மயங்கினேன்.! கிறங்கினேன்.! 5

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 5

அத்தியாயம் 05

இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே சோர்ந்து போய் விட்டாள் பெண்ணவள்.

” மிஸ்டர் .தடியன் சார் ” 

“தடியன் சார்ர்ர்ர்..” 

” சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்… “

” நான் பாவம் சார் , எனக்கு இப்போ தலையே வெடிச்சிடும் , நீங்க இப்போ சொல்லலைன்னா ” என அவனை பாவமாக பார்க்க 

அவனோ அவளை முறைத்து விட்டு ,கடமையே கண்னென்று வண்டி ஓட்டுவதிலே குறியாய் இருந்தான் .

‘ஊஃப்ப் , இந்தாளோட ஒரே தொல்லையா இருக்கு பா ‘ என மனதோடு புலம்பியவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஜன்னலை வெறிக்க தொடங்கினாள்.

அவளால் , அது கூட சரிவர செய்ய முடியவில்லை.

முகத்தை திருப்பிக் கொண்டு , அமைதியாக இருக்க கூட அவளால் முடியவில்லை. 

” அப்படி என்ன நடந்திருக்கும்..?? நாம தான் தேவை இல்லாம கொசுவர்த்தி சுருள்ள உள்ள நுழைஞ்சிட்டோமோ ” என யோசனை செய்த படி இருக்க , அவள் முகமும் அழகாய் அவனுக்கு எடுத்து காட்டியது.

அவனுக்கு சிரிப்பு வந்தாலும் , ஏனோ அவள் இசையை தவறாக சொல்வது அவனுக்கு பிடித்தம் இல்லை.

சில மாதங்களே பேசி இருந்தாலும் , அவனின் உயிரில் அவனின் இசை கலந்திருந்தாள்.

இது யாவும் அறியாமல் அங்கே அம்மு என்ற பெண் , அவனுடனான வாழ்வை பற்றி கனவு காண தொடங்கி இருந்தாள்.

வெற்றி ‘இசை’ என்றிருக்க

அங்கே அம்முவோ ‘ மாறன் ‘ என்று மனதளவில் அவனை கணவனாக சுமக்க தொடங்கி இருந்தாள்.

ஒரு ஐந்து நிமிடம் சென்ற நிலையில் ,

“தடியன் சார்ர்ர்ர் , ப்ளிஸ் மீதி கதையை சொல்லுங்களேன் . அப்போ தானே உங்களால் இசையை‌ பற்றின என்னோட கருத்தை மாற்ற முடியும் சொல்லுங்க ” என சரியாக அவனை புரிந்து கொண்டது போல் சொன்னாள்.

அவளை பார்த்தவன் ,” சரி நான் சொல்றேன் . ஆனா இது என்னோட இசையை பத்தி நீ தெரிஞ்சிக்கனும்னு சொல்லல . நான் என் காதல் கதையை சொன்னா,  நீ அமைதியா இருப்பேன்னு ஒரே காரணத்துக்காக தான் சொல்றேன் ” என சொல்லி இதழுக்குள்ளே வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

“ம்ஹூம் ” என நொடித்து கொண்டாள் பெண்ணவள்.

அவனுக்கு அவளது செயல்கள் யாவும் சிறுப்பிள்ளையாகவே தோன்றியது..

“சரி சொல்றேன். நடுவில் இன்ட்ரப்ட் பண்ணாத புரியுதா ” என்று எச்சரித்தவன் அவன் காதல் கதையை முடிந்ததிலிருந்து சொல்ல துவங்கினான்.  

 

********

உற்சாகம் வடிந்து போய் ,சென்னை செல்லும் ரயிலில் அமர்ந்திருந்த அவனுக்கு மனம் முழுவதும் பாரமாக இருந்தது.

அவனே எதிர்பார்க்காத விதமாக அனைத்தும் நடந்திருக்க ,அவனால் தான் படும் துக்கத்தை கூட வெளியே சொல்ல முடியவில்லை.

மனம் முழுவதும் ரணமாக இருக்க ,அவனால் எதுவும் செய்ய முடியா நிலையை எண்ணி உள்ளுக்குள்ளே மறுகி போனான்.

ஊரிலிருந்து திருச்சிக்கு வரும்போது அத்தனை சந்தோஷத்தோடு இங்கே தன் தமையனின் மகவை காண ஆவலோடும் , அத்தோடு சேர்த்து இசையின் காதலோடும் சேர்த்து ஊருக்கு வந்தவனுக்கு அந்த நிகழ்வு இடியாய் இறங்கியது.

மனம் ‘ இசை ‘ ‘ இசை ‘ என முணுங்கலிட்டது..

” இது மட்டும் என்னோட இசைக்கு தெரிஞ்சா ,என்ன ஆகுறது.‌ ஐயோ கடவுளே ! இந்த சோதனை எனக்கெதற்கு.? ” என புலம்பினான்.

அவனின் புலம்பலை எல்லாம் கண்டுக் கொள்ளாது , அவன் கையில் மின்னிய பிரேஸ்லெட்டையே பார்த்து கொண்டிருந்தது அவனது மனசாட்சி.

அவன் கையினில் அது புதிதாக சேர்ந்தது. அதை பார்க்கும் போது எல்லாம் , மனதினுள் அவனுக்கு ஒருவிதமான வலி எடுக்க தான் செய்தது.

காலையில் நடந்ததை தானாக மனம் சிந்திக்க தொடங்கியது…

திருச்சியில் இறங்கி முதலில் வீட்டிற்கு சென்றவன் ,குளித்து முடித்து பரமசிவம் வளர்க்கும் சேவலை சிறிது நேரம் வெறுப்பேற்றிய பின் உள்ளாச மனதுடன் மருத்துவமனைக்கு சென்றான் வெற்றிமாறன்.

அவன் அறைக்குள உள்ளே நுழைந்ததும் பார்த்தது என்னவோ , தூங்கி கொண்டிருந்த பூங்கோதையையும் , பரமசிவமும் விஜயசாந்தியும் அங்கிருந்த சிறிய பெட்டில் அமர்ந்திருந்த வாக்கில் உறங்கி கொண்டிருப்பதையும் தான்..

அவர்கள் மூவரையும் ஒரு முறை பார்த்தவன் ,அண்ணிக்கு பக்கத்தில் இருந்த குழந்தை தொட்டிலில் அழகாய் பூக்குவியலாய் உறங்கி கொண்டிருந்த தன் தமையனின் மகவை காணும் போதே கண்கள் பனிக்க செய்தது.

இது மற்றொரு  அன்னையாக விளங்கும் பூங்கோதையின் தவமல்லவா இக்குழந்தை.

அவனின் கண்ணில் வழிந்த ஒரு சொட்டு கண்ணீர் , அந்த பிஞ்சுவின் கையில் தெரிக்க , அக்குழந்தையோ  தன் மீன் போன்ற அழகிய விழிகளை மெதுவாக திறந்து பார்வையை சுழல விட்டு மெலிதாக சிரித்தது.

‘கடவுள் குழந்தையை சிரிக்க வைக்கிறாரு போல’ என்று நினைத்தவன் ,பஞ்சு போன்று இருந்த வலக்கரத்தை தொட , குழந்தையோ சிரித்தபடி அவனின் கையை பிடித்து கொண்டது.

அதற்குள் , குழந்தையின் கீச் கீச் சத்தத்தில் பெரியோர்கள் இருவரும் எழுந்து விட்டனர்.

” எப்போ டா வந்த , வந்ததும் எழுப்பி இருக்கலாம்ல .?” என்றவாறே கலைந்திருந்த முடியை நேர்படுத்தி கொண்டயை போட்டார் விஜயசாந்தி.

” இப்போ தான் மா வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் தான் இருக்கும். அதான் எழுப்பல ” என்றவன்

” என்ன மா பேரன் உங்களை படுத்தி எடுத்துட்டானா.?” என்று சிரிப்போடு கேட்க

” அவன் எங்க டா படுத்தி எடுத்தான் . அவனுக்கு அப்பான்னு ஒருத்தன் உனக்கு முன்னாடி என் வயித்துல பிறந்தானே , அவன் தொல்லை தான் தாங்க முடியல ” என்றார்.

” ஏன் மா , அப்படி என்ன அவன் பண்ணிட்டான்.?”

” அதை ஏன் டா கேக்குற , குழந்தையை தூக்கிட்டு வந்து டாக்டர் கொடுக்கிறாரு . வாங்க மாட்டேன் ,அவனுக்கு வலிக்கும்னு ஒரே அடம் டா. சரி ,நீ வாங்கலைன்னா என்ன நாங்க வாங்கிட்டு போறோம்னு சொல்றோம். அதுக்கு விடலை டா அவன் வலிக்கும்னு சொல்லி ” என்றவர் முந்தைய தினம் ஏதோ இப்போது நடந்தது போல் சிரிக்க தொடங்கினார்.

” பெரியவனே இப்படின்னா , இந்தா அடுத்து சின்னவன் இருக்கான் . அவனோட ரகளை எப்படி இருக்க போகுதோ ” என அமைதியாக இருந்த பரமசிவம் சொல்ல

” எல்லாம் உள்ள ஓடுர இரத்தத்திற்கு உரிய சொந்தக்காரன் காரணமா இருக்கும் ” என மனையாள் சொன்னதை கேட்டு கணவன் முறைக்க

மைந்தன் புரியாமல் ,” அப்படின்னா.?” என இருவரையும் பார்த்து கேட்க

” ஹான் , அப்பனை போல பிள்ளைன்னு சொல்லுறா உங்க அம்மா ” என்று நொடித்து கொண்டார் பெரியவர்.

மனையாளும் மகனும் இதனை கேட்டு சிரிக்க , குழந்தையும் அவர்களோடு இணைந்து கொண்டது.

அந்த ஷனத்தை அணு அணுவாய் இரசித்த வெற்றிக்கு , இசையின் நினைவு வந்து போக , தனக்கும் அவளுக்குமான இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் எவ்வாறு இருப்போம் என்று யோசிக்க தொடங்கிய நேரம் ‘ மாப்பிள்ளை ‘ என்ற ஒற்றை அழைப்பு அவனின் யோசனையை கலைத்தது.

குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தவன் , யாரென்று தெரியாத நிலையிலும் ‘சொந்தமாக இருக்கும் ‘ என்று நினைத்து புன்னகை புரிந்தான்.

” வாங்க சம்பந்தி … வாங்க சம்பந்தி மா  ” என்று பரமசிவம் புன்னகையோடு வரவேற்க

“ம்ம்ம்” என்ற படி உள்ளே நுழைந்தார் தன் மனையாளோடு..

‘என்னது சம்பந்தியா , இது யாரு டா நமக்கு தெரியாத சம்பந்தி ‘ என்பது போல் மூலையை போட்டு குடைந்தான்.

” எப்படி இருக்கீங்க அண்ணா அண்ணி.?” என விஜயசாந்தி கேட்க

” ஹான் , நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம் ” என்று சொன்னவர் அறையை சுற்றி பார்வையிட்டார்.

” சரிங்க சம்பந்தி மா .வாங்க வந்து உங்க பேர பிள்ளையை பாருங்க “என்று பவ்யமாக கூப்பிட்டு காட்ட

” என்ன இது அறை சின்னதா இருக்கு. கொஞ்சம் நல்ல வசதியான ஹாஸ்பிடலா பார்த்து இருக்கலாம்ல ” என்று முகம் சுளிக்க விஜயாவின் முகம் கறுத்து போய் விட்டது.

” காந்திமதி.. ” என சிறு கோபமாய் அவரது கணவர் ஞானவேல் அழைக்க

” இல்லங்க , நம்ம பொண்ணு எப்படி எல்லாம் வசதியா வாழ்ந்த பொண்ணு. இங்க வந்து இப்படி கஷ்டப்படுறாலேன்னு ஒரு ஆதங்கம் தான் ” என காந்திமதி அங்கலாய்த்து கொள்ள

” அவுங்க என்னோட அண்ணாவுக்கு மட்டும் இல்ல , இனி நமக்கும் அவுங்க சம்பந்தி வீட்டுக்காரவுங்க தான். அதை முதல ஞாபகத்துல வை ” என மனையாளை பார்த்து முறைத்து வைத்தார்.

வெற்றிக்கு காந்திமதியின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவனது கடுகடுக்கும் முகமே காட்டிக் கொடுத்தது. அதையும் விட அடுத்ததாக சொன்னதை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருந்தான் அவன்.

” என்னை மன்னிச்சிடுங்க சம்பந்தி.. அவ ஏதோ புத்தி கெட்டு போய் பேசிட்டா . இதை பெருசா எடுத்துக்காதீங்க ” என ஞானவேல் வருத்தப்பட , பதறிபோனார் விஜயசாந்தி.

” அய்யோ  அண்ணா ! என்ன இது , நீங்க போய் மன்னிப்பு அது இதுன்னு எல்லாம் கேட்டுக்கிட்டு ” என்று பதறிய குரலில் சொன்னார்.

” பெரிய மனசு மா உனக்கு.. என் பொண்ணு இப்படி பட்ட ஒரு குடும்பத்துல வாழ போறதை நினைக்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு மா ” என உள்ளார்ந்து சொன்னார் .

பரமசிவம் மட்டுமே மகனின் அதிர்ச்சி அடைந்த முகத்தினை கண்டு புருவம் சுருக்கினார்.

காந்திமதியும் அவரது கணவரான ஞானவேலும் குழந்தையை தூக்கி கொஞ்ச , வெற்றி ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டான் எதுவும் பேசாமல்…

அதற்குள் மணிமாறன் மனைவிக்காக ஜூஸ் வாங்கி கொண்டு வந்திருந்தான்.

கோதையின் சித்தப்பா சித்தியை பார்த்தவன் ” வாங்க ” என்று இன்முகத்தோடு வரவேற்றான்.

குழந்தைக்காக வாங்கி வந்த தங்க காப்பை எடுத்த ஞானவேல் , அதனை மணிமாறனிடம் நீட்டி ” இது என்னோட பேரனுக்காக வாங்கி வந்தது ” என்றார்.

அதனை இன்முகத்துடன் பெற்றுக்கொண்டவன் புன்னகைத்தான்.

அடுத்ததாக , வெற்றியின் புறம் திரும்பி ,” அம்முக்கு பூ வச்சி உறுதி படுத்தும் போது மாப்பிள்ளை வரலை . அதனால , அவருக்கு நாங்க ஒரு சின்ன பரிசா ப்ரேஸ்லெட் வாங்கி வந்திருக்கோம். அதை போட்டு விடலாமா ” என்று தன்மையாக சம்பந்தி வீட்டாரிடம் கேட்டார்.

” இனி , அவன் உங்க வீட்டு மாப்பிள்ளை சம்பந்தி . உங்களுக்கும் இனி எல்லா உரிமையும் அவன்கிட்ட இருக்கு. எங்க கிட்ட கேட்டு தான் செய்யனும்னு அவசியம் இல்லை “என பரமசிவம் சொல்ல

வெற்றியோ எங்கேயோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு இப்போது தான் புரிந்தது , அன்னை அன்று கேட்டதும் அதற்கு தான் இசையின் ஞாபகத்தில் சரி என்று சொன்னதும்..

வின் வினென்று தலை வலிக்க தொடங்க , அந்த இடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை. ஏனோ மூச்சு முட்டுவது போல் இருந்தது.

” வெற்றி ” என தந்தையின் அழைப்பிலே சுயத்திற்கு வந்தான்.

” ஹான் , சொல்லுங்க ப்பா “

” டேய் , அவுங்க உன்னோட வருங்கால அத்தை மாமா டா .நீ பாட்டுக்கு அங்க போய் உட்கார்ந்திருக்க . இங்க வா ” என்று அழைக்க

” ஹான் , இதோ பா ” என எழுந்து அவர்கள் முன் வந்தான்.

“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை.?” என்று ஞானவேல் கேட்டிட

” இருக்கேன். நீங்க ?” என மொட்டையாய் கேட்க

அவனது பதிலில் ஏனோ காந்திமதிக்கு நிம்மதி அளிக்க , அவர் அவரது மூலையில் சில பல திட்டங்களை போட தொடங்கினார்.

” மாப்பிள்ளை , இது உங்களுக்காக வாங்கினது ” என சிறு தயக்கத்துடன் ” நான் போட்டு விடட்டுமா ” என்று கேட்க

வெற்றிக்கு எப்படி அவரிடம் மறுப்பு தெரிவிப்பது என தவிப்பாய் இருக்க , அவரின் முகத்தை மெதுவாக ஏறிட்டு பார்த்தான். அதில் அத்தனை ஆவல் மிகுந்து இருந்தது.

கையை நீட்டுவதற்கு அவனுக்கு சங்கடமாக இருக்க ,

“வெற்றி கையை நீட்டு டா ” என தந்தையின் குரலில் கண்டிப்பு இருந்தது.

தந்தையை பார்க்க ,’ நீட்டு ‘ என்பது போல் கண்ணாலே அதட்டினார்.

மெது மெதுவாக கையை அவரின் முன்பு நீட்ட , சந்தோஷ முகத்துடன் அதனை மாட்டி விட்டார் ஞானவேல்.

“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை . நீங்க வந்துருக்கீங்கன்னு அம்முக்கிட்ட சொன்னா ரொம்பவே சந்தோஷப்படுவா ” என்றார் மகளை பற்றிய நினைவில்..

குழந்தையோ கூட்டத்தை கண்டு சிணுங்க தொடங்கியது.

அதற்குள் கோதையும் எழுந்து விட , சித்தப்பா சித்தியை பார்த்தவள் நலம் விசாரித்தாள்.

பின் , இருவரும் கிளம்புவதாக சொல்ல , பரமசிவம் அவர்களை அழைத்து வெளியே சென்றார்.

மகனின் செயலை புரியாமல் பார்த்த‌ பரமசிவம் அவனை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் செல்ல பார்த்த வெற்றியை அவரது கேள்வியில் நிறுத்தம் செய்தது.

” உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா தம்பி.?” என ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்க்க

“ப்பா..” என்றவன் தலை கவிழ்ந்து நின்றான்.

” சொல்லு டா..?”

” எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு பா‌…”என்ற நொடி அவன் கண்ணத்தில் பரமசிவத்தை கை  பதிந்தது.

” ப்பா…”

” என்னடா அப்பா , கேக்குறேன் என்ன அப்பா.. உனக்கு விருப்பம் இருக்கான்னு கேட்டு தானே அந்த பெண்ணை உனக்கு பார்த்தேன். ஆனா நீ இப்போ வந்து வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லுற “

” ப்பா.. அப்போ எனக்கு எந்த பொண்ணு மேலையும் காதல் வரலை பா.ஆனா இப்போ அவ மேல வந்துருக்கு பா . அவளால மட்டும் தான் எனக்கு மனைவியா வர முடியும் ” என்க

” அடிச்சேன்னா பாரு  , நாலு காசு சம்பாதிச்சிட்டா நீ பெரிய இவனா டா. உன்ன கேட்டு நாங்க சம்பந்தம் பண்ணி அந்த பொண்ணு அவ ஆசைய வளர்த்துகிட்டு நிக்கிறப்ப , நீங்க பெரிய இவராட்டம் எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லுவீங்களோ ” என தந்தையாய் அப்பெண்னை நினைத்து கத்த

” அப்பா , நான் செஞ்சது தப்பு தான் . ஆனா என்னால அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட முடியாது பா. எனக்கு  எல்லாமுமா என்னோட இசையால மட்டும் தான் இருக்க முடியும் பா. ப்ளிஸ் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்க  ” என்று தந்தையிடம் கெஞ்சினான் மைந்தன்.

” ஒரு பொண்ணோட ஆசையை கெடுக்க  நான் விரும்ப மாட்டேன் டா. இந்த கல்யாணம் உன்னோட சம்மதத்துல தான் ஆரம்பிச்சது. அதுனால இந்த கல்யாணம் நடந்தே தீரும். இதை நிறுத்த முயற்சி செய்த அப்புறம் உனக்கு அப்பான்னு ஒருத்தன் இருக்க மாட்டான் பார்த்துக்கோ ” என்று எச்சரிக்கை விடுத்து அறைக்குள் புகுந்து கொண்டார்.

அவனுக்கு கத்தி அழுகனும் போலே இருந்தது. இப்படி ஒரு நிலை தன் வாழ்வில் வரும் என்று அவன் சிறிதும் நினைத்து பார்த்ததில்லை.

தன்னால் அம்மு என்ற‌ பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்று நிச்சயமாக தோன்ற , மனம் இசையை நோக்கி சென்றது.

அவளின் எழுத்துக்களை அணைக்கனும் போல் தோன்ற , அறைக்குள் சென்று முடங்கியவன் சிறிது நேரத்திலே பையை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.

தந்தையின் அறைக்குள் நுழைந்தவன் ,” என்னாலையும் ஒரு பொண்ணோட ஆசையை கெடுக்க முடியாது பா. அதுவும் என்னோட இசையோட ஆசையை கண்டிப்பா முடியவே முடியாது பா… ” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

இதோ இப்போது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

சென்னை வந்தவுடன் , அவனது வேலை  பளு அவனை எடுத்துக் கொள்ள , நாட்கள் எப்போதும் போல் சென்றது.

அவளின் கடிதம் தினமும் கிடைத்தும் , அதனை படிக்க முயலும் போதெல்லாம் மனதளவில் ரத்த கண்ணீர் வடித்தான் வெற்றிமாறன்.

அப்படியே ஒரு மாதம் கழிந்து விட , ஒரு நாள் தந்தை அழைப்பு விடுத்து இன்னும் மூன்று மாதத்தில் உனக்கும் அம்முவுக்கும் திருமணம் ஒழுங்கு மரியாதையாக கல்யாணத்துக்கு வந்துவிடு என்று ஏனோ யாருக்கோ கல்யாணத்துக்கு அழைப்பு விடுப்பது போல் சொல்லி வைத்தார்.

பைத்தியம் பிடிப்பது போல இருந்தது அவனுக்கு . இதில் அந்த மணப்பெண் அம்மு வேற இரண்டு முறை அழைப்பு விடுத்திருந்தாள். அதை தவிர்த்த அவனுக்கு குற்றவுணர்வாக இருந்தது.

அப்போது தான் அவன் மனசாட்சி தக்க யோசனை கொடுத்து அவனின் நிலையை சரி செய்தது.

அறையில் மலாக்காக படுத்தபடி , இசையின் எழுத்துக்களை பதிந்திருந்த கடித்தத்தை நெஞ்சோடு அணைத்திருந்தான்.

‘ இப்படியே எவ்வளோ நாள் தான் இருக்க போற நீ ‘ என மனசாட்சி அவன் முன் தோன்றிட

” தெரியலையே..”

‘ இது சரியில்ல வெற்றி. உனக்கு இசையை பிடித்திருக்குன்னா அதை நீ தான் தைரியமா பேசனும். இது ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை சம்மந்தபட்டது டா ‘

” எனக்கு புரியுது டா . ஆனா இந்த  கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தா , அப்பா உயிரோட இருக்க மாட்டேன்னு மிரட்டிட்டு இருக்காரு ” என்க

‘ அப்போ நீ இசை கிட்ட சொல்லி , கல்யாணம் பண்ற வழியை பாரு மேன். இல்லன்னா அந்த பொண்ணு கிட்ட பேசு ‘

” அவ இப்போ வேணாம்னு சொல்லிட்டானா என்ன பண்றது. என்னால அவளை தவிர வேற யாரையும் மனைவியா ஏத்துக்க முடியாதே ” என்க

‘ அப்போ சரி , நீயும் உன்னோட காதலை லெட்டர் மூலமா எழுதி இசை சொன்ன முகவரிக்கு அனுப்பு. கடைசி நேரத்துல உன்னோட இக்கட்டான சூழ்நிலையை சொல்லி எல்லார் முன்னாடியும் இசையை கூட்டிட்டு போய் நிறுத்துனின்னா , பெரியவுங்களால எதுவும் பண்ண முடியாம கடைசில ஒத்துக்கிட்டு தான் ஆகனும் பாரேன் ‘ என அவனுக்கு மனசாட்சி ஐடியா வழங்க

அதை கேட்டவனுக்கு நல்ல யோசனையாக தோன்றினாலும் பெற்றோரை நினைத்து வருந்தினான்.

” ஆனா , இப்படி பண்ணா பெரியவுங்களை அசிங்க படுத்திற மாதிரி ஆகிடுமே ” என்க

‘ இதை பார்த்தா இசை உனக்கு கிடைக்க மாட்டா வெற்றி. நான் சொன்னது போலவே பண்ணு. கொஞ்சம் நாள் கோபமா இருந்தாலும் அப்புறம் உங்களை ஏத்துக்குவாங்க டா ‘ என்றது அவன் மனசாட்சி.

“சரி டா…”

மனசாட்சி மறைந்து விட , இசைக்காக லெட்டர் எழுத தொடங்கினான் வெற்றி.

லெட்டரை எழுதி முடித்தவன் , அவள் சொன்ன முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் செய்தான்.

******

அவசர அவசரமாக அவளது அலுவலகத்திற்கு கிளம்பிய இசை , வேகமாக வெளியே வந்து ஏதாவது போஸ்ட் வந்திருக்கிறதா என்று பார்க்க , அதுவோ காலியாக தான் இருந்தது.

காலியான போஸ்ட் பாக்ஸை கண்டதும் அவள் முகம் சுருங்கி விட ,அடுத்த நொடியே நார்மலான முகத்தை கொண்டு வந்தவள் , காலை உணவை முடித்து விட்டு அலுவலகம் சென்று விட்டாள்.

அலுவலகம் வந்தவளுக்கு வேலை இழுத்து கொள்ள , வெற்றியின் நினைப்பை மறந்து விட்டு அவளது வேலையை செய்ய தொடங்கினாள்.

இதற்கிடையில் அவளது தோழி ஒருத்தி வந்து ,” என்ன மேடம் நீங்களும் ரொம்ப நாளா அந்த ஆர்.ஜே வெற்றி பின்னாடி சுத்துறீங்க . ஏதாவது ரெஸ்பான்ஸ் கிடைச்சதா என்ன ” என நக்கலாக கேட்க

” பச் , நீ வேற ஏன் டி கடுப்பேத்துற . அவனோட மைன்ட் என்ன நினைக்குதுனே எனக்கு தெரியலை “

” நானும் அவன் லெட்டர் போஸ்ட் போடுவான் போடுவான்னு பார்த்ததுட்டே இருக்கேன். ஆனா எதுக்கும் மசிய மாட்டேங்கிறான் டி ” என்று புலம்பினாள் இசை..

” பார்த்து டி.. கடிதம்னு பழைய ரூட்டை ஃபாலோ பண்ற , பார்ப்போம் எப்போது தான் உன்னோட வேலையை முடிக்கிறன்னு ” என சொல்லி நகர முற்பட

” முடிச்சு காட்றேன் டி.. வெற்றி என்கிட்ட அவனோட காதலை சொல்ல தான் போறான். நீ வேணா பார்த்துட்டே இரு ” என்று வெற்றி மீது இருந்த நம்பிக்கையில் அவளிடம் சவால் விட்டாள் இசை.

” பாப்போம் பாப்போம் “

அன்று மாலையும் வீட்டிற்கு வந்தவுடன் போஸ்ட் பாக்ஸை திறந்து பார்க்க , அவள் முகம் பிரகாசமானது.

அதிலிருந்த லெட்டரை எடுத்தவள் , வேகவேகமாக அறைக்குள் நுழைந்து அதனை படிக்க தொடங்கினாள்.

என்னுள்ளே நுழைந்த என்னவளே..

காதலின் வாசம் அறியா என்னை

காதலோடு உயிரில் கலந்தாயே…

ஏனோ தானோ என்று நினைத்த

உன் காதல் கடிதங்கள்.,

என்னை ஏங்கும் அளவிற்கு நிறுத்தியது..

நின் கடிதமே என்னை  மற்றற்ற

மகிழ்வை கொடுத்து வாழ வைக்கிறது…

நின் எழுத்துக்களே என்னை

உயிர்ப்போடு வைக்கிறது…

நின் காதலில் திளைத்து

திக்குமுக்காடி மயங்கி  நிற்கும்

என்னை என் காதலோடு ஏற்பாயோ..!?

_என்றென்றும் உன் இசைமாறன் ‘

என அவனுக்கு தெரிந்த வகையில் அவனது காதலை சொல்லி இருந்தான் வெற்றிமாறன்.

அதனை படித்த இசைக்கு எதையோ வென்ற மகிழ்ச்சி. அவளால் அதனை வார்த்தையால்  விவரிக்க முடியவில்லை.

இறுதியில் இசைமாறன் என்று அடிக்கோட்டிருந்த பெயரில் அவளின் மென்முத்தத்தை பதித்து நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

பின்னர் ,வந்த நாளில் இருவரும் கடிதத்தின் மூலமாக பேசிக்கொண்டனர்.

எப்போதாவது இசை எதாவது பீசியூ மூலமாக அவனுக்கு அழைத்து பேசுவாள்.

அவளின் பேச்சுக்கள் மொத்தமும் அவனது அழகிய குரல் வளத்தை பற்றியே இருக்கும்…

இப்படியே  அவர்களது நாட்கள் நகர்ந்திட , திருமணத்திற்கு இன்னும் பதினைந்தே நாட்கள் என்றிருந்தது.

இதற்கிடையில் ,வெற்றியை வம்படியாக அழைத்து சென்று தாலி புடவை‌ எல்லாம் வாங்கி வந்தனர் .

மாப்பிள்ளை வீட்டில் தான் மூகூர்த்த புடவை எடுக்க வேண்டும் என்ற முறை இருந்ததால் , மணப்பெண் புடவை எடுக்க வரவில்லை.

பரமசிவம்- விஜயசாந்தி , ஞானவேல் – காந்திமதி மற்றும் பூங்கோதையின் பெற்றோர் பத்மநாபன் – வேதவள்ளி என பெரியோர்களோடு சென்று ஏனோ தானோ என்று ஒரு புடவை எடுத்து கொடுத்திருந்தான் அவன்.

இரண்டு நாட்கள் அவர்கள் பெற்றோர் அவனுடன் இருந்து விட்டே சென்றனர்.

‘ ஊருக்கு தன்னுடனே வர சொல்லி ‘ இருவரும் வற்புறுத்தியும் வேலை பளுவை காட்டி நழுவிக் கொண்டான் வெற்றி.

அவர்கள் சென்றதும் , அவளிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்த வெற்றி அவளுக்கு லெட்டர் எழுதி போட்டிருந்தான்.

அந்த நாளே , அவனுக்கு ஏதோ நல்ல நாள் போல , அவளே அவனது நம்பருக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

அவன் எடுத்ததும் அவளை சந்திக்க வேண்டும் என்று கூறிட

காதலர் தினம் முந்திய நாள் பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அவளை முதல் முறை காணப்போகும் நாளுக்காக காத்திருக்க தொடங்கி இருந்தான் வெற்றிமாறன்.

Leave a Reply

error: Content is protected !!