உள்ளத்தின் காதல் நீங்காதடி-29
உள்ளத்தின் காதல் நீங்காதடி-29
காதல்-29
உன்னை புரிந்துக்கொள்ள நான் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு என்பதை அறிவாயா? வெறும் ஐந்து நிமிடமே, அது உன் தாயை பற்றி நீ பேசிய அந்த ஐந்து நிமிடங்கள் உன்னை உணர்த்த போதுமானதாய், உன் காதல் எனக்கு மட்டுமே என்று என் மனது அடம்பிடிக்கிறது அறிவாயா?
உதய்யின் அன்பில் நினைந்த சுபாவிற்கு மீராவாகவே வாழ்ந்து விட ஆசை தான், முடிந்த மட்டும் அவள் அவனிடம் தன்னை மறைத்தும்,அவனை ஏமாற்றியும், இப்படியாக காலத்தை கழித்துக்கொண்டிருந்தாள்.
அவள் களவும் வெளியேவரும் நாள் வந்தது, காதலர் தினத்தன்று காலையே நிறைய கடைகள் ஏறி இறங்கி, அவள் வாங்கியே பரிசே அவளது முகம் பதியப்பட்ட வாட்ச், நம்பர் மற்றும் முள் அவளது போட்டோவில் அமைக்கப்பட்டிருக்கும், அதை ஹார்ட்டின் பாக்ஸில் இட்டு அதன் மேல் சிவப்பு கிப்ட் பேப்பர் ரோல் பண்ணியவள் அதன் மேலே கோல்டன் ரோப்பை கட்டி ‘To my love’ என்று எழுதியிருந்தாள்.
அதை வாங்கியதும் உதய்யிற்கு அழைத்தவள், அவன் எங்கே உள்ளான் என்பதை தெரிந்துக்கொண்டு அவனிடம் விரைந்தவள்.அவனை கண்டதும் இருக அணைத்தும்க்கொண்டாள்.
இது வரை உதய் அவளை தீண்டியதில்லை, சுபாவிற்கு அவன் கை பிடிக்க ஆசை வரும். அப்பொழுது அவளே சென்று பிடிப்பாள், ஆனால் உதய் நாகரிகமாக அதை விலக்கிவிடுவான்.
ஏனோ அவனுக்கு அது பிடிக்கவில்லை. இன்று அவள் இப்படி அணைக்கவும் முதலில் ஸ்தம்பித்தவன், அவளை மெல்ல பிரித்தெடுக்க துவங்கினான்.அதில் எல்லாம் அசையாதவள், அவனை மேலும் இறுக்கிக்கொள்ள. அந்த அணைப்பே ஒரு பிடிவாத அணைப்பாயிருந்தது, அவள் ராகினியின் மகளாயிற்றே சற்றேன்னும் அந்த குணம் இருக்குமல்லவா?
சிறிது நேரம் போராடிய உதய் “மீரா…”என்று கண்டிப்புடன் அழைக்க.அந்த அழைப்பில் தீச்சுட்டாற் போல் விலகினாள் அவள்.
என்ன தான் மீராவாய் அவள் வாழ்ந்தாலும், மனம் கவர்ந்தவனின் வாயிலிருந்து வேறு பெண்ணின் பெயர் வருவதை அவளாலும் ஏற்க முடியவில்லை.அது பெண்ணின் இயல்பே. தன்னையே திட்டிக்கொண்டவள்.
“சாரி உதய்”என்று வாய் திறந்தவள்.சிறிது நேர அமைதிக்கு பின் “ஹாப்பி வேலண்டைன்ஸ் டே”என்று உரைத்து அந்த கிப்ட்டை அவனுக்கு வழங்கினாள்.
அதை சின்ன சிரிப்புடன் பெற்றுக்கொண்டவன். அதை வாங்கி பிரிக்க போகையிலே அது பேக் செய்திருந்த விதம் மனதை கவர, அதை அப்படியே வைத்து தனது கேமராவில் புகைப்படம் எடுத்தான்.
சுபா ஆர்வமாய் அவன் முகம் பார்த்து நிற்க, அவன் அதை பிரிக்க போகையில் சுபாவின் செல் அலற, எடுத்துபார்த்தவள் தந்தை என்றதும் உடனே எடுத்தாள்.
“ஹலோ ப்பா”
“வீட்டுக்கு வா”என்றதோடு அவர் அழைப்பேசியை வைத்துவிட.தலையும் புரியாது,, வாலும் புரியாது முழித்தவள். தந்தை தன்னிடம் இப்படி பேசும் ஆள் இல்லையே. அவளது மனதிற்கு ஏதோ புரிந்தது.
“உதய்…நான் கிளம்பணும்”அவள் படபடக்க.
“என்னாச்சு எனிதிங் சீரியஸ்?”
“தெரியலை போனாத்தான் தெரியும்”,
“நான் ட்ராப் பண்ணவா?”
“இல்ல இல்ல ப்பா ஏதோ கோவமா பேசுறாரு, நம்ம விஷயம் தெரிஞ்சிருக்குமோ?”அவள் வினா எழுப்ப.
“சோ வாட், தெரிஞ்சா தெரியட்டும்”அவன் தோளை குலுக்க.
“அது இல்ல உதய், அப்பா கோவப்படுவார்”
“என்ன நீ, அவருக்கு என் மேல் எந்த கோபமும் இருக்காது, நீங்க கிளம்புறதுக்கு முன்ன வரை என்ட்ட பேசுனாங்களே”
“சோ, அது இல்லைப்பா அப்போ நீங்க சின்ன பையன் அதுனால கோபம் காமிச்சிருக்கமாட்டாங்க”
“ஹே, கம் ஆன் எனக்கு தெரிஞ்ச வரை குணா அங்கிள் ரொம்ப நல்லவரு, அவர் அப்படிலாம் கண்டிப்பா பண்ணவே மாட்டாரு, நீ கவலைப்பாடாத” அவன் அவளை தேற்ற.
“எனி வே, ஐ நீட் டூ கோ, வில் மீட் யூ சூன்” என்று அவள் குழப்பமான மனதுடன் கிழம்ப.
“போய்டுவியா? முகமே சரியில்லை நான் வரேன்னே,” உதய்யின் அக்கறையில் நெகிழ்ந்தது அவள் மனம்.
‘காலம் முழுக்க இவன் தனக்கு வேண்டும் ‘ என்று அவள் மனது வேண்டிக்கொள்ள, பாவம் அவளுக்கு தெரியவில்லை அதற்கு ஆயுள் மிகவும் குறைவு என்பது.
அவன் கைகளை பற்றியவள் “போய்டுவேன் பா, எதாச்சும் பிராப்ளம்னா உன்னை கூப்பிட போறேன்” அவள் சிறிதாய் புன்னகைக்க.
அவளது சற்றே தெளிந்தார்போன்ற தோற்றத்தால் நிம்மதி அடைந்தவன் “சரி, பாத்து போ, இத அப்டியே விடக்கூடாது, சீக்கிரம் நம்ம விசயத்தை சொல்லிடுவோம்” என்றான்.
அவள் மனம் துணுக்குற்றது. ‘ஐயோ, தப்பு பண்ணிட்டேன், உங்கிட்ட உண்மையை சொல்லவும் முடியாம, பொய்யா வாழவும் முடியாம, நரகம்” அவள் மனது துடிக்க.அவளது கண்கள் குலமாகியது. அவனை நேராய் பார்த்தவள் “நடக்குமா?” அவன் கண்களை நேராய் பார்த்து.
“ஹே, இப்ப எதுக்கு நீ கண்ண கசக்குற, கண்ணை துடை, என்னை தவிர உன் கழுத்துல வேற யாரையும் தாலி கட்ட விடமாட்டேன் மீரா” இதுவரை மகிழ்வுடன் கேட்டுக்கொண்டிருந்தவள் அவன் முடிக்கையில் “மீரா”என்று முடிக்க துடித்துப்போனாள்.
அவள் கண்களின் வலியை பார்த்தவன். அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.மறுபடியும் அவள் அழைப்பேசி சினுங்க அவளது தந்தையே. அவசரமாய் அவள் கிளம்ப நினைக்க அதை தடுத்தவன் “இரு, ஒரு போட்டோ” என்றான்.
அதில் திடுக்கிட்டவள் “எ…துக்கு?”என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஃபேஸ் புக்ல போட” அவன் அவள் தலையில் இடியை இறக்க. அவளின் பயந்த நிலையை பார்த்தவன்.
“ஹே, ஜில் நம்ம லவ்வை இந்த உலகிற்க்கே உணர்த்த போறேன்” அவன் மந்தகாச புன்னகை சிந்த.
பயத்தில் கை , கால்கள் நடுங்க அவள் அவனை முகம் வெளிரிப்போய் பார்க்க.
அவளது நிலையை பார்த்தவன் “உனக்கு விருப்பமில்லாட்டி விடு” என்றான் புன்னகையுடன்.
“அப்படிலாம் இல்ல, சரி” என்றவள் தனது முகத்தை துப்பட்டாக்கொண்டு மூடியவள் கண்கள் மட்டும் தெரியுமாறு நிற்க.
அவளது கோலத்தை ரசித்தவன் “இதுக்கு நீ போஸ் குடுக்காமயே இருக்கலாம்”என்று அவளை செல்லமாய் வைதான்.
பின் அவளை தோளோடு அணைத்தப்படி போட்டோ எடுத்தவன், அவளுக்கு பிரியாவிடைக்கொடுத்து அனுப்பியதும் முகநூலில் அந்த போட்டோக்களை பதிவேற்றியிருந்தான் (அதைத்தான் மீரா கடந்த காலத்தில் பார்த்தது…)
***
வீட்டை அடைந்த சுபா ஹாலிற்க்குள் நுழையும்போதே வீட்டின் மயான அமைதி ‘ஏதோ தவறாய் இருப்பதை உணர்த்த, உள்மனதின் ஏதோ ஒரு உந்துதல்’
அவள் வரவை எதிர்நோக்கி காத்திருந்தார் போல், அவளது தந்தை ராஜா ரூத்ரமூர்த்தியாய் அமர்ந்திருந்தார். உடன் அவளது தாய் ராகினி கண்ணத்தை பிடிதாற் போன்று அமர்ந்திருந்ததே, அவர் கன்னம் பழுக்க அறை வாங்கியுள்ளார் என்பதை அவளுக்கு உணர்த்த, கை, கால் நடுங்க துவங்கியது. அவள் அதே இடத்தில் வேரூன்றி நிற்க.
“உள்ள வா” அதிர்ந்தது ராஜாவின் வார்த்தைக்கு அந்த வீடே.
அவள் பூமிக்கு வலிக்காமல் மெல்லடி எடுத்து வைத்து வர, அவளை அழுத்தமாய் பார்த்திருந்தார் அவளது தந்தை. ஒரு வழியாய் அவள் அவருக்கு சரியாய் இரண்டடி தள்ளி நிற்க.
“ஏன் இப்படி பண்ணின” அவர் அவளை குற்றப் சுமத்தும் பார்வை பார்க்க.
__________
“உன்னைத்தான்” அவர் அழுத்திக்கேட்க.
___________
“பதில் சொல்ல போறியா இல்லையா? இவள் உன்னை மிரட்டி செய்ய சொன்னா, உனக்கு எங்கப்போச்சு அறிவு? அதுக்கு அப்றம் எத்தனை முறை என்கிட்ட பேசின ஒரு தடவையாச்சும் சொன்னீயா?” அவர் அவளை அக்னிபார்வை பார்க்க.
அதில் நடுங்கியவள் “ப்பா…”என்று ஆரம்பிக்க ‘பளார்’ என்று காதை கிழித்துக்கொண்டு வந்த அந்த பெரும் சத்ததில் அந்த இடமே அதிர்ந்தது.
சுபா சற்று தள்ளி விழுந்திருந்தாள், முதல்முறை ஒரே ஆசை மகளை அடிக்கிறார் ராஜா, எத்தனை பாசமான தந்தை என்றாலும், மகள் தவறிளைத்தால் தண்டிக்கும் கடமை தனக்கு உள்ளதாகவே அவர் நினைக்கிறார்.அதுவும் ஒரு பொருப்பற்ற மனைவியை வைத்திருக்கும் அவர் கண்டித்து தானே ஆகவேண்டும்.
சுபா அழுது கரைய “நீ வேணும்னேத்தான் மறச்சிருக்கே, அப்போ நீயும் இதுக்கு கூட்டு, வெக்கமா இல்ல, என் பொண்ணா நீ, எனக்கே அசிங்கமா இருக்கு” அவர் அவளை கேவலமாய் பார்க்க. அந்த பார்வையில் நொறுங்கியவள்.
“சா…ரி ப்பா” அவர் காலை அவள் பற்ற முயல.அவளை உதறி தள்ளியவர்.
“ச்சீ, தொடாத, உன்னை பாத்தாலே எனக்கு பிடிக்கல” என்றார் அதீத வெறுப்பில்.
“ப்பா…சாரிப்பா, நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன், ப்ளீஸ்ப்பா பேசுங்க பா” அவள் கெஞ்ச.
“அப்டியா சரி…” சிறிது நேரம் யோசித்தவர் “உதய் கிட்ட உண்மையை சொல்லிடு” என்று அவர் முடிக்க. அதிர்ந்துவிட்டாள் பெண், “ப்பா” என்று அவள் மெதுவாய் முணங்க.
“முடியாதா? இது உன்னோட வாழ்க்கையா? நீ வாழுறது ஒரு வாழ்க்கையா? நீ பண்ணின வேலையை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு, ஏற்கனவே இவ அந்த குழந்தைக்கு பண்ணின பாவம் பத்தாதா?” அவர் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க.
அவர் மகளிடமிருந்து வெறும் அமைதி மட்டுமே. “இப்போ கூட உன் மனசு மாறலைல, என் குணத்துல கொஞ்சமாச்சும் உனக்கும் இருக்கும்னு நினைச்சேன், தப்பு என் மேலயும்தான் இவளையும் உன்னையும் அப்பவே எதிர்த்து கேள்விக்கேட்டு, கண்டிப்பா வளர்த்திருக்கணும்” அவர் வருத்ததுடன் முடிக்க.
“ஏங்க…” ராகினி வாயை திறக்க.
“அடச்சீ…நீ பேசாத, உன்னோட இனிமேலும் வாழனுமான்னு நான் யோசிச்சு சொல்றேன்” அவர் தடாலடியாய் அவர்களின் உறவை முடிக்க நினைக்க.
அதில் அதிர்ந்தவர் “ஏங்க அப்படிலாம் சொல்லாதீங்க” ராகினி கண்ணீரோடு வேண்ட.
“உன்ன பேசாதன்னு சொன்னேன், நான் சுபாகிட்ட மட்டும் தான் பேசணும்” அவர் மகளை தீப்பார்வை பார்க்க.
“சாரி ப்பா” அவள் முனங்க.
“எனக்கு எதுக்கு மா சாரி” அவர் அவளையே பார்க்க.
“அவர்கிட்ட உண்மையை சொல்லி சாரி சொல்லிறேன் ப்பா” அவரின் கண்களை நேரில் பார்த்து அவள் கூற.
அவளின் கண்களின் உறுதியை கண்டவர் அவள் நிச்சயம் இதை செய்வாள் என்பது புரிய. அந்த தந்தை மனம் சற்று குளிர்ந்தது.
அதோடு அதே கண்களில் குற்ற உணர்வும் தெரிய, தன் மகள் செய்த தப்பை புரிந்துக்கொண்டதை நினைத்து மனது நிம்மதிக்கொண்டது.
உடனே பேச ஆரம்பித்தார் “உதய்…” அவர் உரக்க அழைக்க. வாசற்படியிலிருந்து உள் நுழைந்தான் உதய்.
அவனின் வருகையை சிறிதும் எதிர்பாராத இருவரும் நடுங்க, சுபாவிற்கு இதயத்தில் ஆணி அடிக்கும் வலி, அதை விட அவனின் பார்வை அருவருத்த பார்வை அவள் உலகமே நின்றவிட வேண்டினாள்.
இருவரையும் கேவலமாய் பார்த்தவன் ராஜாவிடம் சென்று “தாங்க்ஸ் அங்கிள்” என்றான்.
“சாரிப்பா, காலையில இவங்களுக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு வந்தேன், அப்போத்தான் சுபா உன்ட்ட பேசுனது எல்லாம் பாத்தேன். இது முன்னவே தெரிச்சிருந்த கண்டிப்பா இவ்ளோ தூரம் வந்திருக்காது. அதான் அவளை வரச்சொல்லிட்டு இங்க வந்து விசாரிச்சா, இவளோட பதில் எதுவும் சரியா வரல அதான் நாலு அடி போட்டு விஷயத்தை வாங்கினேன் உன்னையும் வரச்சொன்னேன்” அவர் வருத்தததில் முடிக்க.
“இட்ஸ் ஓகே அங்கிள்”என்று முடித்தவன். ராகினியிடம் விரைந்து.
“நீங்களாம் ஒரு தாய்த்தானா? நீங்க இப்போ பண்ணினதுக்கு பெயர் என்ன தெரியுமா? **** வேளை, ச்சைய், இந்த தமிழ்நாடு வீரதாய்களை கொண்ட நாடு, நீங்களாம்… பேசவே கேவலமா இருக்கு” அவரை புழுவைப்போல் பார்த்து வைத்தவன்.
நேராய் சுபாவிடம் சென்று ” உனக்கு என் மேல லவ் இருந்தா நீ சுபாவாவே ட்ரை பண்ணியிருக்கலாம், எதுக்கு மீராவை யூஸ் பண்ணின? ஓ கலட்டி விட்டுட்டு ஓடுறது தானே ப்ளானு, அதை மறந்துட்டேன் பாரு” அவளை ஏளனமாய் பார்த்தவன்.
“உன்ன நான் மீராவா மட்டும்த்தான் பார்த்தேன், முதல் பார்வையிலே உன்னை எனக்கு பிடிக்காம போனது உண்மை, அதுக்கு அப்றம் போட்டியே ஒரு வேஷம் . மீரா எனக்கு ஒரு நல்ல பிரண்டு தெரியுமா? அது ஒரு வேலை நாங்க சாகுற வரை மீட் பண்ணிகலைன்னா கூட அவ மனசுல இருந்து போகமாட்டா”
“எனக்கு உன்ன பாக்கவோ, பேசவோ கொஞ்சம் கூட விருப்பமில்லை, இனிமே என் வாழ்நாள் முழுமைக்கும் உன்னை நான் பாக்காம இருக்கனும்னு வேண்டிக்கிறேன்” ஆவளின் முகத்தை நேராய் பார்த்தவன் வெளியேறி இருந்தான்.
துரோகத்தின் தண்டனை விதவிதமாய் வழங்கப்படும், துரோகம் அதை மன்னிக்க மனம் இருப்பவரால் மன்னிக்கப்படலாம். ஆனால், அதே நம்பிக்கையை மறுபடியும் அவர்களின்பால் வர இயலாது.
மொத்ததில் துரோகத்திற்கு மன்னிப்பு உண்டு, மறுவாழ்வு இல்லை.
***
உதய்யின் மனது உலையாய் கொதித்தது, அதை அணைக்க இனி மீரா என்னும் மாயவளால் மட்டுமே முடியும்.
தனது ஒட்டு மொத்த கோபத்தையும் வண்டியில் காட்டியவன், நேராய் பீச் சாலையில் திருப்பி, அதில் கோபம் தீர பறந்தான்.
‘ எப்படி இது நடந்தது? ஒருத்தி இத்தனை மாதம் தன்னை ஏமாற்றியதை அவனாள் ஜீரணிக்கவே முடியவில்லை, தான் அத்தனை முட்டாளா? இதில் நான் போலீஸ் ஆக வேற ஆசை படுறேன், நான்லாம் எதுக்குமே லாயிக்கு இல்லை’
‘நம்புனேனே, மீரா… நீ மட்டும் என்கூடவே இருந்திருந்தா, இதுலாம் நடத்தே இருக்காது, நீதான் என்னை ஏமாத்திட்ட மீரா, நீதான். உன்னாலத்தான்’ அவன் குற்றம் சாட்ட.
கண்மண் தெரியாமல் அவன் ஓட்டியே வண்டி அவனது கட்டுப்பாட்டை இழந்தது, அதை நிறுத்த படாத பாடுப்பட்டவன், ஒரு பெரிய ஆலமரத்தில் மோதி நெற்றியில் காயம்பட மயங்கினின்.
***
உதய் அன்றைய நாளின் தாக்கத்திலிருந்து வெளியே வர அவன் மனைவியோ கதை கேட்பது போல் ஆவென பார்க்க. இவன் என்ன என்று ப
புருவத்தை உயர்த்தி கேட்வும் அதைக்கேட்டாள்.
“சுபாவை அவ்ளோ பிடிச்சதுன்னா கல்யாணம் பண்ணியகருக்கலாம்ல” அவள் நிறுத்த.
“என்ன உளருற, எனக்கு அவளை பிடிக்கும்னு நான் எப்போ சொன்னேன்?”
“அவளை நினச்சுட்டு போய்த்தானே, மரத்துல விட்டீங்க” அவள் குறும்பாய் முடிக்க.
“விளங்கும்” நேரடியாய் தலையில் அடித்துக்கொண்டவன். ” இது அவளை நினைச்சு விடல, ஒரு குட்டி பிசாசை நினைச்சதுல விட்டது” ஏக கடுப்பில் அவன்.
“அது ஆருங்க?” அவள் வினா எழுப்ப.
” அவளா என் செல்லம், அவளை நான் என்னன்ன பண்ணுவேன் தெரியுமா?”
அவள் இல்லை என்று தலை ஆட்ட “கிட்டவாயேன் சொல்றேன்” அவனின் அழைப்பே அவளுக்கு ஆபாய மணி அடிக்க வைக்க.
“இல்ல இல்ல அவங்க யாராயிருந்தா எனக்கென்ன? நீங்க கதைக்கு வாங்க அப்றம் என்னாச்சு?”
“பத்து நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன், பெரிய அடிலாம் இல்ல ஹெல்மெட் போட்டதால் உயிர் கியாரண்ட்டி, கால் தான் ப்ராக்ச்சர் ஆகி ரெஸ்ட் எடுக்க வேண்டித்தாகிடிச்சு” அவன் முகம் அந்த வலியை இப்பொழுதும் நினைக்க.
காதல் மட்டுமே தன்னவர்களின் வலியை தன் வலியாய் உணரும் வல்லமைபெற்றது, இங்கு உதய்யின் வலியில் அவளின்இதயம் முழுதாக உள்வாங்கிக்கொள்ள நினைத்து. அவனை தன்னுள் இருக அணைத்து அந்த வலியை தான் பெற்றல் நலம் என்று நினைத்தது.
அவளின் தீவிர யோசனையை கலைத்தான் உதய் ” அப்றம் உன்ன முதல் தடவை பார்த்தப்போ…”
“நிறுத்துங்க…” மீரா கோபமாய் இடைநிறுத்த.
“என்ன?” உதய் கேட்க
“எவ்ளோ கொழுப்பிருந்தா? என்னையவே அவ்ளோ கலாய் கலாய்பீங்க” அவள் பழைய வன்மத்தை தூண்ட.
” இதோட, உன்ன நான் கலாய்ச்சேனா? லைசன்ஸ் இல்ல, வாயீ உனக்கு”
“அதுலாம் இருந்துச்சு, மறந்து வச்சுட்டு வந்துட்டேன்” அவள் ரோஷமாய் முறுக்கிக்கொள்ள.
“அதுவும் தப்புத்தானே”
“கொஞ்சம் தப்புதான்”
“கொஞ்சம், நஞ்சம்லாம் இல்ல, தப்பு தப்புத்தான் யாரா இருந்தாலும் நான் விட்டுருக்க மாட்டேன்” அவன் ஒரு நல்ல அதிகாரியாக பேச.
“ஆனா எனக்கு கால் பயங்கரமா வலிச்சது தெரியுமா?”
“ஹேய், நடிக்காத நீ நடந்தா போன?”
“ஆ..மா…பின்…னே” அவள் தடுமாற.
“பொய், கேடி நீ யாருன்னு எனக்கு தெரியும்டி” அவன் உல்லாசமாய் சிரிக்க.
“ரொம்பத்தான் சரி சரி கிளம்பலாமா?” உதய் எங்கு அதை பற்றி கேட்டுவிடுவானோ என்ற பயம் அவளுக்கு வரதுவங்க அவனை கிளப்ப முற்ப்பட்டாள்.
“எங்க?” அவள் நன்றாக சாய்ந்து அமர்ந்துக்கொண்டு கேட்க.
“எங்கோ போகனும்னு சொன்னீங்களே” அவள் மழுப்ப.
“போலாம், என்ன அவசரம் டைம் இருக்கு”
மீரா அமைதியாகவே இருக்க அவனே துவங்கினான்.
“சொல்லு அவங்களை எப்போ பாத்த?”
அவள் பயந்த அதே கேள்வி, இதை எதிர்க்கொள்ள கூடாது என்று அவள் பயந்த கேள்வி, இதோ வந்துவிட்டது அவளை துளைக்கும் பார்வை பார்ப்பவனுக்கு பதில் கூறிவிடலாம், ஆனால் தன்னை தவராய் நினைத்துவிட்டால், அவளின் காதலை புரிந்துக்கொள்ளாமல் போய்விட்டால். இவள் கூறப்போகும் விஷயத்தால் அவர்கள் வாழ்வு இன்றோடு முடிந்தும் கூட போகலாம்.
பார்ப்போம்…
தொடரும்-30