Mtn-7
Mtn-7
அடுத்த நாள் காலை தாரு வைத்திருந்த அலாரம் ஐந்தாரை மணிக்கு அடிக்க கஷ்டப்பட்டு கண் விழித்தவள் அதை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள்.மனது எழுந்து கொள் எழுந்து கொள் என்று சொல்ல அவளால் கண்ணையே திறக்க முடியவில்லை.
மிகவும் சிரமப்பட்டு ஆறு மணிக்கு எழுந்தவள் ஹாலிற்கு செல்ல மொத்த குடும்பமும் இவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டது.
“நான் கோலம் போடுற.எனக்கு சொல்லிக் கொடு”என்று தன் அம்மாவிடம் கேட்க “நீ தானா டி இது?” என்றவர் வாய்மேல் விரல் வைத்துக் கேட்க முறைத்தவள் “சொல்லி கொடுன்னா சொல்லிக் கொடு”என்று பல்லைக் கடிக்க அவர் அவளுக்கு சொல்லிக் கொடுக்க சுமாராக கோலத்தை போட்டு முடித்தாள்.
ப்ரியனிடம் இருந்து குட் மோர்னிங் என்ற மெசேஜ் வந்திருக்க அவளுக்கு உற்சாகமாகிவிட்டது.அதே உற்சாகத்துடன் புடவை எடுக்க கிளம்பிச் சென்றாள்.
அன்று அவனிடமிருந்து சிறு சிறு மெசேஜ்ஜஸ் வர பெருமகிழ்ச்சி அடைந்தாள்.குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இன்று தாருவிற்கு உறுதிவார்தைக்கு புடவை எடுக்கச் சென்றனர்.
தாருவிற்கு ஷாப்பிங் செய்வதில் அலாதிப் ப்ரியம் இருந்ததால் மிகவும் ஆர்வமாக புடவைகளை தேர்வு செய்தாள்.புடவை இதுவரை பெரியதாக அணிந்து பழக்கமில்லாததால் கொஞ்சம் செலெக்ட் செய்ய சிரமப்பட்டாள்.
ஒரு வழியாக மூன்று மணி நேரத் தேடலுக்குப் பிறகு மூன்று புடவைகளை தேர்வு செய்திருந்தாள்.ஆனால் அதில் எதை எடுப்பது என்று தெரியாமல் இருக்க வீட்டினர் அனைவரும் உன் இஷ்டம் என்று விட்டனர்.
ப்ரியனிடம் கேட்கலாமா என்று யோசித்தவள் பின்பு ‘பிஸியா இருந்தா என்ன பண்ணறது?’என்று நினைத்தவள் அவளே தேர்ந்தெடுக்க நினைத்தாள்.ஆனால் முடியாமல் முழிக்க பரந்தாமன் “மூணுமே ரொம்ப அழகா இருக்கு தங்கம்.மூணையுமே எடுத்துக்கோ”என்று விட்டார்.
இரவு சரியாக தூங்காதது மற்றும் பகல் முழுவதும் அலைந்தது அவளை மிகவும் சோர்வடையச் செய்ய மாலை வீட்டிற்கு வந்ததும் போய் படுத்துவிட்டாள்.
இரவு ஒன்பது மணிக்கு ருக்குமணி வந்து சாப்பிட அழைக்கவும் தான் எழுந்தவள் முகம் கழுவிவிட்டு சாப்பிடச் சென்றால்.
“நாளைக்கு போய் டைலர் கிட்ட ப்ளெவுஸ் தைக்க கொடுத்துட்டு வந்தரலாம்.எந்த சாரீனு டிசைட் பண்ணிக்கோ தாரு.அதை கொஞ்சம் கிராண்டா தெச்சுக்கலாம்”என்று விசாலாட்சி சொல்ல சரி என்றாள்.
இரவு பத்து மணிக்கு ப்ரியன் அழைக்க நடந்த எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள்.”நான் செலெக்ட் பண்ண உங்ககிட்ட கேக்கலாம் நினைச்ச.பட் பிஸியா இருப்பிங்க நினைச்சு கால் பண்ணல” என்று சொல்ல “ஏதாச்சும் இம்பார்டன்ட் விஷயம்னா நீ எனக்கு தாராலமா கால் பண்ணலாம் அம்மு.உன்ன விட எனக்கு இம்பார்டன்ட் எதுவுமில்லை.புரிஞ்சுதா?” என்று கேட்க அவள் மனதில் சந்தோசத்தின் சாரல்கள்.
தாரு புடவைகளை போட்டோ எடுத்து அனுப்ப ப்ரியன் அதிலிருந்த ஊதா நிற புடவையை செலெக்ட் செய்தான்.
இன்றும் அவர்கள் பேச்சு விடியற்காலை வரை நீண்டது.இருவரின் விருப்பு வெறுப்பு தொடங்கி அன்றாடம் நடைமுறைகள் பற்றியும் கூடப் பேசத் தொடங்கி இருந்தனர்.
தாருவிற்கு ப்ரியன் தான் உலகமாக மாறிப்போனான்.இவ்வளவு வருடங்களில் விசாலாட்சி சொல்லிக் கேட்காததைக் கூட ப்ரியன் சொன்னவுடன் கேட்டுக் கொண்டாள்.காதல் அவளை மாற்றி இருந்தது.
இப்பொழுது சமையலும் கொஞ்சம் கற்றுக் கொண்டு வருகிறாள்.இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது “அம்மா ரொம்ப சூப்பர்ரா சமைப்பாங்க.அதுவும் எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு வைப்பாங்க பாரு..அவ்வளவு டேஸ்டா இருக்கும்” என்று சொல்லி இருந்தான் ப்ரியன்.
அன்றிலிருந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட முறை செய்துவிட்டாள் அக்குழம்பை.ஆனால் தாருவிற்கு நன்றாக வரவேயில்லை.
அன்று மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தவள் சமையலறைக்கு சென்றாள்.அவள் செல்வதைப் பார்த்த கார்த்திக் “இன்னைக்கு எவ்வளவு பேர் உயிர் போகப் போகுதோ?முதல்ல நாம எஸ்கேப் ஆகிறனும் டா சாமி” என்று சத்தமாக சொல்ல உள்ளே சென்றவள் மீண்டும் ஹாலிற்கு வந்து அவன் முதுகில் ஒன்று போட்டால்.
“ஆ!அம்மா!வலிக்குது டீ எரும”என்றவன் அலற “நல்ல அடி தங்கம் அவன…வாய் ரொம்பத் தான் பேசுறான்” என்றார் சௌந்தரம் பட்டி.
இப்பொழுது சௌந்தரம் பாட்டிக்கும் தாருவிற்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.பேத்தி பொறுப்பாக மாறிவிட்டாள் என்பது அவருக்கு மிகுந்த சந்தோசத்தையும் மனநிம்மதியையும் கொடுத்திருந்தது.
வீட்டிலிருந்த அனைவருக்குமே தாரு இவ்வளவு பொறுப்பாக மாறியது மிகவும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது.தாருவின் மாற்றங்களுக்கு காரணமாய் இருந்த மாப்பிள்ளை ப்ரியனின் மேல் அனைவருக்கும் மரியாதை கூடியது.
‘வீட்டின் செல்ல இளவரசியாக வளம்வந்தவள் மருமகளாக செல்லும் இடத்தில் இவளின் சிறுபிள்ளைத் தனத்தினால் பிரச்சனை வந்துவிடுமோ?’என்று பயந்த விசாலாட்சியின் மனதுக்கு இப்பொழுது தான் ஆறுதலாக இருந்தது.
அன்றும் மிகவும் சிரமப்பட்டு யாருடைய துணையும் இல்லாமல் இரண்டு மணி நேரத்தில் மதிய சமையல் அனைத்தையும் சமைத்துவிட்டு வெளியே தாரு வர “வாங்க மாப்பிள்ளை”என்று ப்ரியனை பரந்தாமனும் பத்மநாபனும் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
ப்ரியன் இன்று இங்கு வரப்போவதைப் பற்றி ஒன்றும் சொல்லாததால் தாரு இன்ப அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.”வந்தவர வாங்கன்னு கூப்பிடு தாரு”என்ற தந்தையின் குரலில் தன்னுணர்வு பெற்றவள் “வாங்க” என்று அவனை வரவேற்று அவனுக்கு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றால்.
அதற்குள் வெளியே சென்றிருந்த பெண்கள் மற்றும் கார்த்திக் வந்துவிட மற்றுமொரு வரவேற்புப் படலம் நடைப்பெற்றது.
ப்ரியனின் மனம் இன்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.காரணம் தாரு வைத்திருந்த பொட்டு.அவன் அன்று சொன்னதைப் போல் பெரிய போட்டு வைத்திருந்தாள்.அது அவளின் அழகை மேலும் எடுத்துக் காட்டியது.
அவனிடம் தண்ணீர் சொம்பை நீட்ட அவள் கையை அழுந்தப் பற்றியபடி வாங்கினான்.தாருவிற்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.வெட்கத்தில் முகம் குனிந்து கொண்டாள்.
தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் அதே போல் சொம்பைக் கொடுக்க அவளுக்கு வெட்கத்தில் முகம் செந்தணலாக சிவந்திருந்தது.
பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும் ப்ரியனின் கண்கள் அவ்வப்பொழுது தாருவை தொட்டு மீண்டன.ப்ரியனை ராஜு தாத்தா சாப்பிட அழைக்க “இன்னைக்கு நீங்க செம்மையா மாட்டுனிங்க.சமையல் செஞ்சது தாரு”என்று கார்த்திக் சொல்ல “இனி வாழ்க்கை புல்லா அதை தான் சாப்பிடனும்னு தலைல எழுதிருக்கே” என்றான் சிரித்துக்கொண்டு கவிப்ரியன்.
அவன் சொன்னதைக் கேட்டு முறைதுவிட்டுப் போன தாரு சாப்பாடு பரிமாறும் பொழுது இவன் பக்கம் வரவே இல்லை.”இன்னைக்கும் எண்ணை கத்திரிக்காய்யா?இவள் சமைக்க பழகுறன்னு சொல்லி வாரத்துல நாலு நாள் இதை செஞ்சு என்ன வெச்சு செய்யற” என்று புலம்பிய கார்த்திகைப் பார்த்து ப்ரியன் வாய்விட்டு சிரித்தான்.
ஆனால் அவன் மனதில் அவ்வளவு சந்தோசம்.தனக்காகத் தான் அவள் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறாள் என்று.அன்று எண்ணை கத்திரிக்காய் மிகவும் அருமையாக வந்திருக்க எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட ப்ரியன் அன்று அதிகமாக சாப்பிட்டான்.
அவன் சாபிட்டு முடிக்கும் வரை அவனை ரசித்தவள் விசாலாட்சி “மாப்பிளைக்கு துண்டு எடுத்துக் கொடு” என்று சொல்ல அதை எடுக்கச் சென்றால்.அவன் கை கழுவியதும் அதைக் கொடுக்க வாங்காமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் என்ன என்பதைப் போல் பார்க்க “மாமன் கை தொடைக்க சேலை கட்டலைன்னா கூட பரவாயில்லை…கடைசிக்கு ஒரு ஷால் ஆச்சு போடக் கூடதா டி?” என்று கேட்க சிரித்தவள் அவன் கையில் துண்டைக் கொடுக்க “ஏன் துடைச்சு விடமாட்டியா?” என்று அவளது இடையில் கை கொடுத்து கேட்க கூச்சத்தில் நெளிந்தவள் “விடு டா…யாராச்சும் வந்திற போறாங்க” என்று சொல்ல “கை தொடச்சு விடு..விடுற”என்றவன் சொல்ல வேறு வழி இல்லாமல் துடைத்துவிட்டாள்.
மீண்டும் ஏதோ ப்ரியன் சொல்லவர அதற்குள் கார்த்திக்கின் குரல் கேட்கவே இருவரும் விலகினார்.மீண்டும் பெரியவர்களுடன் அமர்ந்து பேசியவன் சிறிது நேரம் கழித்து தாருவுடன் பேச வேண்டும் என்று சொல்ல இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.
சிறிது தூரம் உள்ளே சென்றவுடன் தாருவை ப்ரியன் இறுக அணைத்துக் கொண்டான்.அவளும் அவனுடன் ஒன்றிவிட்டாள்.சிறிது நேரம் கழித்து இருவரும் விலக அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் “இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?” என்று கேட்க அவளால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
“என்ன பாரு டி”என்றவன் சொல்ல அவனைப் பார்த்தால் “வீட்டுக்குள்ள வர்றப்ப உன் கோலம்.சூப்பரா போட்டிருக்க.அப்புறம் எனக்கு பிடிச்ச இந்த பெரிய பொட்டு.எல்லாத்தையும் விட சூப்பர் உன்னோட எண்ணை கத்திரிக்காய் குழம்பு” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இப்படியே நாட்கள் அழகாய் சென்றன.இருவருக்கும் முரண்பட்ட கருத்துகள் வந்தாலும் ஒன்று ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து சென்று விட்டனர் அல்லது மற்றவருக்கு அதைப் புரியவைத்து மாற்றிவிட்டனர்.
“வாங்க… போங்க…” என்ற அழைப்பு மாறி இப்பொழுது “வா டா..போ டா..”என்ற அழைப்பு தான் தாருவிற்கு இப்பொழுது வருகிறது.ப்ரியனும் அவளை “அம்மு”என்று அழைப்பான்.
கிராமத்து வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி தாரு அவள் நடைமுறைகளை கொஞ்சம் மாற்றிக் கொண்டாள்.சிரமப்பட்டாலும் ப்ரியனின் மேல் இருந்த அன்பு அவளை இதைச் செய்ய வைத்தது.
ப்ரியனுடம் பேசுவது மட்டுமல்லாது இப்பொழுது தன் மாமியார் நாத்தனார் உடனும் போன் பேசும் அளவுக்கு முன்னேறியிருந்தாள்.
ஒரு அளவிற்கு பொறுப்புகளை எல்லாம் கற்றுக்கொண்டாள்.அவள் உடை விஷயம் கூட சற்று மாறி இருந்தது.சில மாற்றங்கள் ப்ரியனால் நிகழ்ந்தன சில மாற்றங்கள் அவனுக்காக அவளாகவே அவளை மாற்றிக்கொண்டாள்.
ப்ரியனும் தாருவிற்காக தன் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தான்.தன் உடை விஷயங்களை அவளுக்குப் பிடித்தது போல் மாற்றிக்கொண்டான்.
இருவரும் சேர்ந்து இருமுறை கோவைக்கு தனியாக வந்திருந்தனர்.அவள் முதல் முதலாக கேட்ட ஐஸ்கிரீமை இப்பொழுது அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறான் நம் ப்ரியன்.
உறுதிவார்த்தை நிச்சயதார்த்தத்தின் பொழுது புகுந்த வீட்டினருடனும் கொஞ்சம் நன்றாகப் பழகிக் கொண்டாள் தாரு.
உறுதிவார்தையும்,நிச்சயதார்த்தமும் நல்ல படியாக முடிந்திருக்க நாளைக் காலை இருவருக்கும் திருமணம்.இன்றைய இரவு ரிசப்சனிலேயே இருவரும் நின்று நின்று கலைத்துப் போய் இருந்தாலும் தூங்காமல் போன் பேசிக் கொண்டிருந்தனர்.
பன்னிரண்டு மணி ஆனதும் “போதும் போய் தூங்கு டி.காலைல நேரத்துல எந்திருக்கணும்”என்று ப்ரியன் சொல்ல “ஏன் டா இவ்வளவு நாள்ல ஒரு நாள் ஆச்சு என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிருக்கியா?” என்று தன் நெடு நாள் வருத்தத்தை அவனிடம் கேட்க சிரித்தவன் “போய் தூங்கு டி.நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றான்.
அவள் ஒன்றும் பேசாமல் காலை கட் செய்யாமல் இருக்க “ஒய் மேடம்!என்ன கோபமா?” என்றான் அவளை சரியாய் புரிந்து கொண்டு.இப்பொழுதும் அவள் ஒன்றும் பேசாமல் இருக்க அவன் போனை வைத்துவிட்டான்.
அவளுக்குத் தெரியும் அவன் கண்டிப்பாக இப்பொழுது அவளைப் பார்க்க வருவான் என்று.மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து சில பூக்களை எடுத்தவன் அங்கிருந்த ரிப்பனைக் கொண்டு அதை அழகாய் கட்டி அவள் அறைக்கு எடுத்துச் சென்றான்.
அவளுடன் இருந்தவர்கள் பாகத்து அறையில் தூங்கி இருக்க இவள் மட்டுமே இங்கே இருந்தாள்.உள்ளே வந்தவனைப் பார்த்ததும் சிரித்தவள் புருவம் உயர்த்தினால்.
அவள் முன் மண்டி இட்டவன் “ஐ லவ் யூ” என்று சொல்ல “போ டா உனக்கு ப்ரொபோஸ் கூட பண்ணத் தெரியல” என்று தாரு சலித்துக்கொள்ள “நீ கூபிட்ட உடனே வந்தன்ல என்ன சொல்லணும்.நீங்க நினைக்கிற மாதிரி ட்ரீம் ப்ரோபோசல்ஸ் எல்லாம் சினிமால தான் மா நடக்கும்” என்று சொல்ல
“போ டா!நான் எப்ப எது கேட்டாலும் இதே சொல்லு” என்றாள்.மேலும் அவளைப் பேச விடாமல் இறுக அணைத்தவன் தன் அதரங்களை அவள் நெற்றியில் பதித்துவிட்டுச் சென்றான்.
அடுத்த நாள் காலை முப்பது முக்கோடி தேவர்களும் ஆசிர்வதிக்க கவிப்ரியன் தாரிகாவின் கழுத்தில் மங்கள நானையிட்டான்.
கழுத்தில் தாலி ஏறியதும் தாரு சிரித்த முகமாக ப்ரியனைப் பார்க்க அவன் கண்ணில் இரு சொட்டுக் கண்ணீர்.கண்ணைச் சிமிட்டி அதை உள்ளிழுத்துக் கொண்டவன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
பரந்தாமன் விசாலாட்சி இருவரின் கண்ணிலும் கண்ணீர்ப்படலம்.விசாலாட்சி கூட தன்னை சமாளித்துக் கொண்டார்.ஆனால் பரந்தாமனால் தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
ப்ரியனின் பெற்றோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள் இவர்களிடம் வர கண்ணைத் துடைத்துக் கொண்டு ஆசீர்வாதம் செய்தனர் பெற்றோர்.