாதிரி குடில் எல்லாம் பாத்து இல்ல. ஒரு மாதிரி மனசுக்கு இதமா இருக்கு இந்த இடம்”
“ஏன் மீரா நீ கிராமத்துக்கு எல்லாம் போனது இல்லயா?”
“இல்ல விஷ்ணு… நெறய கன்ட்ரிக்குப் போயிருக்கேன். பட், கிராமத்தில் இருந்தது இல்ல… எங்களுது நாடோடி வாழ்க்கை. ஒரு இடத்தில் நிலையா இருக்க முடியாது. ஓடிட்டே இருக்க லைஃப். கிராமம் எல்லாம் அமைதியான அழகான வாழ்க்கை வாழத்தான். எங்களை மாதிரி ஆளுக்கு இல்ல.”
“யூ டோண்ட் வொறி மீரா. என்னோட சொந்த ஊர் ஒரு அழகான கிராமம் தான். அங்க ஒரு வீடும் கொஞ்ச நிலமும் இருக்கு, கொஞ்சம் வயசானதுக்கு அப்புறம் நம்ம அங்கயே போய் செட்டில் ஆகிடலாம்” என்க, சுற்றி அந்த இடத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மீரா, அவன் சொன்னதின் அர்த்தம் உணராமல், “ம்ம்ம் சரி” என்று தலையாட்டியவள் கண்கள் ஒரு நொடி இப்படியும் அப்படியும் ஓட, திரும்பி விஷ்ணுவை பார்த்து,
“இப்ப நீங்க என்ன சொன்னீங்க?” என்று கேட்க, விஷ்ணு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“அது வருங்காலத் திட்டம் தான் மீரா, இப்ப எதுக்கு அது… விடு. நீ முதல் எனக்கு இதைச் சொல்லு. ஏன் அந்த முகில் பையன் நம்ம வீட்டு இருந்து கழுத்தை புடிச்சி தள்ளாத குறைய வெளிய விரட்டி விட்டான். அப்படி அவனுக்குத் தனிய அங்க என்ன வேலை?” என்று கேட்டதும் மீரா முகம் மலர்ந்தது.
“ஏய் மீரா உன் முக மாற்றத்தை பார்க்கும்போது ஏதோ நல்ல விஷயம்னு தோனுது. நான் சொல்றது சரியா?” என்றவனைப் பார்த்து வேக வேகமாக ஆமாம் என்று தலையாட்டிய மீரா, முகில் அவளிடம் சொன்னதை எல்லாம் ஒரே மூச்சில் விஷ்ணுவிடம் சொல்லி முடிக்க, விஷ்ணு திகைத்து விட்டான்.
“அடப்பாவி… நான் சைத்து பத்தி சொல்லும்போது அவளைக் கட்னா, என் காதுக்குக் காரியம் பண்ணவேண்டி வரும். ஆளா வுடுடா சாமின்னு டைலாக் எல்லாம் பேசிட்டு, இப்ப ஐஞ்சு நிமிஷத்துல பொண்ணு கேட்டு, நிச்சயம் பண்ணி, ரிகர்சல் பாக்குற அளவுக்குப் போய்ட்டானா… அப்ப நான் தான் ஆவுட்டா? டேய் விஷ்ணு போறப்போக்கை பாத்த, சீக்கிரமே ஆதவ்ஆழி, முகில் சைத்துக்குப் பொறக்கப்போற புள்ளைகளுக்கு, கிழக்குச் சீமையிலே படத்துல வர்ர விஜயகுமார் மாதிரி சீர்வரிசை தட்டை தூக்கிட்டு போகும் நாள் வெகு தொலைவில் இல்ல போலியே…” என்று சற்று சத்தமாகவே புலம்பியவன், “கடைசில கமிட்டே ஆகமாட்டேன்னு திரிஞ்சதுங்க எல்லாம் மிங்கிள் ஆகிடுச்சு, புடிச்ச பொண்ணை எதிர்லயே வச்சிட்டு நான் மட்டும் சிங்கிள்ல இருக்கேன். என்ன கொடுமை மீரா இது” என்று புலம்பிக் கொண்டிருந்தவனைப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா.
“விஷ்ணு உங்களுக்கு என்ன ஆச்ச?? என்னென்வோ புலம்பிட்டு இருக்கீங்க. ஆதவ் ஆழி பத்தி வேற என்னமோ சொல்றீங்க, முகில் கூட அவங்களைப் பாத்தி எதோ சொன்னாரு… என்ன அது?” என்றவளை முறைத்து பார்த்த விஷ்ணு,
“நான் ஆதவ், ஆழி பாத்தி பொலம்புனது மட்டும் உன் காதலு விழுந்துச்சு, அதைச் சொல்லும்போது இடையில உன்னையும் என்னையும் பத்தி ஒன்னு சொன்னேனே அது உன் காதுல விழல அப்படித் தானா” என்றதும் மீரா தலையைக் குனிந்து கொள்ள, விஷ்ணுக்கு அய்யோ என்றிருந்தது.
“நம்ம கொடைக்கானல்ல இருக்கும் போது ஆதவ் ஆழிய அடிச்சிட்டு வெறிநாய் மாதிரி கொலச்சிட்டு போனானே உனக்கு நெனவு இருக்க?” என்று கேட்க,
“ம்ம்ம் ஆமா… ஞாபகம் இருக்கு. அன்னைக்கு அவர் விட்ட அரையில ஆழி கன்னத்துல இருந்த வீக்கம் குறைய ரெண்டு நாள் ஆச்சே… அதை எப்படி மறக்க முடியும்.”
“ம்ம்ம் ஆமா… அவன் அப்படிப் பொண்ணுங்களைக் கைநீட்ற டைப் இல்ல. அப்படி பட்டவன், ஆழிய அடிச்சதும் எனக்குப் பெரிய ஷாக். அதான் சென்னை வந்த உடனே, ஆதவ்வை தனிக் கூப்டு பேசினோம். அப்ப தான் அவன் ஆழிய விரும்புறத சொன்னான்” என்றவன் மீராவின் முகம் பார்க்க அவன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை.
“என்ன மீரா நான் விஷயத்தைச் சொன்னதும் நீ ஆச்சரியப்படுவன்னு பாத்த… நீ ரொம்பக் கேஷுவலா இருக்க? மொத்தத்தில் இந்த மேட்டர்ல உன்னோட ரியாக்ஷன் இவ்ளோ தானா…?!”
“ம்ஹூம் அப்படி இல்ல விஷ்ணு. எனக்குத் தெரியாத புது விஷயம் எதாவது சொன்னா ரியாக்ட் பண்ணலாம். பட், எனக்குத் தான் ஆதவ் ஆழிய விரும்பு விஷயம் தெரியுமே, அன்னைக்கு அவர்விட்ட அறையே அவர் மனசை தெளிவ சொல்லிடிச்சே… அதான் அமைதிய இருந்தேன்.”
“ம்ம்ம் கரெக்ட் தான். ஆதவ் ஆழிய விரும்புறேன்னு சொல்லும் போது எனக்குக் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. என் தங்கச்சி இருந்த இடத்தில் இன்னொரு பொண்ணான்னு. பட், அதுக்காகக் காலம் முழுக்க ஆதவ்வும் நிலாவும் தனியவே வாழ முடியாது இல்ல. அதான் என்னை நானே தேத்திக்கிட்டேன். அப்புறம் நீ அன்னைக்கு ஆழிய பத்தி சொன்னதையும் அவன்ட்ட சொன்னேன். அப்ப தான் அவன் அவ என்னைக் கட்டிக்காட்டி பரவாயில்ல, நான் அவளைக் கட்டிக்கிறேன்னு சொன்னான். அதைத் தான் முகிலும் உன்கிட்ட சொல்லி இருக்கான்” என்று சொல்லிச் சிரிக்க, அவனோடு சேர்ந்து மீராவும் சிரித்தாள்.
“எப்படியோ விஷ்ணு அவங்க ரெண்டு பேருக்கும் நல்லது நடந்தால் எனக்குச் சந்தோஷம் தான்” என்றவளை நிமிர்ந்து உற்று பார்த்தவன், “அப்ப நீ?” என்று கேட்க, மீரா மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள்.
“பதில் சொல்லு மீரா… அவங்க ரெண்டு பேரும் செட்டில் ஆகிடுவாங்க ஒகே. அப்ப நீ?” என்றவனைப் பார்த்து இதழ்களைப் பிதுக்கியவள், “தெரியலை” என்று சொல்ல,
“ம்ம்ம்ம் நல்ல பதில் தான். சரி சரி அந்த இல்லய அப்படியே இல்லனே வை. அவங்க நாலு பேரோட மேட்டர் முடிஞ்சது நான் அதை ஆமாம்ன்னு ஆக்கிடுறேன்.” என்றவைன புரியாமல் பார்த்த மீரா,
“இப்ப நீங்க என்ன சொன்னீங்க? எனக்கு ஒன்னுமே புரியல…” என்று முழிக்க,
“ம்க்கும் சொன்ன எனக்கே புரியல… அப்புறம் உனக்கு எங்க இருந்து வெளக்கி சொல்றது. அதெல்லாம் ஒரு ஃப்லோ பேசுறதமா… அதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. வேணும்னா ஷார்ட் சொல்லட்டா?” என்றவனைப் பார்த்து மீரா தலையாட்ட,
“அதாவது ஆதவ் ஆழிய, முகில் சைத்துவை பிக்கப் பண்ற மாதிரி விஷ்ணுவுக்கு மீரான்னு பிக்கப் பண்ணப்போறேன். அதுவரை வேற யார் பொண்ணு கேட்டாலும் இல்லைனு பதில் சொல்லு, எனக்கு மட்டும் ஆமா சொல்லுன்னு சொன்னேன். இப்பவா இங்கிருந்து போலாம்” என்று எழுந்து கொள்ள, மீரா ஸ்லோமோஷனில் கண்களைச் சிமிட்டியபடி விஷ்ணுவை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹலோ இனிமே காலம் முழுக்க நீ இந்த முகத்தைத் தான் பாக்கப்போற… இப்ப எழுந்துவா வேற எங்கயாது போலாம்” என்றவன் அவள் கையைப் உரிமையாகப் பிடிக்க, அந்த அழுத்தம் அவள் மனதை அழுத்தியது.
இங்கு வீட்டில் உறக்கத்தில் இருந்து எழுந்த சைத்ரா, “ஆழி… ஆழி” என்றழைக்க,
“அவ இங்க இல்ல. அவ ஆதவ் கூட அப்பவே போய்ட்டா” என்ற குரலில் கட்டிலில் இருந்து சட்டென இறங்கியவள், வெளியே வந்தாள்.
அங்கு ஃபோனை பார்த்தபடி அமர்ந்திருத்த முகிலை பாத்தவள், “நீங்க இங்க என்ன பண்றீங்க? மீரா எங்க?” என்றவள், “மீரா… மீரா” என்று குரல் கொடுக்க,
“மீராவும் வீட்ல இல்ல. வெளிய போயிருக்க?” என்றது சைத்ரா பட்டெனத் திரும்பி முகிலை பார்க்க, அவன் கவனம் முழுவதும் ஃபோனிலேயே இருந்தது.
சைத்ராவுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிய, முகில் எதிரில் அமர்ந்து அவனையே உற்று பார்க்க, அவனும் நிமிந்து அவளைப் பார்த்தான்.
“ஓய் என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்டி குறுகுறுன்னு என்னையே பார்த்துட்டு இருக்க நீ? எதாவது வேணுமா? என்றவன், “ஓஓஓ உனக்குப் பசிக்குமில்ல... அதுக்காக என்னை இப்படி வச்சகண்ணு வாங்க பாத்த எப்படி சைத்து? என்னை எல்லாம் திங்க முடியாதும்மா. இரு நான் போய் உனக்கு எதாவது எடுத்துட்டு வரேன்” என்றவனை முறைத்த சைத்ரா,
“இங்க என்ன நடக்குது?” என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள்.
“இங்கய… இங்க நான் தான் இப்ப கிச்சனுக்கு நடக்குறேன்”
“ப்ச்... என்ன ஜோக்க… இதுக்கு நான் சிரிக்கணுமா?
“அது உன்னோட இஷ்டம். நான் போர்ஸ் பண்ணமாட்டேன்” என்க, சைத்ராவுக்கு நிஜமாகவே கோபம் வந்து விட, ஸ்டாப் திஸ்ட் நான்சென்ஸ்” என்று கத்தியே விட்டாள்.
“எனக்குச் சும்மா ஒரு தலைவலி, காய்ச்சல் வந்தலே ஆழியும் மீராவும் என்னை அப்டி பாத்துப்பாங்க. ஆனா, இப்ப நான் என்ன நிலையில் இருக்கேன்னு தெரிஞ்சும் அவங்க இங்க இல்லயின்னா, அது நார்மல் இல்லனு எனக்குப் புரியாத மிஸ்டர். முகில். ஓகே அழிகூட நிலா பாப்பாகாக ஆதவ் கூடப் போயிருக்கலாம். பட், மீரா அவ கண்டிப்பா என்னைத் தனிய விட்டுப் போயிருக்க மாட்டா… அப்படி அவ போயிருக்கானா, அதுக்கு என்ன அர்த்தம்” என்று கொதிக்க, அவள் முன் அவளைவிட அதிகக் கொதிநிலையில் இருந்த சூப்பை வைத்தான் முகில்.
“பேசி பேசி… சாரி கத்தி கத்தி டயர்டா இருப்ப, இந்த இதைக் குடி. குடிச்சிட்டுத் தெம்பக் கத்து” என்றவனை வெட்டவ, குத்தவா என்பது போல் முறைத்தாள் சைத்ரா.
“நீ கேட்ட எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல. நான் கொஞ்சம் வெளிய போறேன், நான் திரும்பி வர்ர வரை சைத்துக்குத் துணைய இருங்க முகில்னு, மீரா ரொம்ப ரெக்வஸட் பண்ணி கேட்டனால தான் நான் இங்க இருக்கேன். சும்மா என்னையே பாத்துட்டு இருக்காம, சூப்ப குடி” என்றவனை வெறித்துப் பார்த்த சைத்ரா,
“என்ன முகில் சார். என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க போல?” என்று நக்கலாகக் கேட்க, அதுவரை ஃபோனை பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிராமல், விழியை மட்டும் உயரத்தி சைத்ராவை பார்க்க,
“என்ன என்னைப் பத்தி ஆழியும் மீராவும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்ல… அதான் சாருக்கு என்மேல சிம்பத்தி வந்துடுச்சு. பாவம் இந்தச் சைத்ரா, இவளை எல்லாம் யாரு கட்டிக்குவா, பேசாம நம்மளே வாழ்க்கை குடுக்கலாம்னு நினைக்குறீங்க… என்ன சரிய” என்றவள் முகம் சட்டென மாற,
“ஏன்டா நீ தியாகி ஆக நான் தான் கெடச்சனா? எனக்கு வாழ்க்கை குடுன்னு நான் கேட்டான? கேட்டனாடா… எங்க அந்த ஆழியும் மீராவும். நீ கேட்டதும் ஓகே சொல்லிட்டு ஓடிட்டாங்களா… சைத்துவுக்கு உங்கள விட்ட யாரும் வாழ்க்கை தரமுடியாது. எப்டியாது அவளை ஏத்துக்கோங்கன்னு சொன்னாங்களாக்கும்” என்று அவள் கண்டபடி கத்த, முகில் அமைதியாக எழுந்து அவள் அருகில் வந்தான்.
“கொஞ்சம் எழுந்து நில்லு” என்றவனை அவள் முறைக்க,
“ஏய் சொல்றேனில்ல எழுந்து நில்லுடி” என்று அவன் கத்த, அந்தச் சத்ததில் சட்டென எழுந்து நின்றாள் சைத்ரா.
முகில் மேலிருந்து கீழ் வரை அவளை நன்கு பார்த்தவன், “ஆமா உனக்கு என்ன கேடு வந்துச்சுன்னு நான் உன்னைக் கல்யாணம் கட்டிக்கணும்னு சொல்லுடி. பாக்க நல்ல பொம்மை மாதிரி அழக இருக்க, கண்ணு, காது, மூக்கு வாய் இதெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் அழகப் பொருந்தி இருக்க. கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்க. நல்லா படிச்சிருக்க… அப்புறம் என்ன குறை இருக்குன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்.” என்றவனை அவள் புரியாமல் பார்க்க,
“ஏய் என்ன பாக்குற… நானெல்லாம் உன்னைப் போய்க் கல்யாணம்” என்று சிரித்தவன், “இங்க பாரு எனக்குன்னு வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்கு… புருஷனை இழந்த பொண்ணு, இல்ல தப்பான ஆள்கிட்ட மாட்டி விவாகரத்து ஆன பொண்ணு, இல்ல வரதட்சணை குடுக்க முடியாமல் கஷ்டப்பட்டும் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு, இப்படி எதாவது ஒரு வகையில் கஷ்டப்படும் ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி காலம் முழுக்க அவளைச் சந்தோஷமா வச்சிக்கணும்னு ஒரு லட்சியத்தோட வாழ்ந்துட்டு இருக்கவன் இந்த முகில். அப்படி இருக்க உன்னைப் போய்க் கல்யாணம் பண்ணுவேனா நானு… சொல்லு பாக்கலாம். உனக்குத் தான் ஒரு குறையும் இல்லயே… சூப்பரா தானா இருக்க உன்னைக் கட்டிக்கப் பசங்க கியூ கட்டி நிப்பாங்க.” எனறவன் திரும்பி சைத்ராவை பார்க்க, அவள் இமைக்காமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இங்க பாரு சைத்து. உன்னை மாதிரி சட்டர் பாக்ஸ் (chatterbox) எல்லாம் எனக்குச் செட்டாகாது. என்னைக் கட்டிக்ப்போற பொண்ணுக்கு குறைந்தபட்சத் தகுதி அவ அமைதியான பொண்ண இருக்கணும். உதாரணத்துக்கு நம்ம மீரா மாதிரி இருக்கணும். அப்ப தான் என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும். உன்னை மாதிரி லொடலொட வாயை கட்டிக்கிட்டு என்னால குப்ப கொட்ட முடியாதுபா… எனக்கு டைம் ஆச்சு, நான் கெளம்புறேன்” என்றவன் சைத்ரா முகம் பார்க்க, அதில் சிறிதாகப் பொறாமை எட்டிப் பார்த்தது.
‘ம்ம்ம் சும்மா மீரா மாதிரின்னு சொன்னதுக்கே, மேடம் முகம் சுருங்கிப் போச்சு, ம்ம்ம்ம் நம்ம ரிவர் சைக்காலஜி சரிய வேலை செய்து,… இந்த ரூட்ல போனாலதான் இவளை நம்ம வழிக்கு இழுக்க முடியும்’ என்று நினைத்தவன், “நான் கெளம்புறேன்” என்றவன் முகம் முழுவதும் புன்னகையோடு
வெளியே நடக்க, சைத்ரா போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.