💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு -18

 

இறைவனின் அழகிய ஓவியமாம் இயற்கையில் மனம் லயித்து விட்டால் வேறெதுவும் நினைவில் நிற்காது

 

தியாவின் பிறந்த நாளைக்கு இரண்டு நாளைக்கு முன்பு நண்பர்கள் காலையிலேயே விமான நிலையம் வந்திருந்தனர். அவர்கள் போகும் இடத்திற்கு நேர் விமானம் இல்லை.

எனவே கோழிக்கோடு வரை விமானத்தில் சென்று பின் காரில் அவர்கள் போகும் இடத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்.

காலையில் ஏழு மணிக்கு விமானம். ஒன்பது மணிக்கு கோழிக்கோடு சென்றடைந்தனர்.

அவர்களுக்காக அங்கே கார் காத்திருந்தது அதில் தாங்கள் போகும் இடம் நோக்கி பயணித்தனர். மூன்று மணி நேர பயணத்திற்குப் பின் இவர்கள் கார் அழகிய பங்களாவிற்குள் சென்றது.

வெளியே காத்திருந்த முருகன் அவர்களே வரவேற்றான்.

“வாங்க சின்னையா எப்படி இருக்கீங்க? பாப்பா நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க?”, என வர்ஷத ஷ்யாம் இருவரும் கேட்டார்கள்.

“உங்க புண்ணியத்துல நல்லா இருக்கோம.”

“ஐயா அம்மாலாம் நல்ல இருக்காங்களா சின்னையா”, என முருகன் வினவ,

“ஐயோ அண்ணா எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சின்னையானு கூப்பிடாதீங்க”,  என ஷ்யாம் சலித்துக் கொள்ள,

“பழகிடுச்சு சின்னையா”, என்றான் முருகன் தலையை சொரிந்து கொண்டே,

“பாரேன் மறுபடியுமா இது சரி படாது நான் கிளம்பிறேன்”, என கோபம் கொள்பவன் போல் காட்டி திரும்ப எத்தனிக்க,

“ஐயோ! என்ன தம்பி நீங்க வந்த உடனே கிளம்புறேன்னு சொல்லுவாங்க தம்பி”, என உண்மையாவே பயம் தான் முருகன்.

“ம்…இது பரவால்ல இப்படியே    கூப்பிடுங்க”, என கூறி உள்ளே அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். 

ஐவரும் உள்ளே செல்ல, குளிருக்கு இதமாய் வள்ளியின் டீ கிடைத்தது.

கணவன் மனைவி இருவரும் ஏதோ தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள, அதை கவனித்த ஷ்யாம், “என்ன அக்கா என்னதான் நடக்குது அங்க…”, என அவர்களை வினவ,

 “இதுக்குத் தான் வாயை மூட சொன்னேன் கேட்டியா இப்ப பாரு தம்பி கேக்குது”, எனத் தன் பெஞ்ஜாதியை வைதான் முருகன்.

“இதுல என்ன இருக்கு… நானே தம்பி கிட்ட கேட்கிறேன்”, என கணவனை மிஞ்சி கொண்டு ஷ்யாமிடம்.

“இவங்க ரெண்டு பேர்ல நம்ம பாப்பாக்கு பாத்த மாப்ள யாரு தம்பி”, என முக்கியமான கேள்வியைக் கேட்டாள் வள்ளி.

வள்ளி இப்படி கேட்கவும் வர்ஷாவின் முகம் மாற, அதை கவனித்த ராஜ்,   ‘ஐயோ வந்தவுடனேவா’, எனப் புலம்பினான்.

“உங்களுக்கு எப்படிக்கா தெரியும்”,என ஷ்யாம் நிலைமையை சகஜமாக கேட்டான்.

“அம்மா சொன்னாங்க தம்பி மாப்பிள வராரு நல்லா கவனிச்சுக்கோங்கன்னு”, என்ன எதார்த்தமாய் சொன்னாள் அவள்.

“ஓ! இதோ இவர் தான் நம்ப வீட்டு மாப்பிள்ளை”, என  ராஜைச் சுட்டிக்காட்டினான்.

ராஜிற்கு தர்ம சங்கடமானது இன்னும் வர்ஷா இதற்கு சம்மதிக்காத நிலையில் இந்த பேச்சுக்களை எப்படி எதிர்கொள்ளதென அவனுக்கு புரியவில்லை. வர்ஷு வேறு அங்கே இருக்க, அவன் வாயை இறுக்க மூடிக்கொண்டான்.

“எங்க பாப்பாக்கு நீங்க ஏத்தவர் தான்”, என வள்ளி அவனை பாராட்ட,

“இந்தா பிள்ள இப்படியா  பேசுவ”,  எனக் கண்டித்த  முருகனைத் தடுத்தான் ஷ்யாம்.

“அவங்க ஒன்னும் தப்பா சொல்லலையே”, என்றான்  வள்ளிக்குப் பரிந்து,

பின் வள்ளி சமையலறை நோக்கி செல்ல, வர்ஷூ மித்துவை அழைத்துக் கொண்டு தங்கள் அதை நோக்கிச் சென்றாள்.

“டேய் வர்ஷு எதிர்க்க இப்படி பேசிட்டு போறாங்களேடா”, என ராஜ் முகத்தில் சிறிதாய் பயம் தெரிந்தது. எங்கே வர்ஷா மலை ஏறிவிட்டாளோ என்று.

“என்ன மச்சி வர்ஷாக்கு ரொம்ப   பயப்புடுற போல”, என அருண் கலாய்க்க,

“உனக்கு என்னடா ஒரு பிரச்சனையும் இல்லாம மித்து ஒத்துக்கிட்டா எனக்கு அப்படியா”, என சோக ராகம் வாசித்தான் ராஜ்.

 நண்பனின் பாவனையில் சிரித்து பின் நினைவு வந்தால் போல், “ஆமா அன்னைக்கு மேல என்ன பேசினீங்க? வர்ஷூ என்ன தான் சொல்றா”, என ஷ்யாம் விசாரிக்க,

அன்று நடந்ததை ராஜ் கூற, “அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுடா எல்லாம் சரியாயிடும்”, என இவனுக்கும் சேர்த்தே ஆறுதல் கூறிக் கொண்டான் ஷ்யாம்.

“அதுனால தாண்டா நான்  அவளை ஏதும் டிஸ்டர்ப் பண்ணல”, என்றான் ராஜும் அவன் சொன்னதை புரிந்து கொண்டு.

“ம்… சரி வாங்க டா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம் சாப்பாடு தயாரானா வள்ளி அக்கா சொல்லுவாங்க”

***

“அம்மா இந்த டிரஸ்க்கு பேண்ட் எங்கே? அம்மா இந்த டிரஸ்க்கு ஷால பாத்தீங்களா?”, என வழமை போல பொருட்களை அடுக்கத் தன் அன்னையை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள்.

“இதுக்கு தான் உருப்படியா அடுக்கி வைக்கணும்னு சொல்றது கேட்டா தானே கபோர்ட் தெரிந்தாலே பத்து துணி கீழே விழுது”, என அவளை திட்டிக்கொண்டே துணிமணி அடிக்கிறார்.

“அண்ணா இன்னைக்கி எத்திணி  மணிக்கு வருவாங்க”, என லட்சுமி வினவ,

“அவன் எங்க இங்க இருக்காங்க வரத்துக்கு ஊருக்கு தானே போயிருக்கான்”, என்றார் பட்டேன உண்மையை.

“எப்ப எந்த ஊருக்கு போனாங்க என்கிட்ட எதுவும் சொல்லலை”, என புரியாமல் கேட்டாள் தியா.

‘ஐயோ வாய விட்டுடனே’, என மனதில் நினைத்தவர்.

“அது…வந்து… அவசர வேலையா காஞ்சிபுரம் போனான் உன்கிட்ட சொல்ல சொன்னா மறந்துட்டேன்”, என சமாளித்தார்.

“அப்படியா”, என ராஜுக்குக் கால் செய்ய போனவளைத் தடுத்தார்.

“அண்ணா ரொம்ப பிசி மா இப்ப கால் பண்ணாத அவனே வேலைய முடிச்சுட்டு கால் பண்றேன்னு சொல்ல சொன்னான்”, எனக் கூறியவளை கால் செய்யவிடாமல் தடுத்தார்.

“சரிமா”, என இவளும் உடனே கேட்டுக் கொண்டாள்.

“மீதி துணியை எடுத்து வை. நான் போய் சமையல பாக்குறேன்”, நான் இங்கிருந்து ஓடி தப்பித்தார்.

ராஜேஷ்க்கு கால் பண்ணி காஞ்சிபுரம் பற்றி கூறவும் மறக்கவில்லை அவர்.

சிறிது நேரம் கழித்து ராஜேஷ் கால் செய்து காஞ்சிபுரத்திலிருந்து பேசுவது போல் பேசினான்.

“நைட் வேல இருக்கு சோ என்னால வர முடியாது நீங்க கிளம்பி போங்க உன் பர்த்டே அன்னைக்கு நான் கண்டிப்பா அங்க இருப்பேன்.”, எனத் தங்கைக்கு சந்தேகம் வராதது போல் பேசி வைத்தான்.

மறுநாள் காலை  விமானத்தில் கோழிக்கோடு சென்றடைந்தனர். கோழிக்கோட்டில் காத்திருந்த காரில் பயணம் துவங்கியது.

தியா மிகவும் குதூகலமாக இருந்தாள். காணும் இடம் எங்கும் பச்சை பசேரென கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது.

பார்க்கும் இடமெல்லாம் இறைவனால்  ரசித்து ரசித்து வரையப் பட்ட ஓவியமாய் அவள் கண்ணைக் கவர்ந்தது. ஈரக் காற்று உடலைத் தழுவிச் சென்றது இதமாய் இருந்தது.

நீர்வீழ்ச்சியைக் கண்டபோது காரை நிறுத்தி சிறிது நேரம் அதன் அழகைப் பருகி விட்டே சென்றனர்.

இவ்வாறு பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி, வெகு நேரம் கழித்தே வயநாடு வந்து சேர்ந்தனர்.

ஒரு காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் சொல்லப்படும் வயநாடு கேரளாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாவட்டம்.

உள்ளூர் மக்கள் வயல்கள் நிறைந்த நாடு என்பதால் இதை வயநாடு என்று அழைப்பதாக கூறுகிறார்கள்.

இங்கே கே.ஆர் குழுமத்தின் டீ எஸ்டேட் உள்ளது. அந்த எஸ்டேட் ஒட்டியே மலை மேல் அவர்களின் பங்களாவும் உள்ளது.

இந்த பங்களா கேரள கட்டடக்கலையான நான்கு கட்டு வீடு என கூறப்படும் அமைப்பில் இருந்தது.

ஒரு செவ்வக அமைப்பில் மத்தியில் வானம் பார்த்தால் போன்ற முற்றம் அதாவது  திறந்த வெளி வீடு, மற்ற நான்கு புறமும் ஓட்டுக் கூரையால்  வெய்த, அரங்குகள் ஒன்றாய் இணைந்தார் போல் அமைத்து கட்டப்பட்டிருக்கும் வீட்டையே நான்கு கட்டு வீடு என்பர்.

 நான்கு திசையை நோக்கி இருக்கும் மண்டபங்களுக்கு  அதற்கேற்ற பெயர்களும் உண்டு. வடக்கு தொகுதியை வடக்கனி என்றும், மேற்கு தொகுதியை பாடிஞ்சாந்தினி என்றும், கிழக்குத் தொகுதியை கிழக்கினி என்றும், மேற்குத் தொகுதியை தெக்கினி என்றும் கூறுவர்.

இவ்வாறு இரண்டு அடுக்குகள் கொண்ட நாலு கட்டு பங்களா அது. சுற்றி பல செடி கொடிகள் கொண்ட பெரிய தோட்டமும் உண்டு.

“ஏப்பா என்ன அழக”, என தியா அங்கேயே நின்று விட்டாள்.

இயற்கை அழகை ரசிப்பவளை சாளரத்தின் வழியே ரசித்திருந்தான் ஷ்யாம்.

அவள் வந்த வண்டி கேட்டில் நுழைந்தது முதல் அவன் கண்கள் அவளை கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

“வழக்கம் போல தோட்டத்தை பார்த்த உடனே நின்னுட்டாளா”, அவன் வாய் முணுமுணுத்து.

‘இப்படித்தான் அங்கங்க வண்டி நிறுத்த சொல்லி இருப்பா அதான் மூணு மணி நேரத்துல வர வேண்டியது நான்கு மணி நேரம் கழிச்சு வந்திருக்கா. அவளுக்காக இங்க ஒருத்தன் காத்திட்டு இருக்கிறது அவளுக்கு புரிஞ்சா தானே’

“அப்பா இந்த இடம் எவ்வளவு அழகா ரம்யமா இருக்கில்ல”,  ரசித்து கூறிக் கொண்டிருந்தாள் தியா.

“ஆமாமா”, என அவரும் ஒத்துக் கொண்டார்.

இவர்களையும் முருகனும் வள்ளியும் வந்து வரவேற்று உபசரித்தனர்.

“யே புள்ள வந்திருக்கிறது யார் தெரியுமா நம்ம வர்ஷா பாப்பாவோட வருங்கால மாமியார், மாமனார் அப்புறம் நாத்தனார்”

“ஓ! அப்படியா.”

“அப்படித்தான் அப்புறம் மேல அவங்க எல்லாம் இருக்கிறது மாப்பிள்ளை ஐயா தங்கச்சிக்கு தெரியாது பார்த்து நடந்துக்கோ”, என முன்கூட்டியே தன் பெஞ்ஜாதியை எச்சரித்தான் முருகன்.

“அதுவும் அப்படியா, அப்போ அங்களுக்கு நைட் சாப்பாடு”, என முகவாயை பிடித்துக் கொண்டு கேட்க,

“நீ எடுத்து வை நான் மேல போய் குடுத்துட்டு வரேன்”.

“சரிங்க.”

தியாக்கு அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது. அதிலும் அந்த பங்களா முற்றத்துடன் அவளை மிகவும் கவர்ந்தது.

அவள் தாய் தந்தை ஓய்வெடுக்க அறைக்குச் செல்ல, இவள் தன்னைக் கவர்ந்த அந்த முற்றத்திற்குச் சென்றாள்.

அருண் அவன் கம்பெனி வேலைகள் பார்க்க வேண்டும் என்பதால் தனி அறையில் இருந்தான். ராஜும் தனியாய் தங்கி கொண்டான்.

எனவேதான் ஷியாம் தியாவை அவன் அறை சாளரத்திலிருந்து சுதந்திரமாய் பார்க்க முடிந்தது. அவன் அறையில் மூன்று சாளரங்கள் உண்டு ஒன்று வாசல் பார்த்தது, மற்றொன்று தோட்டம் பார்த்தது, மூன்றாவது முற்றம் பார்த்தது.

தியா வந்தது முதல் மூன்று புறமும் நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறான்.

சிறிது நேரம் வரவேற்பு அறையில் பின் தான் எடுத்து வந்ததை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் வைப்பது என ஆள் கண்ணில் படாமல் தவித்தான். இப்பொழுது தான் அவன் தேவதை அவன் கண்களுக்கு விருந்தாய் அந்த முற்றத்தில் காட்சியளித்தாள்.

முற்றத்தின் ஓரம் ஒரு மர ஊஞ்சல் என்னிடம் வா வா என தியாவை அழைக்க, அதனிடம் சென்றாள் யானைகள் தங்கள் தும்பிக்கையை ஒன்றோடு ஒன்று பிணைத்தார் போலிருந்த சங்கிலியை தடவிப் பார்த்து அதில் ஏறி அமர்ந்தாள்.

மனம் லேசாக மெல்ல காலை உந்தி தள்ளினாள். காதில் ஹெட் செட் அதில் அந்த சூழலுக்கு ஏற்ப ஒரு பழைய பாடலை ஓட விட்டாள்.

அவளே கவனித்திருந்தவன் அந்த ஊஞ்சலாய் தான் மாற கூடாதா என்ற ஏக்கத்துடன் அவளையே பார்த்தான்.

காற்றில் அலைபாயும் அவள் கூந்தலில் விரல் கோத ஆசை கொண்டான். எப்பொழுதும் போல் அவளின் கால் கொலுசு கிங்கிணி நாதமாய் இசை பாடி அவனை தன் புறம் திருப்ப, அதில் கவனம் பதித்திருந்த நேரம் அவன் காதுகளில் விழுந்தது அந்த பாடல் அதுவும் அவளின் குரலில்.

 

🎼எங்கிருந்தாலும்

உன்னை நான் அறிவேன்

உன்னை என்னையல்லால்

வேறு யார் அறிவார்🎼

 

ஒரு நிமிடம் அவனுக்கு பக்கென்றானது. ‘என்னடா இது நம்மள பாத்துட்டாளா’, அவனின் யோசனையை கலைத்து அவளின் குரல் அதில் மேலும் குழம்பினான்.

🎼மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

அழகர் மலை அழகா

இந்த சிலை அழகா என்று

மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன🎼

 

இப்பொழுது திரைச்சீலை பின்னால் ஒளிந்து மெல்ல மெல்ல அதை விளக்கி, அவளை உற்றுப் பார்க்க, அவள் இமை மூடி பாடலில் ஆழ்ந்து பாடியது தெரிந்தது.

அதன்பின் தன் குழப்பத்தை விடுத்து பாடலில் கவனமானான்.

‘நீ இவ்ளோ இனிமையா பாடுவியா’, மானசீகமாய் அவளுடன் பேசினான்.

இப்போது மீண்டும் அதே வரிகள் வந்தது.

🎼மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

அழகர் மலை அழகா

இந்த சிலை அழகா என்று

மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன 🎼

 

‘அதுல உனக்கு என்ன சந்தேகம்  என் கண்ணுக்கு முன்னாடி தெரிகிற உயிருள்ள சிலை தான் அழகு’

பாடல் முடிந்ததும் கண்கள் திறந்து சுற்றி மற்றும் பார்த்து உள்ளே சென்று விட்டாள்.

அவள் போகவும் இவன்  தனக்குப் பிடித்த பொம்மையைப் பிடுங்கிக் கொண்ட குழந்தையாய் முழித்து நின்றான்.

இரவு உணவை முடித்து, தியா உறங்கவும் சந்திரன் ராஜுக்கு கால் செய்தார்.

ராஜ் மற்றவர்களுக்குத் தகவல் கொடுக்கவும் அனைவரும் கீழே கூடினர்.

“லட்சு ஆண்ட்டி நீங்க தியா கூட ரூம்லயே இருங்க அவ வெளிய வராம பாத்துக்கோங்க”,  என அவரை அனுப்பிவிட்டு அவர்கள்  பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயார் செய்தனர். ஏற்பாடுகளும் முடியவும் தியாவை அழைத்து வர சொன்னான் ஷ்யாம்.

அவரும் அவளை எழுப்பி முகம் அலம்பி அணைத்துச் சென்றார்.

“என்னம்மா இது இந்த நேரத்துல இப்படி பண்றீங்க”, என அலுத்துக் கொண்டே வந்தவள் இருண்ட அறையை கண்டு அமைதியானாள்.

“அம்மா என்னம்மா ஆச்சு கரண்ட் போச்சா எனக்கு இருட்டு நான் பயம்னு தெரியாதா எங்கம்மா போன…அம்மா…அம்மா”, என்றவரின் குரல் அறை முழுவதும் பரவிய வெளிச்சத்தில் அப்படியே நின்றது.

அங்கு இருப்பவர்களை பார்த்து அசடு வழிந்தாள் அவள்.

அவளின் பாவனையில் அனைவரும் சிரிக்க, ஷ்யாம் மட்டும் ‘பாவம் ரொம்ப பயந்துட்டா’, என அவளுக்காக பாவப்பட்டான்.

இவ்வாறு கொண்டாட்டம் இனிதே தொடங்கியது அவளுக்கான பிரத்யேக கேக் தயாராக இருந்தது. அதை வெட்டி அனைவருக்கும் ஊட்டினாள் அதில் ஷ்யாமும் அடக்கம் அதன் நிலை சொல்லவா வேண்டும்.

அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அவள் வாழ்க்கையில் குடும்பம் மற்றும் நண்பர்கள் கூட்டம் இரண்டுமே முக்கியம்.

அப்படி இருக்க இப்படி அவளுக்கு நெருக்கமானவர்கள் ஒன்று கூடி கழிப்பது மகிழ்ச்சியின் உச்சமாக இருந்தது.

‘கேக் செமயா இருக்கு டேஸ்ட்டும்அள்ளுது.”, என்றாள் தியா அதை ரசித்து உண்ணபடி,

“அள்ளாதா பின்ன அண்ணா உனக்காக பார்த்து பாத்து அவனே பண்ணது”, என வர்ஷா கூறவும்  ஷ்யாமை பார்த்தாள்.

“நீங்களே பண்ணிங்களா”, என ஆச்சிரியத்தில் விரிந்த அந்த கண்களை பார்த்து கொண்டே ‘ஆம்’ எனத் தலையாட்டினான்.

“கேக் எல்லாம் வெட்டியாச்சு சரி எல்லாம் போய் காலகாலத்தில் தூங்கலாம் வாங்க”, என்ற அருணை தடுத்த ஷ்யாம்.

“டேய் இன்னும் செலிப்ரேஷன் முடியலடா”

“இன்னும் என்னடா”, என்றான் அருண் கேள்வியாய்.

“எல்லாம் தோட்டத்துக்கு வாங்க மீதி செலிப்ரஷன் அங்க தான்”, என அனைவரையும் அழைக்க,

“அங்க என்னடா இருக்கு”, என்ன கேட்ட அருணுக்கு,

“வந்து பாத்தா தெரியப்போகுது”, என்ற பதில் மட்டுமே கொடுத்தான் ஷ்யாம்.

அங்கு சென்று பார்த்த தியாவிற்கு துள்ளல் தாங்கவில்லை.

 

(நாமலும் அடுத்த எபில அங்க போய் பாக்கலாம் வாங்க…இப்போ பை பை)

error: Content is protected !!