Kanmani unai naan karuthinil niraithen 16

Kanmani unai naan karuthinil niraithen 16

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்சாரா.

 

 

அத்தியாயம் – 16

 

 

சீமா மனதிற்குள் கறுவினாலும்…, வெளியே முகத்தை சீராக வைத்திருக்க தான் முயற்சி செய்தாள்……

அனைவரும் உண்ட களைப்பில் …, உருள…..உட்கார்ந்த படிதான்

 

இளா அவ்வப்போது …, சீமாவின் முகமாற்றங்களை பதிய வைத்து கொண்டான்…..

வேதாவிடம் இளா கண்ணசைத்து…., சீமாவை சுட்டி காட்டினான்….

உடனே வேதா….,

 

வீட்டுல சொல்லிட்டு வந்தியாடி சீமா….?. மணி பத்தாகுது…. அண்ணனும் என் அண்ணியும் கவலைபட போறாங்க ….பாவம் டி அவங்க…..”

எப்படி கிளம்பரதா இருக்க….வந்த.., கொட்டிகிட்ட…, இன்னுமா நடைய கட்டுல…..இவை எல்லாம் அடங்கியிருந்தது அவரது பார்வையில்…… வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஜீராவில் ஊறிய ஜிலேபி போல நாசுக்காக நாவை வந்தடைந்தது….

 

என்ன ஆன்டி……..? உங்க செல்ல மருமக நான்…. முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்கேன் …. தங்கிட்டு  போனால் தப்பா….? என்ன துரத்தரதுலயே குறியா இருக்கீங்க……?. இளா, ஆராலாம் வேற இருக்காங்கஎனக்கும் ஜாலியா இருக்குமில்ல …?”

 

இளா , ஆராவெல்லாம் இருக்கிறதினால தாண்டி உன்னை கிளம்ப சொன்னேன்….. உனக்கு ஜாலிதான்…. எங்களுக்கு எம்புட்டு ஜோலி கொடுக்க போறீயோ….

வாயால் சொல்ல முடியாதவரின் கண்கள் அத்தனையும் காட்டியது….. இளாவைப் பார்த்து..,

இதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்று  வேதா மேல் நோக்கி கைவிரித்தார்…(ஊப்பெர் வாலா வாக பார்த்துஏதாவது பண்ணினா தான் உண்டாம்…. சொந்தக்காரி ஒருத்தி, சோத்துக்கு செத்த ஒருத்தனை திடுதிப்புன்னு கூட்டிட்டு வந்த அதிர்ச்சி.., நம்ம அம்மாடக்கர் வேதாவை  ஆஃப் செய்திருந்தது) இளாவுக்குதான் பாவம் …, கோபத்தில் மூக்கு சிவந்து விடைத்தது……..

 

 விக்……..தம்பி எப்ப கிளம்புவாரு…..?”வட்டுருட்டாண் மண்டையனை காட்டி வேதா  கேட்க…..

 

ஆன்டிஅவனை நைட்டுல தனியா எப்படி அனுப்பறது……?”

 

ஆமாம் ….இந்த விக்கு மண்டையன் தனியா போகப் போயி.., அவன் மண்டைய பார்த்து நாயெல்லாம்  வளைச்சுகிச்சுன்னா…..? ஆளும் … , அவன் மண்டையும்……..நல்லா பைரேட்ஸ் ஆஃப் தே கரீபியன் படத்தில வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் போல இருக்கான்…..”

இளா கறுவியபடி வேதாவை உள்ளே போகுமாறு சைகைக்காட்ட.., வேதா சத்தமின்றி உள்ளே நகர்ந்தார்..….

 

இளாஆர் யூ ஜெலஸ்….? ஹீ இஸ் மை பெஸ்டி ஒன்லி……..”

 

பாருடா….எனக்கு ஏன் பொறாமை….? உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா…? நீ யாரோ நான் யாரோஇப்போ நாம வெறும் ஃபேமிலி ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்….. நான் உன்னை ப்ரெண்ட்டா மதிச்ச காலமும் உண்டு….. நான் பழைய இளாங்கிற நினைப்பில, வாலாட்டுற வேலை எல்லாம் வேணாம்….?  வாலை மட்டும் நறுக்கிட்டு சும்மாவிட்டுடுவென்னு மட்டும் நினைக்காத….?  ஏதோ பக்காவா பிளான் பொட்டுருக்கன்னு மட்டும் தெரியுது……. அப்படி ஏதாவது பண்ணின …, இருந்த இடம் தெரியாமல் அழிச்சிடுவேன் உன்னை….. மைண்ட் இட்……”

 

 “நான் உன் மேல காதல்ன்னு சொல்றேன்…, ஆனா நீ மோதல்ன்னு நினைச்சிட்டியே இளா……! இல்லைன்னா விக்ரமை பார்த்து ஏன் அப்படி முறைச்ச…..?” சீமா தான்  பிதற்றினாள்…..

 

பின்ன மொறைக்காம, என் ஆராவை பார்த்த பார்வைக்குஅவனை நொறுக்கியிருப்பேன்…. என் டாலியொட வீட்டுல எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கணும்னு விட்டுட்டேன்…..

அப்புறம் ஃபார்  யூவர்  இன்ஃபர்மேஷன்.., அம் இன் லவ் வித் மை ஆரா…….. சும்மாவே ஆராவிற்கு எதாவது ஒன்னுன்னா விட மாட்டேன்இப்ப அவ என்னோட பாதி , அவளுக்கு உன்னாலயோ , உன் பெஸ்டீ ,விக்கு மண்டையனாலயோ ஏதாவது ஆச்சு….. இறங்கி செஞ்சிடுவேன் ரெண்டு பேரையும்….”

 

சொன்னதோடு விடாமல்,

 

டேய் .., விக்ரம்…. இங்க வா….”

சொடக்கு போட்டு கூப்பிட்டான் இளா,  திரு திரு விழிகளோடு திருடன் போல வந்து நின்றான் விக்ரம்……

 

அது என்ன ….?ஆராவை அப்படி பார்க்கிற…..? மன்னிப்பு கேட்டதோட எல்லாரும் மறந்துட்டோம்னு நினைச்சியா….? இன்னொரு முறை உன் கண்ணு அவ மேல இருந்ததை பார்த்தேன்…..

நாளைக்கு விடியும்போது உலகத்தை , பார்க்க மாட்ட நீ……….வந்தோமா……., மூக்கு பிடிக்க தின்னோமான்னு போயிக்கிட்டே இருக்கணும்…..

இப்ப நீ போகலாம்…..”

 

 இளா  போ என்றதும் , ஹப்பா…….! பெருமூச்சுடன் விக்ரம் நகர…,

 

டேய் …..ஒரு நிமிஷம் நில்லு,”

 

சொல்லுங்க ஜி…”. பம்மிய விக்ரம் தான்

 

இந்த வீட்டுல மூணு லேடீஸ் இருக்காங்க தெரியுமா…?”

ஆங்……தெரியும் ஜி……”

தெரிஞ்சும் …, பாதி அண்டர் வேருக்கு டிரெய்லர் போட்டு காட்டிட்டு , அங்கிட்டும், இங்கிட்டும் திரியுற….? ஜாக்கி ஜட்டிக்கு.., அந்த கம்பெனிகாரங்களே விளம்பரம் பண்ணிப்பாங்க…. நீ பண்ண தேவையில்லை புரியுதா…?”

பேன்ட்டை  எங்கடா போடுவாங்க…..?”

………..

ஸ்ட்ரிப்பா இடுப்புல நிக்கனும் பேன்ட் இல்லைன்னா பெல்ட் போட்டு டைட் பண்ணனும்.., இப்படி இப்ப விழுமோ , அப்பவிழுமோன்னு , பார்க்கிறவங்களுக்கு பீதிய கிளப்ப கூடாது….”

ஏன் பெல்ட் வாங்க காசில்லையா….?”  சீரியஸாக கேட்டான்  இளா….

 

திஸ் இஸ் டூ மச் இளா….. ஹி இஸ் மை கெஸ்ட்….” சீமா இப்போது சீரியஸ் ஆனாள்.

 

அப்ப உன் கெஸ்ட்ட , கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு போயிருக்கனும்….”.

 

இது என் ஆன்டி வீடுஎன் வீடு போலத்தான்…..”

 

ஓஹோ அதான் என் மாமா செத்ததும், அத்தையை உங்க வீட்டுல வச்சி சோறு போட்டு காப்பாத்தினிங்களோ…? இத்தனை வருஷத்துல சொந்த அத்தை வீடு இதுதான்னு  தெரியுமா உனக்கு..? முதல் தடவையா எட்டி பார்த்தவளுக்கெல்லாம் இங்க அவ்ளோ சீன் இல்ல….  கிளம்பு…”

 

சொல்லி முடித்தவன்.., விக்ரமை பார்த்து சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ,என்ற பார்வையை தந்துவிட்டுபோயி கொண்டே இருக்க….,

 கண்களில் பீதியுடன், சீமா இளாவின் இந்த நேரடி தாக்குதல்…, அதோடு ஆராவுடன் காதல்.,. எல்லாமும் பெரிய அதிர்ச்சி….. திட்டம் போட்டது முதல் கொண்டு மோப்பம் பிடிச்சிட்டானே…..

 

சுற்றி முற்றி பார்த்துவிட்டு…, நல்லவேளை யாரும் பார்க்கல….(ஆமா… …எதிர் ரூமின் ஜன்னலின் வழியே ஒட்டு பார்த்திருந்த …, கிருஷ், ரோஜா, வேதா அதோட ஆரா, இவங்க நாலு பேர தவிர யாரும் பார்க்கல………நான் பார்த்தேன்..) நிம்மதி மூச்சுவர..,அமைதியாக இருந்து ஆட்டத்தை கலைப்போம்…. முடிவுடன் நகர்ந்தாள் சீமா…..

 

இளா உள்ளே போனதும் , “அனைவருக்கும் சந்தோஷம்திட்டத்தின் கீழ், இளாவிற்கு கை, கொடுத்து கட்டி பிடித்து பாராட்ட…, ஆரா மட்டும் ஓடி வந்து ஜம்ப் பண்ணி , கிஸ்ஸடித்து விட்டாள்…. (நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை..,  கன்னத்துல தான்)

 

கிருஷ் வழக்கம் போல மூக்கில் பம்படித்து கொண்டிருந்தான்….அனல் காற்று சுற்றிலும்……..

 

இது தெரியாத ஆரா…., வேதாவிடம்..,

 

மாதா ஜி , எனக்கு பசிக்குது……..” (ஆத்தி………. திரும்பவும் சாப்பாடா …..? இது ஏதோ புது நோய் போல இருக்கே….)

 

ஏண்டி கொட்டிட்டு வந்து முழுசா .., பத்து நிமிஷம் ஆகல….., உனக்கு மட்டும் ,அதுக்குள்ள எப்படிடி….?” – கிருஷ்..

 

அண்ணா , இளா உயரத்துக்கு ஜம்புனேன்ல இப்ப… , அப்ப , என் வயித்துக்குள்ள ஒரு பெரிய பள்ளம் விழுந்து , இடம் காலியாயிட்டுண்ணா…….. சீக்கிரம் நிரப்புலன்னா அப்புறம் கேஸ் ஃபார்ம் ஆகிடும்….

ஆராவின் , இந்த புது கால்குலெய்சனை பார்த்து வியந்து நின்றான் கிருஷ்….”  ( நானும் தான்.., என்னைய விட பெரிய ஆட்டக்காரியா இருப்பா போலயே)

 

சரி …, வாடா லட்டு , பாதாம் பால் கலக்கி தரேன்…..” சிரித்தபடி வேதா அவளை அழைத்து போனார்

 (சீக்கிரம் அழைச்சிட்டு போங்க வேதா ஜி , இப்படி இவ தின்னு தின்னு தான் , என் கதையில கொஞ்சம் ,பக்கத்தை காணோம்…..!)

 

இன்னும் கடுப்ஸ் விழிகளொடு  இளாவை முறைத்து கொண்டிருந்தான் கிருஷ்

 

என்னை எதுக்குடா முறைக்கிற மச்சான்……?” என்ற இளா வின் கேள்விக்கு…. கிருஷ்.,

 

இப்ப இங்க என்ன நடந்ததுன்னு உனக்கு எதுவும் தெரியாது ……?”

 

அவளுக்கு பசி எடுத்ததுக்கு என்னை ஏண்டா இப்படி பார்க்கிற….? வேணுமின்னா நீயும் போயி பாதாம் பால் குடி….”

 

பல்லை நற நறத்த கிருஷ் …,

பாதாம் பால் இல்ல மேட்டர்…. நான் கேட்டதே இங்க நடந்த மேட்டர் பத்தி தான்அது என்ன நீங்க புதுசா கமிட் ஆனா போல தெரியலையே…? பாய்ஞ்சி வந்து முத்தம் கொடுக்கிறா அந்த பன்னி…..”

 

ஓஹோ….. அதுதான் உன் பிரச்சனையா….? அவளுக்கு என் மேல காதல்லாம் இல்லை…, நான் காலில் விழுந்து கெஞ்சி கதறுனதை பார்த்து இரக்கப்பட்டு , கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இருக்கா….. பாரேன் ரோஜாஇவன் எப்படி பேசுறான்னு…?” ரோஜாவிடம் நியாயம் வைத்தபடி மீண்டும் கிருஷ்ஷை பார்த்து…,

அடேய்அறிவு கெட்ட மச்சான்…. இப்ப ஆரா கொடுத்தாலே முத்தம்…. அது நீ காண்டாகுற அளவுக்கு…, காதல் முத்தமெல்லாம் இல்லை….

டின்னர்ல மொக்கு மொக்குனு மொக்குனாலே முறுகல் தோசை.., காலையிலிருந்து காலி பண்ணினாளே குலாப் ஜாமூன்…, சாயங்காலம் தின்னா பாரு பால்கோவா ….. அப்புறம் இப்ப குதூகலமாக குடிக்க போயிருக்காளே பாதாம் பால் அது போலத்தான் இந்த முத்தம் அவளுக்கு…., நான்  சீமாவை சமாளிச்சிட்டு வந்த ஆர்வத்தை வெளிப்படுத்திட்டு…… போயிருக்கா….”

 

கிருஷ், அமைதியாக யோசிக்க…, ரோஜாவிற்கு தான் அதிர்ச்சி

 

அண்ணா………? அப்ப லட்டு ……..”

 

சொல்லுமா…..?” இளா கேள்வியாய் பார்க்க….

 

புரியலையாடா……?. ஷாக்காமா…..!!!!..”.கிருஷ் உதவிக்கு வந்தான்.

 

சாயங்காலத்தில இருந்து., ஆரா உங்களை …, காதலிப்பது போல பார்த்தது.., காதலிப்பது போல பேசியது…, காதலிப்பது போல , கன்னத்தில் முத்தமிட்டது…., அத்தனையும் நடிப்பா….????. கோபால்சொல்லுங்க கோபால்…..????” சரோஜா தேவியாக மாறிய கிருஷ் அலப்பறை கொடுக்க….

 

அவன் முதுகில் இடி விழுந்தது……ரோஜா தான் கடுப்பில் சாத்திவிட்டாள்……. இளாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை….

 

……..!!! ஏய் …, ஐராவதம் …, இப்ப எதுக்குடி உன் தும்பிக்கைய வச்சி ,இந்த பச்ச புள்ளைய அடிச்ச….?”

 

இப்ப இங்க எவ்வளவு சீரியஸான விஷயம் போயிட்டு இருக்கு….., கோபால், அமலாபாலுன்னு ஆக்டிங் கொடுத்திட்டு இருக்கீங்க……இதுல நான்  யானையா….?” இன்னும் குமுறினாள் ரோஜா….

 

வெள்ளை யானையின்னு பாராட்டினா கூட தப்பா மக்களே….? என்னை அடிச்சிட்டீல்ல ….? இனி நீ கருப்பு கும்கிபோடி….”

 

இளா  அவர்களை பார்த்து..,“சரி.. சரி ..விடுங்கஉங்க கொஞ்சல்ஸ் எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க..…. திருப்பி இப்போதைக்கு தனியா பேச முடியாது …, சீமா நாம எப்ப சிக்குவோம் …, எதுல சிக்குவோம்ன்னு ,கண்ணுல வௌக்கெண்ணை விட்டுட்டு திரிவா…”

ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா கேளுங்க…. ஆராவுக்கு என் மேல ,அன்பு,அதீத பாசம், எக்ஸ்ட்டிரா லார்ஜ் அக்கறை எல்லாம் இருக்கு…”

ஆனால் காதல் இருக்குன்னு என்னால உறுதியா சொல்ல முடியல….. இல்லாமல் போகாதுஅவ எனக்காக பிறந்தவ…. வேணுமின்னா என் மேல உள்ள காதலை உணராமல் இருப்பா…..”

என் காதலை சொன்னதுக்கு அப்புறம் …, லைட்டா ஒரு மாற்றம் இருக்கு…, அதை இப்ப நாம நம்ப வேணாம்….. அவ கொஞ்சம் ஸ்லோ பிக் அப்…..

இன்னும் படிப்பு முடிய மூணு மாசம் இருக்கில்ல…. கொஞ்சம் கொஞ்சமாக என்னை புரிய வைக்கிறேன்……. என் காதல் அவளை மாற்றும்….”

சிலுக்கு கிட்ட லட்டுவ லவ் பண்ணறேன்னு சொல்லி அவளை இப்போதைக்கு ஆஃப் பண்ணியிருக்கேன்ஆனால் ஆரா ஸ்ட்ராங் இல்லைங்கிற  விஷயம் சிலுக்குக்கு தெரியாம நாம பார்த்துக்கணும்ஆராகிட்ட இருந்து சின்னதா ஒரு க்ளு கிடைச்சிட்டாலும்.., சிலுக்கு சில்மிஷத்தை காட்டிடுவா….அப்புறம் எங்க கல்யாணத்தை உங்க பசங்க கல்யாணத்தோட சேர்த்து நடத்திக்க வேண்டியதுதான்….”

 

இளா சொல்லி முடித்ததும் இருவருக்கும் விஷயம் புரிந்தது….

 

அந்த சிலுக்கு இருக்காளே…. அவள்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்கு எதிரா நம்மள பிளான் போட வச்சிட்டாளே….!”கிருஷ்  கொந்தளிக்க,

 

ரோஜா .., “பாரு கிருஷ் நாம அவளை .., அப்படி ஈசியா விட்டுட முடியாது…. இன்னைக்கு அவ வீட்டுக்கு வந்தது…, கூடவே அவ அல்லக்கைய கூட்டிட்டு வந்தது…,  அவளும் தங்கி.., முன்ன பின்ன தெரியாத , அவனையும் இங்கேயே ஸ்டே பண்ண வச்சதுன்னு…., அவளோட எல்லாப் பிளாணும் சக்சஸ்………. இவ்வளவு தூரம் நாம கலாய்ச்சி, அண்ணா அவங்கள காய்ச்சி எடுத்தும் .., அவ இங்கயிருந்து  அசையல…. அப்போ அவ ரொம்ப டேஞ்சர்…. நாம ஜாக்கிரதையா இருக்கணும்….”

 

ரோஜா சொல்வது மிகவும் சரி என்பது போல இருந்தது…, கெஸ்ட் ரூமில்  சீமா, விக்ரமிடம் பேசியது…….

 

சாரா………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss

error: Content is protected !!