MIRUTHNAIN KAVITHAI IVAL 18.2
MIRUTHNAIN KAVITHAI IVAL 18.2
மிருதனின் கவிதை இவள் 18.2
” காலையிலே எங்க போயிருந்தீங்க? ” என்ற மனைவியிடம் ,
” முக்கியமான வேலை டி ஃபரண்டை பார்த்துட்டு வரேன் ” என்றவர் ,
” எல்லாரும் ரெடி தானே கேபுக்கு சொல்லிட்டேன் ” என்றார் . அப்பொழுது தன் காரில் ஏறவிருந்த தீரன் சிறு யோசனையுடன் கோபால கிருஷ்ணனின் அருகில் வந்து ,
” ஹலோ அங்கிள் எல்லாரும் வெளியில கிளம்புறீங்க போல ” கண்களில் இருந்த சன் கிளாஸை கழற்றியபடி வினவினான் தீரன் .
” ஆமா பா கல்யாண ஷாப்பிங் போறோம் , கேப் சொல்லிருக்கேன் இன்னும் வரல ” என்றார் கோபால கிருஷ்ணன் மென்னகையுடன் .
” உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா நான் வேணும்ன்னா உங்களை ட்ராப் பண்ணவா “
” இல்லை பா உங்களுக்கு எதுக்கு சிரமம் , நீங்களும் வெளிய கிளம்புறீங்க , உங்க வேலை டிஸ்டர்ப் ஆகிட போகுது “
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள் சும்ம சென்னை சிட்டியை சுத்தி பார்க்கலாம்ன்னு தான் ரெண்டு பேரும் கிளம்பினோம் , தனியா போறதுக்கு உங்க கூட வரப்போறோம் அவ்வளவு தான் . எங்களுக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஸோ எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லை ,வாங்க நாங்களும் இன்னைக்கு உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றோம் , புக்கிங் கான்செல் பண்ணிருங்க ” என்று அக்னி கூற முதலில் தயங்கியவர் , பின்பு அக்னியின் முகத்தை பார்த்து சரி என சம்மதம் தெரிவிக்க , இதை கேட்ட மேகா மற்றும் இஷிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .
ஆனால் விக்ரமோ துள்ளி குதிக்காத குறையாக ,
” செம பா ” என்றவன் ,” ப்ரோ உங்க கார் செமையா இருக்கு ” கண்களில் ஆர்வம் மின்ன கூறினான் .
“விக்ரம் பேசினது போதும் வண்டில ஏறு ” கோபால கிருஷ்ணனின் குரல் மகனை அதட்டியது .
” இட்ஸ் ஓகே அங்கிள் சின்ன பையன் தானே ” என்ற அக்னி விக்ரமின் ஆர்வத்தை பார்த்து விக்ரமிடம் ,
“நீ ட்ரைவ் பண்றியா ” என சாவியை நீட்ட , அதை அவன் வாங்க முனைந்த நேரம் ,
” அவனுக்கு டிரைவிங் தெரியாது அக்னி ” என்றார் கோபால கிருஷ்ணன் .
” அதெல்லாம் தெரியும் , அப்பா ஓட்ட விட மாட்டாரு ” அவன் முனங்களாக கூற ,
” அதெல்லாம் நம்ம சாம்பியன் ஓட்டுவான் அங்கிள் , நான் பக்கத்தில தானே இருப்பேன் பார்த்துகிறேன் ” தீரன் சாவியை நீட்டியது தான் தாமதம் விக்ரமின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி .
ஏற்கனவே தந்தை சொல்லுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாமல் , அவனுடன் செல்ல விருப்பமும் இல்லாமல் ,இஷிதாவுடன் எதையோ முணுமுணுத்தபடி நின்ற மேகாவுக்கு இந்த காட்சி கோபத்தை கொடுக்க ,
‘டேய் விக்கி … நோ சாவிய திருப்பி குடு ‘ சந்தோஷமாக சாவியை வாங்கி காரின் கதவை திறந்து கொண்டிருந்த தமையனிடம் ரகசிய குரலில் செய்கை செய்தாள் .
‘ என்ன அக்கா? ‘ அவனும் அதே குரலில் வினவினான் .
‘ என் கூட வந்து உக்காரு ‘ பற்களை கடித்தபடி செய்கை செய்தாள் .
‘ மாட்டேன் போ ‘ காருக்குள் எற போனவனின் பின் சட்டையை பிடித்து இழுத்தவள் .
‘ சாவிய குடுத்துட்டு , என் பக்கத்துல வந்து உக்காரு ‘ மெதுவாக அதட்டினாள் . மேகாவை மேலும் கீழும் பார்த்த விக்ரம்,
” முடியாது போ ” என கத்திவிட ,காரை விட்டு வெளியே இறங்கி வந்து எட்டிப்பார்த்த தீரன் ,
” வண்டிய எடு விக்கி ” என்று கூறி மேகாவை முறைத்து பார்த்து ‘ என்ன ‘ என தன் புருவம் உயர்த்த , அவன் பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சில்லிட்டு போக திணறியவள் ,
“ஒன்னும் , இல்லை” என தன் தலையை வேகமாக ஆட்டி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என கதவை திறந்து காருக்குள் ஏறி அமர்ந்துகொள்ள , அதன் பிறகு காருக்குள் ஏறிய தீரன் கண்ணாடியுடு மேகாவை ஒரு கணம் உறுத்து விழித்து விட்டு இறுக்கமாக அமர்ந்திருந்தான் .
” ப்ரோ இது தான் சென்னையிலே ..” என ஆரம்பித்து விக்ரம் உற்சாகமாக , காணும் இடங்களையெல்லாம் விவரித்து பேசிய எதுவுமே அக்னியின் செவியில் சென்றடையவே இல்லை .விழிகள் சாலையை வெறித்தபடி இருக்க, எண்ணம் முழுவதும் கண்களை உருட்டி ‘ ஒன்னும் இல்லை ‘ என தலையை அசைத்த தன்னவளையே சுத்தி சுத்தி வட்டமிட்டது .
” உங்க அக்கா என்னடா சொன்னா?” விக்ரமின் பேச்சில் குறுக்கிட்டபடி வினவினான் அக்னி . சாலையை ஒருகணம் பார்த்து விட்டு அக்னியை ஏறிட்டவன்,
” அக்காவா ?” சாலையில் தன் கவனம் பதித்தபடி கேட்டான் .
“ம்ம் ” முகம் கடுகடுவென இருந்தது .
” அது உங்க கிட்ட உக்கார கூடாது, சாவிய குடுன்னு சொன்னா ” என தயங்கியபடி கூறினான் , ஏனோ அக்னியிடம் அவனால் மறைத்து பேச முடியவில்லை .
” அப்படியா சொன்னா ” தீரனின் முகம் இன்னும் இறுகியது .
” ம்ம்ம் அவளுக்கு உங்களை புடிக்கலைன்னு நினைக்கிறன் ” என மெதுவாக தீரனின் காதில் கூறியவன் ,” ஆனா எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் ,யு ஆர் மை ரோல் மாடல் ” குதூகலத்துடன் கூறி மகிழ்ச்சியாக புன்னகைத்தான் , விக்ரமின் புன்னகை முன்பு அக்னியின் கோபம் தோற்றுவிட ,தன் இறுக்கம் தளர்ந்து மெலிதாய் புன்னகைத்த தீரன்,
” அவ்வளவு புடிக்குமா டா ” என கூறி அவன் சிகையை வாஞ்சையுடன் கலைத்து விட , ” ஆமா ப்ரோ ” கண்சிமிட்டி சிரித்தான் .
” ரோட்டை பார்த்து ஓட்டுடா ” என்ற அக்னி , விக்ரம் நன்றாக ஓட்டும் பொழுது பாராட்டி , ஆங்காங்கே தவறு செய்யும் பொழுது சுட்டி காட்டி ,தட்டி கொடுத்து கொண்டே வந்தான் .
சிலமணிநேர பயணத்திற்கு பிறகு வேளச்சேரியில் உள்ள ப்ரபலமான கடைக்கு அவர்கள் வந்தடைய , அனைவரையும் கடையின் வாசல் முன்பு இறக்கிவிட்டுட்டு , கார் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு தங்க நகைகள் இருக்கும் ப்ளோருக்குள் அஷோக் மற்றும் விக்ரமுடன் தீரன் நுழைய ,
அங்கே கோபால கிருஷ்ணன் கடுங் கோபத்தில் நின்றிருக்க , மேகா தன் கரங்களை பிசைந்து கொண்டு நிற்க , ராதிகா தன் கணவரை சமாதானம் செய்து கொண்டிருந்தார் .
~~~~~~~~~~~~~~
” யாரை கேட்டு டெல்லிக்கு போன ” இஷிதா தமையனிடம் அலைபேசியில் தாறுமாறாய் கத்தினாள்.
” அப்பா சொன்னாரு டி “
” ஷட் அப் அப்பா அப்பா , அவரு சொன்னா நீ கிளம்பி வருவியா , நான் உன்கிட்ட என்ன சொன்னேன் , இனிமே அப்பா எல்லாம் ரெண்டாவது தான், மேகா தான் உனக்கெல்லாம் சொன்னேன் தானே . இன்னைக்கு தாலி, புடவை எல்லாம் வாங்குறோம் டா , நீ இருக்கணுமா வேண்டாமா , மேகாக்கும் ஆசை இருக்கும்ல . அந்த ஆளும் வரல, அவங்களும் வரல. என்னடா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க , இங்க மேகா அப்பா செம டென்க்ஷன்ல இருக்காங்க “
” ஸாரி டி “
” மரியாதையா அடுத்த பிளைட் புடிச்சு சென்னைக்கு வர , நீ வந்ததுக்கு அப்புறம் தான் தாலியும் , முகூர்த்த புடவையும் எடுப்போம் , மவனே நீ மட்டும் வரல உன் கல்யாணத்தை பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும் ” அலைபேசியில் ரிதுராஜை ஒருவழி படுத்தி கொண்டிருந்தாள் இஷிதா .
!!!!!!!
” தாலியும் , முகூர்த்த புடவையும் வாங்க பெரியவர்களும் வரல , மாப்பிள்ளையும் இல்லைன்னா எப்படி ?கல்யாணத்துக்கு இன்னும் ஒருவாரம் கூட இல்லை சொல்லாம அவர் இஷ்டத்துக்கு டெல்லிக்கு போய்ட்டாரு , இது சரியா படல ராதிகா “
“அவங்க தான் சம்பந்திமாக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றாங்களே , அதான் மாப்பிள்ளை வீட்டு சார்பா இஷிதா இருக்காள்ல , முறைக்கு அவ தானே நாத்தனார் ” சீறும் கணவனை ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டிருந்தார் ராதிகா .
“மாப்பிள்ளை ஊருக்கு போறதை பத்தி உன்கிட்ட சொன்னாரா இல்லையா ” மனைவியை விடுத்தது மகளிடம் சாடினார் .
” மார்னிங் தான் சொன்னாரு பா , முக்கியமான வேலை இருக்கு சீக்கிரமே வந்திருவேன்னு சொன்னாரு “என்றாள் மேகா .
” ஓ அதை நான் கேட்டா தான் சொல்லுவியோ ” சட்டென்று கோபால கிருஷ்ணன் கத்திவிட ,மேகாவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது . அதை ஏனோ அக்னியால் சகித்து கொள்ள முடியவில்லை , கோபால கிருஷ்ணன் மீது அவ்வளவு கோபம் வந்தது .
கோபால கிருஷ்ணன் மேகாவின் தந்தை , அவருக்கு மகளிடம் இல்லாத உரிமையா? இருந்தும் காதல் கொண்ட அவனது மனம் தன்னவளை யாரும் கடிந்து கொள்வதை சிறிதும் விரும்பவில்லை .
” ரிலாக்ஸ் அங்கிள் , இட் ஹபென்ஸ் , மாப்பிள்ளை வீட்டுகாரங்களோட நிலைமையையும் நாம புரிஞ்சிக்கணும்ல , நான் மிஸ்டர் கனகராஜ் கிட்ட பேசுறேன், ஷாப்பிங் கண்டின்யு பண்ணுங்க ” இடைபுகுந்து அவரது கோபத்திற்கு மடையிட்டான் .
” ஓகே பா ” மாயாஜாலம் அக்னியின் குரலிலா இல்லை அவன் விழிகளிலா என தெரியவில்லை , ஆனால் கோபால கிருஷ்ணனின் குரலில் திடீர் மாற்றம் , கடுமை எங்கோ சென்றிருக்க , எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் அவன் சொன்னதிற்கு தலையசைத்தவர் ,
” போ ராதிகா போய் தாலி பாரு ” என அவர் மனைவியிடம் சொல்லிய மறுநிமிடம் ,
” வெய்ட் பண்ணுங்க அங்கிள் , அண்ணன் பேசினான், வேலைய முடிச்சிட்டானாம் , நெக்ஸ்ட் பிளைட்ல வருவானாம் . ஸோ தாலியும், முகூர்த்த புடவையும் மட்டும் அண்ணன் வந்ததுக்கு அப்புறம் பார்க்கணுமாம் , இப்போ மத்ததை வாங்கிக்க சொன்னான் ” அனைவரின் முன்பு தமையனை விட்டுக்கொடுக்காமல் அவனே பேசியது போல அவனது வருகையை உறுதி படுத்த , யாரிடமோ அலைபேசியில் பேசிவிட்டு அங்கே வந்த அஷோக் ‘ என்னடா ‘ என்பதை போல அக்னியை பார்க்க, அவனோ கண்களால் அமைதியாக இருக்கும் படி கண்ணசைக்க , எரிச்சலுடன் நின்றான் அஷோக் .
!!!!!!!!!!!!!!!!!!
“அந்த ஆரத்தை எடுங்க , இந்த நெக்லஸை எடுங்க ” என பெண்கள் மூவரும் ஆர்வமாக நகைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்க , மேகவோ தந்தை கடிந்து கொண்டதை எண்ணி கண்களை துடைத்தபடி நின்றிருக்க ,
” என்னடா அப்பா மேல கோபமா ” மனம் கேளாமல் மகளை ஓரமாக அழைத்து வினவினார் .
” இல்ல பா ” அவள் மறுக்கும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வழிய ,
“ஸாரி செல்லம் , இதை முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கணும்ல, நீ ஏன் சொல்லலை ? அதான் அப்பாக்கு கோபம் வந்திருச்சு ” மகளின் கண்ணீரை துடைத்துவிட்டு , மகளை அணைத்து கொண்டார் .
” சொல்ல கூடாதுன்னு இல்லை , நான் இதை பெருசா எடுத்துக்கல, சாரி பா ” கேவலுடன் அவரது அணைப்புக்குள் ஒடுங்கிக்கொண்டாள் மேகா .
இப்பொழுது அக்னியின் கண்களில் கோபம் மறைந்து ஒருவித பொறாமை எட்டி பார்த்தது .
தன்னவளை அணைக்கும் கரங்களாய் என் கரம் இருந்தால் எப்படி இருக்கும் ? அணைத்துக்கொள்ள கரங்கள் பரபரத்தது .
அவள் தலை சாய்க்கும் தோளாய் என் தோள் இருந்திருக்க கூடாதா ? தவிப்புடன் பார்த்தான் .
என்னவள் என் நெஞ்சோடு ஒட்டி உறவாடினால் , ஆஹா என்ன சுகம் ? ஆசை கொண்ட அவன் உள்ளம் தவிக்க ,ஏக்கத்துடன் அவர்களை பார்த்திருந்தான் தீரன் .
அனைவரும் நகைகளை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க ,கிட்ட தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தும் எதையும் தேர்வு செய்யாமல் இருக்க , அஷோக்குடன் கடையை சுற்றி வந்த தீரனின் பார்வை போகும் திசையை கண்ட அஷோக் மெல்லிய புன்னகையுடன் நண்பனின் தோளை தட்டிவிட்டு ஒதுங்கிவிட , யாரோ இருவர் தங்களின் நகைகளை பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல , அந்த காலியான இடத்தில் சென்று அமர்ந்தான் தீரன் .
“என்ன சார் பார்க்கிறீங்க? ” என கேட்ட கடை சிப்பந்தியின் முகத்தை ஒருகணம் பார்த்தவன் , தன் சட்டை பைக்குள் இருந்து சிறு பெட்டியை எடுக்க அவனுக்கு திடிரென்று ஒருவித நடுக்கம் , எட்டி மேகா இருக்கும் திசையை பார்த்தான் அவள் தாய் எதோ கூற தலையசைத்து கொண்டிருந்தாள் .
கண்களை இறுக்கமாக முடிகொண்டவனின் செவியில் , ஒரு குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது , கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டான், தீரனின் கண்கள் கலங்கியது .
” எந்த பொண்ணை பார்த்தா உன் மனசு துடிக்குதோ, எந்த பொண்ணு உன்னை விட, உன் பணத்தை விட , உன் மனசை நேசிக்கிறாளோ , எந்த பொண்ணு நீ எந்த நிலையில இருந்தாலும் உன்னை அப்படியே ஏத்துகிறாளோ , எந்த பொண்ணை பார்த்தா அவ இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு தோணுதோ , அவ தான் உனக்கானவ , அப்படி ஒருத்திய பார்க்கும் பொழுது அவ கிட்ட உன் மனசோட சேர்த்து இதையும் குடு, அவ இன்பத்திலையும் துன்பத்திலையும் உன் கூடவே இருப்பா, உன்னை விட்டு என்னைக்கும் போக மாட்டா “தீரனின் தந்தையின் இறுதி வார்த்தைகள் ! அவனுக்காக அவர் விட்டு சென்ற பொன் மொழிகள் ! ஒவ்வொரு வரிகளும் அவன் மனதில் ஆழப்பதிந்திருக்க , கண்மூடி அதன் அர்த்தத்தை உணர்ந்தவனுக்கு ஒருவித உணர்வு , அது சலனமா ! பயமா !சந்தேகமா !என தெரியவில்லை, ஆனால் அவன் மனதிற்குள் இவ்வாறு தோன்றியது.
‘ தான் செய்ய போகும் செயல் சரியா ! தவறா! ‘ என எண்ணின தீரனின் கரங்கள் நடுங்கியது , இதயம் வேகமாக துடிக்க மீண்டும் மேகாவை தேடினான் . தேர்ந்தெடுக்க பட்ட தங்க நகைளில் தேவதையாக காட்சி அளித்தாள் . அப்படியே அள்ளிக்கொள்ள அவன் கைகள் துடித்தது . கம்பீரமான என் அருகில் என்னவள் இருந்தால் எப்படி இருக்கும்? எண்ணும் பொழுதே ஒருவித பரவசம், கர்வத்துடன் தன் எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து தன் மீசையின் நுனியை முறுக்கி கொண்டவன் ,
வெகு நேரமாக தன்னையே பார்த்து கொண்டிருந்த சிப்பந்தியிடம் டப்பாவை நீட்டினான் .
” இதோட வேலைப்பாடு ரொம்பவே அழகா இருக்கு சார் , இதெல்லாமே பியூரான நவரத்தினங்களா? ரொம்பவே யுனிக்கா இருக்கு ” சிப்பந்தி ஆச்சரியத்துடன் விழிவிரித்து கூறினான் .
“ம்ம்ம் ” தீரனால் எதுவும் பேச முடியவில்லை . அவன் மனம் பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தது .
” இதை என்ன சார் பண்ணனும்? “
” இதுல … ” தயங்கியவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி சொல்லி முடிக்க , தன் கைகளை அசைத்தபடி அங்கே ரிதுராஜ் வந்திருந்தான் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மேகாவை பார்த்தான் தீரன் , மெல்லிய கீற்று போல புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது , மனதில் மீண்டும் ஒருவித தடுமாற்றம் ,
‘ தான் செய்வது பிழையாகி விட்டால் ?’ எண்ணும் பொழுதே அவனது இதயம் வேகமாக துடித்தது தன் கரம் வைத்து நெஞ்சை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான் . கண்களை மூடி திறந்த அக்னிக்கு
‘எது எப்படி இருந்தாலும் இனி இவள் இன்றி இந்த தீரன் இல்லை ‘ என்பது மட்டும் தெளிவாய் புரிய , சிப்பந்தியிடம் தன் தேவையை ஒருமுறைக்கு இரெண்டு முறை தெளிவு படுத்தினான் .
அப்பொழுது தீரனின் தோள் மீது கை வைத்த அஷோக் ,
” இதுக்கு தான் இதெல்லாம், வேண்டாம்ன்னு சொன்னேன் பாரு வந்து நிக்கிறான் , அந்த கனகராஜை ” என சீரிய அஷோக்கின் தோள் மீது கை போட்டு ,
” விளையாட்ட தனியா ஆடுனா சுவரசியமாவே இல்லை அஷோக் ” என்ற தீரனை கடுமையாக பார்த்த அஷோக் “இது விளையாட்டு இல்லை அக்னி எதிரியை எப்பவுமே வீக்கா நினைக்க கூடாது , ரிதுராஜை வீக்கா நினைக்காத “
” ஆஹாங் , அதுக்கு அவன் முதல்ல என் எதிரியா இருக்கணுமே ” என விஷமமாய் புன்னகைத்த அக்னியின் சிரிப்பில் ஒளித்திருந்த அர்த்தத்தை உணர்ந்த அஷோக் தீரனை அழுத்தமாக பார்க்க , தீரனின் பார்வையோ மேகா மற்றும் ரிதுராஜிடமே தேங்கி இருந்தது .
!!!!!!!!!!!
கடையை வட்டமிட்டபடியே வந்த அஷோக்கின் கண்ணில் பட்ட ஒரு நகை மட்டும் சுவாரசியத்தை கூட்ட, கடை சிப்பந்தியிடம் அதை பற்றி வினவியவனின் விழிகள் பொங்கி வழியும் தாபத்துடன் தன்னவளை கண்டதும் , சிப்பந்தியிடம் ,
” இதை பேக் பண்ணி அதோ நிக்கிறாங்களே ” என ஏதோ கூறியவனின் இதழ்கள் குறும்பாய் வளைந்தது.
” யார் குடுத்தாங்க? ” பேக்கிங் செய்யப்பட்ட பார்செலை நீட்டிய கடை ஊழியரிடம் வினவினாள் இஷிதா ,
” அதோ அந்த சார் ” என்ற அந்த பெண் அதை இஷிதாவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட , அஷோக்கை முறைத்தபடி பகிங்கை பிரித்தவள் , அதில் இருந்த பொருளை கண்டதும் அவளது முகம் குப்பென்று சிவந்துவிட கஷ்டப்பட்டு முறைத்தவள் ,
” பொறுக்கி புத்தி எங்க போகுது பாரு ? எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிருவான் போல , நல்ல வேலை யாரும் பார்க்கல ” என அவனை திட்டிவிட்டு சென்றவிட , அஷோக்கோ அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான் .
எல்லாருக்கும் பிடித்த வகையில் நகைகளை வாங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறிய போது கண்ணாடி பெட்டிக்குள், பொம்மைக்கு போடப்பட்டிருந்த ஒரே ஒரு வெள்ளை கற்கள் பதித்த நூல் போன்ற கழுத்து சங்கிலி ஒன்று , மேகாவின் கவனத்தை வெகுவாய் கவர்ந்தது .
பொதுவாக நகைகளில் அவளுக்கு பெரிய ஆர்வம் கிடையாது, உடுத்த உடைக்கு ஏற்றது போல இமிடேஷன் நகைகள் அணிவதிலே ஆர்வம் கொண்டவளுக்கு, ஏனோ இன்று இந்த நகை ஆசையை உண்டாக்க , சிறு புன்னகையுடன் அதன் அருகே சென்றவள் , அதன் அருகே இருந்த ஊழியரிடம் அதை பற்றி கேட்க , ‘ சாலிட்டர் டைமண்ட் மேம் ஜஸ்ட் ட்வெல்வ் லக்ஸ் ‘ அவர் புன்னகையுடன் கூற , மேகாவின் முகம் விழுந்துவிட்டது .
” புடிச்சிருக்கா ” ரித்துராஜின் கேள்வியில் விழித்துக்கொண்டவள் ,
“நோ ஜஸ்ட் பார்த்தேன் “
“புடிச்சிருந்தா வாங்கிக்கோ, விலையை பத்தி யோசிக்காத , உன்னை விட இது ஒன்னும் முக்கியம் இல்லை ” புன்னகையுடன் அவளது விழிகளை நோக்கி கூறினான் ரிதுராஜ் .
” இல்லை வேண்டாம் போகலாம் ” என்றாள் மேகா .
” தென் ஓகே ” என் தன் தோளை குலுக்கியவன் முன்னேறி செல்ல , மேகா இஷிதாவுடன் இணைந்து கொண்டாள். ஆனால் அந்த நகையை, அவள் ஆசை ததும்ப பார்த்ததையும் , அந்த ஊழியர் சொன்னதும் அதை வேண்டாம் என்று கூறியதையும் ,அவளை விடாமல் துரத்தும் தீரனின் இரு விழிகள் கண்டுகொண்டதை மேகா அறியவில்லை .
!!!!!!!!!!!!!!
நகை வாங்கி முடிக்கவே மணி ரெண்டை தாண்டியிருக்க , அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள ரெஸ்டாரன்டிலே மத்திய உணவை முடித்து கொண்டவர்கள் ,அடுத்து முற்றுகையிட்டது என்னவோ புடவைகள் இருக்கும் தளத்தில் தான் .
தன் தந்தை , ரிதுராஜ், என தன் மொத்த குடும்பமும் , தன்னுடன் இருந்தாலும் தீரனின் விடாமல் துரத்தும் பார்வையால் ஒருவித நடுக்கத்துடனே இருந்த மேகாவுக்கு பயத்தின் பாதியால் , எதிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள முடியவில்லை . நகை போல புடவையிலும் மற்றவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டாள். அப்பொழுது ரிதுராஜ் ,
” உன் விருப்பப்படி எதுவுமே வேண்டாமா ம்ம்ம், நாங்க என்ன சொன்னாலும் ஓகே சொல்ற , வா உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு பாரு ” சட்டென்று ரிதுராஜ் மேகாவின் கரத்தை பிடிக்க வர , அன்று பூட்டிய அறையில் தீரன் விடுத்த எச்சரிக்கை , மேகாவின் நினைவிற்கு வர சுற்றும் முற்றும் தீரனின் விழிகளை தேடியவள் , அவனை காணாது ஆசுவாசம் அடைந்து தன் கைகளை விலகிக்கொள்ள ,
” ரொம்ப தான் வெட்க படுற , பாப்போம் எத்தனை நாளைக்குன்னு ?” என ரிதுராஜ் மென்னகையுடன் கூற , தலை குனிந்து கொண்டவளுக்கு அதற்கு எந்த பதில் கூறவேண்டும் என்று சுத்தமாக தெரியவில்லை .
மேகவோ பட்டுப்புடவை விடுத்து ரிதுராஜுடன் பார்ட்டி வியர் புடவை செக்ஷனுக்கு சென்று , அங்குள்ள புடவைகளை பார்த்து கொண்டு இருக்க , ரிதுராஜும் நடந்துகொண்டே அவளை விட்டு தள்ளி சென்றபடி பார்வையிட்டு கொண்டிருக்க, அந்நேரம் அங்கு வந்த சேல்ஸ் மென் தனியாக நின்ற மேகவிடம் எப்படியான புடவை வேண்டும் என கதையளந்து கொண்டிருந்தான் .
மேகா தன் தேவையை கூற ,
” அங்க வாங்க மேடம், நீங்க கேட்டது , அந்த செக்ஷன்ல தான் இருக்கு ? “அவனும் அவள் கேட்டது போல ஆடைகளை எடுத்து காட்டியவன்,
” மேல வச்சி பாருங்க மேடம் அப்போ தான் நல்லா இருக்கும் ” என்றவன் மேகா சுதாரிப்பதற்குள் ஒவ்வொன்றாய் தூக்கி அவள் மேல வைத்து காட்ட , அவனது கரங்கள் தாராளமாக மேகா மேல உரச , முதலில் தவறுதலாய் கை பட்டிருக்கும் என்று எண்ணியவளுக்கு , அவனது பார்வையின் அர்த்தம் கிலியை உண்டாக்க , பதறி விலகியவளின் விழிகள் தன்னை மறந்து , சுற்றி சுற்றி உதவியை நாடியது என்னவோ , இனி பார்க்கவே கூடாது என்று நித்தமும் வேண்டிக்கொள்ளும்! அவன் வேண்டவே வேண்டாம் என ஒவ்வொரு நொடியும் மேகா வெறுக்கும் , அனல் தெறிக்கும் தீரனின் விழிகளை தான் .
” எனக்கு வேண்டாம் ” என்றவள் சேல்ஸ் மேனை முறைத்து படி அங்கிருந்து நகர போக ,
” என்னாச்சு மேடம், இந்த கலர் இன்னும் நல்லா இருக்கும் ” புடவையுடன் அவனது கரங்கள் அவளை நோக்கி வர , அன்று கேஸ் ஏஜென்சி காரன் தன்னை தவறாக பார்த்தது நினைவிற்கு வர நடுக்கியவள் ,” தீரன் ” என வாய்விட்டு சொல்ல வரவும் , தீரனின் கரங்கள் சிப்பந்தியின் கரத்தை பிடித்திருந்தது .
ரிதுராஜ் மற்றும் மேகா இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த தீரன் .ரிதுராஜ் மேகாவை தனியே விடுத்து செல்லும் பொழுதே தன் பார்வையை கூர்மையாகியவன் , அந்த சேல்ஸ் மென் மேகாவிடம் ஏதோ சிரித்து பேசி , தனியே ஒரு ஓரமாய் அழைத்து போவதை கண்டு புருவம் சுருக்கிய தீரனுக்கு கோபம் வர , தன் இருக்கையில் இருந்து எழுந்து விறுவிறுவென அவ்விடத்திற்கு வர , சேல்ஸ் மென் புடவையை மேகா மீது வைக்கும் பொழுதே ஆத்திரம் கொண்டவன் , மேகா பதறி விலகியும் அவன் மீண்டும் அவளை நெருங்கவும் ,பொங்கி எழுந்த தீரன் ஆக்ரோஷமாக அவனது கரத்தை பிடித்திருந்தான் .
” என்னடா ” சிம்ம குரலில் அக்னி கர்ஜிக்க அவனோ நடுங்கியே விட்டான் .
” ஒன்னும் இல்லை சார் ” தீரனின் பிடியில் வலி எடுக்க ,குரல் நலிந்து ஒலித்தது . தீரனின் ருத்ர தாண்டவத்தை ஏற்கனவே ஒருமுறை கண்டிருந்த மேகாவுக்கு பயம் எடுக்க , ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே தடுத்துவிட எண்ணியவள் ,
” விடுங்க சார் , அவர் ஜஸ்ட் புடவை தான் காட்டிட்டு இருந்தார் ” தயங்கியபடி கூறினாள் .
” அப்படியா டா ” தீரனின் பார்வை அவனை எரித்தது .
” ஆமா சார் “
” விடுங்க சார் ப்ளீஸ் ” என்ற மேகாவை ஒருகணம் பார்த்தவன் , கண்களால் சேல்ஸ்மெனை எச்சரித்தபடி அவனது கரத்தை விடுவிக்க , அவளும் உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க ,
” நீ தீரன்னு என்னை கூப்பிட்டல ” என்றான் அவளது முகத்தை பார்த்தபடி , அவன் மனதிற்குள் தன்னவள் தன்னை அழைத்தது போல ஒருவித பிரம்மை .அதனால் கேட்டுவிட்டான்.
ஏற்கனவே அப்பாவையோ , ரிதுராஜையோ இல்லை விக்ரமையோ நினைக்காமல் , ஏன் இவனை நினைத்தோம் ?என உள்ளுக்குள் மருகி கொண்டிருந்த மேகாவுக்கு , தீரனின் கேள்வி தூக்கிவாரிப்போட முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டவள் ,
” நோ , நான் ரிதுராஜை தான் கூப்பிட்டேன் ” தீரனின் முகத்தை பார்த்து கூட பேசாது , கையில் புடவையுடன் தன்னை நோக்கி வரும் ரிதுராஜை கைகாட்டியவள் , ஏதோ தீரனிடம இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ரிதுராஜை நோக்கி ஓடாத குறையாக செல்ல ,’ என் முகத்தை பார்த்து கூட பேச மாட்டாளா ‘ தீரனுக்கோ காலை போல மீண்டும் அவமானப்பட்ட உணர்வு ! .
” இந்த புடவை நல்லா இருக்கா ?நான் உனக்காக செலெக்ட் பண்ணினேன் ” என்றான் ரிதுராஜ்
“தேங்க யு நல்லா இருக்கு ” என்றவள் பதற்றமாக இருப்பதை பார்த்து ,
” என்னாச்சு ” என கேட்க
” கொஞ்சம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு ” என்றாள் .
“சரி வா ரெஸ்டாரண்ட் போகலாம், ஏதாவது ஜூஸ் குடி உனக்கு பெட்டெரா இருக்கும் ” என்ற ரிதுராஜ் மேகாவை அழைத்து கொண்டு சென்றான் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலையில் மேகாவை பார்த்து முறைத்து விட்டு விறுவிறுவென தன் அறைக்குள் வந்த அக்னி ,
தன்னை மறந்து , தான் தன் அறையில் இருந்து, மேகாவை பார்க்க கீழே வந்தது மற்றுமின்றி, மேகாவின் அழகில் தன் சுயம் தொலைத்து, நேரம் போவதே தெரியாமல் ரசித்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவன் , தன் கேசத்தை அழுத்தமாக கோதி கொண்டான் .
ஆனாலும் தன்னை நிலைகொள்ள முடியாமல் தனக்குள்ளே தகித்தவன் , மீண்டும் வந்து பால்கனியில் நின்றபொழுது அவன் கண்ட காட்சி அவன் கோபத்திற்கு தீனி போட்டது.
பதற்றத்தில் கைகால் நடுங்க நின்றவள் முகத்தில் வர்ணஜாலம் போல வெவ்வேறு உணர்வுகள் மாறி மாறி வந்தது .
‘முதலில் பதறுகிறாள் !பின்பு மூச்சை நன்கு இழுத்து விடுகிறாள் ஏன்? ‘ ஓ ஹோ நான் சென்றதற்காக நிம்மதி பெரு மூச்சோ ! அப்படியென்றால் என் கூட இருக்கிறது அவளுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வருகிறதோ? ‘ பற்களை கடித்தான் தீரன் .
பிறகு அவள் முகத்தில் சிந்தனை ரேகை ஓடுகிறது , ‘ எதையோ சிந்திக்கிறாள் ! அப்படி என்ன சிந்திக்கிறாள் திடிரென்று ?’ தன் பார்வையை கூர்மையாக்கினான் . முகத்தில் ஒருவித அதிர்ச்சி ! மறுநொடியே கோபம் ! ‘ இந்த குழந்தை முகத்திற்கு இவ்வளவு கோபம் வருமா ? அப்படியென்ன கோபம் ?’ அவனுக்குள் சுவாரசியம் கூடியது .
உடனே ஒருவித நடுக்கம் , ‘ பதறுகிறாள் ஏன் ?’ தன் பார்வையை கூர்மையாக்கினான் . ‘எதையோ செய்ய கூடாததை செய்தது போல, அவள் முகம் அருவருப்பில் அஷ்ட கோணலாக மாறியது , ஆனால் ஏன்? ‘
தீரனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற ,அவனது தாடை இறுகியது . உடனே தன் கை, கழுத்து , என தன் மேனியை தன் கைகளால் அவ்வளவு வேகமாக துடைக்கிறாள். அவளது செய்கையில் மிகவும் அவமானப்பட்டான் ! தன்னை இழிவு படுத்துவதாய் எண்ணினான் !
‘ஏன் நான் தொட கூடாதோ ? என் கரம் உன் மீது பட்டால் தீட்டோ ? நீ என்ன பேர் அழகியா ! இல்லை நான் தான் அருவருக்கத்தக்கவனா !’கண்களை மூடி திறந்தவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது .
‘ இன்னும் என்ன செய்கிறாள் ?என்று பார்ப்போம் ‘ கண்களை விரித்து பார்த்தான் .
அவள் தங்கையும் தம்பியும் எதோ சொல்கிறார்கள் ஆனால் அதை காதிலே வாங்காமல் எதையோ தேடுகிறாள் , குனிந்து ட்யூபை எடுக்கிறாள் . தீரனுக்கு புரிந்து விட்டது !
“எவ்வளவு தைரியம் இவளுக்கு ? பூனை போல் இருக்கிறாள் என நினைத்தால் , இவளுக்குள் இவ்வளவு அகங்காரமா ?” ஆத்திரமிகுதியில் சுவற்றில் ஓங்கி தன் கையை குத்தியவனுக்கு ஏனோ மேகாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
ஆக ஏற்கனவே பயங்கர கோபத்தில் இருந்த தீரனுக்கு ,மேகா இப்பொழுது ஏதோ தீண்ட தகாதவனிடம் இருந்து ஓடுவது போல, தீரனின் முகத்தை கூட பார்க்காது பதில் சொல்லிவிட்டு ஓடி சென்றது எரிச்சலை அதிகரிக்க , மனம் வேறு மீண்டும் காலை நடந்த நிகழ்வில் கோபம் கொள்ள ,”இவள் என்னை பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறாள்? ” என்ற அக்னி அதே ஆத்திரத்துடன் மேகாவை தேடினான் .
ரெஸ்டாரண்டில் குளுமையான ஜிகர்தண்டாவை சுவைத்து கொண்டு ரிதுராஜிடம் பேசியபடி அமர்ந்திருந்த மேகா , அதுவரை இருந்த இறுக்கத்தை விடுத்து கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறியிருந்தாள் .
அப்பொழுது பார்த்து ரிதுராஜின் அலைபேசிக்கு அழைப்பு வர மேகாவிடம் பேசிவிட்டு வருவதாக கூறி சற்று தூரம் ரிதுராஜ் தள்ளி சென்றிருக்க ,
கண்ணில் சன் க்ளாஸும் , வாயில் நச்சுக்குழலுமாக அவள் முன்பு வந்து அமர்ந்தான் தீரன் . அவன் ஒருகையால் கிளாஸை கழட்டி , நச்சுக்குழலை மேகா மிரண்டு பார்க்க ஊதி தன் காலில் போட்டு மிதித்து விட்டு, தலையை கோதியபடி அமர்ந்திருந்த தோரணையில் மேகாவுக்கு நா வறண்டு விட்டது .
சட்டென்று அவள் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள ,
” உக்காரு ” மேகாவின் பதற்றத்தை உள்வாங்கியபடி உட்கார சொல்லி தன் கரங்களை ஆட்டி செய்கை செய்தான் . தீரனின் அதிகார பார்வை அவளை உட்கார வைத்தது .
” ஆமா ,நீ உன்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? ஹாங் , அழகி ,பேரழகி ,தேவதை ” இகழ்ச்சியில் தீரனின் இதழ் வளைந்தது , அவனது ஏளன பார்வையில் அவள் மிகவும் காயப்பட்டாள். அவன் பார்வை அவளை ஆழ துளைக்க, சிரிது நேரம் அவளை பார்த்தபடி இருந்தவன் தன் இருக்கரங்களையும் கோர்த்து சற்று முன்னால் வந்து ,
“நத்திங், யு ஆர் ஜஸ்ட் நத்திங் மேகா , யா நான் உன்னை நேசிச்சேன் , கல்யாணத்துக்கு ப்ரோபோஸ் பண்ணினேன், நீ என்னை ஏமாத்தின , நான் கோபப்பட்டேன் , அதெல்லாம் முடிஞ்சிருச்சு , இப்போ நீ வேற வாழ்க்கைக்குள்ள போக போற , ஆமா அன்னைக்கு நான் உன்கிட்ட ரூடா நடந்துக்கிட்டேன் தான் , ஆனா அதுக்கப்புறம் என் சைட்ல இருந்து உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சா ம்ம்ம், ” என்றான் மர்ம புன்னகை புதைந்து கிடந்த ஏளன குரலில் .
அவளோ கண்களில் கண்ணீர் திரையிட அவனை ஏறிட்டு கூட பார்க்காமல் தலையை குனிந்தபடி இருக்க , அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்து கொண்டே மேசையில் அழுத்தத்துடன் வேகமாக தட்டியவன் ,” பதில் சொல்லு ” அதட்டினான் .
சட்டென நிமிர்ந்து பார்த்தவள் , ” நோ ” என்று கூற , அவள் தலை அனிச்சையாக அசைந்தது .
” இங்க பாரு மேகா உன் உணர்ச்சிகளை என்னால புரிஞ்சிக்க முடியுது, பட் நீ நினைக்கிற மாதிரி உன் மேல நான் ஆசை பட்டு, இருபத்திநாலு மணிநேரமும் உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்ற அளவுக்கு , நீ ஒன்னும் தேவ கன்னி கிடையாது . நீ ரொம்ப ரியாக்ட் பண்ற ரிலாக்ஸ்சா இரு ஹாங் . எனக்கு புரியுது உனக்கு என்னை மறக்கிறது கஷ்டம் தான் , இருந்தாலும், நீ என்னை மறந்துட்டு உன் பியான்ஸே ரிதுராஜ் மேல போகஸ் பண்ணி தான் ஆகணும் ” என்றது எள்ளல் நிறைந்த அவனது குரல், ‘ அவன் மேல போகஸ் பண்ணிருவ’ என சவால் விட்டது அவனது கபடம் நிறைந்த விழிகள்.
‘ நீ ரொம்ப ஓவரா அலட்டிக்கிற அளவுக்கு , நீ வொர்த் இல்லை , ஸோ என்னை நினைக்கிறதை விட்டுட்டு உன் பையன்ஸைய பாரு ‘ என்று கூறியவனை மேகா அதிர்ச்சியுடன் பார்த்தாள் .
” நீ தப்பா நினைச்சு … நான் உங்களை அப்படி ” அவனுக்கு தெளிவுபடுத்த விரைந்தவளுக்கு வார்த்தைகள் மட்டும் ஏனோ சிக்கல் விழுந்த நூல் போல தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு வெளி வர மறுக்க ,
” இட்ஸ் ஓகே மேகா ரிலாக்ஸ் “
” நீங்க என்னை தப்பா நினைக்கிறீங்க அக்னி, எனக்கு அந்த மாதிரி எந்த எந்த எண்ணமும் உங்க மேல இல்லை ” எப்படியோ சொல்லிவிட்டாள்.
“ஆஹாங் ” அவன் பார்வை அவளை மிகவும் அவமானப்படுத்தியது , கோபம் , அவமானம் , வலி , இயலாமை என முகத்தில் வெவ்வேறு உணர்ச்சிகள் மாறி மாறி வர , துடித்து போன மேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ,
‘இதை தான் எதிர்பார்த்தேன் ? இன்று காலை நானும் இப்படி தானே அவமானப்பட்டேன் !’
‘நான் தொட்டால் உனக்கு அருவருப்பாக இருக்கிறதோ ? தீண்ட தாகாதவனிடம் இருந்து ஓடுவது போலவா ஓடுகிறாய்’ வாங்கியதை நான்கு மடங்காவது திருப்பி கொடுக்காவிட்டால் நான் அக்னி தீரன் அல்லவே .’
‘ என்னை நினைக்க மாட்டாயோ ? வலுக்கட்டாயமாக உனக்குள் நுழைந்து ,ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு நொடியும் உன் உயிர், உன் ஆன்மா , உன் இதயம் , அதன் துடிப்பு என அனைத்தையும் என் பெயரையே சொல்ல வைக்கிறேன் பார் ‘ என மனத்திற்குள் நினைத்தவன்,
” கொஞ்சம் ஜில்லுனு ஜிகர்தண்டா குடி மேகா , தொண்டைக்கு இதமா இருக்கும் ” என்றவன் ஜிகர்தண்டாவை அவளிடம் நீட்டிவிட்டு ,
” ஓகே என்ஜாய் யுவர் ட்ரின்க், அண்ட் அட்வான்ஸ் ஹாப்பி மரிட் லைஃப் ” என வாழ்த்தியவன் அவளது வெளிறிய முகம் கண்டு , திருப்தியான புன்னகையுடன் ரித்ராஜிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்த அஷோக்கை பார்த்து கண்ணசைத்துவிட்டு வெளியேறினான் . ‘ நான் எப்போ இவனை நினைச்சேன் , இவனை மறக்க கஷ்டப்படுறதுக்கு ?’ என அதிர்ந்து விழித்த மேகா அவமான உணர்வில் கண்களை துடைத்தபடி அமர்ந்திருக்க ,
” சாரி மேகா அஷோக் பேசிட்டு இருந்தாரு , அதான் வர லேட் ஆகிடுச்சு ” என்றபடி ரிதுராஜ் வந்து அமர , அவன் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டவள் , தன் எதிரே இருந்த குளிர்பானத்தை அனிச்சையாக பருக , அதில் இருந்து வந்த வித்யாசமான வாசனையில் முகத்தை சுளித்த மேகா ‘ஏன் ஒருமாதிரி ஸ்மெல் வருது ?’ என்று எண்ணியவள் ‘ நிறைய இருந்துச்சே எப்படி காலியாச்சு? ‘ என மீண்டும் சிந்திக்க , அதிர்ச்சியுடன் வாயை மூடிக்கொண்டு வாஷ் ரூமை நோக்கி ஓடினாள் .
நாளை
” அங்கிள் ஆர் யு ஓகே ?” கோபால கிருஷ்ணனின் வெளிறிய முகம் கண்டு அக்னி வினவினான் .
” அதுவந்து அக்னி ” அவருக்கு மூச்சு முட்டிக்கொண்டு வர ,பேச முடியாமல் திணறியவர் , தன் அலைபேசியை காட்ட
அவரை புருவம் சுருக்கி பார்த்தபடி அலைபேசியை வாங்கியவன் கண்கள் கோபத்தில் தகிக்க , கோபால கிருஷ்ணன் நிலை தடுமாறி விழுந்தார் .
தொடரும்