Author: uma12345

  • தாரகை 21

    பறவைகளின் அணிவகுப்பு இல்லை. மேகக்கூட்டங்களின் குவியல் இல்லை. வண்ண வண்ண பட்டங்கள் பறக்கவில்லை. வெறுமையாய் இருந்தது அந்த வானம், எழில்மதியின் மனதைப் போல. இலக்கற்று எங்கோ வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அவள். என்ன தான் ஒருதலையாய் முடிவெடுத்து காவ்ய நந்தனை பிரிந்து தனியாக வந்துவிட்டாலும் இந்த தனிமையில் அவளிற்கு உவப்பில்லை. மனதினில் நிம்மதி இல்லை. உள்ளமெங்கும் விரக்தியின் கூக்குரல். கைகளோ விடாமல் தன் மணி வயிற்றை வருடியபடியே இருந்தது. “பாப்பா நீ ஏன்டா அம்மா விட்டுட்டு போன?…

  • தாரகை 20

    வாழ்க்கை. நாம் ஒன்று  நினைத்திருக்க அது  வேறு ஒன்றை நடத்தி முடித்திருக்கும். அப்படி தான் நடந்து முடிந்ததன் வலியை ஏற்க முடியாமல் சிலையென சமைந்திருந்தான் காவ்ய நந்தன். அவன் முகத்திலிருந்தது கோபமா, பரிதவிப்பா, குற்றவுணர்வா ஆற்றாமையா? மொத்தத்தில் உணர்வுகளின் கொதிப்பில் நின்றிருந்தான். “பேஷண்ட் முழிச்சுட்டாங்க” என்று நர்ஸ் வந்து சொல்லவும் சட்டென்று எழுந்த காவ்யன், மற்றவர்களிடம் தான் பார்த்து கொள்வதாக கையசைத்துவிட்டு வேகமாய் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான். உள்ளே வந்த காவ்ய நந்தன் அணு அணுவாய்…

  • தாரகை – 19

    போதை! அது மனதின் நிதானத்தை இழக்க செய்யும் வஸ்து, முக்காலத்தையும் மறக்க வைக்கும் சோம பானம் அது. அதன் வீரியத்தால் தன் நிலையை முற்றிலும் இழந்திருந்தான் காவ்ய நந்தன். போதையின் வீரியத்தால் தன்னிலை இழந்து எழில்மதியின் அருகே வேக நடை எடுத்து வைத்து வந்தான். சுவற்றோடு ஒட்டிக் கிடந்த எழில்மதி விழிகள் பட்டாம்பூச்சியாய் பயத்தில் படபடத்து கொண்டது.  தன் மீது அழுத்தமாய் படர்ந்திருந்த காவ்ய நந்தனை தள்ள முயன்றாள். “விடுங்க மாமா ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக சொன்னவள்…

  • நெஞ்ச தாரகை 18

    அதிர்ச்சி! எதிர் பார்க்காத பொழுதில் எதிர் பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதயத்தை ஓடாத கடிகாரம் போல காலம் மறந்து ஸ்தம்பிக்க வைக்கும். அப்படி தான் காவ்ய நந்தனும் ஸ்தம்பித்துப் போய் நின்று இருந்தான். எழில்மதி மயங்கியதோ சரி, இல்லை அவசரமாக அவளை திலக் வர்மா தோளில் போட்டுக் கொண்டு கண்ணீரோடு ஓடியதோ சரி… அவன் மூளையில் எதுவுமே தெளிவாக பதியவில்லை. அவன் மனம் முழுக்க தன் காலை வந்து தொட்ட எழிலின் உதிரத்திலேயே உறைந்து கிடந்தது.…

  • நெஞ்ச தாரகை 17

    உறக்கம்! அது உலக பிணைப்புகளிலிருந்து கண நேர விடுதலை. ஒரு சிறு மரணம். கவலைகள் அண்டாமல் தாயின் பனிக்குடத்தில் கதகதப்பாய் மிதந்து கொண்டிருக்கும் சிசுவைப் போல, வருத்தங்களை துறந்து ஆசுவாசமாய் தவழும் ஒரே இடம் உறக்கம் மட்டுமே. பல நாட்கள் கழித்து நிம்மதியாய் விழி மூடினான் காவ்ய நந்தன். பறவைகளின் கீச்சு கீச்சு ஒலியும் இயற்கையின் சுகந்தமான வருடலும் அவனை ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்துச் செல்ல அவன் மூச்சுக்காற்று சீரான வேகத்தில் மேல் ஏறி இறங்கியது. அவன் ஆழ்ந்த…

  • நெஞ்ச தாரகை 16

    நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி வீசும் பாலைவனத்தையும் கண்களில் காட்டும் என்பதை எழில்மதி மறந்துப் போனாள். அவனுடன் இணைந்து பசுமையான நினைவுகளை உருவாக்குவதற்காக வெளியே வந்தவளை இளங்காற்று தலை கோதி வரவேற்றது. அவள் முகத்தில் மெல்லிய முறுவல். பல வருட தவம் அவளுக்கு இது. அவனுடன் ஒன்றாய் இணைந்து ஒரு பயணம்…

  • நெஞ்ச தாரகை 16

    நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி வீசும் பாலைவனத்தையும் கண்களில் காட்டும் என்பதை எழில்மதி மறந்துப் போனாள். அவனுடன் இணைந்து பசுமையான நினைவுகளை உருவாக்குவதற்காக வெளியே வந்தவளை இளங்காற்று தலை கோதி வரவேற்றது. அவள் முகத்தில் மெல்லிய முறுவல். பல வருட தவம் அவளுக்கு இது. அவனுடன் ஒன்றாய் இணைந்து ஒரு பயணம்…

  • நெஞ்ச தாரகை 15

    முடிவுகள். வாழ்க்கைப் படகின் திசையை மாற்றும் காற்றைப் போல அவை. ஒரு திசை, நம்மை இலக்கிற்கு கூட்டிச் செல்லும். இன்னொரு திசை நம்மை திக்கற்ற காட்டுக்குள் நிற்க வைத்துவிடும். இதில் எழில்மதி எடுத்த இந்த முடிவு எந்த திசைக்கு கூட்டி செல்லும் என்பதை அறியாமல் பெரியவர்கள் சஞ்சலம் கொண்டனர். “எழில்மா, தெளிவா யோசிச்சு தான் முடிவு பண்ணி இருக்கியா?” லட்சமி கலக்கமாய் கேட்கவும் வெற்றுப் பார்வையோடு மௌனமாய் தலையசைத்தாள் எழில். “நல்லா யோசிச்சுட்டேன் அத்தை. அவர் பக்கத்துலேயே…

  • தாரகை – 14

    கர்மா! அது ஒரு கால சுழற்சி… தெரிந்து ஒரு வினையை செய்தாலும் தெரியாமல் செய்தாலும் நாம் அந்த சுழலில் சுழன்று தான் ஆக வேண்டும். அப்படி தான் முகில் நந்தன், மீள முடியாத அந்த சுழலில் சிக்கி கொண்டிருந்தான். கல்லூரியில் முதுகலை முடித்த தருவாயில் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் தன் நிதானம் தவறிய அந்த ஒரு நொடி, இங்கே ஒரு குடும்பத்தின் முகவரியே மாறிப் போய் இருப்பதை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் கோபத்தில் எறிந்த…

  • தாரகை – 13

    மேகா ஶ்ரீ. ஒரு காலத்தில் புன்னகை பூக்கும் பூச்செடியாய் இருந்தாள். துள்ளி திரியும் துருதுரு மான்குட்டி அவள். அகலின் சுடர் போல முகத்தில் எப்போதும் ஒரு விகசிப்பு இருக்கும். நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும் துன்பம், வறுமை என்னும் சொற்களை நெருங்கவிடாமல் அருமையாய் பார்த்துக் கொண்டார் மேகாவின் அப்பா, விநாயகம். தாயுமானவனாய் எதற்கும் உடன் இருக்கும் அப்பா, நேசிப்பை மட்டுமே சிந்தும் அம்மா, உயிருக்கு உயிராய் அவள் விரும்பும் தம்பி என அழகிய குருவி கூடு அவர்கள் குடும்பம்.…

error: Content is protected !!