KSE_FULL

KSE_FULL

அத்தியாயம் – 1

தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்…

எத்தனை சரிவுகள்… எத்தனை கஷ்டங்கள்…

பொருளாதாரத்தில்… குடும்ப சூழ்நிலையில்… அம்மாவின் மருத்துவ செலவில்…

விபரம் அறியாத தங்கச்சி…

விளையாட்டு தம்பி…

அப்பாவின் சொற்ப பென்சனைத் தவிர எந்தவித வருமானமும் இல்லாத, எதிர்காலம் என்ன என்று அறியாத வாழ்க்கை தான் மிதுனாவின் வாழ்க்கை.

வாழ்கையின் போக்கை அறிய முடியாமல், கணிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி தந்தை செய்த வேலையை செய்தாள்.

கூட்ட நெரிசலில் பஸ்ஸில் நசுங்கி, டிபன் பாக்ஸ் அடைத்த ஹேண்ட் பாகுடன் வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்திற்கு ஓட கற்றுக் கொண்டாள்.

நிறுத்தி, நிதானமாக நடக்க பழகியவள், வாழ்கையின் போராட்டத்தில் ஓட கற்றுக் கொண்டாள்.

கிடைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக இரவு ஏழு மணி வரை உழைக்க கற்றுக் கொண்டாள்.

வீடு வந்ததும் அக்கடா என்று இருந்து விட முடியாதபடி வரிசையாய் வேலைகள் தொடரும். தாயாரின் மருந்துகளை வேளா வேளைக்கு வரிசையாக பிரித்து கொடுப்பதில் இருந்து, சமையல் வேலைகள் தொடர்ந்து தம்பி, தங்கையை படிக்க வைப்பது வரை எல்லா வேலையையும் முகம் சுழிக்காமல், உற்சாகமாய் செய்வாள்.

தாய், சாதனா தான் ‘மகிழ்ச்சியாய் துள்ளி திரிய வேண்டிய வயதில் தன் செல்ல மகள் மாடாய் உழைத்து கஷ்டபடுகிறாளே’ என்று கண்ணீருடன் நொந்துக் கொள்வாள்.

சில சமயம் மனம் கேளாமல், “ரொம்பவும் உன்னை தொந்தரவு பண்ணுறேன்ல கண்ணு” என பிதற்றுவாள்.

அப்பொழுது மனதில் தோன்றும் சந்தோஷ வார்த்தைகளை தாய்க்கு ஆறுதலாய் கூறி, சந்தோசமாய் தாயுடன் பேசிக் கொண்டே வேலைகளை தொடர்வாள்.

சட்டென்று ஏற்பட்ட வீழ்ச்சியில், சுற்றம் எல்லாம் விலகிட, ஒரே ஒரு சொந்தமாய் அப்பாவின் தங்கை தன் கணவனுடன் தங்கிக் கொண்டார்.

குழந்தைகள் இல்லாத அவருக்கு, அண்ணன் குழந்தைகளே தன் குழந்தைகள் என எண்ணி வாழ்கிறார்.

எங்கெல்லாமோ சுற்றி திரிந்து எப்படி எல்லாமோ பிழைப்பை தேடி, அது கைகூடாமல் போக கடைசியில் இவர்களுக்கு பாதுகாப்பாய் வந்து தங்கிக் கொண்டனர். இவர்கள் வந்தது மிதுக்கு கொஞ்சம் ஆறுதலாய், பாதுகாப்பாய் அமைந்தது.

கந்தசாமி மாமாவால், எந்த வருமானமும் கிடையாது தான், அதே போல அவரால் எந்த உபாதையும் கிடையாது.

அவ்வ போது பீடிக்கும், வெற்றிலைக்கும் மட்டுமே அவளை தாங்கி நிற்பார். அதுவும் சில நேரம் மனைவி துணி தைப்பதில் வாங்கிக் கொள்வார்.

அவளிடம் வந்து நிற்கும் பொழுதெல்லாம் மிது கண்ணு ஒரு பத்து ரூபா தாம்மா என்றபடி கொஞ்சி வாங்கிக் கொள்வார்.

மிதுவும் அவரின் கொஞ்சலை ரசித்தபடி, அவரிடம் கொஞ்சம் போக்கு காட்டுவாள். சில நேரம் சாமி மாமா அவள் கண்களுக்கு தன் தந்தையாக தெரிவார்.

அதற்காகவே அவரை நிறைய கொஞ்ச வைப்பாள் மிது. மிகவும் பாசமான மனிதர்.

நேரம் ஆகவே தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள் அவசரமாக கிளம்பி, டிபன்பாக்ஸ் எடுத்துக் கொண்டு தன் தாயிடமும், அத்தயிடமும் கூறிக் கொண்டு வேகமாய் பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடினாள். அந்த பஸ் விட்டால் இனி எப்பொழுதோ?

கூட்ட நெரிசலில் நசுங்கி ஆபிஸ் வந்து வாசலில் நிற்கவும் மேனஜர் ரகுநாதன் அவளை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

அவளிடம் சில பைல் டீட்டையில் கேட்க, அவரிடம் கூறியவள் தன் இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

மனம் தன் தாயையே சுற்றி வந்தது. தன் தாயின் உடல் நிலை அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்தது.

அவள் முன் வந்து நின்றார் ரகுநாதன். ஆனால் அவள் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

கைகளை கட்டியபடியே அவளையே பார்த்து நின்றார் ரகுநாதன்…

“என்னம்மா விசயம்? என்னாச்சு?”

“……”

அவள் முன் சேரை இழுத்துப் போட்டவர், அதில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தார்.

“மிதுனா”

“………….”

அங்கிருந்த பென்னை எடுத்து மெதுவாக அவளை தட்ட, அதிர்ந்து விழித்தாள் அவள்.

“சாரி ஸார்”

“என்னாச்சு என்ன விஷயம்?”

பெரும்பாலும் அவளின் விஷயத்தை யாரிடமும் கூறமாட்டாள். அவளுக்கு அது பிடிக்கவும் செய்யாது. ரகுநாதன் மிகவும் நல்லவர் தான் அவளின் தந்தையின் வயதை ஓட்டியவர்.

அவர் மீண்டும் மீண்டும் கேட்கவே இனியும் அவரிடம் விஷயத்தை மறைப்பது நல்லதல்ல என்பது போல் அத்தனை கொட்டிட எண்ணினாள். அப்படி கொட்டினால் மன பாரமும் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ?

“அவளின் அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாம், வயிறு, கை, கால்கள் எல்லாம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது.

உப்பும், சர்க்கரையும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. உடலில் பல உறுப்புக்கள் பாதிப்படைந்து விட்டன.

இனி மருத்துவ மனையில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்றும், அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் முதல் கட்ட செலவே இரண்டு லட்சம் வேண்டுமாம் எங்கு செல்வாள் அவள். கிடைக்கும் ஐந்தாயிரம் சம்பளமும், அத்தையின் துணி தைக்கும் பணமும் வீட்டு செலவும், அம்மாவின் மருந்து செலவுக்குமே சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த மொத்த பணத்துக்கு என்ன செய்வாள்?

டாக்டர் முதலில் சொல்லவும் இடி விழுந்ததை போல் உணர்ந்தாள் மிது. முழுதாய் இரண்டு லட்சம். அவளின் ஐந்து வருட உழைப்பு முழுதாய் ஒரே நாளில் எப்படி அவளால் புரட்ட முடியும்…

எங்கே கிடைக்கும்…? எப்படி கிடைக்கும்…?

விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து மனம் பதைபதைத்தது பிரமை பிடித்தார் போல் அமர்ந்துவிட்டாள்.

கடவுளே! தாயாரின் உயிரை காப்பாற்றாமல் போய் விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்ட ஆரம்பித்தது.

துடிக்க துடிக்க அவள் தாய் அவள் கண் முன்னால் மரணத்தை ஏற்க போகிறாரா? என்ன கொடுமை இது, அவளால் தாங்கமுடியவில்லை.

என்ன செய்ய போகிறாள்? கிடைக்கும் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வது. மிகவும் பெரிய தொகை.

“நடக்குற படி நடக்கட்டும். நான் போகவேண்டியதாக இருந்தால், போக தான் வேண்டும், நீ வீணாக கஷ்ட படாதே செல்லம்?” தாய் பல முறை கூறி விட்டார்.

ஆனால் அவர் கூறும் பொழுது அவளுக்கு தான் உயிர் போவது போல் இருந்தது. எப்படி கண் முன்னால் தன் தாயை சாகவிடுவது. “நீ பேசாமல் இரும்மா… எல்லாம் நான் பாத்துக்கிறேன்?” எப்படியோ சமாதனபடுத்தி வைத்திருந்தாள்.

தாய் படும் கஷ்டத்தை கண்டு தங்கையும், தம்பியும் அழ, ஒரு வழியாய் சமாதானபடுத்தி, ஆறுதல் செய்து வேலைக்கும் கிளம்பி வந்து அவரிடமும் கூறிவிட்டாள். இப்பொழுது ஆர்வமாய் அவர் முகத்தை பார்த்திருந்தாள்.

“இரண்டு லட்ச ரூபாய் மிகவும் பெரிய தொகை தான்” மெதுவாக உச்சரித்த ரகுநாதனுக்கே மலைப்பாக இருந்தது. அவரும் இப்பொழுது தான் மகளுக்கு திருமணத்தை முடித்து கொஞ்சம் கடனில் இருக்கிறார். இல்லை என்றால் கண்டிப்பாக இவளுக்கு உதவி இருப்பார்.

இப்பொழுது அவரால் மட்டும் அல்ல… யாராலும் உதவமுடியாது மிகவும் பெரிய தொகை. எதை நம்பி அவளுக்கு பணம் கொடுப்பர்.

விட்டேற்றியாய் உதடுகளை பிதுக்கியவர் சோகம் பொங்க மிதுவைப் பார்த்தார்.

“கஷ்டமான சூழ்நிலை! என்னாலும் உதவ முடியாது. நம் முதலாளியிடமும் கேட்க முடியாது. வெளிநாடு போயிருக்கிறார்”

‘இங்கு இருந்தால் மட்டும் முதலாளி கொடுத்து விடவா போகிறார்? யோசிக்க தான் செய்வார்?’

மிது அன்று அதன் பிறகு வேலையில் மூழ்கிப் போனாள். மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மிகவும் சோர்வுடன் தான் கிளம்பினாள்.

அத்தை அப்பொழுது தான் தம்பி, தங்கையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றாளாம் அம்மா கூறினார்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவளை தேடி வந்தார் ரகுநாதன்.

“யம்மா மிது, ரெண்டு லட்ச ரூபாய் ரெடி” என்ற சந்தோஷ செய்தியுடன்.

ரகுநாதன் சொன்னதை ஒரு கணம் அவளால் நம்ப முடியவில்லை. “எப்படி” என்றாள் பரபரப்புடன்.

“ஆனால் நீ சம்மதிக்க வேண்டுமே?” பீடிகை போட்டார் ரகுநாதன்.

“நானா?”

“ஆமாம் நீ தான் பாட்னா செல்ல வேண்டும். ஆறு மாதங்கள்”

“என்ன? நான் பாட்னா செல்ல வேண்டுமா?” உள் அறையை எட்டிப் பார்த்து மெதுவாக வினவினாள் அவள்.

“ஆமா, மிது நீ அங்கு போகவேண்டும், அப்பொழுது தான் உனக்கு நீ கேட்ட பணம் கிடைக்கும்?”

அதற்குள் தாயின் குரல் வரவே “சார்… மீதியை ஆபிஸ் வந்து கேட்டுக் கொள்கிறேன்… அம்மாவுக்கு தெரியவேண்டாம்” மிகவும் ரகசியமாக கூறியவள் அவரை வழியனுப்பி விட்டு தாயை கவனிக்க சென்றாள்.

கட்டிலில் அவள் வருகையை எதிர் பார்த்தது போல் மிகவும் சிரமத்துடன் எழும்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தார் சாதனா.

தாயை கண்டதும், முகத்தில் தோன்றிய குழப்பத்தை அவளுக்கு காட்டாதபடி அனைத்து பற்களையும் காட்டி அழகாய் தாயை பார்த்து புன்னகைத்தாள்.

தாயாருக்கு வேண்டிய உணவை எடுத்து வந்தவள் அவர் கையில் கொடுக்க “எதுக்கு செல்லம் இத்தனை அவசரம்” என்றபடி கையில் வாங்கிக் கொண்டார்.

மிதுவும் அப்படியே தாயின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

நடுங்கும் கரங்களால் மகள் தலையை மெதுவாக கோதி விட்டாள் தாய் “எனக்காக ரொம்ப வருத்த படாத கண்ணு”

ஒரு நிமிடம் தாயை நிமிர்ந்துப் பார்த்தாள் சாதனா. பளபளப்புடன் எப்பொழுதும் புன்னகையை சுமந்திருக்கும் தாயின் முகம் இப்பொழுது சுருக்கம் விழுந்து வயதை அதிகமாக காட்டியது.

தாயின் வலுவான உடல் நோய் வாய்பட்டு மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டது. ‘தாயின் முன் அழ கூடாது’ என மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

சாதனாவின் நிலையும் அப்படி தான். தனக்காக ஓடாய் தேயும் செல்ல மகளின் நிலைக் கண்டு துடித்து அடக்க முடியாமல் கண்ணீரை சொரிந்தன அவள் கண்கள்.

அவளுக்கும் புரிந்தது, தாயாருக்கு உடம்பு வேதனை மட்டும் இல்லாமல் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் அவளுக்கு பாரமாய் போய் விட்டோமோ என தாய் வேதனைப்படுகிறாள் என அவள் அறியாமல் இல்லை.

அப்படியே தாயை அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தினாள். டாக்டர் சொன்ன ஒரு வார கெடு மனதில் வந்து பூதாகரமாய் மிரட்டியது.

ஒரு வாரத்திற்குள் பணத்தை ரெடி பண்ணவில்லை என்றால் தாயை காப்பாற்ற முடியாதாம். முழுதாக இரண்டு லட்சம். ‘நாளை சார் என்ன சொல்கிறார்’ என பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

காலையில் மிகவும் வேகமாக கிளம்பி ஆபிஸ் நோக்கி சென்றவள் நேராக ரகுநாதன் அறையில் தான் போய் நின்றாள்.

“முதலாளியின் தாய் உடம்புக்கு முடியாமல் இருகிறாராம். அவரை கவனிக்க ஒரு பெண் தேவையாம். சொல்ல போனால், அவருக்கு துணைக்கு ஒரு ஆள் தேவையாம்.

ஏற்கனவே ஒரு நர்ஸ் இருக்கிறார் தான். ஆனால் அவருக்கு புக் படிக்க, அவர் கூட பேச ஒரு ஆள் வேண்டுமாம். அவரின் சொந்த ஊர் பாட்னா என்று முன்னாடியே கேள்வி பட்டிருக்கிறாள் தான்.

அவர், தன் சொந்த ஊர், சொந்த மண்ணை விட்டு வரமாட்டாராம். அது தான் ஒரு பொறுப்பான பொண்ணை தேடினாராம். அப்பொழுது தான் நீ அவர் கண்ணில் பட்டியாம்” மெதுவாக கூறினார்.

“இரண்டு லட்சம் மட்டும் இல்ல, உன் அம்மாவோட எல்லா செலவையும் ஏற்றுக் கொள்வதாய் கூறிவிட்டார்.

பணத்தை ஹாஸ்பிட்டலில் செலுத்தி விடுவார்களாம். நீ உடனே ஓகே சொன்னால் இன்றே பணத்தை செலுத்தி விடுவார்களாம்.

உடனே உன் அம்மாவுக்கும் மருத்துவ சிகிச்சையும் ஆரம்பித்து விடலாம் என்ன சொல்கிறாய்?”

“நிஜமாகவா சார்..?” நம்ப முடியாமல் கேட்டாள்.

“உண்மை தான் மிது. இப்போ உன் அம்மாவை காப்பது உன் கையில் தான் இருக்கு?”

தன் தாயின் முகத்தை மனதில் கொண்டு வந்தவள் உடனே “சரி” என கூற, அடுத்த நாளே அவள் தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டது.

சிகிட்சை பணம் இரண்டு லட்சமும் முழுதாக கம்பெனி அவள் பெயரில் கட்டியது. அப்பொழுது அவள் தாயின் முகத்தில் தோன்றிய சிரிப்பை வாழ் நாளில் அவளால் மறக்க முடியாது.

சாதனாவின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் சிகிட்சையில் முன்னேற்றம் அடைய தான் கூறியபடியே பாட்னா செல்ல அதற்கான வேலையை ஆரம்பித்தாள் மிது.

அந்த மாத இறுதியில் கிளம்பினாள். இங்கு தனக்களித்த வேலையை பொறுப்பாக முடித்து விட்டு தான் கிளம்பினாள். இதில் அவளின் முதலாளிக்கு அவள் மேல் கொஞ்சமாய் நம்பிக்கை பிறந்தது போலும்,

பாட்னா செல்ல அவளுக்கு டிக்கெட் அவள் கையில் வந்து சேர்ந்தது. கூடவே கம்பெனி முதலாளியும் வருகிறாராம்.

தாய், அத்தை, தங்கை, தம்பி, ரகுநாதன், என எல்லாரிடமும் பிரியா விடை பெற்று, ஸ்டேஷன் வரை மாமாவை அழைத்து வந்து சங்கமித்ரா ரயிலில் ஏறிக் கொண்டாள்.

தனது கூபேயில் ஏறி அமர்ந்தவளை “வா மிதுனா?” என்ற குரல் கலைப்பதாய்.

அங்கு முதலாளியின் மகன் நெடுநெடுவென உயரத்தில் முறுக்கிய மீசையும், திடமான உடற்கட்டுடன், வேஷ்டி சட்டையில்  அலட்சியமாய், கூலிங் கிளாஸ் அணிந்து இவளையே கூர்மையாக பார்த்தபடி காத்திருப்பதை கண்டு அதிர்ந்துப் போனாள்.

அத்தியாயம் – 2

அவனையே பார்த்துக் கொண்டே தனது சீட்டில் அமர்ந்து, தனது பேக்கை அதற்குரிய இடத்தில் வைத்துக் கொண்டிருந்தவளை அவன் குரல் மீண்டும் கலைப்பதாய்,

“இரண்டு லட்சம், உன் அழகிற்கு சரியான விலை தான்” கூறியபடியே பலமாக சிரித்தான் அவன்.

அவனை ஒருமாதிரியாக பார்த்தவள் தனது கையில் ஒரு புக் எடுத்துக் கொண்டாள்.

அணிந்திருந்த கிளாஸை கழட்டியவன், அவளை மேலிருந்து கீழாக தன் லேசர் பார்வையால் படம் பிடித்துக் கொண்டான்.

ஏதோ உணர்த்த நிமிர்ந்து பார்த்த மிது அந்த கண்களை கூர்ந்துப் பார்த்தாள் ‘யப்பா…! என்னா பார்வைடா சாமி! ஆளை துளைப்பது போன்ற பார்வை! இதுவரை அவள் யாரிடமும் கண்டிராத பார்வை அது!

அந்த விழிகளில் சிறிது கருணையோ? சாந்தமோ? இல்லாமல் ஏதோ ஒரு கள்ளத்தனம் அவன் கண்களில் தெரிய மிரண்டு தான் போனாள் மிது.

‘தவறான இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமோ?’ மிரண்டவள் தன்னை தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ‘என்னை மீறி எது நடந்து விடும்’ அலட்சியமாக அவனை எதிர் கொண்டாள்.

அவள் பார்வையை கண்டவன், அவளை விட அலட்சியமாய் தன் பைகளை துளாவி சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான்.

புகை விட்டவாறு நெற்றியை தட்டி யோசிப்பது போல் நெற்றியைப் பிடித்தவன் உன் கூட பெரிய வயிற்றைக் கொண்டு ஒரு பெருசு வந்துதே, “அவர் பேர் என்ன சொன்ன?” என்றான் யோசிப்பதுப் போல்.

“கந்து மாமா… இல்லை கந்தசாமி மாமா” பல்லை கடித்துக் கொண்டு கூறினாள்.

“ஒஹ்… கந்து மாமா… சொங்கு மாமா… தொப்பை மாமா… ரைமிங்கா நல்லா இருக்குல்ல” கூறியபடியே பெரும் குரலெடுத்து சிரித்துக் கொண்டான் அவன்.

அவனையே விசித்திரமாக தான் பார்த்தாள் ‘கொஞ்சம் லூசாய் இருப்பானோ?’

நிறைய பணம் சேர்ந்ததும் சில பணக்கார வர்க்க லூசுகளை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாள். ‘அந்த லிஸ்டில் இவனும் இருப்பானோ?’ சிந்தித்தப்படி அவனை பார்த்துக் கொண்டாள்.

“என்ன? சரியான லூசாய் இருப்பான் என்ற நினைப்பு மனதில் ஓடுகிறதோ?” இப்பொழுது முப்பத்தி இரண்டு பற்களும் வெளியில் வந்து அமர்ந்துக்கொண்டன.

எவ்வளவு, துல்லியமாக தன் மனவோட்டத்தை படிக்கிறான்! இவன் சாதரணமானவன் இல்லை! மிரட்சியாக அவனைப் பார்த்திருந்தாள்.

அவள் விழிகளை உற்றுப் பார்த்தவன், “உன் மை தீட்டிய அழகு விழிகள், இந்த மருண்ட படப்படப்பான பார்வை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” சாதரணமாக உரைத்தான்.

இப்பொழுது அவனை ஆச்சரியமாக பார்த்தாள் மிது. இத்தனை நேரம் இருந்த அவன் பார்வையும், இப்பொழுது பேசும் சாதாரண வார்த்தையும் அவளை குழப்பியது. எது அவனது உண்மையான முகம்… அவள் இதுவரை இப்படி யாரையும் பார்க்கவில்லை மிகவும் வித்தியாசமானவனாக இருந்தான் இவன்.

அவனையே பார்க்க, இப்பொழுது அவளை, அவன் உற்றுப் பார்க்க தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

அவளின் அந்த வெட்கத்தை ரொம்பவும் ரசித்துப் பார்த்தான்.

கொஞ்சம் நேரம் அவளையே பார்த்திருந்தவன், வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஏதோ நினைவு வந்தவனாக “என் பெயர் என்னன்னு உனக்கு தெரியுமா?” கேள்வி எழுப்பினான் அவன்.

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், தன் கையில் இருந்த புக்கில் பார்வையை திருப்ப,

“ஏய்?” என அவளை சொடக்கு போட்டு அழைத்தான் அவன்.

நிமிர்ந்துப் பார்க்க, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான் அவன்.

இருபக்கமும் தலையாட்டினாள் மிது.

“தலையாட்டினால் போதாதுங்க மேடம். தங்கள் வாயை திறந்து பதிலைக் கூறவும்?”

“தெரியும்” என்றாள் வேகமாக.

“அப்படியா சொல்லு பார்ப்போம்?”

“தெரியும் அவ்வளவு தான்”

தலையை வேகமாக அசைத்தவன் “நான் என் பெயரை சொல்ல சொன்னேன்?’ என்றான் கொஞ்சமாய் முகத்தை சுளித்தபடி.

ஒரு கணம் அவனை ஊன்றி பார்த்துவிட்டு அவன் பெயரை “அ…ர…வி…ந்…த்…” என மெல்ல உச்சரித்தாள்.

“ஆங்… இது தான்… இதை தான் எதிர் பார்த்தேன்… என் பெயரை உன் சின்ன ரோஜா இதழ்கள் உச்சரிக்க வேண்டும். பெண்கள் என் பெயரை உச்சரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்… பிடிக்கும் என்பதை தாண்டி அதில் ஒரு போதை இருக்கு” மீண்டும் அதே சிரிப்பு சிரித்தான் அவன்.

‘சரியான லூசா தான் இருப்பான் போல, இவன் பாட்டியை பார்க்க சம்மதித்தது பெரும் தவறோ?’ மீண்டும் எண்ணிக் கொண்டாள்.

மிக பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டோமோ? முதல் முறையாக மிதுனா மனதில் பயம் எழுந்தது.

“பயபடாதே நான் லூசு இல்லை” அதற்கும் பதில் கொடுத்தான் அரவிந்த்.

‘மறுபடியும் மனதை படித்துவிட்டான். என்ன ஒரு அபார சக்தி. இவன் கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும்.

இவனிடம் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது’ எண்ணியவள் பார்வையை வெளியில் திருப்பிக் கொண்டாள்.

ஆனால், அரவிந்த் அவளை விடுவதாய் இல்லை போலும், சொடுக்கிட்டு அவளை தன் பக்கமாய் திருப்பினான்.

“மிதுனா? ம்ம்… உன் அழகுக்கு ஏத்த பெயர் தான்” ஒரு கணம் யோசித்தவன் போல் நிறுத்தியவன், “இங்க பார் மிதுனா நீ முதலில் என்னை நல்லா புரிஞ்சுக்கணும், அப்போ தான் நாம நட்பா பழக முடியும்?

சங்ககால நட்பு படிச்சிருக்கியா? நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடுமாம். இதுக்கென்றே திருக்குறள் நான்கு அத்தியாயங்களை தனியா ஒதுக்கிருக்கு. உனக்கு தெரியுமா?

அதனால் நீ சீக்கிரம் என் உணர்வுகளை புரிந்துக் கொள் அப்போ தான் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா நெருங்க முடியும்” அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

‘நல்லா நெருங்க முடியும்’ என்ற அவனது வார்த்தை அவளை துணுக்குற செய்தது. இதில் ‘திருக்குறளை வேற இழுக்கிறானே, சரியான இலக்கிய கிறுக்கனா இருப்பானோ?’

அவள் எண்ணியதை அறிந்தவன் போல் அவன் தொடர்ந்தான். “நான் கொஞ்சம் இலக்கிய கிறுக்கன் தான், என் ரசனையே தனி, என்னோட பொழுது போக்கும் வேற தான்”

‘அதான் பார்த்தாலே தெரிகிறதே, நீ ஒரு மார்க்கமான ஆளுன்னு’ எண்ணியவள் அசட்டு சிரிப்பை ஒன்றை அவன் அவனை நோக்கி வீசினாள்.

மேலும், ஏதோ சொல்லப் போனவன் சட்டென்று நிறுத்தினான் “வேண்டாம், இப்பொழுது வேண்டாம் நீயே போக போக என்னைப் பற்றி புரிந்துக் கொள்வாள், அப்பொழுது தான் சுவாரஸ்யம் இருக்கும்” மறுபடியும் அதே வெடி சிரிப்பு சிரித்தான் அரவிந்த்.

சிரித்து முடித்தவன், தனது பேக்கை திறந்து மேகஸின் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான்.

‘இதோடு பேச்சை நிறுத்தினானே’ நிம்மதி அடைந்தவள் வெளியில் பார்வையை பதித்திருந்தாள். பின்னால் நோக்கி நகரும் இயற்கையை ரசித்து பார்த்திருந்தாள்.

தற்செயலாய் அவன் கையில் இருந்த மேகஸின் பக்கம் பார்வையை திருப்பியவள் அதன் அட்டைப் படத்தைப் பார்த்து மிரண்டுப் போனாள்.

அது ஒரு மாதிரியான மேகஸின் போல, அதன் அட்டை படமே ஒரு மார்கமான கோலத்தில் இருந்தது.

அவள் தன் கையில் உள்ள அட்டை படத்தைப் பார்த்து மிரள்வதைப் பார்த்த அரவிந்த் இதழ்களில் ரகசிய புன்னகை வந்தமர்ந்தது.

அவனின் ரகசிய புன்னகையை கண்டவள் உடனே சிலிர்த்துக் கொண்டாள்.

‘எதுக்கு பயப்படணும்… ஏன் பயப்படணும்?’ சிலிர்த்துக் கொண்டாள்.

இந்த முறை அவன் அவளை கவனிக்கவில்லை போலும், அவளின் மன பேச்சுக்கு பதில் கொடுக்காமல் அந்த புக்கில் ஆழ்ந்துப் போனான்.

‘அந்த கருமம் புடிச்ச புக்கில் என்னதுதான் இருக்குதோ, இப்படி இருந்து படிக்கிறான்’ மனதில் புலம்பிக் கொண்டாள்.

ஒரு கணம் ‘இப்படி முன்ன பின்ன பழக்கம் இல்லாத ஒரு ஆடவனுடன் பயணிப்பது தவறோ?’ என நினைக்க ஆரம்பித்தது மனம்.

ஆனாலும், இரண்டு லட்சம்… முழுதாக இரண்டு லட்சம்? வேறு யாரும் அவளுக்கு கொடுக்க வில்லையே? இந்த புண்ணியவான் தானே தந்தான்.

அதனால் தானே தன் தாயை உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையும் ஆரம்பித்தது. பணம் கிடைத்ததும் அம்மாவின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம்’ அதை எண்ணி மனம் புன்னகையில் விரிந்தது.

அதே நேரம் ஆறு மாதம் இவனுடன் கழிப்பதா? வயதான பாட்டியுடன் இவன் இருந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா? வயதான பாட்டிக்காகவா முழுதாக இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தான்’ அதையும் மனம் சிந்தித்தது.

‘ஒரு வேளை தான, தர்மம் கொடுப்பது போல் முழுதாக கொடுத்துவிட்டானோ? ஒருவேளை பாரி வள்ளளோ?’ எண்ணியபடியே அவனை பார்த்தாள்.

முறுக்கி விடப்பட்ட அடர்ந்த மீசை. அதன் கீழ் கறுத்து, சிறு புன்னகையுடன் சுளித்திருந்த இதழ்களையே ஆச்சரியமாய் இமைக்காமல் பார்த்திருந்தாள்.

‘இத்தனை நேரம் அவனையே இமைக்காமல் பார்ப்பதை அவன் கண்டால் இன்னும் கிண்டல் செய்வான்’ எண்ணியவள், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அதன் பிறகு கொஞ்ச நேரம் அரவிந்த் அவளை கவனிக்கவில்லை… கவனிக்கவில்லை என்பதல்ல அவள் பக்கம் நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை அந்த மேகஸினில் மூழ்கிப் போனான்.

இப்பொழுது அவன் கையில் இருந்த அந்த ஒரு மார்க்க புக் மாறி, ஏதோ பைல் ஓன்று அமர்ந்திருந்தது. அதை கூர்மையாக பார்த்திருந்தான்.

‘ஆபிஸ் கணக்கு வழக்கை பார்க்கிறான் போல்’ அவளே எண்ணிக் கொண்டாள்.

ரயில் தமிழ்நாடு எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருந்தது. அதிகமாய் இயற்கை வாசம் வீசியது.

‘சொந்த மண்ணையும், சொந்த ஊரையும் தாண்டி பணத்துக்காய் வேலைப் பார்ப்பது என்ன பிழைப்பு?’ எரிச்சலாய் இருந்தது.

அதே நேரம் ‘தனது இயலாமையை பயன்படுத்துகிறானோ?’ சிந்தனையாக அவனைப் பார்த்தாள். அன்று ரகுநாதனிடம் தன்னை பற்றி கூறும் பொழுது, தன்னைக் கடந்து சென்றானே? ஒரு வேளை பிளான் போட்டு அழைத்து செல்கிறானோ?

ஊரில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் விட்டு தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான்? இவனைப் பார்த்தால் அத்தனை நல்லவனாய் தெரியவில்லையே?’ மனம் பலவாறாக சிந்தித்தது.

‘உனக்கு தானே பணம் தேவைப்பட்டிச்சு’ மனம் இடித்துரைக்க வெளியே பார்வையை திருப்பினாள்.

தன் முகத்துக்கு நேராக அவன் கைகள் நீண்டு வருவதைக் கண்டு திடுக்கிட்டு பார்க்க,

அவன் தான் அவளை அழைத்திருந்தான்.

“முட்டாள் தனமா யோசிச்சு மனசை சும்மா அலைய விடாதே?” அவன் தான் இலவச உபதேசம் செய்திருந்தான்.

அவன் தன் மனதை படித்து விட்டான் என்பதை விட தன்னை முட்டாள் என்று கூறியது அவளை சிலித்தெழ செய்தது.

முறைத்துக் கொண்டே அவனை பார்த்தவள் “மடையர்கள் ஏதாவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது?”

“நான் மடையனா? அட…! நல்ல பதிலடி தான்” ரசனையாக அவளைப் பார்த்து சிரித்தவன்,

“இதோ பார், உன்னுடைய அழகான தலையை சரித்து, கண்கள் சிமிட்டி எதையாவது நினைத்து கொண்டிருக்கிறாய் அதை தான் வேண்டாம் வீண் யோசனைகளை போட்டு குழப்பிக்காதே என்று சொன்னேன்”

அவள் பதில் பேசாமல் அவனை முறைத்தாள்.

“எப்படி முறைத்தாலும் நீ அழகு தான்… மிகவும் அழகு…. பேரழகு” சிலாகித்துக் கூறினான்.

பல டயலாக்குகளை அடித்து வீசியவன் அவளை ரசனையாக பார்த்து வைத்தான். மேலும் அவளை எரிச்சலூட்டுவது போல் பாடல்களை பாடி அவளை கடுப்பின் உச்சத்தில் ஏற்றி வைத்தான்.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்க, பழ வகைகளும், சிப்ஸ் வகைகளும், பிரட், ஒரு நாளிதழும், தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்தான் அரவிந்த்.

பழங்களை சாப்பிட அவளிடம் நீட்ட, “வேண்டாம்” என மறுத்தாள் மிதுனா.

“இன்னும் ஒரு நாள் முழுதாக பயணம் செய்யணும் பட்டினி கிடப்பதாய் உத்தேசமா?”

அவன் கேட்டதற்கு வேண்டும் என்றே பதில் கூறாமல், தலையை வெளியில் திருப்பிக் கொண்டாள்.

அவனும் அவளை கண்டுக் கொள்ளவில்லை.

அவன் பாட்டுக்கு உட்காந்து பழங்களையும், சிப்ஸ் பாக்கெட்களை பிரித்து கருக்முறுக்கென்று தின்றுக் கொண்டிருந்தான்.

ரயில் மறுபடியும் மெல்ல கிளம்ப ஆரம்பித்தது.

மிதுனா ஜன்னல் வழியாக வெளிப்புறமே பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் தான் வெளியில் பார்ப்பது போல் நடிப்பது, போர் அடிக்க மீண்டும் உள்ளே பார்வை திருப்பினாள்.

எதிரே குத்துக்கல்லாக அரவை மிசின் அமர்ந்திருந்து அதன் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தது.

இன்னும் அவனை எட்டிப் பார்த்தால் ‘ஏதாவது பேச்சு கொடுத்து மனுசனை சாகடிப்பான்’ எண்ணியவள் அந்த கூபேவையே சுற்றிப் பார்த்தாள்.

கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அவள் முன் சில பிரட் துண்டுகளை நீட்டினான் அவன்.

திரும்பி அவனை பார்த்தவளை,

“ம்ம்… சாப்பிடு?” என்ற அதட்டல் வேறு,

மிதுனா ஒன்றும் பேசாமல் கையில் வாங்கிக் கொண்டாள்.

“பாட்னா எங்கிருக்கிறது தெரியுமா?” குடோன் நிரம்பியதும் தானாக கேள்விகள் பறந்து வந்தன.

“எங்கிருந்தால் என்னக்கென்ன” அதிரடியாக பதில் வந்தது அவளிடமிருந்து.

அவள் பதில் கேட்டு ஒரு நொடி அவள் முகத்தையே கூர்ந்துப் பார்த்தான்.

“உனக்கு திமிர் ஜாஸ்தி தான்… முகத்தில் அப்படியே எழுதி ஒட்டி வச்சுருக்கு”

“புரிந்துக் கொண்டால் சரி”

“என்னிடமே விளையாடுகிறாய்… ம்ம்ம்… எப்படியாவது உன்னை அடக்கணுமே?”

“வீணான பகல் கனவுகளுக்கு நான் எப்பொழுதும் பதில் சொல்வதில்லை?”

“பகல் கனவா?” என்றபடி மீண்டும் அதே சிரிப்பு சிரித்தான் அவன். “பகல் கனவல்ல பேபி… இரவு கனவு… பாட்னா வா… நீ பார்க்க தானே போகிறாய்?” என்றான் ஒரு விதமான சுவாரஸ்யமாக.

கொஞ்சம் பயந்து தான் போனாள் மிது. ஆனாலும் பயத்தை அவனுக்கு காட்டாமல் ‘தன்னை மீறி எது நடந்து விடும், எதுவும் நடக்காது’ தனக்கு தானே தைரியம் கூறிக் கொண்டவள் அவனை ஏளன பார்வை பார்க்க தவறவில்லை.

ஆனால், அவளை எரிச்சல் படுத்த வேண்டும் என்பதற்காகவே அடுத்து வந்த நொடி முழுதும் அவளை விழுங்கும் பார்வையை தொடர்ந்தான் அரவிந்த்.

அவன் தன்னையே பார்ப்பது அவளுக்கு தாங்க முடியாத எரிச்சலாய் இருந்தது. “வேண்டும் என்றே செய்கிறான் ராஸ்கல்’ முணுமுணுத்துக் கொண்டாள்.

“முன்ன பின்ன பெண்களையே பார்க்காததுப் போல் இப்படி பார்க்கிற, பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வாயை பிளந்து பார்த்தானாம், அப்படி இருக்கு உன் பார்வை” என்றாள் ஏளனத்துடன்.

ஆனால் அவனோ வழக்கமான தனது புன்னகையை சிந்தி, ரசித்து, சிரித்து “நான் இப்படி பார்க்க வேறு ஒரு காரணம் இருக்கு” என்றான் கேலியுடன்.

“அப்படி என்ன காரணம்?”

அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல், அவளை ஒரு மாதிரியாக தலை முதல் கால் வரை வருடியது அவன் ஊசிப் பார்வை.

அத்தியாயம் – 3

அவனின் பார்வையைக் கண்டு முகத்தை சுளித்தாள் மிது.

“இப்படி முகத்தை சுழிக்கும் போது கூட ரொம்ப அழகா இருக்க” மீண்டும் சிலாகித்துக் கூறினான் அவன்.

“உனக்கு இப்போ என்ன தான் ஆச்சு” கடுப்பாக வினவினாள் அவள்.

“உன்னை பார்த்ததும் பரணியில் வரும் சோழப் பெண்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்? உனக்கு சொல்லுறேன் கேளு… நீ எப்படி இருக்கன்னு என்னை மாதிரி அழகான பையன் சொன்னா தானே உனக்கு தெரியும்”

‘திடீரென இவன் இலக்கியத்தை பற்றி பேசுவதைக் கண்டு கண்களை விரித்துப் பார்த்தாள் அவள். ஆனாலும், அவன் அழகன் என்று கூறியதைக் கேட்டு தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டாள்.

“சோழ காலத்து பெண்கள் மிக அழகாம். உன்னை போலவே… கயல் விழி பார்வை! அந்த விழி பார்வையால் ஆண்களை சிறை எடுப்பார்களாம்… அதில் ஆண்கள் உடல் பெரிதாய் காயம் பட்டு போகுமாம்.

அவர்களின் காயத்தை ஆற்ற பொற்கொடி போன்ற அவர்களின் வதனத்தால் இறுக்க அணைத்துக் கொள்வார்களாம், அந்த அணைப்பில் அவர்கள் காயம் ஆறிப் போகுமாம்? உன்னை உன் அபார அழகை காணவும் எனக்கு அந்த எண்ணம் தோன்றுகிறது… அவர்கள் எப்படி அணைப்பார்கள் என்று யோசித்து பார்த்திருக்கியா?”

அவன் இப்படி கூறுவதைக் கேட்டு புருவத்தை உயர்த்தி, முகத்தை சுழித்தாள் மிதுனா.

அவளின் இந்த செய்கையை பார்த்த அரவிந்த் “இந்த பிறை நெற்றியில் வில்லாக வளைந்திருக்கும் இந்த அழகு முகத்தை கூட ஒரு இலக்கியம் அழகாக கூறும்” என்றவன்,

“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்

அயலே பசும்பொற் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல்

வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே”

உன்னை பார்க்கவும் எனக்கு இது தான் தோணுது?” மீண்டும் அதே சிரிப்பு.

 

அவனை கையெடுத்து வணங்கினாள் மிது “தெய்வமே நீ பெரிய இலக்கியவாதி தான் ஒத்துகிறேன், என்னை மன்னித்து விடு”

அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ‘இவர் பெரிய கவி மகாராஜா பரணியோடு ஒப்பிட்டு பார்க்கிறாராம்’ கடுப்பானவள்,

“இப்படி பேசிக் கொண்டிருந்தால், உடம்பு மட்டும் இல்ல முகமும் காயம்பட்டுப் போகும்” கை நீட்டி எச்சரித்தாள் மிது.

அதற்கும் சிரித்தான் அரவிந்த்.

“ஆகட்டுமே! அதற்கு தானே ஆசைபடுகிறேன்? அப்படி காயமானால் தானே, நீயும் சோழ அழகிகளைப் போல் நெஞ்சார இறுக்க அணைத்துக் கொள்வாய்” கண்சிமிட்டி சிரித்தான் அவன்.

“ச்சீ” என அருவருப்புடன் முகத்தை சுழித்தாள் மிது.

அவள் முகத்தைக் கண்டு என்ன நினைத்தானோ, அதன் பிறகு கொஞ்ச நேரம் அவன் அவளை சீண்டவும் இல்லை, அவளை ஏறெடுத்தும் பார்க்கவுமில்லை.

அரவிந்த் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான் “இன்னும் அரை நாளில் நாம பாட்னாவை அடைந்து விடலாம்”

அவள் காதில் விழுந்தாலும், விழாததுப் போல் வெளியில் வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

எத்தனையோ மனிதர்கள்! எத்தனை பாஷைகள்! வித விதமான முகங்கள் ஆச்சரியமாகப் பார்த்திருந்தாள்.

மறுபடியும் நினைவு பலவாறாவாக சிந்திக்க உடனே உதறி தள்ளினாள். ஆறு மாசம் இங்கிருந்து விட்டு உடனே வீட்டை பார்த்துக் கிளம்பவேண்டும்.

எல்லாம் சரியாகி விடும்…

தாய், சரியாகி விடுவார். மீண்டும் அதே வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம். வாழ்க்கை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் செல்லும். தங்கை, தம்பியை நல்ல நிலைமைக்கு வளர்க்க வேண்டும்.

பலவகையாக எண்ணியவள், பாட்னாவின் தன் வேலை எப்படி இருக்கும் என சிந்திக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் பாட்னாவை வந்திறங்கினர் இருவரும். உடைமைகளை ரயில்வே ஊழியர்கள் எடுத்து செல்ல பின்னால் மெதுவாக நடந்து சென்ற மிதுனாவின் இடையை திடீரென இழுத்து, அவனை தன்னோடு அணைத்து பிடித்தபடி நடக்க ஆரம்பித்தான் அரவிந்த்.

அவனின் செயலில் வெகுண்டெழுந்த மிது, அவளை தள்ளி விலக போக,

அவளை விடாமல் அடக்கியவன், ”சும்மா சீன் போடாதே பொண்டாட்டி. இனி ஆறு மாதம் நீ எனக்கு பொண்டாட்டி… எனக்கு எல்லாம் செய்யவேண்டியது உன் பொறுப்பு… இது தான் உன்னுடைய முதல் வேலை” அசராமல் குண்டை தூக்கிப் போட்டான் அரவிந்த்.

அவன் போட்ட குண்டு அவளை அப்படியே பூமிக்கு கீழே இழுத்து செல்வதுப் போல் இருந்தது.

“என்ன உளறுற நீ?” கடுமையாக வினவினாள்.

“நான் உளறுகிறேனா?சரி தான் போ” பெரிதாக சிரித்தான்.

அவன் அப்படி சிரித்தது முதல் முறையாக அவள் மனதில் பயத்தை விதைத்தது.

“நான் ஆறு மாதம் உங்கள் பாட்டியை கவனிக்க வந்திருக்கிறேன்?” என்றாள் மெதுவாக.

“பாட்டியா…? யார் பாட்டி…?” மறுபடியும் இடியாய் சிரித்தான்.

பயத்துடன் அவனைப் பார்க்க,

“நீ சரியான முட்டாள்” என்றான்.

இப்பொழுது அவன், அவளை திட்டியது கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு. திகைப்புடன் அவன் விழிகளை நோக்கினாள்.

“இங்கு பாட்னாவின் என் பாட்டியை பார்க்க ஆள் இல்லை என்றா உன்னை சென்னையில் இருந்து கூட்டிவருகிறேனாக்கும்… அவ்வளவு பெரிய ஆளா நீ? இல்லை மருத்துவத்தை கரைத்து குடித்திருக்கும் டாக்டரா என்ன?”

அவன் பேசப் பேச ‘ஏன் நான் அந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை’ தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டாள். ஆனாலும் அதை அவனுக்கு காட்டாமல், கேலியாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என்னோட முட்டாள்தனம் இருக்கட்டும். பெரும் புத்திசாலியான தாங்கள் மூளையில் என்னை பற்றி என்ன நினைப்பிருகிறது? அதை கொஞ்சம் செப்பலாமே?” கிண்டலாகவே வினவினாள்.

அவளின் கேலியை கொஞ்சமும் கண்டுக்காமல் “கண்டிப்பா நீ தெரிஞ்சுக்கணுமா என்ன?” தோளை குலுக்கியவன், கண்களை மெதுவாக சிமிட்டி புருவம் உயர்த்தி அவளை மேலிருந்து கீழாக ரசனையாக ஒரு பார்வை பார்த்தான்.

“பியூட்டி புல் பிகர் நீ! அழகான தேகம்! வேறு என்ன பாட்னாவில் ஆறு மாதம் என்னுடன் மனைவியாக வாழ போகிறாய் நினைத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது… அதை நினைத்தாலே…”

அவன் வார்த்தைகளை முடிக்க கூட இல்லை,

“செருப்பு பிஞ்சிரும்” ஆத்திரமாக உரைத்தாள் மிது.

“செருப்பா…? ஹா… ஹா…”

“ரொம்பவும் வார்த்தையை விடாதே பேபி… ரொம்ப வருத்த படுவ,  என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது பேபி… உன்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் உனக்கு வலை விரித்திருகிறேன் பேபி… கா…” ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்.

‘வலை விரித்திருக்கிறானா? என்ன சொல்கிறான் இவன்… என்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் இங்கு வரவைத்திருக்கிறானா?’ அரண்டுப் போய் பார்த்திருந்தாள் மிது.

நிதானமாக அவளைப் பார்த்தவன் “ரொம்ப யோசிக்காதே பேபி… உன்னை பற்றி எல்லாம் தெரிந்து தான் உன்னை இங்கு வரவைத்திருக்கிறேன். அதிலும் உன் முக்கிய பலகீனம்” அவளை பார்த்து வேகமாக சிரித்தான்.

ஏனோ அவளை டென்ஷன் பண்ண அத்தனை பிடித்திருந்தது அவனுக்கு.

இப்பொழுது அவனை நேராக பார்த்திருந்தாள் அவள். “என்ன சொல்கிறாய் நீ?”

“அட… உன் பலஹீனம் உனக்கே தெரியவில்லையா? இல்லை புரியவில்லையா? உன் அம்மா… நோய் வாய் பட்ட உன் அம்மா,   இப்பொழுது புரிகிறதா?”

இப்பொழுது அவளுக்கு எல்லாம் புரிந்தது. “பெரிய தியாகி போல் இரண்டு லட்சம் தருகிறாரே? பெரிய தியாகி என்று எண்ணினேன் ஆக எல்லாம் திட்டம் தானா?” கோபமாக வினவினாள்.

அவள் கூறுவதைக் கவனிக்காமல், அவனே தொடர்ந்தான். “ரெண்டு லட்சத்தை நீ கேட்டதும் தூக்கி தந்தேனே? அது ஏன்னு யோசிக்கவே மாட்டியா?”

அவள் பயந்துப் போய் அவனைப் பார்க்க, அவளை நோக்கி சுட்டு விரலை நீட்டியவன்,

“எனது நோக்கம்… திட்டம்… எல்லாமே நீ தான். நீ மட்டும் தான். உன்னோட அபார அழகு. உன்னை பார்த்த ரெண்டே நாளில் முடிவு பண்ணிட்டேன் நீ தான் பொண்டாடிட்டு, அது தான் நீ கேட்ட பணத்தை உடனே தந்துட்டேன்”

“இதற்கு உன் தந்தையும், ரகுநாதன் சாரும் உடந்தையா?”

“தெரியாது… ஆனா நீ தான் சொல்ல போகிறாயே?”

“என்ன உளறுற?”

“உனக்கு தான் வேறு வழியில்லையே? அப்போ நீ சொல்ல தானே வேண்டும்” ரகசிய சிரிப்பில் விரிந்தது அவன் இதழ்கள்.

அப்படியே அதிர்ந்து நின்றவளை, மேலும் சிந்திக்க விடாமல் அவளை அணைத்து பிடித்தபடியே “இங்க இனி எதுவும் பேசவேண்டாம், நம் பங்களாவில் போய் பேசிக் கொள்ளலாம்” என்றவன் அவர்களுகென்று நின்ற காரில் ஏறி கொண்டான்.

அவளுக்கு ஆத்திரமாக வந்தது, “நான் வரமாட்டேன்” என்றாள் அவனின் கையை விலக்கியபடியே.

“பிடிவாதமா? ஓகே. தாராளமாக கிளம்பலாம்? ஆனால், போய் என்ன செய்ய போகிறாய்?”

“அடுத்த ரயிலில் சென்னைக்கு கிளம்ப போகிறேன்”

“தாரளாமாக” அவன் தோள்களை குலுக்கியவன் அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து “நீ அங்கு போனால், நான் என்ன செய்வேன் தெரியுமா? அதையும் தெரிந்துக் கொண்டு அங்கு செல்”

அவள் அவனை பார்த்தாள். ஆனால் அவனோ மிகவும் சாதாரணமாக அவள் கண்களையே பார்திருந்தான்.

“உடனே ஆபிஸ்க்கு போன் போட்டு உன் அம்மாவின் மருத்துவ சிகிச்சையை நிறுத்த சொல்லுவேன், கட்டிய பணம் அத்தனையும் திருப்ப வாங்கிவிடுவேன்… இதுக்கு மேல எனக்கு என்ன தோணுதோ அதை நான் செய்வேன்” அவளையே கூர்மையாக பார்த்தபடியே கூறினான் அரவிந்த்.

‘என்னமா பிளான் போட்டுருக்கான் ராஸ்கல். திட்டம் தீட்டி என்ன இங்க வரவச்சிருக்கல்ல கவனிச்சுகிறேன்டா’ மனதில் எண்ணியவள் பேசாமல் அமந்திருந்தாள்.

“ஒன்றும் அவசரமில்லை… நிறுத்தி நிதானமா யோசனை பண்ணு. இன்னைக்கு என் பங்களாவிற்கு அழைத்து செல்கிறேன். நான்றாக யோசித்து உன் முடிவை சொல்லு… அதற்கு முன் இந்த கருகுமணி தாலியை உன் கழுத்தில் கட்டி ரெடியாக இரு” எனக் கூறியபடி அவள் கையில் ஒரு கருகுமணியை திணித்தான்.

பின்னால் வந்த காரில் இருந்து அவளது உடைமைகள் வந்திறங்க, அவனிடம் ஏதோ ஹிந்தியில் உரைத்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே மாடி ஏறினான்.

கையில் இருந்த கருகுமணியை வெறுமையாக பார்த்திருந்தாள் மிது. ‘இவன் எப்படி பட்டவன்… இத்தனை நேரம் பேசிய பேச்சென்ன… இப்பொழுது நல்லவன் போல் கையில் கருகுமணி தாலியை கொடுத்து செல்வதென்ன? இவன் திட்டம் தான் என்ன?’ யோசனையாக அவன் முதுகையே வெறித்தாள் மிது.

அத்தியாயம் – 4

 

மாடி ஏறியவன் திரும்பி அவளைப் பார்த்தான். வேண்டும் என்றே முகத்தை அந்த பக்கம் திருப்பிக் கொண்டாள் மிது. ‘நயவஞ்சகன் இவனை பார்ப்பதே பாவம்’ எண்ணிக் கொண்டாள்.

 

ஆனால் அவனோ அவளை பார்த்துக் கொண்டே மீண்டும் கீழிறங்கி வந்தவன், அவள் முகத்தை உற்று பார்த்து விட்டு “உன் வீணா போன யோசனையை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு, நாளைக்கு பாட்டியை பார்க்க கிளம்பு, மறக்காம அந்த தாலியை கழுத்தில் அணிந்துக் கொள்” கூறியவன் வேகமாக மாடி ஏறி அறைக்குள் சென்று மறைந்தான்.

 

‘இவன் என்ன சொல்கிறான். இவனுக்கு பாட்டி இருக்கிறார்களா? இல்லை என்றுக் கூறினானே?’ யோசனையாக நின்றிருந்தாள்.

 

“அம்மா…ஐயா உங்களை சாப்பிட கூப்பிடுறாங்க?”

 

“வரமுடியாது, உன் கொய்யா கிட்ட போய் சொல்லு” கடுப்பாக வந்தது அவளுக்கு.

 

‘எத்தனை தைரியம் இருந்தால், என்னை இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்திருப்பான், ராஸ்கல் வரட்டும் நான் யாருன்னு காட்டுறேன்’ கடுப்பாக அவனை மனதில் வறுத்துக் கொண்டிருந்தாள்.

 

வேலையாள் அவளை விட்டு விலகவும், வேகமாக அவளை நோக்கி வந்தான் அரவிந்த்.

“ஏய்… உன் திமிரை எல்லாம் என்கிட்ட காட்டாதே?” அவள் முன் கோபத்துடன் வந்து நின்றான்.

 

அவனை கண்டுக் கொள்ளாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். அவளின் முகத்தை வலு  கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பியவன் “நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க தெரியுமா? உன்னோட எம் டி… உன் முதலாளியில் மகன்… ஒரு லட்சாதிபதி கிட்ட பேசிகிட்டு இருக்க?” கடுமையாக கூறினான்.

 

“லட்சாதிபதியா நீயா?” ஏளனமாக கேட்டவள் “இப்படி தான் ஒரு பொண்ணை கையை, காலை கட்டி தூக்கிட்டு வருவீங்களா?” கோபமாக கேட்டாள்.

 

இந்த முறை அவளின் கோபம் அவனுக்கு ரசிக்க வில்லை போலும் “ஷ்… நான் பேசும் போது குறுக்க பேசாதே” மிரட்டினான்.

 

“நான் உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்”

 

“இல்லை… நீ பயப்படத்தான் போகிறாய். உனக்கு வேறு வழியில்லை”

 

அவனையே முறைத்துப் பார்த்தாள் மிது. ‘உண்மையும் அது தானே, அவன் தானே பணம் தந்திருக்கிறான், அவன் நினைத்ததால் தானே? தன் தாய் இன்னும் உயிருடன் இருக்கிறார்…’ அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றாள்.

 

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் முன் வந்து நின்றாள் மிது.

 

மெதுவாக அவளை நிமிர்ந்துப் பார்த்தான் அவன்.

 

கண்கள் அப்படியே ரசனையில் விரிந்தது. “இப்பொழுது தான் நீ சங்க கால அழகிகள் போல் ஜொலிக்கிறாய்” ரசனையாக கூறியவன், அவளின் கையைப் பிடித்து சாப்பிட அழைத்து சென்றான்.

 

மெல்லிய லைன் டிசைன் போட்ட புடவை உடலை தழுவியிருக்க, அவன் கொடுத்த கருகுமணி கழுத்தை அலங்கரிக்க அவளை மிகவும் அழகியாக காட்டியது.

 

வேலையாள் உணவை டேபிள் மேல் வைத்து செல்ல, அவனே அவளுக்கு பரிமாறினான்.

 

சாப்பிடாமல் அமர்ந்திருந்தவளை பார்வையால் அடக்க, அமைதியாக உணவை வாயில் எடுத்து வைத்தாள் அவள்.

 

அவனின் இதழோ ரகசிய புன்னகையில் விரிந்தது.

 

அவள் உண்டு முடிக்கும் வரை அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான் அரவிந்த்.

 

அவளை அழைத்துக் கொண்டு வீட்டை இல்லை, இல்லை அந்த பங்களாவை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றான்.

 

பலவித அலங்கார பொருட்கள், வித விதமான இருக்கைகள், வண்ண வண்ண விளக்குகள், தொடர்ந்து கொண்டே போகும் விசாலமான அறைகள், எல்லாவற்றையும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே நேரம் ஆத்திரமாகவும் வந்தது.

 

‘படுபாவி பணத்தை இப்படி வாரியிறைத்திருக்கிறான். இதற்கு மட்டும் எத்தனை லட்சங்கள் செலவளித்தானோ? கேவலம் இரண்டு லட்சதிற்க்காய் என்னை சிறையெடுத்து வைத்திருக்கிறான்’ ஆத்திரமாக வந்தது.

 

முன்னால் நடந்தவன் ஒரு அறையின் வாசலில் நின்று அவளை திரும்பிப் பார்த்தான்.

 

“இது உன்னுடைய அறை மிது. உன்னுடனான, என்னுடைய பல இனிய கனவு நனவாகும் அறை. காத்திரு உன்னுடன் பேச வேண்டும்” குறும்பாக கூறியபடி அப்படியே விலகி சென்றான் அவன்.

 

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் அவள். ‘பாவி படு பாவி, எனக்கே செக் வைக்கிறாயா?’ கடுப்பானவள் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்.

 

கட்டிலில் அமர்ந்தவள், அப்படியே தலையை பிடித்து அமர்ந்து விட்டாள்.

 

‘என்ன செய்வது? ஏது செய்வது?’ யோசிக்க… யோசிக்க தலையை வலித்தது.

 

‘சரியாக வலையில் விழவைத்திருக்கிறான், டிரைனிலோ, சென்னையிலோ வைத்துக் கூறாமல் பாட்னா வந்திறங்கவும் விஷயத்தைக் கூறுகிறான்?

நான் சொல்வதை நிதானமாக யோசி என்கிறான், அவசரமில்லை என்கிறான். ஆனால், உனக்கு இதை தவிர வேறு வழியில்லை என்றும் சொல்கிறான், இவனை’ பல்லை நறநறவென கடித்துக் கொண்டாள்.

 

ஆனால், கொஞ்சம் கூட அவனை நினைத்து அவளுக்கு பயமில்லை… அது தான் ஆச்சரியமாக இருந்தது.

 

எந்த ஆணிடமும் தேவை இல்லாமல் பேசியது கிடையாது. ஆனால் இவனிடம் மட்டும் சரிக்கு சமமாக வாதிடுகிறாள். எதிர்த்து பேசுகிறாள். சில நேரம் அதை அவன் ரசிக்கிறான், சில நேரம் கொதிக்கிறான்.

 

அவனின் மனநிலை, அவனின் திட்டம் என்ன என்று இது வரை அவளுக்கு புரியவில்லை… தெரியவில்லை…

 

‘யோசி மிது யோசி… அவனின் வீக் பாயிண்ட் யோசி… அவனை எப்படியாது வீழ்த்த வேண்டும், இந்த இக்கட்டில் இருந்து மீள வேண்டும்’ பலமாக சிந்திக்க ஆரம்பித்தாள்.

 

‘ஏதோ கூறினானே? ஆங்… அவனின் இரவு கனவு… இவன் முழியை பார்த்தாலே தெரிகிறது. திருட்டு தனம் செய்கிறான் என்று, அமைதியாக அவனிடம் பேச வேண்டும்… மிது அவனை வார்த்தையால் மட்டுமே வெல்ல முடியும் நிதானமாக யோசி மிது’ மூளைக்கு கட்டளையிட்டவள். அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். மூளையோ பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

கதவு மெலிதாக தட்டபட, சிந்தனையை விட்டு கலைந்தவள் மணியை பார்க்க அது இரவு ஏழு மணியைக் காட்டியது. ‘இத்தனை நேரமாகவா சிந்தித்திருக்கிறோம்’ எண்ணியவள் எழுந்து கதவை திறந்தாள்.

 

எதிரே ஒரு பெண் நின்று கொண்டிருத்தாள். “சின்னம்மா உங்களை, சின்னய்யா சாப்பிட வர சொன்னாங்க” கூறியவள் நிற்காமல் விலகி சென்றாள்.

 

‘பெரிய கொய்யா… மரியாதையை பாரு’ முணங்கலுடன் அங்கு சென்றாள் அவள்.

 

டைனிங் டேபிளில் அவளுக்காய் காத்திருந்தான் அவன். இப்பொழுது மஞ்சள் நிற பைஜாமாவும், வேட்டியும்  கட்டியிருந்தான். இதில் நேரு மாமாவை போல் இதயத்தில் ஒரு சிகப்பு ரோஸ் வேறு…

 

‘பெரிய காதல் மன்னன் என்ற நினைப்பு’ கருவியபடியே அவனின் முன் அமர்ந்தாள்.

 

இப்பொழுது அவனின் பார்வை அவளை ரசனையாக வருடியது. இவள் பார்வை அவனை குக்கரில் உள்ள சோளத்தை போல் பொசுக்க, இவனோ பாப்கான் போல் துள்ளி குதித்தான்.

 

“இந்த இரவு நேரம் உன் புடவை உன் அழகை இன்னும் தூக்கி காட்டுகிறது” என்ற புகழாரம் வேறு.

 

அவள் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.

 

“உனக்காக நிறைய டிஷ் செய்திருக்காங்க, எல்லாம் டேஸ்ட் பண்ணிப் பாரு… இதெல்லாம் நீ சாப்டிருக்கவே மாட்ட” என்ற குத்திக் காட்டல் வேறு,

 

அவனை முறைத்தவள் “நான் சாப்பாட்டு விசயத்தில் என்றும் ஆசைப்படமாட்டேன். எப்பொழுதும் அளவோடு தான் இருப்பேன், எனக்கு இந்த பிரட் மட்டுமே போதும்” என்றவள் பிரட் மட்டும் எடுத்து ஜாமுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“ம்ம்… நான் சாப்பாட்டை கண்ணில் காணாதது போல் சாப்பிடுவேன் என்று உன் பாஷையில் கூறுகிறாய் அப்படி தானே?” அவளை கூர்மையாக பார்த்தபடி வினவினான்.

 

“வீண் கற்பனைகளுக்கு நான் எப்பொழுதும் பலியாகமாட்டேன்”

 

“ம்ம்..” அவளை பார்த்தபடியே முன்னால் இருந்த பெரிய லெக் பீசை எடுத்து சுவைக்க ஆரம்பித்தான் அவன்.

 

இதில் இடையிடையே, அவளையும், அந்த பீசையும் மாறி மாறி பார்த்து விட்டு எச்சில் ஊற சுவைத்தல் வேறு.

 

‘அடேய் ராஸ்கல்… என்னை இந்த வீணா போன பீசுடன் ஒப்பிடுகிறாயா?’ கடுப்பாக எண்ணியடி அவனை முறைத்தாள்.

 

அவளின் முறைப்பு, அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது போலும், இதழ் சுழித்து சிரித்தான்.

 

அந்த நேரம் வீட்டின் அலைப்பேசி அழைக்க, அவளைப் பார்த்திருந்தான் அவன்.

 

“உனக்கு தான் அழைப்பு போய் பேசு”

 

கந்து மாமா தான் அழைத்திருந்தார். மிது ஆவலாக பேசினாள். அம்மாவின் மருத்துவத்தை பற்றி பேசினாள். அத்தை, தம்பி, தங்கச்சி என்று எல்லாரிடமும் நன்றாக பேசினாள்.

 

ஆனாலும், மனம் தவித்துக் கொண்டிருந்தது. இங்கிருக்கும் இக்கட்டான நிலையை கூறிவிடலாமா? அப்படி கூறினால் அவள் சொல்வது போல் தன் தாயை காப்பாற்ற முடியாதா?

எதுவும் கூறாமல், சாதாரணமாக பேசி அழைப்பை நிறுத்தினாள் மிது.

 

அரவிந்த் அவளையே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“அம்மாவுக்கு எப்படி இருக்கிறதாம்?”

 

“பரவாயில்லையாம்” மெதுவாக கூறினாள்.

 

“மருத்துவ வசதிகள் போதுமா? ஏதாவது பணம் தேவையா?” மிகவும் கரிசனமாக வினவினான்.

 

‘அடடா என்னா கரிசனம்!’ ஏளனமாக எண்ணியவள் அவன் முகத்தைப் பார்த்தாள். அவனின் முகத்தில் இருந்த கனிவும், அவன் குரலில் உள்ள கனிவும் அவளை சிந்திக்க வைத்தது.

 

“உன்னிடம் தான் கேட்கிறேன், அங்கு எல்லாம் சரியாக இருகிறதா? பணம் போதுமா? இன்னும் தேவைப்படுகிறதா?”

 

“போதும்” என்றாள் மிகவும் மெல்லிய குரலில். அவளின் முகத்தில் என்ன கண்டானோ,

 

“சரி” என தோளை குலுக்கியவன், “சரி கிளம்பு” என்றான் அதே வேகத்தோடு.

 

“கிளம்பவா? எங்கே” புரியாமல் விழித்தாள்.

 

“எவ்வளவு நேரம் தான் அந்த அறைக்குள்ளையே அடைந்து கிடப்பாய். வெளியே நீ பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன, இந்த இரவில் பாட்னாவை பார் வா, அத்தனை அழகாக இருக்கும்” அழைத்தவன் அவள் முன்னால் எழுந்து நடந்தான்.

 

‘அவள் வருவாள்; என்ற நம்பிக்கை போலும்,

 

மிதுவுக்கும் அவள் இருந்த மனநிலைக்கு மாற்றம் தேவையாய் இருக்க, அவன் பின்னே அமைதியாக சென்றாள்.

 

டிரைவரை அனுப்பி விட்டு அவனே ஜீப்பை கிளப்பினான். அவனின் ஃபேவரைட்  போலும், அவன் கையில் அழகாக சென்றது.

 

அவன் அடிக்கடி இங்கு வருவான் போலும், அத்தனை குறுக்கு பாதையிலும் நுழைந்து சென்றது அவனின் ஜீப்.

 

அவனை போலவே குறுக்கு புத்தி உள்ளது போலும், குறுக்காக பாய்ந்து ஓடியது.

 

‘அவனிடம் பேச்சு கொடுத்தால் என்ன. இவனை பற்றி அறிந்துக் கொள்ளலாமே’ எண்ணியவள் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.

 

“அடிக்கடி இங்கு வருவீர்களா?”

 

“அடிக்கடி இல்ல… ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருவேன்” என்றான் முகத்தில் ஒரு வித சுவாரசியத்தோடு.

 

அதோடு அவன் நிறுத்தியிருந்தால் போதும். இல்லை அவள் இவனோடு பேச்சு கொடுக்காமல் இருந்திருக்கலாம். இவன் தான் அவளை கடுப்பாக்கவே பிறந்திருக்கிறானே? எனவே தொடர்ந்தான் அவனின் வீர தீர செயல்களை.

 

“ஒவ்வொரு முறை வரும்பொழுதும் ஒவ்வொரு பெண்ணோடு வருவேன்” என்றான் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே.

 

இப்பொழுது அவள் முகம் வெளிப்படையாகவே கோபத்தில் சிவந்தது. அதை ரசித்து பார்த்திருந்தான்.

 

“உன்னுடைய இந்த சிவந்த முகம் கூட இலக்கியத்தில் சுட்டி காட்டியிருப்பார்கள். உனக்கு சொல்லவா?”

 

“தலைவன், தலைவியை காதலாக நோக்கும் பொழுது, தலைவியின் முகம் காதலில் கசிந்துருகி செங்கொழுந்தாக மாறிப் போகுமாம். அப்பொழுது, தலைவன், தலைவியை இறுக்க கட்டியணைத்து, அவளின் சிவந்த மேனியை…”

 

“நீ இப்போ உன் வாயை மூடல, நான் அப்படியே கீழே குதிச்சிருவேன்” கத்தியே விட்டிருந்தாள் மிது.

 

இப்பொழுது அவள் முகத்தை ஆச்சரியமாக பார்த்தவன் தன் வாயை இருக்க மூடிக் கொண்டான். மிதுவை இத்தனை கோபக்காரியாய் அவன் எண்ணவே இல்லை.

 

தன்னிடம் சரிக்கு சமமாக வாதிடுவாளே தவிர அவனிடம் இத்தனை கோபத்தை அவள் காட்டியதில்லை. அவளையே பார்த்தபடி மெதுவாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தான்.

 

அவ்வபோது, அவனின் கண்கள், அவள் முகத்தையே நோக்கின. அந்த மஞ்சள் முகம் சிவந்து காணப்பட்டு, அவளின் கோபத்தின் அளவை அவனுக்கு எடுத்துக் கூறியது.

 

ஆனாலும், அந்த முகம் அவனுக்கு மீண்டும் அந்த சங்க கால இலக்கியத்தை நினைவூட்டியது.

சிறிது தூரம் சென்ற அரவிந்த் ஜீப்பை நிறுத்தி விட்டிருந்தான். மிது புரியாமல் அவனை பார்க்க, இறங்கும் படி சைகை செய்தான் அவன்.

 

‘துரை வாயை திறந்து பேசமாட்டாராமா?’ எண்ணியவள் இறங்க,

 

“துரை இப்போ வாயை திறந்தா, துரையம்மா அடிப்பாங்களே” பயந்த மாதிரி அவளுக்கு பதிலடிக் கொடுத்தான்.

 

அவனை முறைத்து விட்டு முன்னே நடக்க, வேக எட்டுகள் எடுத்து வைத்து அவளுடன் நடந்தான் அவன்.

 

அப்பொழுது அவனுக்கு தெரிந்த பெண் ஒருத்தி  அவனை நோக்கி ஓடி வந்தாள்.

 

அருகில் வந்து அவனை பார்த்து புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்தான்.

 

மிதுவை காட்டி ஏதோ அவள் ஹிந்தியில் கேட்க,

 

“ஷி இஸ் மை ஃவைப்… இப்போ தான் அவள் அம்மா வீட்டில் இருந்து வருகிறாள்” ஹிந்தியில் கூறியபடி மிதுவை தோளோடு அணைத்துக் கொண்டான்.

 

“வாவ்… உன் மனைவி ரொம்ப அழகு அரவிந்த். அது தான் அவளை இத்தனை நாளா, மறைத்து வைத்திருந்தாயா?” அவள் வினவ,

 

சிரித்துக் கொண்டே மழுப்பினான் அவன்.

 

இருவரின் பேச்சை, பாதி புரிந்தும், புரியாமலும் பார்த்திருந்தாள் மிதுனா.

அத்தியாயம் – 5

புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான்.

“அவ என்ன சொல்லிட்டு போறா?”

“நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?”

“அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?” என்றாள் உணர்சிகளை துடைத்த குரலில்.

அவளை ஒரு நொடி உற்றுப் பார்த்தவன் “என்னுடைய மனைவின்னு சொன்னேன்”

அவனை ஒரு நொடி பார்த்தவள், பேசாமல் வண்டியில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

தோளை குலுக்கிக் கொண்டு அவனும் வண்டியை கிளப்பிக் கொண்டு வீடு நோக்கி பயணித்தான்.

வீட்டில் ஜீப் நிற்கவும், இறங்க அவளின் பின்னே அவனும் இறங்கிக் கொண்டான். அவள் முகத்தைப் பார்க்க உம்மென்று இருந்தாள் அவள்.

“சிறு சிறு விசயங்களுக்கு, நீ ரொம்ப அப்செட் ஆகிறாய்”

“எது சிறிய விஷயம் இதுவா? மனைவின்னு எப்படி நீங்க சொல்லலாம்… மனைவின்னா என்ன முறை உங்களுக்கு தெரியுமா?”

அவன் பேசாமல் இருக்கவும் “உங்களை தான் கேட்கிறேன்”

“நீங்கள் மனைவின்னு சொல்லுறது எனக்கு பிடிக்கலை”

“ஏன் உண்மையை தானே சொல்லுறேன்? நீ என் மனைவி தானே?”

உடனே வெகுண்டெழுந்து விட்டாள் மிது. “லூசா உனக்கு… நான் தான் உன் மனைவியே இல்லையே?” கத்தி விட்டிருந்தாள் மிது.

“அது உனக்கும், எனக்கும் தானே தெரியும், ஆனா உன் கழுத்தில் கிடக்கும் கருகுமணி அப்படி சொல்லாதே?” கையில் அந்த கருகுமணியை பிடித்தபடி நின்றிருந்தான்.

அவனையே அதிர்ச்சியாக பார்த்திருந்தாள். ‘எவ்வளவு ஈசியாக சொல்லிவிட்டான்’

“காலையில் கிளம்பி ரெடியா இரு… பாட்டியை பார்க்க போகணும்” அறிவிப்பாக உரைத்தவன் வேகமாக வீட்டின் உள்ளே சென்றான்.

‘விட கூடாது இவனை’ எண்ணியவள் அவனின் பின்னே சென்றாள்.

அவன் பங்களாவின் இன்னொரு பெரிய அறைக்கு சென்று அங்கிருந்த பிளேயரில் பாடலை ஒலிக்க விட்டபடி உட்கார்ந்தான்.

ஸ்பீக்கரில் ஏதோ ஒரு பாடல் அலறிக் கொண்டிருந்தது. அவனுக்கு பிடித்த பாடல் போல, தலையை அங்கும், இங்கும் ஆட்டிக் கொண்டிருந்தான்.

அவன் அறைக்கு சென்றவள், பிளேயரை ஆப் செய்ய, மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தான் அவன்.

அவன் முன் அவள் கோபத்துடன் நின்றிருந்தாள்.

“கையில் பாலுடன் வந்திருந்தால் முழு மனைவியாக மாறியிருப்பாய்” அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி ரசனையாக கூறினான்.

கண்களை சுற்றும், முற்றும் சுழலவிட்டவள், கட்டிலில் இருந்த தலைகாணியை எடுத்து ஆத்திரம் தீருமட்டும் அவனை அடித்து விட்டு, வெளியில் சென்றாள்.

முகத்தில் தோன்றிய சிரிப்புடன், அவளின் அடிகளை சுகமாக பெற்றுக் கொண்டான் அரவிந்த்.

ஆனாலும் அவளை கொஞ்சம் சீண்ட எண்ணியவன் பின்னோடு அவளின் அறைக்கு சென்றான்.

கட்டிலில் அமர்ந்திருந்து, தலையில் கை வைத்திருந்த அவளின் தோற்றம் அவனை வருந்த வைக்க, ‘இவளுக்கு இது செட் ஆகாதே’ எண்ணியவன் அவளை கடுப்பாக்க கிளம்பினான்.

“சரி இப்போ நான் என்ன தான் செய்யணும்” அவளின் முன் போய் நின்றான் அரவிந்த்.

இப்பொழுது, வேகமாக தலையை உயர்த்தி அவனை பார்த்திருந்தாள் மிது. கண்கள் மிகவும் கலங்கி இருந்தது.

அவளின் இந்த நிலை அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. அவனின் ஜான்சி ராணி மிதுவை தான் அவனுக்கு பிடிக்கும். கடந்த நான்கு வருடங்களாக அவன் மனதை ஆக்கிரமித்திருக்கும் மிது.

அவளிடம் நேராக போய் நின்று உன்னை காதலிக்கிறேன் என்று கூறினால், கண்டிப்பாக அவள் அவனை ஏற்றுக் கொண்டிருக்கமாட்டாள்.

அதனால் தான் அவளுக்கு உதவும் நோக்கில், அவளை இங்கு வரவைத்தான். பாட்டி முன் இவளை அழைத்து சென்று விட்டால் போதும், தன் ஆசையை அவர் நிறைவேற்றி வைத்து விடுவார்.

“பிளீஸ் என்னை விட்டுடேன்?” மிகவும் கலங்கிப் போய் கேட்டாள் மிது.

“சரி விட்டுடுறேன். ஆனா ஒன்னு” நிறுத்தியவன் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவள், அவனைப் பார்க்க “நீ சென்னை போகும் போது என் மனைவியா தான் போகணும். இதுக்கு சம்மதம்னா? சொல்லு உங்க அம்மா செலவை நான் திரும்ப கேட்கவே மாட்டேன். உங்க அம்மாவும் நல்லா சரியாகிருவாங்க”

‘என்ன சொல்கிறான் இவன்… இவனை நான் திருமணம் செய்ய வேண்டுமா? இதில், அம்மாவை நினைவு படுத்துகிறானே? மீண்டும் முதலில் இருந்து வருகிறானே’

“நான் ஆறு மாதம் கழித்தே சென்னை செல்கிறேன்”

“அப்போ எனக்கு மனைவியாக வாழ ரெடியா?” கேலியாக கேட்டான்.

“ச்சே… வாயை மூடுடா”

அவள் மரியாதை இல்லாமல் கூறியதை கூட அவன் கவனிக்கவில்லை. ஆனால், அவளின் கோபத்தை எப்பொழுதும் போல் ரசித்தான்.

ஆனால், அதை அவளுக்கு காட்டாமல், “காலையில் சீக்கிரமே கிளம்பி இரு” கூறியவன் நிற்காமல் சென்று விட்டான்.

அதற்கு மேல் அவனுடன், அவளால் பேச முடியவில்லை. கதவடைத்து அப்படியே கட்டிலில் விழுந்து விட்டாள்.

இனி அவளால் எதுவும் செய்யமுடியாது. இங்கிருந்து சென்றால், தன் தாயின் மருத்துவ செலவு நின்று விடும். எல்லா இடத்தையும் அடைத்து வைத்து விட்டான் இறைவன்.

‘பேசாமல் இரு உன்னை மீறி எதுவும் நடந்து விடாது. அவனின் பாட்டியிடம் பேசி பார்’ மனம் எடுத்துரைக்க, அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்ததும் அவளை தான் பார்த்தான் அரவிந்த். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள். அவளையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தான்.

‘உனக்கு இத்தனை திமிர் ஆகாதுடி’ செல்லமாக கொஞ்சிக் கொண்டான்.

அவள் கொஞ்சமாய் அசைவது போல் தெரிய உடனே எழுந்து அவன் அறைக்கு சென்றான். ‘இவன் அங்கு இருந்தது தெரிந்தால், அதற்கும் ஒரு ஆட்டம் ஆடுவாள்’ பயந்தவன் ஓடியே விட்டான்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் கிளம்பி, வர அவளும் கிளம்பி தன் உடமைகளுடன் அவனை நோக்கி வந்தாள்.

அவளை அழைத்துக் கொண்டு பாட்டி வீட்டை நோக்கி சென்றான் அரவிந்த்… மிது இங்கு வந்த விஷயம் எப்படியும் பாட்டி காதுக்கு சென்றிருக்கும்.

யோசனையாக ஜீப் ஒட்டி வந்தான் அவன். அவன் முகத்தை இருமுறை பார்த்த மிதுவும் அமைதியாக வந்தாள். மனமோ பாட்டியிடம் என்ன பேசவேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தது.

மிதுனாவை பற்றி ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தான் அரவிந்த். அவரும் இவளின் வரவுக்காக தான் ஆவலுடன் காத்திருக்கிறார்.

காலையில் இருந்தே இருமுறை அழைத்து விட்டார். இவன் தான் நேரில் சென்று பார்க்கலாம் என அவரின் அழைப்பை தவிர்த்தான்.

வாசலில் ஜீப் நிற்கவும், வீட்டில் உள் இருந்து ஒரு வயதானவர் ஓடி வந்தார்.

வெள்ளை நிற புடவை உடுத்தி, முந்தானையை தலையோடு போர்த்தி இருந்தார். பார்க்கும் பொழுதே அத்தனை அழகாக இருந்தார்.

பார்த்ததும் கண்டுக் கொண்டாள். அவனின் பாட்டி என்று, காரணம் அவனை போலவே அவரும் இருந்தார்.

“பாட்டி” என அழைத்துக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டான் அரவிந்த்.

“ஏ லடிக்கி இங்க வா” அவர் அழைக்க,

‘யார் அந்த லடிக்கி… இங்க பேர் எல்லாம் வித்தியாசமா தான் இருக்குமோ? லடிக்கி, செடிக்கின்னு’ யோசனையாக கண்களை எங்கும் சுழல விட்டாள் மிது. அவர் தன்னை தான் அழைக்கிறார் என கிஞ்சித்தும் அவள் எண்ணவில்லை.

அவளின் சுழல் பார்வையை கண்ட அரவிந்த் “மிது உன்னை தான் பாட்டி கூப்டுறாங்க” மெதுவாக உரைத்தான்.

“என் பெயர் லடிக்கி இல்ல… நான் மிதுனா இது கூட உன் பாட்டிக்கு நீ சொல்லலியா? இல்ல இது உன் பாட்டியே இல்லையா?” மெதுவாக சீறினாள்.

தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டான் அரவிந்த் ‘அறிவாளின்னு நினைச்சா, இப்படி மடச்சாம்பிரானியா இருக்கிறாளே? இதனால் தான் என் கண்ணில் வழியும் காதலை சரியா புரிஞ்சுக்க மாட்டிக்காளோ?’ எண்ணியவன் அவளின் கையை வலுகட்டாயமாக பிடித்திழுத்து பாட்டி காலில் விழுந்தான்.

அவர்களை ஆசிர்வதித்தவர், தன் அறைக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் அவளை அழைத்து வரக் கூறினார்.

மிது, அரவிந்த் முகத்தைப் பார்க்க, “என் பாட்டி என்னை மாதிரி மோசம் இல்லை… ரொம்ப நல்லவங்க” அவளிடம் கூற, அவனை முறைத்து விட்டு அவளுடன் சென்றாள்.

அவளையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தார் அவர். ‘பேரன் நல்ல பொண்ணை தான் அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்திருக்கான்’ மனதில் எண்ணிக் கொண்டார்.

“தமிழ் படிக்க தெரியுமா?” முகத்தை கெத்தாக வைத்துக் கேட்டார் அவர்.

“தெரியும்” மெதுவாக தலையாட்டினாள் மிது.

“இலக்கியம் தெரியுமா?’

‘அட ஆண்டவா? இதென்ன சோதனை… மனிதனுக்கு இப்படியா சோதனை வரணும்’ கடுப்பானவள் “நான் ஐஞ்சாம் கிளாஸ் பாட்டி… இலக்கியமெல்லாம் எனக்கு தெரியாது”

“ம்ம்… அந்த கீதையை எடு”

எடுத்து கொண்டு அவர் முன் நின்றாள் மிது.

“எனக்கு, அதில் இருப்பதை வாசித்து காட்டு”

அங்கிருந்த சிறு நாற்காலியில் அமர்ந்த மிது, கீதையை கொஞ்சமாய் வாசிக்க ஆரம்பித்தாள். அவளையே முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்திருந்தார் பாட்டி.

இரவு உணவு முடிந்ததும், பங்களாவின் பின்புற தோட்டத்தில் வந்து நின்றாள் மிது.

வண்ண வண்ண பூக்களை தாங்கிய பலவித செடிகள்… சீராய் வெட்டப்பட்ட புல்வெளிகள்… வானத்தில் அழகாய் வட்ட நிலா.

அந்த நிலவின் ஒளியில் எல்லாவற்றியும் ரசித்து பார்த்திருந்தாள் மிது.

களங்கமற்ற நிலவு தூய்மையாய் வெண்மை பரப்பியபடி ஆனந்தமாய் அந்த வானில் வீற்றிருந்தது.

அப்படியே ரசித்து பார்திருந்தவளின் பார்வை அப்படியே சிகப்பு மலர்களை தாங்கி நின்ற அந்த பெரிய குல்முஹர் மரத்தில் நிலைத்தது.

அவளையே கைகளை கட்டியபடி ரசித்து பார்த்திருந்தான் அரவிந்த். அவளையும் அறியாமல் அவள் கண்கள் அவன் கண்களுடன் இணைந்துக் கொண்டது.

மனமோ ‘இவன் ஏன் எனக்கு நல்லவனாக அறிமுகமாகவில்லை’

அவளின் மனவோட்டம் அறிந்தவனைப் போல், அவளை நெருங்கி வந்தான். அவளின் பார்வை இப்பொழுது நெருங்கி வந்தவனின் பாதத்தில் இருந்து பயணித்து கண்களில் நிலைத்தது.

அவள் அருகில் மிக நெருங்கி வந்தவன், அவளின் தோளில் உரிமையாக கைபோட வர, தன்னிலை உணர்ந்த மிது, அவனை எரிக்கும் பார்வைப் பார்க்க,

அவளை நோக்கி கொண்டு போன, கையை அப்படியே தன் தலையை கோதுவதுப் போல் கொண்டு சென்றான்.

அவள் பார்வை மீண்டும் வானத்தை நோக்கியது. ‘இப்படி வெட்கமே இல்லாமல் அவனை பார்த்துட்டு இருக்க, அவனுக்கு இது ரொம்ப வசதியா போயிருக்கும்’ மனம் சாடியது.

‘இல்ல… அவன் நல்லவன் தான் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி எல்லாம் பண்ணுறான்’ இன்னொரு மனம் வாதாடியது.

ஆபிஸ் அடிக்கடி வந்திருக்கிறான். வந்தால் வந்த வேலையை மட்டுமே பார்ப்பான். இது வரை அவனைப் பற்றி தவறாக எதுவும் அவள் காதில் விழவே இல்லை. மனம் அவனையே சுற்றி வந்தது.

எதையும் நேரடியாகவே பேசி பழக்கம் இருக்கும் மிது, அவனிடமே கேட்க எண்ணினாள்.

“உங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?” மெதுவாக அந்த வானை பார்த்துக் கொண்டே தான் வினவினாள்.

அவள் அப்படி கேட்டதும் முதல் முறையாக அவன் முகம் பிரகாசமாக ஜொலித்தது. ஆனாலும் அதை அவளுக்கு காட்டாமல் “என்னை பற்றியா?” என்றான் ஆச்சரியமாய்.

“ஆமாம்… உங்களை பற்றி அறிய மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன்?”

அரவிந்திற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது ‘ஒருவேளை நம் காதல் கதையை பாட்டி கூறிவிட்டாரோ?’ எண்ணியவன் “ஆர்வம்? அதுவும் என்னை பற்றி அறிந்துக் கொள்ளவா? ஆச்சரியமாய் இருகிறதே?” அவளையே உற்றுப் பார்த்தபடி வினவினான்.

‘நான் நிஜமாக தான் கூறுகிறேன்’ என்பது போல் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள் மிது.

அவள் கண்களில் என்னக் கண்டானோ, “என் வாழ்கையே ஒரு வினோதமானது… என் அம்மா சிறு வயதிலையே என்னை விட்டு சென்று விட்டார். வளர்த்தது எல்லாமே என் பாட்டி தான். அம்மா, அப்பா இருவரும் பெரும் பணக்காரர்கள்.

அம்மா, அப்பா இருவரும் காதலர்கள். ஆனால், தாலி கட்டாமலே வாழ்ந்திருக்காங்க. நான் பிறந்த கொஞ்ச நாளில் அம்மா, வேறு ஒருவருடன் சென்று விட்டார். அப்பாவுடன் இருந்ததும் காதல் தானாம், அதே போல் இப்பொழுது இன்னொருவருடன் சென்றதும் அதே காதல் தானாம்.

ஆனால், என் அப்பா எப்பொழுதும் சொல்லுவாங்க, உன் அம்மாவுக்கு தான் அவளுக்கான உரிமையை கொடுக்கல அது தான் என்னை விட்டு போயிட்டான்னு.

இப்போ வளர்ந்த பிறகு தான் தெரியும், என் அம்மாவுக்கான உரிமை எதுன்னு. தாலி கட்டி மனைவி என்ற உரிமையை என் அப்பா அவங்களுக்கு குடுக்கலை. அந்த தாலி மகிமையை என் அம்மாவுக்கு, அவங்க குடுத்திருந்தா, என் அம்மாவுக்கு இன்னொருவருடன் செல்ல முடிந்திருக்காது தானே?

ஒரு நாள் அம்மாவை பார்த்தாங்களாம். அப்போ அவங்க கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமமும் வச்சுட்டு அவங்க காதலன் கூட ஜோடியா போறதை அப்பா பாத்திருக்கார். அப்போ தான் அவருக்கு மிக பெரிய தப்பு பண்ணினதா தோணியிருக்கு. என்னை தப்பான உறவில்  பொறந்த குழந்தைன்னு நினைச்சு விட்டு போயிட்டார்.

அதுக்கு பிறகு அப்பா என்னை பார்ப்பதே இல்லை. சென்னை விட்டு வரவே மாட்டார். நான் மாதம் ஒரு முறை அங்கு வருவேன். அவருக்கு மேலும் மேலும் பணத்தை சேர்ப்பது தான் வழக்கமே. நேரம் ஒதுக்கி என்னுடன் எப்பொழுதும் இருக்கமாட்டார்”

“ஏன் உங்கப்பாவுக்கு உங்களை பிடிக்காதா?”

“அப்படி இல்லை… அவர் தனியாவே இருக்க ஆசைபட்டுட்டார் போல, தொழிலே கதி என்று விட்டார். பணம் சேர்ப்பது தான் அவரது தொழிலா மாறிட்டு….

நானும் என் இஷ்டம் போல வளர ஆரம்பித்தேன். சிகரெட். மதுன்னு என் பழக்கம் போனது. மாது பக்கம் போகும் முன் பாட்டி என்னை தடுத்திட்டார்.

அப்போ தான் என் வாழ்கையில் பெரிய விபத்தொன்னு நடந்திச்சி… மது, மாதுவை விட பெரிய விபத்து.

என்னையே மாற்றிய விபத்து.” சொல்லிவிட்டு நிறுத்தினான் அரவிந்த்.

“விபத்தா?”

“ஆமா… விபத்து… அந்த விபத்தின் பெயர் காதல்… அது ஒரு ராட்சசியிடம் உண்டான காதல் விபத்து”

“என்ன காதலா?” வியப்பாய் கேட்டாள் மிது.

“என்ன காதலான்னு இப்படி கேட்குற… இந்த மூஞ்சியை எந்த பொண்ணாவது காதலிக்குமான்னு நினைக்குறியா? ஒண்ணில்லை… இரண்டில்லை… மூன்று பெண்கள் என்னை காதலித்தார்கள்”

“என்ன மூன்றா?”

“ஆம்… மூன்று காதல்” என்றான் அரவிந்த்.

இப்பொழுது வாயை பிளந்து அவனை பார்த்திருந்தாள் மிது.

 

 

அத்தியாயம் – 6

அவளின் பார்வையைக் கண்டவன். “உண்மையை தான் சொல்லுறேன். மூனு பேர் என்னை காதலித்தார்கள்” என்றபடி அவளை நோக்கி மூன்று விரலை நீட்டினான் அரவிந்த்.

“இது நம்ப கூடியதாய் இல்லையே?” சந்தேகமாய் இழுத்தாள் மிது.

“ஆமா… நம்புறது கஷ்டம் தான்… ஆனா நம்பி தான் ஆகணும். நானும் உன்னை போல தான் முழித்தேன். ஆனா, நான் ரொம்ப அழகா இருக்கேன்னு என் பின்னாடி வரும் போது நான் என்ன செய்வதாம்?” காலரை தூக்கி விட்டபடி வினவினான் அவன்.

இபொழுது அவனை கொலைவெறியில் முறைத்தாள் மிது ‘ராஸ்கல் பொய் சொல்லுறான்’ எண்ணிக் கொண்டாள்.

“அப்புறம் என்ன பண்ணுனீங்க, உங்க காதலிகள் எங்கே?” நாடியில் கைவைத்து வினவினாள் மிது.

“நான் தான் ஏற்கனவே ஒரு ராட்சசி மேல் காதலில் விழுந்துடேனே? அது தான் அவங்களுக்கு பணத்தை குடுத்து விரட்டி விட்டுட்டேன்”

“விரட்டி விட்டீங்க ஓகே, அதெதுக்கு பணம் குடுத்தீங்க?” என்றாள் அப்பாவியாய்.

“நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னங்கல்ல, அதுக்கு தான்” கூறியபடியே வானத்தை நோக்கினான் அரவிந்த்.

இப்பொழுது அவனையே பார்த்திருந்தாள் மிது. ‘கொஞ்சம் அழகாய் தான் இருக்கிறான்’ அவள் மனம் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தது.

“சொல்லு எனக்கு எத்தனை மார்க் குடுப்ப?” அவளின் முன் தன்னை அங்கும், இங்கும் திருப்பிக் காட்டியபடி கேட்டான்.

அவனையே காலில் இருந்து முகம் வரை பார்த்தவள் “உனக்கு எப்படியும் பத்துக்கு ஒ… இல்ல ஒரு மார்க் வேணா தரலாம். அப்படி தான் மொக்கையா இருக்க உலக அழகன் போல சீன் போடாதே” நமட்டு சிரிப்புடன் கூறினாள்.

“ம்ம்… நீ கரெக்ட்டா தான் சொல்லுற, நான் அழகில்லை போல, அது தான் என்னோட ராட்சசியும் என்னை ஏறெடுத்தும் பார்கவில்லை”

“இந்த ராட்சசி உன் காதலிகளில் நான்காவது ஆளா?” கிண்டலாக வினவினாள்.

“இல்லை… இப்படி தான் அவளும் தப்பா புரிஞ்சுட்டு இருக்கா? அந்த ராட்சஸி தான் என் வாழ்கையில் வந்த, வரும் முதலும், கடைசியுமான பெண்ணா இருப்பா”

அந்த நேரம் ஏனோ அவள் மனம் கொஞ்சமாய் சலனமானது.

அவளை கவனிக்காமல் மேலும் தொடர்ந்தான்.

“முதல் முறையா அவளை கோவிலில் பார்த்தேன். அவன் தங்கச்சி, தம்பி கூட வந்திருந்தா… அத்தனை அழகு… பார்க்க பார்க்க தெவிட்டா அழகு… எப்பவும் அந்த முகத்தையே பார்த்துட்டு இருக்கணும்னு தோனுற அழகு” உணர்ந்து முகத்தில் ஒரு வித வெட்கத்தை கொண்டு தொடர்ந்தான்.

“அவளை பார்த்த நேரத்தில் இருந்து எனக்கு ஒரு குடும்பம் கிடைச்சதா நினைச்சேன். அவளுக்கு அவ குடும்பத்துக்கு மேல ரொம்ப பாசம் போல.

அவர்களுக்காக தான் அவள் இருப்பாள் போல, எல்லாமே குடும்பத்துக்காக தான் செய்யுறா? அவளை தூரத்தில் இருந்து மட்டுமே ரசித்து பார்ப்பேன். பக்கத்தில் செல்லும் தைரியம் வரல, ஒருவேளை பிடிக்கலன்னு சொல்லிட்டா என்னால் தாங்க முடியாது”

“அதுக்காக உங்க காதலை நீங்க அவ கிட்ட சொல்லலியா?”

“எப்படி சொல்லுறது… பயமா இருக்கு, ஒரு வேளை சொதப்பிட்டன்னா?”

“பயமா உனக்கா? நீ தான் எல்லாரையும் மிரட்டிட்டு இருப்ப.. இதோ இப்போ என்னை மிரட்டி உன் கூட வச்சிருக்க மாதிரி. அவளையும் அழைச்சுட்டு வரவேண்டியது தானே?”

‘அப்படி தான் அழைச்சுட்டு வந்திருக்கேன்’ மனதில் எண்ணியவன் “நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க மிது. நான் ஆசைப்பட்ட பொருளை எப்பவும் எப்படியாவது, என்கிட்ட வச்சுக்கணும்னு நினைப்பேன்?”

“அப்போ என்னை ஏன் இப்படி அடைச்சு வச்சிருக்க?”

“நான் உன்னை அடைச்சு வைக்கல, உன் பணத்தேவைக்கு நீ வந்திருக்க”

“நீ பேசுனா கண்டிப்பா சொதப்ப தான் செய்வ… யார் அந்த பொண்ணு, எங்க இருக்கான்னு சொல்லு, நான் பேசுறேன் உனக்காக?” பேச்சை மாற்றினாள். உண்மையும் அது தானே? பணதேவைக்கு தானே இங்கு வந்திருக்கிறாள்.

“யாரு நீயா?” கிண்டலாக கேட்டான். அவனும் அவள் பாதைக்கே சென்றான்.

“ஆமா… நான் தான் ஏன் என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு”

“நீ ரொம்ப அழகா இருக்க… சோ உன்னை நான் நம்புறேன்… அழகா இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டாங்க”

“சரி சொல்லு எங்க இருக்கா அவ?”

“இங்க தான்” என்றான் அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டு.

“இங்கயா? யாரை சொல்லுற நீ?” கண்கள் இடுங்க வினவினாள் மிது.

“இங்க” என்றபடி நெஞ்சை சுட்டி காட்டினான் அவன்.

“ஒஹ்” என்றபடி அமைதியானாள். அவன் எதையோ மறைப்பது போல் தெரிந்தது.

இருவரும் அவரவர் நினைவில் மூழ்கி அந்த ஏகாந்த இரவை ரசித்தனர்.

@@@@@@@@@@@@@@@

மறுநாள் காலை என்றும் இல்லாத திருநாளாய் அவன் அறைக்கு வந்து காலை வணக்கம் கூறினாள் மிது.

அதிசயமாக அவளைப் பார்த்தான் அரவிந்த். ஆனாலும், சும்மா இருந்தால் அவன் அரவிந்த் இல்லையே.

“என்ன சூரியன் மேற்கில் உதித்து விட்டது போல?”

“நான் மாறிட்டேன்”

“அப்படியா? வாழ்த்துக்கள்”

“நான் இனி உங்க கிட்ட சண்டை போடமாட்டேன்” உறுதிக் குரலில் கூறினாள்.

அவன் தான் வேறு ஒருத்தியை காதலிக்கிறானே, அவன் சொல்வது போல் நான் அவன் மனைவியாக மாறவேண்டாம். ஆனாலும் கழுத்தில் கிடந்த கருகுமணி அவளை உறுத்தியது. அதை அவளால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

இன்னும் ஆறு மாதம் தானே. அதுவரை வாங்கிய பணத்துக்கு உழைக்க வேண்டும் திடமாக முடிவெடுத்த பின் தான் அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.

“நிஜமாகவா?”

“நிஜமாக தான்”

“சரி தான்… இன்னைக்கு உண்மையாவே சூரியன் மேற்கில் தான் உதிக்கிறது”

அவனைப் பார்த்து மெதுவாக சிரித்தபடி வெளியில் சென்றாள் மிது.

‘இன்னைக்கு இவளுக்கு என்ன ஆச்சு… என் லவ் கதையை கேட்டு ஓவரா பீல் ஆகிட்டாளோ…’

அவனின் யோசனையை தடுத்தபடி அவன் முன் காபியுடன் வந்து நின்றாள் மிது.

“ரொம்ப சூடா இருக்கு, பல் விளக்கிட்டு குடிங்க”

அவள் கூறி முடிக்கும் முன் அதை குடித்து விட்டிருந்தான்.

“ஐயோ சூடு!” அவள் பதற,

“அது தான் பக்கத்திலேயே சூடா நீ நிக்குறியே, இந்த சூட்டுக்கு முன்னாடி அது கம்மிதான்” கூறியவன் அருகில் கிடந்த டவலை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தான்.

ஒரு நொடி திகைத்தவள், முகத்தில் தோன்றிய சிரிப்புடன் வெளியில் சென்றாள்.

குளித்து முடித்தவன், பால்கனியில் நின்று தோட்டத்தையே பார்த்திருந்தான். அது அவனின் பழக்கம். பாட்டி வீட்டுக்கு வந்தால் ஒரு இரண்டு நாள் மட்டுமே தங்குவான். அப்படி வரும் பொழுது அவனின் பகல் நேர பொழுது தோட்டம் தான்.

இப்பொழுதும் தோட்டத்தை பார்த்திருந்தான். அங்கு பாட்டி நாற்காலியில் அமர்ந்திருக்க, மிது அவரிடம் பேசியபடி தோட்டத்தில் சில செடிகளை நட்டுக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, செடிகளை அழகாக வெட்டிக் கொண்டிருந்தாள்.

“ஒரு பொண்ணு வீட்டில் இருந்தால் அழகா தான் இருக்கு” பாட்டி உணர்ந்துக் கூறினார்.

அதையே தான் அவனும் எண்ணிக் கொண்டிருந்தான். ‘அம்மா இருந்தால் இப்படி தான் வீடு இருக்கும். இப்பொழுது அந்த இடத்தை மிது பிடித்து விட்டாள்’ சிரிப்புடன் பார்த்திருந்தான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பாட்டிக்கான சாப்பாட்டை அவரிடம் கொடுத்தபடி எதையே சிரிப்புடன் பேசிக் கொண்ருந்தாள்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் அறைக்கு வந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்து நின்றான்.

“என்னடா அரவிந்த் அதுக்குள்ள கிளம்பிட்ட” பாட்டி கேட்க.

“ஆமா பாட்டி, சென்னை ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு… மிது பாட்டியை நல்லா பாத்துக்கோ” அவளிடம் கூறியவன் சிறு தலையசைப்புடன் தன் ஜீப்பில் கிளம்பினான்.

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் மிது.

அடுத்து வந்த நாட்கள் பாட்டியுடன் கழிந்தது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டில் எல்லாரும் அவளிடம் பேசினர்.

அவ்வபொழுது பாட்டியும் அவர்களிடம் பேசிக் கொள்வார். தாயின் உடலில் இப்பொழுது நல்ல முன்னேற்றமாம். தங்கச்சி சந்தோசமாக கூறினாள்.

அவளுக்கும் அத்தனை சந்தோசமாக இருந்தது. ஆனாலும், கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த நல்ல விஷயத்தை கேட்க அரவிந்த் இல்லையே என்று.

இதற்கிடையில் பாட்னா ஆபிஸ் கணக்கு வழக்கு இவளை தேடி வந்தது. அரவிந்த் தான் ஆள் அனுப்பினானாம். வந்தவர் கூறிக் கொண்டிருந்தார்.

அவ்வபொழுது ஆபிஸ் விஷயமாக அவனும், அவளிடம் பேசுவான். ஆனால் முந்தி மாதிரி மனைவி என்றோ, காதலி என்றோ பேசமாட்டான்.

கொஞ்சமாய் மனம் அவனை தேட ஆரம்பித்தது. ஏதோ அவளை விட்டு விலகியதாய் உணர்ந்துக் கொண்டாள்.

அடிக்கடி கழுத்தில் கிடந்த கருகுமணியை அவள் கைகள் வருடிக் கொண்டன. இப்படியே ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.

அவளையே பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்த பாட்டி ஒரு நாள் அவளை தேடி வந்தார்.

அவளையே கூர்ந்து பார்த்தவர் “உண்மையாவே நீ அவனை காதலித்து தான் கல்யாணம் பண்ணுனியா?”

இக்கேள்வி அவளை திடுக்கிட வைத்தது. ‘என்னல்லாம் சொல்லி சொதப்பி வச்சுருக்கானோ?’ கைகள் தானா, அவன் கையால் வாங்கிய தாலியை வருடிக் கொண்டிருந்தன.

அந்த கருகுமணியையே பாட்டியின் கண்கள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தன.

அத்தியாயம் – 7

அவன், அவளுக்கு, எதனால் கருகுமணி கொடுத்தான் என்று அவளுக்கு தெரியாது.

ஆனால், அவளுக்கு முதல் முறையாக ஒருவன் தாலி கொடுத்திருக்கிறான். எந்த பெண்ணும் மனதுக்கு பிடிக்காதவனிடம் உரிமையாக தாலி வாங்கமாட்டாள்.

அது மஞ்சள் கயிறாக இருந்தாலும் சரி, கருகுமணியாக இருந்தாலும் சரி.

கட்டாயத்தின் பேரில் தான் அவள் அந்த கருகுமணியை தன் கையில் வாங்கினாள். ஆனால், அது நாளடைவில் அவளையே சுற்றிக் கொண்டது. அவனையே கணவனாக வரித்துக் கொண்டாள்.

எல்லா பெண்களும் அப்படி தான் மிது மட்டும் விதிவிலக்கா என்ன?

மூன்று முடிச்சிட்டால் மட்டும் தான் கணவனாக முடியுமா என்னை? ஒருவளை மனைவியாக எண்ணி அவள் கையில் தாலியை அவன் நினைவாக கொடுத்தாலே, மனதளவில் இருவரும் கணவன் மனைவியே?

இதை உணர்ந்து தான் அரவிந்த் அவளுக்கு தாலியை அளித்தான். எப்படியும் தான் அவள் மனதில் இடம் பிடித்து விடுவோம் என்று அவன் காதல் அவனுக்கு கொடுத்த நம்பிக்கை.

இப்பொழுது அவள் முகத்தையே பார்த்திருந்தார் பாட்டி.

“ஆ… ஆமா பாட்டி” யோசனையாக மெதுவாக உரைத்தாள்.

“சரி… எதுக்கும் நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோம்”

“ஏன் பாட்டி?” யோசனையாக கேட்டாள் மிது.

“இங்க என்னை கவனிக்க வந்தவங்க எல்லாம். இங்க இருக்கும் பணத்துக்கும், அவன் மேல் உள்ள ஆசைக்காகவும் தான் வருவாங்க.

கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணை விரும்புறேன்னு சொன்னான். நானும் அவன் கிட்ட நல்ல பொண்ணான்னு கேட்டேன்.

ரொம்ப நல்ல பொண்ணு பாட்டி. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டவங்க. எதுக்கும் ஆசை படமாட்டா அவ, அப்படி இப்படின்னு ஒரே புகழாரம் தான் அவளை பற்றி” மனம் மெதுவாக வலித்தது மிதுவுக்கு.

“நாளடைவில் எனக்கும் அவளை பார்க்க ரொம்ப ஆசை ஆகிட்டு. இப்போ அன்னைக்கு திடீர்னு சொல்லுறான். பாட்டி அவளுக்கு வீட்டுல கொஞ்சம் பிரச்சனை… நான் அவளை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வரவான்னு கேட்டான்.

நானும் சரின்னு சொல்லிட்டேன். கடைசியில் பார்த்தா உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்னு வந்து நிக்குறான்?

எனக்கு பயங்கர ஷாக். ஏண்டா இப்படி பண்ணுன்னு கேட்டா “அவளை என்கூடவே வச்சுக்க வேற வழி இல்லை. அதே போல அப்பா பண்ணுன தப்பை நான் பண்ணவிரும்பலை. என் வாழ்கையில் ஒரு பொண்ணுக்கு இடம் உண்டுன்னா அது உனக்கு தான்னு சொல்லுறான்.

“ஒரு பொண்ணுக்கு இஷ்டம் இல்லாமல் இப்படி பண்ணுறது தப்புன்னு” நான் அவனுக்கு எடுத்து சொன்னேன்.

“அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் பாட்டி. பிடிக்க வைச்ச பிறகு அவளை முறைபடி கல்யாணம் பண்ணுவேன்…

நான் திரும்பி வரும் வரை அவளை உன்கிட்ட விட்டுட்டு போறேன். நம்ம பங்களா பழக்கம் வழக்கம் அவளுக்கு சொல்லி கொடுன்னு” உன்னை இங்க விட்டுட்டு போய்ட்டான்.

அப்போ எதுக்குடா கருகுமணி அவகிட்ட குடுத்தன்னு கேட்டா? அதுக்கும் ஒன்னு சொல்லுறான் “தாலி மேஜிக்காம். நீ இங்கிருந்து போகுறதுக்கு முன்னாடி அவனை காதலிப்பன்னு அவனுக்கு உன் மேல் அபார நம்பிக்கை.

அவளையே நினைச்சுட்டு அவன் குடுத்த கருகுமணி அவளுக்காக இருக்குன்னு எப்பவும் நியாபகபடுத்த தான் அவளை கட்டாயமாக அதை அவளுக்கு கட்டினேன். இங்க இருந்து சென்னைக்கு அவள் போகும் பொழுது என்னை அவள் கணவனா அழைச்சுட்டு போவா” அத்தனை நம்பிக்கையுடன் கூறினான் அன்று.

“அவன் நம்பிக்கை வீண் போககூடாது, அவன் ஒரு பொண்ணுகிட்ட ஏமாந்தும் போககூடாது. அது தான் உன்கிட்ட கேட்கிறேன். நீ அவனை விரும்பி தான் கல்யாணம் பண்ணுனியா?”

அவர் கூற கூற மிது மனது இறக்கை இல்லாமல் பறந்தது. அவன் மனதில் தான் இருக்கிறோமா? அந்த எண்ணமே அவளை வானில் பறக்க வைத்தது.

“ஆமா… பாட்டி” இப்பொழுது தைரியமாக கூறினாள்.

அதே நேரம் போன் அழைக்கவே அதை நோக்கி சென்றாள். மிது, தங்கை தான் அழைத்திருந்தாள்.

“ஹலோ“ என்க,

அந்த பக்கம் மிதுவின் தங்கை அழுகையுடன் பேச்சை தொடர்ந்தாள் “அக்கா நேத்து நைட் அம்மாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியல. அத்தையும் மாமாவும், அவங்க ஊருக்கு போய்ட்டாங்க. அவங்க கூடவே தம்பியும் போய்ட்டான். எனக்கு ஒரே அழுகையா வந்திச்சி” அழுதபடி கூறினாள் தங்கை.

“என்ன சொல்லுற மிரு. அம்மா இப்போ எப்படி இருக்காங்க, இதை ஏன்டி நேத்தே சொல்லல? நான் வேணா வரவா?” பதட்டத்துடன் வினவினாள் மிது.

‘அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நோய் வாய் பட்ட தாயை தனியாக விட்டு வந்து வந்துவிட்டோமே. அவர்கள் எப்படி பார்த்துக் கொள்வார்கள்’

“இல்ல வேண்டாம்க்கா. மாமா வந்துட்டாங்க… அவங்க தான் அம்மாவை புல்லா பார்த்தது… ஹாஸ்பிடலில் கூட அவங்க தான் இருந்தாங்க… இப்போ தான் கிளம்பி போறாங்க. இப்போ நல்லா இருக்காங்க.”

“அம்மா எங்க, அவங்கட்ட குடு”

“இப்போ தான் சாப்ட்டு தூங்குறாங்க”

“கந்து மாமாவை நம்பி தானே விட்டுட்டு வந்தேன். இப்படி பண்ணிருக்காங்க… மாமா அப்புறம் எப்போ வந்தாங்க, அம்மாவை பக்கத்துல இருந்து பாத்துக்க சொல்லு, நான் சீக்கிரம் வருகிறேன்”

“அக்கா கந்து மாமா, நல்லா தான் பாத்துகுறாங்க. நம்ம வீட்டுக்கு வந்தது. கந்து மாமா இல்ல, அரவிந்த் மாமா”

“எ… என்ன?” ரிசீவரை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

“இதுக்கே ஷாக் ஆனா எப்படிக்கா, இந்த போன் கனெக்ஷன் கூட வீட்டு ஓனர் கிட்ட சொல்லி அவங்க தான் ஏற்பாடு பண்ணுனாங்க”

“என்ன சொல்லுற நீ, புரியும் படியா சொல்லி தொலையேன்” மிகவும் டென்சனாக இருந்தது.

“ஆமாக்கா, உன்னை, உங்க முதலாளி பையனுக்கு பொண்ணு கேட்டு போன வாரம் வந்தாங்கக்கா”

“அதை ஏன்டி என்கிட்ட சொல்லல?”

“அவங்க தான் வேண்டாம்னு சொன்னாங்க. நீ வெளியூருல இருக்கல்ல அது தான் வந்த பிறகு சொல்லலாம்னு மாமா சொன்னாங்க”

“அம்மா என்ன சொன்னாங்க?”

“அம்மாக்கு விருப்பம் தான், ஆனாலும் உனக்கு பிடிச்சா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவேன்னு சொன்னாங்க?”

“ஒ”

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்கன்னு போன் கனெக்ஷன் குடுத்துட்டு போனாங்க. அது தான் அன்னைக்கு அவங்களுக்கு போட்டேன்”

மெதுவாக தலையாட்டிக் கொண்டாள். அதன் பிறகு பொதுவாக பேசியவள் அலைபேசியை அணைத்துக் கொண்டாள்.

அவன் இத்தனை தனக்காக செய்கிறானே, அவனை உடனே பார்க்க வேண்டும் போல் இருந்தது.

தன் மேல் அவன் வைத்திருக்கும் காதலை எண்ணி வியந்துப் போனாள்.

அவளையே பாட்டி பார்த்திருக்க, டெலிபோனில் ஏதோ எண்களை வேகமாக அடித்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு மிது” பாட்டி அவள் அருகில் வர,

“உன்னை நான் உடனே பாக்கணும் அரவிந்த். இப்பவே இங்க வா” அவன் மறுவார்த்தை பேசும் முன் அழைப்பை நிறுத்தி இருந்தாள்.

‘டேய் அரவிந்த்… எங்கையாது சொதப்பி வச்சிருக்கியா?’ யோசனையில் ஆழ்ந்தான் அவன். ‘கோபமா வேற பேசுறா, என்னாச்சு?’

அவனுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். தன் தாய் இல்லா குறையை அவள் தீர்ப்பாள் என்று அன்று அவள் குடும்பத்தை நன்கு கவனிக்கும் பொழுதே அறிந்துக் கொண்டான்.

மெதுவாக அவளிடம் பழகி அவளுக்கு தன் மேல் காதல் வரவைக்கலாம் என்று தான் எண்ணினான். ஆனால் எதிர் பாராமல் அவளுக்கு உதவி தேவைப்பட. அந்த வாய்ப்பை நழுவாமல் பிடித்துக் கொண்டான்.

ஆனால் என்ன, அவன் வாய் கொஞ்சம் நீளம் என்றதால் அவளிடம் சொதப்பிக் கொண்டிருந்தான்.

அவளுக்கு பிடிக்காத இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கொண்டு வந்து, அவன் வாயும் சும்மா இல்லாமல், அவளையும் சும்மா இருக்க விடாமல் மொத்தமா சொதப்பியாச்சு. நாளைக்கு என்ன இருக்கோ ஆண்டவா… நீ தான் என்னையும், என் காதலையும் காப்பாத்தணும்’ வேண்டிக் கொண்டான்.

அத்தியாயம் – 8

அரவிந்துக்கு போன் செய்து முழுதாக இரண்டு நாட்கள் கழிந்து விட்டிருந்தது. அவன் வரவேயில்லை.

நாளை சத் பூஜை. பாட்னா மக்களின் முக்கிய பூஜை. “இன்று எப்படியும் அரவிந்த் வருவான்” என பாட்டி கூறியிருந்தார்.

விடியற்காலமே சூரியனை நமஸ்கரிக்க மக்கள் எல்லாரும் இன்று மாலையே கங்கையை நோக்கி சென்று விடுவார்கள்.

அன்று இரவு முதல் விரதம் இருந்து காலையில் கங்கையில் குளித்து, சூரிய நமஸ்காரம் நடக்கும்.

இன்று மதியம் வரை அவன் வரவே இல்லை. பாட்டி வேறு அவளுக்காக புது புடவை ஒன்றை கையில் கொடுத்து அணிந்து வரக் கூறினார்.

சிகப்பு வண்ண புடவை. கிளாஸ் ஒர்க் அத்தனை அழகாக இருந்தது. கைகளில் வைத்து வருடிக் கொண்டாள் மிது.

குளித்து முடித்து அந்த புடவையை அணிந்து கண்ணாடி முன் அமர்ந்திருந்து தலை வாரிக் கொண்டிருந்தாள்.

பூவை கையில் எடுக்கவும், அவள் கையில் இருந்து பூவை  வாங்கிய அரவிந்த் அவள் தலையில் சூடி, அப்படியே அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.

அவளைப் போலவே சிகப்பு வண்ண குர்தாவும், வெள்ளை நிற வேட்டியும் கட்டியிருந்தான். புதிதாக சிகப்பு நிற குல்லா ஒன்று தலையில் இடம் பிடித்திருந்து. நெற்றியில் சிகப்பு நிற பொட்டும் வைத்து அத்தனை அழகாக இருந்தான் அவன்.

கண்ணாடியில் அந்த முகத்தையே பார்த்திருந்தாள் மிது. அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அங்கிருந்த பொட்டை எடுத்து அவளின் நெற்றியில் வைத்துவிட்டு, அவளின் புடவை முந்தானையை எடுத்து தலையில் போட்டுவிட்டான்.

இப்பொழுது அவளை கண்ணாடி நோக்கி திருப்பியவன். ஏதோ நினைவு வந்தவனாக, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறு டப்பாவை கையில் எடுத்தான்.

அவனையே பார்த்திருந்தாள் மிது. அதை திறந்து அதில் இருந்த, பாசி கோர்த்த மெல்லிய ஒட்டியாணத்தை  எடுத்தவன், அவளின் இடுப்பில் மெதுவாக அணிவித்து விட்டான்.

அவளின் பார்வை ஆச்சரியமாக அவனை நோக்கியது. அவளின் பார்வையைக் கண்டவன் “அன்னைக்கு நீ கோவிலுக்கு வரும்போது சாரி கட்டி இருந்ததை பார்த்தேன். அப்போ தான் உன் இடுப்பில் எதுவோ குறைந்ததுப் போல் தெரிந்தது” மெதுவாக கூறினான்.

இப்பொழுது அவள், நேரடியாக அவனை முறைக்க,

“ஐயோ தப்பா எல்லாம் பார்க்கல… அழகா இருந்தது அது தான் கண்ணு கொஞ்சம் சிலிப் ஆகிட்டு”

“கண்ணு அங்க தான் சிலிப் ஆகுதா?” முறைக்க,

அவளை கூல் பண்ணும் பொருட்டு “இப்போ தான் ரொம்ப அழகா இருக்க நீ… அதிலும் நான் ரசிக்கும் சங்க கால அழகிகள் போல் இருக்க” கூறியபடியே மெதுவாக அவள் கன்னத்தில் தன் இதழைப் பதித்தான் அரவிந்த்.

இத்தனை நேரம் பேசியதை கூட பொறுத்துக் கொண்டாள். மீண்டும் அவன் சங்க கால அழகிகளை கூறவும், அவனை ஒரே முறைப்பில் தள்ளி விட்டிருந்தாள்.

“இப்படியே நீ பேசிட்டு இருந்த. எந்த அழகியும் உன்னை பார்க்கமாட்டா?” திட்டியபடியே வெளியில் சென்று காரில் அமர்ந்துக் கொண்டாள்.

“டேய் ஏன்டா இப்படி சொதப்புற, இனி என்ன சொல்லி அவளை சமாளிக்க” தன்னை தானே தலையில் தட்டிக் கொண்டவன், பாட்டியை அழைத்துக் கொண்டு பூஜைக்கு சென்றான் அரவிந்த்.

கார் அமைதியாக சென்றது. மெல்லிய குரலில் இளையராஜா பாடிக் கொண்டிருந்தார்.

அந்த இரவு ஏகாந்த நேரம், வெளியில் குட்டி, குட்டி  விளக்குகளுடன் பாட்னா ஜொலித்துக் கொண்டிருந்தது. அன்று ரசிக்காத இடங்களை இன்று ரசித்துப் பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தாள் மிது.

சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி விட்டிருந்தான் அரவிந்த்.

மிது புரியாமல் வெளியே பார்த்தாள். கூட்டம் கூட்டமாய் மக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கங்கையை சுற்றி நிறைய கூடாரம் அமைக்கப்பட்டு  விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவளை இறங்கும்படி கூறியவன், புரியாமல் முழித்தவளிடம் “இங்க தான் சத் பூஜை நடக்கும். பாட்னா மக்கள் எல்லாரும் இங்கு தான் குழுமி இருப்பர்” மெதுவாக உரைத்தான்.

அதற்குள் பாட்டியை ஒருவர் அழைக்க, அவருடன் நடந்தார் அவர்.

“இங்க தான் நடக்குமா?”

“ஆமா, காலையில் எழுந்து சூரியனை இங்கிருந்து வணங்கினால். மனசில் என்ன வேண்டிகிட்டு அந்த பூஜை செய்தாலும் வேண்டுதல் நிறைவேறும்.

ஒரு நாள் முழுதும் விரதம் இருந்து, இந்த பூஜையை செய்வாங்க. பூஜை முடியும் வரை இங்க தங்கி இருந்து பண்ணுவாங்க.

பூஜை முடியவும், விளக்கை நீரில் விட்டு, இங்கயே சமைச்சு சாப்பிட்டு வீட்டுக்கு போவாங்க. இது இங்குள்ள மக்களின் பெரிய விசேஷம்”

அரவிந்த் சொல்லச் சொல்ல அங்கிருந்த மக்களைப் பார்த்தாள் மிது. ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் கூட்டமாய் அமர்ந்திருந்தனர்.

நிறைய ஆண்கள் அரவிந்த் போல் கலர், கலராக குல்லா அணிந்திருந்தனர். அது அவர்கள் வழக்கம் என்று கூறினான்.

பெண்கள் வண்ண வண்ண நிறத்திலான உடைகளை அணிந்திருந்தனர். அவர்களின் தலையை ஒரு துணி போர்த்தி இருந்தது. கைகளில் நிறைய வளையல்கள் அடுக்கி இருந்தனர்.

அங்கிருந்த மக்கள் பெரும்பாலும் நிறைய பேர், அரவிந்தை வணங்கிச் சென்றனர். மிதுவுக்கு அவன் அருகில் நடக்கவே அத்தனை பெருமையாக இருந்தது.

அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு டஜன் வளையல் இருக்க, அவர்களைப் போல் வளையல் அணிய ஆசை வந்தது மிதுவுக்கு.

‘இவனிடம் எப்படி கேட்க என்று’ அமைதியாக அவனுடன் நடந்து வந்தாள். அவன் தான் அவளின் எண்ணவோட்டத்தை அறிந்துக் கொள்பவன் ஆகிற்றே?

“மிது, வாரியா அங்க ஒரு அண்ணா நிறைய கலர் கலர் வளையல் வச்சுருப்பாங்க. உனக்கு வாங்கி தாரேன்” அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.

இப்பொழுது நேரடியாக அவனை ரசித்தாள் அவள். அவரிடம் சிகப்பு, பச்சை, மஞ்சள் நிற வளையலை வாங்கியவன்.

அவளை நோக்கி தன் கையை நீட்டினான். தன் கையை அவன் கையில் அவள் வைக்க, அவளை அப்படியே அழைத்துக் கொண்டு தங்களுக்கான கூடாரம் அருகில் சென்றான் அரவிந்த்.

அவனையே யோசனையுடன் பார்த்தபடி நடந்தாள் மிது.

கூடாரம் அருகில் வந்தவன் அப்படியே அந்த தண்ணீர் தெளித்த மண்ணில் அமர, தன் முன்னே அவளையும் அமரவைத்தான்.

இப்பொழுது வளையல் ஒவ்வொன்றாக பிரித்தவன், அதை பச்சை, சிகப்பு, மஞ்சள் நிறம் என அடுக்க, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

இங்கு வந்த நாள் முதற்கொண்டு அவளின் தேவைகளை அவன் தான் நிறைவேற்றுகிறான். இவளின் கண் பார்வையில் எல்லாம் உணர்ந்துக் கொள்கிறான்.

இப்பொழுதோ அவளின் கையை அலங்கரிக்க, வளையலை அழகூட்டுகிறான்.

அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் சொதப்பலாக இருந்தாலும், கடைசியில் இவள் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறான்.

பதினெட்டு வளையலாக இரு கைக்கும் நிறத்தை     அடுக்கியவன், இப்பொழுது அவளின் கைக்காக தன் கையை அவள் முன் நீட்டி இருந்தான்.

தன் கையை அவன் முன் நீட்ட, மெதுவாக ஒவ்வொரு வளையலையும் அவளின் அழகு கைகளில் பூட்டினான் அரவிந்த்.

“இளம் வயசு பொண்ணை வசியம் பண்ணும் வளவிக்காரன் நல்ல மனசத் தொட்டு மயங்க வச்சி வளைக்கப் போறேன்.. அடி போட்டுக்கடி பொன் வளவி பூட்டிக்கடி நான் போட்ட பின்னே பாரு நீ பொன்னு மணி தேரு…” அவனின் இதழ்களோ மெதுவாக இசைத்தன.

அவன் வளையலை அணிவித்து முடிக்கவும், அவன் கையில் இருந்து தன் கையை வேகமாக விடுவித்தாள் மிது.

அவனின் பாடலோடு, அவனின் கை ஸ்பரிசம் அவளை எதுவோ செய்ய, இருக்கைகளையும் கொண்டு முகத்தை மறைத்தாள் அவள்.

அவளின் இச்செயல் அவன் முகத்தில் புன்னகையை  தோற்றுவித்தது. அவளின் கையை எட்டிப்பிடிக்க, அவன் கையை தட்டிவிட்டு கங்கையை நோக்கி ஓடினாள்.

அவளின் வளையல் ஓசை அவன் இதயம் தீண்டி சென்றது.

காலையில் எழவும் அவன் காதில் இன்னிசையாக ஒலி எழுப்பியது அவன் அணிவித்த கண்ணாடி வளையல்கள்.

குளித்து முடித்து, பச்சை நிற புடவையை அவள் அணிய, அவன் அவள் நிறத்தில் குர்தா அணிந்துக் கொண்டான்.

இருவரும் நெற்றியில் குங்குமத்தை பூசிக் கொண்டு சூரியனைத் தொழுது, மனதில் “இதே காதலோடும், சீண்டலோடும் பல வருடம் வாழ வேண்டும்” என்ற வேண்டுதலுடன் விளக்கை நீரில் மிதக்க விட்டனர்.

தனி, தனியாக நீரில் மிதந்த விளக்கு, கொஞ்சம் தள்ளி ஒன்றை ஓன்று உரசிக் கொள்ள.

மிதுவின் கைகளோ, அரவிந்த கைகளோடு உரசி காதல் பாடியது.

அவளை நோக்கி திரும்பியவன், அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு “சென்னை போனதும் நமக்கு திருமணம்” என்ற இனிப்பான செய்தியை கூறி அவள் நெற்றியில் இதழ் பதிக்க,

“கல்யாணத்தையாவது சொதப்பாமல் நடத்துவீங்களா மிஸ்டர் அரவிந்த்”

“ஏன்டி கிண்டலா பண்ணுற” அவள் கையை பற்ற வர, அவனை அந்த மணலில் தள்ளி விட்டு ஓடினாள் மிது.

அவளை துரத்தி பிடித்தவன், அவளை பிடித்திழுக்க, அவன் மேல் மோதி, இருவரும் ஒன்றாக மணலில் விழுந்து, இருவரின் ரயில் பயணத்தை எண்ணி மாறி மாறி முகம் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சூரிய பகவான் கொஞ்சம் கொஞ்சமாய் தன் ஒளியை அவர்கள் மேல் வேகமாக வீச ஆரம்பித்தான்.

………………………………….சுபம்………………………………..

 

error: Content is protected !!