C/O-Kadhali 16

C/O-Kadhali 16

                                                                                                              C/o காதலி 16

அம்புவிடம் அவமானப் பட்டவன் அவளது வருகைக்காக காத்திருந்தான். அந்த பப் மேனேஜரை கரெக்ட் செய்து வைத்துக் கொண்டான். அவள் எப்படியும் மாதம் ஒருமுறை வருவாள் என தெரிந்து கொண்டான். அதற்கு முன் சில ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டான்.

இவை எதையும் அறியாத அம்பு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைக் காண வேண்டும் என்று நினைத்திருந்த விக்ரமும் முழுவதுமாக அவனது இறுதி ஆண்டு படிப்பில் மூழ்கிவிட , மனதில் நினைப்பதோடு இருந்தான். அவனது தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருந்தது. அதன் பிறகு ஆறு மாதம் ப்ராஜெக்ட் மட்டுமே செய்ய வேண்டும்.

அம்பு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்…” மீனா அவள் அருகில் வந்தாள்.

என்ன டிரொம்ப குழையற? விஜய் கூட வெளிய போற நான் ஹாஸ்டல் வார்டன்கு தெரியாம பாத்துக்கணும்.. அதானே?” இத்தனை நாட்கள் அவள் செய்த வேலையை சொல்லிக் காட்டினாள்.

அதில்ல்லஇது வேற….” காதைச் சொரிந்தாள் மீனா.

என்ன இழுக்கறசொல்லி முடி” புருவத்தை உயற்றி அவளைக் கேட்க,

ஒண்ணுமில்ல டி .. விஜய் வீட்ல எல்லாரும் ஏதோ ஊருக்கு போறங்களாம். சோ விஜய் தனியா இருப்பான்னு என்னை துணைக்கு வர சொல்றான். மூணு நாள் தான். உடனே வந்துடுவேன்.” அவள் சொல்லி முடிக்கும் முன்னே அம்புவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அடிபாவிஇது அடுக்குமாஎங்கயாச்சும் நடக்குமாநோ நோ” அதிர்ந்தவள், ரூமிற்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

ஹே! ப்ளீஸ் ப்ளீஸ்என் செல்லம் இல்ல….” அவள் கூடவே நடந்து அம்புவின் கன்னத்தைப் பிடித்துத் தொங்கினாள்.

அம்பு மறுக்க, மீனா கெஞ்சநீண்ட நேரத்திற்குப் பிறகு அம்புவை சம்மதிக்க வைத்துவிட்டாள்.

அந்த நேரம் சுப்பு அறைக்குள் வர, “என்ன டி நடக்குது.. நீ ஏன் அவ கைய பிடிச்சுகிட்டு இருக்க..?” மீனாவிடம் கேட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அம்பு அவளிடம் விஷயத்தைக் கூறினாள். சுப்புவிற்கு கமலின் நினைவு தான் வந்தது. இருந்தாலும் அந்த நொடியைச் சமாளித்து “ஓ! ஒரே கில்மா தான்.. போயிட்டு வந்து ஊனு விடாம சொல்லணும்.” சாதாரணமாகக் கூறி அந்த நொடியைச் சீர் செய்தாள்.

இருவரும் மீனாவிற்கு விடை கொடுத்த பின்னர், சுப்பு தனது போனை எடுத்து கமலின் மெசேஜ் களை பார்க்க, அவன் மூன்று நான்கு முறை அழைத்தது தெரிந்தது. அவனுக்கு ‘ஹாய்’ என்று அனுப்பிவைத்தாள்.

உடனே அவனிடமிருந்தும் பதில் வர, அவர்களது கைபேசிக்கு வேலை தொடங்கியது.

அம்புவிற்கு மட்டும் தான் தனித்து விடப்பட்டது போல் தோன்றியதும், அவளது தோழி உமா வையும் ஜானுவையும் அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றாள்.

ஜானுவிற்கு அந்த ஆண்டு இறுதி என்பதால் எந்நேரமும் அவர்களின் இஷ்டம் போல் சுற்றித் திரிந்தனர்.

ஹே அம்பு இதுக்குப் போயா ஃபீல் பண்ணுவ, இன்னிக்கு உனக்காக நாம பப் போறோம்.. ஓகே வா.. நீ டோப் ட்ரை பண்ணிருக்கியா?” ரகசியமாகக் கேட்க

ம்ம்ம்நாங்க கோவா போனப்ப ஒரு தடவை ட்ரை பண்ணிருக்கோம்.” புன்னகைத்தாள்.

ஹே மச்சான்.. செம டிஎனக்கும் ட்ரை பண்ணனும்.” உமா சொல்ல,

ம்ம்.. கீப் இட் சீக்ரெட். எங்க கேங்க்கு ஒரு சோர்ஸ் கெடச்சிருக்கு. அது மூலமா அரேன்ஜ் பண்ணி நேத்து தான் ட்ரை பண்ணோம். சும்மா சொல்லக் கூடாது. அதுவும் கூட நம்ம பகார்டி யும் சேந்தாசொர்க்கம் தான். சும்மா வா சொன்னங்க சொர்க்கம் மதுவிலே ன்னுகம்மான் லெட்ஸ் என்ஜாய்.” சும்மா இருந்தவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள் ஜானு.

அம்பு விரத்தியில் இருக்க , இதை செய்தால் என்ன என்ற முடிவிற்கு வந்தாள்.

அன்று தான் விக்ரமும் அவனது நண்பர்களும் அதே பப்பிற்கு செல்லலாம் என முடிவு செய்திருந்தனர். இறுதி ஆண்டைக் கொண்டாட அவர்களின் திட்டம் அது.

வழக்கம் போல் இவர்கள் சுவர் ஏறி குதித்துச் செல்ல, அதற்கு முன்பே அம்புவைப் பழிவாங்கக் காத்திருந்தவன் அங்கே பப்பில் இருந்தான். அவள் வருவதை அவனது நண்பன் அவனுக்கு அறிவித்தான்.

இங்கே அவளுக்காக அவன் ஒரு மருந்தை தயார் செய்து வைத்திருந்தான். அவள் அருந்தப் போகும் அந்த பானத்தில் கலந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான்.

இந்த நேரத்தில் விக்ரம் அவனது நண்பர்கள் கட்டாயத்தால் அதே பப்பிற்கு வந்தான். அவன் வந்ததும் அங்கே அம்பு உள்ளே நுழைவதைப் பார்த்தான். ‘இவள் இங்கு தான் வருகிறாளா அடிக்கடி…!’ என யோசித்துக் கொண்டிருக்க , அவனது நண்பன் அவனுக்காக ஒரு ஷாட் எடுத்து வந்தான்.

மச்சான் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல டா..” என்க,

அட நீ என்னடா அந்தக் காலமா இருக்க.. இங்க பாரு நம்ம காலேஜ் ஜூனியர்ஸ் கூட அதுவும் பொண்ணுங்க எவ்வளோ கூலா வந்து உக்காந்து அடிக்கராளுங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படி கூத்தடிப்பங்கன்னு பாரு.. என்ஜாய் பண்ணு மச்சான் இதெல்லாம்.. இந்தா அடிஎன அவனது கையில் திணித்தான்.

அம்பு அவளது தோழிகளுடன் இருந்தாள். அவளுக்காக அந்த கயவன் ஏற்பாடு செய்ததை அந்த பார்டெண்டர் கொடுத்தான். அதற்குள் ஜானு அவளை ஆட அழைக்க, இருந்த சோகத்தில் கையில் இருந்ததை ஒரே மடக்கில் குடித்தவள் டான்ஸ் ப்ளோரில் ஆட ஆரம்பித்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

அவனது அருகில் தான் அந்த மருந்தைக் கொடுக்கச் சொன்னவன் நின்று பார்டெண்டரிடம் பேசினான்.

என்ன.. அவளுக்கு அதை கலந்து குடுத்தியா?”

குடுத்துட்டேன் பா. கஞ்சாவே போதை , நீ அதுகூட எக்ஸ்ட்ராவா இன்னொரு போதை மருந்தை கலந்து குடுத்திருக்க.. என்ன ஆகப் போகுதோ..” அந்த பார்டென்டர் வருந்த..

படட்டும்.. எவனாவது அவ கூட ஆடட்டும். அப்பறம் பாரு அவ அவன் மேலே சொக்கி விழ இன்னிக்கு அவ கற்பிழந்து தான் இங்கிருந்து போவா… வெறிகொண்டு சிரித்தான்.

ஏன் நீயே போறது தான ..” மற்றவன் கேட்க,

அவ என்னை மறந்திருக்க மாட்டா.. நான் போனா வேலைக்கு ஆகாது.” அதற்குள் அவனுக்கு அழைப்பு வர

மச்சான் பாத்துக்க.. வந்துடறேன்..” என்றுவிட்டு இடத்தை காலி செய்தான்.

இதைக் கேட்ட விக்ரம்ஒரு நிமிடம் வருந்தினான். அவளுக்கா கொடுத்தான் ? ஏன் கொடுத்தான்.? அவளுக்கு என்னவாகப் போகிறதோ என்று யோசிக்கும் முன்பு அங்கு சில ஆண்கள் வந்து ஆடத் துவங்க, அவளை எப்படியும் காக்க வேண்டும் என்று அவன் துடித்தான்.

கையில் இருந்த ஷாட்டை ஒரே கல்பில் அடித்தவன் அவள் ஆடிக் கொண்டிருந்த மேடைக்குச் சென்று அவளிடம் அவளுக்குக் கொடுக்கப் பட்டதைப் பற்றிக் கூற, அங்கு ஓடிய மியூசிக்கின் சத்தத்தில் அவளுக்கு ஒன்றும் கேட்க வில்லை. அத்தோடு அவளும் கேட்கும் நிலையில் இல்லை. அவளது தோழிகளோ ஆளுக்கு ஒருவனுடன் ஆடத் துவங்க, இவள் இவன் கையைப் பிடித்து ஆட ஆரம்பித்தாள்.

அவனுக்கும் புதிதாக அடித்த டகிலா தொண்டை வரை எரிய, அவளை அவள் போக்கில் ஆடி அங்கிருந்து அழைத்துச் சென்றான். அவள் போதை தலைக்கேறிய நிலையில் இருந்தாள். அவனை எங்கோ பார்த்தது போல் இருந்தாலும் அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை.

அவனோடு அந்த மேடைய விட்டு கீழே இறங்கினாள். தள்ளாடியவள்,

ஒன் ஷாட் ப்ளீஸ்..” என அங்கிருந்த பார் ஸ்டூலில் அமர்ந்தாள்.

ஐயோ.. கடவுளே.. ஏறுனது பத்தாதா… வா..” என அவளை இழுக்க,

ஷ்ஹூ… ப்ரோ..ஒன் டகீலா…” என சுழன்ற கண்களால் அந்த பார்டெண்டரிடம் கேட்க,

வேணாம்… இங்க ரூம் இருக்கா…” என விக்ரம் அவனிடம் கேட்டான்.

இவன் தான் இவள செய்யப் போறான்மனதில் நினைத்தவன், “இருக்கு லெப்ட் போய் மூணாவது ரூம் எடுத்துகோங்கசாவியையும் அவன் கையில் கொடுத்து அனுப்பினான்.

விக்ரம் அவளுக்கு வேறு யாராலும் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்று நினைத்துத் தான் அவளை ஒரு அறையில் பூட்ட நினைத்தான். ஆனால் அங்கு நடந்தது வேறு.

சாவியை வாங்கியவன், அவளை பிடித்து இழுத்துச் சென்றான். அதற்குள் அவளுக்கு போதையின் தாக்கம் அதிகமாக ஏறி இருந்தது. அவளால் எதையும் சிந்திக்கவோ இல்லை சுயமாக எழுந்து நடக்கவோ கூட முடியவில்லை. அவள் உடன் வந்தவர்கள் ஆட்டத்தில் மூழ்கி இருக்க, இவளை யாரும் தேடவும் இல்லை.

அதற்குள் அந்த பார்டெண்டர் அவளுக்கு மருந்து கொடுக்கச் சொன்னவனுக்கு, அம்புவை ஒருவன் அழைத்துச் செல்வதாக குறுஞ்செய்தி அனுப்பினான். உடனே அவன் அங்கே வர, அதற்குள் விக்ரம் அவளை அழைத்துச் சென்றிருந்தான்.

அவளுக்கு அது பத்தாது. இன்னொரு மாத்திரைய போட்டு அவ ரூம்க்கு அனுப்பு. திரும்ப ட்ரிங்க்ஸ்ல கலக்காத, சோடா ல மிக்ஸ் பண்ணி அனுப்பு.” குரூரமாக யோசித்து சொல்ல,

அவனும் அவ்வாறே செய்து, ரூம் சர்வீஸ் பையனிடம் கொடுத்து அனுப்பினான்.

விக்ரம் அவளை அங்கிருந்த மெத்தையில் கிடத்தினான். அவளோ கண்டபடி புலம்பிக் கொண்டிருந்தாள். அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு விடமாட்டேன் என அடம்பிடித்தாள். அவனோ, அவளது கையைப் பிடித்து விலக்க முயற்சிக்க, கழுத்தை விட்டு இப்போது அவனது இடையைக் கட்டிக் கொண்டாள்.

என்ன விட்டு போகாத நீயும்..” என்றாள். அவளது தோழிகள் சுப்புவும் மீனாவும் இப்போது அவர்கள் ஆளுடன் சென்றதை நினைத்துக் கூறினாள்.

என்ன பண்ற நீ. உன் பேரு என்ன… அத முதல்ல சொல்லு..” அவள் அம்பு தானா என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான்.

என் பேர் கூட உன்க்குத் தெரியாதா. அம்புஅம்புஜாக்ஷிபைத்தியம் போல சிரித்தாள்.

இப்போது லேசாக விக்ரம் புன்னகைத்தான். ஆனால் இவளுக்கு ஏன் இந்தப் பழக்கம் என்று வேதனைப் பட்டான்.

இங்க எதுக்கு வந்த.. அடிக்கடி நீ வரத நான் பாத்திருக்கேன். இதெல்லாம் நல்லதில்ல… இனிமே இங்க வராத.. இனிக்கு நான் மட்டும் வரலன்னா உன் நிலைமை அவளோ தான்.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது ரூம் சர்வீஸ் என கதவு தட்டப் பட, எழுந்து சென்றான்.

அவன் கொடுத்த தண்ணீர் மற்றும் சோடாவை வாங்கிக் கொண்டு கதவைத் தாழிட்டான்.

சோடா சற்று இனிப்பாக இருக்கும் என்பதால், முதலில் அவன் எரியும் தன் தொண்டைக்கு சரி செய்ய நினைத்து அதைக் குடித்துவிட்டான். குடித்த பின் அவனுக்கும் கால்கள் நிற்க முடியாமல் தலை சுற்ற ஆரம்பித்தது.

இது தான் விதியின் விளையாட்டு. இப்போது அவனும் அவள் அருகில் சென்று அமர நினைத்து கட்டிலுக்குச் சென்றான். அங்கே அந்தக் கட்டிலும் ஒரு டேபிளும் ஒரு அட்டாச்சுடு பாத்ரூம் மட்டுமே இருந்தது.

அதனால் வேறு வழியின்றி கட்டிலில் அமரப் போக, அம்பு அவனைப் பிடித்துக் கொண்டு , “எங்க போக பாத்த நீ.. உன்ன நான் விடமாட்டேன்.” என அவனை தன் பக்கம் இழுத்தாள்.

எசகுபிசகாக அவன் தள்ளாடி அவள் மேலேயே விழுந்தான். அவள் அணிந்திருந்த குட்டைப் பாவடையில் தெரிந்த அவளது கால்களை அவனது கைகள் அனிச்சையாகப் பற்றியது. போதை மருந்தின் வேகமும், இளமையின் துடிப்பும், அவளது உணர்வுகளைத் தூண்டியது.

விக்ரமும் பெண்ணவளின் மென்மையில் தன்னை மறந்தான். அவளது வழவழப்பான கால்களும், அவள் தான் அம்பு என்கிற அவனது மனதின் ஆசையும், அவனக்குத் தலைகேறிக் கொண்டிருந்த போதை மருந்து மனதில் ஆசைகளை விதைத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, ஏற்கனவே அவனை சைட் அடித்த அம்பு அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள். பெண்ணவளின் வாசம் அவனை கிறங்கச் செய்தது. நண்பிகள் ஏற்கனவே தூண்டிவிட்டிருக்க அவளுக்கு இது தான் தனக்கான தருணம் என்பது மட்டும் தோன்ற, அவனது இதழ்களை அம்புவே நாடி முத்தமிட்டாள்.

நோ..அம்பு..” மனதில் சொல்ல நினைத்தவன், மருந்தின் வீரியத்தால் அதில் மூழ்கிப் போனான். அதன் பின் அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள, அங்கே மோகத் தீ பற்றிக் கொண்டது.

அம்பு அவனது கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள அவனோ அவளது உடைகளை ஆராய்ந்தான். அதில் இன்னும் அவனிடம் புக நினைத்து அவனது கழுத்தைக் கடித்தாள்.

அவனுக்கு அப்போது அதுவும் சுகமாகிப் போக, அவள் முதுகில் படர்ந்தான். அம்பு அவனது சட்டை பட்டன்களை பிரித்து எடுத்து அவன் மேல் படற, அதன் பின் நடந்த அனைத்தும் மன்மத லீலைகளே!

இதில் யார் பக்கம் தவறு என்று கூறுவது யார்?

error: Content is protected !!