Mtn-6

Mtn-6

அவள் போனை வைத்ததும் ப்ரியனுக்குத் தோன்றியது “என்ன டா விளையாட்டுக்கு சொன்னதைக் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறா” என்றுதான்.

மீண்டும் இரண்டு முறை அவளுக்கு அழைக்க போனை எடுத்துக் கட் பண்ணியவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

இம்முறை அவனிடமிருந்து “கால் எடு ப்ளீஸ்” என்ற மெசேஜ் வர அதைப் பார்த்தும் அவன் காலை மீண்டும் எடுக்கவில்லை.

“இப்ப நீ கால் எடுக்கலேன்னா நான் மாமாக்கு கால் பண்ணி உங்கிட்ட குடுக்க சொல்லுவ” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் அவன் காலை எடுத்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க

“ஓய் மேடம்!என்ன பேச மாட்டிங்களா?” என்று கேட்க “நீங்க தான என்ன வெச்சுட்டு கஷ்டம் சொன்னீங்க” என்று கோபக் குரலில் சொல்ல

“ம்ம்ம் ஆமா கஷ்டம் தான்.அன்னைக்கு கோவில்ல செம்ம கியூட்டா  உங்க அப்பா நல்ல ஐஸ்கிரீம் வாங்கித் தரன்னு சொன்னதைக் கேட்காம எனக்கு ரோட்ல  விற்கிற ஐஸ்கிரீம் தான் வேணும்முன்னு அடம்பிடிச்சியே அப்ப நினைச்சேன்

உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் உன்னை வெச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட போறான்னு.அப்புறம் அந்த மாங்கோ ஐஸ்கிரீம் ஸ்டிக்ல இருந்து கிழ ஒழுக அப்டியே மூஞ்சி எல்லாம் அப்பிட்டு சாப்டியே அப்ப நினைச்சேன் உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப பாவம்னு.

அப்புறம் பொண்ணு பார்க்க வந்தப்ப என் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காம காபி நீட்டினியே அப்ப நினைச்ச உன்ன வெச்சுட்டு ரொம்ப கஷ்டம்ன்னு”என்றவன் விலகிக் கொண்டிருக்க

நம் தாருவின் முகத்தில் மென்னகை குடிகொண்டது.அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு வெட்கத்துடன் கீழே குனிய “என்ன மேடம் வெட்கப் படுறிங்களா?” என்றவன் கேட்க அவள் ஒன்றும் பதில் பேசாமல் இருக்க போன் கட் ஆகிவிட்டது.

‘என்ன ஆச்சு?டவர் இல்லையா?’ என்றவள் போனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவனிடமிருந்து வீடியோ கால் வர ஒருவித பூரிப்புடன் அட்டென்ட் செய்தாள்.

முகத்தில் வெட்கம் குடிகொண்டிருக்க சிறிய கருப்பு நிறப் பொட்டுடன் கண்ணை தாழ்த்தி இருந்தவளின் முகம் பார்த்தவன் “ஒய்” என்றழைக்க “ம்ம்” என்றாள் மென்மையாக.

“என்ன எப்பப் பார்த்தாலும் வெட்கம் தானா?” என்று கேட்க பதிலில்லை.”என்ன பாரு” என்றவன் இரண்டு முறை சொன்னவுடன் அவன் முகம் பார்த்தாள்.

“இன்னைக்கு காலைல இருந்து மீட்டிங் ஜெர்மனில இருந்து வந்திருந்தவங்க கூட.லஞ்ச் எல்லாம் கூட அவங்க கூட தான்.அவங்க என்கூட இருக்கப்ப நான் உங்கிட்ட பேசிட்டு மெசேஜ் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்குமா? சொல்லு…

அப்பா வேற என்கூட தான் இருந்தாங்க.அதான் டா பேசல.எனக்கும் உன்கூட பேசணும் தான் ஆசை” என்று தன்னிலை விளக்கம் அளிக்க அவள் முகம் இன்னும் பிரகாசமானது.

“உங்களுக்கும் என்கூட பேசணும் ஆசை இருந்துச்சா?நான்  காலைல இருந்து நீங்க எப்ப மெசேஜ் பண்ணுவிங்க கால் பண்ணுவிங்கன்னு டென் மினிட்ஸ் ஒன்ஸ் மொபைல் எடுத்து பார்த்துட்டு இருந்த தெரியுமா?பட் உங்களுக்கு என்கிட்ட பேச தோணவே இல்லைன்னு தான் கோபம்” என்றாள்.

“எனக்கும் உங்கிட்ட பேசணும்னு நிறைய தோனுச்சு.பட் டைம் பெர்மிட் பண்ணல டா.சாரி” என்றான் உணர்ந்து.

“சாரி எல்லாம் சொல்லாதிங்க.நமக்குள்ளே நோ தேங்க்ஸ் அண்ட் சாரி ஓகே?எனக்கே நான் பண்ணறது கொஞ்சம் ஓவரா தான் தெரியுது.பட் ஐ ரியல்லி டோன்ட் நோ வை ஐ அம் பிஹேவிங் லைக் திஸ்.உங்களை எனக்கு நேத்து பார்த்தது மாதிரியே இல்லை.வித்தின் அ சிங்கள் டே ஐ ரியல்லி பீல் க்ளோஸ் டூ யூ” என்று மனதில் இருந்ததை எல்லாம் சொன்னாள்.

“அம்மு!என்னால டெய்லியும் டே டைம்ல பேச முடியுமா தெரியலை.பிகாஸ் என் வொர்க் அப்படி.பட் நைட் கண்டிப்பா நமக்கான டைம் ஓகே.இனி இதுக்கு எல்லாம் கோபப்படக் கூடாது.சண்டை போடக்கூடாது.நம்ம கல்யாணம் அப்புறம் கூட இப்படி தான் இருக்கும்.நான் மோர்னிங் 9 க்கு போன சாயந்திரம் வரதுக்கு ஏழு மணி மேல ஆகலாம்.சினிமா மாறி எல்லாம் ரியல் லைப்ல நடக்காது டா” என்றவன் பொறுமையாக தன் நடைமுறையை சொன்னான்.

“ம்ம்ம் சரி” என்று உள்ளே போன குரலில் சொன்னவள் தன் மனதிற்குள் அவன் அம்மு என்று சொன்னதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

“இன்னைக்கு நீங்க காலைல பண்ண குட் மோர்னிங் மெசேஜ் பார்த்து நான் எவ்வளவு ஹாப்பியா பீல் பண்ணினேன் தெரியுமா?” என்றவள் சொல்ல அவள் குரலில் இருந்த உற்சாகம் அவன் முகத்தில் தாவிக் கொண்டது.

“அடிப்பாவி அப்ப காலைல பதினோரு மணிக்கு தான் எழுந்தியா?” என்றவன் கேட்க “இல்லையே பத்து மணிக்கே எழுந்திட்டேன்” என்று பெருமையாக சொன்னவளை ஒரு வித ஆச்சர்யம் கலந்த பார்வையுடன் பார்த்தவன்

“உங்க வீட்ல லேட்டா எழுந்ததுக்கு ஒன்னும் சொல்லலியா?” என்றவன் கேட்க “பாட்டி இங்க வந்ததுக்கு அப்புறம் ஏழு மணி மேல தூங்கவே விடமாட்டங்க.பட் இன்னைக்கு பத்து மணி வரைக்கும் தூங்குனதுக்கு ஒண்ணுமே சொல்லல.எனக்கே செம்ம ஆச்சர்யம்” என்றவள் வியக்க

“அடிப்பாவி ஏழு மணி வரை தான் தூங்கவிடுவாங்கனு சொல்லற?” என்றதற்கு “பாருங்க எங்க பாட்டி எப்படி என்னை கொடுமை பண்ணறாங்கன்னு.யாருமே பாட்டிகிட்ட அவள் தூங்கட்டும் சொல்லல.பெங்களூர்ல எல்லாம் நான் காலேஜ் இல்லனா லஞ்ச்க்கு தான் பெட் விட்டு எழுந்திருப்பேன்” என்று சொல்ல அவனுக்கு உள்ளே பக் என்றிருந்தது.

“அடியே!ஏழு மணி வரை உங்க வீட்ல உன்ன தூங்க விடுறதே பெரிய விஷயம்.என்ன எல்லாம் ஐந்தரை மணிக்கு மேல அம்மா இங்க தூங்க விடமாட்டாங்க “ என்று சொல்ல “அச்சோ!ரொம்ப பாவம் நீங்க”என்றாள்.

“நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் நீயும் நேரத்துல தான் எழுந்துக்கணும்.நம்ம வீட்ல எல்லாம் நேரத்துல எழுந்துப்பாங்க” என்று சிறு கண்டிப்புடன் சொல்ல அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது.

“அம்மு!இவ்வளவு நாள் நீ சிங்கள் டா.பட் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உனக்கு நிறைய ரெஸ்பான்ஸுபிலிடிஸ் வரும்.நான் உனக்கு கண்டிப்பா அதுல ஹெல்ப் பண்ணுவேன்.பட் எல்லாத்துலையும் பண்ண முடியாது டா.

நம்ம குடும்பத்துல உங்கிட்ட நிறைய இல்லைனாலும் கொஞ்சம் எதிர்பார்பாங்க ஓகே.நீ பொறுப்பா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும்” என்று சொல்ல தாருவிற்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

அவள் தலையாட்டிய முறையிலேயே அவளுக்குப் புரியவில்லை என்று கண்டுபிடித்தவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

“என்ன புரியலையா?” என்று கேட்க தலையை ஆம் என்று ஆட்டினாள்.”நான் சொல்லறது எல்லாம் கேளு.அது போதும்” என்று சொல்ல அதற்கும் தலையாட்டினாள்.

“என்ன தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலை ஆட்டிட்டு இருக்க?’ என்று கேட்க “போ டா” என்று ஒரு ப்ளோவில் சொல்லிவிட்டவள் பின்பு தன் நாக்கை கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவன் கோபமாக இவளை முறைத்துக்கொண்டு இருக்க “ஏதோ ஒரு பிலோல டா வந்துருச்சு.பட் என்னால எப்பவும் உங்களை வாங்க போங்க எல்லாம் கூப்பிட முடியாது”என்று அவனைப் போலவே முறைத்துக் கொண்டே சொல்ல ப்ரியன் சிரித்துவிட்டான்.

 

“சும்மா நான் முறைச்சா என்ன பண்ணுற பாக்கலாம்னு முறைச்சேன்.எப்படி தோணுதோ கூப்டுக்கோ.பட் தனிய இருக்கப்ப மட்டும்.எல்லாரும் இருந்தா வாங்க போங்க தான்” என்று சொல்ல தலையாட்டினாள்.

“மாமா கூட கூப்பிடலாம்” என்று அவன் கேலியாக கூற “என்னது மாமாவா அப்படி எல்லாம் நான் கூப்பிட மாட்டேன்.போ டா” என்றுவிட்டாள்.

“சரி அப்ப நாளைல இருந்து காலைல நேரத்துல எழுந்திருக்கிற.அப்புறம் வாசல் கூட்டி கோலம் போடுற” என்று சொல்ல “என்னது கோலமா?” என்று அதிர்ந்தவள் “அது எல்லாம் எனக்கு போடத் தெரியாது” என்றாள்.  

“தெரியாதுன்னா கத்துக்கோ டி.லைப் இஸ் டூ லேர்ன்” என்றதற்கு அவள் “சரி” என்று சொல்ல “அப்புறம் பொட்டு ஏன் இவ்வளவு சின்னதா கண்ணுக்கே தெரியாத மாதிரி வைச்சிருக்க?” என்றான் “நான் பொட்டே வைக்க மாட்டேன்.பட் இங்க வந்து பாட்டிக்கு பயந்து தான் வைக்கிறேன்” என்றாள் சின்ன சலிப்புடன்.

“எனக்கு பெரிய போட்டு வைச்சா ரொம்ப பிடிக்கும்” என்று சொல்ல தாரு ஒன்றும் சொல்லாமல் பேச்சை மாற்றிவிட்டாள்.

“நான் இன்னைக்கு காலைல இருந்து உங்ககிட்ட ஒரு இம்பார்டன்ட் விஷயம் பேசணும் நினைச்சேன்.பட் டாபிக் எங்கயோ மாறிருச்சு.உன்னோட பேரு கண்டுபிடிச்சுட்ட!” என்றாள்.

அவன் புருவம் உயர்த்தி சொல்லு என்பதைப் போல் பார்க்க அவனிடம் விளையாட நினைத்தவள் “ப்ரியதர்ஷன்” என்றாள்.

“சூப்பர் டி.கரெக்டா கண்டுபிடிச்சுட்ட”என்றவன் கைதட்ட அவளுக்கு மிகவும் குழப்பம் ஆகிவிட்டது.”டேய் லூசு!உன் பேரு கவிப்ரியன் தான?” என்று நகத்தைக் கடித்துக்கொண்டு கேட்க சிரித்தவன் “பார்டா!என்னவே இந்த பேபி ஓட்ட நினைக்குது” என்று அவள் முகத்தை குத்துவதைப் போல் செய்து காண்பித்தான்.

நாக்கை கடித்தவள் “சரி…சரி…ஓட்டாத” என்று சொல்ல “என்ன பழக்கம் டி இது?ஒன்னா நாக்கை கடிக்குறது.இல்லனா நேகத்தை கடிக்குறது” என்று கேட்க “டேய்! உனக்கு சௌந்தரம் பாட்டியே 1௦௦௦ டைம்ஸ் பெட்டெர் டா” என்று கை எடுத்து கும்பிட்டாள்

.”சரியான பஞ்சாங்கம்”என்று அவளுக்குள் முணுமுணுத்துக்கொள்ள அவனுக்கு அது நன்றாக கேட்டது.

“இந்த பழைய பஞ்சாங்கம் கூட தான் அம்மிணி நீங்க இனி வாழ்கை புல்லா வாழனும்” என்றவன் கண்ணடிக்க “இந்த பெட்டெர் மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று தன் பெருவிரலை தன்னைத் தானே நோக்கிக் கேட்டுக்கொண்டவளைப் பார்த்துச் சிரித்தவன்

“சரி சொல்லு பேர் எப்படி கண்டுபிடிச்ச?” என்று கேட்க “நம்ம மார்க் தான் சொன்னாரு”என்றவள் கெத்தாக சொல்ல “அட நம்ம மார்க் பையன் பார்த்த வேலையா இது?” என்று சிரித்தவன் “பரவாயில்லை டி.உனக்கு கூட கொஞ்சம் அறிவு இருக்கு”என்றான் கேலியாக.

அவனை முறைத்தவள் “உங்க அளவுக்கு இல்லைனாலும் நாங்களும் கொஞ்சம் அறிவாளி தான் பாஸ்”என்றவள் சொல்ல “நீ என் அறிவுவுவு வாளி டி” என்று ஓட்ட “போ டா.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன் தெரியுமா உன் பேரு?”என்று கேட்க

“சரி சரி சும்மா சொன்னேன்.நீயே கண்டுபிடிச்சது ரொம்ப சந்தோசம்.என்ன வேணும் உனக்கு?” என்று கேட்க “நீங்க பர்ஸ்ட் உங்களைப்பற்றி சொல்லுங்க.அப்புறம் நான் என்ன வேணும் சொல்லற” என்றாள்.

“என்ன பத்தி…ம்ம்ம்..என்ன சொல்லறது?பி.டெக் டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பி.எஸ்.ஜில படிச்சேன்.அப்புறம் எம்.பி.ஏ யூ.எஸ்ல பண்ணின.இப்ப அப்பா ஓட சேர்ந்து ரைஸ் மில் பார்த்துக்குற.அப்புறம் மில்லேட்ஸ் எல்லாம் எக்ஸ்போர்ட் பண்ணற பிசினஸ்” என்று தன்னைப் பற்றி சொன்னான்.

“இதுக்கு முன்னாடி நீங்க ஏதாச்சும் ரிலேசன்ஷிப்ல இருந்துருக்கிங்களா?”

“இல்லை.ஜஸ்ட் சைட் சீயிங் மட்டும் தான்”

“தேங்க் காட்!நானும் இதுக்கு முன்னாடி எந்த ரிலேசன்ஷிப்லையும் இருந்தது இல்லை.பட் லவ் பண்ணனும் ஆசை எல்லாம் இருந்துச்சு.”

“ஏன் பண்ணிருக்க வேண்டியதுதான?”

“அப்பாக்கு பிடிக்காது.நான் என்ன சொன்னாலும் அப்பா செய்வார்.பட் லவ் மட்டும் பிடிக்காது”என்றவள் விக்னேஷ் பற்றியும் சொல்லிவிட்டாள்.

“எனக்கு காலைல பொண்ணு பார்க்க வந்துருக்கிங்க தெரிஞ்ச உடனே செம்ம கோவம்.பட் சந்தியா அக்கா பார்த்ததும் தான் நீங்க மாப்பிளை தெரிஞ்சுச்சு.அப்ப செம்ம ஹாப்பி.அன்னைக்கு கோவில்ல நான் உங்களை செம்மையா சைட் அடிச்சேன்.பட் நீங்க தான் என்ன திரும்பி கூட பார்க்கல”என்றாள் சோகம் இழைந்தோடும் குரலில்.

சிரித்தவன் “யாரு உன்ன பார்க்கல?அந்த பிங்க் கலர் குர்த்தால எவ்வளவு அழகா இருந்த தெரியுமா?நீ சுப்ரியா கூட விளையாண்டப்ப என் கண்ணு புல்லா உன் மேல தான்.உன்னோட ஆக்ஷன்ஸ் எல்லாமே எனக்கு சின்னப் பிள்ளைத் தனமா தான் தெரிஞ்சுச்சு.

அப்புறம் பார்த்தா உங்க அப்பா கூட அவ்வளவு சண்டை போடுற ஐஸ்கிரீமுக்காக.எனக்கு செம்ம சிரிப்பு” என்றவன் சிரிக்க “எனக்கு இப்ப ஐஸ்கிரீம் சாப்பிடனும் போல இருக்கு” என்று தாரு சொல்ல

“இது ஒன்னும் சந்தோஷ் சுப்ரமணியம் படம் இல்லை மா…நடு ராத்திரியில போய் ஐஸ்கிரீம் சாப்பிடுறதுக்கு” என்றவன் சிரிக்க “போ டா.வேஸ்ட் பெல்லோ”என்று அவள் திட்ட அவன் அவளை வார என்று நேரம் போனது.

இன்றும் இருவரும் நன்றாக கடலை வறுத்துவிட்டு  தூங்க மூன்று மணி மேல் ஆகிவிட்டது.

error: Content is protected !!