akila kannan’s Kattangal 1

akila kannan’s Kattangal 1

கட்டங்கள் – 1

நடுத்தர  வர்க்கத்தினர்  வாழும்  பகுதி.

                  ஞாயிறு காலை 10 மணி. 

                         சூர்ய   பகவான்  அவர் வேலையை  அழகாக  செய்துகொண்டிருந்தார்.   சுள்ளென்று  வெயில்.   வெயில் பெரியவர்களுக்கு மட்டும்  தான் போலும்….

                            கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த  சில குழந்தைகள்,  சைக்கிள்ஓட்டிக்  கொண்டிருந்த  குழந்தைகள் எனஆரவாரமாக இருந்தது அந்த மிகப் பெரிய குடியிருப்பு. 

          பல வீடுகள்… பல குடும்பங்கள்…. நிறைய குழந்தைகள்…..

              அந்த குடியிருப்பின் ஒரு பகுதியில்பல இளம் பெண்கள் டென்னிஸ்  விளையாடி கொண்டிருந்தனர்.

                     “எந்த பெண்ணை ப்  பார்த்தாலும் அழகு  தான். இறைவனின் படைப்பின் அழகே தனி தான். ” , என்று தங்களுக்குள்முணுமுணுத்தக் கொண்டு அங்கிருந்த திண்டில்  அமர்ந்திருந்த  கல்லூரி காளைகள்.   

           பெரியவர்கள்  யாரும்  அங்கு  இல்லை.மத்திய உணவு தயார் செய்துகொண்டிருப்பதின் அறிகுறியாக ,ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு வாசனை.

     சாம்பார், அவியல், மோர்க்குழம்பு  என பலவித மனமும், சிலர் வீட்டிலிருந்து பிரியாணிமனமும் வருகிறது.

     ட்ராக்ஸ் , பிங்க் டீ ஷர்ட் அணிந்துகொண்டு டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணிடம் , “நித்யாநோக்கு கல்யாணமாமே?” , என்றுவினவினார் மடிசார் அணிந்திருந்த   மாமி.

” ஆமாம் மாமி..  அம்மாவும் அப்பாவும்  அப்படிதான் சொல்றாங்க… ” , என்று  விளையாட்டில்கவனமாக  நித்யா பதில் கூற  அவள் அடர்த்தியான நீளமான கூந்தல் அங்கும் இங்கும் அசைந்தது.

“இப்படியா கல்யாணப் பொண்ணுபொறுப்பில்லாம பதில் சொல்றது..? ” , என்றுஅந்த மாமி பக்கத்தில் இருந்த ஒரு  பாட்டிவினவ, ” அக்கா வசமா சிக்கிட்ட… ”  ,  என்றுநித்யாவின் காதில் கிசுகிசுத்தாள்நித்யாவின் தங்கை காயத்திரி. 

அவள் அருகில் நின்று  கொண்டு  . “ஆமாம்காயத்ரி.. நானும் அதையே  தான்யோசிக்கிறேன்… ” , என்று நித்யாகண்ணடித்து கூறினாள்.

” அக்கா வீட்டுக்கு போலாமா..? ” , என்றுகாயத்ரி வினவ,  ” ஆமாம்  நாம் வந்து ரொம்பநேரம் ஆச்சு….  ” , என்று கூறினாள் நித்யா..

” ஓகே …  நாங்க கிளம்பறோம்.. சாயங்காலம்பார்க்கலாம் ” , என்று கூறிக் கொண்டே,அவர்களது டென்னிஸ் ராக்கெட்டைஎடுத்துக் கொண்டு கிளம்பினர் நித்யாவும், காயத்ரியும் .

இருவரும் படியேறி , முதல் மாடியில்இருக்கும் அவர்கள் வீட்டுக்கு செல்ல, “ஹாய்  நித்தி  அக்கா..  ஏன் இன்னக்கிஎங்களோட சைக்கிள் ஓட்ட வரலை? ” , என்றுகோபித்துக் கொண்டனர் இளம்பட்டாளங்கள்.

” சாயங்காலம் வரேன் டா.. ” , என்று நித்யாபதில் உரைக்க, ” அக்கா உனக்குகல்யாணமாமே? அம்மா சொன்னாங்க … ” ,என்று கேட்டாள் ஐந்து வயது சுட்டி பெண்.

    “என்ன  பதில் சொல்வது?” , என்று நித்யாயோசிக்க , “இனி எங்களோட விளையாட வரமாட்டியா?” , என்று வினவினான் மற்றோருகுட்டி பையன்.

“நேரமாச்சு..  உங்க எல்லார் கேள்விக்கும்சாயங்காலம் பதில் சொல்றேன்… ” , என்றுகூறிக்கொண்டே படி ஏறினாள் நித்யா..

“நண்டு, நசுக்கெல்லாம் கூட கூட்டிட்டுசுத்தினா..  இப்படி தான் கேள்வி கேட்கும்..” ,என்று தலையில் அடித்துக் கொண்டாள்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்காயத்திரி.

    அவளை திரும்பி , ஒரு   பார்வை பார்த்தாள்  நித்யா.                    

“ஸ்கிர்ட் டாப்ஸ் அணிந்து கொண்டு  சின்ன போனிடைலொடு இருக்கும் நீயே ஒருநண்டு”, என்ற நித்யாவின் பார்வை கூறிய செய்தி  காயத்ரிக்கு புரிந்தாலும்   புரியாததுபோல், வீட்டுக்குள் நுழைந்தாள்.

“ஏண்டி!!!   அவ தான் சின்ன பொண்ணுஇவ்வளவு நேரம் வெயில்ல நின்னுவிளையாடிட்டு வரா…. நீ கல்யாணப்பொண்ணு இப்படி  தான் வெயில்ல நின்னுவிளையாடுவியா..? ” , என்று கோபமாககேட்டார்  பத்மா நித்யா, காயத்ரியின் தாயார்.

          சற்று பூசினார் போல் உடல் தோற்றம்.மாநிறத்தில் லட்சுமி கடாக்ஷம் நிறைந்தமுகம். சேலையை தூக்கி சொருகியபடிசமயலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  

“விடு பத்மா..  எதோ கல்யாணம்  வரைக்கும்விளையாடுவா..? அப்பறம் இப்படிவிளையாட முடியுமா..? ” , என்று பத்மாவைசமாதானம் செய்தார் ரங்கநாதன்.

“என்னவோ நிச்சயம் பண்ண மாதிரி..,கல்யாணம் கல்யாணம்னு  ஊரெல்லாம்சொல்லிட்டு இருக்கீங்க…?” , என்றுகோபமாக கேட்டாள்  நித்யா.

“முதல் நாள்  நிச்சயம்.. மறு நாள்கல்யாணம்… ” , என்று  கூறினார் பத்மா. 

“மாப்பிள்ளை என்னை பார்க்கலை.  நானும்மாப்பிள்ளையை பார்க்கலை…. ” , என்றுநித்யா  கடுப்பாக கூற, “அதெல்லாம்அவசியம் இல்லைனு  மாப்பிள்ளைசொல்லிட்டாராம்.. அம்மா  பார்த்தா பொதுமுன்னு  சொல்லிட்டாராம்… ” , என்றுபத்மா  கூற, “நான் அப்படி எதுவுமே சொல்லலியே ” , என்று கூறினாள் நித்யா.

நித்யா  அருகில்  கரண்டியோடு  வந்த  பத்மா, “நல்ல கவனிச்சிக்கோ… அவர் தான்மாப்பிள்ளை..  பெரிய  பணக்கார  இடம்.. நீ மாப்பிள்ளை  என்ன  சொன்னாலும், நாங்க என்ன சொன்னாலும்  சரினு சொல்லிட்டு..எந்த பிரச்னையும் பண்ணாமகல்யாணத்துக்கு ஒத்துக்கற… புரியுதா..? ” ,என்று கோபமாக கேட்க,

“அம்மா  நாம மிடில் கிளாஸ்.. அவுங்கபணக்காரங்க…  எதுக்கு இங்க பொண்ணுஎடுக்கணும்… ? மாப்பிள்ளைக்கு  எதாவது குறை  இருக்கானு  கேட்டிங்களா..? ” , என்றுநித்யா  வினவ.., “அதெல்லாம்  நாங்க பார்த்தாச்சு… மாப்பிள்ளை  ஜோரா  ராஜா கணக்கா இருக்காரு.. ” , என்று கூறினார் ரங்கநாதன்.

                “அம்மா , அப்பா  கூட்டணி  பலமா இருக்குதே…   எப்படி பந்து  போட்டாலும்கேட்ச்  பிடிக்கிறாங்களே.”, என்று  நித்யா யோசிக்க, ” வேலையை  ரிசைன்  பன்னிரு … ” , என்று  பத்மா  கூற, “ஹா… பாயிண்ட் கிடைச்சுது … ” , என்று  ஆனந்தம்  அடைந்த நித்யா, ”  நான்  கஷ்டப்பட்டு  வாங்கின வேலை… எப்படி  விட  முடியும்…?” , என்றுசிடுசிடுத்தாள். 

“சம்பாதிக்க  தான்  வேலைக்கு  போற.., மாப்பிளை பணக்கார இடம்… நீ சம்பாதிக்கவேண்டிய  அவசியமே  இல்லை… ” , என்று பத்மா  கூற, ” அம்மா  நான்  பணத்துக்காகவேலைக்கு  போகலை… ” , என்று  நித்யா கூற, ” ஓஹ்…. சும்மா  தான்  வேலைபார்த்தியா..?” , என்று பத்மா  நக்கலாகவினவ , ” அம்மா… நான்  பாக்கிற  வேலை.,எனக்கு தன்னம்பிக்கை.. நான்  படிச்ச  படிப்பு.. என்  அடையாளம்.. ” , என்று அழுத்தமாகநித்யா கூறினாள்.

” சரி  வேலையை  விடறது  விடாதது  உன் பாடு  மாப்பிள்ளை  பாடு … கல்யாணம்கண்டிப்பா  நடக்கும் ” , என்று பத்மா  கூற, “என்றாவது ஒரு நாள் யாரையாவதுகல்யாணம் செய்து தானே  ஆக வேண்டும். “

என்று எண்ணிக்கொண்டு, சமயலறையில்  காய்  நறுக்க ஆரம்பித்தார்  பத்மா.

ட்ரிங்…  ட்ரிங்…

           அறையின்  ஓரத்தில்  இருந்த தொலைபேசி  அழைத்தது.  தொலைபேசியின் அழைப்பு  காய்  நறுக்கி கொண்டிருந்த  பத்மா  காதிலும்  விழுந்தது. தொலைபேசியின் அழைப்பு  வரவேற்பரையில்  இருந்த  ரங்கநாதன் காதிலும்  விழாமல்  இல்லை.    “அதையாரவது எடுங்களேன்…” , என்று பத்மா கூற, “எல்லார் கிட்டயும் மொபைல் இருக்கு .. இந்தடெலிபோன் எதுக்கு?” , என்று காயத்ரிநியாயம் பேச, ” நான் வேலையா இருக்கேன்..யாரவது எடுத்து பேசுங்களேன்.. ” , என்றுகூறிய பத்மாவின் குரலில் , “சில நேரங்களில்அல்ல பல நேரங்களில் இந்த தொலைபேசிஇம்சை தான்” , என்ற வெறுப்பு அவர் குரலில்தெரிந்தது.

” ஹலோ… ” , என்று நித்யா  கம்பீரமாக பேசஆரம்பித்தாள்.

எதிர்முனையில் எந்த பதிலும் இல்லாததால்,”ஹலோ… ஹலோ .. ஹலோ.. ” , என்று மூன்றுமுறை நித்யா  பொறுமை இழந்து கூற, “மதுசூதனன்  ஸ்பீக்கிங் ” , என்றது ஒருகம்பீரமான ஆண் குரல்.

இதற்கு  பல கேள்விகளை கேட்கநினைத்தாலும் , சூழ்நிலை கருதி அமைதியாகஇருந்தாள் நித்யா.

         நித்யாவிற்கு   திருமணம் மீது வெறுப்பு என்றெல்லாம் இல்லை..  இன்னும் கொஞ்சம்நாட்கள் சுதந்திரமாக  இருக்கலாம் என்றஎண்ணம் தான்.  வேலை பார்க்கலாம் ..ஜாலியா ஊர் சுற்றலாம் ..இது போன்றஎண்ணங்கள்.. அவள் தோழிகள் யாருக்கும்இன்னும் திருமணம் ஆகா வில்லை என்பதுஅதை விட மிக முக்கியமான விஷயம்.

ஆனால் …  “மதுசூதனன்  ஸ்பீக்கிங் ” , என்ற குரல்  அவளை  ஈர்க்கத்  தான்  செய்தது.  இவன்  பெயரை  சொன்னால் ,  என்ன  என்று நான்  கேட்க  வேண்டுமா? இவன் என்ன  பிரதமரா ? பிராதன மந்திரியா..? என்று பழைய நகைச்சுவை எல்லாம் இவள் மனதில்தோன்ற , “ஹலோ .. நித்யா  இருக்காங்களா..?” , என்று  எதிர் முனையில் இருந்து வெளிவந்தகுரலில் எரிச்சல் இருந்தது.                

        “ம்ம்ம்.. நான் தான் பேசுறேன்… ” , என்றுநித்யா  கூற, ” யாரு ? “, என்று கண்  உயர்த்திகேட்டார் பத்மா.

“மாப்பிளை.. ” , என்று  தன்  உதடுகளை அசைத்தாள்  நித்யா.

      தன்  கைகளால்  வாயைப் பொத்திசிரித்தாள் காயத்திரி.

“…… ” , எதிர் முனையில் என்ன பேசிருப்பார்கள்என்று நமக்கு கேட்க வாய்ப்பில்லை.

நித்யாவின்  முகத்தில்  சிந்த்னை  ரேகைகள். நித்யா  ஏதோ  பேச எத்தனித்தாள்.

” ……. ” , எதிர் முனையில்  ஏதோ  கூற, மீண்டும்அமைதியானாள் நித்யா.

அவன் பேசி முடிக்க, நித்யா “ஹலோ …. ” ,என்று  நித்யா பேச ஆரம்பிக்க,  தொலைபேசிபேச்சை முடித்து விட்டான் மதுசூதனன்.

தோளை  குலுக்கிக்  கொண்டு   டெலிபோன்  பேச்சை  முடித்து   அருகில்  இருந்தசோபாவில்  வந்து  அமர்ந்தாள்  நித்யா.

“அக்கா .., நீ  இவ்வளவு  அமைதியா  கூட பேசிவியா..?” , என்று காயத்ரி வினவ, “மாப்பிள்ளை  கிட்ட  ஒழுங்கா  பேசினியா? ” ,என்று  பத்மா  கேட்க,  ” அவன்  என்னை எங்கே பேச  விட்டான்.. ” , என்று  நித்யா  மனதிற்குள் நினைத்தாள். 

பணக்கார  இடம்.. இந்த  இடம்  எப்படியாவது முடிந்து  விட  வேண்டும்  என்ற  எண்ணம் பத்மாவுக்கு.

“மாப்பிள்ளை என்ன சொன்னார்…?” , என்றுபத்மா வினவ,  ” நீங்க  போடுற நகையோட ஒருவைர அட்டிகை .. ECR ல ஒரு பங்களா.., BMWகார் ..  கேட்டார் ” , என்று நித்யா கூற, “அதுக்கு நீ என்ன சொன்ன ?” , என்று காயத்ரிதீவிரமாக  கேட்டாள்.

” அம்மா  தான்  மாப்பிள்ளை  கிட்டசமாதானமா போகணும்.. என்னசொன்னாலும் சரினு சொல்லனுமுனு சொன்னாங்க.. அது  தான்  எல்லாம் ஓகே….. அப்பா  வாங்கி தந்திருவாங்கனு  சொல்லிட்டேன்… ” , என்று நித்யா கண்விரித்து கூற,   “க்ளுக்” என்று சிரித்தாள்காயத்ரி.

ஒரு  நிமிடம்  குழப்பம்  அடைந்த  பத்மா..,  ” ஏய் எதாவது  குழப்பம்  பண்ணி கல்யாணத்தை நிறத்தணுமுன்னு  நினைக்காத  “,  என்றுகறாராக கூறினார்.

நித்யா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாக”சரி” என்று தலை அசைத்தாள்.

“அவங்க  ரெண்டு  பேரும் ஏதாவது பெர்சனலாபேசிருப்பாங்க… நீங்க அதெல்லாம்கேட்டுகிட்டு… ” , என்று காயத்ரி முணுமுணுக்க, ” இப்படி  ஒன்று இருக்கிறதோ…? ” , என்றுபத்மா சிந்திக்க, நடப்பதை  அமைதியாக  பார்த்துக்  கொண்டிருந்தார்  ரங்கநாதன்.

                 பணக்கார  சம்பந்தம்  நித்யாவின் வாழ்விலும் இவர்கள் குடும்பத்திலும்என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்.?

                                                             கட்டங்கள் நீளும்………………..

                                    ——— அகிலா கண்ணன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!