நினைவு தூங்கிடாது 15

நினைவு தூங்கிடாது 15

நிழலின் நிஜம் 15

தகுதி இல்லாதவனிடம் பழகி…

என் வாழ்க்கையை தொலைத்த…

என் அறிவீனத்தை

 என்னவென்று நான் சொல்ல…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்தாள் மித்ரா. விழிகளை திறந்தாலும், ‘தான் எங்கு இருக்கிறோம்?’ என புரியாத நிலை. மயக்க மருந்தின் உபயத்தால் மூளை சற்று மந்தமாகி, வேலை செய்ய தாமதமானது.

மூளை மட்டுமின்றி கைகால்களும் அசைய மறுத்தது,’எனக்கு என்னாச்சு?’ என்று சிந்திக்க, தன் நிலை உரைத்தது. இவ்வளவு நேரம் மந்தமாக செயல்பட்ட மூளை, இப்போது சுறுசுறுப்படைந்தது. ‘என் கை கால்கள் கட்டப்பட்டிருக்கு. மயக்கமா இருக்கு. யாரோ என்னை கடத்தி இருக்காங்க?’ என உணர்ந்தவள், கலங்கலாக தெரிந்த விழிகளை சுழற்றினாள். 

‘தான் காணும் காட்சி சரிதானா?’ என தலையை உலுக்கி, கண்களை சிமிட்டி பார்த்தாள். இப்போதும் அதே காட்சி மாற்றமில்லாமல், தெளிவாக தெரிந்தது. அவளிடமிருந்து சிறிது இடைவெளிவிட்டு, ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி, கால் மேல் கால் போட்டு ராஜா தோரணையுடன், விழி அசைக்காமல் அவளது முக மாற்றங்களை ரசித்திருந்தான் ருத்ரேஸ்வரன். அவனது ரசனையான பார்வையில் துணுக்குற்றது பெண்ணின் மனது. 

ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த விழி வீச்சை சந்திக்க முடியாமல், தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கி கொண்டாள். “உனக்கு என்ன பிரச்சனை ருத்ரா? எதுக்கு என்னை கடத்திட்டு வந்த?” மலையளவு கோவம் மனதிலிருந்தாலும், பொறுமையாகவே கேள்வி எழுப்பினாள்.

“உன்னை தவிர வேற என்ன பிரச்சனை எனக்கு இருக்க முடியும்? ஏன் என்கூட பேச மாட்டிங்கற?” என்றான் கடுப்புடன்.

“என்ன சொல்றீங்க ருத்ரா சார்? இப்ப கூட நான் உங்ககிட்ட பேசிட்டு தானே இருக்கேன்?” கேளியாக கண் சிமிட்டினாள்.

“நீ என்ன லட்சணத்தில பேசுறன்னு உனக்கே தெரியும். ஏன் ஒழுங்கா பேச மாட்டேங்குற? எதுக்கு என்னை விலக்கி வச்சு பழகுற?” வார்த்தைகளை மென்று துப்பினான்.

இதழ் சுழிப்புடன்,”நான் எதுக்கு பேசனும்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” 

அவள் விழிகளுக்குள் ஊடுருவி,”ஏன் உனக்கு நான் யாருன்னு தெரியாதா?”

“தெரியாது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

“ஓ உனக்கு தெரியாது” என தாடையை தடவி நக்கலாக கூறியவன்.”சரி அதை விடு, நமக்குள் என்ன சம்பந்தம்ன்னு அப்பறமா உனக்கு தெளிவாாா புரியவைக்குறேன்.  நான் அன்னைக்கு உன்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் என்ன நடந்தது?”

“என்ன சொல்லுறீங்க சார்? நம்ம இதுக்கு முன்னாடி சந்திச்சு இருக்கோமா?” என்றாள் ஒன்றும் தெரியாத அப்பாவி போல.

“நீ பெரிய நடிகைன்னு நான் ஒத்துக்குறேன். அதுக்காக என்கிட்ட உன் நடிப்பை காட்டாத. என்ன நடந்துச்சு?” என்றான் பல்லைக் கடித்து.

தன் நடிப்பை கைவிட்டவளாக, நேர்கொண்ட பார்வையுடன்,”நாலு வருஷத்துக்கு முன்னாடி முடிஞ்சு போன ஒன்னு. அதை இப்ப தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க?”

“நான் என்னமோ பண்றேன். அத பத்தி உனக்கு என்ன கவலை? நீ விஷயத்தை சொல்லு” என்றான் கராறாக.

ஒரு கசந்த புன்னகையுடன்,”உன்கிட்ட தனியா மாட்டிக்கிட்ட, ஒரு பொண்ணை பயம் காட்டி, உன் ஆசைக்கு பணிய வச்சவன் நீ. ஒரு பொண்ணோட கையில் மோதிரம் போட்டு, ஊரறிய நிச்சயம் பண்ணிட்டு, ஊருக்கு தெரியாம அவ தங்கச்சி கழுத்தில மஞ்சள் கயிறு கட்டிட்டு, அம்போன்னு விட்டுட்டுப்போன மகா உத்தமன் நீ? ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்திருக்க, உன்கிட்ட நான் எதுக்கு சொல்லணும்?” என்ற குரலில் காரம்.

“நீ வரிசையா சொன்ன குற்றங்களை நான் ஒத்துக்கிறேன். நான் பொறுக்கியாவே இருந்துட்டு போறேன். எனக்கு என்ன தண்டனை குடுக்கணுமோ குடு. ஆனால் அதுக்கு முன்ன எனக்கு தெரிய வேண்டியது, உங்க அம்மா எங்க? அவங்களுக்கு என்ன ஆச்சு?”

மௌனம் மட்டுமே பதிலானது. 

“பிருந்தா எங்க?” தொடர்ந்து கேள்வி எழுப்பினான். 

பெண்ணிடம் பதிலில்லை. ஆண்ணின் பொருமை பரந்தது. தனது ருத்ர தாண்டவத்தை ஆட தயாரானான் ருத்ரேஸ்வரன்.

“பிந்து எங்க? இப்ப சொல்ல போறியா? இல்லையா?” என்றான் கர்ஜனை குரலில்.  சிங்கமே நடுங்கிவிடும் அந்த கர்ஜனையில்.

ஆனால் எதிரே இருப்பவளோ,’நீ பேசினாயா? என்னிடமா?’ என்ற பார்வை மட்டுமே அவளிடம். பார்வையில் ஒரு துளி பயமில்லை, ஏன் எந்த உணர்வுமே இல்லாத வெற்று பார்வை. உணர்வுகளை தொலைத்த முகம்.

அவளின் பயமில்லா பார்வையைப் பார்த்து, இவன்தான் பல்லைக் கடிக்க வேண்டியதாக இருந்தது.

“இப்படி கையும் காலும் கட்டி இருக்கும் போதே, உன்னுடைய பழைய திமிர் கொஞ்சமும் குறையல என் அருமை நீலாம்பரி.”

“ஓ தங்க் யூ, தங்க் யூ கூடவே பிறந்தது, எப்பவும் போகாது ருத்ரா.” என்றாள் படையப்பா ஸ்டைலில்.

அவளது ஒவ்வொரு பாவனைகளையும் ரசித்தாலும், அதை முகத்தில் காட்டாதவாறு,”டயலாக் நல்லாதான் இருக்கு. ஆனா இதை படையப்பா படத்துலயே பார்த்துட்டேன். இப்ப எனக்கு தேவை கேட்ட கேள்விக்கு பதில்.” விடா பிடியாக நின்றான்.

“சொல்லைனா?” புருவம் உயர்த்தினாள்.

அவளை அணைத்து முத்தமிட தூண்டிய மனதை அடக்கி,”இங்க இருந்து போக முடியாது” என்றான் அலட்சியமாக.

“என்னை தேடி என்னோட வரு வருவான்.” அவளது விழிகளில் சவால். அவள் என் வரு என்றதில் கோவம் வந்தது.

“உன்னை நான் தூக்கிட்டு வந்து ஐஞ்சு மணிநேரமாச்சு. இதுவரை வராத உன் வருவா இனி வர போறான்?” அலட்சியம் மிதமிஞ்சி இருந்தது.

“அவனோட காலை உடைச்சு, படுக்க வச்சுட்டாயே. அப்பறம் எப்படி வருவான்?” என்றாள் வருத்தத்தோடு.

அவளது வருத்தம் மனதை தைத்தாலும், அது அந்த ரிஷிக்கானது என்றதால் எரிச்சல் உண்டானது.

“அவன் வரப்ப வரட்டும். என்ன நடந்தது? நீ சொல்லு.”

“சொல்லமுடியாது. என்ன பண்ணுவ?”

“சரி நீ சொல்லவே வேண்டாம். உன்னோட வரு வந்து கூட்டிட்டு போற வரை, இங்கயே என்கூடவே இரு. ஆனால் நான் சும்மா இருப்பேன்னு நினைச்சுடாத. பொண்டாட்டிக்கு உண்டான ரைட்ஸை எடுத்துக்குவேன்.” என்றான் உல்லாசமாக.

‘இனி தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெரியாமல் விட மாட்டான்’ என்று உணர்ந்த பெண், ஒரு பெருமூச்சுடன்,”சரி சொல்றேன். ஆனால் ஒரு கன்டிஷன்.” 

‘?’ நெற்றி சுருங்கியது.

“அதுக்கு அப்புறம் என்னை தொந்தரவு செய்யகூடாது.” 

சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை, ‘நீ சொல்லி முடி, பிறகு பார்க்கலாம்’ என்ற பார்வை மட்டுமே.

†††††

நிழலின் நிஜம்

நான்கு வருடங்களுக்கு முன்,

அன்றைய திருவிழா தினம்.

தன்னிடம் தனியாக மாட்டிய அம்முவை சீண்டிய ஈஸ்வரன், அவளை ஆற்றங்கரைக்கு வர சொல்லிவிட்டு, அவள் பார்வையிலிருந்து மறைந்தான்.

பெண்ணோ,”அறிவு கெட்டவன் இவன் சொன்னா உடனே கேட்கனுமா? முடியாது. நான் போக மாட்டேன், என்ன பண்ணுறான்னு பாக்கறேன்.” என வாய்விட்டு புலம்பியபடி, தன் சகோதரி இருக்குமிடம், சென்ற பெண்ணின் கண்களில் பட்ட காட்சி, அவளை கொதிக்க வைத்தது.

அங்கு ஒருவன் பிந்துவை உரசிக்கொண்டிருந்தான்.’கூட்ட நெரிசலில் உரசி கொண்டிருக்கிறான்’ என நினைத்த பிந்து, அவனிடமிருந்து விலகி நின்றாள். மீண்டும் அவன் அவளை நெருங்கி உரசினான்.

இது அனைத்தும் பிந்துவை நோக்கி வந்து கொண்டிருந்த அம்முவின் பார்வையில் பட்டது.’அவன் வேண்டுமென்றே செய்கிறான்’ என உணர்ந்து கொண்டாள். அம்மு அவர்களை நெருங்கும் சமயம், அவனது கரங்கள் பிந்துவின் இடுப்பை தொட நெருங்கியிருந்தது.

சரியாக அந்த நேரம் அங்கு வந்த அம்மு, அவன் கரங்களைப் பற்றி முறுக்கி இருந்தாள். அவள் தன் கரங்களை முறுக்கியத்தில், கோபம் கொண்டவன்,”ஏய் என் கைய விடு. என்னமோ உன்னை தொட்ட மாதிரி இந்த சிலுப்பு சிலுப்பிகிற?” என தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டான். 

அவனது கரத்தை விட்ட அம்மு, அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையும் விட்டிருந்தாள், “உனக்கு அந்த நெனப்பு வேற இருக்கா? உன்ன கொன்னு புதைச்சுடுவேன். ஜாக்கிரதை” என்றாள் கண்கள் சிவக்க.

“அம்மு வேண்டாம்” பிந்து அவளை தடுக்க முயல, முடியாமல் போனது.

அவன் ஆத்திரத்தோடு  அம்முவை நெருங்க, சரியாக அங்கு வந்தான் கார்த்திக். “பாஸ், பாஸ் சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிடுச்சு” என சமாதானப்படுத்தி அவனை இழுத்துச் சென்றான். கார்த்திக்கின் இழுப்பிற்கு சென்றவன், திரும்பி அம்முவை கொடூரமாக முறைத்து சென்றான்.

ஈஸ்வரை பற்றியும், அவனது நண்பர்களை பற்றியும் ஓரளவு தெரிந்திருந்த கார்த்திக், அந்த ஓநாய்கள் என்று அந்த கிராமத்தில் காலடெடுத்து வைத்ததுவோ, அன்றிலிருந்து அவர்களை பின் தொடர்கிறான். கார்த்திக் அவர்களை நெருங்கும் முன், அம்மு நெருங்கி அவனை அறைந்திருந்தாள். ஓரிரு நிமிடங்களில் அனைத்தும் கைமீறியிருந்தது.

ஏற்கனவே அவர்களை தொடர்ந்து கொண்டிருந்த கார்த்திக், அந்த சம்பவத்திற்குப் பிறகு ‘அவர்களிடமிருந்து அம்முவை காப்பாற்ற’ அதிக கவனத்துடனிருந்தான்.

இந்த சூழ்நிலையில் ஈஸ்வர், பிந்துவின் திருமணச் செய்தி கார்த்திகை சற்று அசைத்துப் பார்த்தது. 

இங்கே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று, விதி வழியது. அதனால்தான், கஸ்தூரியால் அவர்கள் தலையெழுத்து மாற்றி அமைக்கபட்டது. 

ஒருவேளை தேவி கேட்டபோது, ஈஸ்வருக்கு அம்முவை திருமணம் முடிக்க கஸ்தூரி சம்மதித்திருந்தால், கார்த்திக் தன் காதலை கூறி, அவளை கரம் பற்றி இருப்பானோ என்னவோ? அதற்கு ஈஸ்வர் தடங்கலாக இருந்திருப்பான் என்பது வேறு விஷயம். அதையும் மீறி சேர்ந்திருந்தால் அவர்களது வாழ்வு எந்த சிக்கலுமின்றி பயணத்திற்கும். அழகான பூந்தோட்டமாக இருந்திருக்கும்.

ஆனால் ‘அவர்களின் பயணம் சிக்கலோடு தான்’ என விதி இருக்கும்போது, மனிதனால் மாற்றி அமைக்க முடியுமா?

†††††

நிச்சயதார்த்த நிகழ்வில் வைத்து, அம்முவை அவர்கள் பார்த்த பார்வையில் வஞ்சம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், அவர்கள் கிளம்பிய செய்தியறிந்த கார்த்திக், மிகவும் மகிழ்ச்சியுடன் அம்முவை காண சென்றபோதுதான், ஈஸ்வர் அம்மன் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை அம்முவுக்கு அணிவித்தது. 

அந்தக் காட்சியைக் கண்டு மனமுடைந்த கார்த்திக் சில மணிநேரங்கள் தன்னை மறந்தான். அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த கோவிலில் இருந்து, ஈஸ்வரை தினமும் சந்திக்கும் ஆற்றங்கரையை அடைந்திருந்தாள் அம்மு.’ஏன் அங்கு சென்றாள்?’ என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

சிறிது நேரத்திற்குப் பின் தன்னிலை அடைந்த கார்த்திக், ‘அம்மு இருக்கிறாளா?’ என பார்க்க, அவளை காணவில்லை. ‘வீட்டுக்கு சென்று இருப்பாள்’ என முடிவு செய்து, அவனும் கிளம்பி இருந்தான். ஒருவேளை அவள் வீட்டுக்கு செல்லவில்லை என்பது தெரிந்திருந்தால், அவளை தேடி சென்று, பேராபத்திலிருந்து பெண்ணை காத்திருப்பான் நல்ல மனிதனாக.

‘ஊரை விட்டு வெளியேறுவது போல்,’ ஈஸ்வரிடம் போக்குகாட்டிய அவனது நண்பர்கள் இருவரும், மீண்டும் அந்த கிராமத்தை அடைந்தபோது, ஈஸ்வர் அம்முவிற்கு மஞ்சள் கயிறை கட்டி கொண்டிருந்தான். இந்த காட்சியை கண்ட அவர்களும் சில நொடிகள் ஸ்தம்பித்தனர். 

அவர்கள் மீண்டும் வந்தது கார்த்திக், ஈஸ்வர் என யாருக்கும் தெரியாமல் போனது தான் விதியின் விளையாட்டு. இந்த நிமிடத்திலிருந்து, அவர்கள் அனைவரின் தலையெழுத்தையும் மாற்றி அமைத்தது, விதி செய்த சதியன்றி வேறில்லை.

†††††

நீண்ட நேரமாக அம்முவை காணாது தேடிக் கொண்டிருந்தாள் பிருந்தா. மாலை சூரியன் மறையும் நேரம், ​​சிறிது தூரத்தில் ஆற்றங்கரையில் அரை இருளில் அம்மு அமர்ந்திருப்பதைப் கண்டாள். அவளை அடைய சில அடி தூரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அந்த கயவர்களிடம் மாட்டிக் கொண்டாள் பிந்து. 

“உன்ன லைட்டா உரசினதுக்கே, உன் தங்கச்சி என்ன அறைஞ்சால்ல, இப்ப முழுசா உன்னை தொடரேன், என்ன பண்ணுறான்னு பார்க்கிறேன்?” வன்மமாக கூறிய அந்த ஓநாய் பிந்துவின் கரத்தைப் பற்றி இழுத்தது.

அதில் பயந்து போய் அலறிய பிந்துவின் குரலை கேட்டதும், தன்னிலை அடைந்து அவர்களை நோக்கி ஓடிய அம்மு, அந்த கயவனை தள்ளிவிட்டாள். பிந்துவின் கரம் அவனிடமிருந்து விடுபட்டது. அவளை இழுத்து கொண்டு ஓடத் துவங்கிய, அம்முவின் கரத்தை அந்த இன்னொரு கயவன் பற்றியிருந்தான்.

“பிந்து இந்த இடத்துல நீக்காத. சீக்கிரம் போய் ஊர்ல யாரையாவது கூட்டிட்டு வா.” என பிந்துவின் கரத்தை விடுவித்தாள். அம்முவை அவர்களிடம் தனியே விட்டு செல்ல பயந்த பிந்து தயங்கி நிற்க,”நிக்காத! ஓடு! இவங்க கிட்ட மாட்டிக்காத” என பிந்துவை காப்பாற்றி இவள் மாட்டிக் கொண்டாள். 

‘எங்கே ஊரிலிருந்து ஆட்கள் வந்து விடுவார்களோ?’ என பயந்த அந்த கயவர்கள், தங்களிடம் தயாராக வைத்திருந்த மயக்கமருந்தின் உதவியுடன், இவளை மயக்கமடைய வைத்து, அவளை தூக்கி கொண்டு அந்த இடத்தை காலி செய்தார்கள்.

ஊரிலிருந்து வந்த யாராலும் அந்த கயவர்களை கண்டறிய முடியவில்லை. நிச்சய தினத்தன்று தலையை குனிந்தே இருந்த பிந்து, அந்த கயவர்களை பார்க்கவில்லை என்பது இங்கு கொடுமையான விஷயம். ஒருவேளை அவர்களை பார்த்திருந்தாள் அடையாளம் காட்டியிருப்பாள். உடனே ஈஸ்வரை தொடர்புகொண்டு அம்முவை காத்திருக்கலாம். 

மனமுடைந்திருந்த கார்த்திக்கும், பக்கத்து ஊரில் இருந்த தன் இல்லத்திற்கு சென்று விட்டதால், அம்மு காணாமல் போனது மறுநாள் தான் அவனை அடைந்தது. ஆனால் அதற்கு முன்பே, அம்முவின் இல்லத்தில் அனைத்தும் கை மீறி இருந்தது. ஈஸ்வரை தொடர்பு கொண்டு, இவர்களை பற்றி விசாரிக்கலாம் என்றால், அவன் சென்னையை அடைந்த உடனேயே வெளிநாடு பறந்து இருந்தான். அந்த வழியும் அடைபட்டு போயிருந்தது.

திருவிழாவிற்கு பலரும் அங்கு வந்து சென்று கொண்டிருந்ததால், ‘அம்முவை கடத்தி சென்றது யார்?’ என்பது யாருக்கும் தெரியாமலே போனது. ‘அது ஈஸ்வரின் நண்பர்களா?’ என்ற சந்தேகம் கார்த்திக்கு இருந்தது. அதை நிரூபிக்க அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்களை அடையாளம் காட்டக்கூடிய பிந்து தன்னிலையில் இல்லை.

†††††

அம்முவை கடத்தி, அவர்களுக்கு சொந்தமாக இருந்த ஒரு காட்டு பங்களாவிற்கு கொண்டு சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த பெண் கண்டது, போதையிலிருந்த அந்த இரு நாய்களையும். 

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அவளது கை கால்கள் கட்டப்படவில்லை. பெண் தானே என்ற அலட்சியமாக இருக்கலாம்; தாங்கள் இருவர், தங்களை மீறி செல்ல முடியாது என்ற கர்வமாக இருக்கலாம்; பல பெண்களை அடக்கிய தங்களால் இவளை அடக்க முடியாதா? என்ற ஆணவமாக இருக்கலாம்;

“டேய் எதுக்குடா என்னை தூக்கிட்டு வந்தீங்க? கதவை திறந்து விடுங்கடா பொருக்கிங்களா” என்று சத்தமிட்டாள் அம்மு.

“இப்பதான் ஒருத்தனை பொருக்கின்னு சொல்லி, கழுத்தில மஞ்சள்கயிறு வாங்கியிருக்க. அடுத்து எங்களையா? சேதாரம் உனக்குதான்.” என்றான் வஞ்சகமாக.

தன் கழுத்திலிருந்த தாலியை குனிந்து பார்த்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்வுமில்லை. “எங்களுக்கு எப்படி தெரியும்ன்னு பாக்குறியா? நாங்க தான் அங்க இருந்தோமே.” என எக்காளமிட்டு சிரித்தனர்.

அவளது அசைவில்லா பார்வையை பார்த்துக்கொண்டே,”எப்பயும் எங்ககிட்ட  வர பொண்ணுங்களை நாங்கள் ஷேர் பண்ணுவோம். உன்கிட்ட கொஞ்ச வித்தியாசம். அவன் தாலி கட்டியிருக்கான்.” என இடைவெளிவிட்டான்.

அம்முக்கு பலத்த அதிர்ச்சி,’இவன் என்ன சொல்கிறான்? ஈஸ்வரனை பெண் பித்தன் என்று சொல்கிறான்னா? அப்ப பிந்துவின் வாழ்வு?’ என இப்போதும் பிந்துக்காகவே துடித்தது அந்த பேதை மனது. 

அவளது அதிர்ந்த முகத்தை ரசித்துக்கொண்டே,”நாங்கள் முதலிரவை கொண்டாடப் போறோம்.” என வன்மமாக உரைத்தது அந்த ஓநாய். பெண்ணின் காலடியில் பூமி நழுவியது. 

அவளை நெருங்கிய ஒருவன்,”என்ன இருந்தாலும் என்னோட ஃப்ரெண்ட் உன் கழுத்தில் மஞ்சகயிறு கட்டி இருக்கான். அதோட உன்னை தொட மனசு உறுத்துது. அதனால என்ன பண்ணலாம்?” யோசிப்பதுபோல நடித்து,”அதை கழட்டிடலாம்” என உரைத்தவன், ஈவு இரக்கமின்றி அவள் சுதாரிக்குமுன் கழுத்தில் இருந்த கயிறை அறுத்தெறிந்தான். 

அம்முவின் கழுத்திலேறிய மஞ்சள்கயிறு, சிறிது நேரத்திலேயே அந்த கழுத்திலிருந்து இறங்கியிருந்தது. “உன்கிட்ட பேசி பேசியே எனக்கு போதை இறங்கிருச்சு, இன்னும் கொஞ்சம் ஏத்திட்டு வரேன்” என அங்கிருந்து அகன்றான்.

ஈஸ்வரை பற்றி அறிந்த உண்மையில் பெண் திகைத்து போயிருந்தாள். கூடவே அவன் தாலியை அறுத்தெறியவும் உணர்வுகள் அனைத்தும் மரத்து போயிருந்தது. மனம் பலமிழந்திருந்ததால் அவர்களிடம் போராடவேண்டும் என்பது புத்திக்கு உரைக்காமல் போனது.

“என் கன்னத்தில அறைஞ்சில? அதுக்கான தண்டனை” என உளறிக்கொண்டே வந்த அடுத்தவன், அந்த சிறு மலரை இழுத்து அணைத்து தன் வஞ்சத்தை அவள் உடலில் காட்டியிருந்தான். அவளை விட்டு அவன் விலகும்போது பெண் அரை உயிராகியிருந்தாள்.

‘தனக்கு என்ன நடக்குது?’ என்பது புரியும்முன் அனைத்தும் கைமீறியிருந்தது. காதல், கணவன் மனைவி உறவு, தாம்பத்தியம் என எதைப் பற்றியும் தெரியாத அந்த சிறு மலருக்கு, வலிக்க வலிக்க காமப் பாடம் நடத்தினான் அந்த காமுகன். 

அவளது கழுத்து, மார்பு, உதடு என அனைத்திலும் அவனது பற்தடங்கள் பதிந்து, அவள் உடல் முழுதும் கண்றிபோயிருந்தது. கண்கொண்டு காணவே முடியாத அலங்கோல காட்சி. அந்த பறவையின் சிறகுகளை சிதில் சிதிலாக வெட்டி வீசி இருந்தான்.

தன் தேவை முடியவும், அவளை விட்டு விலகி,”உன்கிட்ட என்னவோ இருக்கு. அதுதான் ருத்ரா, யாருக்கும் தெரியாமல் தாலி கட்டி உன்னை கூடவே வச்சு அனுபவிக்க முடிவு பண்ணிட்டான். தினமும் ஒரு பொண்ணை அனுபவிச்ச, என்னாலயே உன் உடம்பை பிரிய முடியலைன்னா பார்த்துக்கோயேன்.” என்றான் மயக்கமேறிய குரலில்.”கொஞ்சம் பொறு அடுத்த ரவுண்டுக்கு வரேன்.” என்றவனுக்கு, அவளிடமிருந்து விலக மனமில்லாமல் போனது.

அதனால் ஏற்கனவே இவனால் காயப்பட்ட, அவளது மென்மையான இதழை மறுபடியும் காயப்படுத்த தொடங்கி, மீண்டும் அவளை முழுதாக ஆட்கொண்டான். பிறகே திருப்தியோடு விலகி, அடுத்த அறைக்குள் நுழைந்து மாது போதையுடன் மது போதையை ஏற்றி மயக்கத்தில் ஆழ்ந்தான்.

இங்கு பெண்ணோ உயிர் இருந்தும் வெறும் கூடாக மாறி இருந்தாள். அம்மு என்ற அப்பாவி பெண் மனதலவில் மரணித்திருந்தாள்.

தாலியை கழற்றி எறிந்த கயவன் உள்ளே நுழைந்தான். வாடி வதங்கி, நிர்வானமாக அரை உயிராக கிடந்த அந்த சிறு மலரை கண்டு இரக்கம் வராத அந்த காமுகன், அவளிடம் தன் தேவையைத் தீர்க்க அவள் மீது படர்ந்தான். எங்கிருந்துதான் அவ்வளவு பலம் வந்ததோ பெண்ணவளுக்கு? அவனை பிடித்து ஒரே தள்ளாக தள்ளியிருந்தாள். அவள் தள்ளிய வேகத்தில் கீழே விழுந்தான்.

“டேய்! நீங்க என்ன பண்ணுனாலும், அழுதுட்டு போறவன்னு நினைச்சியா? நான் அமிர்தாடா! உங்களை சும்மா விடுவேன்னு கனவுலகூட நினைச்சுடாத?” என பொங்கி எழுந்தாள். சாந்தமாக இருக்கும் அம்மனின் தோற்றத்துக்கு எதிராக பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்.

அவனை அடிக்க ஏதுவாக எதுவும் கிடைக்குமா? என தேட, அங்கு ஒன்றும் கிடைக்காமல் போனது. அவளது நல்ல நேரம், அவள் கண்களில் பட்டது அவன் கழட்டி எறிந்திருந்த, அந்த மஞ்சள் கயிறு. அதை கைகளில் எடுத்த பெண், சிறிதும் யோசிக்காமல் அவன் கழுத்தில் வைத்து இறுக்கி, அவனை கொன்றிருந்தாள்.

அம்மன் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு, அம்முவின் கழுத்தில் ஏறி, சிறுது நேரத்திலேயே இறங்கிய அந்த கயிற், சுருக்கு கயிறாக மாறி, அந்த கொடிய அரக்கனை வதம் செய்திருந்தது. பல பெண்களின் மானத்தோடு விளையாடிய மனித மிருகத்துக்கு, இந்த சிறு பெண்ணின் கரத்தினால் தண்டனை வழங்கியது இறைவன் வகுத்த விதி.

சிதறி கிடந்த தன் கிழிந்த ஆடையை அவசரமாக அணிந்தவள், அவன் இறந்து போனது கூட தெரியாமல் அந்த பங்களாவிலிருந்து வெளியேறினாள். புள்ளிமானாய் துள்ளி திரிந்தவள், இப்போது மருண்ட மானாய், தன்னந்தனியாக அந்த காட்டில் ஓடினாள்.

தூரத்திலிருந்து வெளிச்சம் வர, அதை நோக்கி அவளது கால்கள் வேகமெடுத்தது. அவள் செல்லும் முன் அந்த கார் அவளை கடந்திருந்தது. பெண் அங்கேயே மயங்கி சரிந்தாள்.

அந்த காரின் பின் இருக்கையில் இருந்த ரிஷி, ஏதோ உள்ளுணர்வு உறுத்த, திரும்பியவன் பெண்ணை கண்டுவிட்டான். “அண்ணா காரை நிறுத்துங்க” என பதறினான்.

கார் நிற்கவும் தான் கழட்டி வைத்திருந்த ஓவர் கோட்டை எடுத்துக்கொண்டு, “இங்கேயே வெயிட் பண்ணுங்க” என டிரைவரையும் கிரிதரணையும் அங்கேயே காத்திருக்க வைத்து, பெண்ணை நெருங்கினான் ரிஷி வர்மா. ‘அவளை இந்த கோலத்தில், தன்னுடன் வந்தவர்களும் பார்க்க கூடாது’ என்ற என்னத்தோடு, அந்த ஓவர் கோர்ட்டை அவளுக்கு அணிவித்திருந்தான்.

சகோதரியின் நிச்சயத்திற்காக ஆசை, ஆசையாக பாவாடை தாவணி அணிந்திருந்தாள். அவளது திருமண உடை என்று சொல்ல வேண்டுமோ? இப்போது தாவணியின்றி, ரவிக்கை கிழிந்து அவளது வனப்புகள் பிறருக்கு காட்சியாக, யாரும் காண கூடாத காட்சியில் மயங்கி கிடந்தாள்.

ரிஷி அவளை தன் கரத்தில் ஏந்தி கொண்டான். அந்த நிமிடத்திலிருந்து அம்முவுக்கு அனைத்துமாகி போனான் ரிஷி வர்மா. தனக்குத் தெரிந்த மருத்துவரை வீட்டிற்கே வரவைத்து வைத்தியம் பார்த்து, அவளின் நிலையை தெரிந்து கொண்டான். யார் என்றே தெரியாத அவளுக்காக அவன் மனதில் இரத்த கண்ணீர் வடித்தான்.

அன்று முதல் இன்று வரை அவளை காத்து, உதவி வருகிறான் அந்த நல்ல நண்பன். சிறிது நாட்களில் வருவின் மிருவாவும், மிருவின் வருவாகவும் மாறினார்கள். 

மயக்கம் தெளிந்த பின் ஆண்களைக் கண்டாலே பயந்து நடுங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றினான். சிறிது இயல்பு நிலைக்கு திரும்பிய பின், அவளின் பூர்வீகத்தை தெரிந்து, அம்முவை பற்றிய தகவலை பெரிய வீட்டிற்கு தெரிவிக்கும்போது ஒரு மாதம் கடந்திருந்தது.

அங்கு அவர்களுக்கு பேரிடியாக கிடைத்த செய்தி,’அம்முவை பற்றிய கவலையிலேயே, வேலை செய்த அவளின் அன்னை தீக்கிரையானார். அவர் உயிருக்கு போராடும் காட்சியை கண்ட பிந்து, பித்து பிடித்த நிலையில் இருக்கிறாள்.’

ஒருநாள் அம்முவை பசுஞ்சோலைக்கு அழைத்துச் சென்ற ரிஷி, கார்த்திக், ரேகா, தாத்தா, பாட்டியிடம் அம்முவின் நிலையை விளக்கி, அம்மு, பிந்து இருவரையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான். அவர்கள் சென்றது இரவு நேரம் என்பதால், ஊரில் உள்ள யாருக்கும் அவள் வந்தது தெரியாமல் போனது.

திடீரென ஒரு நாள்,”நான் அம்மு இல்லை. அவ செத்து  போய்ட்டா. எனக்கு வேற பெயர் வை” என அடம்பிடித்து நின்றாள். வேறு வழியின்றி ரிஷிதான் அவளுக்கு மித்ரா என பெயர் சூட்டினான்.

இதில் அதிக துடிப்பு யாருக்கு என பிரித்து அறிய முடியாது. ஒவ்வொரு நாளும் வேதனையில் துடிக்கும் அம்முவை கண்டு ரிஷி கண்ணீர் வடித்தான். கார்த்தி ஒரு பக்கம் ‘தான் தவறு செய்துவிட்டோம்?’ என மருகினான். பிந்து ‘தன்னால் தான்’ என பித்து பிடித்திருந்தாள். 

இதற்கிடையில் அந்தக் கயவர்களை பற்றி விசாரிக்க, கிடைத்த தகவல், ஒருவன் இறந்துவிட்டான். அவனது இறப்பு செய்தி விபத்தாக மாற்றி காட்டப்பட்டது, அவனது பெற்றோர்களால். 

சில மாதங்களில் அம்மு, தன் வேதனை, கண்ணீர் அனைத்தையும் தன்னுள் அடக்கி, அவனை பழிவாங்க வேண்டும் என திட்டம் வகுக்க தொடங்கினாள். 

தன் தாலியை பறித்தவனுக்கு மரண தண்டனை வழங்கி இருந்தாள் அம்மு. தன் உடலை திருடி, உயிரோடு வெறுங்கூடாக  அலையவிட்டவனுக்கு, சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி கொடுத்து பழிவாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாள் மித்ராலினி.

†††††

அனைத்தையும் கூறி முடித்த பெண்,”இதுதான் நடந்தது. உன் நண்பர்களால் என் அம்மாவை இழந்தேன், உயிருடன் பிந்துவை தொலைத்து நிற்கிறேன், இது இரண்டிற்கும் மேலாக என் கற்பை பறிகொடுத்தேன்.”

அவள் கூறிய அனைத்தையும் கேட்ட ஈஸ்வர் பேச்சற்று போனான். கார்த்திக் தன்னிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் இப்பொழுது புரிந்தது. 

‘என்னால் அவள் சொன்னதையே தாங்க முடியலையே. அத்தனை வேதனையை எப்படி என் அம்மு தாங்கிக்கிட்டா?’ மனம் பரிதவித்தது. அவளை இறுக்கி அணைத்தான்.

“எப்படி பேபி இதை தாங்குன? என்னால் முடியலையே. மனசு ரொம்ப வலிக்குது.” என தவித்தான்.

“என் வேதனையை, தன் வேதனையா சுமந்து ரிஷி என்கூட நின்னான். ஒவ்வொரு நிமிஷமும், நான் அழுதா அழுது, சிரிச்சா சிரிச்சு என் அத்தனை கஷ்டத்தையும், என்னைவிட அதிகமா அவன் அனுபவிச்சான். இப்படி ஒருத்தன் துணை இருந்தா எவ்வளவு கஷ்டத்தை வேணாலும் தாங்கலாம்.” என சிறிது இடைவேளை விட்டவள்,”என்னை உள்ளங்கையில் வைச்சு தாங்கியவனுக்கு, நீ கொடுத்த பரிசு, விபத்து.” என்றாள் கசந்த முறுவலோடு. 

“சாரி பேபி. நான் அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.” குரல் இறங்கி ஒலித்தது.

அவனை தீர்க்கமாக பார்த்தவள், எதுவும் சொல்லாமல்,”என்னை என் வரு கிட்ட விட்டுடு. இனி எங்கள் வாழ்க்கையில் நீ தலையிடாத”

ருத்ரேஸ்வரன் மனதில் அடி வாங்கினான். ‘ரிஷி வர்மா செய்த உதவி கடலிலும் பெரிது. இல்லை என்று சொல்வதற்கில்லை. அதற்காக என்னவளை அவனுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா? முடியாது! அவளை எதுக்காகவும், யாருக்காகவும் விடவே மாட்டேன்’ என உறுதியாக முடிவெடுத்தான் ருத்ரேஸ்வரன்.

சிறிது மௌனத்திற்கு பின்,”என்னை மன்னிச்சிடு அம்மு, என்னால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டமும்” மனதார மன்னிப்பு கோரினான்.

“நான் அம்மு இல்ல. அம்மு செத்துப்போய் நாலு வருஷமாச்சு. நான் மித்ராலினி. கால் மீ மித்ரா.” என்றாள் பெருஞ் சீற்றத்தோடு.

“ஓகே கூல் டவுன் பேபி. உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கினவன நான் சும்மா விடமாட்டேன்” கோபத்தில் கர்ஜித்தான்.

“இஸ் இட்?” என்றாள் கோணல் சிரிப்புடன்.

ருத்ரேஸ்வரனின் கண்கள் இடுங்கியது.

“இட்ஸ் டூ லேட் ருத்ரா? ஆல்ரெடி அவனை நாங்க மார்க் பண்ணியாச்சு.” என்றாள் கர்ஜனையோடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!