இருளை ஈர்க்கும் ஒளி

இருளை ஈர்க்கும் ஒளி
ஈர்ப்பின் இறுதி
காதலின் முதல் படி ஈர்ப்பு…
அந்த ஈர்ப்பு கண்களால், பேச்சால், குணத்தால், செயலால் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…
அனைத்து ஈர்ப்புகளும் காதலாகாது…
காதலின் ஈர்ப்பு அனைத்தையும் விட தனித்தன்மை வாய்ந்தது…
இருளை ஒளி தன்னில் ஈர்த்து கொள்வது போல், காதலிளும் தன் துணையை தன்னுள் ஈர்த்து பொக்கிஷமாய் பொத்தி வைத்துக் கொள்வர்…
இரவு ஒரு இரண்டு மூன்று மணி நேரம்தான் தூங்கி இருப்பாள் தியா. மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள். எனவே, ராதா அவளை மேலே இருக்கும் வர்ஷாவின் அறையில் ஓய்வெடுக்கச் சொன்னார்.
அவள் பின்னே ஷ்யாமும் செல்ல முற்பட, அவனை ராதாவும், வர்ஷாவும் தடுத்தனர்.
“ஏன்?”என்று அவன் அவர்கள் முகம் பார்க்க, “அவளை ரெஸ்ட் எடுக்குறதுக்காக, அனுப்பி இருக்கோம். நீ போனா அந்த ரெஸ்ட் அவளுக்கு கிடைக்காது”.
“அது மட்டும் இல்லாம நைட்டு வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கக் கூடாது” என ராதா அவன் தலையில் கல்லை போட்டுவிட்டுப் போனார்.
வர்ஷா அவர் பின்னே வாய்பொத்தி சிரித்துக் கொண்டு செல்ல,
ராஜ் தான் அவளை தடுத்தான் “சும்மா இரு வர்ஷுமா ஆல்ரெடி உன் அண்ணன் கடுப்புல இருக்கான்”.
சிறிது நேரம் கழித்து, அனைவரும் ஒவ்வொரு வேலையாய் பார்க்க, ஷ்யாம் அவன் அறை சென்று விட்டான்.
அவன் அறைக்கு எதிரே தானே வர்ஷாவின் அறை. எனவே, மெதுவாக தியா உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
தியாவோ, அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துது தான் தாமதம் புடவை, நகை என எதையும் கழட்ட கூட இல்லை அப்படியே உறங்கி விட்டாள்.
‘அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்’ என்பது தெரிந்தவுடன் மெல்ல அடியெடுத்து அவளை தொந்தரவு செய்யாமல் அருகே அமர்ந்தான்.
தூக்கத்தில் புரண்டு படுத்தவளுக்கு அவள் காதுகளிலிருந்த ஜிமிக்கி அவளை குத்த, தூக்கத்திலே ஸ்…என்று அந்த ஜிமிக்கியை தொட்டு பார்த்தாள் ஆனால் விழிக்கவில்லை.
மெதுவாக அவள் தூக்கத்தை கலைக்காமல் அந்த ஜிமிக்கிகளை கழற்றி வைத்தான்.
“செம்ம அழகா இருக்க தியாகுட்டி. பாவம் ரொம்ப டயர்டா இருக்கியோ? சரி தூங்கு இங்க இருந்தா என் கை, கால் சும்மா இருக்காது” என வாய்விட்டே கூறி வெளியேறினான்.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு, அந்த ஜிமிக்கி குத்தவும் சிறிது முழிப்பு வந்தது.
ஆனால் பக்கத்தில் அரவம் கேட்கவே கண்களை திறக்கவில்லை. அவன் அவ்வாறு பேசவும் தனக்குள் சிரித்துக் கொண்டவள், மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
ஒரு மூன்று மணி நேரம் நல்ல உறக்கத்துக்கு பின் கண்விழித்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அதன் பின் தான் திருமணம் ஆனது, இப்பொழுது அவள் மாமியார் வீட்டில் இருப்பது என அனைத்தும் ஞாபகம் வந்தது.
‘அய்யய்யோ இப்படி தூங்கிட்டனே’ என தன்னையே நொந்து கொண்டு, அவசர அவசரமாக தன்னை திருத்தி வேறு புடவை அணிந்து கீழே சென்றாள்.
அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தான் ஷ்யாம். அதற்காய் அவனைக் கடிந்து கொண்டு அவனுடன் ஒன்றாய் அமர்ந்து உண்டாள்.
அதுவரை பொறுமையாக இருந்த ஷ்யாம் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அனைவர் கண்ணிலும் மண்ணை தூவி தியாவை தன் அறைக்கு அழைத்து சென்றான்.
முதல் முறை அவன் திட்டுவதற்காக இங்கே அழைத்து வந்தது தான் நினைவுக்கு வந்தது அவளுக்கு.
‘அவள் முகத்திலேயே அவள் என்ன நினைக்கிறாள்’ என்பதை படித்தவன்,
“சாரிடி தியாக்குட்டி இனிமே கண்டிப்பா உன்ன தேவை இல்லாம திட்ட மாட்டேன்.”
“தேவையில்லாம திட்ட மாட்டீங்கனா, அப்ப தேவைக்கு திட்டுவீங்களா?” என வினா எழுப்பியவள், திடீரென சுவற்றைப் பார்த்து தன் பேச்சை நிறுத்தினாள்.
அதன் அருகே சென்று “இது என்னோடது தானே? இது எப்படி உங்ககிட்ட வந்துச்சு”, என இரு இதயம் இணைக்கப்பட்டார் போன்ற அவளுடைய வெள்ளி பிரேஸ்லெட்டை பார்த்து கேட்டாள்.
ஏதோ பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருப்பது போல் ஒரு கருப்பு பேக்ரவுண்ட் போட்ட பிரேமில் இருபக்கமும் சின்னதாய் ஆணியடித்து இரு பக்க முனையையும் அதில் அழகாய் தொங்க விட்டிருந்தான்.
அவள் முன்பு அவன் அறைக்கு வந்திருந்த போது, தன் அன்னை அறையை சுத்தம் செய்யவென வந்திருக்கவே, அவருக்கு தெரியாமல் அந்த பிரேமை கழட்டி வைத்திருந்தான். எனவே அப்பொழுது அவள் இதை கவனிக்கவில்லை.
அடிக்கடி சுவற்றில் அவள் நியாபகமாய் அதை பார்த்துக் கொண்டிருப்பான்.
“உன்னோடது தான் அது எப்படி வந்துச்சுனு நான் அப்புறம் சொல்றேன்”.என அவளை நெருங்கப் போக,
அவளோ பதட்டத்தில் பின்னே நகர்ந்து கொண்டு சென்றாள். அப்படியே நகர்ந்தவள் பெட் சைடு டேபிள் ஆண்டே சென்று நின்றாள்.
அப்போது தான் அன்று திரும்பி இருந்த அந்த மற்றொரு போட்டோவில் யாரென்று பார்க்க, அதில் கடல் அலையோடு விளையாடியபடி சிரித்துக் கொண்டிருந்தாள் தியா.
தன் நிழல் படத்தைப் பார்த்து நிஜத்தில் திகைத்து நின்றாள் இவள்.
அவளுக்கு புரிந்தது ஷ்யாம் அவளை எவ்வளவு உருகி, உருகி காதலிக்கிறான் என்று.
அதன்பின் அவளை நெருக்கியவனை தடுக்கவில்லை அவள். அவன் கொடுத்த முத்தத்தில் சிவந்த அவள் இதழை தடவிக் கொடுத்தான் ஷ்யாம்.
பின் மறு வீட்டுக்கென்று பெண் வீட்டிற்கு சென்றார்கள். பெண் வீட்டில் தான் திருமண இரவை கழிக்க வேண்டும் என்று.
அவர்கள் மதிய விருந்திருக்கே அங்கே வந்திருக்க வேண்டியவர்கள். தியா நன்றாக உறங்கி விடவே, வர முடியாமல் போய்விட்டது.
ஷ்யாம் தான் அவன் அத்தைக்கு கால் செய்து விவரத்தை கூறினான்.
இவரும் தானே இரண்டு மூன்று நாட்களாக பெண்ணை கவனித்துக் கொண்டிருந்தார். சரியாக உறக்கம் இல்லாமல் மிகவும் கலைத்துப் போயிருந்தாள்.
எனவே அவள் உறக்கத்தை கலைக்க இவருக்கும் மனமில்லை.
இப்படியே நேரம் செல்ல தியா பயந்து கொண்டிருந்த அந்த இரவும் வந்தது, இவர்களின் மனதையும், உடலையும் குளிர்விப்பது போல வானில் அந்த அமுதகிரணன்(நிலா) தன் அமுத கதிர்களை பொழிந்து கொண்டிருந்தான்.
தியாவின் அறையில் தான் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முன்பே அந்த அறைக்கு சென்ற ஷ்யாம் அங்கு இருக்கும் அலங்காரங்களை பார்த்து சிரித்து விட்டு, இவன் பங்குக்கு இவன் சில விஷயங்கள் யோசித்து வைத்ததை செய்தான்.
பின் பால்கனியில் சென்று, அந்த கருமை சுழ்ந்த வானத்தில் ஒளிமையமாய் தெரிந்த நிலவை ரசித்துக் கொண்டிருந்தான்.
இங்கே தியாவுக்கோ இதயம் வெளியேறி குதிக்கும் அளவுக்கு அடித்துக் கொண்டிருந்தது.
அவளின் தாய் சில விஷயங்கள் கூறி அனுப்பினார். மித்துவும் வர்ஷாவும் அவளை ஓட்டி எடுத்து, அவர்களே அவளை அந்த அறைக்கு அழைத்து சென்று உள்ளே தள்ளி சென்றார்கள்.
அறை வாசல் பால்கனி அறை கதவை பார்த்தார் போல இருந்தது.
அரவம் கேட்கவும் ஷ்யாம் திரும்பிப் பார்க்க, தியா அவன் எடுத்த அந்த ஆழ்ந்த நீல நிறமும் அவளின் ரோஜா நிறமும் கலந்த புடவையில் தேவதையாய் ஜொலித்தவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.
முகூர்த்தத்தில் பொழுது இருந்தது போல் நிறைய ஒப்பனைகள் இல்லை, நிறைய நகைகள் இல்லை, ஒரு நீண்ட செயினும் சிறிய நெக்லஸும் தான் அது இரண்டும் வைரம். இது தியாவின் பிறந்த நாளுக்காக முன்பு அவன் வாங்கியது. ஆனால் அதை வாங்குவாளோ மாட்டாளோ என்றுதான் அந்த மோதிரம் கொடுத்தது.
அந்த வைரத்தை விட அதிகம் மின்னியதென்னவோ புதிதாய் அவள் கழுத்தில் உறவாடிய புது தாலி தான்.
‘இவள் தன்னவள்’ என்ற எண்ணம் எழுந்தது அந்த தாலியை கண்டவுடன்.
ஏற்கனவே அவள் படபடப்பாய் இருந்தாள். உள்ளே வந்தவுடன் அவள் கண்ட காட்சிகள் இன்னும் அவள் முகத்தில் சிகப்பேற்றின.
ஏற்கனவே கட்டில் பூக்களால் அலங்கரித்து இருந்தது. அது இல்லாமல் ஷ்யாம் செய்த வேலை கதவு முதல் படுக்கை வரை ரோஜாக்களால் வழி அமைத்திருந்தான்.
மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
‘இங்க வா’ என்று அவன் செய்கையில் அழைக்க.
‘முடியாது’ என்று இடம் வலமாய் தலையாட்டினாள்.
அவனே அவளை நெருங்கி வந்தான். அவன் நெருங்க, நெருங்க இதயம் தாளம் தப்பி துடித்தது பெண்ணவளுக்கு.
மெதுவாய் அவள் கைப்பற்ற, அது சில்லிட்டு இருந்தது. அதில் அவளின் பயத்தை உணர்ந்து கொண்டவன்.
“ஏய்! தியா ரிலாக்ஸ் நான் தானே எதுக்கு இவ்வளவு பயம்” என்றான்.
அப்பொழுதும் மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் வெடவெடுத்துக் கொண்டிருந்தாள் இவள்.
‘இது சரிப்பட்டு வராது’ என்று அவளை பால்கனிக்கு அழைத்து சென்றான் ஷ்யாம்.
அங்கு இருக்கும் ஊஞ்சலில் அவளை அமர்த்தி தானும் அருகே அமர்ந்து கொண்டான். மெல்ல காலை உந்தி ஊஞ்சலை மெதுவாய் அசைத்தான்.
அவள் கைகளை எடுத்து மடி மீது வைத்துக்கொண்டு, அவன் விரல்களை அவள் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.
“தியா குட்டி…”
“ம்…”
“உனக்கு ஞாபகம் இருக்கா நாலு வருஷமா நீ என் மனசுல இருக்கனு நான் சொன்னேன்”.
பதட்டம் குறைந்து அந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில், “ஆமா அன்னிக்கு சொன்னீங்க” என்றாள்.
“அப்ப நான் யூ. ஜி முடிச்சிருந்தேன். உனக்கு தெரியுமில்ல படிச்சுட்டு இருந்த காலத்திலேயே நம்ம கம்பெனிக்கு போய் ஒர்க்ஸ் எல்லாமே கொஞ்சம் கத்துப்பேன்னு.”
“ம்….”
“அன்னைக்கு அப்பா ஒரு இன்டர்நேஷனல் கிளைன்ட் விஷயமா அனுப்பி இருந்தாரு. ஆக்சுவலி அப்பதான் ஃபர்ஸ்ட் டைம் ஒரு கிளையன்ட்ட மீட் பண்ண போனேன் எனக்கு கொஞ்சம் நர்வசா இருந்துச்சு”.
…….
“அப்பா தான் இன்சைட் ஒர்க் எல்லாமே நீ நல்லா தான் பாக்குற அவுட்சைடு ஒர்க்ஸ் எல்லாமே தெரிஞ்சுக்கணும். மெயினா கிளைன்ட், அவங்கள ஹேண்டில் பண்றது இந்த விஷயங்கள் கண்டிப்பா நீ கத்துக்கிட்டே தீரணும்னு என்னை அனுப்பி வச்சிட்டாரு”.
“அந்த கிளைன்ட் எப்பயாச்சி தான் இந்தியா வருவாரு அப்போவே மீட் பண்ணனும். அதுனால ஆபீஸ்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அவங்க வர கொஞ்சம் லேட் ஆச்சு. சரி கொஞ்ச நேரம் வெளியே வாச்சு இருக்கலாம்னு வெளிய வந்து பார்க்கும்போது எதிர்க்க ஒரு பார்க் இருந்துச்சு”.
“சரி அவர் வர வரைக்கும் அந்த பார்க்ல போய் உட்காரலாம்னு அங்கே போனேன்”.
“அப்போ ஒரு குட்டி குழந்தை ரொம்ப க்யூட்டா இருந்துச்சு யாரையோ பார்த்து கண்ணு சிமிட்டுவதும் நாக்க துருத்துவதும்னு ஒரே சேட்டை பண்ணிட்டு இருந்துச்சு”.
“யார பார்த்து இந்த மாதிரி எல்லாம் பண்ணுதுனு திரும்பி பார்த்தா… அதே குழந்தை முகத்தோட க்யூட்டா ஒரு பொண்ணு ஆழ்ந்த நீல நிற சுடிதார்ல அழகான அந்த பெரிய கண்ணவிரிச்சு இந்தப் பிள்ளைக்கு விளையாட்டு காட்டுவதும் அந்த ரோஜா நிற நாக்கை வெளியே நீட்டி துருத்தி விளையாடினதும் பாக்க அவ்வளவு ரசனையா இருந்துச்சு”.
“அதுக்கப்புறம் அந்த பொண்ணு கிட்ட இருந்து என்னால பார்வையை எடுக்கவே முடியல”.
ஆனா அந்நேரம் அவங்க வந்துட்டாங்கன்னு கால் வந்துருச்சு. சரின்னு உள்ள போயிட்டேன். மீட்டிங் முடிச்சுட்டு வெளியே வந்து அந்த பார்க்ல பார்த்தா அந்த பொண்ணு காணோம்.”
“ஏதோ ஒரு பொண்ணை பார்த்தோம் சைட் அடிச்சோம் அதோட விட்டுட்டு போயிடுவோம்னு நான் கிளம்ப நினைக்கும் போது தான், அந்த பிரேஸ்ளேட் என் கண்ணில் பட்டுச்சு. ஏனோ அத பத்திரமா வெச்ச்சுக்கனும்னு தோணுச்சு அதான் இப்போ வரைக்கும் பாதுகாக்கிறேன்”.
“ஆனா அடிக்கடி அந்த பேஸ் எனக்கு ஞாபகம் வந்துகிட்டே இருக்கும். எங்கேயாச்சும் ஒரு இடத்துக்குபோனா. ஒரு தடவை அந்த இடந்த சுத்தி பார்ப்பேன். அந்த முகம் என் கண்ணில் படுதா அப்படின்னு அலசுவேன்”.
“இன்னொரு நாள் அம்மா கூட சூப்பர் மார்க்கெட் போனேன். எல்லாம் வாங்கிட்டு பில்லிங் கவுண்டர்ல நின்னுட்டு இருக்கும்போது, உன்ன பார்த்தேன்.
“ஏதோ கை நீட்டி எடுத்துட்டு இருந்த, திடீர்னு செல்ப்ல மண்டையில் இடிச்சுக்கிட்ட. சுத்தி முத்தி யாராச்சும் பாக்குறாங்களான்னு பாத்துட்டு அந்த செல்பே போட்ட பாரு ஒரு அடி. அதுல எனக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு”.
“உன்ன பார்த்ததில் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. உன்ன பார்க்கும்போதெல்லாம் என்னன்னே தெரியாமல் உன் பக்கம் என்னை ஈர்த்துட்டே இருந்த”.
“அப்புறம் ரொம்ப நாள் என் கண்ணுல நீ படவே இல்ல. அப்பதான் பி. ஜி பண்றதுக்காக அந்த யுனிவர்சிட்டில அப்ளை பண்ண வந்தேன்.”
“அப்போ தான் திரும்பவும் உன்ன பார்த்தேன். அதுவும் அதே சுடிதார்ல எனக்கு ஆச்சரியம் தான். இவளும் இதே காலேஜானு மனசுல அப்படி ஒரு சந்தோஷம்.”
“இப்போ தெரியுதா நான் ஏன் இன்னைக்கு இந்த கலர் புடவை சூஸ் பண்ணினேன்னு”, என கண்களில் அவளை பருக்கிக்கொண்டே கேட்க.
“ம்…புரிது புரிது…”, என்றாள் அந்தப் புடவை வருடிக் கொண்டே.
அவளுக்கும் நீல நிறம் பிடிக்கும் இல்லையா, அவன் முதல் முதலில் அவளை பார்த்ததே அந்த நிறத்தில் தான். தொலைந்தவள் மீண்டும் கிடைத்ததும் இதே நிறத்தில்தான்.
எனவேதான் அவன் முதலிரவுக்கு அந்த நிற புடவையை தேர்ந்தெடுத்தது. ஒருமுறை மித்து அவளுக்கு நீல நிறம் பிடிக்கும் என்று சொன்னதும் இவன் மனதில் பதிந்தே இருந்தது.
அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள். மீண்டும் அவனிடம் கதை கேட்டு சற்று நேரம் அவன் கவனத்தை திருப்ப நினைத்தாள்.
அவனும் அவளின் பதற்றத்தை உணர்ந்தே இருந்ததால் கதையை தொடர்ந்தான்.
“எப்படா காலேஜ் ஓப்பன் ஆகும் பாத்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் பார்த்தா நீ வர்ஷாக்கு பயங்கர கிளோஸ் ஆகிட்ட.”
“பிரேக் டைம்ல எல்லாமே என்ன அந்த படிக்கட்டு கீழே கண்டிப்பாக பார்க்கலாம் பசங்களுக்கு அதுக்கு காரணம் தெரியாது.”
“நான் எதோ தனிமையை தேடி போறேன்னு நினைச்சுப் பாண்ணுங்க. ஆனா உண்மை என்ன தெரியுமா? உன்ன பாக்குறதுக்கு தான்.”
“பிரேக் டைம், லஞ்ச் டைம்லலாம் நீ கீழ இறங்கி வருவ பாத்தியா. அதனால உன்னை மிஸ் பண்ணிடக் கூடாது அப்படின்னு வந்து பார்த்துக்கிட்டே இருப்பேன்.”
“என்ன தான் பாத்துக்கிட்டே இருந்தாலும் உன்கிட்ட பேசறதுக்கான வாய்ப்பு அமையவே இல்ல. நானா வந்து பேசுனா தப்பா நினைச்சிபியோன்னு யோசனை அதையும் நீயே அமைத்துக் கொடுத்த”.
“முதல் முதல்ல நீ என்கிட்ட வர்ஷா பர்த்டேக்கு கிபிட் வாங்க போன அப்போ தான் பேசுன உனக்கு ஞாபகம் இருக்கா?”
“இருக்கு”
“நீயே நம்பர் வேற கொடுத்த. எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதுக்கப்புறம் நம்ம வீட்டுக்கு வந்து இருந்தியே, தோட்டத்த நீ ரசிச்சிட்டு இருந்த, உன்னை நான் ரசிச்சிட்டு இருந்தேன்.”
“என் குரல் கேட்டு பயந்து விழ வேற பாத்த”
“அதான் சார் கைய புடிச்சு விழாமா நிறுத்திட்டீங்களே” என்றாள் நக்கலாய்.
“ஆமா உள்ள கரண்ட் ஷாக் அடிச்சா மாதிரி ஒரு ஃபீல் அன்னைக்கு” எனவும்,
அவன் கையில் ஒரு அடி போட்டாள்.
“உண்மையா தானே சொன்னேன்”
“சரி சரி மேல சொல்லுங்க”
“அதுக்கப்புறம் நம்ம எல்லாருமே நல்லா பழக ஆரம்பிச்சாச்சு. எனக்கு ஒரு கில்ட்டிபில் இருந்துட்டே இருக்கும். நீ என்ன பிரண்டா நினைச்சு பழகுறியா நான் மட்டும் இப்படி பார்க்கிறேன்னு”.
“இது தப்பு இப்படி பார்க்க கூடாதுன்னு எவ்வளவோ நான் ட்ரை பண்ணியும், உன்னை சைட் அடிக்கிறது என்னால நிறுத்திக்கவே முடியல”.
“ஆனா அப்பயும் இது காதல்னு நான் புரிஞ்சுக்கல, ஏதோ வயசு கோளாறு உன்ன பாத்தா ஒரு ஈர்ப்பு, அந்த ஈர்ப்பு எதனாலன்னு எனக்கு தெரியல நான் அதை யோசிக்கவும் தயாரா இல்ல”
“உன்னை பார்க்கிறது எனக்கு புடிச்சிருக்கு. அந்த ஃபீல் எனக்கு உள்ள ஏதோ ஒரு சந்தோஷத்தை தருது. அதை நான் அனுபவிச்சேன்.”
“நம்ம கேரளா போனோமில்ல அங்கதான் நான் என்னோட காதலை தெரிஞ்சுகிட்டேன்.”
“எப்படி?”, என்றாள் ஆர்வமாய்.
“எல்லாம் நம்ம பாரதியாரோட புண்ணியம் தான் அன்னைக்கு நீ ஆடுனியே அந்தப் பாட்டு அதுல வந்த ‘மருவ காதல் கொண்டேன்னு’ வந்த வரி என் மனச எனக்கு புரிய வச்சுச்சு.”
“என் மனசு எனக்கே புரிஞ்சதுக்கப்புறம் அவ்வளவு சந்தோஷம் அந்த நெனப்பிலேயே இருந்ததுனால தான் அன்னைக்கு கொஞ்சம் எசக்கு பிசகா நீ என் மேல விழுந்தப்ப நடந்துடுச்சு.”
அப்பொழுது அவள் முறைத்தாள்.
“அதுக்கப்புறம் கூட சும்மா இல்லையே நீங்க.” என்றாள் வெட்கத்தை மறைந்து.
அதற்கு சிரித்தவன் “என்னவோ தெரியலடா குட்டி உன்ன விட்டு தள்ளி இருக்கும் போது இப்படி எல்லாம் நடந்துக்க கூடாதுன்னு தோணும். ஆனா உன் பக்கத்துல வந்துட்டா என் கண்ட்ரோல் என்கிட்டே இருக்காது.”
“நீ என்கிட்ட கார்ல பேசினப்ப உன் மனசு எனக்கு புரிஞ்சுச்சு. உனக்கும் என் மேல ஈர்ப்பு இருக்கிறது தெரிஞ்சுச்சி. அதுக்கப்புறம் தான் கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்.”
“உனக்குள்ள இருக்க காதலை வெளியே எடுத்து வரதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு தெரியுமா.”, என்றான் பெருமூச்சுடன்.
“அப்புறம் அன்னைக்கு நான் அப்படி திட்டினது ரொம்ப தப்புதான். சாரி இப்ப எவ்வளவோ என்னோட கோபத்தை கண்ட்ரோல் பண்ண கத்துக்கிட்டேன். இனிமே நிச்சயம் கோபம் வராது வராது வரவே வராது.”
“சார் ரொம்ப மாறிட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது.”
இவ்வாறு பேசி பேசி அவளை இயல்பாகி இருந்தான் அவன்.
‘தன் மேல் இவ்வளவு காதல் வைத்துள்ளானே’ என்பது அவளுக்குமே இனிமையாய் இருந்தது.
இப்பொழுது அங்கே பேச்சு நின்று மௌனம் குடி கொண்டது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஷ்யாமின் பார்வை தியாவின் இதழில் நிலைத்தது.
இவ்வளவு நேரம் தூர தள்ளிப் போயிருந்த பதட்டம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு.
அவளை நெருங்கினான் மென்மையாய் அவள் இதழில் கவிதை படித்தான். அதில் மங்கை ஆழ்ந்து போனாள்.
அவளிடம் மெதுவாய் சம்மதம் கேட்க, பெண்ணோ “முடியாது” என்றாள்.
“ஏண்டி கொஞ்ச நாள் டைம் வேணும், இப்ப இதெல்லாம் வேணாம்னு ஏதாவது குண்ட தூக்கி போட போறியா” என சோகத்தை முகத்தில் அப்பிக்கொண்டு கேட்க,
அதை கண்டு நகைத்தவள், “வெளியே இருக்கோம்.”, வெக்கத்துடன்.
“ஓ! அதுதான் பிரச்சினையா” என்று அவளை தூக்கிக்கொண்டு படுக்கைக்கு சென்றான்.
அதற்கும் அவள் மறுக்க, “என்ன தாண்டி உன் பிரச்சனை”, என்று இடுப்பில் கிள்ளி வைத்தான்.
“ஆ…வலிக்குது”, தாழ் போடல அது தான் சொல்ல வந்தேன் .
“உனக்கு இதே வேலையா போச்சுடி அன்னைக்கு என்னை நீ எவ்வளவு டிஸ்டர்ப் பண்ணிட்ட தெரியுமா”.
“நல்லா பாரதிராஜா படத்தில வர ஹீரோயின் மாதிரி வெறும் ஷர்ட் மட்டும் போட்டு செமையா இருந்த”.
“ஷ்யாம்… அத பத்தி இனிமே பேச மாட்டேன்னு சொன்னீங்க”.
“அப்போதைக்கு பேச மாட்டேன்னு சொன்னேன். இனிமே பேசவே மாட்டேன்னு சொல்லலையே”.
“சரி சரி போய் தாழ்பால் போடுவோம் வா”, என அவளைத் தூக்கிய படியே போய் தாழ் போட்டு, மீண்டும் அந்த ரோஜா பாதையில் நடந்து வந்து படுக்கையில் அவளை கிடத்தினான்.
உச்சி முதல் பாதம் வரை அவன் மீசை உரச, முத்த ஊர்வலம் நடத்தினான். அது தந்த குறுகுறுப்பில் பெண் மொத்தமாய் சிவந்து, கண்கள் மூடி இருந்தாள்.
விழி மூடிய தங்கச் சிலை என தன் கண் முன் இருந்தவளை பார்த்தவனுக்கு முதல் முறை அவள் இதழ் தீண்டையில், அவன் மனதிற்குள் வந்த பாடலின் மற்றொரு சரணம் நினைவில் ஓடியது,
உடையால் மூடி வைத்தும்
இமைகள் சாத்தி வைத்தும்
அழகால் என்னை கொல்கிறாய்
அருவி கால்கள் கொண்டு
ஓடை இடையென்றாகி
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்
கடலில் மீனாக
நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி
உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள
ஏழு கோடி ஜென்மம் வேண்டும்
முடிய இமையை பார்க்கவும் முதன் முதலில் அவன் பதித்த முத்தம் நினைவு வர, மீண்டும் அதே முத்தத்தை அவளுக்கு கொடுத்தான்.
அதில் இமை விரித்து அவனைப் பார்த்தாள் பாவை.
அவன் கண்ணில் காமம் மட்டுமின்றி காதலும் பொங்கி வழிந்ததை பார்த்தவள், தாராளமாய் அவளை அவனுக்கு கொடுத்தாள்.
முதலில் அவ்வளவு நேரமும் தன்னை கட்டி இழுத்துக் கொண்டிருந்த அவள் வெற்றிடையில் கரம் பதித்தான். அதன் மென்மையில் ஈர்க்கப்பட்டவன். தன் மறுக்கையை சேலைக்குள் இருக்கும் மறு இடையின் புறம் விட்டு அழுந்த, அதில் ஒரு புதுவகை சுகத்தை உணர்ந்த பெண் அவன் தோள்களை பற்றினாள்.
சிறிது சிறிதாய் அவன் கைகள் இடையன் மேல் ஏறி அத்துமீற, அதை தடுக்க நினைத்த பெண் அவன் கைகளைப் பற்ற, “என்ன பிடிக்கலையா…” என்றான் குரலை குழைத்து,
“அதில்ல வெட்கமா இருக்கு” என அவள் கூறவும்.
அந்த பதிலில் சிரித்தவன். தன் கரத்தை அவள் கரத்தோடு பின்னிப்பிணைந்து ஆறுதல் கூறி, தன் வேலையை தொடர்ந்தான்.
முதல் முறை என்பதால் சில தடுமாற்றங்கள் இருக்க தான் செய்தது. மெது மெதுவாய் பெண்ணின் மென்மையை முழுதாய் உணர்ந்தான் அவன்.
அந்த மென்மையின் சுகத்தில் ஆழ்ந்தவன். பெண்ணின் முகம் பார்த்து அவளின் பிடித்தம் உணர்ந்து, அவன் உணர்ந்த சுகத்தை அவளையும் முழுதாய் உணரச் செய்தான்.
காமம் இத்தனை அழகானதா? இத்தனை மென்மையானதா? என அதிசயித்தது அவளின் பெண் மனம்.
அவளை முழுதாய் அவன் உணர்ந்தான். அவனை முழுதாய் அவள் உணர்ந்தாள். யாரால் யாருக்கு சுகம் அதிகம் பொருள் விளங்கா கேள்வியானது அது.
அவள் இதுவரை கற்றிடாத பல புதிய பாடங்கள் கற்றுக் கொடுத்தான்.
விடியல் பொழுதில் இருவரும் கலைத்து கண்ணயர்ந்தனர்.
***
வர்ஷா தியாவை அவள் அறையில் விட்டு தங்கள் அறைக்கு வந்தாள்.
அங்கே அவர்கள் படுக்கை அலங்கரித்திருப்பதை பார்த்து சிரிப்பு தான் வந்தது, “என்ன இப்பதான் முதலிரவு கொண்டாடுறதா நினைப்பா” என்றாள்.
“பல இரவு கொண்டாடினாலும் அலுக்கவே மாட்டேங்குதே நான் என்ன பண்ண” என்றான் கிறக்கமாய்.
“இப்படியா பேசுவீங்க.” என்றாள் வெக்கத்துடன்.
“நைட்ல வேற எப்படி பேச சொல்ற. நீதான்டி குழந்தை பெத்துக்கலாம்னுசொன்ன அப்போ இப்படி எல்லாம் பேசி தானே ஆகணும்.” என்றான் அவளை அனைத்தபடி.
“ஆமாயில்ல அதான் முடிஞ்சிடுச்சு இன்னும் என்ன தடை.” என்றாள் அவளும் இவன் மார்பில் சாய்ந்து.
“அதையே தான் மாமாவும் சொல்லிட்டு இருக்கேன்”, என அவளை அலங்கரித்திருந்த கட்டிலின் அருகில் அழைத்து சென்றான்.
அங்கே மீண்டும் ஒரு முதல் இரவு அரங்கேறியது.
***
அருண் மித்து இருவரும் நண்பர்களின் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எனக்கு முன்னாடியே தெரியும் மாமா அவங்க ரெண்டு பேரும் பாக்குற பார்வையே சரி இல்லன்னு” என்றாள் மித்து குதூகலமாய்.
“எனக்கு மட்டும் தான் அப்ப இது ஷாக்கா இருந்துச்சா”, என்றான் அருண்.
முதன் முதலில் அவனுக்கு இது தெரியவரும் போது அதிர்ச்சியாக தான் இருந்தது.
“ஆமாண்டா என் மக்கு மாமா எல்லாருக்குமே முதலிலேயே தெரியும்”, என்றாள் லேசாய் அவனின் மண்டையில் தட்டி.
“என்னடி பண்றது ஒன்னும் தெரியாத பச்ச புள்ளையா போயிட்டேன் நானு, என்றாலும் உண்மையிலேயே பச்சைப் பிள்ளை போல் முகத்தை வைத்துக்கொண்டு,
“யாரு நீ பச்ச புள்ள உனக்கு ஒண்ணுமே தெரியாது”, என்றால் அவன் முகவாயை பிடித்து,
அவள் கூறுவதின் அர்த்தம் புரிந்தாலும் குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு, “ஆமாம்”, என்றான்.
“ஆமாமா நீங்க ஒன்னும் பண்ணாம தான் இப்போ…”, என்றால் சிறிதாய் வெட்கம் கலந்து,
“இப்போ…என்ன சொல்ல வர”, என்றான் உண்மையிலேயே புரியாமல்.
“ இங்க வந்து இருக்கா”, என்றாள் வயிற்றை தொட்டு காட்டி.
“ஏய் உண்மையாவா சொல்ற”, குரலில் அத்தனை சந்தோஷத்தை காட்டி,
“ஆமா இப்பதான் கன்பார்ம் பண்ணிட்டு வரேன்”, என்று அந்த பிரக்னன்சி கிட்டை எடுத்து காட்டினாள்.
அவளைத் தூக்கி தட்டாமாலை சுற்றினான். பிறகு பதறிக்கொண்டு “அய்யய்யோ! இந்த நேரத்தில் உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்க” என்றான் கனிவாய்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல நல்லா தான் இருக்கேன்”, என்றாள் ஆறுதலாய்.
“ஏய் வா வா டாக்டர் கிட்ட போயிட்டு வந்துடலாம்”, என அவன் அவசரம் காட்ட,
“இந்த நேரத்திலையா…”, என்றால் கடிகாரத்தை காட்டி.
“ஆமா இப்பவே போய் பார்த்தாகணும்”, என்றான் இவனும் விடாப்பிடியாய்.
“நடுராத்தி ஆகுது நாளைக்கு மார்னிங் போய் பாத்துக்கலாம் படுங்க”.என்று கூறிய அவள் படுத்து விட,
இவனுக்கு தான் மண்டை காய்ந்தது ‘இப்படி பண்றாளே’ என்று.
***
மறுநாள் காலை தியா மெதுவாய் கண் விழிக்க, ஏதும்மறியா சிறு பிள்ளையாய் உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தவளுக்கு,
‘இவன் தானா இரவில் தம்மிடம் அப்படி நடந்து கொண்டான்’ என்ற கேள்வி தான் பிறந்தது.
பின் மெதுவாய் அவனிடமிருந்து பிரிந்து, பூனை நடை நடந்து குளியலறைக்குள் புகுந்தாள்.
அவன் எழுந்தால் இரவைப் பற்றி ஏதாவது பேசுவானோ என்ற கூச்சம் இவளுக்கு. எனவே குளித்து முடித்து அவன் எழுவதற்குள் கீழே சென்று விட்டாள்.
லட்சுமி பெண்ணின் முகத்தை வைத்தே மகள் நல்லபடியாக இல்லறத்தை துவங்கி விட்டாள் என்பதை புரிந்து கொண்டார்.
அவளை பூஜையறை சென்று விளக்கேற்றி வர சொன்னார்.
பின் அவள் கையில் காபி கப்பை கொடுத்து, ஷ்யாமுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.
அவரிடம் என்ன சொல்ல முடியும் அமைதியாக வாங்கிக் கொண்டு, மேலே சென்றாள்.
அப்பொழுதுதான் வர்ஷா அவள் அறையிலிருந்து வெளியே வர, தியாவைப் பார்த்து புருவம் உயர்த்தினாள் வர்ஷா.
அதற்கு முகம் சிவந்து வெக்கப்பட்ட தோழியை பார்த்தவளுக்கு புரிந்தது, இரவெல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற தியா படுக்கை காலியாக இருப்பதைக் கண்டு, ‘எழுந்து குளியலறை சென்று இருப்பான்’ என்று காபியை வைத்து விட்டு, தப்பித்தோம் என்று திரும்பி போக பார்க்க,
அதுவரை கதவின் மறைவில் இருந்தவன் இவளை அணைத்துக் கொண்டான்.
“எங்கடி தப்பிச்சு போக பாக்குற” என அவளின் கழுத்தில் முகம் புதைக்க,
இவள் நெளிந்தாள். இரவின் மிச்சமீதி தொடர்ந்தது.
காத்திருந்த காதல் அழகாய் கைகூடியது, அவனின் அன்பின் அழம் கண்டு பேதை மனம் முழுதாய் அவன்பால் சரிய, இப்பொழுது இவளது முறை அவனுக்கு திகட்டா காதலை கொடுக்க வேண்டிய நேரம் இதுவல்லவா?
(போன எபிக்கு லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி அடுத்து எபிலாக்ல சந்திக்கலாம் பை…. பை….)