ஈஸ்வரனின் ஈஸ்வரி

ஈஸ்வரனின் ஈஸ்வரி
அத்தியாயம் 14
மும்பையில் பீட்டருடன் ஹார்பரில் செய்த சோதனையில், கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியின் உச்சத்தை அடைய வைத்தது ஈஸ்வருக்கு.
ஹார்பரில் வேலை முடிந்த கையோடு, அன்று காலை ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் அங்கே கிடைத்த தகவல்களை நினைத்து சிறிது அச்சம் கொண்டனர்.
“இனி ஒரு நிமிஷம் கூட நாம டைம் வேஸ்ட் பண்ண கூடாது, பீட்டர் விஷ்வாக்கு உடனே போன் போடு” என்று ஈஸ்வர் கூற உடனே அவன் விஷ்வாவுக்கு அழைத்தான்.
அந்த பக்கம் போனை எடுத்தவன், மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் தரவும், ஈஸ்வருக்கு இனி இங்கு இருப்பதில் அர்த்தம் இல்லை என்று விளங்கியது.
அவனை உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வருமாறு கூறிவிட்டு, அவன் அடுத்து உடனே போனை போட்டது கமிஷ்னருக்கு தான்.
“என்ன ஈஸ்வர்! இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க, எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டார்.
ஏனெனில் இப்படி காலை ஏழு மணிக்கு எல்லாம், போன் போடும் ஆள் ஈஸ்வர் கிடையாது. அவரின் வாக்கிங் நேரம், அதனை யாரும் தொந்தரவு செய்ய கூடாது அவருக்கு.
ஆகையால் இப்பொழுது ஈஸ்வர் அழைத்தவுடன், அவருக்கு முக்கியமான விஷயம் இல்லாமல் அவன் அழைக்க மாட்டான் என்று தெரிந்ததால், பிரச்சனையா என்று கேட்டார்.
“ஆமா சார்! நாம ஆழம் தெரியாம காலை வச்சுட்டோம் நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு அவன் அங்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அவரிடம் கூறினான்.
கேட்ட அவருக்கே, இது மிக பெரிய அதிர்ச்சி. உடனே கிளம்பி இங்கு வருமாறு பணித்தார் அவர். பேசிவிட்டு வைத்தவன், அங்கே பீட்டரை பார்த்தான்.
“மாம்ஸ்! டிக்கெட் புக் பண்ணிட்டேன், இனி அடுத்து என்ன செய்ய போறோம்?” என்று கேட்டான்.
“சத்தியமா என்ன செய்யணும்னு தெரியல, அந்த பிள்ளைகளை காப்பாத்திடலாம் நினைச்சேன். ஆனா அது இப்போ முடியாது போல தெரியுது, அந்த சேத்ரன் என் கையில் கிடைச்சான் அவனை கண்ட துண்டமா வெட்டி போட்டுவேன்”.
“மனுஷனா அவன்! அவன் இங்க வர முன்னாடி அவனை அங்கேயே தூக்கிடனும்” என்று முடிவு எடுத்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில், எல்லோரும் மும்பை ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
“டேய் விஷ்வா! அவனை வாட்ச் பண்ண ஆளுங்களை அனுப்ப சொன்னேனே அனுப்பிட்டியா என்ன?” என்று கேட்டான் ஈஸ்வர்.
“மச்சான்! பிளான் பண்ண மாதிரி ஏற்கனவே அவனை ஃபாலோ பண்ண ஆள் அனுப்பியாச்சு. இப்போ அவன் மதுரையில் தான் இருக்கானாம்” என்று கூறினான் விஷ்வா.
“அவனை சென்னைக்கு பேக் பண்ணணும், நம்ம இடத்தில் வச்சு போட்டா தான் எனக்கு திருப்தியா இருக்கும்” என்று கூறியவனின் கண்கள் பளபளத்தது.
“ஆஹா! இவன் வச்சு செய்ய பிளான் பண்ணிட்டான் போலயே. சரி! அதுவும் நல்லதுக்கு தான், அவன் அப்படி ஒன்னும் நல்லவன் இல்லையே” என்று எண்ணிக் கொண்டு அவன் செய்ய வேண்டியதை பற்றி, சுருக்கமாக அவனின் ஆட்களுக்கு செய்தி அனுப்பினான்.
சிறிது நேரத்தில் சென்னை செல்லும் விமானம், போர்டிங் டைம் என்று மைக்கில் ஒரு அழகிய மங்கை அறிவிப்பு விடவும், இவர்கள் அதன் பின் விமானம் ஏற சென்றனர்.
அங்கே மதுரையில் சேத்ரன், ஈஸ்வரியை கடத்த நேரம் பார்க்க, அவளோ இவனை அங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் உணர்ந்து, அதற்கான செயலில் இறங்கினாள்.
“தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்ச நாளைக்கு சஞ்சனாவும் பிள்ளையும் இங்கே இருக்கட்டும். அலைச்சல் இப்போ கூடாது, பிள்ளைக்கு கொஞ்சம் உடம்பும் முடியல அதனால நீங்க வேணும்னா கிளம்புங்க தம்பி”.
“எப்படியும் துக்கம் விசாரிக்க, அங்க உங்க வீட்டுக்கு ஆட்கள் வர, போக இருப்பாங்க தானே” என்று சேத்ரனிடம் நயமாக பேசினார் ஈஸ்வரியின் அன்னை.
அவனுக்கும் கிளம்பும் எண்ணம் தான், ஆனால் சஞ்சனாவை இங்கே விட அவனுக்கு விருப்பமில்லை. அவனின் லீலைகளை எல்லாம் இந்த ஈஸ்வரியிடம், அவள் கூறிவிட்டால் என்றால் அதன் பிறகு வரும் விளைவுகள், அவனால் அதன் பின் சமாளிக்க முடியாது.
ஏற்கனவே, அப்படி அனுபவப்பட்டு தான் இன்று சஞ்சனா அவனுடைய மனைவி என்னும் பதவியில் இருக்கிறாள். இனி ஒரு தவறு நடந்து விட கூடாது என்பதில், அவன் மிக கவனமாக இருக்க நினைக்கிறான்.
“இல்லை! நான் சஞ்சனாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு போகனும். அங்க எப்படியும் அவளோட உதவி இல்லாம, வீட்டுல ஒரு வேலை ஓடாது”.
“அதனால் அவளையும் கூட்டிட்டு போறேன், தப்பா நினைக்காதீங்க” என்றவனை இப்பொழுது யோசனையாக பார்த்தாள் ஈஸ்வரி.
“இவன் கிட்ட எதோ தப்பு இருக்கு, சஞ்சனா சொல்லுறது வச்சு பார்க்கும் பொழுது, மாமாவுக்கும் இவனுக்கும் எதோ தகராறு நடந்து இருக்கு”.
“அப்போ, இவனை பத்தின உண்மை எதோ அவர் தெரிஞ்சி வச்சுக்கணும். ஷெர்லாக் ஹோம்ஸ் அவதாரம் எடுக்க வேண்டியது தான், கண்டிப்பா கண்டுபிடிக்க தான் போறேன்” என்று எண்ணிக் கொண்டவள், தானும் கிளம்ப போவதாக கூறினாள்.
அவளின் இந்த முடிவில், ஈஸ்வரின் அன்னையும், தந்தையும் அதிர்ந்து போய் பார்த்தனர். மகன் வந்த பிறகு, செல்ல போவதாக சொன்ன மருமகள் உடனே கிளம்புகிறேன் என்கிறாள் என்று அவளை அதிர்ந்து போய் பார்த்தனர்.
ஆனால், அவளின் அன்னைக்கும், தந்தைக்கும் அவள் உடனே செல்வதின் நோக்கம் புரிந்து விட்டது. ஆகையால் ஈஸ்வரியின் அன்னை, தனியாக அவர்கள் இருக்கும் பொழுது விஷயத்தை சொல்லி விட்டார்.
“அண்ணி! அவன் அந்த அளவு கெட்டவன் சொல்லுறீங்க, அப்புறம் எப்படி நம்ம பொண்ணை அவன் கூட அனுப்ப முடியும்?” என்று கேட்டார் ஈசுவரின் அன்னை.
“அண்ணி! உங்க மருமக ஊரையே வித்திடுவா, உங்களுக்கு இன்னும் அவளை பத்தி தெரியல. அது எல்லாம் இந்நேரம், அவ பாதுகாப்புக்கும், சஞ்சனா, அப்புறம் அந்த குட்டி பிள்ளை பாதுகாப்புக்கும் எல்லா ஏற்பாடும் செய்து இருப்பா”.
“நாங்க இது மாதிரி நிறைய கடந்து வந்து இருக்கோம் அண்ணி, இவளோட இந்த துப்பறிவு வேலையை பார்த்து. நீங்க கவலையே படாதீங்க, அவ பத்திரமா இருப்பா” என்று வாக்களித்தார் ஈஸ்வரியின் அன்னை.
அவர் கூறியது போல் தான், எல்லாம் பக்காவாக செய்து இருந்தாள் ஈஸ்வரி. அதுவும், இந்த முறை எப்பொழுதும் விட சற்று கவனமாக எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.
அவளின் உள்ளுணர்வு எப்பொழுதும், அவளை சரியாக வழி நடத்தி செல்லும். ஆகையால், இந்த முறை அது கொடுத்த எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு, சற்று கூடுதல் கவனமுடன் இருந்தாள்.
“பழம் நழுவி பாலில் விழுரது இது தான் போல, இவளை வச்சே அவனை ஒரு வழி பண்ணுறேன்” என்று சபதம் எடுத்தான் சேத்ரன்.
அவன் அறியவில்லை, இவள் தான் அவனை வைத்து செய்ய போகிறாள் என்று. அங்கே ஈஸ்வர் சென்னை வந்து இறங்க, இங்கே ஈஸ்வரி கணவனுக்காக அவன் தேடிக் கொண்டு இருக்கும் கேடியோடு சென்னை பயணப்பட்டாள்
மதுரையில் இருந்து.
சென்னை வந்து இறங்கியதும், அவனுக்கு அப்பொழுது மனைவியின் நியாபகம் தன்னால் வந்து புன்னகைக்க செய்தது.
“மதுரையில் என்ன ஆட்டம் போடுறாளோ, அப்பாவும், அம்மாவும் இவளை சமாளிக்க முடியாமல் திணறி போவாங்களே” என்று அவர்களை நினைத்தும் சிரித்துக் கொண்டே, மனைவிக்கு அழைத்தான்.
அந்த பக்கம் சப்ஸ்கிரைபர் நாட் ரீச்சாபில், என்று செய்தி வரவும், அவன் மீண்டும் முயன்றான். அதே போல் செய்தி வரவும், இப்பொழுது அவன் புருவம் மேலேறி யோசனைக்கு தாவியது.
உடனே அடுத்து தன் அம்மாவுக்கு, தான் அழைத்தான். அங்கே அவர்களின் நல விசாரிப்பு முடிந்தவுடன், ஈஸ்வரியை பற்றி கேட்டான்.
அவர் நடந்ததை சொல்லவும், அவன் தலையில் இடி இறங்கியது போலானது. எதுவும் காட்டிக் கொள்ளாமல், பேசிவிட்டு வைத்தவன் உடனே பீட்டரையும், விஷ்வாவையும் முறைத்தான்.
“எங்களை ஏண்டா முறைக்குற? நாங்க என்ன பண்ணோம், நீ சொன்னதை தானே செய்துகிட்டு வரோம்” என்று கூறிய விஷ்வாவுக்கு ஒத்து ஊதினான் பீட்டர்.
“என் பொண்டாட்டிக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி, எல்லாத்தையும் கத்து கொடுத்தது யாரு இதுல?” என்று கேட்டான் ஈஸ்வர்.
டக்கென்று பீட்டரின் கை, விஷ்வாவை நோக்கி கை காட்டியது.
“இப்போ எதுக்கு டா நீ இதை பத்தி கேட்கிற?” என்று தெரிந்து கொண்டே கேட்டான் விஷ்வா.
துப்பறியும் வேலை என்றால், ஈஸ்வரிக்கு சும்மா அல்வா சாப்பிடுவது போல் என்று தெரிந்தவன் தான் விஷ்வா. அவன் ஒரு தடவை இதை தெரிந்து கொண்டவன், அதற்கு தேவையான பாதுகாப்பும் செய்துவிட்டு அதன் பின் துப்பறிய செல்ல வேண்டும், என்று வலியுறுத்திய பின் தான் அவள் இவனை வைத்தே நிறைய வேலைகள் செய்து முடித்து இருக்கிறாள்.
இவன் அதன் பிறகு, அந்த ஊரில் இருந்து சென்ற பிறகு, அவளின் வீட்டிலும் படிப்பை கவனிக்க சொல்லி மிரட்டவும் தான் அவள் சற்று அதற்கு விடுமுறை விட்டு இருந்தாள்.
அதன் பின் பீட்டரின் துணை கொண்டு, மேலும் பல அடாவடி வேலைகள் எல்லாம் செய்து நிறைய பேரின் வாழ்கையை அவள் காப்பாற்றி இருக்கிறாள் என்றால் அது மிகையாகாது.
“உன் வாலு தங்கச்சி, திரும்பவும் துப்பறியும் சாம்பு வேலை பார்க்க போய்ட்டா. அதுவும் அவ யாரை துப்பறிய போறா தெரியுமா, நாம தூக்கணும் நினைச்ச அந்த சேத்ரன் பின்னாடி போய் இருக்கா” என்று கூறிவிட்டு கவலையில் ஆழ்ந்தான்.
அந்த சேத்ரன் செய்து வந்த தொழில்கள் எல்லாம் தெரிந்து கொண்டு தானே, அவனை அவர்கள் வழியில் முடித்துவிட திட்டம் தீட்டி இருந்தனர்.
அவன் தொழிலுக்கு பிரச்சினை வந்தால், அவன் எந்த அளவு செல்வான் என்றும் தெரிந்து கொண்டவன், மனைவியின் பாதுகாப்பை எப்படி அறிவது என்று பெரிய குழப்பத்தில் இருந்தான்.
ஆனால் விஷ்வாவும், பீட்டரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.
“மாம்ஸ்! நீங்க அவளை பத்தி கவலை படாதீங்க, அவளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாராலும் ஒன்னும் செய்ய முடியாது” என்றான் பீட்டர்.
“டேய்! நீ கவலைபடுறதா இருந்தா அந்த சேத்ரன், எந்த சேதாரமும் இல்லாம நம்ம கையில் கிடைக்கணும் அப்படினு வேண்டிக்க” என்றான் விஷ்வா.
ஈஸ்வருக்கும், மனைவியின் தைரியம் எல்லாம் தெரியும் என்றாலும், அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அவனின் உணர்வை புரிந்து கொண்ட விஷ்வா, சேத்ரனை பின் தொடர செய்த அந்த வல்லுநர்களுக்கு போன் செய்து விசாரித்தான்.
“சார்! நாங்க அவனை ஃபாலோ செய்துகிட்டு தான் இருக்கோம். அவன் கூட ரெண்டு லேடீஸ், அப்புறம் ஒரு கை குழந்தை இருக்கு சார்”.
“அப்புறம் வண்டி, சென்னை போற மாதிரி இருக்கு. நாங்க தொடர்ந்து வாட்ச் செய்துகிட்டு தான் இருக்கோம் சார்” என்றனர்.
இது எல்லாம் ஸ்பீக்கரில் ஈஸ்வர் அறியும்படி தான், விஷ்வா இதை செய்தான். ஈஸ்வர் அதற்குள் பல மனகணக்கு போட்டுவிட்டு, அந்த பக்கம் இருந்தவர்களுக்கு சில தகவல்களை கூறி அதை செய்து முடிக்கும்படி கூறினான்.
“விஷ்வா! நமக்கு டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு, வேகமா நாம அந்த இடத்துக்கு ரீச் ஆகுற மாதிரி வேகமா ஒரு வண்டியை புக் பண்ணிடு”.
“நான் கமிஷ்னர் கிட்ட விஷயத்தை சொல்லி, மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடை பார்க்க சொல்லுறேன்” என்று கட்டளைகள் பிறப்பித்து கொண்டே, அவன் அடுத்து அடுத்து போன் காலில் பிசியாகி விட்டான்.
“ஆஹா! மாம்ஸ் செம ஸ்பீடா இருக்கார், அங்க அவ அவனை எந்த கண்டிஷனில் வச்சு இருக்கானே தெரியலையே?” என்று ஈஸ்வரியை நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.
இவன் எண்ணத்திற்கு ஏற்றபடி தான், அவள் இவனை வேறு ஒரு காருக்கு மாற்றி, இவனை கிட்டத்தட்ட டிக்கியில் தள்ளிவிட்டாள்.
அந்த காரில், தனக்கு தெரிந்த மேலும் இரண்டு பேரை அமர்த்திக் கொண்டு சென்னை நோக்கி வண்டியை விட்டாள்.
ஈஸ்வர், அவளின் இந்த செயல்களை கண்டு, கோபம் கொள்ளுவானா, இல்லை அவளை பாராட்டி மகிழ்வானா? பொறுத்து இருந்து பார்ப்போம்.
தொடரும்..