கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.
அத்தியாயம் – 16
வைத்தியநாதன் ,ஒரு கணம் ஸ்தம்பித்து போனார்… இப்போ அவர் நின்று கொண்டிருந்த சூழ்நிலை அவருக்கு புதுசு… இதுவரை எவ்வளவோ அவமானப் பட்டபோதும் ,ஒதுங்கி மட்டுமே போன அவரோட தங்கை வேதவல்லி , ஆராவுக்காக ,எல்லா உறவையும் முடித்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டார், என்பது முதல் அதிர்ச்சி…
ஆடிட்டிங்கின் போது ஏற்படும் அஃபிஷ்ஷியல் பிரச்சனையை தவிர, வேறு, எங்கேயும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது இல்லை. அதாவது வந்தாலும் எதிர்த்து நிக்க மாட்டார்… அதுவும் கற்புக்கு வாக்கப்பட்ட பிறகு, அவர் கிட்டயிருந்து எஸ்கேப் ஆகறதுக்கு எழுநூறு வழிகள் மட்டுமே கத்து வச்சிருந்தவருக்கு, முதன் முதலாக பிரச்சனையை எதிர்கொண்டு நின்றாக வேண்டிய சூழல், மனதில் சூறாவளியாக சுழன்றடித்தது…. அதுலயும் கூட பிறந்தவள் வீக் பாய்ண்ட் தேடி அடிச்சதில்… ஓடவும் முடியல ஒளியவும் முடியல…
சீமா கொஞ்சம் அடாவடியாக இருந்தாலும், இளா மேல வச்ச ஆசை தான் , இங்க கொண்டுட்டு வந்துருக்கனும். அந்த பொண்ணு ஆரா மேல எதுக்கு கோவப்பட்டா கற்பகம்… ? ஒன்னியும் புரியலையே…??
முன்னாடியே இளா, சீமா பற்றி கொடுத்த வார்னிங்கை, கொஞ்சம் சீரியஸாக எடுத்திருக்க வேண்டுமோ ….? ரீதியில் ஏதேதோ கேள்விகள் துரத்தியது… மகளுக்கு அந்த இளா பையன் மேல ஆசை… அம்மாக்கு அவன் சொத்து மேல ஆசை… இதுங்களோட ஆசையே என் துன்பத்திற்கு காரணம்…ஒரு வழியா முடிவுக்கு வந்துவிட்டார்.
ஆத்தாளும் மகளும் நம்மள மதிச்சு ஒன்னும் சொல்ல மாட்டாளுங்க… இதுல வேதா , நம்மள கோர்த்து விட்டிட்டுதே…சரி போயி பார்ப்போம் போ…
வண்டலூர் ஜூ வில் சிங்கத்துக்கு சோறு போட போகும் அப்பரண்டீஸ் பீலிங்கில் , பொண்டாட்டி, பொண்ணு அவளோட அல்லகைன்னு எல்லாரும் முகாமிட்டிருந்த , வேதாவின் அறைக்குள் நுழைந்தார்…..
உள்ளே நுழைந்த வைத்தியநாதனை கண்டதும், கற்பகம்,
“நீங்க எங்க இங்க……?”
“நீங்க எல்லாம் இங்க வந்ததுனால, வர வேண்டியதா போச்சு……? லைட்டாக கோபம் கலந்த பார்வையுடன்..”
(வைத்தி…. என்னய்யா நீ….? இன்னும் நல்லா விறைப்பா முறை……)
“யாரு அந்த கிரிஷும் அவன் பொண்டாட்டி அவனோட அந்த கூஜாவும் வர சொன்னாங்களா….?”
“இல்லை, என் தங்கச்சி, வர சொன்னுச்சு…. நீங்க ரெண்டு பேரும், இப்ப எதுக்கு இங்க வந்தீங்க…வந்து என்ன பிரச்சனை பண்ணின..? எங்க போறன்னு , ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லாமலே காலையில கிளம்பிட்டே…?”
“ஓஹோ வந்துட்டாளா….? என் அருமை நாத்தனார்….. மரியாதை தெரியாதவள்…. எப்படி இருந்த என் பொண்ணை ஒரே ராத்திரியில இப்படி இடிஞ்சு போயி நிக்கிற அளவுக்கு பண்ணிட்டாங்க….என் பொண்ணை இப்படி ஆக்கின அத்தனை, பேரும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்…ஏன் உங்க தங்கச்சி வீட்டுக்கு நான் வர உரிமை இல்லையா..? உங்க தங்கச்சி மவன் , குத்தி காட்டுறான் இது என் வீடு இல்லைன்னு… அந்த அனாதை கழுத ரோஜா நக்கலடிக்குறா , இன்னும் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கேன்னு… இதையெல்லாம் கேட்க்காம…, ஏன் இங்க வந்தேன்னு என்ன கேக்குறீங்க…? முன்னாடி எனக்கு பதிலை சொல்லுங்க.”
‘காலையில கட்டின புருஷனுக்கு காப்பி தண்ணி கூட குடுக்காமா, போயிட்டு வரேன்னு கூட சொல்லிக்காம போயிட்டியேன்னு ஒரு பாவப்பட்ட மனுஷன், பக்குவமா கேட்கிறேன்… எனக்கு பதில் சொல்லாம, இந்தம்மாவுக்கு அது கேக்குற கேள்விக்கு வேற தனியா சொல்லனுமாமே பதிலை….’ என்றிருந்தது வைத்தியின் பார்வை.
“என்ன நடந்தது சீமா……? நீயாவது சொல்லு….?”
“என்கிட்ட எதுவும் கேக்காதீங்கப்பா ..பிளீஸ்….”
‘ஆத்தாவுக்கு தப்பாமா பொறந்திருக்கு பாரு தறுதலை.…. ம்கும்….. இது ஆவுற கதை இல்லை…’ முடிவுக்கு வந்தவராய்….
“என் கூட மாடிக்கு வாங்க, வேதாகிட்ட கொஞ்சம் பேசணும்… பேசிட்டு வீட்டுக்கு கிளம்புவோம்….”
இங்க கெஞ்சி கேட்டாலும் மதிச்சு யாரும் பதில் சொல்ல போறது இல்லை, லீடர்க்கு அடங்காத பசங்கள , மிஸ்சுக்கிட்ட மாட்டி விடறது போல வேதா கிட்டயே , கோர்த்து விடலாம்ன்னு முடிவுக்கு வந்துவிட்டார்… அதோடு, மாசா மாசம், லம்ப்பாக படியளக்கும், கிருஷ், இளா என்ற இரண்டு பெரிய கைகளை பகைச்சுக்க கூடாது என்ற சுயநலமும் இருந்தது….
“ஏன் உங்க தங்கச்சி மகாராணி, இறங்கி வந்து என்கிட்ட பேசமாட்டாளாமா….?”
கேள்வி தோரனையா இருந்தாலும், கிளம்பிட்டாங்க மாடிக்கு, எல்லாரையும் தோரணம் கட்டி தொங்க விடனும்ங்ற முடிவோட…
கிருஷ்ஷின் ரூமுக்கு எல்லாரும் படியேற…..
இன்னொரு ரூமில் ஆரா , இளாவின் கையை பிடித்துகொண்டு , இன்னதென்று சொல்லாமல் அழுகை…. இவ்வளவு அன்பும், பாசமும் கொண்ட இந்த உறவுகள், உரிமை இல்லாமல் போய்விட்டதோன்னு ஆதங்கம்…. எப்போதும் கொடுக்கிறவங்க இயல்பா இருந்தாலும், அதை வாங்கிக்கொள்பவர்களுக்கு என்று ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்….. அதுதான் இப்போது அவளுக்கு… கற்பகத்தின் ஆக்ரோஷம் ,ஆராவிடம் அதீதமாக மன அழுத்தத்தையும், நமக்கே நமக்காய் உரிமை கொண்டாட சொந்தங்கள் இல்லாத அனாதை உணர்வையும் தூண்டிவிட்டிருந்தது… உபயம் மாதவிடாய் ஹார்மோன்கள்….
வேதாவின் சமாதானமும் எடுபடவில்லை. இளா தான் , நான் பார்த்துக்கிறேன் டாலி என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தான்.
அசைவற்ற நிலையிலும் கண்ணீர் நிற்கவிலலை..
“இளா….”
நீண்ட இடைவெளிக்கு பின் அவளது குரல்,
“சொல்லுடா.” தவமாய் தவமிருந்து காத்திருந்தவனாய் உயிர் உருக இளா….
போயிடுவோம் நம்ம வீ….ட்டுக்கு… எனக்கு..ரொம்ப. க…. க…ஷ்டமா… இருக்கு… தேம்பல்களின் இடையே வந்த, அவள் வார்த்தைகளைப் போலவே அவளது மனமும்… துண்டு துண்டாய்…
“ நீ எப்படி சொல்றியோ அப்படியேடா….”
“நான்தான் எல்லாரையும் கொன்னுட்டேனா..?” ஆராவின் கேள்விக்கு,
“அப்படி யோசிக்காதீங்கடா…நான் வாழ நீ மட்டும் தான் காரணம்.” இளாவின் பதிலில் அவன் மடியை கட்டிக்கொண்டு வெறித்த கண்களோடு படுத்துகொண்டாள்.
இளாவிற்க்கு , ஆராவை கஷ்டப் படுத்திய கற்பகத்தின் மேல் தான் கொலை வெறி…. எப்போதும் ஆரா இப்படித்தான் ஏதாவது திடீர் அதிர்ச்சி ஏற்பட்டால், அது அவளை அப்படியே ஸ்விட்ச் ஆஃப் செய்து, நடமாட இயலாமல் வைத்து விடும் என்பதால் அவளை விட்டு நகர மனமில்லாமல் உட்கார்ந்திருந்தான்…
வைத்தி அண்ட் கோ எண்ட்ரி கொடுத்ததும், ரோஜா வந்து ,ஆராவையும் இளாவை யும் அழைத்து போனாள்…
இருவருக்குமே எந்த உள்நாட்டு போரிலும் பங்கேற்க முடியாத மன நிலை…. அழைத்து வர சொன்ன வேதாவிற்காய் போனார்கள்…
அமைதியாய் , போயி கட்டிலில் ஆராவை சாய்ந்து உட்கார வைத்துவிட்டு, இளா அவள் கையை பிடித்தபடி உட்கார்ந்து கொண்டான்… ஆராவுக்கு தான் எதையும் உணர முடியாத மனநிலை….இளா இங்கேயும் ஆராவைத் தவிர எங்கேயும் கவனம் செலுத்தவில்லை, யாரையும் பார்க்கவும் இல்லை… இறுக்கமான முகத்தோடு இருந்தான்.
எல்லாருக்கும் உட்கார வசதி செய்த ரோஜாவும் போய், ஆராவின் இன்னொரு பக்கத்தில் அவளை தோள் சாய்த்து உட்க்கார்ந்து கொண்டாள்… கிருஷ் ஒரு மோடாவை போட்டு கொண்டு , இளாவின் அருகில் சீட் பிடித்து கொண்டான்…
அவங்க படைவீரர்களெல்லாம் ,பக்கா சீட்டிங்கில் இருப்பதை பார்த்து விட்டு ராஜமாதா வேதாவல்லி அம்மையார் கட்டில் முனையில் அமர்ந்து கொண்டார்…
மகிழ்மதி குரூப்போட திரிசூல வியூகத்தை , சமாளிக்கனும்ன்னு, காளகெயர்கள் தலைவி கற்பகம் அவர் சேரை இழுத்து ப்ரண்டில் நிறுத்தி அதில் சிட்டிவிட்டார்….
நிம்ம்மடா…கோஜ்ராஸ் தெல்மி…(Gkkla..…)
ஆர்த்த போஷ….(Gkkla.…)
க்கிரகிவிக்ந. பூஹும்லே (Gkkla..…)
(கிலிக்லி மொழிப்பா… பாகுபலி சீனை வச்சிட்டு (Gkkla.…)
சொல்லாம போனால் ,கட்டப்பா கண்ணை குத்திடுவார், அதான்)
போர்க்களம் ரெடி…. யாரு ஃபர்ஸ்ட் அம்பை உடுறதுன்னு தான் வெயிட்டிங்…. விக்ரம் ,’ இதுங்க எப்ப ஆரம்பிக்குங்கன்னு தெரியலையே…?…. ப்ரேக் பாஸ்ட் போடாமலேயே , களத்துல இறக்கி விட்டுட்டாங்களே’ன்னு, எல்லார் வாயையும் கொட்டாவி விட்டபடி பராக்கு பார்த்திட்டு இருந்தான்…
வம்படியா, வார் ஃபீல்டுக்குள் வரவைக்கபட்ட வைத்தியே சமாதான கொடியை ஏந்தி, பேச்சு வார்த்தையை துவக்கினார்….
“இங்க பாரும்மா வேதா…. உன் உறவும் வேணும், என் குடும்பத்தையும் என்னால விட்டு கொடுக்க முடியாது..(ஏன் கொடுத்துதான் பாருங்களேன்..).. என்ன நடந்ததுன்னு இன்னும் எனக்கு தெரியாது… நீர் அடிச்சு நீர் விலகாது…. (ஆமா பீர் அடிச்சாத்தான் நீர் விலகும்…. ##?) அதான் எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தேன்.. அவங்க நீ வீட்டுல இல்லாதப்போ, அப்படி பேசினது தப்புதான்… எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்மா….”
மிஸ் மிஸ் இவங்க தான் மிஸ் நீங்க கிளாஸ் ல இல்லாதப்போ பேசினாங்க…. கடைசியாக மாட்டியே விட்டுட்டார் வைத்தி..
கற்பகம் ,கொலை காண்டில் முறைச்சி ஃபயிங் ,அவ ரோட புருஷனை…என்னான்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு ,இங்க என்னமா மாத்தி பேசுறான் ,இந்த மனுஷன்னு…. பார்வை..
இளா, கிருஷ் மூலமா கிடைக்கிற சோறு முக்கியமா….? இல்லை கற்பகம் வாயில அகபடாம மிஞ்சுற சொரணை முக்கியமான்னு….? யோசிச்சு, சொரணை வேணாம் சோறுதான் முக்கியமுன்னு சோத்து கட்சிக்கு தாவிட்டார். பொண்டாட்டியை ஏறிட்டவர்,
என்னம்மா இப்படி முறைக்கிறீங்களேம்மா……? என்று திரும்பி கொண்டார்.
“அதான் தீர்த்து வச்சி பேசிட்டாங்களே, இவங்க…. இன்னும் என்ன பேசறதுக்கு இருக்கு….”
வேதா கற்பகத்தை கை காட்டியபடி சொல்லி முடிக்க….
எங்கயோ போன மாரியாத்தா , எம்மேல வந்து ஏறாத்தான்னு, வலுக்கட்டாயமாக, வராத சாமியை வரவைத்து கொண்டு , எழுந்து விட்டார்… கற்பகம் வேதாவுக்கு வேப்பிலை அடிக்கும் நோக்கில்……. நாத்தனார், மாமியார் கிட்ட எல்லாம் டெய்லியும் சண்டை போட முடியாது…. சான்ஸ் கிடைக்கிறப்போ எகிறி அடிச்சிடனும்…மோடில் கற்பகம்.
நிம் (Gkkla..…) கடீட் வூ (Gkkla..…) கொரோட்டா – ஜ்ற- ரெய்ஃபகூ (Gkkla..…)
(அகைன் கிலிக்ளி தான், உங்க ஆயுதத்தை போட்டுட்டு, திரும்பி பார்க்காம விடுங்க ஜூட்டு… இல்லைன்னா மொத்த பேருக்கும் வச்சிருவேன் வேட்டு… என்று அர்த்தம்… கற்புவின் கண்ணசைவுக்கு எனது விளக்கம்.)
“என்ன வேதா, பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு… அண்ணிங்ற மட்டு மரியாதை இல்லாம, கைய காட்டி, மறைமுகமா குத்துற… அது சரி, உன் மருமக என்னை அவமான படுத்துனப்பவே நினைச்சேன்… இது யாரு தந்த தைரியமுன்னு… இப்பதான தெரியுது… அது உன்கிட்ட இருந்து தான் வந்ததுன்னு…”
“என் மருமகள் என்னை போல தான்… யார் எதை கொடுத்தாலும், வச்சிக்காம திருப்பி கொடுத்திடுவா… அப்படி மட்டும் எங்கயாவது மிச்சம் மீதி விட்டுட்டு வந்தான்னா, நானே ரெண்டு கொடுப்பேன் அவளுக்கு, புரியுற மாதிரி…”
“நான் நேரடியா விஷயத்துக்கு வரேன், என்னையும் என் பொண்ணையும் விட அந்த ஆரா உனக்கு உசத்தியோ….?”
“ஆமாம் அண்ணி…கண்டிப்பா…என் பொண்ணும் இளாவும் எனக்கு மத்தவங்களை விட ரொம்ப முக்கியம். இதை என் வாயால சொல்லனுமா….?
“புது பணக்காரி ஆனதும் உறவும் வந்து புதுசா ஒட்டிக்கிச்சு போல… என் பொண்ணாமே….? எப்போ பொறந்தா… வேதா என் கிட்டயே மறைச்சிட்ட பார்த்தியா…???” தேள் கொட்டியது…
“அவ எனக்கு பொண்ணா பொறக்கல அண்ணி……. ஒவ்வொரு ராத்திரியும் அவளை தனியா தூங்க வச்சிட்டு, மனசே இல்லாம இளாகிட்ட விட்டுட்டு கிளம்புவேனே, அப்ப கழுத்த கட்டிகிட்டு போகாதீங்க மாதாஜின்னு அழுவாளே, அந்த நிமிஷமே இந்த வேதா , ஆராவோட அம்மாவா பொறந்துட்டா… என்னை பெத்தவ அவ…. என் கோந்தை பறிகொடுத்துட்டு தனிமரமா நின்னப்ப அவ என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை. சூடு வாங்கி, செத்து பொழச்சு வந்தாலும், என் முகம் பார்த்து என்னை பெத்தவளா மடி தாங்கி மீட்டு கொண்டு வந்தா….”
“இன்னைக்கு சொந்தம்னு சொல்லிட்டு நிக்கிற யாரும், அன்னைக்கு எங்க போயிருந்தாங்கன்னு தான் தெரியலை…” வேதாவின் பதிலில் இன்னும் கடுப்பான கற்பகம்,
“ஏன் வேதா, நீயும் கிரிஷும் எங்க வீட்டுல தங்கி சாப்பிட்டது எல்லாம் மறந்து போச்சா…? அன்னைக்கு உழைச்சு கொட்டி, உங்க ரெண்டு பேருக்கும் சோறு போட நாங்க தேவைப்பட்டோம்….இன்னைக்கு தேவைபடலையோ….???”
“ஓஹோ நீங்க உழைச்சு, சோறு போட்டிங்களா அண்ணி… நான் கூட நினைச்சேன், எங்கப்பாவோட பூர்வீக வீட்டையும், நிலத்தையும் எனக்கு பங்கு பிரிச்சி தரவேண்டாம், அண்ணனே வச்சுகிட்டும்னு சொன்னேனே…. அந்த நன்றியில போடுறீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன் அண்ணி….
பாருங்க அண்ணா நீங்க கூட மறைச்சுட்டீங்க, உழைச்சு எங்களுக்காக ஓடா தேய்ஞ்சதை….”
வேதாவின் பதிலில்,
நிமிர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் அவங்க அண்ணாச்சி தலை தொங்கி கிடந்தது…
கடல்ல தத்தளிக்கிறவன் தப்பிக்க குகைன்னு நினைச்சு, தெரியாத்தனமாக திமிங்கலத்தோட வாய்க்குள்ள வம்படியா நுழைஞ்ச கணக்கா, திக்கும் தெரியல திசையும் தெரியல தப்பிக்க….
“யாருக்கு வேணும் உன் பிச்சைக்கார பங்கு… விட்டெரிங்க அவ மூஞ்சில, இதோட இந்த பிரச்சினை முடிவுக்கு வரணும்.” கற்பு வைத்திக்கு ஆர்டர் போட…
‘அய்யோ…உன்னோட திருவாயை மூடினாலே எல்லா பிரச்சனையும் தானா முடிஞ்சிடும்… பேசி பேசி என் சம்பாத்தியத்தில் மண்ணை அள்ளி போடாம ஓயமாட்டா போலயே …’ கற்பகத்தை பார்த்து.
மைண்ட் வாய்ஸ் தான்… சொல்லிட்டா தான் மந்திரிச்சு விட்டுபுடுமே அந்தம்மா…
“தாராளமா தாங்க… புள்ளை குட்டி இல்லாத வீடா இது, சொத்தையெல்லாம் தானம் வழங்க…அப்புறம் இன்னொன்னு கேட்டீங்களே…. புது பணத்துக்கு வந்து ஒட்டிக்கிட்ட சொந்தம்னு, இத்தன வருஷம் , ஒன்னுமே இல்லாதப்போ வராத, நீங்களும் உங்க பொண்ணும் ,இப்ப புதுசா உரிமை கொண்டாடுறீங்களே… அதைத்தான் சொன்னீங்களோ….?”
“ஏன்னா…, இந்த புள்ளைங்க இத்தனை வருசமா எங்க நல்லது கெட்டது எல்லாத்துலயும் எங்க கூடத்தான் இருந்ததுங்க… அப்பயும் பாசத்தை தான் எங்களுக்கு உணர்த்தினதுங்க, பணத்தை உணர வைக்கல… அப்பா, அம்மா வை பறிகொடுத்திட்டு அன்புக்காக நின்னுச்சுங்க, எங்க கிட்ட, சொத்தையெல்லாம் பறிகொடுத்துட்டு சோத்துக்காக வரல …. வசதி வந்ததும் எங்களுக்கு இறங்கி வந்து மரியாதை தரல… அவங்களுக்கு சமமா எங்களை வளர்த்துவிட்டுட்டு எங்களோட வந்து கூட இருக்குதுங்க துணையா…”
“இன்னும் ஒரு வார்த்தை என் புள்ளைகள பத்தி கூட்டியோ இல்லை குறைச்சியோ பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை…அப்படி பேசிறவங்க கூட எனக்கு உறவும் இல்லை.”
“அதான் உரிமை இல்லை உறவும் இல்லைன்னு அத்துவிட்டாளே உங்க தங்கச்சி, அப்புறம் ஏன் மரம் மாதிரி இங்கேயே உட்கார்ந்து இருக்கீங்க. இனிமே தங்கச்சி தொங்கச்சின்னு கொஞ்சிகிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சிங்க தெரியும் சேதி….”
“கார்டியனா இருந்து இத்தனை வருஷமா இந்த அனாதை கழுதைகளை காப்பாத்தி விட்டதுக்கு என் பொண்ணு வாழ்க்கைக்கே உலை வைக்க பாக்குறீங்க. அங்க போடு இங்கே போடுன்னு எத்தனை கையெழுத்து உங்களுக்காக ஒவ்வொரு ஸ்கூலுக்கும் ஒவ்வொரு காலேஜுக்கும் வந்து போட்டுருப்பாரு,உங்களுக்காக ராப்பகலா அலையோ அலைன்னு அலைஞ்சாரே…… அதுக்கு காட்டுற நன்றியா இது. என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து இப்படி மோசம் பண்ணதுக்கு நீங்க நல்லா அனுபவிப்பீங்க. நன்றி கெட்டவங்களா, ரெண்டு பேரும் நல்லா இருங்க.”
“அடியேய், ஊமைக் கோட்டான் ஆரா… நீ எப்படி சந்தோஷமா வாழ்ந்துடறேன்னு நானும் பாக்…………….”
“நிறுத்துங்க..”
பேசிக்கொண்டே போன கற்பகத்தின் குரலில், அந்த கர்ஜனை கேட்டு, பிசுறு தட்டியது.
பார்த்தால் நம்ம இளா தான்… வெட்ட படவேண்டியது உறவுகளை அல்ல…, லட்டுவை பற்றி லகுடத் தனமாக பேசுபவர்களின் நாக்கை….,என்ற ரீதியில் நம்ம ஹீரோப்பா… அடேங்கப்பா….
“வயசாகிட்டு தான அறிவுன்னு ஒன்னு இருக்குதா உங்களுக்கு, உங்க மக வயசுக்கும் கம்மி வயசு உள்ள பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியாது… சும்மா உங்க பொண்ணு வாழ்க்கைய நாசம் பண்ணிட்டோம்ன்னு பேசுறீங்க…
நான் எப்பயாவது சொன்னேனா சீமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு… அவகிட்ட கிருஷ் கூட பழகுற மாதிரி நல்ல பிரெண்டா தான் இருந்தேன்…இடையில் அவளுக்கு கிறுக்கு புடிச்சி போச்சு… இதெல்லாம் வேணாம்னு நல்ல முறையில் சொல்லி பார்த்தேன் கேட்கல… குடும்பத்தோட என் வீட்டு வாசலில நின்னீங்களே இவ பேச்சைக் கேட்டு, அப்போவும் படிச்சு படிச்சு சொல்லி அனுப்பினேன். எனக்கும் உங்க பொண்ணுக்கும் ஒத்து வராது இதோட இந்த பேச்சை விட்டுருங்கன்னு, அவ தூது மேல தூது விட்டு, நேரா வந்து பல்லை காட்டினப்பவும், இதோ நிக்குறாரே உங்க புருஷன் அவர்கிட்ட , உங்க பொண்ணை கண்டிச்சு வச்சுக்கோங்கன்னு கூட சொன்னேன்.”
“அவளோட அம்மா தான நீங்க, அவ பண்ற தப்பையெல்லாம் சரி பண்ணாம, என்னங்க இது எங்களை குத்தம் சொல்றது… வயசு ஆக ஆக அன்பு பெருகனும், இப்படி வஞ்சத்தை பெருக்கிகிட்டீங்கன்னா, நீங்க அழியுற நாள் நெருங்கிட்டுன்னு அர்த்தம்”.
வைத்தியின் பக்கம் திரும்பி,
“வைத்தியநாதன் சார்… இதோட என்னோட ஆடிட்டர் போஸ்ட்லயிருந்து உங்களை விலக்குறேன்…உங்க செட்டில்மென்ட் பணம், மிச்சம் சொச்சம் எல்லாம் உங்க அக்கவுண்ட்டில வந்துடும். என் கம்பனி கணக்கை பார்த்தவரைக்கும், ஃபயில க்ளோஸ் பண்ணி மெயில் பண்ணி விடுங்க…” அங்கிள் சாராக மாறியிருந்தது.
“இளா, இவங்களுக்காக நம்ம பிசினஸ் உறவை…,” வைத்தி இழுக்க…
“என்ன சார் இவங்க…? யார் சார் இவங்க..? காசு இல்லாம ஓசீயா பார்த்தீங்களா எங்க ஆடிட்டிங்கை.. இல்லை தர்மத்துக்கு கார்டியன் போஸ்ட் பண்ணினீங்களா…? ஆரா ஆசிர்வாத்தோட முதலாளி… முதலாளியை உங்க வை ஃப் மரியாதை குறைவா பேசுவாங்க, நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கனுமா…? தட்ஸ் இட்.”
வாயைத் திறக்க முடியவில்லை வைத்திக்கு…
“என்னா…? பெரிய கம்பனி அதுக்கு ஒரு அரைலூசு ஓனர்… நீங்க வாங்க, இவன் இல்லைன்னா ஆயிரம் கம்பனி… நம்ம பொண்ணு தங்கம், போனால் போகுது, அந்த பைத்தியத்தை பார்த்துக்கிட்டு , கம்பெனியும் பார்த்துகட்டும் என் பொண்ணுன்னு நினைச்சா, இவன் இந்த பேச்சு பேசுறான்.. இவனே கெஞ்சினாலும் என் சீமா இவனுக்கு கிடையாது.. அனாதைங்க…” கற்பு கதகளி ஆடினார்..
“அத்தை கொஞ்சம் கேப் விட்டீங்கன்னா நான் சொல்ல வேண்டியதையும் மாமாக்கிட்ட சொல்லி முடிச்சிடுவேன். ”
(இப்ப யாருடா…. கற்பு பேசுறப்ப மட்டும் கண்ணி வச்சி வெடிக்கிறது…)
நம்ம கிருஷ் தான்.
“இளா என் மச்சான், ஆரா என் தங்கச்சி… அவங்களை அனாதைன்னு சொல்லிகிட்டு என் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்காதீங்க… இதோட என் ஆடிட்சையும் க்ளோஸ் பண்ணிடுங்க மாமா.”
“ஓஹோ , தாய் மாமனை விட, இந்த அனாதை நாய்தான் உனக்கும் முக்கியமா போயிட்டாளா…?”
கற்பகம் சொல்லி முடிக்கும் முன், எழுந்து நின்றவனாய்,
“யாரைப் பார்த்து அனாதை நாய்ன்னு சொன்ன… உங்களை எங்கப்பாக்காக, என் டாலிக்காக பார்த்து, வைக்க வேண்டிய இடத்தில் வைக்காமப் போனது என் தப்பு,” இளா கை ஓங்கவிட்டான் கற்பகத்தை அடிக்க, வேதாவும் கிருஷும் அவனை பிடித்து கொள்ள, வைத்தியநாதன் அயர்ந்து போய்விட்டார்.
“அவுங்கதான் பேசறாங்கன்னா நீயும் என்னடா பேசற,” வேதா கண்டிக்க,
“பின்ன, என் ஆராவை எப்படி அந்த பொம்பள அப்படி சொல்லலாம். அவ அனாதையா… அவ என் ராணி…”
“யாருடா பொம்பளை, இவளுக்கு சண்டை போடற உன்னை, பரிஞ்சுட்டு நின்ன இவரோட தொங்காச்சி குடும்பத்தைன்னு மொத்தமா முழுங்கிட்டு மூதேவி இந்த ஆரா ரோட்டுல ஒரு நாள் நிக்கத்தான் போறா… அதையும் நான் பார்க்க தான் போறேன்.” கற்பகம் பதிலில், இன்னும் ஆத்திரம் கூட,
“நிற்க போறது என் ஆரா இல்லை…., நீ… பார்க்குறியா..? இன்னைக்கு, இப்போ, இதோ…, வீட்டுக்கு போற வழியிலேயே உன் புருஷன், பொண்ணு,இந்த அரை மண்டையன் எல்லாரையும் சாட்சி இல்லாம போட்டுட்டு , ரோட்டிலேயே உன்னைத் தனியா அனாதையா நிக்க வச்சு காட்டவா…? சொடக்கு போட்டு இளா கற்பகத்திடம் சவால் விட,
வைத்தி,விக்ரம், சீமா என பயந்து இளாவின் முகம் பார்க்க, கற்பகம் நடுங்கித் தான் போனார்.
இளாவினுடைய இந்த முகம், யாரும், ஏன் வேதாவுமே காணாதது… கிருஷ்ஷிற்கு கோபம் வரும் சமயம் கூட இளா நிதானமாகவே கையாள்வான். முகம் சிவந்து நெஞ்சு விடைக்க, செய்து முடிக்கும் தோரணையிலயே நின்றிருந்தான்.
வேதாவும் இளாவை தடுக்க விரும்பவில்லை. வைத்திக்கோ, தங்கையை மட்டுமே எதிர்கொள்ள போராட போவதாக நினைத்து வந்தவருக்கு, கற்பகம் கொண்டு சென்று விட்ட திசை, அவர்களுக்கே பாதகமாய் முடிந்திருந்தது மிகப் பெரும் வருத்தம். பிரச்சினை பேச ஆரம்பிக்கும்போது வெறும் குடும்ப சண்டை , ஆனால் முடியும் போது ஒரு உறவையே வெட்டியிருந்தது. அவரால் இளாவை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அவர் பொருளாதார ரீதியாக தடுமாறி நின்றபோதெல்லாம் தானாகவே வந்து கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறான். மாதம் அவருக்கு ஆடிட்டிங் பார்ப்பதற்கு சம்பளமாக அல்லாமல் நிறுவனத்தின் பங்காகவே அனுப்பி வைப்பான்.
இவன் தந்ததை, இவனின் உயரத்தை பார்த்த யாரும் கற்பகம் போல பேசியிருக்க கூடாது. ஆனால் நடந்து முடிந்து விட்டது.
“வாங்க போகலாம்…” சத்தமே வராத குரலில் கற்பகம் வைத்தியை அழைத்து, கையை பிடிச்சு இழுக்க…, அவரை மறைத்தபடி நகர்ந்தார் வைத்தி.
“இன்னும் ஒரு கணக்கு பாக்கி இருக்கு. நீங்க பெத்த தங்கத்தோட தரத்தை தெரிஞ்சுகிட்டே போங்க..”
சீமா, விக்ரம் மொபைல் ரெக்கார்டிங்கை கிருஷ் ஒலிபரப்பினான்…
வைத்தி வாயடைத்து போக..,
கற்பகம் கனலை கக்க,
சீமா சிவந்து நிற்க…
விக்குக்கு பக்குன்னு ஆச்சு…
ஒலிபரப்பு முடிஞ்சதும், மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு கிளம்ப பார்க்க,
“ஒரு நிமிஷம்,”
மறுபடியும் யாருடா….?
சாஷா…