💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு 28

அனைத்து தவறுகளுக்கும் தண்டனை மட்டுமே தீர்வாகாது…

சில நேரங்களில் மன்னிப்பது கூட அவர்கள் திருந்துவதற்கு அளிக்கும் வாய்ப்பாய் அமையும்…

அருண் சொன்னது சரியே, அந்த சிம் கார்ட் காட்டின சிக்னலை அவர்கள் ட்ரேஸ் செய்து போனபோது, அந்த இடம் குப்பையும், கூலமுமாக இருந்தது.

அதாகப்பட்டது அவன் சிம் கார்டை தூக்கி எறிந்து தான் சென்றிருக்கிறான்.

இந்த தகவல் முதலில் ராஜுக்கு சென்று, பிறகு அனைவருக்கும் பகிரப்பட்டது.

***

ராஜ் ஓசூர் வந்து சேர, அந்த கான்ஸ்டபிள் இவனுக்காக அங்கே காத்துக் கொண்டிருந்தார்.

இவன் வரவும் இவனையும் அழைத்துக் கொண்டு, அந்த சங்கரின் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள்.

“நீங்க கரெக்டா பார்த்தீங்களா அது அவன் வீடு தானே?”

“ஆமா சார் அவன் வீடு தான்”.

“அவன் மட்டும் இருக்கானா இல்ல, கூட யாராவது இருக்காங்களா?”

“குடும்பமா இருந்தாங்க சார். ஒரு பொண்ணு இருந்துச்சு அவன் வைஃப்னு நினைக்கிறேன், அப்புறம் ஒரு குழந்தை ஒன்னு இருந்துச்சு, அப்புறம் கொஞ்சம் வயசான ஒருத்தவங்க இருந்தாங்க அது அவங்க அம்மா நினைக்கிறேன் சார்.”

அவனின் வீட்டு ஓனர் சொன்ன குடும்ப விபரமும் இதுவும் ஒத்துப்போகவே, ‘அவனாய் தான் இருக்கும்’ என்று தீர்மானத்திற்கு இவனும் வர, நம்பிக்கையோடு அந்த இடம் நோக்கி சென்று, தூரத்தில் நின்றே நோட்டம் விட்டார்கள்.

வீட்டினுள் ஆள் இருக்கிறார்களா இல்லையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு யாருமே வீட்டை விட்டு வெளியே வந்த பாடு இல்லை.

இதற்கு மேல் சும்மாவே எப்படி காத்திருப்பது என்று ராஜ் தான் அந்த காவலரை வீட்டின் கதவை தட்டி பார்க்கச் சொன்னார்.

அவரும் சென்று கதவை தட்ட, கதவு திறந்தது உள்ளிருந்து வந்தது சங்கரே தான்.

அவர்கள் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்று டூவீலரில் தான் வந்திருந்தார்கள். இந்த டூவீலரின் அருகே நிற்கும் ராஜை சுட்டிக்காட்டி “அவர் உங்களை கூப்பிட்டாரு” எனக் கூறினார்.

அவன் யார் என்று எட்டிப் பார்க்க ராஜ் நின்றிருந்தான்.

கண்களில் கூலர்ஸ், ஜீன்ஸ் டி-ஷர்ட் சகிதம், கம்பீரமாய் நின்றிந்தவனின் உடல் கட்டும், ஹேர் கட்டும் ‘அவன் போலீஸ்’ என பறைசாற்றியது.

ராஜைப் பார்க்கவும் இவனுக்கு திகில் எடுத்தது.

அவனின் முக பாவங்களை பார்த்துக் கொண்டே அவனை நெருங்கி வந்தான் ராஜ்.

“அப்புறம் நீங்க சங்கர் தானே உள்ள போய் பேசலாமா”

“நீங்க யாரு? எதுக்கு தேவை இல்லாம வந்து, இங்க பேசணும் உங்களை எனக்கு யாருன்னு தெரியல?”

“ஹா ஹா ஹா….உனக்கு எங்கள தெரியாம இருக்கலாம், ஆனா எங்களுக்கு உன்ன நல்லா தெரியும். உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும் அதனால உள்ள வரியா”, என அந்த முக்கியத்தில் சிறு அழுத்தம் கொடுத்தான்.

அப்பொழுதும் கதவை அடைத்தபடி அப்படியே நின்று கொண்டு, என்ன சொல்வது என முழித்து கொண்டிருந்த சங்கரைப் பார்த்து.

“ஒழுங்கா உள்ள விட்டேனா இங்கே விசாரணை முடிச்சிட்டு போயிடுவ, இல்லன்னா உன் குடும்பத்துக்கு எதிர கைதி பண்ற மாதிரி சிட்டுவேஷன் வரும் என்ன சொல்ற?”

அவன் ‘கைது’ என்ற வார்த்தையை சொல்லும் பொழுது, ‘சென்ற கணவன் இன்னும் ஏன் வரவில்லை? யாரது வந்திருப்பது?’ என்று பார்க்க வந்த, அவன் மனைவியின் காதில் தெளிவாக விழுந்தது அது.

இந்த கைது என்ற வார்த்தையில் பரபரப்பானவள் தன் கணவனை பின்னே தள்ளிவிட்டு, அவர்களிடம் இவளே பேசலானாள்.

“என்ன சார் சொல்றீங்க கைது அது இதுன்றீங்க உங்கள பாத்த போலீஸ் மாதிரி தான் இருக்கு, என்ன வேணும் உங்களுக்கு எதுக்கு தேவை இல்லாம என் புருஷனை கைது பண்ணனும்.”

தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற, அவனின் மனைவியின் பேச்சில் ராஜிற்க்கே ஒரு நிமிடம் ஒரு மாதிரி தான் ஆனது.

பின் சங்கரை பார்த்து, “அப்போ உன் பொண்டாட்டிக்கு எதுவுமே தெரியாது எதையுமே நீ சொல்லல”, என நக்கலாய் கேட்டான்.

இவ்வாறு ராஜ் பேசவும்தன் கணவனை திரும்பி பார்த்தாள் அவள், அவன் முகமோ வேர்த்து விறுவிறுத்து கை, கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தான்.

அந்தத் தோற்றமே கணவனின் மீது ஏதோ பிழை இருக்கிறது என்பதை புரிந்தகொள்ள வைத்தது அவளுக்கு.

பின் சிறிதும் காத்திருக்காது ராஜையும் மற்ற காவலரையும் உள்ளே வர, அனுமதித்து வழி விட்டு நின்றுக் கொண்டாள்.

ராஜிற்க்கு புரிந்தது சங்கர் மனைவி இவர்களுக்கு ஒத்துழைப்பாள் என்று.

உள்ளிருந்த சங்கரின் அன்னை இவர்கள் யார் என்ன கேள்வி எழுப்ப, சங்கர் அமைதி காத்தான்.

சங்கரின் மனைவிதான் “இவங்க போலீஸ் அத்தை உங்க பிள்ளை ஏதோ தப்பு பண்ணி இருக்காரு அதனாலதான் அந்த ஊரை விட்டு நம்மள ராவோட ராவா கூட்டிட்டு வந்து இருக்காரு.”

“என்னம்மா சொல்ற?”, அந்த அன்னையின் உள்ளம் பதறியது.

“இங்க பாரு சங்கர் குழந்தை, அம்மா, மனைவி இவங்கள எல்லாம் பார்த்த பிறகு உன்னை அடிக்கணும், கொல்லனும் எனக்கு எந்த விதமான எண்ணமும் வரல, எனக்கு வேண்டியது எல்லாம் உண்மை அதை சொல்லிட்டேனா நான் போயிட்டே இருப்பேன்”.

“இல்ல சார் அது வந்து…”

யாரும் எதிர்பார்க்க வண்ணம் சங்கரின் மனைவி அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

“உண்மைய சொல்லுய்யா என்ன தப்பு பண்ண? எதுனால எங்கள இங்க கூட்டிக்கிட்டு வந்த? உண்மைய சொல்லு…”

சிறிது நாட்களாகவே மகனின் நடவடிக்கையில் தவறு இருப்பதாய் தோன்ற, அந்த அன்னையும் அவனை குடைந்தார்.

தன் மீது இவ்வளவு நாளாய் பாசமாய் இருந்த, அன்னையும் மனைவியும் இவ்வாறு தன்னிடம் நடந்து கொள்ளவும் சங்கருக்கு சர்வமும் ஓடுங்கியது.

பின் ராஜிடம் அனைத்து உண்மைகளையும் கூறத் துவங்கினான்.

வர்ஷாவின் கார் எந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்யப்படுகிறதோ, அதை சர்வீஸ் சென்டரில் தான் வர்ஷாவை கொல்ல நினைத்த அந்த நபரும் காரை சர்வீஸ்க்கு விடுவான்.

மாத மாதம் இந்த தேதியில் தான் வர்ஷாவின் கார் சர்வீஸ் வரும் என்பது அவனுக்கு தெரியும்.

அந்த சர்வீஸ் சென்டரில் விலை உயர்ந்த கார்களை சங்கர் தான் சர்வீஸ் செய்வான். அதுவும் அவனுக்கு தெரியும் அவன் காரையும் சங்கர் தானே சர்வீஸ் செய்வான். அவனுக்கு கார் மீது அப்படி ஒரு மோகம் எனவே காரை பார்த்து பார்த்து பராமரிப்பான் அப்படித்தான் தன் காரை சர்வீஸ் செய்யும் சங்கரையும் அவனுக்கு தெரியும்.

எப்பொழுதும் டிரைவரிடம் காரை கொடுத்து அனுப்புபவன் இன்று அவனே வந்திருந்தான். வர்ஷாவின் கார் சர்வீஸ்க்கு வருவதற்கு முந்தின நாள் தான் ‘தன் காரை சர்வீஸ் செய்ய வேண்டும்’ என்று எடுத்துக் கொண்டு வந்தவன் சங்கரிடம் பேசத் தொடங்கினான்.

அங்கே நேரில் பேசினால் பிரச்சனையாகும் என, சங்கரி நம்பரை வாங்கிக் கொண்டு சென்றான்.

சில நிமிடங்களிலேயே சங்கரின் போனுக்கு அவனின் கால் வந்தது. மெதுவாய் தொடங்கி விஷயத்தை கூறினான் ஆனால் சங்கருக்கு முதலில் பயமாய் தான் இருந்தது.

“பெரிய இடமாசே சார் பெரிய பிரச்சனை ஆயிடுமே.”

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ ஒன்னும் சும்மா செய்ய வேண்டாம் உனக்கு நான் ரெண்டு லட்சம் பணம் தரேன்.”

பணம் என்ற உடன் இவன் மனது சிறிது மயங்கியது.

“இப்பவே பணம் உன் கைக்கு வந்து சேரும்.”

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் வந்து, சங்கரின் கையில் ஒரு கவர் கொடுத்து விட்டு சென்றார்.

அவன் அதை திறந்து பார்க்க அதனுள் கட்டு கட்டாய் புது நோட்டுகள் இருந்தன. ஏற்கனவே பணம் என்றவுடன் சிறிது ஆடிப் போயிருந்தான். இப்பொழுது கட்டு கட்டாய் கையில் புது நோட்டுகளை கண்டவுடன் ‘செய்தால் என்ன’ என்றுதான் அவனுக்கு தோன்றியது.

“என்ன கைக்கு பணம் வந்திருச்சா?”

“வந்துடுச்சு சார்”.

“இனி நான் சொல்ற மாதிரி செய், இந்த நம்பர் வண்டி உன்கிட்ட தான் சர்வீஸ் வரும்”, என்று வர்ஷாவின் வண்டி நம்பரை கூறினான்.

“ஆமா சார் நாளைக்கு தான் சார் வருது.”

“அதுல டயர்ல தேவைக்கு அதிகமான காத்து அடிச்சு விடு.”

“ஐயோ சார் அப்படி பண்ண வண்டி போயிட்டே இருக்கும்போது டயர் வெடிச்சிடும் சார்.”

“அது எனக்கு தெரியாதா பின்ன எதுக்கு அப்படி பண்ண சொல்றாங்க”

“சார்…அது…வந்து…”

“ரொம்ப தயங்காத அப்புறம் கையில இருக்க, அந்த லட்சுமி காணாம போயிடும்”

இவ்வாறு அவன் கூறவும் தன் கையில் இருக்கும் கவரை ஒருமுறை பிரித்துப் பார்த்தான். அந்தப் புது கரன்சி நோட்டுகள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது, அதை கை நழுவ விட இவனுக்கு மனம் வரவில்லை

“சரி சரி பண்ணிடுறேன் சார்.”

“இப்பதாண்டா நீ நம்ம வழிக்கு வந்து இருக்க, அப்புறம் வேலைய முடிச்சுட்டு அங்க இருந்து முதல்ல வேலையை விட்டு நின்னுடு. இந்த பக்கம் எங்கயும் வேணாம் ஒசூருக்கு போயிடு. உனக்கு தங்கிக்க இடம் நான் பாத்துக்குறேன். இப்ப நம்ம பேசின இந்த சிம் கார்டு தூக்கி போட்டு, அந்த கவர்ல ஒரு புது சிம் கார்டு இருக்கும் பாரு, அது எடுத்து மாட்டிக்கோ.”

இவை அனைத்துமே அவர்கள் ரெக்கார்டிங்கில் கேட்டிருந்தார்கள்.

இவர்கள் யாருக்கும் தெரியாத இன்னொரு விவரமும் உண்டு. அவன் வெறும் இந்த ஒரு ஏற்பாடை மட்டும் செய்யவில்லை. அந்த டிரைவர் எதிரே ஒரு லாரி வந்தது, என்று திருப்ப போராடினார் அல்லவா, அந்த லாரியையும் அவனே தான் அனுப்பி வைத்திருந்தான்.

எப்படியும் கார் டயர் வெடித்து வண்டி தாறுமாறாய் வரும் அப்படி ஒரு வேளை, அதில் ஏதேனும் பிழை ஏற்பட்டு அவள் அதில் தப்பி விட்டால் என்ன செய்ய, எனவே அந்த லாரியையும் அனுப்பி வைத்திருந்தான்.

அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்ட, ராஜ் அந்த நபர் யார் என்பதையும் அறிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

அந்த வீட்டை விட்டு வெளியே வரவும், காவலர் அவனை பார்த்து “என்ன சார் அவனை அப்படியே விட்டுட்டீங்களே?”

“பாவம் சார், வயித்து பொழப்புக்கு பண்ணிட்டான். பாத்தீங்கள அவன் குடும்பத்தை கைக்குழந்த வேற இருக்கு, ஆனா அவன் மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க திரும்பவும் ஏதாவது ‘அவன் தப்பு பண்றான், இல்ல தவறான வழியில் போற மாதிரி தோணுச்சுன்னா’ உடனே பிடிச்சு ஜெயில்ல போடுங்க.”

“கண்டிப்பா சார்”

இவர்களின் பேச்சு உள்ளே இருப்பவர்களுக்கும் கேட்டது.

தண்டனை அனைத்திற்கும் தீர்வாகாது, சில சமயம் மன்னிப்பு கூட ஒரு நபரை திருந்துவதற்கு வழியாய் அமையும்.

ராஜ் தெரிந்து கொண்ட அந்த நபர் யார்? அவன் ஏன் வர்ஷாவை சொல்ல நினைத்தான்?

***

ராஜ் யாரைப் பற்றி தெரிந்து கொண்டானோ, அவன் வீட்டில் தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தான்.

‘சே, அவள கொல்ல எப்படி எப்படியோ ட்ரை பண்ணியாச்சு ஒன்னும் வேலைக்கு ஆகலையே’.

‘அந்தக் கார்லயும் தப்பிச்சிட்டா, லாரிலையும் தப்பிச்சுட்டா, அவளுக்கு ஆயுசு ரொம்ப கெட்டி போல’

‘ஹாஸ்பிடலுக்கு கொல்ல அனுப்பிச்சவனையும் அவ அண்ணனும் அந்த போலீஸ்காரனும் சேர்ந்து பிடிச்சுட்டானுங்க’

‘அவன் நம்ம விசுவாசி கண்டிப்பா நம்மள காட்டிக் கொடுக்க மாட்டான்’

‘முதல்ல அந்த போலீஸ்காரனை கொல்லனும். அதுக்கு அப்புறம் தான் இவள கொல்ல முடியும் போல’ பாவம் அவன் அறிந்திருக்கவில்லை, இவன் கொல்ல நினைக்கும் அந்த போலீஸ்காரன் இவனை கண்டுபிடித்ததை.

யார் இவன்? அப்படி என்ன இவனுக்கு வர்ஷாவின் மேல் பகை? ஏன் அவளைக் கொல்ல நினைக்கிறான்? அவளைக் கொள்வதை தடுக்கும் ராஜையும் அல்லவா சேர்த்துக் கொல்ல நினைக்கிறான்?

***

ராஜ் ஒசூர் சென்று வந்த மறுநாள் லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் ஷ்யாமின் வீட்டில் கூடினார்கள்.

ஒசூரில் நடந்த அனைத்து விஷயங்கள் பற்றியும் ராஜ் அவர்களிடம் கூறினான்.

அருண் தான் “ஏன் அந்த சங்கரை விட்டு விட்டு வந்தான்”, என்று கோபித்துக் கொண்டான்.

“அவர் கரெக்டா தான் பண்ணி இருக்காரு ண்ணா”, என ராஜிற்க்கு வக்காலத்து வாங்கினாள் வர்ஷா.

அருண் மித்துக்கு இது புதிய செய்தி. அதாவது ‘நம் வர்ஷா ராஜிற்க்கு ஆதரவாய் பேசுவது’.

“ஏன்டா பிசினஸ் ஆரம்பிச்சு பிசினு கொஞ்ச நாள் இந்த பக்கம் வராம விட்டா என்னடா நடந்து இருக்கு இங்க.”

“என்னோடதெல்லாம் ஓல்டு நியூஸ் ஆயிடுச்சு மச்சி. அதுக்கு அப்புறம் எவ்வளவோ வந்துடுச்சு”, என ஷ்யாமை பார்த்துக் கொண்டே கூறினான்.

“ஷாயம் நீயுமா?! யாருடா அது” என அருண் வினவ,

“அப்படிலாம் ஒன்னும் இல்லடா”, என்று கூறி மழுப்பினாலும் கண்கள் என்னவோ தியாவை வட்டமிட்டது.

அதை அங்கிருந்து அனைவருமே கவனித்தனர். அருண் என்ற ஒரே ஒரு அறிவாளி மட்டும் அதை கவனிக்கவில்லை.

தியாக்கு அவனின் பார்வை கூச்சத்தை உண்டாக்க, அதன்பின் அவன் புறம் கண்களை திருப்பவே இல்லை.

ராஜ் இப்படி கூறியதும் அவன் அவ்வாறு பார்த்ததும், தன் அண்ணனுக்கும் விஷயங்கள் அனைத்தும் தெரியுமோ என்ற தோன்றியது அவளுக்கு.

இப்படியாக சிறிது நேரம் நண்பர்களுக்குள் கலகலத்து, பின் ராஜ் விஷயத்துக்கு வந்தான்.

இத பண்ணது என அவனை பற்றி கூறினான்.

“என்ன அவனா?”, ஷ்யாம் தான் வினவினான்.

“ஆமாடா.”

ஷ்யாம்கு ஏகத்திற்கும் கோபம் வந்தது, ஆனால் இப்பொழுதுதான் அவன், அவனின் முன்கோபத்தை கட்டுப்படுத்த கற்றிருந்தான்.

“அவன் ஏன்டா?”, என செயலுக்கான காரணத்தை அருண் கேட்க,

“அது தான்டா தெரியல அப்படி என்ன அவனுக்கு வர்ஷு மேல கோவம் என்று எனக்குமே புரியல.”

வர்ஷாக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

அவள் அமைதியாக இருப்பதை பார்த்து ராஜும் ‘ஏதோ நடந்திருக்குமோ’ என சிந்திக்களானன். அவளாக இப்பொழுது வாயை திறந்து, எதுவும் கூறாத நிலையில் தனிமையில் விசாரித்துக் கொள்ளலாம் என அமைதியானான்.

“சரி ஆள் யாருன்னு தெரிஞ்சிருச்சு இல்ல, முதல்ல அவனை என்ன பண்ணலாம்னு யோசிப்போம்”, என்றான் ஷ்யாம்.

“அதான் ஆதாரங்கள் இருக்கே அவனை ஏதும் பண்ண முடியாதா”, மித்து கேட்டாள்.

“சிம் கார்ட் அவன் பெயரில் இல்ல அந்த ரெக்கார்டிங்ல இருக்கிறது இவன் வாய்ஸ்னு நிரூபிக்கிறதுக்கு முடியாது ஏன்னா அது வீடியோ இல்ல வெறும் ஆடியோ நான் பேசலனு சொன்னா என்ன பண்ண முடியும் இப்படி எதுவுமே ஸ்ட்ராங்கா இல்லையே” அருண், அவனுக்கு பட்டதை கூறினான்

“அந்த சங்கர் இருக்காங்கனே அவன நேரிலேயே பார்த்த ஆளு” என்றாள் தியா.

ராஜூம் அதே தான் யோசித்துக் கொண்டிருந்தான். சங்கரை இதில் இழுக்க வேண்டாம் என்று தான் அவன் நினைத்திருந்தது அது அவன் குடும்பத்தினருக்காக. ஆனால் இப்பொழுது வேறு வழி இல்லை அவனை அங்கிருந்து காலி செய்து, தன் பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

“என்ன ண்ணா நான் சொன்னது சரிதானே?”

“கரெக்டாமா சில பல விஷயங்களுக்காக அவனை இதுல இழுக்க வேணாம் முதல்ல யோசிச்சேன். சரி அவனை இங்க தான் கூப்பிடனும். நம்ப பக்கத்துல நம்ம பார்வையில வச்சுக்கிட்டா அவனுக்கும் எந்த பிரச்சினையும் வராம பாத்துக்கலாம்.

இவ்வாறு முடிவு எடுத்துப்பின் சங்கர் எப்படி அங்கிருந்து இங்கே வரவைப்பது, அவனை எங்கே தங்க வைப்பது, என்பது குறித்து எல்லாம் பேசினர்.

அருண் தான் “தன் குடோனில், ஏதேனும் ஒன்றில் அவன் குடும்பத்தோடு இருந்து விட்டுப் போகட்டும்” என்று கூறினான்.

அனைவருக்கும் அது சரியான பட, ‘அங்கேயே வைத்துக் கொள்ளலாம்’ என்று முடிவெடுத்தனர்.

அருண் மித்து வீட்டிற்கு கிளம்பினர்.

“தியாமா ஒரு டென் மினிட்ஸ் இரு, நான் கொஞ்சம் வர்ஷுமா கிட்ட பேசணும் பேசிட்டு வந்துடறேன்.”

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லண்ணா டேக் யுவர் ஒன் டைம்” என கேலியாக கூறினாள்.

பின் வர்ஷுவின் அறைக்கு இருவரும் சென்றனர்.

ஹாலில் ஷ்யாமும் தியாவும் மட்டும் இருந்தார்கள்.

“பாத்திய தியாமா, அண்ணா நான் ஒருத்தன் இங்க உக்காந்துட்டு இருக்கேன் கொஞ்சம் கூட அவன் பயமே இல்லாம என் தங்கச்சி கூட்டிட்டு போறான்.”

“அதை நீங்க சொல்றீங்களா! அண்ணா ஒன்னு உங்கள மாதிரி கிடையாது.”

“அப்படியா அப்ப நான் எந்த மாதிரி?”, அழகாய் புருவம் உயர்த்தினான் அவன்.

அதில் மயங்கியவள், “அவனாச்சி பேச தான் கூட்டிட்டு போறான்.”

“நான் தான் செயல் இறங்கிடுறேன்றியா”, என்றான் கேலியாய்.

“ஐயோ! அப்படி சொல்லல திட்ட கூட்டி போவீங்கன்னு சொல்ல வந்தேன்.”

“நான் சொன்னது கூட உண்மை தானே.”

“நீங்க சரியில்லப்பா நான் கீழே போய், அத்தை என்ன பண்றாங்கன்னு பாக்க போறேன்” என அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவள் செல்வதையே சிரிப்புடன் பார்த்திருந்தான் ஷ்யாம்.

***

அறையினுள் சென்றவர்கள் என்ன ஆனார்கள்? பார்ப்போம் வாருங்கள்.

ராஜை கேள்வி கேட்கும் அளவு வர்ஷா வைத்துக் கொள்ளவில்லை, அவளே நடந்தது அனைத்தையும் கூறினாள்.

இவை அனைத்தையும் கேட்டு ராஜ் சிரித்துக் கொண்டிருந்தான்.

“நான் இப்ப என்ன ஜோக்கா சொன்னேன் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?”

“அதுக்கு இல்ல, யாரு ட்ரை பண்ணாலும் கடைசில நான் தான கோல் போட்டேன். அத நெனச்சு சிரிக்கிறேன்.”

“உங்களுக்கு விளையாட்டா போச்சு.”

“இன்னு நா விளையாடுவே ஆரம்பிக்கலையே”, என்று அவளை நெருங்கி வந்தான்.

அவள் பயத்தில் கண்கள் மூட, சிறிது நேரம் அங்கே அமைதியே நிலவியது.

‘என்ன ஆச்சு’, என்று கண்கள் திறக்க, அவளையே பார்த்தபடி இதழில் குறுநகைத் தவழ, நின்றிருந்தான் அவன்.

அதை கண்ட பெண்ணவளுக்கு வெட்கம் தாளவில்லை…

அவள் எதிர்பாரா சமயத்தில் டக்கென்று அவளின் இதழில் கவியெழுத, தன்னவனின் இந்த புதிய பரிமானத்தில் தடுமாறினாள் பெண்.

அவளை தாங்கி அருகே இருக்கும் இருக்கையில் அமர்த்தி சென்றான் அவன், கதவு வரை சென்றவன் திரும்பி இவளை பார்க்க, அவள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை, அதைக் கண்டு அவன் இதழ்கள் மேலும் சிரிப்பை உதித்தன.

அனைவரும் எந்த நபரை பற்றி பேசினார்கள்? வர்ஷுடன் அவனுக்கு என்ன பிரச்சனை? அந்த அவன் எவன்?

(நோ டென்ஷன் அடுத்த எபில கண்டிப்பா சொல்லிடுவேன்)

(போன் எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 அடுத்த எபில சந்திக்கலாம்….பை….பை…)

 

 

 

error: Content is protected !!