ஆழியின் ஆதவன்

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 16

 

நிலாவை தூக்கிக்கொண்டு ஆழி காரில் இருந்து இறங்கியவள், “ரொம்பத் தேங்க்ஸ் சார். நீங்க மட்டும் இல்லாட்டி நானும் குழந்தையும் இவ்ளோ சீக்கிரம் வீடு வந்து சேர்ந்திருக்க முடியாது. ரொம்பத் தேங்க்ஸ்” என்றவள் வீட்டுக்குள் செல்லப் போக,

 

“ஹலோ ஏங்க ஒரு நிமிஷம்” என்ற விமலின் குரலை கேட்ட ஆழி உதட்டில் வெற்றி புன்னகையுடன், மெதுவாகத் திரும்பி விமலை பார்த்தாள்.

 

“என்ன சார்?” என்று அப்பாவியாகக் கேட்க,

 

“என்னாங்க நீங்க? இந்தக் குளுர்ல இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு இந்தக் காட்டுக்குள்ள, உங்களுக்காகக் காரை ஓட்டிட்டு வந்திருக்கேன். இவ்ளோ தூரம் வந்தது எனக்கு தலையெல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா?, நீங்க என்னடான்ன வெறும் தேங்க்ஸ்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டு போறீங்க, என்னங்க இது? அட்லீஸ்ட் வீட்டுக்குள்ள கூப்டு ஒரு டீ இல்ல காபியாது குடுக்கலாம் இல்ல, அது தானங்க பண்பாடு” என்றுவனை வாயில் குண்டு வைத்து வெடிக்கலாம் என்று எண்ணும் அளவு ஆழிக்கு உள்ளுக்குள் கொதித்து.

 

அங்குச் சைத்ராவே, “அடிங்கு பரதேசி பண்ணாட, இது பொழைக்கிற பொழப்புக்கு இது பண்பாட்டு பத்தி பேசுது‌ பாரு மீரா. அப்படியே அந்த வாய மட்டும் தனி வெட்டி எடுத்து, இனிமே இப்படிப் பேசுவீய… பேசுவீயான்னு நம்ம நிலா பாப்பா செருப்பைக் கொண்டு நல்லா அடிச்சி வெளுக்கணும்டி இவனை” என்றவள் அவனை வண்ட வண்டையாகத் திட்ட, அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாமல் மீரா காதை மூடிக்கொள்ள, பாவம் ஆழியால் அதுகூட முடியவில்லை.

 

“ஹலோ என்னாங்க நான் சொல்லியும் கூட வீட்டுக்குள் கூப்பிடாமாட்டேங்குறீங்க” என்ற விமலை பார்த்த ஆழி,

 

“அதில்ல சார்… வீட்ல யாரும் இல்ல” என்று சற்று தயங்கியவள், “இட்ஸ் ஓகே சார், விதி யாரை விட்டுது, நீங்க உள்ள வாங்க” என்றாள்.

 

“எது விதிய? என்ன சொல்றீங்க நீங்க? என்று விமல் கேட்க,

 

“அது ஒன்னும் இல்லீங்க சார், நான் போடும் டீயை குடிக்குறதும் வெஷத்தை குடிக்குறதும் ஒன்னு தான், அதைத் தான் சொன்னேன். நீங்க வேற எதுவும் தப்ப நெனக்கதீங்க” என்றதும் சத்தம் போட்டு சிரித்த விமல்,

 

“நோ ப்ராப்ளம்… உங்க கையால நீங்க வெஷத்தை குடுத்தாலும் நான் குடிக்க ரெடி” என்று இளிக்க, ஆழி அவனை நக்கலாகப் பார்த்தவள்,

 

“அப்ப உள்ள வாங்க சார், உங்க ஆசப்படி என் கையலயே உங்களுக்கு வெஷத்தை தரேன்” என்றவள் பின்னாடியே வால்பிடித்துக்கொண்டு சென்றான் விமல்.

 

ஆழி கையில் ஆவி பறக்கும் டீயுடன், அவன் ஆவியை எடுக்கும் ஆயுதத்தை எடுத்து கொண்டு வந்தாள்.

 

“இந்தாங்க சார் டீ, தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல, இந்தாங்க இந்த மருந்தை போடுங்க எல்லாம் பறந்துடும்” என்று டீயை மாத்திரையையும் அவன் கையில் கொடுத்தாள்.

 

டீயை குடித்த விமல், “ஏங்க டீ சூப்பரா தான் இருக்கு… என்னை உள்ள கூப்பிடாம அவய்ட் பண்ண, வேணாம்னு தானே பொய் சொன்னீங்க” என்று ஏதோ பெரிய ரகசியத்தைக் கண்டு பிடிதத்து போல் அட்டகாசமாகச் சிரிக்க, ஆழி அவன் கேவலமான சிரிப்பை சகிக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க சார், சும்மா ஒரு சேஃப்டிக்கு தான். இந்தக் காலத்தில் யாரையும் நம்ப முடியல இல்ல, அதோட இது தனி வீடு வேற, இங்க இருந்து கத்துன கூட யாருக்கும் கேக்காது, உதவிக்குக் கூட யாரும் இல்ல, அதான்…” என்றவளை வக்ரமாகப் பார்த்தபடியே எழுந்து ஆழியை நோக்கி நடந்த விமல்,

 

“நீ சொல்றது உண்மைதான் ப்யூட்டி, காலம் கெட்டுதான் கெடக்கு. ஆனா பாரு இவ்ளோ தெரிஞ்சும் நீ, என்னை வீட்டுக்குள் விட்டு பெரிய தப்பு பண்ணிட்டியே” என்று சிரித்தபடியே விமல் ஆழி தோளில் கை வைக்க, சட்டென அவன் கையைத் தட்டிவிட்ட, ஆழி இரண்டடி பின்னால் சென்றாள்.

 

“ஹலோ என்ன பண்றீங்க நீங்க? முதல்ல வெளிய போங்க…” என்று கத்தியவளை பார்த்துச் சத்தமாகச் சிரித்த விமல்,

 

“வெளிய போறதுக்க ப்யூட்டி நான் உள்ள வந்தேன். உன்னை மாதிரி ஒரு ஹாட்டான பொண்ணைக் கண்ணு முன்னால, அதுவும் யாரும் இல்லாத தனி வீட்ல கைக்கு எட்ற தூரத்தில் வச்சிட்டு, வீட்ட விட்டு வெளிய போக நான் என்ன பைத்தியம?” என்றவனை முறைத்து பார்த்த ஆழி,

 

“ஏய் என்ன பேசுற‌ நீ? எனக்கு உன்ன அக்கா வயசு இருக்கும்டா… என்கிட்ட போய் இப்படித் தப்பு தப்ப பேசுறீயே உனக்கு அசிங்கம இல்ல?”

 

“எது அக்காவா” என்று சிரித்த விமல்,

 

“சாரி ப்யூட்டி இந்தச் சென்டிமென்ட் எல்லாம் எனக்குச் சுத்தமாக இல்ல… எனக்குப் பொண்ணுங்க எல்லாம் வெறும் சுகத்துக்கும், பணத்துக்குத் தான்.” என்றது அவன் பின்னந்தலையில் பலமாக எதோ ஒன்று அடிக்க, அவன் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தான்.

 

“ஏன்டா நாயே… உனக்குப் பொண்ணுங்க எல்லாம் வெறும் சுகத்துக்கும் பணத்துக்குத் தானா, உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாதுடா” என்ற ஆதவ் அங்கிருந்த சேரை எடுத்து விமல் இடுப்பிலேயே பலமாக அடிக்க, விமல் அம்மா என்று அலறிய சத்தம் அந்த வீடு முழுதும் எதிரொலித்தது.

 

“அய்யோ அய்யோ போலீஸ்கார்… போலீஸ்கார்… ஸ்டாப் ஸ்பாட். டெம்போ எல்லாம் வச்சுக் கடத்துறது நாங்க, ரான்சம் அமௌண்ட் கேக்குறது நீங்களா…? என்ன அநியாயம் இது…” என்று அரக்க பறக்க ஓடிவந்து சைத்ரா, ஆதவ் கையில் இருந்த சேரை புடிங்கி தரையில் போட்டு அதில் கால் மேல் கால் போட்டுகொண்டு உட்காந்தாள்.

 

“என்ன ஆதவ் சார், நான் எவ்ளோ நேரமா என்னோட டர்ன் வரும்னு ஆசைய வெய்ட் பண்ணணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்ன, ஒரேயடியில இவன் கதைய முடிச்சு, என் ஆசைய ஆழிச்சிடுவீங்க போலயே” என்ற‌ சைத்ரா, விமல் தலைமுடியை பிடித்து நிமிர்த்தி,

 

“ஏன்டா டேய், அப்ப நீ என்ன சொன்ன, பண்பாடா… அடிங்கு கொப்பமவனே… யார் யார் எதைப் பத்தி பேசுறதுன்னு ஒரு வகதொக இல்ல… நீ எல்லாம் அந்த வார்த்தையைச் சொல்லலாமடா பரதேசி… அப்புறம் என்ன சொன்ன, அவ ப்யூட்டியா? ஹாட்டா இருக்காளா?” என்று‌ விமல் கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்து, “சொல்லுடா இப்ப சொல்லு பாப்போம். பால் பவுடர் வாங்கிக் குடிக்கிற வயசுல உனக்கெல்லாம் பொண்ணுங்க கேக்குது இல்ல…” என்றவள் விமல் கை மற்றும் காலின் அனைத்து நகரத்தையும் பிடிங்கி எடுக்க, மீரா அவள் பங்கிற்கு அந்த இடத்தில் ஆசிட் சுற்றிவிட, வலியில் விமல் கத்திய கத்தலில் காட்டு மிருகங்கள் கூடத் தெறித்து ஓடி இருக்கும்.

 

ஆழி, விமல் தலையில் பட்டென அடித்து, தன் உதட்டின் மீது ஒரு விரல் வைத்து ‘உஷ்’ என்றவள், “டேய் மெல்லம கத்துடா. உள்ள ரூம்ல, நிலா பாப்பா தூக்கிட்டு இருக்கு, நீ கத்துற கத்துல குழந்தை முழிச்சிக்கப்போற, அமைதிய கத்துடா” என்றவளை விமல் பரிதாபமாகப் பார்க்க, ஆழி நக்கலாகச் சிரித்தாள்.

 

“ஹலோ… இன்னும் வீட்டோட இன்டு இடுக்குல இருக்க, யாருக்கது இவனுக்குச் சீர்வரிசை செய்ய ஆசை இருந்த வந்து செஞ்சிடுங்க, அப்புறம் வாய்ப்பு கிடைக்காது” என்ற சைத்ரா, “புல்லட் முகிலும், டெப்டி விஷ்ணுவும் எங்கிருந்தாலும் இங்க வருமாறு விழாக்குழுவின் சார்பாகக் கேட்டுக் இவனைக் கொல்லப்போறோம்” என்ற கத்த, முகிலும் விஷ்ணு வீட்டுக்கு உள்ளே வந்து அவர்கள் ஆசை தீரும் வரை வலுவாக விமலை கவனித்தனர்.

 

இருள் முழுதாகச் சூழ்ந்திருக்கும் அந்தக் காட்டுப்பகுதியில் அனைவரும் சுற்றி இருக்க, விமல் மரணபயத்துடன் அனைவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி தரையில் கிடந்தான்.

 

“டேய் விஷ்ணு பேசாம இவனை அரஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டலாம்டா. இவனெல்லாம் இவ்ளோ சீக்கிரம் சாகக் கூடாது. அனுஅனுவ ஜெயில்ல கிடந்து சித்திரவதை பட்டு சாகணும். பேசாம இவகிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்கி, எல்லாத்தையும் அரஸ்ட் பண்ணலாம்” என்க, பெண்கள் மூவரும், “ஏதே…” என்றபடி தலையில் கைவைத்து, “அப்பவே முகில் சொன்னாரு, என்ன இருந்தாலும் எங்க புத்தி போலீஸ் புத்தின்னு சரிய இருக்கு” என்று‌ வாய்விட்டு புலம்பினார்.

 

“ஹலோ ஆதவ் சார் முதல்ல உங்களுக்கு உள்ள இருக்கச் சி.பி.ஐக்கு லீவ் லெட்டர் குடுத்து வெளிய அனுப்புங்க… எப்பபாரு நீதிடா, நியாயம்டானு சரத்குமார் மாதிரி பேச்சிட்டு திரியுது. உங்களால இவனை எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அது உங்களுக்கும் தெரியும். அப்புறம் எதுக்கு இந்தத் தேவையில்லாத யோசனை எல்லாம். அதோட நாங்க வேற இவனுக்காக ஹெவிய இன்வஸட் பண்ணி இருக்கோம். அதெல்லாம் வேஸ்ட் ஆகிடும். அது நாங்க கஷ்டப்பட்டு ஸ்கெட்ச் போட்டு சம்பரிச்ச காசு ஆதவ் சார். அது வேஸ்ட்ட போக நாங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன். கொஞ்ச எங்க உழைப்புக்கு மரியாதை குடுங்க” என்றதும் சூழ்நிலை மறந்து அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

 

“இங்க பாருங்க ஆதவ் சார், அப்பர்ட் ப்ரம் ஜோக், நீங்க சொல்றது சரிய வராது. பிகாஸ் இவனும் இவனோட அப்பனும் வெறும் ஏஜெண்ட் மட்டும் தான். இவனுக்குச் சைலேஷ் பத்தியே முழுச தெரியாது, அப்புறம் யுவ்ராஜ் பத்தி என்ன சொல்றது சொல்லுங்க. அப்கோர்ஸ் நாங்க நினைத்தால் உங்களுக்கு எல்லா ஆதாரத்தையும் சொடக்கு போடும் நேரத்தில் ரெடி பண்ணி தரமுடியும் தான். பட் அதை நாங்க செய்ய‌மாட்டோம். பிகாஸ் இவனை ஜெயில் போட்ட அடுத்த நாலு நாள்ல இவன் அப்பன் இந்த நாயை வெளிய கொண்டு வந்துடுவான். வந்ததும் இந்த நாய் உங்க ஒருத்தரையும் தேடி தேடி ஆழிக்கப் பார்க்கும். அதை எங்களால பாக்க முடியாது ஆதவ் சார். எங்களுக்கு நிலா பாப்பா ரொம்ப முக்கியம் இவனை வெளிய விட்டு பாப்பா உயிருக்கு ஆபத்தைத் தேடி வைக்க நாங்க விரும்பல” என்ற சைத்ரா திரும்பி விமலை பார்த்தவள்,

 

“அதோட நீங்க உங்க ஐடியாவை ரொம்ப லேட்டா சொல்லிட்டீங்க, ஆல்ரெடி இவன் நரகத்தை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கிவிட்டார் ஆபிசர்” என்று இமைகொட்டி சிரித்தாள்.

 

“என்ன சொல்ற சைத்ரா நீ? என்ன பண்ணீங்… இல்ல இத எப்ப பண்ணிங்க?” என்று முகில் வியப்பாகக் கேட்க, அவனைப் பார்த்து கண்டித்த சைத்ரா, “செஞ்ச ஆளு பின்னாடி நிக்குது, அதையே கேளுங்க” என்று ஆழியைக் கைகாட்ட, ஆண்கள் மூவரும் ஆழியைப் பார்த்தனர்.

 

“நானா ஒன்னு செய்யல முகில். இவன் தான் உங்க கையால பாய்சன் குடுத்தாலும் பாயசம் மாதிரி ஃபீல்‌ பண்ணுவேன்னு சொன்னான். அதான் என் கையலயே பாய்சன் குடுத்தேன்.”

 

“அப்ப இவனுக்குக் குடுத்த டீயில் நீ விஷம் கலந்திய?” என்ற விஷ்ணு பார்த்து அவள் இல்லை என்க,

 

“அப்புறம் எப்படி?” என்றான் விஷ்ணு.

 

“டீல விஷம் கலக்கும் அளவுக்கு நாங்க ஒன்னு சீப்பான கில்லர்ஸ் இல்ல. நாங்க எல்லாம் (high-profile) ஹைய் ப்ராஃபைல், ட்ரேஸ்சே இல்லாம கிளீன் ஸ்வைப்ல மேட்டரல முடிக்கிறவங்க… சோ டீல எல்லாம் விஷம் கலக்க மாட்டோம். விஷம்‌ அவன் இப்ப முழுங்குன மருந்துல தான் இருந்துது. பயபுள்ள ஒரு முழு‌ பாம்பை முழுங்கி இருக்கு” என்று மீரா சொல்ல, விமல் முகத்தைப் போன போக்கை பார்த்த மீரா, 

 

“என்னடா புரியலய, ஆழி உனக்கு ஒரு காப்ஸ்யூல் குடுத்தாலே ஞாபகம் இருக்க, அதுக்குள்ள தலைவலி மருந்து இல்லடா, உன் தலைவிதிய முடிக்கப்போற உன்னோட எமன் இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அது தூக்கத்தில் இருந்து முழுச்சு, உன்னை ஒரேயடியா தூங்க வைக்கப்போகுது. ஆனா, அது நடக்க” என்று தன் கை கடிகாரத்தைப் பார்த்து, 

 

“ம்ம்ம் இன்னும் சரிய பத்துமணி நேரம் இருக்கு, நாங்க இப்ப இங்க இருந்து கிளம்பிடுவோம். உனக்கு உயிர் மேல ஆசை இருந்த இந்தக் காட்ல இருந்து வெளிய போய் உயிர் பொழச்சிக்கோ” என்ற மீரா அவள் ஐந்து விரல்களும் அவன் கன்னத்தில் பதியும் அளவுக்குப் பளார் என்று ஒன்று வைத்தாள்.

 

“ஆழி… மீரா என்ன சொல்றாங்க எனக்கு ஒன்னு புரியல… அதுவும் அவனை இங்க விட்டுட்டு போகப்போறோம்னு சொல்றாங்க, என்ன இதெல்லாம்?”

 

“உங்களுக்குப் புரியுற‌ மாதிரி சொல்றேன் ஆதவ். டேய் பரதேசி நீயும் கேளு, அப்ப தான் நீ எப்படிச் சாகப்போறேன்னு தெரிஞ்சு, உனக்கு இன்னும் குளுகுளுனு இருக்கும்” என்ற ஆழி, 

 

“இவனுக்குக் குடுத்த அந்தக் காப்ஸ்யூல்குள்ள ஒரு சின்னச் சைஸ் ஸ்னேக் இருக்கு, சைஸ் தான் குட்டி, பட் இட்ஸ் வெறி பாய்ஸ்னஸ். அதைத் தான் காப்ஸ்யூல் உள்ள வச்சு இவனுக்குக் குடுத்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவன் பாடி டெம்பரேச்சர் சூட்ல காப்ஸ்யூல் மெல்ட் ஆகி ஸ்னேக் வெளிய வரும்.” என்றது தான் விமல் வயிற்றைப் படித்துக்கொண்டு வாந்தி எடுக்கப் பார்க்க, “தச்சீ வாயமூடு, பேசிட்டு இருக்கேன் இல்ல. சத்தம் போட்டுடு இருக்க, சைத்து அவன் வாய்ல நாலு மிதி மிதிடி”

 

“வித் பிளஷர் ஆழி” என்று விமல் அருகில் சென்ற சைத்ரா, “எங்க ஆழி ஆக்டர் விஜய் மாதிரி, சத்தமாகப் பேசாத சுத்தாம புடிக்காது, மொத்தம தூக்கிடுவேன் கேஸு” என்று விமல் வாயில் பிளாஸ்டரை ஒட்டி விட்டு ஆழியைப் பார்த்து, “யூ கண்டினியூ” என்றாள்.

 

“அந்த ஸ்னேக் வெளிய வந்து இவனைக் கடிச்சதும், இவனோட‌ உடம்போட ஒவ்வொரு பார்ட்டும் செயலிழக்க ஆரம்பிக்கும், அதுல பாஸ்ட் பார்ட் அவனோட வாய் தான், ஐ மீன் அவனால பேச முடியாது. தென் கண்ணு பீஸ் போய்டும். அப்டியே ஒவ்வொரு பார்ட்டும். இங்கிருந்து இந்தக் காட்டைக் கடந்து வெளிய‌ போக, கொறஞ்சது ஏழு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள இவனோட பாதி உயிர் போயிருக்கும். இங்க நிறையச் செந்நாய்க இருக்கு, அதுங்க இவன் மீதி உயிரை நைட் டின்னர்கு எடுத்துக்கும். இப்ப எல்லாம் தெளிவ புரிஞ்சித… சரி சரி டைம் ஆகுது. இதுக்கு மேல இங்க இருக்குறது உங்களுக்குச் சேஃப்டி இல்ல, வாங்கப்போலாம்” என்ற ஆழி திரும்பி விமலை பார்த்து,

 

“மேல தனிய இருக்கணும்னு பயப்படாத, இன்னும் கெஞ்ச நாள்ல உங்கப்பன்‌‌ உனக்குத் துணைக்கு வருத்துவான். நரகத்திலவது நல்லவனா இருக்கப் பாரு, அப்படி இல்லாட்டி, அங்க என் கண்ணுல மட்டும் படக்கூடாதுனு சாமிய வேண்டிக்க… மீட்‌ யூ இன் ஹெல்…”

 

வீட்டில் ஆறு பேரும் அமர்ந்திருக்க, அங்கு அசத்திய அமைதி நிலவியது.

 

“என்னால நடந்ததை இப்பவும் நம்ப முடியல ஆழி. நாங்க நெனச்சது இவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நாங்க நினைக்கவே இல்ல…” என்று இழுத்து மூச்சு விட்ட விஷ்ணு, “ஆமா காப்ஸ்யூல்ல ஸ்னேக் இருக்குன்னு சொன்னீயே, அவ்ளோ சின்னப் பாம்பு இருக்க என்ன? அது எங்க இருந்து உங்களுக்குக் கிடைச்சிது?”

 

“அதை ஸ்னேக்னு சொல்லிட முடியாது விஷ்ணு இட்ஸ ஏ கைன்ட் ஆப் வார்ம் (புழு) பட், அதோட விஷத்தன்மை அதிகம். குறிப்பிட்ட ‌சில கன்ட்ரில மட்டும் தான் இது இருக்கும். செம்ம எக்ஸ்பென்சிவ். உங்களுக்கே தெரியும் நாங்க என்ன பண்ணலும், எவிடஸ் இல்லாம தான் செய்வோம். அதுக்கு இந்த மாதிரி சில விஷயங்கள் எங்களுக்குத் தேவைப்படும். சோ” என்று தோளைக் குலுக்கினாள்.

 

“ம்ம்ம் உங்களுக்கு உங்க வேலை மேல் செம்ம கமிட்மெண்ட் தான். ஆமா அந்த ஸ்னேன் என்ன அவ்ளோ எக்ஸ்பென்ஸ்வா ஆழி?”

 

“ஆமா முகில் ஒரு சின்ன‌ கன்சைன்மெண்ட் மினிமம் பத்துல இருந்து பதினஞ்சு லட்சம் வரும். அந்த ஏஜெண்ட் எங்களுக்கு ரெகுலர் சப்ளையர், சோ… வெலன் லாக்ஸ்கு குடுத்தான்.” என்ற‌ ஆழி மீரா தோளை இடித்து, கூடவே அவனுக்கு இவமேல ஒரு க்ரஷ் சோ ரேட் கம்மிய குடுத்தான்.” என்ற ஆழியின் தலையில் பலமாக மீரா கொட்ட, விஷ்ணுவுக்கு உள்ளுக்குள் அந்த ஏஜெண்ட் மேல் லேசாகக் கடுப்பு வந்தது. (இது என்ன இவனுக்குள்ள பொறாமை தீயி எரிஞ்சு கருகுற வாசம் வருது… என்னவா இருக்கும்???)

 

“ஆமா ஆழி இன்னேரம் அங்க செந்நாய் வந்திருக்குமா?

 

“ம்ம்ம் வந்திருக்கும் முகில்??”

 

“அதுப்படி உனக்குத் தெரியும்?”

 

“நேத்து நான் அங்க போயிருந்தேன் முகில். நைட் ஒரு மணிபோல அங்க நிறையச் செந்நாய்ங்க இருந்ததை பாத்தேன்” என்று அசல்ட்டாகச் சொல்ல, விஷ்ணு, ஆதவ், முகில் மூவரும் அதிர்ந்தனர்.

 

“ஏய் என்ன சொல்ற நீ?! அந்த நேரத்தில் நீ அங்க போனீய?” என்று ஆதவ் கேட்க,

 

“பின்ன அந்த இடத்தைப் பத்தி தெரியனும் இல்ல, அப்ப போய்ப் பாக்கதானே வேணும். இதுங்க எங்க வேலையில் சகஜமான ஒன்னு தான்” எனும் போது எதோ நொறுங்கும் சத்தம் கேட்க, அனைவரும் அதிர்ந்து எழுந்து நிற்க,

 

ஆதவ் காலடியில் அங்கிருந்த பெரிய பூஜாடி கீழே விழுந்து உடைந்து இருக்க, கண்களில் கோவம் அக்னியாக ஏறிய ஆழியை தீயாக முளைத்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!