டீசர்

டீசர்

டீசர்…. 

“அடியேய் திமிரழகி! கொஞ்சம் இந்த அத்தானை பார்த்து நிக்கிறது” போகும் தன் காதல் தேவதையை கண்டு வம்பிழுத்தான் தேவதையின் வருங்கால நாயகன்.

திரும்பி பார்க்காது அவள் நடையை வேகப்படுத்த, அவள் இதழ்களோ அவனை திட்டும் வேலையில் தீவிரமாய் இருந்தது.

“என் அழகியே கொஞ்சம் இந்த அத்தானுக்கு கருணை காட்டுறது” அவள் பின்னாடியே இவனும் வாலிபன் போல் துள்ளலுடன் நடையிட்டான்.

அவளோ திரும்பி பார்த்து எவ்வளவு முறைக்க முடியுமோ முறைத்து வைத்து திரும்பிக்கொண்டாள்.

நம் நாயகனோ சும்மா இராமல் ,” காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி” இளையராஜா பாடலை பாட, அவள் கைகளோ அனிச்சையாக அவள் காதுகளை இவன் குரல் கேட்காதவாறு முடிக்கொண்டது.

அதில் அவள் கையில் மாட்டியிருந்த நான்கு கண்ணாடி வளையல்களும் ஆடி அவனின் செவிப்பறைக்குள் அது இசையாய் இறங்க, மேலும் அவளை வம்பிழுக்க தொடங்கினான்.

“வலையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது

குளு குளு தென்றல்

காற்றும் வீசுது” என நேரத்திற்கு தகுந்தமாறி பாடல் பாடி அவளை வெறுப்பேற்றி பார்க்க, இவனுக்கு ஏற்றவாறு இயற்கை கூட தென்றல் வீசி அவனின் தேகத்தை தீண்டியது.

கோபமாக அவன் முன்பு முகம் சிவப்பேறி நின்றவளை பார்க்க பார்க்க அவளை கட்டிக்கொள்ளும் ஆசை தான் வந்தது அவனுக்கு.

“ஸ்டாப் திஸ் நான்சன்ஸ். நான் எத்தனையோ தடவை உங்களுக்கு என்னோட மறுப்பை சொல்லிட்டேன். அதுவும் இல்லாம நான் ஒரு குழந்தைக்கு அம்மா. ப்ளிஸ் இப்படி நடந்துக்காதீங்க. தயவு செஞ்சி எங்க வாழ்க்கைய விட்டு போக பாருங்க” கட்டுக்கடங்காத கோபத்தை கட்டுப்படுத்தி அமைதியாக கூற, அவனோ அவள் வாயசைக்கும் இதழ்களை பார்வையால் சிறையெடுக்க முயன்று கொண்டிருந்தான்.

அவளோ அவன் மனதை மாற்றும் பொருட்டு பேசிக்கொண்டே போக, அவனோ கண்ணடித்து கன்னத்தில் தட்டிவிட்டு “இன்னையோடு கோட்டா முடிஞ்சு போச்சி அழகி. நாளைக்கு மீதியை தொடரலாம். பாய் செல்லம்” என்று பறக்கும் முத்தத்தை வழங்கிவிட்டு சிட்டாக பறந்தான்.

அவன் கௌதம்…

போகும் அவனை பற்கள் நறநறக்க விழி சுருங்கி பாரத்தவள் தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

அவள் ரோஷினி…

error: Content is protected !!