💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 19
உன்னை என்னவள் என்பதை எப்படி இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன்… என் மனம் என்ன என்பதை அறியக் காதலில் கரைகண்ட மகாகவியின் உதவி தேவைப் படுகிறது என்ன செய்ய…
அங்கே தோட்டத்தின் ஒரு பகுதியில் சுடரொளி களியாட்டம்(campfire) தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இவர்கள் வரவும் முருகன் நெருப்பை பற்ற வைத்தார்.
அது எஸ்டேட் மலைப்பகுதி எனவே இரவில் பூச்சி போட்டு வர வாய்ப்பு இருப்பதால் தோட்டம் முழுவதும் மின்விளக்கு இருக்கவே தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெளிச்சமாய் பகல் போல் இருந்தது.
தியாக்கு எப்பொழுதுமே தோட்டம் விருப்பமான ஒரு இடம். செடி கொடிகளோடு நண்பர்கள் போல் உரையாடுவாள் அவள்.
இங்கு வந்த போது இந்த தோட்டத்தின் அழகு அவளை கவர்ந்திருக்க, அங்கே இவ்வாறு அமைத்து இருப்பது அவளை துள்ள வைத்ததில் என்ன ஆச்சரியம்.
“செம அண்ணா”, முருகனைப் பாராட்டினாள்.
அதில் நம் நாயகன் கடுப்பானான் பின்னே அவளுக்கு பிடிக்கும் என இவன் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய பாராட்டு முருகனுக்கு போய்விட்டதே.
“ஐயோ நான் ஒன்னும் பண்ணலங்கம்மா எல்லாம் நம்ம ஷ்யாம் தம்பி தான் பண்ணுச்சு நான் சும்மா ஒத்தாசைக்கு இருந்தேன் அவ்வளவுதான்.”
“ஷ்யாம் இது உங்க ஐடியாவா”, அவனைப் பார்த்து ஆச்சரியமாய் வினவ,
“ம்…”, என்றான் அவள் கண்களை பார்த்துக் கொண்டே,
“செம எனக்கு இது ரொம்ப பிடிச்சி இருக்கு”, என அவள் குதூகளிக்க,
“அப்போ வா உட்காரு. எல்லாரும் வாங்க”, என அனைவரையும் அமரச் சொன்னான்.
அனைவரும் நெருப்பை சுற்றி அமர்ந்தனர்.
ராஜிற்கு வர்ஷாவின் அருகே அமரத்தான் ஆசை இருந்தாலும் அவள் முறைப்பை வாங்க தயாராக இல்லை. எனவே தியா, அருண் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டான்
அருணின் மறுபுறம் மித்து அதை தொடர்ந்து வர்ஷா, லட்சுமி, சந்திரன், ஷ்யாம், தியா அமர்ந்திருந்தார்கள்.
ஷ்யாம் தியா அருகில் பிளான் செய்து அமர்ந்திருந்தான்.
முருகன் வள்ளி சற்று தள்ளி அமர்ந்துக் கொள்ள ஷ்யாம் அவர்களை வற்புறுத்தி அவர்களுடன் அமர்த்திக் கொண்டான்.
“ஏன்டா இப்படி பேய் வாக்கிங் போற நேரத்துல இங்க ஒன்னு கொட்டி இருக்கியே எதுக்கு?”, என அருண் வினவ,
“அத உன் ஆளு சொல்லும் கேளு”, என மித்துவை காட்டினான் ஷ்யாம்.
“வணக்கம் மக்களே தியாவின் பிறந்தநாளையொட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பட்டையக் கிளப்பப் போறோம்”, எனத் தொகுப்பாளர் போல் கூறினாள் மித்து.
அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்தனர்.
“முதல்ல நம்ம ஆஸ்தான கேமான பாஸிங் தி பால் வித் மியூசிக்(passing ball with music) தான் ஆட போறோம். இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான் இருந்தாலும் என் கடமை நானும் ஒரு முறை ரூல்ஸ் சொல்றேன்.”
“நம்ம முருகன் அண்ணா மியூசிக் ஓடவிட்ட உடனே பால் பாஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணனும். மியூசிக் ஸ்டாப் ஆகும்போது யார் கையில பால் இருக்கோ அவங்களுக்கு பால் பாஸ் பண்ணவங்க ஏதாவது டாஸ்க் கொடுக்கணும் ஓகேவா எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சா”
எல்லோரும் கட்டைவிரலை உயர்த்தி புரிந்ததற்கு அறிகுறியாய் தலையாட்டினர்.
“அண்ணா உங்களுக்கும் புரிஞ்சிச்சா”, என முருகனைக் கேட்க,
“புரிந்தது மா”, என்றான் தலையாட்டி.
“சரி அண்ணா ஆராமிக்கலாம்.”, என்றவுடன்,
முருகன் மியூசிக் பிளேயரை அழுத்த பாடல் துவங்கியது.
பால் கை மாறிக்கொண்டே செல்ல, லட்சு ஆண்டியிடம் வரும் பொழுது பாடல் நின்றது.
மித்து, ”லட்சுமி ஆன்ட்டிக்கு பால் பாஸ் பண்ணுவது நம்ம தான் டாஸ் கொடுக்கணும்.”
“நானா என்ன டாஸ்க் கொடுக்க”, என்ன வர்ஷு யோசிக்க,
“வர்ஷு என்னதான் இருந்தாலும் வருங்கால மாமியார் கொஞ்சம் பாத்து கொடு”, என அருண் வம்பிழுக்க,
அருண் சொன்னதில் காண்டாகி அருணை பார்க்க அதே நேரம்,
“டேய் உன் திருவாயமூடிக்கிட்டு கொஞ்சம் சும்மா இருக்கியா”, என நறுக்கென கிள்ளிவைத்தான்.
ராஜ் கிள்ளியத்தை பார்க்கவும் அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது.
ராஜிற்கு அதுவே போதுமானதாக இருக்க, ‘அப்பாடி தப்பிச்சோம்டா சாமி’, என பெருமூச்சி விட்டான்.
“ஆன்ட்டி ஒரு பாட்டு பாடுறீங்களா”, எனக் கோரிக்கையாய் லட்சுமிடம் கேட்டாள்.
லட்சுமி தன் தொண்டையை செருமிக் கொண்டு பாடத் தயாரானார்.
🎼உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி 🎼
ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்ட சந்திரனைப் பார்த்துக் கொண்டே பாடினார்
இருவரின் பார்வை கோடும் மற்றவரின் கைத்தட்டலில் அறுபட்டது.
“வாவ் ஆன்ட்டி நீங்க இவ்ளோ சூப்பரா பாடுவீங்களா”, என லட்சுமியை கட்டிக் கொண்டாள் வர்ஷா.
அனைவரும் அவரை பாராட்டி முடியவும் மீண்டும் பாடல் ஒலித்தது. இப்பொழுது மியூசிக் நிற்கும் நேரம் பால் ராஜின் கையிலிருந்தது.
தியா தான் தன் அண்ணனுக்கு டாஸ் கொடுக்க வேண்டும் அவள் அவனை ஒரு கவிதைச் சொல்லச் சொன்னாள்.
*தனிமை என்னும் கடலில் தத்தளித்தேன்…
தோழமை என்னும் தோள் கிடைக்கவே சிறிது நிதானித்தேன்…
இப்பொழுது குடும்பம் என்னும் படகில் உயிர்ப்பித்தும் கரை சேர முடியாமல் தவிக்கின்றேன்…
கரை சேர்ந்து முடிதாய் உயிர்த்தெழுவேனா…
விடை காலத்தின் கையில்…*
அனைவரும் கவிதை ரசிக்க, இளைஞர்களுக்கு கவிதைகளின் அர்த்தம் விளங்க வர்ஷாவை பார்த்தார்கள். அவளுக்கும் மனம் பிசைய ராஜை பார்த்தாள்.
அவன் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் சட்டெனத் தலை குனிந்தாள்.
மீண்டும் பால் ஒவ்வொரு கையாக தன் பயணத்தை தொடர்ந்தது இப்பொழுது அது தன் பயண களைப்பால் தியாவின் கைகளில் தவழ்ந்தது.
தியாக்கு ஷியாம் தான் டாஸ் கொடுக்க வேண்டும் மித்து ஒருவரை ஒருவர் அர்த்தம் புரிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.
“உனக்கு டான்ஸ் ஓகேவா”, என பொறுமையாக அவளிடம் கேட்டுவிட்டு அவள் சம்மதிக்கவும் அனைவருக்கும் கேட்கும் படி கூறினான்.
அவள் பரதம் பயின்றவள் எனவே ஷாலினி முன்னே படர விட்டு இடுப்பை சுற்றி கட்டி முதலில் பூமித்தாயை வணங்கி நடனத்தை துவங்கினாள்.
🎼சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ🎼
அவள் கண்கள் சுழல…ஷ்யாம் தனக்குள் பதில் அளித்தான்
‘உன் கண்கள் குளிர் இருக்கும் சந்திரன் தான் ஆனால் அந்த கண்ணில் இருந்து பாயும் ஒளிக்கு சூரியனையும் ஒப்பிடலாம்’
🎼வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ🎼
இந்த வரிகளுக்கு அவள் கண்களை சுட்டி காட்டி பாவனை செய்ய,
‘அந்த கரிய வழிகளில் தானே சிக்கித் தவிக்கின்றேன்’
🎼பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ🎼
‘நீ புடவை கட்டி பாக்கலையே பாக்கணும் போல இருக்கு’, மானசீகமாய் ஒரு வேண்டுதல் விடுதான்.
🎼சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்🎼
‘உண்மைதான் உன்னோட புன்னகை என்னை ரொம்ப மயக்குது’
🎼நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ🎼
‘இன்று தான் அந்த இனிமையான குரலை நான் கேட்டேன்…எப்பா தேன் குரல் தியாக்குட்டி உனக்கு’
🎼வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்🎼
பொருள் : பேரழகியே கண்ணம்மா உன் அழகில் மீளா காதல் கொண்டேன்.
இந்த வரிகளில் அவன் அவளையை பார்த்திருந்தான்.
🎼சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று🎼
பாரதி தன் காதலியிடம் கேட்கிறார் வரைமுறைகள் சொல்லி கரை கடந்த என் காதலுக்கு ஏன் தடை விதிக்கிறாய் கண்ணம்மா? பெரியவர்கள் சம்மதித்த பின் திருமண சடங்குகள் வைத்துக் கொள்வோம். இப்பொழுது என் முத்தத்தை உன் கன்னத்தில் ஏந்திக்கொள் என்கிறார்.
முன் வரிகளில் உறைந்தவன் பின் வந்த வரிகளில் மொத்தமாய் சிலையானான்.
தியாவின் ஆட்டம் முடியவும் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரிக்க மீண்டும் விளையாட்டு தொடர்ந்தது.
அந்த விளையாட்டு முடியும் வரையும் ஷ்யாம் என்னும் சிலைக்கு உயிர் வரவில்லை.
ஆட்டம் பாட்டம் முடிந்து அனைவரும் எழ, முருகன் ஷ்யாமிடம் ஞாபகப் படுத்த அப்போது தான் சிறிது உணர்வு வந்து,
“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க இங்க இருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருநெல்லி கோவில்னு ஒன்னு இருக்கு அங்க போகலாம்.”
அதுவரை கேளிக்கையில் தெரியாத தூக்கம் இப்பொழுது கண்களை கெஞ்ச, அனைவரும் தலையசைத்து அவரவர் அறை நோக்கி சென்றனர்.
செல்லும் தியவையே ஷ்யாமின் கண்கள் சிறைபிடித்தது.
தன் அறைக்கு வந்த ஷ்யாம் சாளரத்தின் வழி நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
அவன் காதுகளில் ஹெட்செட் அதில் தியா ஆடிய அதே பாடல் ஒலித்துக் கொண்டிருக்க இப்பொழுதும் ‘மருவ காதல் கொண்டேன்’, என்னும் வரிகளும் அதன் பின்வந்த வரிகளும் அவன் மனதை பிசைந்தது.
‘தியாவை கல்யாணம் செய்து அவளோடு ஒரு அழகிய வாழ்வை வாழத் தான் என் மனசு ஆசை படுத்து. ஆமா உன்மையாவே அவகிட்ட நான் மீளா காதலில் தான் இருக்கேன்’
‘நான்…நான்…தியாவ லவ் பண்றேன்’, அவன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு இதழ்களில் புன்னகைக்கு என்னிடம் பஞ்சமில்லை என நிரூபித்தது.
‘இது ஏதோ ஒரு ஈர்ப்புனு நினைச்சேன் இப்பதான் அந்த ஈர்ப்பு காதல் நாளனு இந்த மரமண்டைக்கு புரிஞ்சிருக்குது தியாக்குட்டி’
“தியாக்குட்டி ஐ லவ் யூ ஐ வாண்ட் டு லிவ் வித் யூ”, அவன் உதடுகள் முணுமுணுத்தது.
காலை விடியலில் தோட்டம் நோக்கிச் சென்றான் ஷ்யாம். தன் மனதை உணர்ந்தவன் சிறிது நேரம் தான் உறங்கினான். அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”, என்ற தியாவின் குரல் கேட்கவும்,
‘என்னடா இது காலையிலேயே தியா குட்டி நம்மள பாராட்டுறா’, என எண்ணிக்கொண்டே திரும்பியவன் கண்டது தியா ரோஜா செடியை பார்த்து பேசியதை தான்.
‘அதான பார்த்தேன் நம்பகிட்ட எப்போ இப்படி பேசுவாளோ ம்…’
அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான். அவன் மனம் உணர்ந்த பின் அவள் அவனின் கண்களுக்கு புதிய பரிமாணத்தில் தெரிந்தாள்.
அதேசமயம் அரவம் கேட்டு திரும்பிய தியாவின் உடை ரோஜா செடியின் முள்ளில் மாட்ட அதைக் கவனித்த ஷ்யாம் அவள் அருகே வந்து அதை லாவகமாய் எடுத்தான்.
“பாத்து வரக் கூடாதா”, என மென்மையா அவளை வினவ,
“அதுக்கு நான் தள்ளி போறது பிடிக்கல போல அதான் டிரஸ் புடிச்சு நிறுத்தி இருக்கு”, என்றாள் அவள்.
“என்ன…”, இவன் புரியாமல் வினவ,
“அது அழகா இருக்குன்னு பாராட்டு பத்திரம் வாசிச்சேன் இல்ல அதான் அதுக்கு என்ன ரொம்ப பிடிச்சிருச்சு போல”, எனவும்,
அந்த ரோஜாவை திரும்பிப் பார்த்து ‘நீ எல்லாம் எனக்கு போட்டியா’, என்ன மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டான்.
இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.
“ச்ச மறந்துட்டேன் பாருங்க குட் மார்னிங்”
“வெரி குட் மார்னிங் அண்ட் ஹாப்பி பர்த்டே”
“தேங்க்யூ ஷ்யாம் விஷஸ்க்கு மட்டுமில்ல நேத்து நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் அதுக்கும் தான்”
“ஆமா கேட்கணும்னு நினைச்சேன் நீங்க எல்லாம் எப்படி இந்த இடத்துல”
அவள் கேட்டுக்கொண்டே இருக்கும் போது வள்ளி, ‘இன்று என்ன சமைக்கவென’, வந்து கேட்க மேலும் குழம்பினாள்.
“அவங்க எதுக்கு உங்க கிட்ட கேக்குறாங்க”, என்ன பேசிக் கொண்டே கேட்டின் அருகே வந்திருந்தனர்.
அவன் ஒரு இடத்தை சுட்டிக்காட்ட, அதில் ‘கே.ஆர் எஸ்டேட் பங்களா’ என்னும் எழுத்துக்கள் மின்னுவதை கண்டாள்.
“அப்போ…இது…”, என அவள் இழுக்க,
“நம்ப இடம் தான்”, என்றான் சிரித்துக் கொண்டே,
“ச்ச வேடிக்கை பார்த்துட்டே வந்ததுல இதை கவனிக்கலையே”
“நல்லதா போச்சி”, என ஷ்யாம் கூற,
“அப்போ மீட்டிங்னு சொன்னதெல்லாம் சும்மாவா”
“ம்…”
“ச்ச இப்படியா லூசா இருப்பேன்”, என தன் தலையில் குட்டிக்கொண்டாள்.
“பாத்து தியா”, என அதற்கே பதறினான் அவன்.
ஒவ்வொருவராய் வர அனைவரையும் கிளம்பச் சொல்லி தானும் தயாராக சென்றான் ஷ்யாம்.
அனைவரும் தயாராகி உணவு மேசையில் கூடி இருக்க, அங்கே வந்த ஷ்யாமின் கண்கள் தன்னவளை தேடியது.
“எங்கே பர்த்டே பேபிய காணோம்”,என்று மித்து கேட்கும் போதே தியா வர,
“அதோ வந்துட்டா”, என லட்சுமி காட்டிய திசையில் பார்த்த ஷாமின் கண்கள் இமைக்க மறந்தது.
🎼ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
ஓ.ஓ.கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே🎼
தேவதையாய் பட்டுப் புடவை சரசரக்க நின்றாள் அவள்.
அந்தப் புடவை மூன்று வெவ்வேறு டிசைன்களுடன் இருந்தது. மேலிருந்து பெரிய தங்கப் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க, அதன் கீழ் இளஞ்சிவப்பில் பெரிய தங்க மாங்காய் டிசைன் இருந்தது. அதன் கீழ் சிறிய தங்க பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் தவழ, இறுதியாய் பச்சை இளஞ்சிவப்பு பார்டர் புடவைக்கு அழகைச் சேர்த்தது.
அவள் உடலில் பாந்தமாய் பொருத்தி இருந்தது அந்த புடவை அதை பார்த்தவனின் கண்கள் அவளை ஆசையாய் தழுவியது.
இவன் பார்வை காதலாய் தழுவ, ராஜின் பார்வை பாசமாய் தழுவியது.
தான் சம்பாதித்து இதுவரை யாருக்கும் இப்படி அன்பாய் வாங்கியது இல்லை. இதுவே முதல் முறை அதனால் மனம் நிறைந்தது. ‘ஆம்’ அவன் தியாவின் பிறந்தநாளுக்கென தந்த பரிசு தான் அந்த சேலை இன்று தான் அவளுக்குக் கொடுத்தான்.
“புடவை ரொம்ப நல்லா இருக்கு ண்ணா செம செலேச்டின்”, என்ன ராஜின் தோள் சாய்ந்து பாராட்டினாள்.
“உனக்கு பிடிச்ச சரிடாமா”, என்றான் அவனும் பாசமாய்.
அனைத்து உணவுகளும் தியாவுக்கு பிடித்தது தான் அடை தோசை அதற்கு தோதாய் அவியல், நெய் மைசூர் பாக் அவள் அம்மாவின் கை வண்ணத்தில், அது இல்லாமல் கேரள ஸ்பெஷலான புட்டு கடலைக்கறி, உண்ணியப்பம், அடை பிரதமன்(பாயசம்) என வள்ளியும் சமைத்திருந்தார்.
சாப்பிட்டு முடித்து திருநெல்லி கோவில் நோக்கி சென்றனர்.
காரில் லட்சுமி வர்ஷா வித் மூவரும் பின்புறம் அமர, நடுவில் சந்திரன் ராஜ் அருண் அமர்ந்துக் கொண்டார்கள்.
புடவை கட்டியத்தால் தியா வசதியாய் அமரட்டும் என முன்னே விட்டிருந்தனர்.
அனைவரும் அமர்ந்த பின் வண்டி எடுக்க வந்தவன் தியா முன்புறம் இருப்பதை பார்த்து குத்தாட்டம் போட்டான்.
அவளை புடவையில் பார்க்க வேண்டும் என்று நேற்று தான் நினைத்தான். இன்று அது நிறைவேறிவிட்டது இதோ தகவல் அதுவும் புடவையில் தன் அருகே அமர்ந்திருக்க வேறு என்ன வேண்டும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
கேரளாவில் உள்ள பிரம்மகிரி மலையின் பக்கத்திலும், கர்நாடகா மாநில எல்லைக்கு அருகில் மகாவிஷ்ணுவுக்காக அமைந்திருக்கும் கோவில் தான் திருநெல்லி. இது மலைகள் மற்றும் அழகான காடுகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் கோயில்.இது சுமார் தொள்ளாயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மானாதவாடியிலிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளத.
இந்த கோவிலை அடைய மூன்று வனவிலங்கு சரணாலங்களை கடந்து செல்ல வேண்டும்.
இதற்கு ஒரு கதை உள்ளது. அதாவது பிரம்மா தனது வம்சத்தில் பிரபஞ்சத்தை சுற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது இந்த பிரம்மகிரி மலையை பார்த்து அதன் அழகில் கவரப்பட்டார்.
எனவே, அந்த இடத்தில் இறங்கியவர். ஒரு நெல்லி மரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலையை கண்டார்.
அந்த சிற்பம் அவருக்கு மகாவிஷ்ணுவாகவும் அந்த இடம் அவருக்கு சாட்சாத் அந்த வைகுண்டமாகவும் தெரிந்தது.
பின் தேவர்களின் உதவியுடன் அந்த சிலையை நிறுவி அதற்கு சாஹ்யமலக் க்ஷேத்திரம் என பெயரிட்டார்.
பின் அந்த பகுதியின் நீர் அனைத்து பாவங்களையும் கழுவ வேண்டும் என்ற பிரம்மாவின் வேண்டுதலை ஏற்ற மகாவிஷ்ணு அவ்வாறு நடக்கட்டும் என்று அருளினார்.
இவ்வாறு விஷ்ணு அருளியதால் அந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் நீரூற்று மற்றும் நதிக்கு பாபநாசினி என்னும் பெயர் ஏற்பட்டது.
பாபநாசினியில் கால் நினைத்து சிறிது தலையில் தெளித்துக் கொண்டு உள்ளே சென்றனர் அது கேரள பாணியில் அமைக்கப்பட்ட ஒரு பழைய கோவில் மிகவும் அருமையாக இருந்தது.
உள்ளே உலகை காக்கும் மகா விஷ்ணுவைத் தரிசித்து அவரவர் தேவைக்கேற்ப வேண்டிக்கொண்டனர்.
இனி மதிய உணவை முடித்து மலையேறத் தோதாய் தியாவும் சுடி மாற்றிக் கொண்டு செல்லலாம் என யோசித்து வண்டியை எஸ்டேட் பங்களாவிற்கு விட்டான் ஷ்யாம்.
(இவ்வாறு தன் மனதை உணர்ந்து கொண்டான் ஷ்யாம். இனி அவன் நாட்கள் எப்படி செல்லும் வர எபிகல்ல பாத்து தெரிஞ்சுக்கலாம்)