என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(1):
———இன்று———
அவளின் மனது அகிலனைச் சுற்றிவந்தாலும், அவ்வப்போது லயா உடனிருப்பது அவனைச் சற்று மறக்கச்செய்தது.
“இதுதான் உங்களோட ரூம் கவிதா. இந்தாங்க சாவி” சாவியைக் கொடுத்தவள் தொடர்ந்து…
“இப்போதைக்கு இந்தச் சர்வீஸ் அபார்ட்மெண்ட்’ல நாம ரெண்டு பேர் மட்டும்தான். அப்பறம் குக் (cook) தாமஸ் அண்ணா. அவரு வெளிய போயிருப்பாரு போல. டீ காபி ஏதாச்சும்?” கேட்டாள் லயா.
“கிட்சேன் எங்க இருக்கு? நான் ஒரு பிளாக் காஃபி போட்டுக்கறேன். நீ என்ன குடிப்ப?” எனக் கவிதா கேட்க…
“என்னது பிளாக் காஃபி’யா? அத நீங்கெல்லாம் எப்படித் தான் குடிக்கறீங்களோ” எனச் சலித்துக்கொண்டு…”எனக்கு தாமஸ் அண்ணாவோட இஞ்சி டீ தான்” என்றாள்.
லயாவைப் பார்த்துப் புன்னகைத்தவள், வெந்நீர் வைத்துத் தனக்கு பிளாக் காஃபி போட்டுக்கொண்டாள்.
“எனக்கு இங்க ஒரு க்ளோஸ் இந்தியன் ஃபிரன்ட் இருக்கான். இன்னிக்கி நைட் ரெண்டுபேரும் டின்னர் சாப்பிட வெளிய போறோம்.
தாமஸ் அண்ணா வந்ததும் உங்களுக்கு இன்ட்ரோ குடுத்துட்டு நான் கிளம்பறேன்” என்றாள் லயா.
அதற்கும் புன்னகையையே பதிலாக அளித்தாள் கவிதா.
அதைப் பார்த்த லயா கடுப்புடன் மனதில் ‘வாயிலருந்து வார்த்தை வராது போலயே. அவன்கிட்ட மட்டும் தான் லொட லொடன்னு பேசுவன்னு பாத்த… இவகிட்டயுமாடி லயா… என்ன செய்ய… நம்ம வாய் டிசைன் அப்படி” என நினைத்துக்கொண்டு…
லயா மொபைலில் பிஸி’யாக, கவிதா கனவில் பிஸி’யாக, சிறிது நேரத்தில் அங்கே வந்தார் தாமஸ்.
அறிமுகப்படலத்தை ஆரம்பித்தாள் லயா.
“தாமஸ் அண்ணா மலையாளீ… நல்லா சமைப்பாரு. தமிழ் அருமையா பேசுவாரு. தாமஸ் அங்கிள்னு தான் சொல்லணும் ஆனா அவருக்குப் பிடிக்காது அப்படிச் சொன்னா” என்று அவரைப் பார்த்துக் கண்சிமிட்டினாள் லயா.
“ஹாய் அண்ணா… நான் கவிதா…” என்றவளுக்கு எனோ அவரைப் பார்க்கும் போது ஒரு தந்தையின் கனிவு தெரிந்தது. லயா அவர்கள் பேச ஆரம்பித்தவுடன் அங்கிருந்து நழுவினாள்.
அவர் கவிதாவிடம், “உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லுமா… அதுக்கேத்த மாதிரி சமைக்கறேன்” எனச் சொல்ல…
“எனக்கு இப்போல்லாம் சாப்பாடுன்னு ஒன்னு தட்டுல இருந்தா போதும் ண்ணா. ஸ்பெஷலாலாம் வேணாம்”
“அட என்ன பொண்ணுமா நீ… மத்தவங்க சமைச்சுப்போடும்போதே நல்லா சாப்பிடுமா” என்றவுடன் அண்ணாவைக் கவிதாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. சிலநிமிடங்களில் லயா புறப்பட்டுத் தயாராகி வர, “டீ குடிக்கறயா லயா?” கேட்டார் தாமஸ்.
“இல்லணா. இன்னிக்கி என் ஆளோட எஸ்ப்ரெஸ்ஸோல காஃபி, அப்பறம் மால்’ல பர்ச்சஸ்” என்றாள் கண்ணடித்து… “நைட் டின்னர்?” அவர் கேட்க
“அதுவும் முடுச்சுட்டு தான் வருவேன். பை ண்ணா. பை கவிதா” சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து பறந்தாள்.
“சின்னபொண்ணாவே இருக்கு” என்ற தாமஸ் உள்ளே சென்றுவிட, கவிதாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? மறுபடியும் இந்த நிகழ்வுடன் ஒற்றிய அகிலன் புராணம் படிக்க அவள் மனது சென்றுவிட்டது…
———அன்று———
கல்யாண தினம் நெருங்கிக்கொண்டே இருந்தது…
என்ன செய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள் கவிதா…
“அம்மாடி எப்படி மா இருக்க?” எனப் போனில் அழைத்த தந்தையிடம்
“இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க?” என விசாரித்தாள்.
“என்னமா ஆச்சு… குரல் ஒரு மாதிரி இருக்கே?”
“ஒன்னுமில்லப்பா. இப்போ தான் எந்திருச்சேன்” என்று அழுதக் கண்களைத் துடைத்துக்கொண்டு பொய் சொல்ல…
“சரிடா. பத்து நாள்ல கல்யாணத்த வெச்சுட்டு இன்னும் வராம இருக்கயேடா… சீக்கரம் கிளம்பிவா மா” என்று அவளிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
அவள் எதிர்பார்த்ததை விட அனைத்தும் துரிதமாக நடந்தது.
‘இருவரின் ஜாதகத்துக்கு இன்னும் நாப்பது நாட்களுக்குள் திருமணம் நடக்காவிடில் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும்’ என்று இருவீட்டு ஜோசியர்களும் சொல்லிவைத்தாற்போல் ஒரே விஷயத்தைச் சொன்னார்கள்.
இப்படிச் சொன்னதற்குக் காரணம் யார்? அதுவும் போகப் போகப் பார்ப்போம் ….
இந்த அவசரக் கல்யாணத்தை ஏற்க மறுத்தது ஒரேயொரு இதயம். அது கவிதாவினுடையதே…
“இப்படி வந்து நிக்க வெச்சுட்டாங்களே என்ன. அஜய்’ட்ட சொன்னா ஏதாச்சும் பண்ணுனு சொல்றான். அதுவும் ஒரு வாரம் ஆச்சு அவன் கூடப் பேசி… என்ன ஆனான்.. ஏதாச்சும் பிரச்சனையான்னு தெரில” என நினைத்து நினைத்துத் தூக்கம் தொலைத்தது மட்டுமே மிச்சம் கவிதாவுக்கு.
நாட்கள் நெருங்க நெருங்க, இதற்கு ஒரே தீர்வு, அகிலனைச் சந்தித்து… அனைத்தையும் சொல்லி… நிறுத்த சொல்ல வேண்டியது தான் என்று நினைத்துக்கொண்டாள்.
காலதாமதமாகச் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மறந்தாள் கவிதா.
***************
“ஓ மை காட். ஆர் யு ஒகே மிஸ் கவிதாயினி” என்றான் போலயான அதிர்ச்சியுடன் அகிலன், அவள் போன் செய்திருந்ததைப் பார்த்து.
“ஐம் ஒகே. ஏன் கேக்கறீங்க?” தீவிரமாக பதில் கேள்வி கேட்க
“இல்ல நீங்க கால் பண்ணிருக்கீங்களே. சுயநினைவோடை இருக்கீங்களான்னு செக் பண்ணேன்” என்றவுடன் எரிச்சலின் உச்சிக்கே சென்றுவிட்டாள் கவிதா.
மூச்சை இழுத்து, ‘பொறுமையா பேசு கவி’ என மனதைச் சாந்தபடித்திக்கொண்டு…
“நீங்க சென்னைல தான இருக்கீங்க? நான் உங்ககிட்ட நேர்ல பேசணும்” என்று சொன்னவுடன் அகிலனுக்கு அதிர்ச்சியுடன் சந்தோஷமும் தொற்றிக்கொண்டது.
அந்த சந்தோஷத்தில் “எங்க மீட் பண்ணலாம்னு நீயே சொல்லு” என்று உரிமையுடன் பேச ஆரம்பித்தான். அதை உணர்ந்தவள், அதைப் பெரிதுபடுத்தாமல்…
“பிரெஸ்டிஜ் மால்? ஸ்டார்பக்ஸ்? நாளைக்கி மார்னிங் 10?” அவள் கேட்டவுடன் “டன். சி யு ஸ்வீட்டி” என்று அவள் திட்டுமுன் அவசரமாகச் சிரித்துக்கொண்டே அழைப்பைத் துண்டித்தான்.
அதே மாலில், அந்த காபி ஷாப் எதிரில் அவனுடைய நண்பன் அரவிந்தின் ஐஸ் கிரீம் பார்லர் இருந்தது.
அரவிந்தும் அகிலனும் நண்பர்கள்.
பள்ளியில் தொடங்கி, கல்லூரியைக் கடந்து… இப்போது வரை தொடர்கிறது. இதே அரவிந்த் வரும்காலத்தில்… முக்கியமான தருணத்தில் ‘நண்பேன்டா’ என அகிலனுக்கு உதவும் தருணமும் வரும்!
“டேய் இங்க என்னடாப் பண்ற? உன் fiancé அங்க காபி ஷாப்’ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… நீ இங்க அவங்கள பாத்துட்டு
உட்கார்ந்துருக்க” அரவிந்த் கேட்க…
“மச்சி அவ முகம் போறப் போக்கப்பாத்தா க்யூட்டா இருக்குடா. நான் இன்னும் வரலன்னு எவளோ டென்ஷன் ஆறா பாரு” அவளை ரசிக்கும் நண்பனைப் பார்த்து
“டேய் நீ என் ஃபிரன்ட் அகில்தானே? டவுட்டா இருக்கு மச்சி” என்றவுடன் அவனைப் பார்த்து அசடுவழிந்தான் அகிலன்.
“ஆவி கீவி பூந்துடுச்சாடா? பொண்ணுங்கள பாத்தாவே காண்டாவ. பத்தடி தள்ளி நிப்ப… இப்போ இப்படி வழியரையே… தொடச்சுகோ… சகிக்கல” எனத் தலையில் அடித்துக்கொண்டான்.
“டேய் டேய். அவ எந்துருச்சுட்டா டா… கோவிச்சுகிட்டான்னு நினைக்கறேன்… நான் கிளம்பறேன்” சொல்லிக்கொண்டே எதிரே இருந்த ஸ்டார்பக்ஸ்’க்குள் பத்தே அடியில் நுழைய…
அவனுக்காகக் காத்திருந்து ‘கிளம்புவோம்’ என்றெண்ணிய கவிதா, அவன் வருவதைப் பார்த்ததும் அமிலத்தைக் கண்களால் உமிழ்ந்து, மறுபடியும் இருக்கையை நோக்கிச் சென்றாள்.
“ஹே ஸ்வீட்டி ஸாரி. ரொம்ப நேரம் வெயிட் பண்றயா…” எனக் கேட்டுக்கொண்டே அவள் எதிரில் உட்கார்ந்தான் முகத்தில் டன் கணக்கில் பிரகாசத்துடன்.
அதற்கு எதிர்மறையாக முகத்தில் எரிச்சலுடன்… “மொதல்ல இந்த ஸ்வீட்டி’ன்னு கூப்பிடறத ஸ்டாப் பண்ணுங்க. இரிடேட் ஆகுது” என கவிதா சொல்ல…
“ஒகே ஸ்வீட்டி… உன்ன இனி ஸ்வீட்டினு கூப்பிடமாட்டேன் ஸ்வீட்டி” என்றவன் கடைசியில் கண்ணடித்து நிறுத்தினான்.
வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு பொறுமையாக… “இங்க பாருங்க அகிலன். நான் முன்னாடி சொன்னமாதிரி இந்தக் கல்யாணத்துல எனக்கு சுத்தமா இன்டெரெஸ்ட் இல்ல. மீறி நீங்க பண்ணிக்கணும்னு நினச்சா கல்யாணத்துக்கு முன்னாடி நான் அஜய் கூடப் போகவேண்டியதா இருக்கும்”
“நானே அப்பாக்கிட்ட சொல்லிடுவேன் ஆனா அப்பா எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிடுவாரோன்னு தான் உங்கள சொல்ல சொல்றேன்” என்று படபடவெனக் கொட்டிவிட்டாள் பேச நினைத்ததை.
அதைக் கேட்டவன் சலமில்லாமல் அவளையே பார்த்திருந்தான் …
‘எப்பொழுதும் மலர்ந்திருக்கும் உன்முகம், தளர்ந்து போன தருணம்.
அதற்குக் காரணமான ‘நீ விரும்பிய’ என்னை, வெறுக்கிறேன் இத்தருணம்’