💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 27
தவறு செய்கின்றவன் எவ்வளவு கவனமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு துருப்புச் சீட்டை அவன் விட்டு விட்டே செல்வான்…
காலையில் அந்த மீட்டிங்கில் கவனமாக இருந்தவன், தியாவுடன் சாப்பிட்டு முடித்த பின் அவன் மனம் பல சிந்தனையில் மூழ்கிருந்தது.
தன் முன்கோபத்தை தன்னால் கட்டுப்படுத்தவே முடியாதா
இவ்வளவு நாட்கள் அவன் இதை நினைத்து வருந்தியதில்லை, இதை சரி செய்ய யோசித்ததில்லை.
இன்று தன்னவளை அது பாதிக்கவும் அவன் மனம் ‘இதை எப்படியும் மாற்றியே ஆகவேண்டும்’ என்ற உறுதி எடுத்துக் கொண்டது.
இந்த உறுதி நிலை கொள்ளுமா?
இத்தனை வருடம் இல்லாமல், இப்பொழுது அவன் சிந்திப்பது ஏன்? தியா அவன் பார்த்த நாள் முதல் அவன் மனதிற்குள் பசை போட்டு ஒட்டிக் கொண்டாள்.
அவன் வெறும் அவளை பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. அவளுக்கு ஒன்று என்றால் முன்பிருந்தே, அவன் மனதில் ஏதோ ஒரு வலி, ஒரு பாரம்.
அன்று அம்யூஸ்மென்ட் பார்க்கில் கூட, அவளுக்கு ஒன்று என்றவுடன் இவன் துடித்தது என்ன? அவளை இவன் கவனித்ததென்ன?,
அவள் மீது இவனுக்கு இருக்கும் பாசம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அது ஏன் என்று இவனுக்கும் புரிந்ததில்லை.
தாய் தந்தை நம்மை பெற்றதினால், நம் மீது அவர்கள் வைத்த பாசத்தினால், நமக்கும் தானாகவே அவர்கள் மேல் ஒரு பாசம் உருவாகிறது.
நம் உடன் பிறந்தவர்களும் அப்படித்தான், நாம் குடியிருந்த அதே கர்ப்பப்பையில் அவர்களும் முன்பு இருந்தோ, இல்லை தங்களுக்கு பின் இருந்தோ வந்ததினால் வந்த பாசம்.
இந்த காதல் இருக்கிறதே அது எவ்விதமான ரத்த சம்பந்தமும் இல்லாமல், அதுவரை இப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூட தெரிந்திருக்காது, ஆனால் அவர்களைப் பார்த்த பின் அதிலும், அவர்கள் மேல் அந்த காதல் உருவான பின் நமக்கு அவர்கள் மேல் வரும் ‘பாசம், நேசம், அக்கறை’ என அனைத்து உணர்வுகளும் அதிசயமானது தான்.
அவள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும், ‘அவளை ஏத்துன்பமும் அண்ட கூடாது, அண்ட விடக்கூடாது’ என்பதுதான் இவன் லட்சியமாக இருந்தது.
அப்படி இருக்க, அவளை நன்றாய் புரிந்த அவனே, அவளைக் காயப்படுத்தியதை இவனாலே மன்னிக்க முடியவில்லை.
பின் தன் தங்கையை பற்றிய எண்ணத்தில் மூழ்கினான்.
ராஜ் கொடுத்த தகவல் படி ‘அது நிச்சயம் ரவி இல்லை’ என இவனுக்கும் தோன, ‘பின் யார் அவளை கொல்ல நினைப்பது?’
‘தொழில் சம்பந்தமான எதிரிகள் யாராவதாய் இருக்குமோ?’
அவர்கள் தொழிலில் நேரடி எதிரிகள் யாரும் இல்லை தான். இருந்தாலும், சின்ன சின்ன நஷ்டங்கள் இவர்களுக்கு ஏற்படுத்துவது, இவர்களின் வளர்ச்சி பிடிக்காமல் வருமானவரித்துறையில் மாட்டி விடுவது போன்ற, நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
ஆனால் இவர்களின் கை சுத்தம் என்பதால், இதுவரை எந்த பிரச்சனையும் இவர்கள் எதிர்கொண்டதில்லை. அவர்கள் கொலை செய்யும் அளவு செல்வார்களா? அப்படி சென்றால் அவர் யார்?
நிச்சயமாக இந்த சர்வீஸ் சென்டரில் ‘ஏதோ பிரச்சினை இருக்கிறது’. என்று இவனுக்கு படவே தான் அதைப் பற்றி ராஜிடம் அவன் கூறியது. கார் எப்பொழுதும் போல் தான் ஒரு நம்பகமான இடத்திற்கு சர்வீஸ்க்கு சென்றது. அந்த இடத்தில் எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும்?
‘கண்ணுக்குத் தெரிந்த எதிரியாய் இருந்தால், கவனமாக இருக்கலாம் எதிர்த்து நிற்கலாம். யார் என்றே தெரியாத நிலையில் என்னதான் செய்ய?’
இவ்வாறாக பல யோசனையில் மூழ்கியிருந்தவனின் பேசி அடிக்க, அதில் கவனமானான்.
ராஜ் தான் அழைத்தான்.
அவனுக்கு வந்த தகவலை பகிர்ந்து, தான் புறப்படும் விஷயதையும் கூறினான்.
தானும் உடன் வருவதாய் இவன் கூற, அவன் மறுத்தான்.
“இங்க இருக்க பிரச்சினை உனக்கே தெரியும். நான் இல்லாத நேரத்துல நீ இங்க இருக்கிறது தாண்டா நல்லது”.
“புரியுதுடா சரி அங்க போயிட்டு உனக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா, எனக்கு உடனே இன்பார்ம் பண்ணு ஓகேவா”.
“கண்டிப்பா மச்சி”.
ராஜுக்கு என்ன தகவல் கிடைத்தது? அவன் எங்கே செல்கிறான்?
***
சும்மாவே ஒரு கேஸ் என்றால் ராஜ் தீவிரமாக செயல்படுவான். இது வர்ஷா சம்பந்தப்பட்ட கேஸ் இதை அவன் மிகவுமே கவனமாக கையாண்டு வந்தான்.
ஷ்யாம் கூறிய ‘வண்டி விபத்துக்கு முந்தின நாள் தான் சர்வீஸ் சென்று வந்தது’ என்ற செய்தி துருப்புச் சீட்டாய் இருந்தது.
இவனின் முதல் சந்தேக பார்வையில் விழுத்தது அந்த விஷயம் தான்.
எனவே, அங்கே சென்று ‘யார் இந்த வண்டியை சர்வீஸ் செய்தது’ என்ற விசாரணை தான் முதலில் நடந்தது.
“வழக்கமாய் சங்கர் என்ற நபர் தான் இதுபோன்ற விலை உயர்ந்த கார்களை சர்வீஸ் செய்வது”, எனக் கூறினர்.
“அவனை பார்க்க முடியுமா?”, என்ன இவன் அங்கே விசாரிக்க,
“இல்ல சார் கொஞ்ச நாளா அவன் வேலைக்கு வரது இல்ல சார்”, என்றனர் அந்த சர்வீஸ் சென்டரில் இருப்பவர்கள்.
“கரெக்டா எப்ப இருந்து வரல?”, என வினவ.
“அந்த காரை சர்வீஸ் பாத்தது தான் கடைசி அதன் பிறகு வரவில்லை” என்றவுடன் ராஜின் சந்தேகம் வலுத்தது.
அங்கே அவனின் அணைத்து டீடெயில்ஸ்சும் வாங்கிக்கொண்டு சென்றான்.
அவன் வீடு சென்று பார்க்க, அது பூட்டி இருந்தது. ‘அதைத் திறந்து உள்ளே போய் பார்க்கலாம்’ என்று அவன் நினைத்த நேரம் அங்கு ஒருவர் வர, அவரிடம் விசாரித்தான்.
அவர்தான் வீட்டின் சொந்தக்காரர்.
இவன் ‘போலீஸ்’ என்பது தெரிந்தவுடன் அவருக்கு தெரிந்த விவரங்கள் கூறினார்.
அவன் திடீரென்று அவரிடம் சென்று, தான் இந்த வீட்டை காலி செய்து சொல்வதாய் கூறியிருக்கிறான். அவர் ‘என்ன திடீரென்று’ என்று கேட்டதற்கு ‘தான் சொந்த ஊர் செல்ல விரும்புவதை கூறி’ சென்றிருக்கிறான். ஆனால் ‘அவன் எங்கே செல்கிறான்? எது அவனுடைய சொந்த ஊர்?’ என்பது பற்றி எல்லாம் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை. அவனுக்கு அம்மாவும், மனைவியும், ஒரு குழந்தையும் இருப்பதையும் கூறினார்.
வீட்டை திறக்க சொல்லிக் கேட்க, அவரும் திறந்து காட்ட வீடு காலியாய் இருந்தது.
மொத்தமாக காலியா இருக்கும் இடத்தில் ‘என்ன தேடுவது’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த குப்பை தொட்டி கண்ணில் பட்டது.
எப்பொழுதுமே குப்பை கூடையில் தான், பல உண்மைகள் ஒளிந்திருக்கும் என்று கூறுவார்கள்.
அதில் பார்த்த, இரண்டு பொருள் அவனின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல் இருந்தது.
அதை கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். அதன்பின் பல இடங்களில் அந்த சங்கரை தேடிக் கொண்டிருக்கிறான்.
அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது வந்த, காலில் சொன்ன செய்தி என்னவென்றால் ‘சங்கரை யாரோ பார்த்திருக்கிறார்கள்’ என்பதுதான்.
வேலை செய்த இடத்திலிருந்து கிடைத்த, அவன் புகைப்படத்தை பகிரங்கமாக விளம்பரப்படுத்தி போட்டால் ‘அவன் மட்டுமின்றி அவனை ஏவியவனும் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது’ என்பதால் அனைத்து காவல் நிலையங்களிலும் அவனுடைய புகைப்படம் ரகசியமாக அனுப்பப்பட்டது.
அதில் ஒரு காவலர் தான், அவனை ஒசூர் பக்கம் பார்த்ததாக கூறினார்.
ஒசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது
அவனுக்கு போன் செய்த, அந்த காவலரை அவனைத் தொடர்ந்து செல்ல சொன்னான். முடிந்த அளவு அவனுடைய இருப்பிடம் கண்டுபிடிக்க சொல்லி சொன்னான்.
அதற்கு மேல் அவன் நேரத்தை வீணாக்கவில்லை. தன் அன்னையிடம் கூறிக்கொண்டு ஒசூர் நோக்கி பயணப்பட்டான்.
வர்ஷாவுக்கும் போன் செய்து, இவ்வாறு ‘தான் ஒசூர் கிளம்புவதை’ பற்றி கூறினான். அவள் அவனுக்கு பல பத்திரங்கள் கூறி விடை கொடுத்தாள்.
அவன் செல்லும் காரியம் வெற்றியாகுமா? அவன் சங்கரை கண்டுபிடிப்பானா?
***
அருண் மற்றும் மித்து இருவரையும் பல காலங்கள் பார்க்காமல் விட்டு விட்டோம். அவர்கள் நம்மிடம் அதற்கு சண்டைக்கு வராமல் இருந்தால் சரி.
அதற்கு நம்மளை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை, அவர்களுமே அவர்களுடைய பிஸ்னஸ், காதல், ப்ராஜெக்ட் என நண்பர்களை கூட சென்று பார்க்க முடியாத அளவு மிகவும் பிசியாக இருந்தனர்.
மித்து அருணின் கம்பெனியில் தான் தன்னுடைய ப்ராஜெக்டுக்காக சென்று கொண்டிருந்தாள். ப்ராஜெக்ட்டை நன்றாக பார்த்தாளோ இல்லையோ, அருணை மிகவும் நன்றாகவே பார்த்தாள்.
இருவரும் தங்கள் காதல் பயிரை வள வள…என வளர்த்து விட்டார்கள். அவர்களின் காதலுக்கு என்ன தடை, இருவரும் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் வீட்டிலும் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள் அருண் தானே இரண்டு வருடம் தள்ளிப் போட்டான்.
இங்கு வந்து சிறிது நாட்களிலேயே மித்துக்கு புரிந்தது, ‘அருண் ஏன் அவ்வாறு திருமணத்தை தள்ளிப் போட்டான்’ என்று. தன் கடின உழைப்பை எந்த அளவுக்கு இந்த கம்பெனியில் போட்டிருக்கிறான் என்றும் தெரிந்து கொண்டாள்.
இரண்டு வருடம் மேற்படிப்பு முடிந்த பின், தானும் ‘இந்த கம்பெனியை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்ற பொறுப்பும் அவளுக்கு வந்து இருந்தது.
அவனது பிசினஸ் முன்னை விட, இப்பொழுது சிறிது வளர்ந்திருந்தது. ஆர்டர்கள் எடுக்கவும் அதிலே ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதை கவனிப்பதற்கான வாடிக்கையாளர்கள் சேவை இருந்தது, அதில் மட்டுமே இருபது பேர் இப்பொழுது வேலையில் இருந்தார்கள்.
அது இல்லாமல் ஒரே ஒரு குடோன் மட்டுமே இருந்த நிலையில், இப்பொழுது வியாபாரம் நன்றாக சூடு பிடிக்க ஆரம்பிக்கவும் ஆர்டர்கள் நிறைய வரவும், அவன் இன்னும் இரண்டு மூன்று குடோன்கள் வாங்கி போட்டிருந்தான்.
மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான டிசைனர்களையும் வேலையில் அமர்த்தி இருந்தான். அதுவும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, பட்ஜெட்டிற்குள் தரமும் குறையாமல் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பதால். இவனிடம் ‘மத்த இன்டீரியர் டிசைன்களும் பணி தர முடியுமா?’ என நிறைய பேர் கேட்டிருந்தார்கள்.
அதையும் செய்தால் என்ன, என்று இப்பொழுது அதற்கான வேலைகளையும் ஈடுபட்டிருந்தான். இன்டீரியர் டிசைனர்களை ஹையர் செய்துக் கொண்டிருந்தான்.
இப்படி இவன் படு பிசியாய் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான் ‘வர்ஷாக்கு ஆக்சிடென்ட் ஆனது’ என்று தகவல் வந்தது. இவன் வந்து வர்ஷாவை பார்த்ததை நாமும் பார்த்தோம். அப்பொழுது அவனுக்கு எதுவுமே தவறாய் படவில்லை.
அதன்பின் தான், ராஜும் ஷ்யாமும் இவனிடம் ‘இது திட்டமிடப்பட்டது’ என்பதை கூறினார்கள்.
அதுமட்டுமில்லாமல் அன்று வர்ஷாவைக் கொல்ல, ஒருவன் கத்தியுடன் வந்தது பற்றியும் இவனிடம் தெரிவித்து இருந்தார்கள்.
ராஜ் சங்கரின் பழைய வீட்டு குப்பை தொட்டியிலிருந்து எடுத்தது இரண்டு விஷயம் ஒன்று சங்கர்ருடைய பழைய சிம் கார்ட் எங்கே ‘இதை வைத்து தன்னை ட்ரேஸ் செய்து விடுவார்களோ’ என அதை அவன் தூக்கி எறிந்து இருந்தான்.
மற்றொன்று அதிலிருந்த மெமரி கார்டு. உன் வீட்டிலும் யாருக்கும் இவனின் செயல் தெரியாது என்பதால் பதட்டத்துடனே சிம்மை எடுத்துப் போடும் பொழுது பக்கத்தில் இருந்த மெமரி கார்டு கீழே விழுந்தது கூட அவன் கவனிக்கவில்லை.
ராஜ் அதை அருணிடம் கொடுத்து, அதன் மூலம் ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்பதை பார்க்க சொல்லி இருந்தான்.
இவனும் அது அனைத்தையும் பார்த்தான். அதில் ஒரு நம்பரில் இருந்து ரீசண்டா அவனுக்கு அதிகமான கால்கள் வந்திருப்பது தெரிந்தது.
அவர்கள் என்ன பேசினார்கள் என்ற, வேலையை கூட இவனை ட்ராக் செய்ய அவன் வைக்கவில்லை. அவனே அவன் பாதுகாப்பிற்காக ரெக்கார்ட் செய்து வைத்திருந்தான். கிளம்பும் அவசரத்தில் மெமரி கார்டில் போனில் இருக்கிறதா என்பதையே பார்க்கவில்லை. அந்த ஞானசூனியம்.
இந்த ரெக்கார்டிங்ஸ் கேட்டு, அதை ராஜுக்கும் ஷ்யாமுக்கும் அனுப்பி வைத்தான் அருண்.
இந்த ரெக்கார்டிங்ஸ் கேட்ட மறு நிமிஷம் இருவருமே காலில் வந்தனர் மூவரும் சேர்ந்து கான்ஃபரன்ஸ் கால் பேசினார்கள்.
ஷ்யாம், “கால் வந்த அந்த நம்பரை டிரேஸ் பண்ண முடிஞ்சுதாடா”
அருண், “அது ரொம்ப நாளா யூஸ் பண்ணாம இருக்கு. பாஸ்ட்டா அது ஆக்டிவா இருந்த இடம் மெரினா பீச் அங்க போனாலும் வேஸ்ட்னு தான் நினைக்கிறேன்”.
ராஜ், “அந்த நம்பர் வச்சு வேற எதுவுமே கண்டுபிடிக்க முடியலையா”
அருண், “இல்லடா அந்த நம்பரில் இருந்து அந்த சங்கரோட நம்பருக்கு மட்டும்தான் கால் போய் இருக்கு, அவன் கிட்ட இருந்து தான் ரிசீவ் ஆயிருக்கு. எனக்கு தெரிஞ்சு சங்கரை காண்டாக்ட் பண்றதுக்கு மட்டும் ஸ்பெஷலா அந்த நம்பரை வாங்கி இருப்பான் போல இருக்கு”.
ஷ்யாம், “யாரா இருக்கும் இவ்வளவு ஸ்மார்ட்டா மூவ் பண்ணி இருக்கான்”.
அருண், “அவ்ளோ ஸ்மார்ட் எல்லாம் இல்ல மச்சி. ஸ்மார்ட்டா இருந்தா, சங்கர் மாதிரியான ஒரு ஆள அவன் வேலைக்கு யூஸ் பண்ணி இருக்க மாட்டான்”.
ராஜ், “இந்த ரெக்கார்டிங்ஸ் கேட்டதுல நாம இன்னுமும் உஷாரா இருக்கணும்னு தெரியுது. நான் அனுப்புன கான்ஸ்டபில் அவனோட வீட்ட பாத்துட்டாரு. நான் கிட்டத்தட்ட ரீச் ஆயிட்டேன்டா போயிட்டு அங்க என்ன ஆச்சுனு சொல்றேன்” என ராஜ் போனை கட் செய்தான்.
‘சரி’ என மற்ற இருவரும் கட் செய்து விட்டார்கள்.
அப்படி அந்த ரெக்கார்டிங்ஸில் என்ன தான் இருந்தது? அந்த கான்ஸ்டபிள் கண்டுபிடித்ததாக சொல்லப்பட்ட சங்கரின் வீடு சரியானதா? அப்படியே அது சரியானதாக இருந்தாலும் அங்கே அவன் இருப்பானா? சங்கர் ஏன் இதை செய்தான்? யார் அவனை இவ்வாறு செய்ய தூண்டியது? இதனால் யாருக்கு என்ன லாபம்.
(போன எபிக்கு லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 இனி அடுத்த எபில சந்திக்கலாம்…பை…பை)