நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
03
அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட, அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு மாதத்தில் அவனின் முகத்தில் இருந்த சாந்தமும் துறுதுறுப்பும் மறைந்து வேகமும் விவேகமும் நினைத்ததை அடைய வேண்டும் என்ற துடிப்பும் அவனை இந்த இடத்தில் நிறுத்தியிருந்தது. அவன் இப்போது காண்கிற லட்சியத்தில் ஒரு படி முன்னேறிய சந்தோஷத்தை அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு ஒரு தூண்டுகோலாக எடுத்துக்கொண்டான்.
அதனாலயே இதோ இன்று எட்டாக் கனி என்று நினைத்த அன்னையின் பாசத்தையும் அன்னையின் திருமுகத்தையும் காணவும் பெறவும் முதல்படி என்பது போல் ரயில் நிலையத்தில் ரயில்காக காத்துக் கொண்டு இருக்கிறான்.
காலத்தின் விதியோ, சதியோ எதனை கூறுவது, இருவரும் பிரிய காரணமாக இருந்த உயிரே அவர்களை இணைக்கும் பொருட்டு அதற்கான வழியை தேடிக் கொண்டு முன்னேறி செல்கிறது. இரு இணைகளும் சேரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வது போல் அவன் செல்ல வேண்டிய ரயில் நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.
வண்டியின் பெயரை சொல்லி சென்னை முதல் தொடங்கி அடுத்தடுத்த ஊர் பெயர்களை சொல்லி இறுதியாக சென்றடையும் ஊர் பெயரையும் கூறி அதன் வருகையை கச்சிதமாக சொல்லிக் கொண்டு இருந்தது அந்த ஒலிபெருக்கி.
அதன் சத்தம் நம் வசியின் காதினிலும் விழ, மெதுவாக எழுந்தவன் அடர்ந்து வளர்ந்த தாடியை நீவிய படியே அவன் பையை எடுத்துக்கொண்டு அவனது கம்பார்ட்மெண்ட் நோக்கி நடையிட்டான்.
ரயிலில் ஏறி அவனது இருக்கை எண்ணை தெரிந்து கொண்டு அமர்ந்தவன் பெரும் மூச்சொன்றை இழுத்து வெளியிட்டான். இந்த இடத்திற்கு வருவதற்கு அவன் விலை கொடுத்தது ஒருத்தரின் மன நிம்மதியை அல்லவா.
அதற்குள் அவனை காண்பதற்காக ரயில் நிலையம் வந்த விபு அவனின் இருக்கை எண் தெரியாது தவிப்புடன் நின்றான். அவனை கண்ட வசி அவன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“வசி எங்கடா இருக்க?”
“அடேய் நான் உன்ன பாத்துட்டேன்டா. அப்படியே லெஃப்ட் சைட் வா. நான் வெளியே வரேன்” என்று சொல்லி வைத்தான்.
அவனும், வசி கூறியது போல் இடப்புறத்தில் வர, சில நொடியிலே அவனை கண்டு கொண்டான் விபுனன். அவனை காணும் வரை இருந்த தவிப்பு மாறி கோபத்துடன் நின்றான்.
“மச்சி! நீ பண்றது சரியில்லைடா. இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா போற? அப்பா பாவம்டா அவர இப்படி டென்ஷன் படுத்திட்டு அங்க போகணும்னு இருக்கா என்ன?” என்று சீற்றத்துடன் கேட்டான்.
“கண்டிப்பா இருக்கு மச்சி. நான் யாருக்காக போறேன் என்னோட அம்மாவ பாக்க போறேன்டா. எங்க அம்மான்னு சொல்றதை விட அவங்கதான் எங்க ரெண்டு பேரோட உலகம்னு சொல்லலாம்டா. அப்படி இருக்கும் போது அந்த உலகம் எங்க கூட இல்லன்னா எப்படி அந்த வாழ்க்கை நல்லா இருக்கும் சொல்லு. காசு பணம் எவ்வளவுதான் இருந்தாலும் அம்மா, அப்பா, சொந்தம், பந்தம் கூட இருக்கிற மாதிரி வருமா என்ன? எனக்கும் குடும்பமா சந்தோஷமா எங்க அம்மா அப்பாவோட வாழணும்னு ஆசையா இருக்காதாடா. இவ்வளோ நாள் எப்படி வாழ்ந்தேன்னே தெரியல.
ஆனா, இனியும் அம்மாவ பிரிஞ்சி என்னால இருக்க முடியாது விபு. அது மட்டும் இல்ல எனக்கு என்னோட அம்மா, அப்பாவை ஒன்னா பாக்கணும்டா. எதுக்காக அவங்க பிரிஞ்சி வாழ்றாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா இனியும் அவங்க பிரிஞ்சி வாழ கூடாது மச்சி. அதுனாலதான் இப்போ போறேன். எனக்கு வேற வழி தெரியல அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சி” என்று நீண்டதொரு பெரிய பதிலை அவனுக்கு வழங்கினான்.
அவனின் விளக்கத்தை கேட்ட விபுவிற்கு தன் நண்பனின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. அதனாலே அவன் பதில் ஏதும் கூறாமல் அமைதியாகினான்.
“சரி விபு, நீதான் இனி அப்பாவையும் நம்ம கம்பெனியையும் பார்த்துக்கணும். எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரமாவே நான் அம்மாவ கூட்டிட்டு இங்க வந்துருவேன். அதுவரைக்கும் மட்டும் கொஞ்சம் பாத்துக்கோ மச்சி. இப்போ அப்பா கொஞ்சம் ஃபெட்பா இருப்பாரு. அதுனால அவரை நல்லா பாத்துக்கோடா. உன்ன நம்பிதான் அவரை இங்க தனியா விட்டுட்டு போறேன் பாத்துக்கோ மச்சி” என்று விட்டு ரயிலில் ஏறினான்.
“கண்டிப்பாடா. நான் இங்க எல்லாத்தையும் பாத்துக்குறேன் நீ கவலப்படாம போய் உன்னோட வேலையை முடி. நீ இங்க வரும்போது அம்மாவ கூட்டிட்டு வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு கவலப்படாம போ” என்று வசியை ஊக்குவிக்கும் விதமாக பேசி அவனை திடப்படுத்தினான் விபுனன்.
அதற்குள் ரயில் கிளம்பும் விதமாக ஒலிபெருக்கி மூலமாக சத்தம் வர, ”டேக் கேர் மச்சி” என்று வழியனுப்பி வைத்தான் விபு.
வசியும் புன்னகை முகத்துடனே அதனை ஏற்றுக் கொண்டு, ”யூ டூ மச்சி” என்றான்.
அடுத்த சில மணி துளியிலே ரயில் கிளம்பி விட, வசியும் அவனது இருக்கையில் அமர்ந்து கொண்டு இயற்கையின் வழி வரும் அந்த அழகிய சுவாசத்தை சுவாசித்தவாறே தன் தந்தையை எப்படி சம்மதிக்க வைத்தோம் என்பதை பற்றி சிந்திக்க தொடங்கினான்.
***
முடிவெடுத்த அன்றைய நாளிலே அவனது அனைத்து வேலைகளையும் முடிக்கும் எண்ணத்தில் தீவிரமாக வேலையில் இறங்கி செய்ய தொடங்கி இருந்தான்.
அதற்காகவே அவனுடன் அக்ரிமெண்ட் போட்டிருந்த கம்பெனி லிஸ்ட் எடுத்து பார்த்தவன், அவர்கள் ப்ராட்க்கெட் மார்க்கெட்டிங் பத்தி பார்த்தவன் உடனே விபுவை அழைத்தான்.
“சொல்லு மச்சி எதுக்கு கூப்பிட்ட?”
“விபு நீ என்ன பண்றன்னா” என்றவன் கம்பெனி பெயர்களை கூறி, ”இவங்க எல்லாருக்கூடயும் ஒரு மீட்டிங் அரேன்ஜ் பண்ணுடா கொஞ்சம் அர்ஜென்ட்” என்றவன் தன் வேலை முடிந்தது என தலையை லேப்டேப்பில் நுழைத்துக் கொண்டான்.
விபுவும் அவன் கூறியது போலவே, அந்தந்த கம்பெனிகளுக்கு அழைத்து ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தான் வேறு வேறு நேரத்தில்.
அடுத்த நாளே இந்த மீட்டிங் எல்லாம் இருந்ததால், இருவருக்கும் அதிக வேலை இருக்க போய் அன்றைய நாளை அங்கேயே கழித்தனர். அதனாலே அங்கே பாரியின் கலங்கிய நிலை யாரும் அறியா நிலை ஆகிப்போனது.
இரவு முழுவதும் வசியும் விபுவும் சேர்ந்து ஆட் சூட்டிற்கு தேவையான கன்டென்டையும் எங்கு எடுக்க வேண்டும் என்று சில பல இடங்களையும் யாரை வைத்து செய்வது என்று சிந்தித்து அதற்கான வேலையில் இருந்தனர். விடியற்காலையிலே வேலை எல்லாம் முடித்து, அங்கு அவர்களுக்கு என்று இருக்கும் அறைக்கு சென்று ஓய்வெடுக்க தொடங்கினர்.
விடிந்ததும் வேகமாக எழுந்து கிளம்பி, மீட்டிங் அட்டன் செய்தனர். அனைத்து மீட்டிங்கும் சிறப்புற மாலைப்போல் முடிவடைய, அடுத்தக்கட்ட வேலையைத் தொடங்கினர். அனைத்து வேலைகளையும் சக ஊழியர்களுக்கு பிரித்து கொடுத்து இருவரும் வேறு வேலையைப் பார்க்க சென்றனர்.
இரவு என்றும் பாராது இருவரின் தலைமையிலும் அந்த கம்பெனி வேகமாக செயல்பட, அதற்காகவே அடுத்த வாரத்திலே சூட் எடுப்பதற்கான பயணத்தில் வந்து முடிந்தது.
வசி நேரங்கடந்தே வீட்டிற்கு வருவதும் பாரி எழுவதற்கு முன்பே செல்வதுமாக இருக்கவே பாரியின் கவலை அவனுக்கு தெரியவில்லை. தன் மகனை நினைத்து பெரிதும் கவலை கொண்டார். அவர் குறை தீர்க்கும் இடமாக கண்ணம்மாவின் புகைப்படம் இருக்கும் இடமே இடமாகிப்போனது.
வசி ஊருக்கு கிளம்பும் நாள் அன்று காலையில்தான் தன் தந்தையை காணச் சென்றான் அவரது அறைக்கு. தினமும் இரவு வேளையில் அவரை கண்டு விட்டுதான் படுக்க செல்வான். ஆனால் அறைக்குள் வந்து பார்க்க மாட்டான் வெளியே இருந்தே பார்த்து விட்டு செல்வது என்று இருந்தவன் இன்றுதான் அவரது அறைக்குள் பிரவேசம் செய்கிறான்.
அவன் அறைக்குள் நுழையும்போதுதான் உடற்பயிற்சி முடித்துக் கொண்டு உள்ளே வந்தவர், ”என்னடா தம்பி நீ இன்னைக்கு இங்க இருக்கற, இந்நேரத்துக்கு வெளியல போயிருப்ப?” என்று சிறிது காட்டமாகவே கேட்டார்.
அவரது குரலில் திரும்பியவன், தந்தையின் முகத்தில் இருந்து வந்து வந்து மறைந்து போகும் வேதனையையும் வலியையும் கண்டு அதிர்ந்தவன், அது எதற்காக என்று யோசிக்க தொடங்கிய நேரம் அவனை உலுக்கினார் பாரிவேந்தர்.
“டேய் நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உன் கேர்ள் ஃப்ரண்ட்ஸ் கூட ட்ரீம்ல இருந்தா என்ன அர்த்தம்டா?”
அவரது குரலில் சுயநினைவு வந்தவன், ”அது வந்துப்பா கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது. அதான் சீக்கிரமா கிளம்பி போற மாதிரி ஆகிடுச்சி. அதுமட்டும் இல்லாமல் எனக்கு ஒரு ஆட் சூட் இருக்குப்பா அதுக்காக நான் ஒருமாதம் வெளியூர் போக வேண்டி இருக்கு”
“சரி எப்போ போகணும்?”
“இன்னைக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்குப்பா” என்றான் பார்வையை தளர்த்தி. இதுநாள்வரை அவன் தந்தையின் ஆலோசனையின்றி எந்த ஒரு வேலையும் செய்தது இல்லை. ஆனால் இந்த முறை அது எதுவும் இல்லாமல் சுயமாக சிந்தித்து ஒரு முடிவெடுத்து அதை நோக்கி செல்பவனுக்கு அது சிறு குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“சந்தோஷம்டா தம்பி, பாத்து பத்திரமா போயிட்டு வா” என்று சொல்லி அவன் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.
அதன்பின் வேகமாக நேரங்கள் கடந்து விட, சரியாக கிளம்பும் சமையம் தன் அன்னையின் புகைப்படத்தின் முன்பு வந்த வசி, ‘உங்கள பார்க்க சீக்கிரமே வந்துறேன் மா. அப்புறம் நம்ம மூணு பேரும் சேர்ந்து நிம்மதியான ஒரு வாழ்க்கைய வாழலாம்’ என்று நினைத்து விழி மூடி தன்னை சமன் செய்தவன், தந்தையை ஒரு நொடி ஆழ்ந்த பார்வையை பார்த்துவிட்டு கிளம்பினான்.
அவனின் பார்வையே அவருக்கு நிறைய விடயங்களை சொல்லியது போல் இருந்தது. அவன் ஏதோ முடிவெடுத்திருக்கிறான் என்பதை ஒரு தந்தையாக சரியாக புரிந்து கொண்ட பாரி அதை அவன் வாய் மொழி கேட்கும் நாளுக்காக காத்திருந்தார்.
அடுத்தடுத்து வந்த நாட்கள் வசிக்கும் விபுவிற்கும் வேலை சரியாக இருக்க, ஓய்வெடுக்கும் நேரம் கூட இல்லாமல் போனது.
எடுக்க வேண்டிய அட் சூட்டை திறம்பட எடுத்த வசியின் திறனை கண்டு அந்த ப்ராடெக்ட் கம்பெனிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே சிந்தனை எப்படியும் இந்த அட் ப்ராடெக்ட் அனைத்து மக்களையிடையும் சென்றடையும் அதைவைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எப்படி தொடங்க வேண்டும் என்பதே.
எடுக்க வேண்டிய அனைத்து விளம்பரப் படங்களையும் அந்த ஒரு மாதத்தில் எடுத்த வசியின் குழு சொந்த ஊரை நோக்கி பயணித்தது.
வந்ததும் எடிட்டிங் டீமோடு சேர்ந்து வேலையைத் தொடங்கிய வசி, அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு கம்பெனியே கதி என்று இருந்து விட்டான். விபுவை மட்டும் வற்புறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
அனைத்து வேலைகளும் முடிந்த பின்புதான் வசியால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. அதுவரை வேலையைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்த மனம் இப்போது தந்தையிடம் தனக்கு தேவையான பதிலை எப்படி வாங்குவது என்று யோசிக்க தொடங்கியது. அந்த நாள் அப்படியே செல்ல ஒரு முடிவை எடுத்தவன், அன்று இரவுதான் வீட்டிற்கே சென்றான் வசீகரன்.
வீட்டிற்கு வந்த வசிக்கு, எப்போதும் புன்னகையுடன் காட்சி தரும் கண்ணம்மாவின் புகைப்படத்தை பார்த்து, ‘மன்னிச்சிடுங்கம்மா நான் இதை பண்ணிதான் ஆகணும். இதுனால அப்பா மனசு எந்த அளவு கஷ்டபடும்னு எனக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல மா. இந்த செயல் கண்டிப்பா நம்மள ஒரு குடும்பமா சேர்க்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு’ என்று நினைத்தவன் கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு உள்ளே சென்றான்.
அவனிற்காகவே காத்திருந்த பாரி, ”வாடாமகனே, இப்போதான் உனக்கு இந்த வீடு இருக்குன்னு ஞாபகம் வந்துச்சா சொல்லு” என்று சிரித்தபடியே கேட்டாலும் காட்டமாகவே கேட்டார்.
“அப்படி இல்லப்பா ஒரு வேலையை தொடங்குறதுக்கு முன்னாடி முடிக்க வேண்டிய வேலைய முடிச்சிட்டா நமக்கு டென்ஷன் இருக்காது பாருங்க, அதான் இப்படி வேலை பாக்க வேண்டியதா போச்சி” என்று சலிப்புடன் கூறினான்.
“சரிடா அதுக்காக இப்படியா தாடி எல்லாம் வச்சி பாக்கவே சகிக்கலடா. நீ எவ்வளவுதான் தாடி வச்சி சுத்தினாலும் நான் இருக்கிற வரைக்கும் உனக்கு மவுஸ் இல்ல தம்பி, அதை நல்லா ஞாபகம் வச்சிக்கோ” என்று நக்கலாக கூறி அவனின் எண்ணவோட்டத்தை மாற்ற நினைக்க, அவனின் பதிலோ வெறும் புன்னகை மட்டுமாகவே இருந்தது. அதில் ஒரு உயிர்ப்பு இல்லாமல் இருந்ததாக தோன்றியது பாரிக்கு.
“சரிப்பா எனக்கு தூக்கம் வருது, நான் படுக்க போறேன் குட் நைட் டாட்” என்று சொல்லி அவரை இறுக்கி அணைத்தவன் அடுத்த நொடியே வேகமாக அவனது அறைக்கு மாடி ஏறி சென்று விட்டான்.
அடுத்த நாளின் விடியல் அதிரடியாக பிறந்தது. அவர் எதிர்பார்த்த நாளாக இந்நன்நாளும் அமைந்திருக்க, எதை அவன் வாய்மொழியாக கேட்க நினைத்தாரோ அது கேட்க நேரிடும் போது அவரின் மனநிலை எப்படி இருக்க போகிறதோ?
காலையில் எழுந்த பாரி, எப்போதும் போல் பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தியவர், உடற்பயிற்சி செய்யலாம் என்றெண்ணி கதவை திறந்து வெளியே வந்தவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
அந்த அதிர்ச்சியில், ”வசீ…” என அந்த வீடே அதிரும்படி கத்த, அதை கண்டு கொள்ளாதது போல் அவனது வேலையைத் தொடர்ந்தான்.