அலை ஓசை – 4

sea2-57b8cd87

அலை ஓசை – 4

அலை ஓசை  –  4

சந்திரா,  தனக்கு வந்த பரிசை  பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள்.  காரணம்,  நேற்று ருத்ராவிற்கு வந்த அதே கிப்ட் பாக்ஸ் இன்று சந்திராவுக்கு வந்தது. ஆனால்,  ஒரே ஒரு வித்தியாசம். நேற்று ருத்ராவிற்கு வந்த கிப்ட் பாக்ஸ்யுடன் எந்த ஒரு கடிதமும் இல்லை.  இன்று சந்திராவுக்கு ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தை பிரித்த சந்திரா,  படிக்க ஆரம்பிக்கும் முன் அதை தன் கைபேசியில் படம் பிடித்து கொண்டாள். அக்கடிதத்தில், 

ஹலோ சந்திரா மேடம்.ருத்ரா விற்கு ஒரு கிப்ட் பிரசண்ட் பண்ணினேன்.பட்,  பேட் லக்.  அவன் எதையும் கண்டு பிடிக்கவில்லை. நீயாச்சும் ஏதாவது கண்டு பிடிப்ப என்று நினைக்கிறேன். ஆல் தே பெஸ்ட் ” என்று எழுதி இருந்தது.

ஆனால், அவள் படித்த சில நொடிகளில் அவ்வரிகள் மறைந்து விட்டது. ருத்ரா கூறிய மேஜிக் இன்க் பற்றிய நியாபகம் வர,  அவள் உதடுகள் அவளையும் அறியாமல் ‘சபாஷ்’ என்று அந்த நிழல் உருவத்தை பாராட்டியது.  “ஜித்தனுக்கு ஜித்தன் இந்த உலகத்தில் பிறந்து தான் இருப்பான்.  இதை நீ கண்டிப்பாக புரிஞ்சிப்ப பிளாக் சீப்” கசந்த புன்னகை உதட்டில் பரவ விட்ட சந்திரா,  தன் போரென்சிக் நண்பனை அழைத்து,

 ” சேகர் சந்திரா டா” “சொல்லு சது,  என்ன ஆச்சரியம் உன் பிஸி டைம்ல மேடம் எனக்குலாம் கால் பண்ணி இருக்க,  சொல்லு எந்த கேஸுக்காக  என் ஹெல்ப் உனக்கு தேவை படுது” தோழியை நன்கு அறிந்த நண்பனாய் சேகர் கேட்க, “எல்லாம் மகேஷ் காணாமல் போன கேஸ் தான், டிவில நியூஸ் பார்த்து இருப்ப. நான் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன்,  அதை வைத்து எழுதினவங்களோட பெர்சோனாலிட்டி பத்தி சொல்ல முடியுமா?  ” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர,  “இனிக்கு ஈவினிங் சொல்லிடுறேன் சது” வாக்கியங்கள் முற்று பெற்றாலும், கடமைகள் முற்று பெறாமல் இருக்க,  இருவரும் அதை மேற்கொள்ள,  சந்திரா ருத்ராவை காண ஹாஸ்பிடலுக்கும், சேகர் அவன் லாப்பிற்கும் செல்ல ஆயத்த மாகினர். 

சந்திரா கிளம்பும் சமயம், பிராத்தல் சம்பந்தமான ஒரு கேஸ் வந்தது. அதை தன் அஸிஸ்டண்ட்  ஆதியிடம்  பார்த்து கொள்ள சொல்லி விட்டு,  தன் ஜீபில் பயணமானாள்.  தன் அஸிஸ்டண்டினிடம் சொல்லாமல்,  தானே அந்த கேஸை பார்த்திருந்தால்,  நடக்க போகும் இரண்டாவது கடத்தலை தடுத்திருக்கலாமோ என்னமோ? அதை அறியாமல் சந்திரா ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று கொண்டிருந்தாள்.

# # # # # # 

எல்லையில் வேலை 
செய்யும் வீரனுக்குமுண்டு,
கொல்லையில் வேலை
செய்யும் உழவனுக்குமுண்டு… 
வெயிலில் உடல் களைத்து
போகும் கொத்தனாருக்குமுண்டு, 
ஏசி குளிரில் வைட் காலராய்
வேலை செய்யும் ஐ. டி
பொறியாளர்களுக்கும் உண்டு… 

கடமை!  

# # # # # # #

ஹாஸ்பிடலுக்கு சென்ற சந்திரா, நேராக ருத்ரா இருக்கும் இடத்திற்கு சென்றாள். ஏனோ,  போனில் பேசிய போது இருந்த உற்சாகம் இப்போது அவனிடம் இல்லை. சந்திரா வந்ததை உணர்ந்த ருத்ரா,  “பேட் லக் சது. நோ க்லூஸ் “என்று வருத்தப்பட, ” நீ நடந்ததை சொல்லு ருத்ரா,  நீ மகேஷ் எப்படி கடத்தப்பட்டு இருக்கான் என்பதை கண்டு பிடித்து விட்டாய் என்று கூறினாய் அல்லவா? ” என்று அவனை ஊக்குவித்தாள். 

அன்று காலை ஹாஸ்பிடலுக்கு வந்த ருத்ரா,  நேராக சென்றது மார்ச்சுரிக்கு தான்.  அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா, ஹாஸ்பிடல் சிசிடிவி ஸ்டோரேஜ் டிஸ்க் யுடன் டேரக்ட் லிக்ங் இல்லை என்று முதலில் கண்டறிந்தான் .  பின்,  அதற்கான ஸ்டோரேஜ் பூடேஜஸ் ஐ காண வேண்டும் என்று ஹாஸ்பிடல் டெக்னீஸியன்ஸிடம் கூறினான்.  சில நிமிடங்களில்,  அதை பார்த்தவன்,  அந்த நிழல் உருவம் திட்டமிட்டு தான் மகேஷை கடத்தி சென்று இருப்பதை கண்டறிந்தான்.  

“சது,  அதுல மகேஷ் போதையில் நடப்பது போல மார்ச்சுரி நோக்கி வந்து கொண்டு இருந்தான்.  சில நொடிகளில்,  அவன் தரையில் விழுந்தான்.  அதற்காகவே காத்து இருப்பது போல்,  அவனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி அந்த நிழல் உருவம் சென்று விட்டது.  மேலும்,  அந்த நிழல் உருவம் தன்னை ரயின் கோர்ட் மூலம் முழுதாக மறைத்து கொண்டது.  பலமான மழையால் பூடேஜஸும் சரியாக பதிவாக வில்லை. 

மகேஷோட மயக்கமான நிலை எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.  மகேஷோட அடென்டர் நர்ஸ்  ரெண்டு பேரையும் விசாரித்த பிறகு தெரிந்தது,  அவன் இருந்த புளோரில் இருக்குற எல்லா நோயாளிகளுமே மயக்கத்தில் இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சுது ரூம்ஸ்க்கு யூஸ் பண்ற ஸ்பிரேயில் மயக்க மருந்து கலந்து இருக்கு என்று.  மகேஷ் ரூம்க்கு ஸ்பிரே பண்ண சில நிமிடங்களில் அவன் அடென்டர்க்கு மகேஷ் கிட்ட பேசணும் என்று ஒரு போன் கால் வந்து இருக்கு.  

பேசின மகேஷ் ரொம்ப நேவர்ஸ் ஆகி கத்த ஆரம்பித்து இருக்கான். அவன் அடென்டர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், மகேஷ் ரூம விட்டு வந்திருக்கான். கால் வந்த நம்பரை டிரேஸ் பண்ணினா இப்போது மகேஷ் வீட்டை காட்டுது”  என்று கூறி முடித்த ருத்ரா,  “உனக்கு ஏதாவது தோன்றுகிறதா சது? “

” நீ சொன்ன அந்த நம்பர் ஏன் மகேஷ் வீட்டை காட்ட வேண்டும்? ”  என்று சந்திரா  தன் சந்தேகத்தை கூற,  “எனக்கும் இது தோணியது. ஸோ, நான் மகேஷோட வீட்டை ரைட் பண்ண ஐ.டி டிபார்ட்மென்ட் கிட்ட கேட்கலாம்ன்னு நினைக்கிறேன. நீ என்ன நினைக்கிற சது?”  “குட் ஐடியா! அதோடு எனக்கு இன்றைக்கு ஒரு கிபிட் பாக்ஸ் வந்தது ” என்று சந்திரா கூற, சந்திராவின் அர்த்த பார்வையின் செய்தியை உணர்ந்த ருத்ரா, “என்ன என்று பார்த்தியா சது?” “வா, பார்ப்போம் ” என்று ஒரு அறைக்கு சென்றனர்.  

அந்த கிப்ட்யில் இருந்த சிடியை play செய்து பார்த்த இருவரும் அதிர்ந்தனர்.  1.36 நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில், மகேஷ் ஒரு நாற்காலியில் மயங்கிய நிலையில் இருந்தான்.  அவனை சுற்றி இரண்டு அடி இடைவெளியில் ரெகார்ட் செய்ய பட்டு இருக்க வேண்டும்.  மேலும்,  அவன் இருக்கும் இடத்தை அறியாமல் இருக்க அவனை சுற்றி வெள்ளை நிற திறை இருந்தது. வீடியோ முடியும் போது, 

நானே எவ்வளவு தடயம் கொடுக்க முடியும் செல்லம்ஸ், நீங்களும் ஏதாவது பண்ணுங்க”  என்று ஏளனமாக ஒரு மிமிக்ரி வாய்ஸ் கூறியது.  

“டாம் இட்” என்று கத்திய  ருத்ரா, குழப்பமான நிலையில் இருந்த சந்தியாவை பார்த்து “என்ன யோசனை சது? ” என்று வினவினான். 

“நான் அந்த நிழல் உருவம் பண்ணிய எல்லாவற்றையும் யோசிக்கிறேன். வாட்ஸ் கால் பண்ணி மகேஷ் கடத்த பட போவதாக கூறியது,  அப்புறம் பேப்பர் இப்போது இந்த  வீடியோ , எல்லாமே தன்னோட அடையாளத்தை மறைத்து வைத்து. இது எல்லாம் ஏதோ அப்போவே திட்டமிட்டு பண்ண மாதிரி இல்லை.  ரொம்ப நாளா பிளான் போட்டு, இந்த ஹாஸ்பிடல்  நம்ம அலுவலகம் எல்லாத்தையும் நல்லா கவனிச்சு  பண்ணி இருக்கணும்..  எந்த ஒரு சிசிடிவிலியுமே அந்த நிழல் உருவத்தோட உருவம் தெளிவாக பதிவாக வில்லை.”

என்று அவள் தன் யோசனையில் மூழ்கி இருக்க,  இருவரின் மனதிலும் அந்த முதல் கிப்ட்யில் வந்த பேப்பர் வந்து வந்து போனது..  

“சது,  அந்த நிழல் உருவத்தோட ஆக்டிவிடீஸ் பார்த்தா,  நம்மல இப்போ கூட வாட்ச்  பண்ணுற மாதிரி இருக்கு.  இத கண்டு பிடிக்கவே நமக்கு இவ்ளோ நேரம் ஆகிவிட்டது. நான் போய் ஐ. டி. டிபார்ட்மென்ட் ல ரெட்டி வீட்டை ரைட் பண்ண பேசுறேன்.  நீ போய் கமிஷனர் கிட்ட இதை பற்றி சொல்லி விடு” என்று கூறி கொண்டே தன் தொப்பியை மாட்டிக் கொண்டு சென்று விட்டான்.

ஆனால், சந்திரா தன் யோசனையில் இருந்து வெளியே வரவில்லை.  அவள் மனதில் அந்த நிழல் உருவம் மட்டுமே நிறைந்து இருந்தது. 

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்,  அதுவும் மகேஷ் அட்மிட் ஆகி இருந்தது ஐசியு க்கான பகுதி. அங்கு இருந்த எல்லாரும் ரூம் ஸ்ப்ரே னால மயக்கமாகி இருக்காங்க. பட்,எந்த நோயாளிகளுக்குமே மயக்க மருந்தால எதுவும் ஆகவில்லை. அப்படினா, மருந்தோட வீரயத்திற்கான அளவு கம்மியாக இருந்து இருக்க வேண்டும்.அப்படினா, எந்த அளவு மருந்து போட்டா எப்படி வேலை செய்யும் என்ற பேஸிக்ஸ் தெரிந்து இருக்க வேண்டும். மிமிக்ரி , எஸ்.எப்.எக்ஸ்(SFX) எஃபெக்ட்,  இப்போ மருந்து ஓட அறிவு, இது எல்லாம் மகேஷ கடத்த கற்றுக் கொள்ள பட்டதா இல்லை தனக்கு முன்னமே தெரிஞ்சத இதுக்கு யூஸ் பண்ணிகிட்டாங்காலா?

அதோடு,  கடத்தப்பட்ட மகேஷயும் அடித்த மாதிரி தெரியலை. அவனோட உடம்பில் எந்தவொரு தழும்பும் இல்லை. அவன் மயக்கமாக மட்டும் தான் இருந்தான்.அப்புறம்   எதுக்கு கடத்தப்பட்டு இருக்கணும்? குழப்புதே ஆண்டவா!  ” என்று குழம்பி பாரமான தன் தலையை கையில் தாங்கி அமர்ந்தாள்.  அப்போது அவள் காதோரம், 

“செல்ல குட்டி, ரொம்ப யோசிச்சா குழப்பம் தான் வரும்.  அதிகமான குழப்பம், கோபம், சோகம் எல்லாமே நம்முடைய மனவலிமையை பலவீன படுத்தும். ரிலாக்ஸ் பண்ணு.  உன்னால் முடியும் என்கிற நம்பிக்கையை கொண்டு வா. எல்லா பிரச்சனைகளும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும்.  நீ தெளிவா  இருந்தா மட்டுமே,உனக்கான தீர்வு உன்னை வந்து சேர்ந்து இருக்கும்” என்று வலிமையான ஒரு ஆணின் குரல் கேட்டது.  

அந்த குரலில் அவள் மனது அமைதியானது.  புது தெம்பு வந்தது போல் உணர்ந்தாள். மனதில் எதோ நெருடல் ஏற்பட, அதை உடனே தெளிவுபடுத்தி கொள்ள, ருத்ரா விடம் கூட சொல்லாமல்,தன் தந்தையை காண சென்றாள். 

# # # # # # 

மனம் ஒரு குழந்தையே!
கடினமான எதையும்
தாங்கும் இதயம்,
கூடசில நிமிடம்
சம்பித்து தான் போகிறது,
தேவை எல்லாம்
ஆறுதல் வார்தையும்,
தைரியமூட்டும் சொற்களுமே தான்!
பிறருக்கு கொடுத்துவிட்டு செல் நண்பா!!
உனக்கே ஒரு நாள்
ஏதோ ஒரு வகையில்
அவை திரும்பி வரலாம்!!!

# # # # # # 

இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கு சென்ற ருத்ரா,  மகேஷ் கேஸில் தான் கண்டு பிடித்த அனைத்தையும் கூறினான்.  

“ரெட்டி வீட்டை ரைட் பண்ணினால் கண்டிப்பாக ஏதாவது க்லூ  கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன் தீரன்” என்று தன் யோசனையையும் கூறினான்.  

சிறிது நேரம் யோசித்த அந்த ஆபிசர் தீரன் குமார்,  “ருத்ரா,  நீங்க சொல்ல வருவது எனக்கு நல்லா புரியுது.  பட், தீரஜ் ரெட்டி மும்பை கோடீஸ்வரரில் அவரும் ஒருத்தர்.  சோ, வீ ஹாவ் டு ஃபாலோ அவர் ரூல்ஸ். எங்களோட மேல் அதிகாரிகள் கிட்ட பெர்மிஸன்  வாங்கணும். ஒரு இரண்டு மணி நேரம் டைம் கொடுங்கள். ஐ வில் மேக் அ கால் டு மை சீனியர். வீ வில் டூ அவர்  டுயிட்டி! உங்களுக்காக சீக்கிரமா பண்ண டிரை பண்றேன் ” என்று நம்பிக்கை ஊட்டினார்.  அங்கிருந்து நேராக தன்  ஸ்டேஷனுக்கு சென்ற ருத்ரா,  மற்ற கேஸ்களை  பார்வையிட ஆரம்பித்தான்.  எனினும்,  அவன் மனதில் சீக்கிரமாக மகேஷ் கேஸை முடிக்க வேண்டும் என்ற  உத்வேகம் பிறந்தது.  

# # # # # # # # 

சந்திரா தன் தந்தையை காண கமிஷனர் அலுவலகம் வந்தாள். ஆனால், கமிஷனர் யாரையும் தன்னை தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி விட்டது சந்திரா யோசிக்க வைத்தது,  தனியாக ஒருவரிடம் வீடியோ கால் பேசி கொண்டு இருப்பது விவாதம் இல்லை என்றாலும்,  எதையும் தன்னிடம் மறைக்காத டாடி இன்று தன்னையும் அனுமதிக்க கூடாது என்று கூறியது சந்திரா விற்கு விநோதமாக தான் தெரிந்தது.  

பின் ருத்ரா கண்டறிந்த அனைத்தையும் தன் தந்தையிடம் ரிபோர்ட் செய்த சந்திரா,  தன் ஸ்டேஷனுக்கு சென்றாள்.  அங்கு ஆதியிடம் காலையில் தான் கொடுத்த பிராத்தல் கேஸின் டியிடெயில்ஸ் கொண்டு வர சொல்லி விட்டு,  இன்ன பிற கேஸை பார்வையிட்டு கொண்டு இருந்தாள்.  

“மேம்  நீங்க கேட்டது ” என்று ஆதி ஒரு பைலை கொடுக்க,  “ஆதி,  இந்த ஹோட்டல்   எங்க இருக்கு? ” என்று சந்திரா வினவ,  

“மேடம்,  இந்த ஓபன் ஹார்ட்ஸ் ஹோட்டல் புதுசாக வந்திருக்கிறது. லைட்ஸ் தெருவில்  இருக்கிற ஒரு குழந்தை பூங்காவை தான் இப்படி ஹோட்டலா  மாற்றி இருக்காங்க. அந்த பார்க் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறதால மக்கள் அந்த பூங்காவை யூஸ் பண்ணாமல் விட்டு இருக்காங்க.  இப்போது ஹோட்டலா மாறின பிறகும் கூட மக்கள் நைட் ஸ்டே பண்ண பயப்படுறாங்க. அதுனால அவங்களுக்கு பிராத்தல் பண்ண அந்த நேரத்தை பயன்படுத்திகிறாங்க!” 

என்று தான் கண்டறிந்தவற்றை கூறி கொண்டு இருக்கும் போதே,  சந்திராவிற்கு தன் தாயிடம் இருந்து கால் வரவே, “குட் ஜாப் ஆதி! நாளைக்கு இவங்களை கோர்ட் யில் ஆஜர் பண்ணிடுங்க ஆதி. வேற ஏதாவது கேஸ் வந்தாலும் நீங்களே ஹாம்டில் பண்ணுங்க. மகேஷ் கேஸ் கொஞ்சம் க்ரிடிக்கலா போகுது. ஸோ, என்னால மற்ற கேஸஸை கவனிக்க முடியலை. ஐ நோ யூ வில் மேனேஜ் வெரி வெல்!” என்று சந்திரா நிதர்சனத்தை கூற,  

“எனக்கு உங்கள் நிலைமை நல்லா புரியுது மேடம்! அப்படி யே ஏதாவது சந்தேகம் வந்தாலும் உங்ககிட்ட கிளாரிபை பண்ணிட்டு பிரோஸீட் பண்ணிக்கிறேன்.  யூ டோண்ட் வொரி மேம்!” என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசிய ஆதியை பாராட்டுதலாக பார்த்த சந்திரா,  தன் வீட்டை நோக்கி பயணமானாள். 

ஆனாலும்,  அவள் மனதில் ஓபன் ஹார்ட்ஸ் என்ற பெயர் குழப்பத்தை தந்தது.

# # # # # # # 

எவ்வளவு பெரிய
மலையாக இருந்தாலும்,
ஒவ்வொரு அடியாக
எடுத்து வைத்தால் ,
ஏதோ ஒரு அடியில்
உச்சியை நிச்சயம்
அடைய முடியும்!
நகர்ந்து கொண்டே
இருப்பது தான்
மிகவும் அவசியமே!
சோர்ந்து போகாதே மனமே!
கீழும் நோக்காதே…
கண்களை மேல்
நோக்கி வீசு!
மலையும் ஒரு நாள்
உன் கால் கீழே!

# # # # # # # 

வெயிட் அண்ட் வாட்ச்… 

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # # # # 

Leave a Reply

error: Content is protected !!