காதல் சதிராட்டம் – 12
காதல் சதிராட்டம் – 12
இந்த மனது என்பது மாயாஜாலம் காட்டும் ஒரு கால இயந்திரம். நிகழ்காலத்தில் இருந்து கொண்டே இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கூட்டிச் செல்லும் ஒரு மாய கருவி தானே இந்த மனம்.
அந்த கருவி தான் வினய்யை இப்போது இறந்தகாலத்திற்கு கூட்டிச் சென்று பசுமையான நினைவுகளை எல்லாம் அவன் கண் முன்னால் விரித்து வைத்தது.
ஆனால் அந்த இனிமையான இறந்த காலத்திலேயே இருந்துவிட முடியாதபடி ஒரு குரல் அவனை கலைத்துப் போட்டது.
“அண்ணா ” என்றான் ப்ரணவ்.
“டேய் ப்ரணவ்… ஏன் டா தப்பான நேரத்துல எப்பவுமே கரெக்டா என்ட்ரி தரே… இப்ப நீ என்ன பண்றனா அப்படியே திரும்பி போயிட்டு சரியான நேரத்துக்கு வருவியாம்… ” என்று ப்ரணவ்விடம் சொல்லிவிட்டு மீண்டும் வினய்யிடம் திரும்பினாள்.
“அண்ணா நீங்க சொல்லுங்க… அப்புறம் என்ன ஆச்சு??” என்று மேலும் வினய்யை பேச ஊக்க மீண்டும் ப்ரணவ் இடைமறித்தான்.
“அடியே உத்ரா நேரங்காலம் புரியாம பேசிக்கிட்டு இருக்காதே… ” என்று ப்ரணவ் அவளை கடிந்துவிட்டு மீண்டும் வினய்யை நோக்கினான்.
“அண்ணா அண்ணிக்கு பயங்கரமா குளிர ஆரம்பிச்சுடுச்சு… கம்பளி எது தந்தாலும் அவங்க நடுக்கம் நிக்குறா மாதிரி தெரியல…. ஹீட்டர் கூட ஆன் பண்ணிட்டேன் அண்ணா ஆனாலும் நடுக்கம் குறையல… எனக்கு பயமா இருக்கு அண்ணா”…
என்று ப்ரணவ் பேசிக் கொண்டே இருக்க வினய் நேராக சமையலறையை நோக்கி சென்றான்.
ஆதிராவை நோக்கி செல்வான் என நினைத்த இருவரும் அவன் சமையலறையை நோக்கி செல்வதைப் பார்த்து தங்கள் புருவங்களை தூக்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஹே உத்ரா நியாயமா பார்த்தா இப்போ அண்ணா அண்ணியைப் பார்க்க தானே போய் இருக்கணும்… எதுக்கு இப்போ சமையல் கட்டுக்குள்ளே போறாரு… “
“ஒரு வேளை அண்ணா தண்ணி குடிச்சுட்டு ஆதிரா அண்ணி கிட்டே பேச தன்னை தயார் பண்ணிட்டு இருக்கலாம் ப்ரணவ்… “
“இல்லைனா எலுமிச்சம்பழம் வாசனை பிடிச்சு மனசை சரி பண்ண போய் இருக்கலாம் உத்ரா… “”
“இல்லனா இஞ்சி சாப்பிட்டு தன் குரலை சரி பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கலாம் ப்ரணவ்… “
“இல்லைனா… “என்று இவர்கள் ஒருவர் தோளின் மீது ஒருவர் விட்டத்தைப் பார்த்து பேசிக் கொண்டு இருக்க கையில் ஒரு குவளையோடு வினய் வெளியே வந்தான்.
விட்டத்தைப் பார்த்து உளறிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து ” என்ன டா.. பண்ணிட்டு இருக்கீங்க…. ” என்றான் கேள்வியாக.
“நீங்க கிட்சன்ல என்ன பண்ணிட்டு இருப்பீங்கனு கண்டுபிடிச்சுக்கிட்டு இருந்தோம் அண்ணா… ” என்றனர் இருவரும் கோரசாக.
“ஹ்ஹ்ம்… கிட்சன்ல துணி காயப் போட்டுட்டு இருந்தேன்… ” என்றான் வினய் சலிப்பாக
“மிஸ்.. உத்ரா.. நாம இந்த கோணத்துல யோசிக்கவே இல்லை பாருங்களேன்… “
“ஆமாம் ப்ரணவ்.. இது யோசிக்க முடியாத கோணம்…” என்று இருவரும் இன்னும் அந்த டிடெக்டிவ் மோடில் இருந்து வெளியே வராமல் பேசிக் கொண்டு இருந்தனர்.
“சிஐடி சிஷ்யர்களா கொஞ்சம் நிறுத்துறீங்களா உங்களோட investigation எல்லாத்தையும்”
“நிறுத்திட்டோம் அண்ணா… ” என்று கோரசாக பதில் வந்தது.
“டேய் ப்ரணவ்… இந்த மாடியை தாண்ட மாட்டேனு நான் ஆதிராவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் டா… அதனாலே இப்போ நீ என்ன பண்ற,,, இந்த டீயை கொண்டு போய் ஆதிரா கிட்டே குடிக்க சொல்லி கொடுக்குற… இந்த டீயை குடிச்ச கொஞ்சம் நேரத்துலயே அவள் குளிர் தன்னாலே குறைஞ்சுடும்… ” என்று வினய் சொல்ல ப்ரணவ் யோசனையுடன் தாடையை சொறிந்தான்.
“கண்ணாடியை திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும் அண்ணா? ஹீட்டர் கம்பளியாலே சரி பண்ண முடியாத குளிரை எப்படி அண்ணா இந்த டீ சரி பண்ணும்?”
“அதெல்லாம் சரியாகிடும்டா…நீ முதலிலே இந்த டீயை கொண்டு போய் ஆதிராவுக்கு கொடு ” என்ற வினய்யின் கட்டளைக்கு இணங்க டீயை எடுத்துக் கொண்டு ஆதிராவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
கட்டிலின் ஒரு மூலையில் , கம்பளியில் சுருண்டபடி குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
“அண்ணி இந்தாங்க… இந்த டீயை குடிங்க.. குளிருக்கு இதமா இருக்கும்.. ” என்றபடி தேநீரை அவளின் முன்பு நீட்டினான்.
கைகளில் வாங்கியவள் ஒரு மிடறு விழுங்கியதும் அவள் முகம் மாறியது.
அவளுக்கு பழக்கப்பட்ட சுவை. இந்த நறுமணத்தோடும் சுவையோடும் அவன் ஒருவனால் மட்டுமே டீயைப் போட முடியும். கல்லூரியில் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவளின் கண் முன்பு நிழலாடியது.
தினமும் அதிகாலை குளிரில் நடுங்கிக் கொண்டு வரும் அவளுக்கு தேநீர் பரிமாறிய வினய், நினைவிற்கு வந்தான். அதிகாலையில் நடுக்கத்துடனும் குளிருடனும் வருபவளுக்கு அவன் கொடுக்கும் தேநீர் சிறந்த புத்துணர்வு பானம். இன்றும் அதேப் போல தான் அவளுக்குள் ஒரு புத்துணர்வு பிறந்தது. குளிர் மெல்ல விலகியது. மெதுவாக கம்பளியை விட்டு விலகினாள்.
ஆதிராவின் குளிர் சட்டென்று விலகியதைப் பார்த்து ப்ரணவ் ஆச்சர்யப்பட்டு போனான்.
அவனை அறியாமலேயே அவனுடைய உதடுகள் ” கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுது குமாரு… ” என்று உளறியது.
அவனது உளறல் மொழிகள் ஆதிராவின் செவியை அடைய குழப்பத்துடன் திரும்பினாள்.
“என்ன கண்ணாடி? என்ன ஆட்டோ? எனக்கு புரியல ப்ரணவ்.”
“அது ஆட்டோவோட கண்ணாடி அண்ணி.” என்று சொன்னவன் ஆதிராவின் குழப்பம் தெளியாத முகத்தைக் கண்டவுடன் அவன் குரல் தெளிந்தது.
“அண்ணி அதை விடுங்க. இப்போ குளிர் போயிடுச்சுல?” என்று அவன் கேட்க ஆம் என்று ஆதிரா தலையசைத்தாள்.
“அப்போ ஓகே அண்ணி…. கீழே போகலாம் வாங்க… ஃபேமிலி ஆல்பம், வீடியோ எல்லாம் பார்க்கலாம்… நீங்க தூங்காம இருக்கிறதுக்கு நான் போட்ட ப்ளான்… எப்படி இருக்கு அண்ணி?… ” என்று கண்ணடித்தபடி கேட்க ஆதிராவின் முகத்திலோ புன்முறுவல்.
“அப்போ உன் அண்ணா ஜெயிக்கிறதுக்கு பதிலா, நான் ஜெயிக்கணும்னு நினைக்கிறியா ப்ரணவ்.”
“ஹா ஹா.. அப்படி இல்லை அண்ணி.. எனக்கு நீங்களும் ஜெயிக்கணும்… அண்ணாவும் ஜெயிக்கணும்… சோ ரெண்டு பேருக்கும் ஒரு ஒரு டாஸ்க்ல உதவி பண்ணுவேன்..” என்று சொல்ல அவனை நோக்கி நட்பாக புன்னகைத்தவள் அவனுடன் இறங்கி கீழே இறங்கி சென்றாள்.
தொலைக்காட்சித் திரையில் ப்ரணவ்வும் உத்ராவும் குழந்தை முகத்தில் சிரித்துக் கொண்டு இருந்தனர்.
“அண்ணி அங்கே பாருங்களேன் உத்ராவுக்கு ரெண்டு தென்னை மரம் தலையிலே முளைச்சு இருக்கு.. ” என்று ப்ரணவ் சொல்லி சிரிக்க வினய்யும் ஆதிராவும் சிரித்துவிட்டனர். ஆனால் உத்ரா மட்டும் கோவமாக முறைத்தாள்.
“அண்ணா அங்கே பாருங்களேன் அந்த ப்ரணவ் எருமை மாடு பொம்பளை ட்ரஸ் போட்டாக்கிட்டு தையா தையா பாட்டுக்கு டான்ஸ்க்கு ஆடிட்டு இருக்கான்… ” என்று அவள் சொல்லவிட்டு சிரிக்க மற்றவர்களும் சிரிப்பில் இணைந்து கொண்டனர்.
ப்ரணவ் கோவப்பட்டு வேகமாக டிவி ரிமோட்டை எடுத்து மாற்றினான்.
“ஏன்டா எருமைமாடு மாத்துன.. எவ்வளவு அழகா தையா தையா பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டு இருந்தே… அதையே வைடா..”
“போடி தென்னை மர கொண்டை… அதெல்லாம் என்னாலே வைக்க முடியாது… ” என்று சொல்லிக் கொண்டு இருந்தபடியே அடுத்த வீடியோவை மாற்றியவனின் கை அதில் கண்ட காட்சியைக் கண்டு அப்படியே விக்கித்துப் போய் நின்றது.
அதுவரை சிரித்துக் கொண்டு இருந்த வினய்யின் முகமும் நொடிப் பொழுதில் உருமாறியது.
அவர்கள் இருவரது முக மாற்றங்களையும் ஆதிரா கவனித்துக் கொண்டு இருந்த நேரம் உத்ரா சங்கடமாக அடுத்த வீடியோவை மாற்றினாள்.
“ப்ரணவ்… ” என்றவளது குரலில் லேசாக கலக்கம் தெரிந்தது… அவன் நீர் திரையிட்ட கண்களுடன் திரும்பி அவளைப் பார்த்தான்.
உத்ரா கண்களால் வினய்யை காண்பிக்க ப்ரணவ்வும் வினய்யைப் பார்த்தான். அவனது முகத்தினுள் சொல்லெண்ணா துயரம் நிரம்பி வழிந்தது. தன் அண்ணனின் வருத்தத்தைக் கண்டதும் தன் துயரத்தைத் துடைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை கொண்டு வந்தான். வேகமாக அடுத்த காட்சியை மாற்றினான்.
அதில் ப்ரணவ்வும் உத்ராவும் ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பற்றி இழுத்துக் கொண்டு மண்ணில் உருண்டு சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தனர்.
“அண்ணா அங்கே பாருங்களேன்… உத்ரா எப்படி என் கிட்டே அடி வாங்குறானு… ” என்று ப்ரணவ் வினய்யின் கவனத்தைக் கலைத்தான்.
திரும்பி உத்ராவும் ப்ரணவ்வும் சிறுவயதில் சண்டை போடும் காட்சிகளை பெயருக்குப் பார்த்தான்.
ஆனால் அவனது கவனம் எல்லாம் முந்தைய வீடியோவினிலேயே நிலைத்து நின்றது. அதில் இருந்து கவனம் மீளவே இல்லை.
ஆதிரா அவனது கவலையுற்ற முகத்தையே கேள்வியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். ப்ரணவ்வும் உத்ராவும் கூட சங்கடமான அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தனர். எல்லோருடைய கவனமும் தன் மேல் இருப்பதை உணர்ந்தவன் வேகமாக எழுந்து சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டவன் இரண்டே நிமிடங்களில் தன் முகத்தை சமன் செய்து கொண்டு வெளியே வந்தான்.
அவனது முகம் உணர்ச்சியை மொத்தமாக துடைத்தெறிந்துவிட்டு கல்லாக சமைந்து இருந்தது.
ப்ரணவ் வேகமாக டீவியை நிறுத்திவிட்டு ஆல்பத்தையும் எடுத்து மறைத்து வைத்துவிட்டான். அவனது மனம் லேசாக வருந்தியது.
தான் இந்த ஆல்பத்தையும் வீடியோக்களையும் போட்டு இருக்கக்கூடாதோ என்று காலம் தவறி யோசித்தான்.ஸ
அவன் பார்த்து பார்த்து தான் ஆல்பத்தையும் வீடியோக்களையும் தேர்ந்தெடுத்து கொண்டு வந்து இருந்தான்.
ஆனாலும் இதில் அந்த வீடியோவும் கலந்து இருக்கும் என்று கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை. தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான்.
“ப்ரணவ் இங்கே நடக்குது… ஏன் எல்லார் முகமும் ஒரு மாதிரி இருக்கு… ” என்று மெதுவாக ஆதிரா கேட்டாள்.
“அண்ணி நான் அப்புறமா அதை சொல்றேன்… அண்ணா ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்காரு… அவரோட மனசை உங்க ஒருத்தராலே மட்டும் தான் மாத்த முடியும்…. ப்ளீஸ் அண்ணி ஏதாவது பண்ணி என் அண்ணா மனசை மாத்துங்களேன்… எனக்காக… ” என்று இரைஞ்சினான் ப்ரணவ்.
ப்ரணவ் கெஞ்சிக் கேட்டு அவளால் மறுக்க முடியவில்லை. வினய்யின் வருத்தமான முகத்தைப் பார்ப்பதற்கு அவளுக்கும் ஒரு மாதிரி வருத்தமாக தான் இருந்தது.
என்ன தான் அவனை பல மடங்கு வெறுத்தாலும் அவனது உணர்வற்ற முகத்தைப் பார்க்க அவளுக்கு திராணியில்லை என்பதே நிஜம். ஒரு முடிவோடு எழுந்தவள் பல நாட்களாக பாடிப் பழகாத தன் குரலால் மெதுவாக பாடத் துவங்கினாள்.
அதுவரை கல்லென கிடந்த வினய்யின் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி மெது மெதுவாக பரவியது.
சில் பறவையே
சில் சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்குமா பயணம்??….
என்னருகில் யார் இருக்க
யாரோடு நான் பறக்க….
சில் பறவையே சில் பறவையே
சிறகை அசைத்தே
தொடங்குமா பயணம்????…..
💐💐💐💐💐💐💐💐💐