EUTV

EUTV

15

அனைவரும் சுற்றி வட்டமாக அமர்ந்திருந்தனர். எல்லாருடைய பார்வையும் அவர்கள் அமர்ந்திருந்த வட்ட வடிவின்  மையப்பகுதியையே குறிநோக்கி இருந்தது. மலர்விழி தன் கையிலிருந்த காலிபாட்டிலை கிடைமட்டமாக சுற்றிவிட்டிருக்க அது சுழன்றுக் கொண்டிருந்தது.

சுழலும் அந்த பாட்டில் யாரின் பக்கம் தலையை வைத்து நிற்கப்போகிறது என்று கூர்மையாக எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க அது ஆகாஷின் புறம் தன் தலையை திருப்பி நின்றது. மற்றவர்கள் அனைவரும் உற்சாக ஒலியெழுப்ப ஆகாஷோ திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தான்.

“TRUTH OR DARE” என்று ரிஷிபன் குதூகலத்துடன் கேட்க ஆகாஷ் அவனை முறைத்துக்கொண்டே ட்ருத் என்று கூற, அவனுக்காகவே நேற்றே கேள்வியை தயாரித்து வைத்திருப்பவனைப்போன்று உடனே கேள்வியை கேட்டான் ரிஷிபன்.

“when u lost ur virginity?” என்ற கேள்வியை கேட்க , ஆகாஷ் மற்றும் ஜோசப் சகோதரர்கள் கணிதனை தவிர அனைவரும்  அதிர்ந்து ரிஷிபனை பார்த்தனர்.  ஆதித்யன் ஒருபடி மேலே சென்று தன் கைக்கு தோதாக அமர்ந்திருந்த ரிஷிபனின் பின்மண்டையிலே ஒரு அடி போட்டிருந்தான். வீரோ அவனை வெட்டவா குத்தவா என்றவாறு முறைத்துக்கொண்டிருந்தான்.

 இந்த சகோதரர்கள் இப்படியெல்லாம் பேசாதவர்களா என்றால் அது அப்படியில்லை. ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு ரிஷிபன் இப்படியெல்லாம் பேசுகிறானே என்பது தான் அவர்களது ஆதங்கம்.

கணிதன் மட்டுமே மலர்விழியை முறைத்துக்கொண்டிருந்தான். ஏனெனில் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்க சொன்னவளே அவளாக தான் இருப்பாள் என்று சந்தேகம் எல்லாம் படவில்லை உறுதியாகவே நம்பினான்.

மலர்விழியோ இவனுங்க இவ்ளோ சீன் போடுற அளவுக்கு இது ஒன்னும் இவ்ளோ பெரிய சம்பவம் எல்லாம் இல்லை. கலாச்சார கன்னீஸ் என்று முனங்கியவாறு கணிதனை எதார்த்தமாக திரும்பி பார்க்க தலைவன் தான் அப்பொழுதிருந்தே முறைத்துக்கொண்டிருக்கிறானே!

“இவன் வேற…” என்று மனதிற்குள் நினைத்தவள் கணிதனைப் பார்த்து கேவலமான சிரிப்பை போட்டாள்.

“அட ச்சை… இந்த கேள்வியை கேட்க சொன்னதே இந்த பச்சைப்பாப்பா தான். சோ கொஞ்சம் அடங்குங்க. டேய் வீர் முதல் விரிஞ்சு இருக்க உன் சோல்டரை நார்மல் மோடுக்கு கொண்டு வாடா… இடியட்ஸ்…” என்று ரிஷிபன் உண்மையை கூற இப்பொழுது அனைவரும் மலர்விழியை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆகாஷை நோக்கினர்.

ஆகாஷோ சில நொடிகள் சிந்தித்தவன் “இருபத்தி ஒரு வயசுல…” என்று கூற ஜோசப் பிரதர்களை முந்திக்கொண்ட மலர்விழி,

“யார் அந்த பொண்ணு? ரேச்சலா?” என்று கேட்க, ரிஷிபனை தாண்டி அமர்ந்திருந்த கணிதன் எட்டி மலர்விழியின் தலையிலே சொத்தென்று ஒரு அடியை போட அவனை திரும்பி முறைத்துவிட்டு அமைதியானாள் மலர்விழி.

மீண்டும் இந்த மாதிரி சுற்றிவிட இந்த முறை ஆதித்யனை நோக்கி பாட்டில் நின்றுவிட அவன் டேர் என்று கூறி இந்த அடாவடிகளிடம் வசமாக சிக்கிகொண்டான்.

அவனுக்கான டேரை கேட்டவன் ரிஷிபன் விஜய் மலர் மூவரையும் அடித்து வெளுக்கும் நோக்கில் தான் அணிந்திருந்த டீசர்டின் கையை மேலேற்றிவிட்டவாறு பார்க்க,

கணிதன் சிரித்துக்கொண்டே,”கேம் இஸ் கேம் ஆதி. கமான் ஆன் டூ இட்…” என்று கூறிவிட, வேறுவழியில்லாமல் இந்த சில்லுண்டி பசங்களுடன் இந்த விவகாரமான விளையாட்டை விளையாட வந்த தன் மடத்தனத்தை நொந்துக்கொண்டு தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா கணக்கில் அவனும் அவன் மனைவி சக்தியும் எடுத்த சிறுவயது புகைப்படம் ஒன்றை போட்டு அதற்குமேலே “I Love you Sakthi… #missmywife” என்று பதிவிட சிறிது நேரத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பேரலையை கிளப்பி விட்டிருந்தான். அன்றைய நெட்டிசன்களின் நாளை சமூகவலைதளத்தில் கழிக்க அருமையான வாய்ப்பை எற்படுத்திகொடுத்திருந்தான் ஆதித்யன் ஜோசப்.

சில மாதங்களுக்கு முன்பு தற்காலிக முதலமைச்சராக இருந்தவன் தற்போது காவல்துறை அமைச்சராக இருக்கிறான். போதாதா பேசுப்பொருள் ஆவதற்கு. எப்பொழுதுமே அவனது ட்வீட்டர் கணக்கு வெடிக்குண்டு வீசும் போர்களமாக தான் இருக்கும். எந்நேரமும் ஒன்றிய அரசை எதிர்த்து பதிவு, எதிர்கட்சிகளின் சில்லரைதனங்களை கிழித்து தொங்கவிடுதல் என்று அதிரிபுதிரியாக இருக்கும் இடம் இன்று தான் முதன்முறை காதலாக இருந்தது.

அடுத்து இப்படி ஆளுக்கொரு சரவெடியாக போட்டுவிட்டுக்கொண்டிருந்த மலர்விழிக்கு மட்டும் அந்த பாட்டில் திரும்பவே இல்லை. கணிதனுக்கு கூட ஒருமுறை வந்து அவன் ட்ரூத் என்று கூறியதால் அவனது கிஸ்ஸிங்க் அனுபவம் பற்றி கேட்டு ரிஷிபனும் விஜயும் தர்ம அடி வாங்கியிருந்தனர்.

 

மாலை போன்று இந்த விளையாட்டை ஆரம்பித்திருந்தவர்களுக்கு  இருட்ட தொடங்கவும் விளையாட்டை முடித்துக்கொண்டு இரவு சமையலை ஆரம்பிப்போம் என்று கிளம்ப அப்பொழுது தான் கணிதனுக்கு ஒன்று உரைத்தது. அனைவருக்கும் அதாவது மலர்விழியை தவிர மற்றவர்களுக்கு எல்லாம் அவர்களை நோக்கி நின்ற பாட்டில் அவளை நோக்கி மட்டும் திரும்பவில்லை..ஏனென்று யோசித்து பார்த்தால் அவள் தான் விளையாட்டு ஆரம்பமானதில் இருந்து பாட்டிலை சுழற்றி கொண்டிருந்திருக்கிறாள். அப்படி தெய்வதீனமாக ஒரே ஒரு தடவை அவளை பார்த்தவாறு நின்ற பாட்டிலையும் இவள் ஏதோதோ பொய் பேசி தனக்கு அருகில் அமர்ந்திருந்தவனின் தலையில் கட்டிவிட்டாள் பலே கில்லாடி…

தன்னுடைய இராஜதந்திரத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்ற மிதப்பில் இருந்தவளுக்கு கணிதனின் குறுகுறு பார்வை கொக்கா மக்கா இவன் வாட்ச் பண்ணிட்டு இருக்கான் டா எஸ் ஆகு டி மலர்விழி என்று அடுத்த நொடியே கணிதனுக்கு கம்பி நீட்டி விட்டு அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

இப்படி பல்வேறு குட்டி கலாட்டாக்களுடன் அந்த இரவு ஒரு வழியாக முடிவடைய அடாது மழையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது.

மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்க அதை கேரள அரசு மிகதுரிதமாக அப்புறப்படுத்தும் முயற்சியில் இருந்தது. மற்ற நாட்களாக இருந்திருந்தால் இந்நேரத்துக்கு அனைத்தும் சீர்ப்படுத்தப்பட்டிருக்கும். கொரானா என்னும் கொடும் அரக்கனால் அனைத்தும் சரியாக சிறிதுகாலமாகிறது.

இன்னும் மின்சாரம் வரவில்லை. விடிந்துவிட்டதல்லவா எதாவது செய்ய வேண்டுமல்லவா அதனால் ரிஷிபன், மலர், விஜய், ஆகாஷ் நால்வரும் சேர்ந்து ஐஸ்பாய் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சாட்…பூட்…தீரியில் விஜய் மாட்டிக்கொள்ள அதனால் ரிஷி, ஆகாஷ் மற்றும் மலர் ஒளிந்துக்கொள்ள விஜய் தேடுபவனாக ஆரம்பித்தது விளையாட்டு.

மூவரும் அந்தபெரிய வீட்டில் ஆளுக்கொரு இடமாக போய் ஒளிந்துக்கொண்டனர். ஆகாஷ் சமயலறையின் ஒரத்திலும், ரிஷி ஹாலில் இருந்த திரைசீலைக்கும் பின்னும் ஒளிந்துக் கொண்டனர்.

தெரிந்து செய்கிறாளா? அல்லது தெரியாமல் செய்கிறாளா? என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு நம் அம்மணி மலர்விழி சென்று ஒளிந்துக்கொண்ட இடமோ கணிதனின் அறை.

அதுவும் இவர்கள் விளையாட்டெல்லாம் ஆரம்பிக்கும் முன்னே, தன் மேலே காபியை கொட்டிவிட்ட தன் உடன்பிறப்பை திட்டிக்கொண்டே குளிக்க வேறு சென்றிருந்தான் கணிதன்.

இந்த அம்மணி சென்று கதவை உள்பக்கமாக தாள் போட எட்டதாதல்  குதித்துக்கொண்டிருக்கவும், கணிதன் குளியலறையிலிருந்து இடுப்பில் கட்டிய துவாலையுடன் மேனியேங்கும் நீர்துளிகள் வழிய வெளியே வரவும் சரியாக இருந்தது.

வெளியே வந்த கணிதன் பார்த்தது குதித்துக்கொண்டிருந்த மலர்விழியை தான்.

‘இந்த பைத்தியம் இங்கே என்ன செய்யுது?’ என்பது போன்று பார்த்தவன் தன் தொண்டையை செரும அப்பொழுதும் அவள் கண்டுக்கொள்ளாமல் எட்டாத தாள்பாழை போடுவதிலே குறியாக இருக்க தன்னையே நொந்துக்கொண்டான் கணிதன்.

“மலர்…” என்றழைக்க அப்பொழுது தான் அங்கு ஒரு ஜீவன் இருக்கிறது என்பதையே உணர்ந்துக்கொண்ட மலர்விழி திரும்பி பார்த்தாள்.

அவனின் அரைகுறை ஆடையை பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவிற்கு விரிந்துக்கொண்டது.

இப்படியான கட்டுமஸ்தான சிக்ஸ்பேக் உடலையெல்லாம் அவள் திரையில் தான் பார்த்ததுண்டு. நேரில் பார்த்ததே இல்லை எனலாம். அதுவும் தனது முன்னாள் கிரஸ் இப்படி சிக்கேன்ற சிக்ஸ்பேக்குடன் பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

மலரின் பார்வை கணிதனின் முகத்திலே இல்லை. அவனின் சிக்ஸ் பேக்கில் தான் ஒட்டிக்கொண்டிருந்தது. அவள் பார்வையை மாற்ற வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

அவளின் வெறித்த பார்வையை எதிர்க்கொண்ட கணிதனிற்கு கட்டுகடங்கா கோவமும், அதே சமயத்தில் கூச்சம், வெட்கம், ஆனந்தம் என்ற பல்வேறு உணர்வுகள் கலவையாக தோன்றியது.

தனது கோவத்தையெல்லாம் தனது குரலில் கொண்டுவந்தவன்”இங்கே என்ன பண்ணுற?” என்று அதட்டலாக கேட்க, அதுவோ மலர்விழிக்கு கொஞ்சலாக கேட்டு தொலைத்தது.

அப்படியும்  வாய்திறந்து பேசமால் கணிதனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் மேனியை தொட வேண்டும் என்ற வீபரித ஆசை வேறு வந்து தொலைத்தது அவளுக்கு.

எப்பொழுதும் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்கின்ற அறிவு இருந்தது இல்லை என்பதால் இப்பொழுதும் தன் எண்ணத்தை செயலாக்க சென்றாள்.

கணிதனை நோக்கி அவள் எட்டுகள் வைக்க, கணிதனுக்கு திக்கென்றது. இவள் என்ன செய்ய போகிறாள் என்று முழித்தவன் ரிப்லக்ஸ் ஆக்ஷ்னாக பின்னோக்கி எட்டு வைக்க ஆரம்பித்திருந்தான்.

பின்னோக்கி எட்டு எடுத்து வைத்தவனுக்கு சுவர் இடித்துவிட அவன் தடுமாறி தன்னோக்கி வரும் மலர்விழியை பார்த்தவாறு நின்றான். இன்னும் இரண்டு எட்டில் அவனை நெருங்கிவிடுவாள். எதோ கனவில் நடப்பவளை போன்று அவளது செயல் இருந்தது.

“வருகிறேன்… வருகிறேன்… வாழைப்பழம் தருகிறேன்…” என்ற குரலில் சட்டென்று சுயநினைவு அடைந்த மலர்விழி சட்டென்று இலேசாக திறந்திருந்த கதவை ஒருதரம் திரும்பி பார்த்தவள், கணிதனையும் ஒருபார்வை பார்த்தவள் மீண்டும் வாயிலை பார்த்தாள்.

என்ன நினைத்தாளோ கணிதனின் கையை பற்றி இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று கதவை தாள் போட்டு மூட, அதிர்ந்த கணிதன்,

“ஹேய் என்ன டி? பண்…” என்று கணிதனை முழுதாக கேட்டு முடிக்க கூட விடாமல் எம்பி அவனது வாயை தன் வலக்கரத்தால் அடைத்திருந்தாள்.

கணிதனின் நிலையோ சொல்லில் வடிக்கமுடியாததாக இருந்தது. ‘திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் கல்யாணம்’ என்ற பழமொழி போன்று, அக்கடா என்று குளித்துவிட்டு வந்தவனுக்கு அமோக வரவேற்பு மாதிரி மலர்விழியின் செய்முறை இருந்தது.

மலர்விழியின் உபயத்தால் “வருகிறேன் வருகிறேன்… வாழைப்பழம் தருகிறேன்…” என்ற பொன்மொழியை பாடிக்கொண்டு வந்திருந்த விஜய் இலேசாக திறந்திருந்த கதவை நன்கு விரிய திறந்து அறையினுள் நுழைந்து, அந்த அறை முழுவதையும் ஒரு சுற்று சுற்றி  பார்த்தவன், குளியலறை கதவை தள்ளி பார்த்தவன், கணிதன் குளிக்க வந்ததை கவனித்திருந்ததால் ஒன்றும் பேசமால் சென்று விட்டான்.

விஜய் குளியலறை கதவை தள்ளவும், மலர்விழி கணிதனை பார்த்து ப்ளீஸ் சொல்லிவிடாதே என்பதைப் போன்று உதட்டை சுழித்து, கண்களை சுருக்கி கியூட்டாக கேட்க, கணிதனுக்கு பொல்லாத ஆசைகள் வர, ஹூரோவா? வில்லனா என்று ஒரு நொடி மூளை கேட்க நான் வில்லனாவே இருந்துட்டு போறேன் என்று அதற்கு பதிலளித்தவன், எம்பி தன் இதழை கரத்தால் மூடியிருந்தவளை, சட்டென்று இடையோடு இழுத்து அணைத்ததன் பிரதிபலிப்பாக தனது கரத்தை எடுத்திருந்தவளை விடுதலை தந்தற்கு நன்றிகடனாக அவளது செவ்விதழ்களுக்கு தன் இதழால் நன்றி கூற ஆரம்பித்துவிட்டான் கணிதன்.

மலர்விழிக்கு ஒன்றுமே புரியவில்லை. நடப்பதனைத்தும் கனவா நினைவா என்பதே அவளுக்கு சந்தேகமாக இருந்தது. சில நொடிகளில் மனதிற்கு நெருக்கமானவனின் இதழணைப்பில் கனவு நினைவு என்பது தாண்டி சொர்க்கத்தின் வாயிலை தொட்டிருந்தாள்.

இதழ் முத்தம் யுத்தமாக மாறியிருந்தது. மேலாடை இல்லாத கணிதனின் மேனிக்கு மலர்விழி ஆடையாக மாறியிருந்தாள். தேகங்கள் உரச காதல் நெருப்புக்கு பஞ்சமேது. நன்றாக பற்றி எறிய ஆரம்பித்திருந்தது. கணிதனின் கரங்கள் மோட்சத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது.

மலர்விழியின் கரங்களோ சிறிது நேரத்திற்கு முன்பு வரை கண்களால் கபளிகரம் செய்துக்கொண்டிருந்த அவனது சிக்ஸ்பேக்கை வருடிக்கொண்டிருந்தது.

அடுத்தடுத்து என்னென்ன ஆகியிருக்குமோ, பிளாஷ் மெமரியாக சட்சட்டென்று

“மாப்பிள்ளை பிடிக்கலைன்னு பொண்ணு ஒடிப்போயிருச்சாம்…”

“எங்க பொண்ணு உங்க பையங்கிட்ட கல்யாணத்தை நிற்பாட்டிருங்கன்னு சொல்லிருக்கு…”

“ச்சீ… உன்னை நான் இப்படியா டா வளர்த்தேன்…” இந்த வார்த்தைகள் எல்லாம் கணிதனது ஞாபகத்துக்கு வர அணைத்திருந்த மலர்விழியை உதறி தள்ளியிருந்தான் கணிதன்.

கொளுகொம்பாக அவனையே பற்றி நின்றிருந்தவளூக்கு அவனின் செய்கையால் பிடிமானம் இல்லாமல் தரையில் விழுந்திருந்தாள்.

 

மலர்விழிக்கோ கேஜிஎப் 2 படத்தை திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் போது யாரோ அதை மாற்றிவிட்டு பவர்ஸ்டாரின் லத்திகா படத்தை போட்டு விட்டது போன்று நாரசாமாக இருந்து தொலைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!